All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வட்டிக்காரனின் வசியக்காரியவள்-5

 

VSV 44 – வட்டிக்காரனின் வசியக்காரியவள்
(@vsv44)
Member Author
Joined: 3 months ago
Posts: 12
Topic starter  

அத்தியாயம்-5

வசிகா தன் வேலையை முடித்தவள் தான் தங்கி இருக்கும் ஒற்றை அறைக்கொண்ட ஃப்ளாட்டிற்கு வருவதற்கு கிட்டதட்ட ஏழு மணி ஆகியது. அவள் அலுவலகத்தில் இருந்து சரியாக பத்து நிமிடம் தான் ஆகும் அவளின் ஃப்ளாட்டிற்கு வர. பெங்களூரின் ட்ராஃபிக்கிற்கு பயந்து தன்னிடம் இருக்கும் ஸ்கூட்டியை கூட அதிகமாக வெளியில் எடுக்கமாட்டாள். எப்போதாவது தான் ஆபிஸிற்கு எடுத்து செல்வாள்.. அதுவும் அவளின் தோழி அஞ்சலி இருக்கும் வரை ஸ்கூட்டியில் தான் ஆபிஸ் செல்வார்கள். அதுபோக வார இறுதியில் இருவரும் மால், மூவி என்று சென்றுவந்தனர்.

வசிகாவிற்கு தான் அதில் எல்லாம் விருப்பமே இல்லை. ஆனால் அஞ்சலி அவளை இஷ்டம் இல்லை என்றாலும் விடுவதாக இல்லை. “இப்டி ரூம்லையே இருந்தா பைத்தியம்தான்டி பிடிக்கும் பைத்தியமே.. வெளில போய் நாலு பேர பாத்துட்டு வந்தா தான் நம்ம ஃபீல்டுக்கு கொஞ்சமாச்சும் மூச்சி விடமுடியும். இல்லனா வச்சிக்கோயேன் நம்மளுக்கு கொடுக்கற டெட் என்ட்க்கு மண்ட சூடாகி உருகி ஊத்திடும்...”என்று பேசியவாறே வசிகாவை இழுத்து சென்றிடுவாள்.வசிகாவும் அஞ்சலியுடன் தன்னுடைய நாட்களை, நேரத்தினை அழகாக கழித்துக்கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அஞ்சலி இல்லாத தனிமை அவளுக்கு கொஞ்சம் கொடுமையாக தான் இருந்தது. பழகிய ஒன்று தான் ஆனால் சிறிது நாட்களாக ஆரம்பித்த அஞ்சலியின் நெருக்கம் வசிக்கு கொடுமைதானே.

அஞ்சலி திருமணத்திற்காக வேலையை விட்டு சென்ற இந்த இரண்டு மாதமும் வசிகா எங்கும் வெளியில் செல்வதில்லை. வார விடுமுறையை கூட தன் ஒற்றை அறை கொண்ட பிளாட்டில் தான் கரைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு தேவையான கிராசரிஸ் பொருட்களை கூட ஆன்லைன் ஆர்டர் போட்டு விடுவாள். வசிகாவிற்கு பெரிதாக எங்கும் வெளியில் செல்வதெற்கெல்லாம் அவ்வளவாக ஆர்வம் இல்லை. அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருப்பதே தான் அவள் சிறு வயதில் இருந்து செய்து கொண்டிருக்கிறாள். அஞ்சலி அடிக்கடி அவளுக்கு போன் செய்து "ஏண்டி இப்படி ரூமுக்குள்ளே அடஞ்சு கிடக்குற அடிக்கடி எங்கயாவது வெளியில் போயிட்டு வாயேன்...” என்று இந்த இரண்டு மாதமாக வசிகாவை இம்சை செய்து கொண்டிருந்தாள். வசிகாவோ சின்ன புன்னகையுடன் "இப்ப அது என்ன தேவைக்கு.. வீட்லையே நான் நிம்மதியாதான் இருக்கேன்..” என்று கூறிவிடுவாள்.

"அது என்ன தேவைக்கா ஏன்டி நீ எல்லாம் மனுஷியா இல்ல எதுவும் மெஷினா அந்த லேப்டாக்கு பதிலா உன் மண்டையையே கட்டிக்கிட்டு எப்ப பார்த்தாலும் அழுவலாம்...” என்று அஞ்சலி அவளை வார.. அதற்கும் வசிகவிடம் எந்த ஒரு பதிலும் இருக்காது. கடைசியில் அஞ்சலி தான் சோர்ந்து போய்"ஏண்டி இப்படி இருக்க...” என்று பாவமாக கேட்பாள்.

