About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
தேடல் - 20
காலையில் முதலில் கண்விழித்த ஆதியோ தூங்கும் பெண்ணவளின் நெற்றியில் முத்தமிட்டு, அவளை தன்னிடமிருந்து விலக்கி தலையனையில் படுக்க வைத்து எழுந்தவன் சமையல் அறைக்குள் சென்று,
அவளுக்காக தேனீர் போட்டு அவள் இரவு சாப்பிடாததால் அதனுடன் ரொட்டி பிஸ்கட் வைத்து எடுத்து அறைக்குள் வந்தவன் தூங்கும் பெண்ணவளை “மகிழ்.. தூங்கினது போது எந்திரி” என்று அவளை எழுப்ப,
அவளோ “தூக்கம் வருது டிஸ்டர்ப் பண்ணாதீங்க தீரா” என்று சிணுங்கி படுக்கையில் திரும்பி படுக்க,
“மகிழ் எந்திரின்னு சொல்லுறேன்ல.. நைட் வேற சாப்பிடாம படுத்துட்ட.. இப்போ ப்ரஷ் பண்ணிட்டு வந்து டீ குடிச்சிட்டு பிரெட் பிஸ்கேட் சாப்பிடு” என்று இழுத்து பிடித்து குளியல் அறைக்குள் தள்ள,
அவளோ தூக்க கலக்கத்தில் “ரொம்ப படுத்துறீங்க தீரா” என்று கூறி உள்ளே நுழைந்து பல்துலக்கி முகம் கழுவி வெளியே வந்தவள், படுக்கையில் அமர்ந்திருந்தவனை கண்டு புன்னகைத்து “குட் மார்னிங் தீரா” என்று கூறியவள் நேத்து இரவு அவன் பேசியதை நினைத்து முகத்தை தூக்கி வைக்க,
அதை உணர்ந்து சிரித்தவனோ “முத காபி குடிச்சிட்டு பிரெட் அண்ட் பிஸ்கட் சாப்பிடு..”
“ரொம்ப தான் அக்கறை” என்று சில்லுபி கொண்டு ரொட்டியை வாயில் வைக்க,
அதை கேட்டு இதழ் கடித்து சிரிப்பை அடக்கியவனோ, பூந்துவலை தோலில் போட்டு “அப்புறம் மகிழ்.. எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு.. போயிட்டு வர நைட்டாயிடும்
சோ.. அந்த வீட்டுல ஸ்டே பண்ணிப்பேன்.. தேட வேண்டாம்” என்று கூறி குளியல் அறைக்குள் நுழைந்தான்.
***
குளியல் அறையிலிருந்து வந்தவன் தயாராகி சென்றது என்னவோ மகி வேலை பார்த்த அலுவலகத்திற்கு தான்
அலுவலகத்தினுள் வந்தவன், அலுவலக மேலாளரிடம் ஏற்கனவே அவளுக்கு விபத்து நிகழ்ந்து விடுப்பு கேட்டிருந்ததால், இப்போது அவளின் அறையில் முக்கியமான சில பொருள் இங்கிருப்பதாகவும் அவளால் வர முடியாததால் தான் வந்திருப்பதாகவும் கூறி,
அவரிடம் அனுமதி வாங்கியே அவளின் அறைக்குள் வந்தவன் லாக்கரிலிருந்த பென்டிரைவ்ஸ் மற்றும் கோப்புகளை எடுத்துவிட்டு, அங்கிருந்து தன்னுடைய தந்தையின் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள பணிகளை முடித்துவிட்டு தனக்கென்று அமைத்த ஓய்வரைக்கு வந்தவன், அவளின் அலுவகத்திலிருந்து எடுத்து வந்தததை நோட்டமிட தொடங்கினான்.
