All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 43

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 132
Topic starter  

அத்தியாயம்: 43

 

"நாளைக்கி ஓபனிங் செரிமனி இருக்கு வேந்தன். இப்ப வந்து ரிசைனிங் லெட்டர நீட்டுனா என்ன அர்த்தம்?." என்ற ப்ரஜித், இளவேந்தன் தந்த ராஜினாமா கடிதத்தை எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

ஏனெனில் அவனுக்குத் தலைக்கு மேல் வேலை உள்ளது. அதில் உதவியாக இல்லாது உதவியாளர் விட்டுச் செல்கிறேன் என்றால் எரிச்சல் தானே வரும்.

 

"ஐ ஆம் சாரி சார். என்னால இனியும் இந்த வேலைல இருக்க முடியும்னு தோனல." என்றவனின் குரல் மட்டுமல்ல ஆளே முற்றிலும் உடைந்திருந்தான்.

 

மனம் விரும்பிய துகிரா பிறர் அறியாது உறைத்த காதலை எப்படி பொழுதுபோக்கு என்றானோ, அதே பொழுதுபோக்கு விளையாட்டில், சஜித்திடம் மீட்க முடியாத அளவிற்கு கோகோ சிக்கியதை ஏற்க முடியவில்லை. 

 

ஆம்... சஜித் பொழுதுபோக்கிற்காகத் தான் கோகோவை உபயோகித்துக் கொண்டிருக்கிறான் என்ற முடிவுக்கே வந்துவிட்டான்.

 

ஏனெனில் சஜித் கோகோவை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. 

 

சஜித் துகிரா திருமணப் பேச்சு காதலுக்காகத் தொடங்கப்பட்டதென்றால் நிறுத்த வாய்ப்பு இருந்திருக்கும். இந்தத் திருமணம் குடும்ப கௌரவத்தையும், தொழில் விருத்தியையும் முன்நிறுத்திப் பேசப்பட்டது. அதனால் நடந்தே தீரும். 

 

வசதி படைத்த பல இடங்களில் நடப்பது போல் கோகோவுடன் சஜித் முறையற்ற ஒரு வாழ்க்கையைத் தான் வாழப் போகிறான்‌‌.  

 

காதல் என்ற ஒன்றை செய்ததால் தன்னைப் போல் ஏமாற்றத்துடன் வரும் கோகோவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன் தன் வேலையை ராஜினாமா செய்தான். 

 

"கம்பெனி ப்ரோட்டோக்கால் பத்தி நாஞ்சொல்லிக் குடுக்கவேண்டியதில்ல வேந்தன் உங்களுக்கு." என்றவன், கடிதத்தை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாகக் கையெழுத்திட்டான். 

 

"உடனேலாம் அனுப்பிட முடியாது. டயம் எடுக்கும். அடுத்த வாரம் வந்து ப்ரொசிசர கம்ப்ளீட் பண்ணுங்க." என்றதும் தலையசைப்புடன் வெளியே செல்ல, அத்தனை நேரம் அவர்களின் சம்பாசனைகளை கேட்டு அதிர்ச்சியில் நின்றிருந்த துகிரா,

 

'ஏன் இந்த முடிவு?' என்று பரிதவிப்புடன் அவனின் பின்னாலேயே சென்றாள். 

 

"என்ன விட்டுட்டு போகப் போறிங்களா வேந்தன்?" என்றவளைப்‌ பார்க்க அவன் விரும்பவில்லை. சென்றேவிட்டான். 

 

அவனிடம் சொன்ன காதலை மற்றவர்களுடன் பகிருமளவிற்கு அவளிடம் தைரியமில்லை. அதனால் அது காதலே இல்லையென்றான்.

 

"ப்ரஜித், வேந்தன் வேலைய ரிசைன் பண்ணிட்டு போறாரு." எனக் கண்ணீருடன் முறையிட்டாள் துகிரா. 

 

"எங்க போய்டப் போறான். பாத்துக்கலாம். நீ ரிபேக்காக்காவ பாத்து நாளைக்கி நடக்க வேண்டியது சரியா இருக்கான்னு பாரு." என உத்தரவிட, 

 

"ஆனா வே...ந்தன்..."

 

"அவன விடக் கவனிக்க வேண்டிய வேல நிறையா இருக்கு துகிரா. போ..." என விரட்ட, மனமில்லாது ரிபேக்காவைக் காணச் சென்றாள். 

