About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
தேடல் - 21
காலையில் சமைத்து முடித்து தன்னவனுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டவள் மறந்தும் கூட, அவன் முகத்தை பார்க்கவில்லை.
பெண்ணவளின் பாராமுகம் ஆடவனையும் வாட்ட, தன் மீது தவறிருந்தாலும் அவளை எப்படி சமாதானம் படுத்துவது என்று தெரியாமல் தவித்தவனோ “மகிழ்.. சாம்பார் ஊத்து.. இட்லி வை.. சட்னி செமையா இருக்கு மகிழ்.. இன்னும் கொஞ்சம் வை” என்று ஒவ்வொன்றும் கூற, அப்படியாவது பெண்ணவளை பேச வைக்க முயற்சி செய்தான்.
ஆனால், அவளோ நீ அழுது பிரண்டாலும் எதற்கும் அசர மாட்டேன் என்று அவன் சொல்லும் வேலையெல்லாம் செய்தாளே தவிர, அவனிடம் சிறிதும் வாயை அசைக்காமல் உரென்று வெளியே முகத்தை வைத்து கொண்டாலும் உள்ளுக்குள் தன்னவனின் அவஸ்தைகளை ரசிக்கவும் தவறவில்லை.
இப்போது சாப்பிட்டு முடித்தவள் பாத்திரங்களை எடுத்து சென்று கழுவ தொடங்க, அவனோ பெண்ணவளை உரசி “நான் கழுவுறேன்” என்று கூற, அவனே கழுவட்டும் என்று அப்படியே அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டாள்.
பாத்திரங்கள் முழுவதையும் கழுவி வைத்தவன், இதற்கு மேல் வேலைக்காகாது என்றறிந்து “ஏய் மகிழ்.. இப்போ என்ன தான் பிரச்சினை உனக்கு” என்று கேட்டவாறு, அவள் எதிரே போய் நின்றான்.
அவளும் நிமிர்ந்து, அவனை பார்த்து “எனக்கு என்ன பிரச்சினை”
“ரொம்ப தான்டி.. உனக்கு என்னோட வேலைய பத்தி தெரியும் தான.. எப்போனாலும் எங்க வேணாலும் போக வேண்டி வரும்ன்னு.. பின்ன ஏன்டி புரிஞ்சுக்காத மாதிரி வீம்பு பண்ணிட்டு இருக்க”
“புரிஞ்சுக்கிட்டதுனால தான் உங்களுக்கு சங்கடம் கொடுக்க வேண்டாம்ன்னு தள்ளி நிக்கிறேன்”
“என்ன புரிஞ்சிக்கிட்ட”
“ம்ம்.. என்னவிட்டு விலகுறதுக்காக தான் இங்கேயே இருந்துட்டு வேலைன்னு டெல்லி போகுறதா போய் சொன்னீங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன்” என்றவளின் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க,
அதில் பதறி பெண்ணவளின் கன்னம் தாங்கியவன் “மகிழ்.. நான் டெல்லி போறேன்னு சொன்னது பொய் தான்டி.. ஆனா உன்ன விலகுறதுக்காக இல்லடி..”
“ம்ம்.. நம்பிட்டேன்” என்று மூக்கு உறிஞ்சியவளை கண்டு நெற்றி முட்டி சிரித்தவனோ “நிஜமா மகிழ்.. டெல்லி போறேன்னு சொல்லிட்டு சென்னைல இருந்தது உண்மை தான் ஆனா நிஜமாலே ஒரு வாரமா கேஸ் விஷயமா பிஸியாயிட்டேன்.. எங்க இங்கேயே இருந்துட்டு உன்னால என்ன பாக்க முடியலன்னு வருத்தப்படுவியோன்னு தான் டெல்லி போறேன் பொய் சொல்லிட்டேன்.. சாரி மகிழ்”
“ம்ம்.. நீங்க இங்க வருவீங்க சொன்னதும் உங்களுக்காக வந்து ஆசையா சமச்சி வச்சிட்டு வெயிட் பண்ணினேன் தெரியுமா.. ஆனா இந்த வாரம் ஒவ்வொரு நாளும் நீங்க வருவீங்கன்னு வெயிட் பண்ணி ஏமாந்து தான் போனேன்” என்று இதழ் பிதுக்கி கூறியவளின்,