முதல் இரண்டு கோப்புவை முழுவதுமாக ஆராய்ந்தவன்,
அது தனக்கு எவ்விதத்திலும் உதவாது என்றறிந்து அதை ஓரமாக வைத்துவிட்டு மூன்றாவது கோப்பை எடுத்தவனின் கண்கள் அதிலிருந்த டிஎன்ஏ பரிசோதனை குறிப்பிட்டை கண்டு அதிர்ச்சியில் விரிந்தாலும் சில குழப்பத்ததால் பல பல கேள்விகள் மூளை கேட்டாலும்,
அதற்கு பதில் தெரியாமல் முழித்தவனோ “இது எப்படி சாத்தியம்.. இதெல்லாம் எப்படி எடுத்திருப்பா.. இத கண்டுபிடிக்கிறதுல அவளுக்கு என்ன இன்டர்ஸ்ட் இருக்கு..” என்று மேலும் சிலவற்றை சிந்தித்தவன் “அப்போ இதெல்லாம் தெரிஞ்சி தான் பூமிய சதாசிவம் கொல்ல டிரை பண்ணியிருக்காரா.. ச்ச எதவாது க்ளூ கிடைக்கும்ன்னு தேடுனா.. தேவையில்லாத குழப்பம் தான் வருது” என்று தனக்குள் நொந்தவன்,
தன் மூளையில் தோன்றும் கேள்விக்கான பதிலை தேடி அன்றைய வாரம் முழுதும் கழித்தவன், தன்னுடைய இரு வீட்டிற்கு போகாமலும் தன்னவள் மற்றும் அனைவரிடமும் முக்கியமான வழக்கு விஷயமாக டெல்லி சென்றிருப்பதாகவும் பொய் கூறிவிட்டு குழப்பத்திற்கான பாதி விடைகள் அறிந்து கொண்டு,
வீடு திரும்பியவனுக்கு இது அனைத்திற்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம் என்ற சிந்தனை மற்றுமே தோன்றியது இருப்பினும், அவற்றை அறியும் வரை எந்த முடிவும் எடுக்க வேண்டாமென்றும் இதழிகாவிடமிருந்து உண்மையான கோப்புகளை கைப்பற்றும் வரையிலும் பொறுமை காக்க வேண்டுமென்று முடிவெடுத்து நண்பர்களுடன் தனியா தங்கும் வீட்டிற்குள் வந்தான்.
மூவரும் வேலை காரணமாக, எப்போது வேண்டுமென்றாலும் தாமதமாக வீட்டிற்கு வரும் நிலை ஏற்படும் என்பதால் மூவரும் ஆளுக்கொரு சாவி வைத்திருப்பார்கள்.
இப்போது தன்னிடமிருந்த சாவியால் வீட்டை திறந்து நேரே தன்னுடைய அறைக்குள் நுழைந்தவன், படுக்கையில் தன்னுடைய மேல் சட்டையை அணிந்து அதை இறுக்கமாக தான் என்ற நினைப்பில் கட்டிக்கொண்டு உறங்கும் பெண்ணவளை கண்டு ஒரு வாரம் இருந்த அலுப்பு கூட பறந்துவிட, இதழ்களோ தாராளமாக விரிந்தது.
அப்புன்னகையுடனே தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தவன், அவளை இழுத்து தன்மார்பில் போட்டு கொண்டு, தன்னவளின் அணைப்பு இல்லாமல்
ஒரு வாரம் தூங்காத நிம்மதியான தூக்கத்தை தன்னவளை இறுக்கி அணைத்து இன்று தூங்கினான்.
