About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
"சத்யா.... சத்யா... கதவத் திற... சத்யா... காலிங் பெல்... காலிங் பெல்... எங்க இருக்கு அது... ஹாங் இந்தா இருக்கு..." என இத்தனை நேரம் கதவை உடைத்தவள் இப்பொழுது ஸ்விட்ச் போர்டை உடைக்கத் தொடங்கி விட்டாள்.
'போதும் பெல்ல இருந்து கைய எடும்மா. அவன் வந்திட்டான். ' என்று நாம் சொன்னாலும் கேட்காது பெல்லை அழுத்திய படி நின்றாள் கோகோ.
சஜித் கதவைத் திறந்து வெளியே வந்து அவளை இருகரம் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தபடி நின்றான். அப்போதும் அவள் விடாது பெல்லை அழுத்தினாள்.
"What's happening?" என்ற நிதானமாகக் குரல் காதுக்கருகே கேட்டபோது ஸ்விட்ச் போர்டிலிருந்து கையை எடுத்தவள் இப்போது அவனின் கரம்பற்றி இழுத்துச் சென்றாள்.
"சத்யா வீட்டுக்குள்ள நா மட்டுமில்லாம வேற யாரோ இருக்காங்க. எனக்குப் பயம்மா இருக்கு. ப்ளீஸ் வாயேன். நா பால்கனில இருந்து பாத்ரூம் போம் போது தா கவனிச்சேன். கிச்சன்ல சத்தம் கேட்டது. வா… வந்து பாரு..."
'உ வீட்டு கிச்சனைலயா! அதோட வாசம் பிடிச்சாலே அவென் க்ளோரோ பார்ம் குடுத்த மாறி மயங்கிடுவானே. ' மை மைண்ட் வாய்ஸ்.
" பால்கனி கதவ பூட்டிடேன். தப்பிச்சி எங்கேயும் போக முடியாது. உனக்குச் சண்ட போடத் தெரியும் தான.? இவ்ளோ டைட்டா ஆம்ஸ் வச்சிருக்கிற நீ ஒரு போடு போட்டா ஆள் மார்ச்சரில தா படுப்பான். வா..." என்றவள் இழுத்துச் சென்றாள்.
"திருடன் வர்றதுக்கு வாய்ப்பில்லை. அதுவும் உன்னோட கிச்சனுக்கு சான்ஸ்ஸே இல்ல. இது பாதுகாப்பான அப்பார்ட்மெண்ட் தான்." என வாய் கூறினாலும் அவளுடன் சென்றான் அவன்.
'என்ன இவன். அன்னைக்கி ஒரு மாறி இருந்தான். இப்ப அவா என்னடான்னா கையப் பிடிச்சி இழுக்குறா. இவனும் கோவப்படாம பதில் சொல்லிட்டே பின்னாடி போறான்.'னு உங்களுக்குச் சந்தேகம் வந்திருக்கும். வரும். நா க்ளியர் பண்றேன்.
அன்று சற்று கோவமாக முகத்தை வைத்துக் கொண்டு உறுமிச் சென்றவனின் மீதிருந்த கோவம் மறு நாள் காலை வரை நீட்டித்தது நிஜம்.
ஆனால் வழக்கம்போல் காலை விடிந்ததும் விழிகள் தன்னால் அவனின் பால்கனியை நோக்கிச் சென்றன. ஜாக்கிங் சென்று வந்தனை பார்த்ததும், 'கோவமா!!! அதெல்லாம் படவேக் கூடாது. அன்பே சிவம். அன்பே சிவம்...' என்பது போலானது.
"ஹாய் சத்யா..." என வெட்கமே இல்லாது தள்ளுவண்டிக் கடையில் தட்டைக் கையில் ஏந்தியபடி அவனுக்கு அழைப்பு விடுக்க, அவன் முறைத்தபடி அவளின் முன் வந்தமர்ந்தான்.
"மாஸ்டர் டூ ஸ்பெஷல் தோசா." என ஆர்டர் குடுத்து உண்ணத் தொடங்கினாள்.