அழகில் விழுந்தவனோ நொடியில் தன்னை சுதாகரித்து கொண்டு “சாரிடி.. சத்தியமா நீ இங்க வந்து எனக்காக ஒன் வீக்கும் வெயிட் பண்ணுவேன்னு நினைக்கலடி.. இனி இப்படி பண்ணவே மாட்டேன் பிராமிஸ்”
“ம்ம்..” என்று பெண்ணவளின் சோர்வான வார்த்தையை கேட்டு “அதான் சொல்லிட்டேன்ல.. பேசலாமே இன்னும் கோவம் போகலையா.. உன் கோவம் போக நான் என்ன பண்றது”
“நான் சொல்லி தான் தெரியுமாக்கோம்” என்று கள்ள பார்வையுடன் கூறியவளை உணர்ந்தும் நடித்தவன் "எனக்கு அந்த அறிவு இல்லடி”
“அதான் தெரியுமே.. நீங்க தத்தின்னு”
“ஏன்.. அப்படி சொல்லுற”
“பின்ன ஒரு அழகான பிகராவும் உங்க லவ்வராவும் அதோட தாலி கட்டின பொண்டாட்டி.. இப்படி முப்பெரும் உருவத்துல இவ்வளவு நெருக்கமா நிக்கிறேன்.. ஒன்னுமே பண்ணலன்னா என்ன சொல்லுறதாம்” என்று தன்னவனிடம் வெளிப்படையாக பேசியதை நினைத்து இதழ் கடித்தவள் வெட்கத்தை அடக்க படாது பாடுப்பட்டாள்
அப்பேசியில் ஆடவனுக்கும் வெட்க புன்னகை பூக்க, வெளியில் காட்டாதவனோ “என்ன பண்ணனும் சொல்ற”
இதற்கு மேல் எப்படி புரியவைப்பது என்று தெரியாமல் ஆடவனின் மார்பில் புதைந்தவளோ “இதுக்கு மேல வெளிப்படையா எப்படி சொல்லுறது தீரா” என்று சிணுங்க,
அதில் கட்டுப்பாட்டை இழந்த ஆடவன் “சொல்ல வேண்டாம்.. செஞ்சி காட்டு”
“போங்க தீரா” என்று மறுபடியும் சிணுங்கினாள்.
‘அய்யோ.. சினுங்கியே ஆள கொல்லுறாளே’ என்று எண்ணியவன் “மகிழ்மா.. தயவு செஞ்சு இப்படி சினுங்காதடி.. என்ன என்னமோ பண்ணுது.. அப்புறம் என்னோட கட்டுப்பாட்ட மீறிடுவேன்”
‘ம்க்கும்.. இப்போ யாரு உன்ன கோடு போட்டு மீறாதன்னு சொன்னது.. ச்ச சரியான மடசாம்பிராணி.. கடவுளே இந்த மக்க வச்சிட்டு அவனுக்கு எப்போ புரிய வச்சிட்டு ரெண்டு பிள்ளைக்கு அம்மாகுறது’ என்று தன்னை நொந்தவள்,
அப்போது தான் அவனின் மோகபார்வையை கவனித்து, அவனை சோதிக்கும் பொருட்டு “என்ன பண்ணுதாம்” என்று கேட்டவள் அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் குனிந்து கொள்ள,
அவள் நாடியை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவனோ அவளின் பட்டு கன்னங்களை வருட, ஆடவனின் ஸ்பரிசம் பட்டு வயிற்றில் பட்டம் பூச்சி பறக்க நின்று, அந்நிலையை கண்கள் மூடாமல் அனுபவித்தவள் ஆடவனின் பார்வை தன் இதழில் நிலைப்பதை கண்டு தடுமாறி இதழ்கள் துடி துடித்தது,
அவளின் செயலில் சிறிது சிறிதாக தன்னை இழந்தவன், அவளின் இதழில் சரணடைய ஆசைக்கொண்டு, மெல்ல குனிந்து தன் இதழை அவளின் இதழோடு ஒட்டிய நேரம், “ஏய் டூப் லைட் எங்கடி இருக்க” என்று கேட்டவாறு சமையல் அறைக்குள் நுழைந்த ஹர்ஷா விழி பிதுங்கி நிற்க, அவன் வந்ததில் பதறி பிரிந்தவர்கள் சங்கடத்துடன் ஹர்ஷாவின் புறம் திரும்ப,
அதை உணர்ந்து கொண்ட ஹர்ஷாவோ “அய்யோ.. இங்க நடந்த எதையுமே நான் பாக்கல.. கரடி மாதிரி உள்ள பூந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்ல.. நான் அப்படிக்கா ஹால்ல உக்காந்துக்குறேன்.. யூ கண்டினுயூ” என்று கூறி கொண்டிருந்தவன் தோழியின் தீப்பார்வையில் கப்சிப்பென்று வாயை மூடி கொண்டான்.