காலையில் கண்விழித்தவனோ தன்னருகில் இருப்பனவனை கண்டு ‘ச்ச.. காலைலயே கனவா..’ என்று எழும்ப முயன்று தன்மேல் இருக்கும் ஆடவனின் இரும்பு கைகளில் விலக முடியாமல் தோற்று போனவள்
‘அப்போ கனவு இல்லையா’ என்று தன் கண்ணை கசக்கி நம்பாத பார்வை பார்த்ததவளின் கண்ணில் அவன் நிஜம் என்று புலப்பட
‘நிஜமாவே வந்திட்டாரா.. எப்போ வந்திருப்பார்?..’ யோசித்தவளுக்கு அவனிடமிருந்து விலக மனமில்லாததால், சிறிது நேரம் அவன் அணைப்பை கண் மூடி ரசித்திருந்தவள் நேரம் போவதை உணர்ந்து ‘அய்யோ.. இவர் எழும்பாம.. நான் எழும்ப முடியாதே..’ என்று எண்ணி “தீரா.. தீரா விடுங்க” என்று கூறி அவள் உசுப்பியும் ஒரு இஞ்ச் கூட அவன் நகரவில்லை என்றதால்
‘என்ன பண்ணலாம்.. மனுஷன் நல்லா தூங்குறாரே.. எப்படி எழுப்புறது’ என்று சிந்தித்து, அவன் கையில் நறுக்கென்று கிள்ளிவிட்டாள்.
அதில் எடுத்த வலியில் “ஆஆ” என்று கத்தி கண் விழித்தவனோ கைகளை தேய்க்கும் பொருட்டு அவளுக்கு விடுதலை வழங்க, பெண்ணவளும் அவனிடமிருந்து எழுந்து விலகி விட்டாள்.
இப்போது ஆதியோ “எதுக்குடி கிள்ளுன”
“நான் எழும்பணும் அதான் கிள்ளுனேன்”
“நீ எழும்பனும்ன்னா எழும்பி போக வேண்டியது தான.. அதுக்கு தூங்கிட்டு இருக்குறவன ஏன்டி கிள்ளுற”
“மனசாட்சி இருக்கா உங்களுக்கு.. மலமாடு சைஸ்ல இருக்குற உங்க கை என்மேல இருந்தா எப்படி எழும்புறதாம்”
“ஏதெய் மலமாடா.. வர வர வாய் உனக்கு ரொம்ப தான்டி நீளுது” என்று கூறி எழும்பி சென்று பல்துலக்கி முகம் கழுவிவிட்டு வெளியே வந்தவன் “மகிழ் காபி” என்க,
அவன் குளியல் அறைக்குள் சென்றததால் வரும் வரை தன் அறையை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தவள், அவன் வந்தும் அவனை கண்டு கொள்ளாது அப்பணியை தொடர்ந்தாள்.
அவள் தன்னை நிராகரிப்பதில் கடுப்பானவன் “ஏய் உன்கிட்ட தான கேக்குறேன்.. எனக்கு காபி வேணும்.. போட்டு தர முடியுமா.. முடியாதுடி”
“நான் யாரு உங்களுக்கு.. நான் எதுக்கு போட்டு தரணும்.. வேணும்ன்னா நீங்களே போட்டு குடிங்க.. இந்த ஒரு வாரம் நானா போட்டு தந்தேன்” என்று கூறி கடுகடுத்து செல்ல,
அவள் கடுப்பிற்கு காரணம், தான் ஒரு வாரம் அவளை விட்டு சென்றது தான் என்பதை உணர்ந்து கொண்டவனின் இதழ்களோ மர்ம புன்னகை சிந்தியது.
**
இரு ஆடவர்களை பார்த்துவிட்டு வந்ததிலிருந்தே முக இறுகிய நிலையில் இருப்பவளுக்கு, சிறிதும் தந்தையை பார்ப்பதற்கும் இவ்வீட்டில் இருப்பதற்கும் விருப்பமில்லை என்றாலும், தன் உடன் பிறவா சகோதரனின் இறப்பிற்கு நியாயம் வாங்கி தரும் வரை இங்கேயே இருக்க வேண்டிய கட்டாயம் என்பதால் சகித்து கொண்டு இருக்கிறாள்.
அதோடு கல்லூரி சென்றுவிட்டு வீட்டிற்கு வருபவள் முடிந்த வரை தன் தந்தையை காணாது தவிர்த்து, தன் அறைக்குள்ளே அடைந்து கிடைக்கிறாள்.
