All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 20

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 6 months ago
Posts: 146
Topic starter  

அத்தியாயம்: 20

 

என்னதான் திருமணம் சஜித் சொல்லி நடந்தாலும். தாம்பத்தியம் இருவருக்குள்ளும் காதலோடு தான் நிகழ்ந்தது. ஆறு மாதங்கள் அந்தக் காதலோடும் காமத்தோடும் தான் கழித்தனர். பல சண்டை சில சமாதானம் என இருவருக்குள் நடந்தேறிய நிகழ்வுகள் பல.

 

கர்நாடக மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டது ரிபேக்காவின் குடும்பம். தொழில் நிமித்தமாக மும்பை வந்த அவளின் தந்தை, மும்பையிலேயே செட்டிலாக முடிவு செய்ததால் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ரிபேக்காவும் மும்பைக்கு இடம் பெயர்த்தப்பட்டாள். 

 

ப்ரஜித், சஜித், துகிரா, ரிபேக்கா நால்வரும் ஒரே பள்ளியில் தான் படித்தனர். 

 

அதிலும் சஜித்தும் ரிபேக்காவும் ஒரே வகுப்பு வேறு. 

 

அது ஸ்கவுட் கேம்ப். 

 

பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு ஸ்பெஷனால சில வகுப்புகளை ஏற்பாடு செய்திருந்தது. 

 

இரவில் கூடாரமிட்டு பள்ளி மைதானத்தில் அனைவரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

 

மாலை மயங்கும் நேரம் அனைவரும் மைதானத்தில் இருக்க வேண்டும். ஆனால் ரிபேக்கா வர நேரானது. தாமதமான காரணத்தால் மைதானத்திற்கு ஓடிச் சென்றவள் போட்டு வைத்திருந்த தார் சாலையில் ஓடாது, நட்டு வைத்த மரங்களுக்கு இடையே ஓட, ஒரு கட்டத்தில் நிலத்தில் பதிந்திருந்த காலை எடுக்க முடியாது போனது. 

 

சில தினங்களுக்குப் பொழிந்த மழையால் சேறாகிப் போயிருந்த நிலத்தில் காலை வைத்து விட்டாள். அது அவளை வலுக்கி விடாது ஷூவை இறுக பிடித்துக் கொண்டது. 

 

அவளும் இழுத்து இழுத்து பார்த்தாள். அது வரமாட்டேன் என்றது. ஷூவை கலட்டி விட்டுச் சேற்றில் பாதம் பதிக்க அவளுக்கு ஒவ்வவில்லை. 

 

யாராவது உதவிக்கு வருவார்களா என்று தேட, அப்போது ப்ரதிஜ் தான் கண்ணில் சிக்கினான். 

 

"ஹேய்... ஹேய் பைய்யா... இங்க வா!" என்றவள் உதவி கேட்கும் தோரணையில் அவனை அழைக்கவில்லை. அதிகாரமாகவே அழைத்தாள்.

 

"உன்னத்தா... இங்க வா. வந்து உன்னோட கையக் குடு." என அவள் போட்ட உத்தரவிற்கு அருகில் வந்தவன் கரத்தையும் நீட்டினான். 

 

அதைப் பற்றிய அவளைக் கறை படியாது வெளியே இழுத்தும் விட்டான். 

 

ஒரு நன்றியை அவன் முகம் பார்க்காது கூறி விட்டு, அவன் தொட்டு இழுத்த கையை, தோளில் மாட்டியிருந்த பேக்கிலிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்துச் சுத்தம் செய்ய, கடுப்பாகிப் போனது ப்ரஜித்திற்கு. 

 

'நா என்ன தொழு நோய்க்காரனா.' என்ற எண்ணம் அவள் இரு முறை சனிடைஸ்ஸர் போட்டுக் கழுவியதால் உண்டானது.

 

"இப்ப எதுக்கு நீ இத்தன மொற கை கழுவுற?." 