சூழ்நிலையை மாற்ற நினைத்த மகியோ “தீரா.. வெஜிடபிள்ஸ்லாம் தீர்ந்து போச்சு.. மதியம் சமைக்கணும்.. நீங்க தவள வாயேன் கூட போய் வெஜிடபிள்ஸ் வாங்கி வரீங்களா”
“ம்ம்..” என்று கூறியவனுக்கோ உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை, முழுதாக முத்தமிட்டிருந்தால் கூட இப்படியொரு உணர்வுகள் வந்திருக்குமா என்று தெரியவில்லை, ஆனால் ஒரு நொடி இதழ் ஒற்றலில் அவளை மொத்தமாக கொள்ளையிடும் அளவுக்கு உணர்வுகள் பேயாட்டம் ஆட தொடங்கி விட,
அதற்கு மேல் அவள் முன் நின்றால் சரி வராது என்று எண்ணி வெளியே போவதே சரியென்று ஹர்ஷாவை அழைத்து கொண்டு காய்கறி வாங்க சென்று விட்டான்.
அவன் சென்றதும் தான் பெண்ணவளுக்கு மூச்சே விட முடிந்தாலும், ஆடவனின் அதே உணர்வுகள் பாவையினுள்ளும் ஏற்பட தான் செய்ய, அவன் தன் இதழில் தந்த ஈரத்தில் உடலெல்லாம் சிலிர்த்து கன்னங்கள் சிவந்து வெட்கித்து போனவள் உணர்வுகளுக்கு கடிவாளமிட்டு விட்டு வேலையில் கவனத்தை செலுத்தினாள்.
*****
ஆடவர்கள் இருவரும் காய்கறி வாங்கி வந்து பெண்ணவளுக்கு சமைக்க உதவி செய்து கொண்டிருக்க, அன்று விடுமுறை நாள் என்பதால் தாராவும் சசியும் கூட அங்கு வந்து இணைந்து கொண்டனர்.
அனைவரின் கவனமும் வேலையிலிருக்க, ஆதியின் பார்வையோ தன்னை பார்க்க முடியாமல் வெட்கித்து இதழ் கடித்து கட்டுப்படுத்தி கொண்ட பாவையையே சுற்றிருக்க, ஏற்கனவே அவனை கண்டு கொள்ள முடியாமல் தவித்தவள் அவன் பார்வையில் இன்னும் தவித்து சிவந்து போனாள்.
இவர்களின் பார்வையை பார்த்த சசியின் கண்கள் கூட அவ்வப்போது தாராவை வருடிய செல்ல, தன்னவனின் திருட்டுப்பார்வையை உணர்ந்த தாராவோ, அவனை சீண்டும் எண்ணத்தில் எழுந்து வந்து அவனை இடித்தவாறு அமர,
அவளின் நெருக்கம் பிடித்தாலும் வெளியே கட்டிக்கொள்ளாத சசியோ “ஏன்டி.. அவ்வளவு இடம் இருந்தும் என்ன எதுக்குடி இடிக்குற”
“மம்.. வேண்டுதல்” என்க,
அதற்கு மேல், அவளிடம் பேசினால் முடியாதென்று காய் வெட்டும் பணியில் கவனத்தை செலுத்தி கேரட்டை துண்டு துண்டாக நறுக்கியவன், ஒரு துண்டை வாயில் வைக்க, அப்போது கையிலிருந்த கத்தி நழுவி கீழே விழுந்து விட்டது,
வாயில் கேரட்டுடன் கத்தியை எடுக்க குனிய, இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய தாராணியோ தன் கையிலிருந்த கத்தியை வேண்டுமென்றே கீழே போட்டு நொடியும் தாமதிக்காமல் அதை எடுக்க குனிந்தவள், தன்னவனின் இதழை தீண்டி அவன் வாயிலிருந்த கேரட்டை பறித்து தனது வாயில் மாறிவிட்டே தான் கீழே போட்ட கத்தியை எடுத்து கொண்டு எழுந்தாள்.