இல்லையெனில் எங்கே அவரை பார்க்கும் போது கோவத்தில் எதாவது பேசுகிறேன் என்று அனைத்தையும் உளறி விடுவோமோ என்று பயந்தவள் சீக்கிரமே இவ்வீட்டை சென்று விட வேண்டுமென்று, அவ்வப்போது ஆதி கூறிய கோப்பையையும் தேடும் பணியையும் செய்கிறாள்.
அவளின் முக மாற்றத்தையும் விலகலையும் உணர்ந்த தந்தையோ எதாவது பிரச்சினையாக இருக்கும் சரியாகி விடுவாள் என்று அவளிடம் எதுவும் கேட்காமல் விட்டவர்.
ஒரு வாரம் கடந்தும் தன் மகளிடம் எவ்வித மாற்றமும் இல்லாததை உணர்ந்து மனைவியிடம் “கோகி.. என்னாச்சி இதழுக்கு எதுவும் பிராப்ளமா”
“தெரியலங்க எதையோ பறிகொடுத்தவ மாதிரியே ரூமுக்குள்ளயே அடஞ்சி கிடைக்குறா.. நானும் பல தடவ கேட்டு பாத்துட்டேன் ஒன்னுமில்லன்னு சொல்லி என்ன தனியா விடுங்கன்னு சொல்லி என்ன அனுப்பிடுவா.. நானும் கொஞ்ச நாள்ல சரியாயிடுவான்னு அப்படியே விட்டுட்டேன்”
“நானும் அவ சரியாயிடுவான்னு கொஞ்ச நாள் எதுவுமே கேட்காம விட்டுட்டேன் ஆனாலும் எந்த மாற்றமும் இல்ல அவகிட்ட.. இப்படி விட்டா பாப்பாக்கு எதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு கோகி”
“புரியுதுங்க.. ஆனா, அவ இப்படி இருக்கிறதா பாக்கும் போது ஒருவேளை லவ் பெயிலியரா இருக்குமோன்னு தோணுதுங்க”
“இதுக்கு மேல வெயிட் பண்ண வேண்டாம் என்ன ஏதுன்னு இப்போவே கேட்டுருவோம் பாப்பாவ கூப்பிடு” என்று மனைவியிடம் கூறினார்.
அவரும் கணவர் கூறியதை கேட்டு மகளின் அறைக்குள் சென்று அப்பா உன்னை அழைத்தார் என்று கூறி அழைத்து வந்தார்.
அவரிடம் பேச பிடிக்க வில்லையென்றாலும் வேற வழியில்லாமல் அன்னையுடன் வந்து அமர்ந்தவள், அவரை காணாமல் “என்ன விஷயமாப்பா கூப்பிட்டீங்க”
“உனக்கு என்னாச்சி பாப்பா.. இப்போலாம் நீ முன்னால மாறியில்ல அப்பாக்கிட்ட கூட சரியா முகம் கொடுத்து பேச மாட்டிக்க.. என்னனாலும் அப்பாகிட்ட சொல்லுடா”
“எனக்கென்ன நான் நல்லா தான் இருக்கேன் ஒன்னுமில்ல” என்க,
அவளின் அன்னை கோகிலாவோ “உன் மூஞ்சே எல்லாம் காட்டிக்கொடுக்குதே பின்ன ஒன்னுமில்லன்னு ஏன்டி பொய் சொல்லுற.. இப்போ நீ உண்மைய சொல்லலனா உன்னோட காலேஜ் வந்து என்ன பிராப்ளம்ன்னு வந்து விசாரிப்போம்”
“அய்யோ.. அப்படிலாம் எதுவும் பண்ணிடாதீங்க.. சொல்லுறேன்” என்று கூறி பெருமூச்சை இழுத்து விட்டவளோ “பூமி உயிரோட இல்ல” என்றவளின் முகமோ தந்தை கண்டு இறுகியது
இதை கேட்டு அதிர்ந்த இருவரும் என்ன என்று ஒருசேர கேட்க,
“ஆமா.. பூமிக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.. எவ்வளவு முயற்சி பண்ணியும் அவன காப்பாத்த முடியல.. இந்த விஷயம் எனக்கே கொஞ்ச நாள் முன்னால தான் தெரியும்”
“என்ன பாப்பா சொல்லுற ஆக்சிடென்ட் ஆயிடுச்சா.. எப்படிடா”
“ம்ம்.. பூமியும் மதியும் ஒருத்தர் ஒருத்தர் லவ் பண்ணினாங்க.. மதி வீட்டுல அவங்களுக்கு வேற மாப்பிளை பாத்து கல்யாணம் பண்ணி வைக்க போறாங்கன்னு தெரிஞ்சு.. ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணி ரெண்டு பேரும் வந்தப்போ தான் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு” என்று கூறி அன்னையின் தோலில் சாய்ந்து கொள்ள, அதற்கு மேல் எதுவும் கேட்க மனமில்லாத அன்னையும் ஆறுதலுக்காக அவளின் தலையை தடவி கொடுத்தார்.