 

 "ம்ச்... உன்ன நா கூப்பிட்டது கை குடுத்து ஹெல்ப் பண்ணத்தா, கேள்வி கேக்க இல்ல. சோ ப்ளிஸ் இங்க இருந்து போய்டு." என அவனிடம் ஹிந்தியில் கூறினாலும், 

 

கன்னடத்தில், "எங்கெங்கல்லாம் கைய வச்சிருந்தானோ. அத நா வேற வழியில்லாம தொட்டுட்டேன். ச்ச..." என முணுமுணுக்க, அதைத் தெளிவாகக் கேட்டவன். 

 

"இதுவர எங்கயும் கைய வைக்கல. இனி தா வைக்கப் போறேன்." என்று அவளின் தோளைப் பிடித்துத் தள்ள, எந்தச் சேற்றில் காலை வைக்கவே முகம் சுளித்தாளோ அதே சேற்றில் கரம் ஊன்றிச் சக்கென அமர்ந்து கொண்டாள்.  

 

"தம்மாத் தூண்டா இருந்திட்டு ரொம்பத்தா வாய் பேசுற. கேக்குறது உதவி அதுல ஓட்டதிகாரமா பண்ற. நீ கேம்புக்குத் தான வந்திருக்க. இப்படியே போ." என்று விட்டுச் சென்றான் அவன். 

 

அவளும் தனக்கு தெரிந்த எல்லா பீப் வார்த்தைகளையும் உபயோகித்து திட்டியபடி கேம்பிற்கு வர, அங்குச் சஜித்துடன் நின்றுகொண்டிருந்தான் ப்ரஜித். 

 

"என்னாச்சி? ஏன் உன்னோட ட்ரெஸ் சேறாகிருக்கு?" எனச் சஜித் கேட்க, 

 

"பாத்தா தெரியல, மேடம் எங்கயோ சில்லறை வாங்கிட்டு வந்திருக்காங்க. சேத்துல வாங்குன புதையல யாரும் பங்கெல்லாம் கேட்டிட மாட்டோம்‌. By the way who is this?" 

 

"ரிபேக்கா சனம். மை ஃப்ரெண்ட். ரிபேக்கா இது என்னோட ப்ரதர். ப்ரஜித்ரேவன்." எனச் சஜித் அறிமுகம்‌ செய்தான். 

 

"Nice to meet youன்னு சொல்லி கை குடுக்க ஆசை தான். பட் என்னோட ஹன்ஸ் எப்பையும் சுத்தமா இருக்குறது தா எனக்குப் பிடிக்கும். அழுக்காகிக்க விரும்பமாட்டேன்." என இரு கரத்தையும் பேண்ட் பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டு பேச உக்கிரம் ஏறியது ரிபேக்காவிற்கு. 

 

இது தான் ப்ரஜித் ரிபேக்காவின் முதல் சந்திப்பு. 

 

அதன் பின் வந்த நாட்களில் சஜித்தைத் தேடி அடிக்கடி வீட்டிற்கு வருவாள். அவள் அகராதியாய் அதிகாரமாய் எதுவும் சொல்லாதவரை ப்ரஜித் அமைதியாகத் தான் இருப்பான். சொல்லி விட்டால், கீ குடுத்த பொம்மைபோல் அவளை ஆட்டி வைப்பான். 

 

அன்று அவள் அணிந்திருந்த அடர் நேவி ப்ளூக் கலர் ஸ்கெட்டும், லைட் நேவி ப்ளூக் கலர் சட்டையும், கழுத்தில் மாட்டியிருந்த கர்சீப், தலையில் வைத்திருந்த தொப்பியெனப் புத்தியில் ஏற்றி வைத்திருந்த நினைவுகள் அவனை இப்பொழுதும் இம்சை செய்யும்.

 

எலியும் பூனையுமாய் சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களை இணைத்து வைத்து அழகு பார்த்த பெருமை திருமண நாளையே சாரும்.

 

மகாராஷ்டிராவில் நடைபெறும் திருமணங்களில் பல சடங்குகள் பின்பற்றப்படுகிறது. அதில் ஒன்று தான் அந்தர் பட். 

 

அதாவது தாலியை அணிவிக்கும் முன் மாலை மாற்றிக் கொள்வர். அந்த மாலை அணிவிக்கும் முன் மணமக்களின் பார்வை நேருக்கு நேராகப் படிவதை தடுக்க, மெல்லிய பட்டுத் துணியை இருவருக்கும் இடையில் தொங்க விட்டிருப்பர். 

