About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்: 42
"வின்னருக்கு ப்ரைஸ் இல்லையா?" எனக் கேட்டுப் பெண்ணவளின் நாடியை உயர்த்திப்பிடிக்க, விழிகள் உருண்டோட மறுத்து நாணத்தில் நிலம் நோக்கி நிலைத்தன.
அந்த விழிகளில், அவனைப் பார்க்கும்போதெல்லாம் ரசனையைப் பார்த்திருக்கிறான். அக்கறை, விளையாட்டுத்தனம், பயம், குறும்பு, சில நேரத்தில் பொறுப்பும் கடமையும் கூட இருந்திருக்கிறது. ஆனால் அவையெல்லாம் அவனுக்கு மட்டுமேயெனச் சொந்தமானது இல்லையே.
இளவேந்தனிடம் பேசும் போதும் மேலே சொன்ன அனைத்தையும் கண்டிருக்கிறான். ப்ரஜித், ரிபேக்கா, துகியைப் பற்றிக் கூறும் போதும் பார்த்திருக்கிறான்.
ஆனால் வெட்கம், தன் உணர்வுகளைத் துண்டிவிடும் ஆடவனுடன் மட்டும் பெண்ணவள் பேசும் மொழி. தூய அன்பில் நாணமும் வெட்கமும் வந்து சேரும்போது காதலாக மாறுகிறது.
அந்தக் காதல் முழுக்க முழுக்க சஜித்திற்கு சொந்தமானது. வேறு யாருக்கமல்லாது அவனுக்கே மட்டுமேயானது.
முதல் முறை கொள்ளும் நாணத்தின் பரிதவிப்பில் பெண்ணவள் வதங்கி நிற்க, அவள் அவஸ்தையில் இவன் குளிர்காய்ந்தான்.
அன்று ஒற்றி எடுத்த அதரத்தின் மென்மை இப்பொழுதும் அவனின் உதடுகளால் உணர முடிந்தது.
ஒற்றல் போதுமானதாக இல்லை, ஆழ்ந்த முத்தம் வேண்டித் துடித்த உள்ளத்தின் உந்துதலாய், வெளிறிய சிவப்பு நிறத்தில் இருந்த உதடுகளை ஆவலுடன் அடைய நெருக்க, லிஃப்ட் எட்டாவது தளத்தில் நின்றது. கூடவே சிலர் அதில் பயணிக்கக் காத்துக் கொண்டும் நின்றதால், தப்பித்தோம் பிழைத்தோமென அவனின் மார்பில் கை வைத்துத் தள்ளி விட்டு, ஓடிச் சென்றாள் கோகோ.
அவசரத்தில் தரையில் தவண்டு கொண்டிருந்த முந்தானையை கவனியாத செல்ல, அது மூடிக் கொண்டிருந்த லிஃப்ட்டின் கதவுகளில் சிக்கியிருக்கும். அதற்குள் அதைத் தன் கரத்தால் எடுத்துதவியவனிடம், "தேங்க்ஸ்." என்றவளுக்கு புடவை நுனியை தராது,
"ஐ திங் நா பாத்து, எங்கிட்ட பழகின பக்கத்து வீட்டு பொண்ணு நீ இல்லனு நினைக்கிறேன். யார் நீ.?" என்க,
அவன் வம்பு பேசுகிறான் என்ற கோவத்தில் விழி உருட்டி ஓரத்திற்கு கொண்டு வந்து முறைத்தாள்.
"அவளுக்குத் தேங்க்ஸ் வாயால சொல்லி மட்டும் பழக்கமில்ல." என்றவன் மணிக்கட்டைச் சுழற்றி, அடைபட்டிருந்த முந்தானையை கையில் சுற்ற, அவளின் இழுவைக்கு கால்கள் தானா பின்னே சென்றது.
யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றியும் பயத்துடன் பார்த்தாள் பெண்.
"யாரும் இல்ல. அப்படியே இருந்தாலும் ஐ டோன்ட் கேர்." என்றபடி கரத்தைச் சுண்ட, மார்பில் வந்து விழுந்தவளின் கன்னம்பற்றி, அவனுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டான்.
