All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 6

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 6 months ago
Posts: 146
Topic starter  

அத்தியாயம்: 6

 

"ஓட்ஸ் ஏ சூடா இல்ல?. எக் வொய்ட் எங்க? மிக்ஸிடு வெஜிடபிள்ஸ் மூணு வேளையும் கட்டாயம் அவங்க சாப்பிடனும். வீடு முழுக்க டஸ்ட்டா இருக்கு. அவங்களுக்கு தூசி ஆகாதுன்னு தெரியும்‌ தான்?. இது தா நீங்கக் கவனிக்கிற லட்சணமா." என மேஜையில் படிந்திருந்த குறுமணலை விரலால் எடுத்துக்காட்டி வேலையாட்களைக் கண்டபடி ஏசிக் கொண்டிருந்தாள் ரிபேக்கா. 

 

"ஸாரி மேம்..." என அவர்கள் கூறும் விளக்கம் எதுவும் ரிபேக்காவின் காதில் விழவில்லை. 

 

ரிபேக்கா calm and composed person. அதிகம் பேசமாட்டாள். அமைதியாக இருந்தாலும் கரார் பேர்வழி.  

 

மெல்லிய இருமல் ஓசைக் கேட்டு, படுக்கை அறைக்குள் வந்தவள், 

 

"சித்தும்மா நா கம்ப்ளீட்டா எல்லாரையும் மாத்தப் போறேன். ஒருத்தருக்கு கூட உங்க மேல அக்கறை இல்ல. எல்லாரும் நடிக்கிறாங்க." என்றபடி சித்தாராவின் படுக்கையைச் சரி செய்து, தலையணையை வாகாக அவரின் முதுகிற்கு வைத்தவள், உணவு உண்ணும் மேஜையில் ஓட்ஸ்ஸை வைத்தாள். 

 

"உன்ன மாறியேவா எல்லாரும் இருப்பாங்க.? அன்பா அக்கறையா?" என நக்கலாகக் கேட்டபடி வந்தான் ப்ரஜித். 

 

"குறைகள மட்டுமே தேடித் தேடி பாக்குறவங்களுக்கு எல்லாமே நிறைவில்லாத மாறி தா தெரியும்." என்ற ப்ரஜித் ஓட்ஸ்ஸை தன் தாய்க்கு ஊட்டி விடத் தொடங்கினான். 

 

அணல் கக்கும் விழிகளால் அவனை முறைத்துப் பார்த்து, அக்னி அபிஷேகம் செய்தாள்.

 

ஸ்டோக் என்ற பக்காவாதம் அவரைத் தாக்கி மூன்றாண்டுகளாகி விட்டது. சரியாகச் சொல்லவேண்டுமென்றால் இரு மகன்களுக்கு இடையில் நடந்த சண்டை மற்றும் சஜித்தின் வெளியேற்றம் அதற்குக் காரணமாக அமைந்தது. 

 

உடற்பயிற்சி மருத்துவரால் உடல் நிலையில் முன்னேற்றமிருந்தாலும், பிறரின் உதவியின்றி நடக்க இயலாது.  

 

ஊட்டா முடித்தவனை, தாயின் கண்கள் ஆசையுடன் வருடி, "கண்ணா..." என்றபடி கரம் நீட்ட, நீட்டிய கரத்தில் தன்‌ கன்னத்தைப் புதைத்தான் அவன். 

 

அவர் எப்பொழுதும் இரு மகன்களைப் பார்த்ததும் இரு கைகளையும் நீட்டுவார். சஜியை முந்திக் கொண்டு ப்ரதிஜ் அதில் சரணடைய, சின்னச் சிரிப்புடன் தூர நின்று பார்ப்பான் சஜித். அவனுக்குத் தன் ஆசியைக் கண்களால் வழங்குவார் அவர். 

 

இன்றும் அந்தக் கண்கள் ப்ரஜித்தை தாண்டிச் சஜித்தைத் தேடி சோர்ந்து போக, "பக்கத்துல இருக்குறதுனால தா என்னோட அருமையும் உங்களுக்குத் தெரியலயோ.? நானும் அவன மாறி எங்கையாது சொல்லிக்காம போய்டவா.?" என்றபோது கண்ணீர்த் துளிகள் அவனின் பேச்சை நிறுத்தியது. 

 

"மாம்... என்னதிது சின்னக் குழந்தை மாறி." எனக் கண்களைத் துடைத்தெடுத்தவனிடம். 

 

"நா சஜிய பாக்கனும் கண்ணா." என்றார். 