தன்னுடைய கத்தியை எடுக்க குனிந்தவன் பாவையின் இச்செயலில் விழி பிதுங்கி கத்தியை எடுக்க தடுமாறி வெறும் தரையையே தடவ, அதை கண்டு இதழ் கடித்து சிரித்த தாராவோ “சசி.. கத்திய எடுக்க முடியலயா.. நான் வேணா எடுத்து தரவா” என்று கூறி குனிய முற்பட, அதை உணர்ந்து எங்கே மறுபடியும் முத்தமிட்டு விடுவாளோ என்று அஞ்சி கத்தியை எடுத்து நிமிர்ந்தவன் அவளை முறைத்தான்.
அதை எல்லாம் கண்டு கொள்ளாதவள் தன்னவன் இதழ்ப்பட்ட கேரட்டை ரசித்தவாறே கடித்து சாப்பிட்டு முறைப்பவனை கண்டு கண்ணாடித்து இதழ் குவித்து முத்தமிட்டு மேலும் அவனின் தீப்பார்வைக்கு ஆளாவதை கருத்தில் கொள்ளாமல் காய்கறி வெட்டுவதையே தலையாய கடமையாக செய்தாள்.
அவளின் செயலில் அவஸ்தைப்பட்ட சசியோ சட்டென்று பார்வையை ஹர்ஷா புறம் திருப்பி அவன் பார்த்திருப்பானோ என்று பார்க்க, அவன் எதையும் கண்டுகொள்ளாமல் அவனுக்கு கொடுத்த வேலையை செய்து கொண்டிருப்பதை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்ட சசியின் இதழ்களும் மங்கை இதழ் தீண்டியதில் வெட்கப்புன்னகை பூத்தது
அதை கண்ட தாராவோ ‘கொய்யால.. பிடிக்காத மாதிரி சீனா போடுற.. இருடா உன்ன கதற விடுறேனா இல்லையான்னு பாரு’ என்று எண்ணி அவனை கதற விடும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தாள்.
புன்னகை முகமாகவே தன் பணியை செய்து கொண்டிருந்த ஹர்ஷாவோ இரு ஜோடிகளின் காதலையும் கவனிக்க தவறவில்லை ‘ச்ச.. ஒரு சிங்கிள வச்சிட்டு இதுங்க நாளும் லவ்ஸ் பண்ணுதுங்க.. எவ்வளவு நேரம் தான் பாத்தும் பாக்காத மாதிரி இருக்க.. நம்மள கொஞ்சமாவது பாக்குதுங்களா..’ என்று எண்ணி அவர்களின் காதலை ரசித்தவனுக்கு இதழின் நினைப்பு வேறு வந்து வாட்ட, அவளை பார்க்க தூண்டும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வழி தெரியாமல் தவித்து கொண்டிருந்தவன் தன்னை நோக்கி வரும் உருவத்தை இமைக்காமல் பார்த்தான்.
அவனின் தவிப்பை போக்கே வந்து விட்டாள் அவனவள்,
தான் வந்திருப்பதை கவனிக்காமல் நால்வரும் செய்யும் காதலையும் தன்னை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த தன்னவனையும் கண்டு கொண்டவள் மேஜையை தட்டி “ஹலோ.. திருடன் உள்ள வந்தா கூட தெரியாத அளவு ரொமான்ஸ் பண்றீங்க.. இப்படியிருந்தா நாடு உருப்படுமா” என்க,
அதை கேட்டு தான் நால்வரும் சுயம் அடைந்தனர்.
தாராவோ “ஹே இதழ்.. நீ எப்போ வந்த” என்க, அதை கேள்வியோடு தான் இரு ஆடவர்களும் பார்த்து கொண்டிருந்தனர்.
இதழோ “ஹான்.. அண்ணனுங்க ரெண்டு பேரும் அண்ணிங்க ரெண்டு பேரையும் பார்வையால ரேப் பண்ணும் போதே வந்துட்டேன்” என்க,
அதை கேட்டு நால்வரும் அசடு வழிய, அப்போது தான் இவள் யாரென்று மகிக்கே தோன்ற, கேள்வியாகவே அவளை பார்த்திருந்தாள்.
