About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்-6
"வசி ஆர் யூ ஓகே...” என்றது அந்த பக்கத்தில் இருந்து பட்டென்று ஒரு குரல்.
அதில் இன்னும் அவளது இதழ்கள் விரிய..."ஏன் நான் எதாவது பிரச்சனையில இருக்கிறதா உனக்கு உன் டெலிபதி சொல்லிச்சா…" என்று கிண்டலாக வசி கேட்க.
அந்த ஒருவன்.. அதாவது அவளின் அத்தை மகன், மற்றும் தோழனான ரித்தீஷ் தான் இப்போது அழைத்திருந்தது. வசிகா கேலியாக பேசுவதைக் கண்டு ரித்தீஷும் புன்னகையுடன்
"பின்ன என்னோட சைல்ட்வுட் ஃபிரெண்ட் டி நீ.. கிட்டதட்ட 24 வருஷமா நம்ப ரெண்டு பேரும் ஒன்னா தான் வளர்ந்து இருக்கோம்.. ஒன்னா தான் படிச்சிருக்கோம். அப்போ நம்மளுக்குள்ள டெலிபதி ஒழுங்கா தானே ஒர்க் பண்ணும்..."என்றான் அவன் அதே கேள்வியாக.
வசிகா புன்னகைத்தவாறே"டேய் டேய் ஒன்னா படிச்சவன்லாம் சொல்லாத.. கிட்டத்தட்ட எட்டாவது வரைக்கும் தான் நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சோம் அதுக்கப்புறம் நான் ஹாஸ்டல் போயிட்டேன் இல்ல...” என்றாL உணர்வுகள் அற்ற குரலில்.
அவளது உணர்வுகளற்ற குரலை அவனும் கண்டுகொண்டவன். "ஓய் அதனால என்ன சேர்ந்து படிச்சா சேர்ந்து சுத்துனா தான் உண்மையான பிரண்ட்ஸா என்ன. எங்க இருந்தாலும் எந்த எல்லைல இருந்தாலும் உண்மையான நட்பு என்னைக்குமே குறையாது, அழியாது அத மட்டும் நல்லா மனசுல ஏத்தி வச்சுக்கோ.. வசி...” என்று சீரியஸான குரலில் ரித்தீஷ் கூற. அவனின் பேச்சில் இன்னும் அதிகமாக இதழ் வீரிய புன்னகைத்தவள்..
“ சரி சரி சொல்லு சன்டே ஆனா தான் கால் பண்ணுவ இன்னிக்கு என்ன திடீர்னு பண்ணி இருக்க...” என்றாள் இருளையே வெறித்தவாறே..
"ம்ம்ம் அது ஒன்னும் இல்ல அத்தை போன் பண்ணாங்களா...” என்று தயங்கியவாறே கேட்க
அத்தை என்ற வார்த்தையில் வசிகாவின் முகம் புன்னகையை துடைத்தெறிந்தது.. தன் கண்களை அழுத்த மூடிக்கொண்டவள் இன்னும் நன்றாக பின்னாள் சாய்ந்து உட்கார்ந்தவாறே… "இல்ல...”என்றாள் பட்டென்று
அவளின் வேகம் ரித்தீஷிற்கு புரியதான் செய்தது.
அதில் ரித்தீஷ் மறுப்பாக தலையை ஆட்டிக்கொண்டவன்… "ம்ச் வசி உனக்கு புரிலையா டா… ம்ச் வசி அவங்க உன்கிட்ட இருந்து என்னடி பெருசா எதிர்பார்க்குறாங்க.. எல்லாத்துலையும் நல்லா இருக்குறவ இதுல ஏன்டி இவ்ளோ பிடிவாதம் பிடிக்கிற...”என்று அலுத்தவாறே பேசியவன்.. “இப்ப ஏண்டி அத்தை மேல கோவப்படுற..” என்று ரித்தீஷ் கேட்க.
"ப்ளீஸ் ரித்தீஷ் எனக்கு சித்தி மேல எந்த கோபமும் கிடையாது. சொல்ல போனா எனக்கு யார் மேலையும் கோவமே இல்ல...”என்றவள்.. “ஆனால் கல்யாணம்னு என்னை போட்டு டார்ச்சர் பண்றது தான் எனக்கு ரொம்ப கோவமா வருது..” என்றாள் கோவமாக
“அதான்டி நானும் கேட்குறேன்.. ஏண்டி உனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுல அப்படி என்னடி கஷ்டம்...” என்று ரித்தீஷ் இழுக்க.