 

"அவனுக்குத் தா உங்க மேல அக்கறையே இல்லயே.? இத்தன வர்ஷமா வளத்த பாசம் அவனுக்குள்ள இருந்திருந்தா உங்களுக்கு ஸ்டோக்னு தெரிஞ்ச அடுத்த நொடி வந்து நின்னிருப்பான். இரும்பு பேக்டரில வொர்க் பண்ணி, அவனும் இரும்பாவே மாறிட்டான். உணர்ச்சி இல்லாத ஜடமா!" 

 

"உன்னால அவன எம்முன்னாடி கூட்டீட்டு வர முடியாதா.?" 

 

"மாம்..." என அவரை உற்று நோக்க,

 

"சரி கண்ணா." என்றவர் எதுவும் சொல்லாது படுத்துக் கொண்டார். 

 

அவர் பேசாது முகம் திருப்பியது மகனுக்குக் கஷ்டமாகிப் போனது. 

 

தனக்கு இது வேண்டும் என்று அவர் வாயைத் திறந்து கேட்டது மிகவும் குறைவு. கேட்கும் ஒன்றிரண்டை மகன்கள் போட்டி போட்டு, அடித்துப் பிடித்து நிறைவேற்றி வைப்பர். 

 

இருவருக்கும் இடையே தலைமைக்கும் மட்டுமல்ல தாயின் அன்பிற்கும் பயங்கர போட்டி உள்ளது. 

 

"உங்களுக்கு அவன பாக்கனும். அவ்ளோ தான.‌ இன்னும் எட்டே மாசத்துல உங்க கண்ணு முன்னாடி வந்து நிப்பான். கொஞ்சம் முன்னப் பின்ன ஆகலாம் தா. பட் அடுத்த வர்ஷம் இந்த நாள் இங்க இருப்பான். ப்ராமிஸ்.  நிம்மதியா தூங்குங்க." எனத் தம்பியை அழைத்து வருவதாகச் சத்தியம் செய்துவிட்டுச் சென்றான். 

 

அவனின் பின்னாலேயே வந்த ரிபேக்கா.

 

"ஏ ஃபால்ஸ் ப்ராமிஸ் பண்ற?. உன்னால சஜி எங்க இருக்கான்னு கண்டுபிடிக்கவே முடியாது. நீ பேசுனதுக்காக ஒன்னும் சஜி வீட்ட விட்டு வெளில போகல‌. அவனாத்தா போயிருக்கான். சோ, அவனா வந்தாத்தா உண்டு. உன்னால அவன இழுத்திட்டு வரலாம் முடியாது. வீணா பொய் சத்தியம் செஞ்சி சித்தும்மாவ ஏமாத்தாத."

 

"ஒன் மினிட். ஒன் மினிட். சித்தும்மாவா!!. யாருக்கு யாரு அம்மா?. எந்த உறவு முறைல நீ அவங்கள சித்தும்மான்னு கூப்பிடுற?." எனக் குரல் உயர்த்த அவள் அமைதியாகிப் போனாள். 

 

"ஃபஸ்ட்டப்பால் நீ யாரு? எதுக்கு இங்க வந்த?. உனக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்மந்தம்?. ஹாங். கெஸ்ட்டா அம்மாவ பாக்க வந்தியா? அப்ப வெய்டிங்க ரூம்ல வெய்ட் பண்ணனும். கெஸ்ட்டுக்கு பெட் ரூம் வரைக்கும் போக அனுமதி கிடையாது. யூ காட் இட்." என்றவன்,

 

"மஞ்சும்மா..." என உரத்த குரலில் தலைமை வேலையாளை அழைக்க, அவர் அவனின் முன் வந்து நின்றார். 

 

"இனி இவங்க இங்க, அதாவது வீட்டுக்குள்ள வரைக்கும் வரக் கூடாது. அப்பாயின்மெண்ட் வாங்காம வெய்டிங் ரூம்க்குள்ள கூட விடாதிங்க." என்க, அதற்கு மேலும் அங்கு நிற்கப் பிடிக்காத ரிபேக்கா தன்வேக நடையில் வெளியேறினாள்.

 

செல்லும் அவளைச் சொடக்கிட்டு அழைத்தான் ப்ரஜித். 

 

திரும்பிப் பார்க்க அவளின் சுயமரியாதை இடம் தராத போதும்,‌ கால்கள் நின்று விட்டது. 