தன்னவளின் பார்வையை உணர்ந்த ஆதியோ “மகி.. இது என்னோட ப்ரெண்டோட தங்கச்சி.. எங்களோட செல்ல தங்கச்சியும் கூட பெயரு இதழிகா” என்று அறிமுகப்படுத்த, ஓடி சென்று மகியை கட்டிக்கொண்டு இதழோ “ஆதி அண்ணன் எல்லாம் உங்கள பத்தி சொல்லியிருக்காங்க.. பட் எனக்கு எக்ஸாம் டைம்னால இப்போ தான் உங்கள பார்க்க வர டைம் கிடைச்சிது.. சாரி அண்ணி”
“இட்ஸ் ஓகேடா.. நீ என்ன பாக்க வந்ததே ஹேப்பி தான்.. நீ என்ன படிக்கிற”
“சைக்கிலாஜி மாஸ்டர் டிகிரி படிக்கிறேன் அண்ணி.. இன்னும் ரெண்டு மாசத்துல முடியுது”
“சூப்பர் காங்கிராட்ஸ்”
“தேங்க் யூ அண்ணி.. அண்ணா அண்ணி ரொம்ப ஸ்வீட்ல” என்க
ஆதியோ “ம்ம் ரொம்ப ஸ்வீட் தான்” என்று கூறி பாவையை பார்த்தவாறே இதழை வருட, பாவம் அதை உணர்ந்த பாவையோ அனைவரின் முன்னிலையில் வெட்கத்தை அடக்க சங்கடப்பட்டு போனாள்.
அவளை இமைக்காமல் பார்த்திருந்த ஹர்ஷாவுக்கு, அதற்கு மேல் அங்கிருக்க முடியாததால் “மதி.. எனக்கு ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டியிருக்கு.. நான் ரூம்ல இருக்கேன்.. சமச்சி முடிக்கவும் கால் பண்ணு” என்று கூறி அங்கிருந்து ஒரு அறைக்குள் நுழைந்துவிட்டான்.
அவன் செல்லும் வரை பார்த்திருந்தவளோ “அண்ணி உங்க சமையல் தான் போல.. இன்னைக்கு ஒரு புடி புடிச்சிட்டு தான் போவேன்” என்று கூறிவிட்டு ஹாலியில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க தொடங்கிவிட்டாள்.
நால்வரும் சமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
சிறிது நேரம் தொலைக்காட்சியில் பார்வை செலுத்தியவளுக்கோ எண்ணம் முழுவதும் ஹர்ஷாவிடம் சென்று பேச வேண்டும் என்பது தான், ஆதலால் தொலைகாட்சி பார்த்து கொண்டிருந்தவள் சமையல் அறையில் இருக்கும் நாலவரின் புறம் பார்வை செலுத்தி, அவர்கள் தன்னை கவனிக்காததை உறுதி செய்தவள் திறன்பேசியை காதில் வைத்து அழைப்பு பேசுவது போல் சமாளித்துவிட்டு ஹர்ஷா சென்ற அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
மகியை தவிர மூவரும் அதை கண்டு கொள்ள, ஆடவர்கள் இருவருக்கும் அவர்களின் விஷயம் தெரியும் என்பதால் மென்மையாக புன்னகைத்து கொள்ள, தாரா தான் என்ன என்று தெரியாமல் யோசனையில் குழம்பி நண்பனை பார்த்து “என்னடா நடக்குது இங்க” என்று பார்வையிலே வினவ,
மகி அருகில் இருப்பதால் ஆதி சசியிடம் கண்ணை காட்ட, அதை உணர்ந்தவனோ பெண்ணவளின் காதருகில் “அவங்க லவ் பண்றாங்க” என்று ஹஸ்கி குரலில் கூறிவிட,
அவனின் சூடான மூச்சு காற்று பெண்ணவளின் கழுத்தில் உரசியதில் அவளின் உடலில் மின்சார பாய்ந்த உணர்வு ஏற்பட்டு முகம் சிவந்தாலும் தன்னை அடக்கி கொண்டு “இப்போ தானடா பாத்தாங்க அதுக்குள்ள எப்படிடா.. அப்போ ஒருத்தர் ஒருத்தர் தெரியுமா அவங்களுக்கு”
“ஆமா” என்று தலையாட்டியவன் மகியை கண்காட்டி அவள் இருப்பதால் இப்போது எதுவும் பேச வேண்டாம் என்பது போல் கூற, அதை புரிந்து பிறகு தெரிந்து கொள்ளலாம் என்று அமைதி காத்தாள்.