அந்த மாஸ்டரின் கைப் பக்குவம் அவனுக்குப் பிடித்திருக்க வேண்டும். அல்லது அன்று போல் அவளைப் பார்வையால் பருகிய படி உணவை உள்ளிறக்க பிடித்திருக்க வேண்டும். இரண்டில் எது உண்மையோ!
எதுவும் சொல்லாது தோசையை பிட்டு உண்ணத் தொடங்கினான்.
தட்டைக் காலி செய்தவன் எழுந்து நடக்க, "ஹோய்... என்ன நீ பாட்டுக்குப் போற. போனா போகுதுன்னு நேத்தும் நாந்தா உனக்குப் பில் பே பண்ணேன். இன்னைக்கும் பண்ணி, நாளைக்கும் பண்ணா என்னோட பர்ஸ் என்னாகும். முதல் மாச சம்பளம் வர்ற வரச் செலவுக்கு அண்ணா கொஞ்சம் தா குடுத்து விட்டிருக்கான். திரும்பிக் கேட்டா அடிப்பான். அதுனால நீயே நீ சாப்டதுக்கு பில் கட்டிட்டு போ." என்றாள் கோகோ.
"அப்ப நீ எனக்கு ட்ரீட் குடுக்கலயா?"
"நா எதுக்கு உனக்கு ட்ரீட் குடுக்கனும்."
"எங்கைய பிடிச்சி உக்கார வச்சது நீ தான."
"ஆமா..."
"ஆர்டர் குடுத்ததும் நீ தான?"
"ஆமா."
"அப்பப் பில்ல மட்டும் நா ஏ கட்டனும்?. அதையும் நீயே குடுத்திட்டு வந்திடு." எனச் சொல்லி நடக்கத் தொடங்கி விட்டான்.
அவன் கண்ணிற்கு மறையும் வரை அவளை மிரட்டியவனின் பச்சை கண்களுக்குள் வலுக்கி விழுந்தவளை அவனின் குரலே தூக்கி நிறுத்தியது.
"இன்னும் பத்து நிமிஷத்துல பறந்தா ஸ்டேஷனுக்கு வரப் போற." என்றதும் கணக்கைச் செட்டில் செய்து விட்டு வேகவேகமாக ஓடினாள் கோகோ.
அவள் பாதி படி ஏறிக் கொண்டிருக்கும் போதே ரயில் நகரத் தொடங்கி விட்டது.
"ஹேய்... ஹேய்... ஸ்டாப்... ஸ்டாப்..." எனக் கத்தியபடி துரத்தி ஓடியவளுக்கு இரக்கம் காட்ட வில்லை அந்த டிரைவர். போதாததற்கு சஜித் வேறு இரு கரத்தையும் கட்டிக் கொண்டு டிரெயினுக்குள் நின்றது கடுப்பாக இருந்தது.
"ச்ச... ஸ்வீட் பீடா ஃபயர் பீடாவா மாறி என்ன பத்த வச்சிட்டுப் போய்டான். நேத்து நா விட்ட சாவலுக்கு இன்னைக்கி லேட்டா போனா ரிபேக்கா மேம் என்ன ஃபயர் பண்ணிடுவாங்களே. ரொம்ப மோசமான நாள் இது." எனப் புலம்பியவளுக்கு அடுத்த டிரெயின் தான் ஒரே வழி.
பத்து மணிக்குள் வந்து விட்டாள் கோகோ. நல்ல வேளையாக ரிபேக்கா இன்னும் வந்திருக்கவில்லை. ரிசப்ஷனை கரெக்ட் செய்து தன் சீட்டில் அமர்ந்தாலும் தாமதமாக வந்ததை வனிஷா போட்டுக் கொடுத்துத் திட்டு வாங்க வைத்து விட்டாள் என்பது வேறு விசயம்.
அப்போதும் திருந்தவில்லையே அவள். திருந்தும் ஆளா நான், என்பது போல் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு லிஃப்ட்டை பார்த்தபடி நாற்காலி போட்டு அமர்ந்திருந்தாள். சஜித்தின் வருகைக்காக.
"ஹாய் சத்யா..." என லிப்டின் கதவுகள் திறந்ததும் கேட்ட அவளின் குரலில் பாவம் அவனே தலையில் அடித்துக் கொண்டான்.
