About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்: 23
பிடிக்கிறது பிடிக்கவில்லை என்றெல்லாம் பார்க்காது சிலர் தனக்கென அமைந்த உறவிற்கு லாயலாக அதாவது விசுவாசமாக, நேர்மையாக இருப்பர்.
அது போன்ற ஓர் நேர்மையும் விசுவாசமும் நம் ப்ரஜித்திற்கு உண்டு.
இதுவரை யாருமற்ற தனிக்காட்டு ராஜாவாக 'பேலஸ் ஆஃப் ரேவன்'ல் ஒற்றை இளவரசனாக வளம் வந்த, பதின்ம வயதில் இடையில் இருந்த ப்ரஜித்தின் முன், பதின்ம வயது தொடக்கத்தில் இருக்கும் ஓர் உருவத்தை நிறுத்தி,
'இனி இது உன் தம்பி. இவனும் இந்த ரேவன் குடும்பத்து வாரிசு தான்.' என்று கூறி சஜித்தைத் தம்பியாக ஏற்கச் சொன்னபோது, பிடிக்கவில்லை.
தன் தாத்தா அஜித்ரேவன், அன்னை சித்தாரா, தந்தை இந்தரின் பாசத்தில் பங்கு கேட்டு வந்து நின்றவனை வெறுக்க கூடச் செய்தான்.
ஆனாலும் அவன் சஜித்தை தன் தம்பியாக ஏற்றான்.
அவனைத் தம்பியாக மட்டுமல்லாது தோழனாகப் பாவித்துப் பழகினான். சின்னச்சின்ன கருத்து மோதல்கள் இருவருக்கும் இடையே இருந்தபோதும், பெரிதாகச் சண்டை போட்டது board of directors meeting-ல் தான்.
இளம் காளைகளான இருவரும் கட்டி உருண்டு போட்டுக் கொண்ட காட்சி, யாராலும் மறக்க முடியாதது.
திடீரெனத் தன் வாழ்வில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ரிபேக்கா உடனான உறவையும் முதலில் நிராகரித்தவன் தான், மனைவியான பின் முழுதாக ஏற்றிருந்தான்.
ஆனால் இந்த நண்பர்கள் இருவரும் ப்ரஜித்தின் விசுவாசத்தை உடைத்து விட்டனர் என்பது தான் உண்மை.
குருவாக ஏற்ற அஜித்ரேவனின் இழப்பு அவனுக்குப் பலரின் உண்மை முகங்களைக் காட்டிக் கொடுத்தது.
ரிபேக்காவிற்கு எப்பொழுதும் அவளைச் சீண்டி வேடிக்கை பார்க்கும் ப்ரஜித்தின் மீது காதல் அரும்பியதே இல்லை. ஏன் காதல் என்ற வார்த்தைக்கும் அவளுக்கும் வெகு தூரம்.
அவள் தனித்து ஒரு ஏஜென்சி ஆரம்பிக்க அவளின் தந்தை இட்ட நிபந்தனை தான் கல்யாணம்.
"உன்ன ஒருத்தன்ட்ட ஒப்படைச்சிடுறேன். அப்பறம் என்னென்னாலும் பண்ணிக்க." என்றுவிட்டார் அவளின் தந்தை.
ஏனெனில் அவள் வேலை என்ற பெயரில் அதிக டென்ஷனுடன், இரவு நேர விருந்து, விடியும் வரை விளம்பரப் படம் எடுப்பது என வீடு தங்காது சுற்றிவதால் அவரின் கடமையை நிறைவேற்றத் துடித்தார்.
"என்னோட சொந்தக் கால்ல நின்னு யாரோட உதவியும் இல்லாம ஒரு பொண்ணா நா சாதிக்கனும்னு நினைக்கிறேன். ஆனா குடும்பம் குழந்தன்னு வாழு, அது தான் பொண்ணுக்கு அழகுன்னு சொல்லி என்னை ஒரு கட்டத்துக்குள்ள அடைக்கப் பாக்குறாங்க. எனக்குக் கல்யாணம் பிடிக்கல, ஆனா அது பண்ணாம இருக்க கூடாதுன்னு டார்ச்சர் பண்றாரு." எனத் தன் தந்தை சொன்னதை சஜித்திடம் கூறி புலம்பியவள், கல்யாணம் தன் வாழ்க்கைக்கு தடைக்கல்லாக இருக்கும் என நினைத்தாள்.