தான் வந்ததை அறிந்து எழுந்து வெளியே செல்ல முற்பட்டவனின் கையை பற்றிய இதழிகா “அண்ணிக்கு தான் பழசு மறந்து போனதுல என்ன மறந்துட்டாங்க.. உங்களுக்கு ஏன் என்ன தெரியல.. நீங்க பழச மறக்கல தான ஒருவேளை காதல மறந்துட்டீங்களோ” என்க,
அவள் கேட்டதில் விலுகென்று நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் கண்ணீர் வெளி வர தொடங்க “இதழ்..” என்று ஏதோ சொல்ல முற்பட்டவனை தடுத்தவளோ “நீங்க எதுவும் சொல்ல வேணாம் ஹர்ஷூ.. எனக்கு எல்லாம் தெரியும்.. ஆதி அண்ணன் எல்லாம் சொன்னாங்க நீங்களும் உங்க ப்ரெண்டும் எந்த காரணத்துக்காக என்கிட்ட பழகுனீங்குங்குற உட்பட எல்லாத்தையும் சொல்லிட்டாங்க.. சத்தியமா வலிக்குது ஹர்ஷு..”
“இதழ்.. நான் உன்ன..” என்று கூற வந்தவனை கைநீட்டி தடுத்த இதழிகா “நீங்க எதுவும் பேச வேணாம் ஹர்ஷு.. பண்றதையும் பண்ணிட்டு காரணம் சொல்லாதீங்க.. உங்ககிட்டயிருந்து இப்படியொரு விஷயத்த எதிர் பாக்கல.. எவ்வளவு போன் கால்ஸ் அண்ட் மெசேஜ் பண்ணியிருப்பேன் மும்பைல வொர்க் பிஸி அதுனால நீங்க எனக்கு ரெஸ்பானஸ் பண்ணலன்னு விட்டுட்டேன்..
ஆனா.. உங்களுக்கு சென்னை வந்த இத்தன நாள்ல எனக்கு கால் பண்ணனும் மீட் பண்ணனும்ன்னு தோணவே இல்லல.. நான் சைக்கலாஜி படிச்சவ ஹர்ஷு அண்ணன் வந்து எல்லாம் சொன்ன அப்புறம் தான் நீங்க எந்த காரணத்துக்காக என்னவிட்டு விலகி போனீங்கன்னு எனக்கு புரிஞ்சுது.. நான் இப்படி தான் நினைப்பேன்னு நீங்களா நினைச்சிட்டு விலகி போறது எல்லாம் தெரிஞ்சி எதுக்கு லவ் பண்ணணும் அட்லீஸ்ட் ப்ரொபோஸ் பண்ணாம இருந்திருக்கலாம் நானாவது கஷ்டபட்டுயிருக்க மாட்டேன்..” என்று கூறியவளுக்கு அழுகை வந்து விட, கண்ணீரை துடைத்துவிட்டு மேலும் தொடர்ந்தாள்
“ஒன்னு மட்டும் சொல்லுறேன் ஹர்ஷு.. நீங்க உங்க ப்ரெண்ட் புராஜக்ட்காக ஹெல்ப் பண்ண தான் என்கிட்ட பழகுனீங்கன்னு தெரிஞ்சப்போ கூட எனக்கு வலிக்கல.. ஏன் தெரியுமா உங்க காதல் உண்மைன்னு என் மனசு நம்புச்சு ஆனா, நீங்க உங்கள நான் அப்படி தப்பா நினைச்சிப்பேன்னு நீங்களா நினைச்சி விலகுனது ரொம்ப வலிக்குது.. என்மேல நீங்க வச்சிருந்த காதல் அவ்வளவு தான்ல.. இனி நமக்குள்ள பேச எதுவுமே இல்ல.. நான் வரேன்” என்று வெளியே வந்தவள்,
வேகமாக வேறொரு அறைக்குள் புகுந்து கதவை தாழிட்டு படுக்கையில் விழுந்தவள் இத்தனை நாள் அடக்கி வைத்த கண்ணீர் மொத்தத்தையும் கொட்டி தீர்த்தாள்.
பெண்ணவள் சென்ற திசையை வெறித்திருந்த ஹர்ஷா தான் செய்த முட்டாள் தனத்தை எண்ணியதில் தன்னால் தன்னவள் எவ்வளவு காயப்பட்டிருக்கிறாள் என்று நினைக்கையில் தான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கும் என்று உரைக்க, அக்கஷ்டத்தை தன் காதல் என்னும் மருந்தால் சரி செய்து அவள் மன்னிக்கும் வரை காத்திருக்க வேண்டுமென்று
முடிவெடுத்தான்.
அப்போது உணவு தயாராகிவிட்டது என்று தோழி சாப்பிட அழைத்ததில், அவர்களுடன் இணைந்து சாப்பிட்டவனின் கண்கள் அவனவளை தான் வருடியது.
தேடல் தொடரும்...
இப்படிக்கு,
VSV42😍😍
Latest Post: பாய்மரக் கப்பல் - Story Thread Our newest member: Sahithya varun Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page