"எனக்கு கஷ்டம் எல்லாம் இல்லடா நீ கூட புரிஞ்சிக்கலையா "என்று வசிகா. சலித்தவாறே கேட்க
"ம்ச் இப்ப என்னடி உனக்கு பிரச்சனை, அந்த வீண போன என்னோட அண்ணன் உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்க போறதா உனக்கு பிரச்சனை...” என்று கோபத்தில் கேட்டுவிட்டான்.
அவன் கேட்டதை நினைத்து வசிகா அப்படியே சிலை போல உக்காந்திருக்க பின் தான் ரித்தீஷ் தான் நினைத்து தன் தலையிலேயே அடித்துக் கொண்டான்… "ம்ச் வசி நான் ஏதோ உளறிட்டேன்டி... எதோ தெரியாம சொல்லிட்டேன்" என்றான் ரித்தீஷ்.
"விடுடா அஞ்சலியும் இதுதான் சொல்றா நீயும் இதுதான் சொல்ற.. ஆனா உங்களுக்கு புரியவே இல்ல.. உங்க அண்ண யார கல்யாணம் பண்ணுனா எனக்கு என்ன.. அது ஏன் என்னை கஷ்டப்படுத்தும்னு நீங்க நினைக்கிறீங்க… அதும் இல்லாம ஊர்ல நடக்குற கல்யாணம், நிச்சயம் எல்லாம் எனக்கு கஷ்டமா இருக்கனும்னா நான் டெய்லி வருத்தம் தான் படனும்..” என்று வசிகா கூற.. அதில் ரித்தீஷ் ஒருநிமிடம் அமைதியாகிவிட்டான்.
வசிகா கூட அப்படியே சிலை போலவே நிற்க.. அந்த அமைதியை கெடுப்பது போல "ஏய் இப்ப எதுக்கு அவன் கிட்ட பேசும்போது என்ன பத்தி பேசுற..” என்று இடையில் ஒரு குரல் கேட்க. வசிகா அதிர்ந்து போய்விட்டாள் அஞ்சலியின் குரலை கேட்டு
"அடப்பாவிகளா ரெண்டு கல்ப்ரேட்டும் ஒண்ணா தான் இருக்கீங்களா.. ஏன்டி அப்போ இவ்ளோ நேரம் லைன்ல இருந்துட்டு பேசாம அமைதியாவே இருந்துருக்க..” என்றாள் வசி பொய் கோவத்துடன்.
"அச்சோ இந்த அராத்து லைன்ல இருக்கிறதே நான் மறந்துட்டேன் டி.” என்று ரித்தீஷ் கூற.
"அப்படியா.. நம்பிட்டேன் டா" என்று வசிகா புன்னகையுடன் கூற "சரி என்னை போட்டுக் கொடுக்கதற்கு தானே இப்ப அவளை லைன்ல வச்சுக்கிட்டே என்கிட்ட பேசுற..” என்று வசிகா சரியாக கூற. அதில் ரித்திஷ் "ஹாஹா...” என்று சிரித்தான்.
"பார்த்து பார்த்து சிரிடா இப்படியே பயங்கரமா சிரிக்காத.. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப சின்ன பிள்ளைங்க வேற எனக்கு வேற அடுத்த மாசம் கல்யாணம் இப்படி சிரிச்சு என்னை பயமுறுத்தாதடா... அப்புறம் கோயில் கூட்டிட்டு போயி விபூதி தான் பூசணும்..” என்று அஞ்சலி ரித்திஷை ஓட்டினாள்.
"ம்கூம்...அப்படியே நீ பயந்த புள்ள தாண்டி.. பாவம் உனக்கு பார்த்து இருக்கிற மாப்பிள... தினம் அவர் உன்னால பயந்து சாகப் போறாரு..” என்று ரித்தீஷ் அவளை ஓட்ட..
" ஆமா போடா இவனே..” என்று அஞ்சலி அவனை செல்லமாக திட்டினாள்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் மாறி மாறி திட்டிக் கொள்ள.. வழக்கம் போல் வசிகா தலையில் கையை வைத்துக்கொண்டு இருவரும் திட்டுவதை ரசித்துக்கொண்டிருந்தாள். "ஹலோ வசி லைன்ல இருக்கியா டி..” என்று அஞ்சலி கேட்க
"அதெல்லாம் இருக்கேன்..ஆமா உங்க ரெண்டு பேருக்கும் இப்பதான் என் ஞாபகம் வந்துச்சா.. எப்ப பாத்தாலும் எலியும் பூனையுமா சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க ரெண்டு பெரும்.."என்று வசிகா அதட்ட
"சரி சரி அதை விடு நீ ஒரு நாள் வந்து அத்தையும், மாமாவையும் பார்த்துட்டு போலாம் இல்லடி.. போன தீபாவளிக்கு வந்தது தான்..” என்று ரித்தீஷ் வருத்தமாக கூற.