இலக்கை நோக்கிச் செல்லும் அவளின் நடை பாதையில், எவ்வித தேவையற்ற உணர்வுகளும் உணர்ச்சிகளும் குறுக்கிடக் கூடாது என அனைத்தையும் ஒதுக்கி வைத்தாள்.
தன் குடும்பம் அமைத்துக் கொடுத்த உறவை ஏற்றுக் கொண்டு மனைவியின் காதலைப் பெற வண்டாக உருப்பெற்று மலரவளிடம் தேனெடுக்க முயன்றான் ப்ரஜித்.
இப்போதும் ரிபேக்காவிற்கு நன்கு நினைவு உள்ளது, திருமணமான நாள் தொட்டு ப்ரஜித்தின் செயல்கள் அனைத்தும்.
"குட் மார்னிங்..." என்ற குரல் மட்டுமல்லாது தன் முகத்தில் விழுந்த இளம் வெயிலும் ரிபேக்காவின் திடுக்கிட்ட விழிப்பிற்கு காரணம்.
திரையை விலக்கி, சூரியக் கதிருக்கு வழி விட்டவன், கையில் காபி கோப்பையுடன், தலையில் சொட்டிய நீருடன் நின்றுகொண்டிருந்தான் ப்ரஜித்.
மருண்ட பார்வையால், 'இவன் எப்படி என்னோட ரூம்ல.' என அறையைச் சுற்றிப் பார்த்தவளின் அருகில் குறுநகையுடன், இலகுவாக அமர்ந்து அவளுடன் சேர்ந்து காபியையும் அவன் பருக, அவளுக்குத் திடுக்கிட்டது.
முதலிரவின்போது ஒரே கட்டிலில், தன் அருகில் கணவனாக அவன் படுக்கும் போதும் அவளுக்கு அப்படித்தான் இருந்தது.
ஒரு ஆணுடன் அருகருகே ஒரே கட்டில் கிடக்கிறோம் என்ற உணர்வு அவளை உறங்கவிடாது, ஹார்மோன்களைச் சுரக்கச் செய்தது.
என்ன! அந்த ஹார்மோன் காதல், நாணத்தை உண்டாக்காது அசௌகரியத்தை சுரந்தது.
சிறு வயதில் இருந்தே ஆண்களைத் தன்னிடமிருந்து எட்ட நிறுத்திப் பழகுவாள். நெருங்கிப் பழக அவள் அனுமதித்தது இல்லை.
எதிர் பாலினத்தவரை விழிகளோடு மட்டுமே கலக்க விட்டு, பழகி, எடை போடும் இந்தக் குணம் சஜித்திற்கும் உண்டு என்பதால் தான் இருவரும் நண்பர்களாகினர்.
ஆனால் ப்ரஜித்திற்கு அப்படி எந்தக் குணமும் கிடையாது. வாங்க பழகலாம் என்பது போல் நன்கு பழகுவான்.
எல்லைகளை மீறியதில்லை என்றாலும் அந்த எல்லையில் முத்தமிடுவதும், கட்டி அணைப்பதும், மேலே விழும் பெண்களை விலக்கி நிறுத்தாததும் அடங்காது.
அதனால் வெகு இலகுவாக ரிபேக்காவின் அருகில் அமர்ந்தவனை முறைத்தபடி எழச் சொன்னாள் அவள்.
'ஏன்?.' என்ற கேள்வியுடன் அவளையே விழி சுருக்கி உற்றுப் பார்க்க,
"எனக்கு இது அன்கம்ஃபர்டயுளா இருக்கு."
"பக்கத்துல உங்காந்தாவா?" எனப் புருவம் உயர்த்தி கேட்க,
"எஸ்..." என்றவளுக்கு தோள் குளுக்களை தந்தவன் விழிகளை விலக்கி வெளியே வேடிக்கை பார்த்தான்.