இதை கேட்டு அதிர்ந்த சதாசிவமோ “அந்த மதி பிள்ளைக்கு என்னாச்சி.. அவ நல்லாயிருக்கா தான” என்க,
அக்கேள்வி பெண்ணவளுக்கு ஆத்திரத்தை எழுப்ப ‘ச்ச.. பன்றதெல்லாம் பண்ணிட்டு எப்படி நடிக்குறாரோ.. இப்படியொரு மனசாட்சியே இல்லாதவருக்கு பிறந்தத நினைச்சி எனக்கே அறுவெருப்பா இருக்கு..’ என்று நினைத்து கையை மடக்கி கோவத்தை கட்டுப்படுத்தியவள்
“ம்ம்.. அவங்க நல்லாயிருக்காங்க.. ஆனா ஆக்சிடென்டானதுல குறிப்பிட்ட காலங்கல மறந்துட்டாங்க பூமி உட்பட.. அதோட அவங்களுக்கு பழசு நினைவு வராதுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க.. மீறி நினைவு படுத்தினா உயிருக்கு ஆபத்தாம்” என்க,
அதை கேட்டு நிம்மதியடைந்தவரோ “நல்லவேளை அந்த பொண்ணுக்கு ஒன்னும் இல்ல.. இப்போ அந்த பொண்ணு எங்கயிருக்கா”
‘எதுக்கு மறுபடியும் கொல்லுறதுக்காக’ என்று எண்ணி “அவங்கள ஆதி அண்ணா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. அதுனால இப்போ அவங்க கூட தான் இருக்காங்க” என்று கூறி ஆதி அவளின் கழுத்தில் தாலி கட்டிய நிகழ்வை அவர்களிடம் கூறினாள்.
அதை கேட்டு கடுப்படைந்தவரோ மகளிடம் காட்டிக்கொள்ளாமல் “வார்த்தைக்கு வார்த்தை அப்பான்னு கூப்பிடுவான் பூமி.. அப்படிப்பட்டவன் இல்லன்னு நினைக்க ரொம்ப கஷ்டமா இருக்குமா.. ஆனாலும் நண்பனுக்காக அவன் காதலிச்ச பொண்ணு கழுத்துல தாலி கட்டின ஆதி நினைச்சி பெருமையா இருக்கு.. அவங்க வாழ்க்க சந்தோசமா இருக்க வேண்டிக்குறேன்” என்க,
அதை கேட்டு விரக்தி புன்னகையை பதிலாக கொடுத்தவளோ ‘அவங்க வாழ்க்கை நாசம் பண்ணினதே நீ தானயா.. இதுல அவங்க சந்தோசமா இருக்க வேண்டிக்குவாராம்.. இப்படியொரு கேடுகெட்ட காரியத்தை பண்ணின உன்ன பாத்தாலே நானே உன்ன கொண்ணுடலமான்னு யோசிக்கிற அளவு ஆத்திரம் வருது.. இதெல்லாம் அம்மாக்கு தெரிஞ்சா எப்படி தாங்குவாங்க.. அதுக்காக உன்ன சும்மா விடுவேன்னு நினைக்காத நீ பண்ணின தப்புக்கு தண்டனையா நாக்கு தள்ளி சாக போற..