வசிகாவோ அதற்கும் புன்னகைத்தவாறே "நான் நல்லா தான் இருக்கேன் அஞ்சு.. நீ என்னை பத்தியே யோசிக்கிறத விட்டுட்டு உன் மேரேஜ் லைப் பத்தி கொஞ்சமாச்சும் யோசிடா. மாப்பிள்ளை கிட்ட பேசுறியா இல்லையா..” சட்டென்று பேச்சு திசையை மாற்றிவிடுவாள்.

"ஹான் ஹான் அதெல்லாம் பேசுறேன்.. அவரு உன்ன தான் கேட்டுட்டே இருக்காரு வசிகா உன் ஃப்ரண்டு வசிகா எப்ப வருவாங்கனு கேட்டுட்டே இருக்காரு.. ஆமா கேட்க மறந்துட்டேன்..நீ கல்யாணத்துக்கு ஒரு மாசம் முன்னாடியே வந்துடுவ இல்ல…"என்று அஞ்சலி கேட்க.

"ஒரு மாதம் முன்னாடி வரதுலாம் ரொம்ப கஷ்டம் அஞ்சு உனக்கே தெரியாததும் இல்ல இந்த ப்ராஜெக்ட் எவ்வளவு டெட் என்ட்ல போயிட்டு இருக்கு தெரியுமா? பாவம் பரசு ப்ரோ.. அவர தான் முன்னாடியே அனுப்பி வைக்கலாம்னு யோசிக்கிறேன். பரசு அண்ணா அங்க வந்துட்டா என்னை நீ சீக்கிரமா எதிர்பார்க்க முடியாது.. மேனேஜரும், டி.எல்லும் ஒன்னா லீவ் போட முடியாது.. அது உனக்கே தெரியும்ல அஞ்சலி ப்ளீஸ் கொஞ்சம் என்னோட நிலைமையையும் புரிஞ்சுக்கோ...” என்று வசிகா கெஞ்ச

அஞ்சலியோ மூக்கு நுனி சிவக்க "இப்படியே நீ ஏதாவது சொல்லிக்கிட்டு இரு.. கடைசியில உன் கல்யாணத்துக்கும் நான் ஏதோ ஒரு கெஸ்ட் மாதிரி தான் வந்துட்டு அரை மணி நேரம் இருந்து அட்டென்ட் பண்ணிட்டு திரும்ப போறேன்.. இதான் நடக்கப்போகுது பாரு..” என்று அஞ்சலி கோவத்துடன் பேச..

வசிகாவோ சின்ன புன்னகையை கொடுத்தவளோ "அதெல்லாம் நடக்கும் போது பாத்துக்கலாம்...” என்பாள் வெறுமையாக. "ம்ச் என்ன நீ எப்ப கல்யாணத்த பத்தி பேசினாலும் ஏதோ நாலு கல்யாணம் முடிச்ச மாதிரி இப்படி வெறுமையா பேசுற என்ன தாண்டி உன் பிளான். ஒரு கல்யாணமாவது பண்ற மாதிரி இருக்கியா இல்ல அப்படியே கோயில்,குளம்னு சுற்றுலா போறதா இருக்கியா இல்ல நம்ம நித்தி கடவுளோட கைலாசா தீவுக்கு போலாம்னு இருக்கியா என்ன...” என்று கேட்க அதனை கேட்ட வேகத்திற்கு கெக்கபிக்கவென சிரித்த அஞ்சலியை வசிகாவோ அவளை முறைத்தவாறு இருந்தாள். இது அத்தனையும் வீடியோ காலில் தான் நடந்து கொண்டிருந்தது. "சரி சரி ரொம்ப முறைக்காத உன் மாமா பையனுக்கு கல்யாணமாமே அந்த சமையக்காரன் சொன்னான்..”என்று அஞ்சலி இழுக்க

வசிகாவின் முகம் சட்டென்று ஒருவித சலிப்பை வெளிக்காட்டியது.. “ ஏண்டி நம்ம நல்லா தானே பேசிட்டு இருந்தோம்.. இப்ப எதுக்கு தேவையில்லாத டாபிக் எல்லாம் எடுக்குற..” என்று ரசிகா கேட்க "ம்ச் அது எப்படி எடுக்காம இருக்க முடியும். கல்யாணம் ஆகப்போறது உன் தங்கச்சிக்கும், உன் மாமா பையனுக்கும்..” என்று அவள் கூற.