தேனெடுக்கும் வண்டாய், மலரிதழில் மென்மையை வலியாது களவாடியவனின் முதுகை ஆதரவுடன் பெண்ணவள் பற்ற, அவளைக் கொடியாய் சுற்றிக் கொண்டான். கரங்கள் எல்லை தாண்டிப் பயணம் செய்து பெண்ணவளின் மென்மை பரிசோதிக்கத் துடித்தது.
இருவரும் ஆழ்ந்த முத்தத்தில் திளைத்திருக்க, அதற்கு எமனாய் அமைந்தது கோகோவின் செல்போன் அதிர்வு.
யாரெனப் பார்த்தவளை பேச அனுமதிக்கவில்லை அவன். இதழ்கள் அவன் வசமிருக்கும்போது எப்படி பேசுவது.
மிகவும் போராடி தன்னை பிரித்தெடுத்தவள், "அத்தான் நான் வீட்டுக்கு வந்துட்டேன்."
"..."
"இல்ல துகியே என்ன ட்ராப் பண்ணா. ம்... காலைல பேசவா. டயர்டா இருக்கு." என்று அழைப்பைத் துண்டத்தவள், சஜித்தின் பக்கம் தலை உயர்த்தாது, தன் வீட்டுச் சாவியை துவாரத்தில் பொருத்தி திருக, உள்ளே சென்றது நான்கு கால்கள்.
அவளை அணைத்து தூக்கிச் சென்றவனுக்கு அவள் வேண்டும்.
எத்தனை நாள் ஏக்கமிது.
ஏதோ விளையாட்டாய் நெருங்கிறாளென நினைத்தவனுக்கு முதல் முறை ரயிலில் அவள் தந்த முத்தமே போதை தான். ஆனால் அன்று அவள் கண்களில் தெரிந்தது நன்றியுணர்வு.
அது அவனின் உணர்வுகளை கட்டிவைத்தது.
அதன் பின் எத்தனையோ முறை தேடியிருக்கிறான் காதலையும் வெட்கத்தையும். ஆனால் இரண்டையும் ஒரு சேர பார்க்க முடிந்ததில்லை.
கடையில் அன்று அவள் தந்த முத்தத்தில் பார்த்து பெண்ணவளின் நாணத்தை. அந்த நாணம் அவனை நேருக்கு நேராகப் பார்க்க அனுமதிக்காது ஓடி ஒளிய வைத்தது.
தூரமாக அவன் இருந்தாலும், பக்கமாக இருந்தாலும் அவனை நேருக்கு நேர் பார்க்கத் தவறியதில்லை அவள். ஆனால் இந்த ஒரு வாரமும் மறைந்திருந்து கள்ளப் பார்வை பார்த்து அவனின் போதையை பித்தென்ற நிலைக்கு கொண்டு வந்தது.
அவள் கண்ணில் கண்ட காதல் தனக்கானது என்று தெரிந்த பின் அவளை முழுதாக எடுத்துக் கொள்வது தன் உரிமையென்றுபட்டது.
அவளுக்கு அவளின் சத்யாவை மறுக்கத் தோன்றவில்லை.
ஆசைக்கு ஒன்று, ஆவேசமாய் ஒன்று, காமமாய் ஒன்றென இருவருக்கும் இடையே எத்தனை யுத்தம் நடந்தது, அதில் எத்தனை வெற்றி எத்தனை தோல்வி யார் யாருக்கு கிடைத்ததென்று கணக்கெடுக்க முடியவில்லை.
உடல் காற்றில் மிதக்க, கோகோ எழுந்தபோது நேரம், சூரியன் உச்சிப் பொழுதில் பவனிவரும் சமயமாகியிருந்தது.
பதறிப் போய் எழுந்தவளால் எழ முடியவில்லை. அவளின் இடையணைத்து, வயிற்றில் முகம் புதைத்துத் துகில் கொண்டிருந்தவனை போர்வையை விலக்கிப் பார்த்தவள் நேற்றிய நினைவில் சிலிர்த்துப் போனாள்.
"பாவ் பஜ்ஜி... தூங்குறான் பாரு, குழந்த மாறி." என உறங்கிக் கொண்டிருப்பவனின் கன்னம் கிள்ளி வைத்தவள், அவனின் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட, அவனின் அணைப்பு இறுக்கியது.
