All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

உயிரே நீ என்ன செய்க...
 
Notifications
Clear all

உயிரே நீ என்ன செய்கிறாய்..!! - (Story Thread)

 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 580
Topic starter  
1789135801-IMG-20260911-WA0000.jpg
 
 
ஹாய் டியர்ஸ் 
 
 
உயிரே நீ என்ன செய்கிறாய் கதை இன்று முதல் ரீரன் செய்யப்படுகிறது... கதையை தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள்..
 
 
கதை முடிந்தவுடன் மறுநாள் லிங்க் ரிமூவ் செய்யப்படும்..
 
 
புரிதலுக்கு நன்றி❤️
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 கவி சந்திரா 

This topic was modified 4 days ago by Kavi Chandra
This topic was modified 6 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 580
Topic starter  
 
உயிர் – 1
 
 
ஓம் ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா
நாள்தோறும் உன்னையே நான் பாட வேண்டும்
நான் பாட உந்தன் அருள் ஆசி வேண்டும்
 
 
முழுதாகப் பத்து வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் கால் பதித்தவன் தனக்குப் பின்னால் கேட்ட ஒலியில் திரும்பி பார்க்க...
 
 
வயதானவர் ஒருவரின் அலைபேசி அவருக்குத் தன் இருப்பை நினைவுபடுத்த அதை ஆன் செய்தவர், “ஆமா கண்ணு... டெல்லி வந்து இறங்கிட்டேன்...” என அந்தப் பக்கமிருந்த யாரோடோ பேசியபடி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
 
 
அதைக் கண்டவனின் மனதில் ‘இந்திய மனம்’ என்ற எண்ணம் தோன்றிய நொடி முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது. அதேநேரம் வேறு ஏதோ நினைவு எழுந்ததில் முகம் ஒரு நொடி கசங்கியது. உடனே இத்தனை வருட அனுபவத்தில் அதை மறைத்தபடி கம்பீரமான தன் வேக நடையைத் தொடர, பத்திரிகையாளர்கள் அவனைச் சூழ்ந்து கொள்ள முயலவும், நொடியில் அவனுடைய பாதுகாவலர்கள் ஒரு பாதுகாப்பு அரண் போல் சுற்றி நின்று யாரும் அருகில் வராமல் தடுத்தனர்.
 
 
அவன் பிசினஸ் டைகூன் அபய் வரகுணன், தன் தொழில் சாம்ராஜியத்தை இந்திய மண்ணிலும் நிலை நாட்ட தன் ஜாகையைத் தற்போதைக்கு இந்தியாவிற்கு மாற்றிக் கொண்டு இங்கு வந்துள்ளான்.
 
 
தன்னைத் தொடர்ந்தபடி கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டு இருந்த பத்திரிகையாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் விறுவிறுவெனச் சென்று கொண்டிருந்தவன் தன் பின்னாலேயே கேள்வி கேட்டபடி ஓடி வந்து கொண்டிருந்தவர்களைக் கண்டு, “கமான் க்விக்... ஷார்ட்டா கேளுங்க... " என நின்றான்.
 
 
"திடீரென்று நீங்க இங்கே தொழில் தொடங்க என்ன காரணம்...?!" எனக் கேட்கபட,
 
 
"இது என் தாய் நாடு... அது தான் காரணம்... " என்று ஒரு சிறு புன்னகையோடு கூறினான்.
 
 
"இத்தனை வருஷமா இங்கே வராம இருந்த நீங்க இப்போ வந்திருக்கறதில் எதாவது உள்நோக்கம் இருக்கா...?"
 
 
“அப்படி என்ன இருக்கும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க...?” என்று கேள்வியை அவர்கள் பக்கம் திருப்பியவன், "நேரம் தான் காரணம்... அப்போ கிடைக்கலை... இப்போ கிடைச்சது..." என்றான். ஆனால் அவன் மனசாட்சியோ ‘அப்படியா...?!’ எனக் கேள்வி எழுப்பியது.
 
 
“ஒரு முறை நீங்க இந்தியா வர மாட்டேன்னு சொன்னதா நியூஸ் வந்ததே...?” என ஒருவர் கேட்க, தன் ரேபான் கிளாஸை ஒற்றைக் கையால் கழற்றி அவரைப் பார்த்தவன், "வர மாட்டேன்னு தான் சொன்னேன்... வரவே மாட்டேன்னு சொல்லலையே..." என்றவன் கண்ணாடியை கண்ணுக்கு கொடுத்தபடியே தன் வேக நடையோடு டெல்லி ஏர்போர்ட்டை விட்டு வெளியேறினான்.
 