"அதெல்லாம் நல்லா பேசு..அவங்க ரெண்டு பேருக்குத்தான கல்யாணம் ஆகப்போகுது அதுக்கு ஏண்டி என்கிட்ட அவங்கள பத்தி பேசுற..” என்று வசிகா கோவத்துடன் கூற. அஞ்சலிக்கு வசிகாவின் கோபம் புதிதாக தெரிந்தது "வசி நீ இன்னும்..” என்று அஞ்சலி இழுக்க

"ம்ச் என்ன கேட்க போறேன்னு எனக்கு நல்லாவே புரியுது… அஞ்சு என் மனசுல யாருமே கிடையாது. சோ ப்ளீஸ் தயவு செஞ்சி அந்த வார்த்தையை மட்டும் சொல்லிடாத..” என்று வசிகா கோவமாக பேச

"சரி சரி கோவப்படாத.. அப்ப மனசுல யாரும் இல்லனா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே...” என்றாள் அஞ்சலி விடாப்பிடியாக. அதில் சலித்து போன வசிகாவோ.. "இது இப்போ தேவையில்லாத டாபிக் அஞ்சு.. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல..” என்று வெடுக்கென்று கூற

" சரி இப்போ பண்ண விருப்பம் இல்ல..அப்ப எப்ப தான் கல்யாணம் பண்ணிக்க ஆசை வரும்...” என்றாள் அஞ்சலி அந்த டாபிக்கை விடாமல். "அய்யோ அம்மா தாயே.. எப்ப எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும் தோணுதோ அப்ப உன் கிட்ட தான் முதல்ல சொல்லுவேன் நல்ல பையனா பார்த்து நீயே கல்யாணம் பண்ணி வை… போதுமா இப்போ என்னை விடு..” என்று தலைக்கு மேல் கை தூக்கி அஞ்சலியை கும்பிட்டாள் வசிகா.

"யா யா நான் தான் உனக்கு மாப்ள பாப்பேன்.. அதுக்கு நீ என்ன எனக்கு பர்மிஷன் கொடுக்கிறது...” என்று அஞ்சலியும் கூற. சிறிய கோவத்தில் இருந்த வசிகாவின் முகம் கூட மெல்ல புன்னகையை தத்தெடுத்துக் கொண்டது. "ஆமா என் ரித்து பேபி கால் பண்ணுச்சா...” என்று அஞ்சலி கேட்க "ஏண்டி உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிட்டு இன்னும் அவனை ரித்து பேபி..ரித்து பேபினு கூப்டுறத நிறுத்து... அண்ணா மட்டும் நீ அப்டி கூப்டுறத பாத்தாங்கனா ஏதாவது நினைச்சுக்க போறாங்க...” என்று வசிகா அவளை திட்ட அஞ்சலியோ அதனை பெரிதாக எடுத்துகொண்டது போல தெரியவில்லை. "ம்ச் இதுல அவர் நினைக்க என்ன இருக்கு... அவருக்கு என்னோட மொத சைட்ல இருந்து இப்ப நான் ரித்துவ சைட் அடிக்கிற வரைக்கும் எல்லாமே தெரியும்... அவரு ஒன்னும் உன்ன மாதிரி மூடி டைப் கிடையாது.. சொல்ல போனா நல்ல பிராட் மைண்டெட்..” என்று அஞ்சலி தன் வருகாலத்தை நினைத்து சிலாகித்து கூற

தன் தோழியின் எதிர்காலத்தை நினைத்து வசிகாவிற்கு மனம் சந்தோஷத்தை பூசிக் கொண்டது. "ம்ம்ம் அவனுக்கு என்ன தினமும் நீ கூப்பிடுறியோ இல்லையோ அவன் கரெக்ட்டா கூப்ட்டுடுறான்.. ஒவ்வொரு நாளும் என்ன பேபி பண்ற, என்ன பேபி பண்றன்னு கேட்டு கேட்டு ஒரே டார்ச்சர் பண்றான்" என்று வசிகா புன்னகையுடன் கூற

அஞ்சலியை "பார்ரா நான் அவன ரித்து பேபி ரித்து பேபின்னு கூப்பிடுறேன் அவன் என்னடானா உன்ன வசி பேபி வசி பேபினு உன் பின்னாடியே சுத்துறான்..” என்று சொல்ல

"ம்ச் பேசாம வாய மூடுடி அவன் என்னோட பிரண்டு...” என்ற வசிகாவை புன்னகையுடன் பார்த்த அஞ்சலியோ "ஆமா ஆமா உன் பிரண்டு தான் யாரு இல்லைன்னு சொன்னா.. அதுமட்டுமா அவன் உன்னோட அத்தை பையன் கூட அதையும் மறந்துடாத..”என்று எடுத்துக்கொடுத்தாள் அவள்.

"அட போடி..” என்ற ரசிகாவோ அஞ்சலியுடன் சில பல விஷயங்களை பேசிவிட்டு போனை அணைத்து விடுவாள்.. தினமும் நடப்பது இதுதான் அஞ்சலி தினமும் வசிகாவிற்கு அழைத்து பேசாமல் இருக்க மாட்டாள்.