வீட்டுச் சாவியை துவாரத்தில் பொருத் திறக்க முயல,
"சத்தியமா சொல்றேன் இதெல்லாம் அநியாயம்."
'எது எவ்வீட்டுச் சாவிய வச்சி எங்கதவ திறக்குறதா?' என்பது போல் புருவம் உயர்த்திப் பார்த்தான்.
"அது... காலைல நீ பண்ணது எல்லாமே அநியாயம்னு சொல்ல வந்தேன். நாந்தா உம்பின்னா ஒடி வந்திட்டு இருந்தேன்ல. அந்த ட்ரெயின நிப்பாட்டி வச்சிருக்கலாம்ல."
ஏதோ 'சொந்தக்காரங்க வந்திட்டு இருக்காங்க கொஞ்ச நேரம் கழிச்சி வண்டிய எடுப்பா.' எனக் கிராமங்களில் டவுன் பஸ்ஸை நிறுத்தி வைப்பது போல் ஏன் நிறுத்தவில்லை என்று ஆதங்கப்பட்டாள் கோகோ.
"சோ நா பண்ணது தப்பு… ம்ச்… அநியாயம். ஓகே. இனி அத பண்ணக் கூடாதுன்னா அந்தக் கடை பெஞ்ச்ல உக்காந்து என்ன பாத்து கூச்சல் போடாத." என்று விட்டு உள்ளே செல்ல எதானிக்க,
"உங்கிட்ட ஒரு டீல் பேசலாம்னு வந்தேன். காதுல கூட வாங்காம கதவ சாத்தப் போற."
'என்ன டீல்.' என்றன அவனின் விழிகள்.
"காலைல உனக்கு நா டிபன் வாங்கித் தாரேன். என்னோட காசுலயே. அதுக்கு பதிலா."
"என்னால ட்ரெயினலெல்லாம் நிப்பாட்டி வைக்க முடியாது."
"ம்ச். அத நீ செய்ய வேண்டாம். எங்கூட டின்னர் சாப்பிடுறியா?” என்றவளை எதற்கு என்ற கேள்வியுடன் பார்த்தான் அவன்.
“நா மட்டும் தனியா சாப்பிடனும். கம்பெனி குடுக்க ஆள் இருந்தா நல்லா இருக்கும்." எனப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல,
'டிபனுக்கு தள்ளுவண்டி கடை, டின்னருக்கு நான். அப்ப லன்ச். உண்ணாவிரதமா.' என அவன் மனதில் இருந்ததை படித்து விட்டாள் போலும்.
"லன்சுக்கு எங்கூட ஆஃபிஸ்ல வேல பாக்குற கேரளா பொண்ண கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன்.”
சஜித், "அப்ப டின்னருக்கும்...."
"அது நல்லா இருக்காது. ஒருத்தர் உதவி பண்றாங்கன்னா ஓயாம அவங்க முன்னாடி போய் நிக்கிறது தப்பு."
'அப்ப நா மட்டும் என்ன இளிச்ச வாயானா.' என்பது போல் தான் இருந்தது அவனின் பார்வை.
களுக்கெனச் சிரித்தவள், "இளிச்சவாயன்லாம் நா சொல்லல. நீயும் தனியா இருக்க. நானும் தனியா இருக்கேன். தமிழ் வேற பேசுறோம். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்கலாமே. ஹாங்..." என்ற போதே சஜித்தின் சுண்டிய முகம், ‘இது வேறயா!.' என்றது.
"ஸாரி. இனி உன்ன நா டிஸ்டப் பண்ண மாட்டேன். வெரி ஸாரி." என்று விட்டுச் செல்ல, அவளின் தோய்ந்த நடையே சொல்லும் அவள் இரவில் நோன்பிருக்கிறாள் என்று.
உள்ளே சென்று குளித்து விட்டுப் படுத்தவனுக்கு உறக்கம் வரவில்லை. அவளின் நடையும், வெரி ஸாரி என்ற விதமும் மனதை உறுத்த அந்த நேரம் யாருக்கோ ஃபோன் செய்தான். அடுத்த சில நிமிடங்களில் உணவை எடுத்துக் கொண்டு ஒரு டெலிவரி பாய் அவளின் வீட்டுக் கதவைத் தட்டினான்.