 
அன்று இரவு தான் தங்கியிருந்த அந்த நட்சத்திர உணவு விடுதியில் இரவு உணவுக்கான ஆர்டரை கொடுத்து விட்டு தன் கையில் இருந்த போனில் கண்களைப் பதித்து இருந்த அபய்யின் கவனத்தைப் பக்கத்து மேஜையில் இருந்து வந்த மழலை குரல் கலைத்தது.
 
 
அதில் நிமிர்ந்து அங்குப் பார்க்க, குண்டு குண்டு கண்களும் புசுபுசு கன்னங்களுமாக ஒரு மூன்று வயது அழகிய தேவதை அமர்ந்து கொண்டு தனக்கு எதிரில் அமர்ந்திருந்த தன் தாயிடம் ஏதோ சந்தேகங்கள் கேட்பதும் அதைப் பற்றித் தானே ஆராய்ச்சி செய்வதுமாக தன் மழலை மொழியில் மிழற்றிக் கொண்டிருந்தது.
 
 
தற்செயலாகத் திரும்பி பார்த்த அபய்யால் அதன் பிறகு அந்த ஏஜ்சலின் மேல் பதித்த பார்வையைத் திருப்ப முடியாமல் போக, ஒரு சின்னச் சிரிப்போடு அதன் சேட்டைகளைத் தன்னை மறந்து ரசித்திருந்தான்.
 
 
"வாட் ஹப்பேண்ட் அபய்... இந்தியாவில் கால் வெச்சதும் அடுத்தவங்களை வேடிக்கை பார்க்கற பழக்கம் உனக்கும் வந்துடுச்சா...?!" எனத் தனக்குள்ளேயே கேட்டு கொண்டவன், பார்வையைத் திருப்ப முயன்றாலும் அந்தச் சின்னச் சிட்டு அதற்கு விடவில்லை.
 
 
அந்த அழகிய பட்டாம்பூச்சியை ரசிப்பதற்கு அதற்கு முன்பு அமர்ந்திருந்த அவரின் தாய் தடையாக இருக்க... தன் இருக்கையைச் சற்று பின்னோக்கி இழுத்து போட்டு குட்டி தேவதையை ரசிக்கும்படி வாகாக அமர்ந்து கொண்டான் அபய்.
 
 
ஆங்கிலம் இந்தி தமிழ் என்று மூன்று மொழி கலந்து அது மிழற்றுவதைக் காண காண திகட்டவில்லை அபய்க்கு, "மம்மா..." என அந்தக் குட்டி அழைக்கவும், "ம்ஹூம் அம்மா..." என அதன் தாய் திருத்த,
 
 
‘பரவாயில்லையே இப்போது கூடத் தாய் மொழியை விடாது இருக்காங்களே...!’ என்ற ஆச்சரியமும் அப்பெண்ணின் மேல் ஒரு நல்ல எண்ணமும் தோன்றியது.
 
 
"ஹான்... ஹான்... ஒகே ஒகே..." என்ற குட்டி, மேஜை மேல் இருந்த தன் தாயின் போன் ஒலிப்பதை பார்த்து "அம்மா போன்..." எனப் போன் அழைப்பதை சுட்டி காட்டியது. 
 
 
அதை எடுத்து ஆன் செய்தவர், "ஆமா டின்னர் தான் சாப்பிடறோம்... இல்லை வொர்க் இருந்தது அதான்..." எனப் பேசிக் கொண்டு இருந்தவர், "அதானே பார்த்தேன்... இன்னும் கேட்கலையேன்னு நினைச்சேன், இந்தா உன் பேபியையே நீ கொஞ்சு..." என்றபடி போனை நீட்ட, அதற்காகவே காத்திருந்த சிட்டு பாய்ந்து அதைப் பறித்துக் காதில் வைத்து "பப்பா..." என்றது குதுகலத்தோடு.
 
 
இருவரும் ஏதேதோ பேசி கொண்டு இருக்க, "நோ பப்பா... மம்மா தான்..." எனத் தொடங்கிய குட்டி "ம்ம்..." என அதன் தாய் போலியாக முறைக்கவும், நாக்கை கடித்து முகத்தைச் சுருக்கி, "அம்மா..." எனத் திருத்தி கொண்டே தன் பேச்சை தொடர்ந்தது.
 
 
அதனிடம் சொல்லி கொண்டு அதன் தாய் கை கழுவ எழுந்து செல்லவும், குட்டி போனை வைத்தவுடன் அதன் முன் சென்று நின்றிருந்தான் "ஹாய்..." என்ற அழைப்போடு அபய்.
 