 

நேரம் வந்ததும் திரை விலகும். இருவரின் பார்வையை சந்திக்கும். அதன் பின் லாஜஹோமா சடங்குகள் தொடங்கும். 

 

அது வேறு ஒன்றுமல்ல ஹிந்தி சிரியல்களில் காட்டுவார்களே, நெருப்பு மூட்டி, கருப்பு மணிகள் அடங்கிய மங்கள சூத்திரத்தைப் பெண்ணின் கழுத்தில் அணிவித்து, ஹோமத் தீயை ஏழு முறை வளம் வருவது. அப்படி வளம் வரும்போது ஏழு வாக்குறுதிகளை மணமக்கள் ஏற்றுக் கொள்வது. 

 

இங்குத் திரை விலகியதுமே சிலையாகி விட்டான் ப்ரஜித். 

 

முதல் முறை சண்டைக் கோழியாய் தலை சிலுப்பிக் கொண்டு திருப்பியவளை பெண்ணாக உணர்ந்திருப்பான் போலும். 

 

தேவதைக்கு நிகரான அழகுடன் அதீத அலங்காரம் ஏதுமின்றி அடக்கமான புடவையில் முதல் முறை கண்டவனுக்குள் குறுகுறுப்பு. 

 

எவ்வித ஆர்வமும் இல்லாது உடை மாற்றித் தலைப்பாகையே தலையில் வைத்தவனுக்கு திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகச் செய்யும் போதும் மனம் அவளை மனைவியாக ஏற்கச் சொல்லியது.  

 

அவளின் தளிர் விரல்பற்றி அக்னியை வளம் வந்தவன் எந்தச் சூழ்நிலையிலும் பிடித்த கரத்தை விட்டு விடக் கூடாது என்று தான் வேண்டினான். ஆனால் விதி. அவளின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளால் விவாகரத்து வரை வந்து நிற்கிறான்.

 

அவனின் படுக்கை அறை அவளுடனான முதல் இரவை நினைவு படுத்தாத நாளே இல்லை. 

 

மனம் அவளை உரிமையாய் மனைவியாக ஏற்றப் பின் முதலிரவறைக்குள் அதாவது அவனின் வீட்டில் அவனுக்காக அவனின் அறையில் ஒரு பெண் சகல அலங்காரத்துடன் காத்திருக்கிறாள் என்பதே உடலில் சிவ்வென்ற உணர்வைத் தந்தது. 

 

ஆனால் அவளுக்கு அந்த உணர்வு இருந்ததா என்றால் இல்லை. 

 

"ப்ரஜித், நமக்குள எப்பயுமே செட்டானது இல்லன்னு உனக்கு நல்லாவே தெரியும்‌‌. ஆனா சந்தர்ப்பம் அப்படியாகிடுச்சி. அதுனால நாம கொஞ்சம் நிதானமா எல்லாத்தையும் ஸ்டாட் பண்ணலாம்." என்றவள் அவனைக் கடந்து செல்ல, 

 

"எங்க போற?"

 

"இங்க டபுள் பெட் ரூம் இருக்கு. நீ இங்க தங்கிக்க. நா பக்கத்து ரூம்ல..." என்றபோது வழக்கமான அவனின் நக்கல் பார்வையில் சூடாகி பேச்சை நிறுத்தி விட்டு முறைத்தாள்‌. 

 

"வாட்...."

 

"உனக்குக் கல்யாணம்னா அர்த்தம் தெரியும் தான. இல்ல அது தெரியாத அளவுக்கு டீன் ஏஜ் பொண்ணா?" 

 

"தெரியும் தா. அதுக்கா உங்கூட எப்படி.? ஒன்னா ஒரே ரூம்ல." எனத் தடுமாறித் தான் போனாள் அவள். 

 

"ஒன்னா ஒரே ரூம்ல இருக்கனும்னு தா கல்யாணம் பண்ணிக்கிறது. வேற எதுக்கு." 