 

"கோகோ, வேந்தன் வேலைய ரிசைன் பண்ணது உனக்குத் தெரியுமா?" என்றக் கேள்வியுடன் ரிபேக்கா அலுவலகம் வந்தவள், கோகோவின் சிவந்திருந்த முகம் கண்டு, 

 

"என்னாச்சி?" எனத் தோழியாய் ஆதரவுடன் அணைத்தாள்.

அவளின் அணைப்பு‌ மேலும் கோகோவை அழ வைத்தது. 

 

"சத்யா விசயம் அத்தானுக்கு தெரிஞ்சிடுச்சி துகி. அத்தான் எம்மேல கோபமா இருக்காரு. நா கால் பண்ணேன் எடுக்கல. எங்கிட்ட அவருக்குப் பேசவே பிடிக்கலபோல." என்று அழ, அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று புரியாது நின்றாள் துகிரா. 

 

"அத்தானையே என்னல சமாளிக்க முடியல. வீட்டுல சத்யா விசயத்த எப்படி பேசுவேன். அண்ணா என்ன பண்ணுவான்னு நினைச்சாலே பயம்மா இருக்கு துகி. அத்தானோட சப்போட் இல்லாம என்னால எதுவும் பண்ண முடியாது துகி. என்னால சத்யா இல்லாத வாழ்க்கைய நினைச்சுக்கூட பாக்க முடியல." எனப் புலம்பியவளை பார்க்கப் பாவமாக இருந்தது. ‌

 

பாவம்…

 

என்ன செய்ய இங்கு மூன்று பெண்களின் நிலையும் மோசமாகக் குழப்பமாகத் தான் இருக்கிறது. 

 

ரிபேக்கா... 

 

முதலில் சஜித்தைப் பார்த்ததைப் பற்றி, ப்ரஜித்திடம் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள். 

 

கணவனாக அவனை முழுமனதுடன் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவனிடம் இதைச் சொல்லாமல் இருப்பது சரியில்லை என்று தோன்றியது. 

 

அதே நேரம் கூறுவது தன் நண்பனுக்குத் துரோகம் செய்ததுபோலாகி விடாதா! மனம் போராட்டம் கண்டது. நாட்கள் செல்லட்டுமென அவள் அமைதியாக வேலையைக் கவனிக்கத் தொடங்கினாள். 

 

ஆனால் ப்ரஜித்தின் சில நடவடிக்கை அவளுக்குக் கவலையைத் தந்தது. 

 

ப்ரஜித் அனுஜித்துடன் தோழமையுடன் பழகுவது ரிபேக்காவிற்கு பிடிக்கவில்லை. 

 

அனுஜித்திற்கு இல்லாத பழக்கமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தீய குணங்களைக் கொண்டவன். 

 

மகேந்தர் ஆரம்பித்த பல தொழில்கள் மகனான இவனால் நட்டப்பட, இந்தரிடம் கொண்டு வந்து விட்டார். ஆனால் அவராலும் அவனை அடக்க முடியவில்லை. பணக் கையாடல் தொடங்கி, மரியாதையில்லாது அலுவலகத்தில் பலருடன் நடந்து கொண்டது வரை அனைத்தும் பிரச்சனையே. 

 

போதையுடன் இரும்பு ஆலைக்குள் வளம் வந்தவனை சஜித் தான் அடித்துத் துரத்தி விட்டான். 

 

அவன் புனிதமாக நினைக்கும் ஆலைக்குள் மதுவுடன் வரும் யாருக்கும் அனுமதி இல்லையென்றான்.

 

தொழிலாளர்கள் முன்னிலையிலும் உண்டான அவமானத்திற்கு பதிலடி கொடுக்கக் காத்திருக்கும் அவனுடனும், இந்தரை விரட்டி விட்டுக் குழுமத்தைக் கைப்பற்ற நினைக்கும் அவனின் தந்தையுடனும் ப்ரஜித் பழகுவது ரிபேக்காவிற்கு கசந்தது. 

 

அவனிடம் ஏன் எனக் கேட்டதற்கு, "JET industry மோசமான ஒரு சூழ்நிலைல இருக்கு கண்ணம்மா. நமக்குப் பலம் வேணும். இல்லன்னா industry கை மாறிடும்." என்றவன் கூற்றும் சரியாக இருந்தது. 