"நா ஆர்டர் பண்ணலயே." என்றவளின் கரத்தில் பார்சலை ஒப்படைத்தவன் திரும்பிச் செல்ல,
"ஹேய் நா இன்னும் பில் செட்டில் பண்ணல." எனக் கத்தி நிறுத்தினாள்.
"ஆல்ரெடி பே பண்ணியாச்சு மேம்." என்று விட்டுச் சென்றான் அவன்.
யார் தந்திருப்பார் என்பதை அறிந்து சஜித்தின் கதவைத் தட்ட, "பால்கனி பக்கம் வா." எனக் கதவைத் திறக்காமலேயே பதில் கூறினான்.
வேகமாகப் பால்கனி பக்கம் சென்று பார்க்க, அங்குக் கையில் கப்புடன் நின்றிருந்தான் சஜித்.
சிறிய முக்காலி போன்ற ஒன்றை எடுத்து வந்து அதில் அமர்ந்து கொண்டு, “சாப்பிடலயா?.” என்றதும் வேகமாகப் பார்ஷலை நுகர்ந்து பார்த்தாள்.
"சூடா சப்பாத்தியா." என ஆவலுடன் பிரித்துப் பார்த்தாள்.
தரையில் அமர்ந்தவள் கவரைப் பிரித்ததும் உண்ணாது இருக்க, “என்னாச்சி?” என்றான் சஜித்.
தன் வலது கை நடுவிரலயும் சுட்டு விரலயும் தன் இதழில் வைத்து எடுத்தவள் “தேங்க் யூ." என்றாள்.
அது காற்றில் பறந்த முத்தம் தான். ஆனால் பறந்து வந்து அவனிடம் சேர்ந்ததைப் போல் ஓர் உணர்வு.
வளவளத்தபடி அவள் உண்ண, அவன் கையில் இருந்த கப்பை உதடுகளுக்குள் சொருகியவாறே கேட்டுக்கொண்டிருந்தான்.
மறுநாள் காலையில் பால்கனிக்கு வந்தவனுக்கு நேற்றைய நினைவுகள்.
அவள் தனிமையை போக்கவென அவள் செய்யும் செயலை எண்ணி சிரித்தபடி ஜாக்கிங் சென்றான்.
திரும்பி வந்தபோது நத்தையாய் சுருங்கி படுத்திருந்த கோகோ தெரிய, 'தண்ணி ஊத்தி எழுப்பி விடலாமா!' என்ற எண்ணம் தோன்றியதை நினைத்து வியந்து போனான்.
"அவள பாத்துப் பாத்து நானும் அவள மாறியே மாறிட்டு வர்றேன். ச்ச..." என முணுமுணுத்தபடி சென்றான் அவன்.
அன்றிலிருந்து இருவரும் காலை இரவு என இரு வேளையும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தத் தொடங்கினர்.
வாயில் சாப்பாட்டை வைத்துக் கொண்டு அவள் அளந்து விடும் கதையை அவன் ரசிக்கத் தொடங்கி இருந்தான். ரயிலில் செல்லும் போதும் தன் மீது படியும் அவளின் பார்வை பசுமரத்தாணி போல் ஆழமாக அவனுள் இறங்கியது.
அனைத்திற்கும் மேலாக அவள் இதழில் விரல் வைத்துச் சொல்லும், ‘தேங்க் யூ…’வில் மொத்தமாக மயக்கிப் போனான்.
"மாஸ்டர்ட்ட காசு குடுத்து வச்சிருக்கேன். நா இல்லங்கையும் நீ சாப்பிடாம இருக்கக் கூடாது." என இளவேந்தனுடன் செல்லும் முன் அவனுக்கு அக்கறையாய் ஆர்டர் போட்டு விட்டுச் சென்றாள்.
அந்த ஆர்டருக்கு சஜித் கீழ் படிந்தான்.
மயக்கம் தொடரும்...
மயக்கம் : 22
https://kavichandranovels.com/community/topicid/285/
Latest Post: வாகை சூடவா ரிவ்யூ Our newest member: Sahithya varun Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page