முகத்தை இடம் வலமாக அசைத்தவனிடம்,
"நோ... நோ... சத்யா டயமாச்சி. நல்லா விடியவும் செஞ்சிடுச்சி." என்றபடி நலுவ,
"நல்லது. விடிபல்போட வெளிச்சத்துல உன்ன நா நேத்து சரியா பாக்கால. இப்ப முழுசா, அதுவும் நல்லாவே பாக்க முடியும்." எனக் கிறக்கத்துடன் கூறி செயலில் இறங்கியவன் சொன்னதை செய்துவிட்டே அவளை விட்டான்.
அவனைச் செல்லமாகக் கடிந்து கொண்டு, உடைகளைக் கையில் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் கோகோ.
அப்போது கதவு தட்டப்பட, "சத்யா யாருன்னு பாரு." என்றவளின் ஏவலுக்கு பணிந்து கதவைத் திறந்தான்.
வந்திருந்தது இளவேந்தன்...
திகைத்துப் போனான் வேந்தன்.
எங்கே என்று தெரியாதிருந்த தன் பிரிய முதலாளியைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்றால், அவனைக் கோகோ வீட்டில், அறைகுறை ஆடையில் பார்த்தது அதிர்ச்சி.
உறைந்துபோய் நின்றிருந்தான்.
இருவரும் ஒரே வீட்டிலா.! எப்படி என்ற கேள்விக்குத் தப்பும் தவறுமாக யோசிக்க முடியாது அவன் நின்றான்.
ஏனெனில் அவன் அறிந்த வரை சஜித் ஒழுத்திற்கு முக்கியத்துவம் தருபவன். அவன் எந்தப் பெண்ணையும். தொட்டு பேசக் கூட அனுமதித்தது இல்லை. ரிபேக்காவிடம் கூடுதலாக நான்கு வார்த்தை இருக்கும். ஆனால் இருவரும் கட்டித் தழுவித் தங்களின் நட்பை வளர்த்தது இல்லை. கண்ணியம் காத்து விலகி நிற்பவன்.
அதனால் சிறு நம்பிக்கை இருக்க, அதை உடைபட்டது,
"சத்யா... யாரு வந்திருக்கா.?" எனச் சுடிதாரின் டாப்ஸ்ஸை மட்டும் அணிந்து கொண்டு, இடையில் துண்டுடன் வந்தவளின் கோலம் கண்டு.
சஜித் எதுவும் சொல்லாது இளவேந்தனைக் கடந்து, தன் வீட்டை நோக்கிச் செல்ல, இளா கதவை ஓங்கி சாத்திக் கொண்டு அதில் சாய்ந்து நின்றான்.
பொய்... அவள் அதை அதிகமாகக் கூறுவாள் என்று தெரியும். ஆனால் தன்னை ஏமாற்றும் அளவிற்கு அது இருக்காது என்று நினைத்திருந்தான்.
இருக்கும் உறவுகளில் கோகோ மட்டும் அவனுக்கு எப்பொழுதும் ஸ்பெஷல்.
அதனால் அவள் தந்த ஏமாற்றம் ஆத்திரத்தை தர,
"அத்தான்..." என்று உடை மாற்றி விட்டுக் கதவைத் திறந்தவளின் கன்னத்தில் ஆத்திரத்துடன் அறைந்தான் இளவேந்தன்.
"அது தான் சத்யாவா!!. ரெண்டும் பேரும் ஒரே வீட்டுல… என்ன எத்தன மாசமா ஏமாத்திட்டு இருக்க.?"
"இல்ல அத்தான்... ஏமாத்தலாம் இல்ல. சத்யாவ பத்தி... நா... சொல்லனும்னு நினைச்சேன்... முடியல." என்றாள் கண்ணீருடன்.
"எனக்கு அவனப் பிடிச்சிருக்கு. நானும் சத்யாவும் லவ் பண்றேன்."