 

வெள்ளம் கழுத்தைத் தாண்டி நாசியை தொட உள்ளதை அவளும் உணர்ந்திருந்தாஅள். காலில் சக்கரம் கட்டாத குறையாகச் சுழல்கிறான். அவனிடம் சஜித்தை பற்றிக் கூறி மேலும் அவனை டென்ஷனாக்க விரும்பவில்லை.

 

துகிரா... 

 

தன் தாயிடம் வேந்தனை நான் காதலிப்பதாகச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துத் தான் நித்தமும் விழிக்கிறாள். ஆனால் சொல்லத்தா தான் சமயம் அமையவில்லை. 

 

தன் தந்தையிடம் சென்று, "இந்தக் கல்யாணம் அவசியமா டேட்." என்று நூல்விட்டுப் பார்த்தாள்.

 

"பேபி, கல்யாணம் அவசியம். ஆனா அதுக்கு உங்கம்மா சூஸ் பண்ணா ஆளு தான் சரியில்ல." என நல்ல முறையில் ஆரம்பித்தவர், "உன்னோட குணத்துக்கு ப்ரஜித் தான் சரியான மேட்ச். நீ அவன்கூட க்ளோஸ்ஸா இரு." என அறிவுரை வழங்க, ஆத்திரமாக வந்தது அவளுக்கு. 

 

தன் அண்ணன் ஜனார்த்தனிடமும் பேசினாள். அவன் அனுஜித்தை பரிந்துரைத்தான். 

 

எங்குச் சுற்றினாலும் நீ ரேவன் குடும்பத்திற்கு மருமகள். அதில் மாற்றமில்லை. மாப்பிள்ளை மாறலாம். ஆனால் அது ரேவன் என்று முடியும் மூவரில் ஒருவன் தான் என்க, துகிரா தன் மாமன் வீட்டிற்குச் சென்றாள். 

 

அங்கு, தான் பெற்றெடுக்காத மகனும், அவனின் மனைவியும் சேர்ந்து வாழ, ரேவன் பவனில் வீடு கட்ட திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டிருந்தது. 

 

சஜித் வருவான். அவனுக்குத் திருமணம் செய்து வைத்துப் பார்க்கப் போகிறோம் என்று கல்யாணக் கனவுகளில் இருக்கும் சித்தாராவிடம் பேச மனமில்லை. 

 

அடுத்ததாக இந்தர். பாவம் அவரைக் கண்ணில் பார்ப்பது அரிதாகிப் போனது. ப்ரஜித் செய்து வைத்த சில குளறுபடிகளால் மூழ்கிக் கொண்டிருக்கும் நிறுவனத்தைக் காப்பாற்ற மாலுமியாய் பதறிக் கொண்டிருக்கும் அவரிடமும் எதுவும் சொல்லவில்லை. 

 

அவளின் எல்லாக் கதவும் அடைபட, அவளுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை சஜித் மட்டும் தான். 

 

பாவம்... திருமணத்தைக் குறித்து பேசினாளே தவிர இளவேந்தனுடனான தன் காதலைப் பற்றிக் கூறவில்லை. அவளின் மொத்த நோக்கமும் திருமணத்தை நிறுத்துவது மட்டுமே. 

 

 நிறுத்தி விட்டால் போதும் இளவேந்தன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணமோ!

__________

 

தனக்கு முதுகு காட்டி படுத்திருந்தவளின் இடையணைத்துக் கொண்டவன், அவளின் காது மடலில் முத்தமிட்ட, வேகமாகத் திரும்பி அவனின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் கோகோ. 

 

"எப்ப ஊருக்குப் போகப்போற?" 

 

"நாளைக்கி காலைல." என்றவளின் இறுகிய அணைப்பு அவனுக்குச் சிலிர்ப்பை தந்தது. 

 

"உன்ன நா மிஸ் பண்ணுவேன் சத்யா. ரொம்ப... ரொம்ப..." என்றவளின் தவிப்பு புரிய,

 

"அப்பப் போகாத. இப்படியே இருப்போம்." என்றவனும் எலும்புகள் உடைபடுமளவிற்கு அணைத்தான்.

 

"அத்தான பாக்கனும் சத்யா. பேசனும். எதையோ இழந்த மாறிக் கவலையா இருக்கு." என்றாள் கண்ணீருடன். 

 

"உன்ன புரிஞ்சுப்பான்." என்றவன் உச்சந்தலையில் முத்தமிட்டான். 

 

கரிய மேகமாய் மெத்தையில் படந்திருந்தவளின் கூந்தலுடன் விளையாடி, வாசம் பிடித்துக் கிறங்கிக் கிடக்க, கோகோவின் செல் அலறியது. 