 
அவனை நிமிர்ந்து ‘யார் நீ?’ என்பது போலப் பார்த்து விட்டு மீண்டும் சாப்பிட, "உங்க பேர்..." எனக் கேட்டவனை கண்டு முகம் சுருக்கி கோபத்தோடு பார்த்தவாறே,
 
 
"ஸ்டேன்ஜர்ஸ்கிட்ட எல்லாம் பேசக்கூடாதுன்னு எங்க மம்மா சொல்லியிருக்காங்க..." எனச் சொல்ல, "அம்மா..." எனத் திருத்தியவனை, ‘உனக்கெப்படி தெரியும்!’ என்பது போல் பார்த்து வைத்தது.
 
 
மனதிற்குள் அவரை நினைத்து மெச்சி கொண்டவன், "ஆனா எங்க அம்மா அப்படியெல்லாம் எனக்குச் சொல்லி தரலை... ஐம் அபய்... அபய் வரகுணன்..." என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டு அதன் முன் கைகளை நீட்ட, ‘நீ யாரா வேணா இருந்துட்டு போ...’ என்பது போல முகத்தைத் திருப்பிக் கொண்டது.
 
 
அதன் செய்கையில் புன்னகை வர, இதுவரை தன்னைக் கண்டதும் வியப்பதும், மேலே விழுந்து பழகத் துடிப்பதுமாகவே பார்த்து பழகியவனுக்கு இந்தக் குழந்தையின் செயல் மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஏனோ அந்த ஏஜ்சலை கண்ட நொடியிலேயே அவனுக்கு அவ்வளவு பிடித்துப் போனது. ஏதோ ஒன்று அவனை அந்தக் குழந்தையை நோக்கி இழுத்தது.
 
 
அப்போது அந்தக் குட்டி தேவதையின் அம்மா திரும்பி வர, அவருக்கு வழி விட்டு ஒதுங்கியவன், அவர் முகம் கண்டு மெலிதாக அதிர்ந்தான். ஆம் அங்கு நின்று கொண்டு இருந்தது மிர்னாலினி, அவனின் மினி.
 
 
இங்கு இப்படி ஒரு சந்திப்பை இத்தனை வருடங்கள் கழித்துச் சற்றும் எதிர்பார்த்திராதவன் ஒரு நொடி செய்வதறியாது திகைத்து நின்றாலும் பின் தன்னை மீட்டுக் கொண்டு வேகமாக அங்கிருந்து விலகி சென்றுவிட்டான்.
 
 
தன் இடத்தில் சென்று அமர்ந்தவனுக்கு மீண்டும் அந்தப் பக்கம் பார்க்க சற்றும் எண்ணம் இல்லை. ஆனால் தன்னையும் மீறி தன் கண்கள் அந்தப்பக்கம் பாய முயல்வதைத் தடுக்க எண்ணியவன், அந்த மேஜையின் மற்றொரு இருக்கையில் அவர்கள் அமர்ந்திருந்ததற்கு நேர் எதிர்ப்புறமாகப் பார்த்தபடி அமர்ந்து கொண்டான்.
 
 
மனம் முழுவதும் இருந்த அதிர்வும் திடுக்கிடலும் நீங்கிய பிறகே அந்த வித்தியாசம் அபய்யின் மனதில் பதிந்தது. ஆம் ஒரு நொடியே ஆனாலும் தனக்கு எதிர்ப்பாராமல் அவளைக் கண்டதும் எழுந்த அதிர்வு அவளுக்கு ஏன் எழவில்லை என்பது தான் அது.
 
 
ஒருவேளை தன்னைக் கவனிக்கவில்லையா...?! என்று என்னும் போதே, ‘இல்லை தான் விலகி வழி விடக் காத்து நின்றிருந்தாளே அப்போது நிச்சயம் பார்த்து தான் இருப்பாள்...’ என்ற எண்ணம் எழுந்தது.
 
 
‘மறந்துவிட்டு இருப்பாளோ...?!’ என நினைத்தவனுக்கு, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. ‘அத்தனை எளிதில் மறக்கக் கூடிய உறவா இது...?! நீண்ட நெடிய பத்து வருடங்கள் தான் என்றாலும், நிச்சயம் மறந்து இருக்க வாய்ப்பில்லை’ என்கிற ரீதியில் எண்ணம் செல்ல, அதையே சிந்தித்துக் கொண்டு இருந்தவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகியது.
 
 
‘தன்னைப் போல் அவள் எதிர்ப்பாராமல் தன்னைக் காணவில்லை, இதற்கு முன்பே தன்னைப் பார்த்து விட்டு இருக்கிறாள்...!” எனச் சரியாகக் கணித்தான்.
 