அதில் அழகான மூங்கில் புற்கள் நெருக்கமாக வளர்ந்திருக்க, குருவிகள் கூடு கட்டி கீச் கீச் என்ற ஓசை எழுப்பி, பூத்திருந்த மூங்கில் பூவைச் சுற்றிச் சுற்றி வந்தன.
படுக்கைக்கு அருகில் செங்கல் சுவருக்குப் பதில், கண்ணாடி சுவர் இருந்ததால் பளிச்சென அந்தக் காலைப் பொழுது இருந்தது.
"இது என்னோட ஃபேவரேட் ஸ்பாட். டெய்லி மார்னிங் இந்த இடத்துல உக்காந்து காபி குடிச்சாத்தா அந்த டே வே ஸ்டார் ஆகும். உனக்கு நா இங்க உக்காருறது பிடிக்கலன்னா செவன் தர்டி குள்ள பெட்ட காலி பண்ணிடு." எனத் தாமதமாக எழுந்தவளை வார்த்தைகளால் குட்டி விட்டு, அவன் கொண்டு வந்த காபியை நிதானமாகப் பருகி முடித்தான். பின் இரு கரத்தையும் உயர்த்திய படி பின்னால் சரிந்தான்.
அவனைக் கடுப்புடன் முறைத்தவள் நீட்டியிருந்த காலில் ஆடவனின் முதுகு பட்டது.
"அ...ரே!!..." எனக் காச்மூச் எனக் கத்திய படி கட்டிலை விட்டு எழுந்து கொண்டு முறைக்க,
கவிழ்ந்து படுத்தவன், "நா wear பண்ண ட்ரெஸ் எடுத்து வையேன் கண்ணம்மா!." எனப் பாரதி தன் காதலிக்கு வைத்த பெயரை இவன் தன் மனைவிக்கு சூட்டினான்.
"வாட்! உனக்கு நா ட்ரெஸ் எடுத்து வைக்கனுமா?"
"ஆமா! நீ தான பொண்டாட்டி."
"பொண்டாட்டின்னா உனக்கு வேல செய்யனுமா?"
"செய்யலாம் தப்பில்ல. கல்யாணத்தப்ப சுத்தி வந்தோமே ஒரு நெருப்பு குண்டா. அத சுத்தும்போது ஏழு ப்ராமிஸ் செஞ்சுப்பாங்களாம். மொத்தமா அத விளக்கி நா உன்ன போரடிக்க விரும்பல. எனக்கு அதுல பிடிச்சது உனக்கு நானும் எனக்கு நீ-ன்னு நாம எடுத்துக்கிட்ட சத்தியம் தான். சோ மாத்தி மாத்தி நம்மல பாத்துக்கலாம்." என்றான் கண் சிமிட்டி.
'ச்ச... இந்த மாறி டார்ச்சர்க்காகத் தா நா கல்யாணமே வேண்டாம்னே...' எனப் புலம்பியபடி குளியலறைக்குள் செல்பவள், வெளியே வரும் போதும் அவன் அசைவற்று, உள்ளே செல்லும்போது எப்படி இருந்தானோ அப்படியே கிடந்தான்.
"மார்னிங் ப்ரேக் பாஸ்ட்டுக்கு ஆன்டி அங்க வரச் சொன்னாங்க."
"ம்..."
"என்ன ம்..."
"எனக்குப் பசிக்கிது."
"போ..."
"நமக்கு நேத்து தா கல்யாணம் ஆகிருக்கு. இப்ப நா மட்டும் தனியா போனா என்ன நினைப்பாங்க."
"அப்ப எனக்கு ட்ரெஸ் எடுத்துக் குடு." என்றவனை பொசுக்க முடியாது பார்த்தவள், 'எனக்கென்ன!' என்பதுபோல் தன் உடைகளை எடுத்துக் கொண்டு வெளியேற முயன்றாள்.