அப்போ தான் என் அண்ணன் பூமி ஆத்மா சாந்தியடையும் என்று தன்னை பெற்றவரை மனதிற்குள் அர்சித்தவள் சரி.. நான் போய் மதிய பாத்துட்டு வரேன்”
“ம்ம்.. உனக்கு பூமிக்கும் இருக்கிற பந்தம் எனக்கு புரியுது.. அதுக்காக அதையே நினைச்சி உன்ன வருத்திக்காம சீக்கிரம் வெளியே வந்துருமா”
“ம்ம்.. டிரை பண்றேன்பா.. அவ்வளவு சீக்கிரம் எனக்கு நடந்த இழப்பவிட்டு வெளிய வர முடியுமான்னு தெரியல.. போயிட்டு வரேன்பா”
“ம்ம்.. பாத்து போயிட்டு வாமா” என்று கூறி அனுப்பி வைத்தார்.
அவள் சென்றதும் கோகிலாவும் எழும்பி வேலையை பார்க்க சென்றுவிட, வெளியே வந்து கடுகடுவென யாருக்கோ அழைப்பு விடுத்த சதாசிவமோ “டேய் என்ன இழவுடா புடுங்கினீங்க.. கண்ணு அவிஞ்சு போச்சாடா.. தெளிவா தான சொல்லி விட்டேன் அந்த பொண்ணையும் அந்த போலீஸ்சும் போடுங்கன்னு பின்ன ஏன்டா மாத்தி தூக்குனீங்க..
இதுல அந்த பிள்ளை சாகவே இல்லையாம்.. ஒரு வேலைக்கும் லாய்க்கு இல்லடா நீங்க.. இப்போ கூட அந்த பிள்ளைக்கு பழசு மறந்து போச்சுன்னு சும்மா விடுறேன்.. ஆனா இப்போ அந்த போலீஸ் அவளோட புருஷன் ஆயிட்டான்..
அவ மறந்தாலும் இவன் விட மாட்டான் சோ சரியான நேரம் பாத்து அவன முடிச்சி விட்டுரு.. முடிஞ்சா மறுபடியும் அந்த பொண்ணையும் க்ளோஸ் பண்ணிடுங்க.. அடுத்த தடவையாவது சொதப்பாம சரியா பண்ணி தொலைங்கடா” என்று கத்திவிட்டு அழைப்பை துண்டித்தவர், ‘ச்ச.. இவனுங்கள வச்சிட்டு ஒன்னும் பண்ண முடியல..
டேய் ஆதி ஒரு தடவ மிஸ் ஆயிட்ட.. அடுத்த தடவ குறி தப்பாது நீ என்ன நெருங்குறதுக்குள்ள உன்னையும் உன்னோட நண்பன் கூடவே அனுப்பி வைக்கிறேன்’ என்று வன்மமாக சிரித்து செல்ல,
வெளியே சென்ற இதழுக்கு அழைப்பு விடுத்த தோழியோ அவசரமாக சில புத்தகங்கள் தேவைப்படுகிறது எடுத்து வரும்படி கூறியதால், ஆதி வீட்டுக்கு செல்லும் வழியில் தோழி வீடு என்றும், தான் இன்னும் வீட்டை விட்டு பாதி தூரம் கூட செல்லாததால் தோழிக்காக புத்தகம் எடுக்க எண்ணி மறுபடியும் வண்டியில் வீட்டை நோக்கி வந்தவள், உள்ளே நுழையும் போது தன் தந்தை பேசிய அனைத்தையும் கேட்டு முகம் சிவக்க நின்றவள், கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டு எடுக்க வேண்டியதை எடுத்து தோழியிடம் கொடுத்துவிட்டு மகியை காண ஆதி வீட்டை நோக்கி சென்றாள்.
தேடல் தொடரும்...
இப்படிக்கு,
VSV42😍😍
Latest Post: நேசம் 15 Our newest member: P.Paramu Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page