வசிகாவிற்கும் அந்த வருத்தம் இருக்க தான் செய்தது. "ம்ச் வரணும்டா அஞ்சலிக்கு கல்யாணத்தைப்போ கண்டிப்பா வரேன்...” என்றாள் அவள்.
"அதுக்கு இன்னும் முழுசா ஒரு மாசம் இருக்குடி. அதுக்கு இடையில வரமாட்டியா..” என்றவனுக்கும் மனம் கனத்து போனது தன் மாமன் மகளை பார்க்க…
"ப்பா ப்பா எல்லாரும் ஏன்டா இந்த கொஸ்டினையே கேக்குறீங்க இப்பதான் அஞ்சலி அண்ணன் பரசு ப்ரோவும் இதையே கேட்குறாரு. நானும் இதே பதிலைதான் சொல்லிட்டு வந்தேன்.. இப்போ உன்கிட்டயும் அதே காரணம் தான் சொல்ல வேண்டிய தா இருக்கு. எனக்கு ப்ராஜெக்ட் டெடென்ட்ல இருக்கு அத நான் இந்த மாசத்துக்குள்ள முடிக்கணும். நல்லா மண்டையில ஏத்திக்கோங்க ரெண்டு பேரும்… திரும்ப திரும்ப இதையே கேட்டு டார்ச்சர் செய்யாதீங்க..” என்று வசிகா கூற
"ம்ம் ஆனாலும் நீ இவ்ளோ பொறுப்பா இருக்கக்கூடாதுடி...” என்ற ரித்தீஷ்.
"சரி சரி நான் பொறுப்பா இருக்கேன்.. ஆமா இன்னைக்கு ஏதாவது புது டிஷ் கண்டுபிடிச்சியா உங்க ஹோட்டல்ல...” என்று வசிகா.
"ஆமா ஆமா ஒரு டெசர்ட் ஒன்னு கண்டுபிடிச்சேன் வசி.. நீ இங்க வா உனக்கு கண்டிப்பா செஞ்சு கொடுக்கிறேன்..” என்றான் ரித்தீஷ் ஆர்வமாக
பின்னே அவன் மிகவும் நேசித்து தேர்ந்தெடுத்த படிப்பாயிற்றே.. படிப்பையும் நன்று நல்லபடியாக முடித்துவிட்டு இப்போது இது உயர்ரக 5 ஸ்டார் ஹோட்டலில் நல்ல பதவியில் இருக்கிறான்.
"ஐயோ பாவம் வசி.. அவனை நம்பி ஏதும் சாப்டாதடி..” என்று அஞ்சலி ரித்தீஷை ஓட்ட
"ஏய் என் மாமா பையன ஓட்ற.. மரியாதையா அவன் கிட்ட சாரி கேளு.. இல்ல உன் கல்யாணத்துக்கு பெரிய பாராங்கல்ல தான் கிஃப்ட்டா வாங்கிட்டு வருவோம் நாங்க ரெண்டு பேரும்...” என்று வசி புன்னகையுடன் கூற
"ஓ உன்னோட மாமா பையன்.. ஃபீல் ஆயிட்ட..” என்று அஞ்சலி ஓட்ட. அதில் என்று மூவரும் சிரித்து விட்டனர்.
"ஆமா என்னவாம் அந்த ரகசியத்துக்கு.. என்ன ரகசியம் சொல்லிட்டு வச்சா...” என்று ரித்தீஷ் ஆரம்பிக்க.. அவனின் ரகசியாவின் பெட் நேமான ரகசியத்தை கேட்டு அஞ்சலி கெக்க பெக்க என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.
வசிகாவிற்கும் புன்னகை வர தான் பார்த்தது.. ஆனால் ரகசியா தன்னிடம் பேசியதை நினைத்து பார்த்தவளுக்கு சலிப்பாக இருக்க "ப்ளீஸ் ரித்து ஐ அம் ஆல்ரெடி வெரி டயர்ட்.. இதுல அவளை பத்தியோ உன் அண்ணன பத்தியோ பேசி என்ன இன்னும் டையார்ட் ஆக்காத...” என்று வசிகா கட்டன் ரைட்டாக கூற ரித்திஷ் அத்துடன் கப் என்று வாயை மூடிக் கொண்டான்.