'ச்ச... இவ்ளோ பெரிய ரூம்க்குள்ள ட்ரெஸ் மாத்த ஒரு ரூம் இருந்திருக்கலாம். ' என நினைத்தபடி கதவைத் திறக்க அது திறக்கவில்லை. திரும்பிக் கணவனைப் பார்த்தாள். அவன் அவளை நெருங்கி நின்றிருந்தான். மூச்சுக் காற்று படும் தூரம் உரசி வந்து இரு கரத்தால் அவளைச் சிறை வைத்தவன்,
"கண்ணம்மா!! நா சொன்னத செஞ்சா கதவு திறக்கும். இல்லன்னா நீ மயங்கியே விழுந்தாலும். உள்ளுக்குள்ள தான்." என ரகசியம்போல் காதில் சொல்ல, அவள் அதிர்ந்து முழித்தாள்.
அவளை விட்டு விலகியவன் இரு கருத்தையும் விரித்த படி நிற்க, அவனுக்கு உடைகளை எடுத்து வைத்து அவளே சட்டையையும் போட்டு விட்டாள்.
"ஷர்ட்டுக்கு பட்டன் போட்டு விடு கண்ணம்மா!" என்பான் வீம்பாக,
"பட்டன் கூடவா மாட்ட மாட்ட?" எனக் கடுகடுக்க.
“ஃபேண்டயே உன்ன மாட்டி விடச் சொல்லிருப்பேன். பட் அந்த அளவுக்கு நம்ம ரிலேஷன்சிப் முன்னேறல. அதுனால சர்ட் மட்டும் போதும்.” என்க அவளை வாய்க்குள்ளேயே திட்டிக்கொண்டிருந்தாள் ரிபேக்கா.
" நம்ம டீல் அது தான. உனக்கு நா பண்றேன். எனக்கு நீ பண்ணு. வேணும்னா நீ எனக்குப் போட்டு விட்ட மாறி நா உனக்கு ட்ரெஸ் சேன்ஜ் பண்ண ஹெல்ப் பண்றேன்." என்றவன் அவளின் இரவு உடையில் கை வைக்க வந்து அவளிடம் திட்டு வாங்கினான்.
இது தினமும் நடக்கத் தொடங்கியது
'கார் சாவியை மறந்துட்டேன்.'
'ஃபோன் சார்ஜ்ல இருக்கு. எடுத்திட்டு வா.' என அலுவலகம் செல்லும் வரை அவளை அவனின் முன் வர வைத்துக் கொண்டே இருப்பான்.
எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அப்பொழுதெல்லாம் அவளைச் சீண்டிக் கொண்டே, எல்லா நேரமும் நீ எனக்கு மனைவி என்று வார்த்தைகளால் அல்லாது செயல்களால் உணர்த்துவான்.
தினமும் மல்லுக்கு நிற்பவனின் பேச்சு அப்போது கடுப்பாக இருந்தாலும் இப்போதும் ரிபேக்காவின் உதடுகளில் புன்னகையை வரவழைத்தது.
தலை தூக்கி தன் பழைய நினைவுகளிலிருந்து வெளியே வந்தவளை மீண்டும் அதற்குள் இழுத்துச் சென்றது கோகோ வைத்து விட்டுச் சென்ற காபி.
அதைக் கையில் எடுத்தவள், ப்ரஜித்தின் நினைவுகளுடனேயே உதடுகளைப் பிரித்துப் பருகத் தொடங்க,
"ம்... So bettery..." என முகம் சுளித்தவளுக்கு அந்தக் காபியின் கசப்புச் சுவை அவர்களுக்குள் தொடங்கிய முதல் தாம்பத்திய கலவியலை நினைவு படுத்தியது.
மயக்கம் தொடரும்...
மயக்கம் : 24
https://kavichandranovels.com/community/topicid/303/
@vsv11 சூப்பர் 👌👌👌👌 எபிசோட் 😁😁 இப்போ தானே புரியுது கோகோ காஃபி குடுத்து ப்ரஜித்ல ரிபேக்காக்கு ஞாபகப்படுத்திட்டு போய் இருக்கா..🙊 எப்ப ப்ரஜித் லவ் புரிஞ்சி இந்த ரிபேக்கா சேருவாளோ??
Super🥰🥰😍😍koko vaala repekkakku avana paththi ninaivugal வந்து kaadhala varuthu pola.. intha jodi kuda nalla irukku 🥰😍
Latest Post: கள் விழி மயக்கம் - 25 Our newest member: Suba Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page