 

"ஷீ..." என அவள் ஆரம்பிக்கும் போதே,

 

"ஷீ... எனக்கும் உம்மேல பாய்றதுல இன்டரஸ்ட் இல்ல. அதுக்காக அது இல்லவே இல்ல, வரவே வராதுன்னு சொல்ல முடியாது. எப்ப வேண்ணாலும் வரலாம். வந்தா நடக்கவேண்டிய எல்லாமே நடக்கும்." என்றவனை உறுத்து விளிக்க‌.

 

"பட் ஐ ரெஸ்பெக்ட் யூவர் ஃபீலிங்ஸ். இத்தன வர்ஷமா இன்டிவிஜ்வ்வலா தனியா இருந்த ஒரு பொண்ண திடீர்னு பிடிச்சிக் கொண்டு வந்து ஒரு பையனோட தங்கச் சொல்றது வியர்டான விசயம் தா. அதுக்காகத் தனித் தனி ரூம்ல இருந்தா கடைசி வரை கணவன் மனைவிங்கிற போர்வைல நாம இன்டிவிஸ்வல்லாவே வாழ்ற‌துக்கு சமம். 

 

நீ உன்னோட லைஃப்ப வாழு. நா என்னோடத வாழ்றேன். ஆனா நாம நம்மோட லைஃப் என்னென்னு முடிவெடுக்கனும்‌. அது நீ தனி ரூம்ல இருந்தா சரி வராது. அத்தோட உன்னத் தேடித் தேடி வந்துலாம் என்னால என்னோட ஃபீலிங்க சேர் பண்ணிக்க முடியாது. 

 

ஒரே ரூம்ல தான் ஒரே பெட் தான். அத்தோட வீட்டுல வேலை பாக்குறவங்கெல்லாம் இருக்காங்க. நம்ம பர்ஷ்னல் லைஃப்ப பத்தி மற்றவங்க பேசுற மாறியாகிடும். எனக்கு என்னோட பர்ஷ்னல் லைஃப் அடுத்தவங்களுக்கு தெரியப்படுத்துறதுல விருப்பம் இல்ல. பெட் பெருசாத்தா இருக்கு. ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு சொல்லு." என்று விட்டு வெளியே சென்றமர்ந்தான். 

 

அடுத்த பத்து நிமிடங்கள் கழித்து கதவைத் தட்ட, அவனின் பேச்சில் உறைந்து போய் நின்றிருந்தவள் கதவைத் திறந்தாள். 

 

அவள் உடை மாற்றாது நிற்பதை கவனித்தவன், "ஒவ்வொரு முறையும் நீ ட்ரெஸ் மாத்துறதுக்குன்னு என்னால வெளில போய் நிக்க முடியாது." என்றவன் அவளைக் கடந்து டவலுடன் குளியலறைக்குள் நுழைத்தான். 

 

கதவைப் பூட்டும் முன், "பிடிக்கிதோ! பிடிக்கலயோ! நடந்த கல்யாணத்துக்கு மதிப்பு குடுத்து ரொம்ப கஷ்டப்பட்டு உன்ன மனைவியா உள்ளுக்குள்ள உக்கார வச்சிருக்கேன். அது மாறி நீயும் என்ன புருஷனா பாரு. அப்றம் எனக்கு ரெஸ்பெக்ட் முக்கியம். முன்ன மாறிச் சுண்டி கூப்பிடுறது. மரியாத இல்லாம பேசுறதெல்லாம் செட்டே ஆகாது. உங்கிட்ட அத எதிர்பாக்குறது முட்டாள் தனம்‌ தான். பட் நீ அத குடுத்து தான ஆகனும்." என்றுவிட்டுச் சென்றான். 

 

பாவம் அவன் கேட்ட எதுவும் அவனுக்குக் கிடைக்கவே இல்லை. என்ன செய்யலாம்.

 

மயக்கம் தொடரும்...

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

மயக்கம் : 21

https://kavichandranovels.com/community/topicid/280/


   
ReplyQuote
VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 6 months ago
Posts: 50
 

பாவம் தான் பிரஜி.. இவகிட்ட இன்னும் என்னலாம் வாங்கி கட்டிக்க போறானோ😂😂


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 6 months ago
Posts: 146
Topic starter  

@vsv42 யாரு அவனா.. 😂😂😂


   
ReplyQuote

You cannot copy content of this page