அதேபோலத்தான் வசிகாவின் அத்தை மகனான ரித்தீஷும் செய்வான். ரித்தீஷ் வேறு யாருமில்லை. வசிகாவின் அத்தை மகன்தான். அதாவது ரிஷியின் தம்பி. ரித்தீஷிற்கு வசிகா என்றால் அவ்வளவு பிரியம். ஏனென்றால் அவனுக்கும், வசிகாவிற்கும் ஒரே வயது தான். இருவரும் ஒன்றாக தான் பள்ளி படிப்பை ஆரம்பித்தனர். ஆனால் இடையில் வசிகாவோ ஹாஸ்டலுக்கு சென்று விட,ஆனாலும் இருவருக்கும் இடையில் எந்த இடைவெளியும் விழுந்ததே இல்லை.

ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது தன் அன்னையுடன் சென்று வசிகாவை ஹாஸ்டலில் பார்த்துவிட்டு வந்து விடுவான் ரித்தீஷ். ரித்தீஷை பொறுத்தவரை வசிகா தான் அவனது உயிர் தோழி. அவனுக்கு எப்போதெல்லாம் வசிகாவின் நியாபகம் வருகிறதோ அப்போதெல்லாம் நேராக பெங்களூர் வந்து விடுவான். ரித்தீஷ் கேட்டரிங் படித்து விட்டு இப்போதுதான் சென்னையில் ஒரு மிகப்பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் செஃபாக சேர்ந்துள்ளான். அவனுக்கும் இரவில் வசிகாவிடம் ஒன்று இரண்டு வார்த்தை பேசாமல் நாள் முடியாது.

வசிகா மிகவும் சோர்வுடன் வீட்டினுள் நுழைந்தவள்,அந்த ஒற்றை அறையில் இருக்கும் கட்டிலில் மல்லாக்க படுத்துகொண்டாள். அவள் முகமோ அப்படி ஒரு சோர்வை காட்டியது. ஒரு ஐந்து நிமிடம் அப்படியே படித்திருந்தவள் பெருமூச்சுடன் எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டுள்ள பாத்ரூமிற்குள் சென்றாள். சரியாக பத்து நிமிடம் கழித்து முகம் சோர்வு நீங்க புத்தம் புது மலராக குளித்து வந்தவள், நேராக கிச்சனிற்குள் சென்றாள்.

ஃப்ரிட்ஜை திறந்து பார்க்க அங்கோ நேத்து அரைத்து வைத்த மாவு கொஞ்சம் இருக்க, அதில் இரண்டு தோசையை சுட்டவள் அப்படியே கிச்சனில் நின்றவாறே அதனை கடகடவென்று சாப்பிட்டாள். அவள் எப்போதும் அப்படிதான். யாரும் இல்லாத தனிமையை இப்படி அவசரகதியில் சாப்பிட்டு விரட்ட நினைப்பாள்.

காலையும்,மதியமும் அவளுக்கு ஆபீஸ் கேண்டினில் தான் சாப்பாடு. இரவு மட்டும் தன்னால் முடிந்த அளவிற்கு இலகுவான உணவுகளை செய்து சாப்பிடுவாள். பல நேரம் பிரட்டையும் ,ஜாமையும் வைத்து கூட அட்ஜஸ்ட் செய்து கொள்வாள். அவளுக்கு அதிகமாக சமைத்து பழக்கம் இல்லை.. அவளது வேலை அதற்கு அவளை விட்டதும் இல்லை. அஞ்சலி இருந்த வரை அஞ்சலி கொஞ்சம் அவளுக்கு சமைக்க கற்றுக்கொடுத்தாள். அதும் சாதாரண வகை சாப்பாடை தான்.

இப்போது வசிகா சாப்பிட்ட பிறகு கொஞ்சம் தலை வலிப்பது போல இருக்க அதனால். ஃப்ரிட்ஜில் இருந்த பாலில் சிறிது எடுத்துக் கொண்டவள் அதில் டீ தூளையும் இஞ்சியும் ஏலக்காவையும் தட்டி போட்டு கொஞ்சம் டீயை கலக்கியவள் பின் அதை எடுத்துக் கொண்டு சென்று பால்கனியில் இருக்கும் கூடை ஊஞ்சலில் உட்கார்ந்தவள் பெங்களூருவின் இரவு அழகை ரசித்தவாறு மிடறு மிடறாக டீயை குடித்து முடித்தவள். அப்படியே பின்னால் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

அந்த இரவு நேரத்தின் இருளையே வெறித்தவாறே உட்கார்ந்து இருந்தவளை கலைப்பது போல் அவளது போன் ஒலி எழுப்ப போனை பார்க்காமலே அழைப்பது யார் என்பதை புரிந்துக்கொண்டவளின் இதழ்களோ புன்னகையில் விரிய போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.

(வட்டி, வசி)


   
ReplyQuote

You cannot copy content of this page