"அந்த எலவு இந்த ரூம்ம பாத்தாலே தெரியுதே. உங்காதல் எப்படிப்பட்டதுன்னு." என அருவருப்பில் முகம் சுண்ட,
"நீங்க நினைக்கிற மாறி இல்ல அத்தான். இது... இது... தப்பில்லன்னு தோனுச்சி." என்றவளின் அருகில் வந்தவன் மீண்டும் அடிப்பானோ என்று மிரண்டு போய்ப் பார்த்தவளை கட்டிலில் அமர வைத்தவன்,
"சத்யா... அது தான் அவன் பேரா? உனக்கு உறுதியா தெரியுமா அவனும் உன்ன காதலிக்கிறான்னு?" என்றதற்கு ஆமெனப் பலமாகத் தலையசைக்க,
"காதலிச்ச சரி, கட்டில்ல உருண்டுட்ட சரி, அடுத்து..."
"கல்யாணம்..." என்றாள் சின்னக் குரலில்.
"உன்ட்ட சொன்னானா?" என்றதற்கு பதில் இல்ல கோகோவிடம். எப்படி சொல்வாள் இருவரும் மனதை பகிரும் மற்றதை பகிர்ந்து கொண்டுள்ளனரே.
“சொல்லு கோகிலா. எப்ப கல்யாணம்?” என இளா கத்த, அதற்கு மட்டுமல்ல அதன்பின் வந்த எந்தக் கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை.
"சத்யா, சாக்லேட் பேக்டரி வச்சிருக்கான். வேற என்ன தெரியும் உனக்கு அவனப் பத்தி.? அப்பாம்மான்னு இருப்பாங்கள்ல. யாரு? எங்க இருக்காங்க?.அவனுக்குன்னு ஒரு குடும்பம் இருந்தா என்ன பண்ணுவ. ஏற்கனவே கல்யாணமானவனா இருந்தா?”
"எனக்குச் சத்யா மேல நம்பிக்க இருக்கு." எனத் தலை நிமிராது கண்ணீருடன் கூறியவளிடம், ‘அவன் சத்யா அல்ல சஜித். அவனைப் போன்ற பணவசதி படைத்தவர்களுக்கு நம்மைப் போன்றவர்கள் இரை’ என்று எப்படி சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை.
விவரிக்க இயலாது ஆத்திரம் வந்தபோதும், மனம் கோகோவின் நிலையைக் கண்டு எள்ளிநகையாடியது.
சிகையை அழுத்திக் கோதியபடி, நிலத்தில் அமர, அவள் எழுந்து நின்றாள், "சத்யா..." என்று.
இளவேந்தனின் தலை வாசல் பக்கம் திரும்ப, ஜீன்ஸ் டிசர்ட்டுன் நின்றிருந்தான் சஜித்.
"வேந்தன்... பேசனும்... வா..." என்றுவிட்டு நடக்க, அவனைப் பின் தொடர்ந்தான் இளவேந்தன்.
கீழே பார்க்கிலிருந்த பெஞ்சில் சஜித் இரட்டினக் கால் தோரணையில் அமர்ந்திருக்க, அவனுக்கு எதிரில் நின்றிருந்தான் இளவேந்தன்.
கோகோவைப் பற்றி எதாவது பேசுவான் என்று பார்த்திருக்க, அவனோ கம்பெனியின் நிலவரத்தை விசாரித்தான்.
பிறகாவது வாயைத் திறந்தானா என்றால், "தட் இட். நீங்க போலாம்." என்க, இளவேந்தன் அசையாது நின்றிருந்தான் கோகோவை பற்றிய பேச வேண்டும் என்று.
தலை தூக்கி அவனைப் பார்த்தவன், "என்னோட பார்ஷ்னல் லைஃப்ப கேள்வி கேக்குற உரிமைய நா யாருக்கும் குடுக்கல வேந்தன்." என்றுவிட்டு நடந்து சென்றுவிட்டான்.
அவனையறிந்த இளவேந்தன் அதிர்ந்துபோய் நின்றான்.
அங்குச் சஜித்ரேவனுடன் துகிராவிற்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. இங்குச் சத்யாவாகக் கோகோவுடன்… இதில் எது உண்மை?.
மயக்கம் தொடரும்....
மயக்கம் 43
Latest Post: போகனின் மோகனாங்கி - 11 Our newest member: Priya Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page