 

"உம்ஃப்ரெண்ட் என்ன மந்திரவாதியா. உலகத்த விட்டுத் திடீர்னு மறைஞ்சி போக. இங்க தா எங்கையாது ஒழிஞ்சிட்டு இருப்பான். பொந்துக்குள் மறைஞ்சிருக்குற பாம்ப எப்படி வெளில தல நீட்ட வைக்கனும்னு எனக்கு நல்லவே தெரியும். இப்பவும் நா அவனுக்கு அண்ணேந்தான். எல்லா விதத்துலயும் மூத்தவன் தான்."  

 

'உன்னால முடிஞ்சா செய்.' என்ற சவால் பார்வையை விட்டுச் சென்றாள் அவனின் மனைவி. 

 

ஆம், ரிபேக்கா ப்ரஜித்தின் மனைவி.  

 

சஜித்தின் தோழி. 

 

சஜித், ரிபேக்கா இருவருக்குமான நட்பு பள்ளிப் பருவத்தில் பதின்ம வயதில் தொடங்கியது. 

 

இருவரின் குணமும் கிட்டத்தட்ட ஒன்று போல் இருந்ததால் உயிர்த் தோழர்களாகிப் போயினர்.

 

"வீட்டுல கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி டார்சர் பண்றாங்க சஜி." என்றவளை ப்ரஜித்தின் தலையில் கட்டியது சஜித் தான். 

 

சிறு வயதில் (அது நட்பாக இருந்த காலம்), "உன்னோட லைஃப் பார்ட்னர நாந்தா டிசைட் பண்ணுவேன். நீ சொல்ற பொண்ணத்தா நா கல்யாணம் பண்ணிப்பேன்." என ப்ரஜித் கூறிய வார்த்தைகளை வைத்து, 

 

"எம்ஃப்ரெண்ட்ட கல்யாணம் பண்ணிக்க." என்றான். 

 

அதுவும் அப்போது தான் வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்திறங்கியவனிடம். 

 

அவனின் திருமணத்தைத் தகவலாக அவனுக்கு அறிவித்துவிட்டு, அப்படியே தூக்கிச் சென்று மணமேடையில் அமர வைத்துத் தாலியை கையில் கொடுத்தான். 

 

கட்டுவதை தவிர வேறு வழியே இல்லை ப்ரஜித்திற்கு. 

 

சித்தாரா வேறு கையில் அட்சதையுடன், 'கட்டுப்பா நா அட்சத தூவனும்.' என்ற ரீதியில் பூரிப்புடன் நிற்க, திருமணம் இனிதே நடந்தேறியது.

 

ரிபேக்காவும் செல்வ சீமாட்டி தான். தொழில் ரீதியாக அவளின் தந்தைக்கும் இந்தருக்கும் நல்ல நட்பு இருந்தது. பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லை. 

 

ஆறு மாதங்கள் இருவரும் கணவன் மனைவியாக இருந்தனர். 

 

ஆனால் அதன் பின்...

 

ஆஜித்ரேவனின் இறப்பிற்கு பின் தலைமைக்கு நான் நீயெனப் போட்டி நிலவியது. 

 

அடித்துப் பிடித்து யார் யாரோ முன்னுக்கு வர, அவர்களைச் சமாளித்து சஜித் அதில் அமர்த்தப்பட்டான். அதுவும் அவனின் முடிவு அல்ல, பங்குதாரர்கள் மற்றும் தலைமை இயக்குனர்களின் முடிவு.

 

நிறுவனத்திற்காக என்று கூறினாலும் ப்ரஜித்தால் அதை ஏற்க முடியவில்லை. ஏற்க நினைத்தாலும் விட வில்லை ஸ்மித்தா. 

 

அவனின் அத்தை முறை தான். இந்தரின் தங்கை முறை.

 

"உனக்குன்னு எந்த மதிப்பையையும் உன்னோட குடும்பத்துல குடுக்கல ப்ரஜி. ‘உனக்குக் கல்யாணம்’னு முதல் நாள் தா உனக்கே தெரியப்‌ படுத்திருக்காங்க. இதுல இருந்தே உன்னோட மரியாத அந்த வீட்டுல எந்த அளவுக்கு இருக்குன்னு நல்லாவே தெரியுது. 