 

எடுத்து அதைக் காதில் வைத்தவள், பேசி விட்டு அவனை விட்டுப் பிரிந்து எழ, உச்சுக் கொட்டி தடுத்தான். 

 

"இன்னைக்கி ஓப்பனிங் டே சத்யா. நிறைய வேல இருக்கு. நைட் பாக்கலாம். ட்ரெயின் ஏறுற வர உங்கூட தா இருப்பேன்.” என்றவள்,

 

“என்ன எட்டு மணிக்கு வந்து பிக்கப் பண்ணிக்கிறியா சத்யா. ப்ளீஸ்.” என்க, அவனின் புன்னகைப்‌ பெற்றுக் கொண்டு வந்த புறப்பட்டுச் சென்றாள். 

 

இது அவள் எதிர்கொள்ளும் முதல் விழா. பெரிய விழாவும் கூட.

 

ஏற்பாடுகள் கணக்கச்சிமாகச் செய்திருந்தாள் ரிபேக்கா. அது தொழிலில் அவளுக்கு இருந்த காதலைக் காட்டியது. 

 

காலையில் மத்திய மந்திரியின் தலைமையில் திறப்பு விழா இனிதே முடிய, மாலை மங்கும் நேரம் சில கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

 

கோகோ, புகைப்படங்களை எடுத்து ப்ரஜித்தின் நிறுவனத்திற்காக உருவாக்கிய இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டே இருக்க, பார்வை அந்த ஸ்கேட் போர்டில் விழுந்தது. 

 

ஆசையுடன் காலில் அணிந்தவளுக்கு, இறங்கி சறுக்கிப் பார்க்கப் பயம். 

 

ஆனால் அவளின் இடையில் கைக்கொடுத்து உள்ளே இழுத்து வந்தான் சத்யா. 

 

அவளை அழைத்துச் செல்ல வந்தவன், ஸ்கேட் போர்ட்டை ஃபோட்டோ எடுத்துத் தன் பக்கத்தில் பதிவு செய்து, சோகமான ஒரு எமோஜியை வைத்திருப்பதை பார்த்தான். அந்தச் சோகத்தைக் களையெடுக்க வந்து விட்டான். 

 

"சத்யா!!" என விழி விரிக்க,

 

"எங்கைய பிடிச்சுக்க." என்று வலக்கரத்தை நீட்டினான். அதில் கரம் வைத்தது மட்டும் தான் நினைவு, பின் காற்றில் பறப்பது போன்று தான் உணர்ந்தாள் கோகோ. 

 

அவளுடன் சேர்ந்து அவள் ஆசைப்பட்டது போல் சறுக்க வைத்தவன், கடந்த இரு நாட்களாக அவள் தொலைத்திருந்த குறும்புச் சிரிப்பை மீட்டெடுத்திருந்தான். 

 

அவர்களின் ஜோடியான கேட்டிங் நடனத்தைப் பார்த்து அனைவரும் ஒதுங்கி நிற்க, ஸ்பாட் லைட் என்று சொல்லப்படும் வெளிச்ச குமிழ் அவர்களின் மீது அடிக்கப்பட்டது. 

 

அங்கிருந்த பெரிய திரை, இருவரின் முகம் மட்டும் காட்டப்பட்டு, இருவரின் ஆட்டத்தையும், நெருக்கத்தையும், கடைசியாக அவன் அவளின் இதழில் முத்தமிட்ட காட்சியையும் உலகிற்கு காட்சிப்படுத்தியது. 

 

தன்னவன் தந்த முத்தத்தில் மயங்கிக் கிடந்தவளிடம், "Will you marry me Kokila?" என்றது, அந்த அரங்கில் இருந்தவர்களின் கைத்தட்டலுக்கு இடையே கேட்டது. 

 

தன்னை திருமணம் செய்துகொள்வாயா? என அவன் கேட்டது அவளுள் லட்சோப லட்சம் மத்தாப்பு பூத்தைப் போன்ற உணர்வைத் தந்தது. 

 

ஆனால் பாவம் மத்தாப்பு ஓவர் டாஸ்ஸாகி மனதை கருக்கிவிட்டது.

 

 

மயக்கம் தொடரும்...

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

 

மயக்கம் 44

https://kavichandranovels.com/community/postid/1374/


   
ReplyQuote

You cannot copy content of this page