"ஓகே காய்ஸ் நாளைக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு.. அதுக்கு நான் பிரிப்பேர் பண்ணனும். ப்ளீஸ் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ஷட் அப் பண்றீங்களா...” என்று வசிகா கேலியாக கூற.
"ஓகே நாங்க ஷட்டப் பண்ணிட்டோம்.. நீ வழக்கம் போல எங்ககிட்ட வேலை இருக்குன்னு பொய் சொல்லிட்டு போய் மெத்தையில் படுத்துட்டு காதுல ஹெட்போன் மாட்டிட்டு உன்னோட அந்த காலத்து பாட்டெல்லாம் கேட்டுட்டு இரு சரியா...” என்று அஞ்சலி சரியாக கூற
வசிகாவோ மெல்ல தன் நாக்கை கடித்துக் கொண்டாள். "கள்ளி வில்லி மாதிரி வேலை பார்க்கிற டி நீ..” என்று அஞ்சலியை வசிகா ஓட்ட.
"ஏய் அஞ்சு அவளுக்கு அது தான் ரிலாக்சேஷனா இருக்கு.. அவ அதே பண்ணட்டும்...”என்ற ரித்தீஷ் "ஓகே வசி நீ பாரு நான் வீட்டுக்கு போயிட்டு மார்னிங் உனக்கு பேசுறேன்...” என்றான் ரித்தீஷ் அவளைப் பற்றி புரிந்தவனாக.
"ஓகே தேங்க்ஸ் காய்ஸ்.. உங்களால எனக்கு தனிமையே தெரியல...” என்று வசிகா கூற.
"இப்ப என்ன சொல்ல வர... ஃபீல் ஆயிட்டயா மாப்ள..” என்று அஞ்சலி மறுபடியும் ஓட்ட அதில் கொல் என்று அனைவரும் சிரித்தனர்..
“எருமை எருமை கொஞ்சமாச்சும் பீல் பண்ண விடுறிங்களாடா என்னைய..” என்று வசிகா புலம்ப.
"பீலிங்கா அது எதுக்கு மச்சி நமக்கு...” என்று வழக்கம் போல ரித்தீஷும் அஞ்சலியும் ஒரே குரலில் கூறினார்கள்.
அதில் தலையில் அடித்துக் கொண்ட வசிகாவோ.. "ரெண்டு பேரும் போங்க முதல்ல...” என்று கத்திய வசிகா போனை வைத்து விட்டாள். அதற்குப்பின் அஞ்சலி கூறியதைப் போல தன் ஹெட்செட்டை போனில் கனெக்ட் செய்தவள் தான் எப்போதும் விரும்பி கேட்கும் 90 ஸ்கிட்ஸ் சாங்ஸை பிளே செய்தாள்.
எப்போதும் வசிகாவிற்கு இது அன்றாட பழக்கமாகவே மாறிவிட்டது. ஏனோ 90ஸ் கிட்ஸ் சாங்ஸ் எல்லாம் அவளுக்கு அவ்வளவு பிடித்தது. இப்போது மட்டுமல்ல டிராவலின் போது கூட இந்த சாங்கை கேட்டுக் கொண்டுதான் அவள் நேரத்தை கடத்துவாள். இப்போதும் கூட அந்த பால்கனியில் இருக்கும் கூடை தொட்டிலில் உட்கார்ந்தவாறு பாட்டினைக் கேட்டவள் இறுக்க கண்களை மூடிக்கொண்டு பின்னால் சாய்ந்து உட்கார்ந்துக்கொண்டாள்..
ஏனோ இந்த பாடல்களைக் கேட்கும்போது அவள் மனம் அமைதியாக ஆகுவது போல தோன்றியது. சொல்லப்போனால் அவளது தனிமையை பாதி குறைப்பது போல தான் தோன்றும்.
"அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொண்ணே பெயருக்கு பொன்னாஞ்சலி என்று சித்ரா குரலில் பாடல் ஹெட்ஷெட்டின் வழியாக உருகிக்கொண்டிருக்க.. அதனுடன் சேர்ந்து உருகினாள் பெண்ணவள்..
சரியாக பத்து நிமிடம் கழித்து தன் அறையின் கட்டிலில் போய் படுத்தவள் அப்படியே உறங்கி விட்டாள். பாடலை கேட்டவாறே.
Latest Post: வனமாலி - (Comment Thread) Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page