 

நீ தா மூத்தவன். ஆனா உன்ன விடச் சஜித்துக்கு தான் எல்லாத்துலயும் முதலிடம். பிஸ்னஸ்ல ஆரம்பிச்சி இப்ப உனக்குப் பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறது வர எல்லாத்தையும் அவனோடது தான். உங்க எல்லாரையும் செல்லாக்காசா மாத்தி மொத்தத்தையும் அவன் ஒருத்தனே ஆள நினைக்கிறான். நீ வேண்ணா பாரு பெரிப்பாக்கு அப்றம் அவனே CEO-வ உக்காந்துக்கப் போறான்." எனத் திருமணம் முடிந்த முதலே, சஜித்தை வெறுக்கும்படி ப்ரஜித்திடம் மூளைச் சலவை செய்ய, அதன் படியே நடந்தும் விட்டதால் ஒருவித கோபம் மூண்டது அவனுள். 

 

ஸ்மித்தா தன் மகள் துகிராவை ப்ரஜித்திற்கு திருமணம் செய்து நிர்வாகத்தில் நிரந்தர உரிமை கோர நினைத்தவரின் திட்டத்தைச் சஜித் முறியடித்துவிட்டான். அது தெரியாது போனது ப்ரஜித்திற்கு.

 

ஆனால் ஸ்மித்தாவிற்கு தெரியும். அதனால் ப்ரஜித்தை வார்த்தைகளால் பேசிப் பேசித் தன் வசம் எடுத்துக் கொண்டிருக்கிறார். 

 

ரிபேக்காவுடன் திருமணம் நடந்த சூழ்நிலை காரணமாக ஸ்மித்தாவின் விஷச் சொற்களுக்குச் செவி கொடுத்தவனை முழுதாக விஷமாய் மாற்ற நினைத்தார். 

 

அதற்கு ஏற்றார்போல் சஜித் CEO வாக அறிவிக்கப்பட்டான். 

 

"எப்படா சாவானு காத்திட்டு இருந்த மாறி இருக்கு நீ இந்தச் சேர்ல உக்காந்திருக்குறது. ஒரு வேள இந்தப் பதவிக்காக நீயே அவர கொல பண்ணிருப்பியோ?" என்ற சொல் அம்பு சஜித்தை அதிகமாகப் பாதித்தது. 

 

அதன் பின் Board of directors meeting இல் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிச் சண்டையிட்டுக் கொண்டனர். அது, அனைத்தையும் வேண்டாமென உதறித் தள்ளி விட்டுச் சஜித்தை ஒட்டு மொத்தமாக விலகிச் செல்ல வைத்தது. 

 

"நீ இன்னைக்கி பண்ணது ரொம்ப பெரிய தப்பு ப்ரஜி. உனக்கு அவன்மேல் பொறாம இருக்குன்னு எனக்குத் தெரியும். ஆனா இன்னைக்கி நீ பண்ணது ரொம்ப பெரிய முட்டாள் தனம். சஜியோட அண்ணெங்கிற ஒரே காரணத்துக்காகத் தான் உன்ன நா கல்யாணமே பண்ணிக்கிட்டேன். இனி என்னால உங்கூட வாழ முடியாது." என்றுப் பெட்டி படுக்கையுடன் தாய் விட்டிற்குச் செல்ல, 

 

'நீ என்ன என்ன வேண்டாங்கிறது. நா உன்ன தூக்கி எரியுறேன் என்னோட லைஃப்ல இருந்து.' என்றவன் விவாகரத்து பத்திரத்தை அனுப்பி விட்டான். 

 

ஆனால் அவள் தான், 'உனக்கு அத அவ்ளோ ஈசியா குடுக்க மாட்டேன் டா.' என்பது போல் தராது அடம்பிடிக்கிறாள் இரண்டரை ஆண்டுகளாக. 

 

'25 வயதில் உனக்கு என்ன திறமை இருக்கிறது என்று இந்தப் பதவியில் அமர்கிறாய்.' எனக் கேட்ட ப்ரஜித்திற்கு சஜித் சென்ற ஆறே மாதங்களில் கண்கள் இருட்டத் தொடங்கிவிட்டது. 

 

தலைமை என்பது சுலபமான பதவி அல்ல, எத்தனை அழுத்தமானது என்று புரிந்து கொண்டவன் நிறுவனத்தைச் சரிய விடாது காத்து வருகிறான். 

 

ஆனால் தூக்கி நிறுத்தச் சஜித் வேண்டும். அவனை அழைக்கவும் தேடவும் அவனின் ஈகோ தடுத்தது. 

 

இன்று தாயின் மூலம் அது கட்டளையாகக் கிடைக்க, பாம்பை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்கினான்‌. 

 

வெற்றி கிடைக்குமா…

மயக்கம் தொடரும்...

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

மயக்கம் : 7

https://kavichandranovels.com/community/topicid/89/


   
ReplyQuote

You cannot copy content of this page