 
நிஜமும் அது தான், அபய் இந்தியாவில் தொழில் தொடங்க போவதாக அறிவித்ததெல்லாம் மிர்னாவிற்குத் தெரியாது தான், ஆனால் இன்று காலை வந்து இறங்கியவனைச் சுடசுட பேட்டி கண்டு அத்தனை தொலைக்காட்சிகளும் ஒளிப்பரப்பியதை கண்டவள்,
 
 
இந்தியாவில் வேறு ஏதாவது மாநிலத்தில் இருந்தாலாவது இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனலாம், ஆனால் இருவரும் டெல்லியில் இருக்கும் போது எதிர் எதிரே எப்போது வேண்டுமானாலும் சந்திக்க வேண்டி வரலாம் என்று புரிந்து ஓரளவிற்குத் தன்னை அதற்குத் தயார்ப்படுத்திக் கொண்டுவிட்டாள்.
 
 
ஆனால் அப்படி ஒரு சந்திப்பு இன்றே நிகழும் என்பதும் இருவரும் தங்கி இருப்பது ஒரே ஹோட்டல் என்பதும் அவளுமே எதிர்ப்பாராதது தான்.
 
 
அவளும் அவளின் குட்டி தேவதை சுபிக்ஷாவும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் தான் ரெஸ்டாரண்ட்னுள் நுழையும் அபய்யை கண்டாள் மிரு.
 
 
முதலில் சற்று திடுக்கிட்டவள், காலை முதலே ஓரளவு தயார்ப்படுத்தி வைத்திருந்த மனதை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டாள். முன்பு இருந்தது போல அபய்யை கண்டதும் கோபம் கொள்ளவோ இல்லை சண்டையிடவோ இப்போது தோன்றவில்லை அவளுக்கு. இங்கு இப்படி ஒருவன் இருப்பது போலக் கூடக் காண்பித்துக் கொள்ளாமல் கடந்து போகவே எண்ணி இருந்தாள்.
 
 
உணவகத்தில் இருக்கும் எத்தனையோ நபர்களில் இவனும் ஒருவன் என்றே எண்ணி அதைச் செயல்ப்படுத்த நினைத்து இருந்தவள் கொஞ்சமும் எதிர்ப்பாராதது அபய் சுபிக்ஷாவிடம் பேசிக் கொண்டு இருந்தது.
 
 
அதைக் கண்டு அதிர்ந்தவள், அபய் தன் குழந்தையிடம் பேசுவதை விரும்பாமல் அதைத் தடுப்பதற்காகவே அவசரமாக அவர்களை நெருங்கினாள்.
 
 
அதே நேரம் தன்னை எதிர்ப்பாராமல் கண்டதும், அபய்யின் கண்களில் வந்த திடுக்கிடலை கண்டு கொண்டவளின் மனம் திருப்தியாக உணர்ந்தது.
 
 
அந்த உணர்வு எதனால் வந்தது என்று அவளுக்குமே ஒரு தெளிவு இப்போது வரை இல்லை... அபய் இன்னும் தன்னை மறக்காமல் இருக்கிறான் என்பதனால் வந்த உணர்வா...?! இல்லை தன்னைக் கண்டதும் அதிரும் அளவிற்கு அவனைப் பாதித்து இருக்கிறோம் என்ற நினைவு தந்த திருப்தியா...?!
 
 
அது எதுவாகவாவது இருந்து விட்டு போகட்டும், ஆனால் வெகு வருடங்களுக்குப் பிறகு மிருவின் மனம் ஒரு நிம்மதியை உணரத்தான் செய்தது.
 
 
அபய் என்னதான் அவர்கள் பக்கம் பாய முயன்ற பார்வையைப் பெரும்பாடுபட்டுத் தடுத்தாலும் அவர்களை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கும் மனதை அவனால் தடுக்க முடியவில்லை.
 
 
இந்தியா செல்வது என்ற முடிவை எடுத்த போதே சில பல நிகழ்வுகளைத் தவிர்க்க முடியாது, சிலரை நேரில் சந்திகும் நிலை வரலாம் என்று .எண்ணி அப்படி வரும் போது அதை எப்படி எதிர் கொள்ளவது என்றெல்லாம் மனதை போட்டு அலட்டிக் கொள்ளாமல் அப்போது அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்றே நினைத்து இருந்தவன் வந்த அன்றே அதுவும் இவளையே நேரில் சிந்திப்போம் என்று கனவிலும் எண்ணவில்லை..
 
 
அதுவும் இப்படி ஒரு சூழ்நிலையில், குழந்தையோடு இருக்கும் அவளைப் பார்க்கும் போது மனதில் ஒரு பக்கம் ஏதோ ஒரு நிம்மதி பரவுவதை உணர்ந்தாலும் இன்னொரு பக்கம் லேசாக ஏதோ ஒன்று கனமாக அழுத்துவது போல இருந்தது.
 
 
இது தான் அவனின் ஆழ்மன எண்ணமாகவும் ஆசையாகவும் இத்தனை நாட்களாக இருந்தது என்றாலும், அதை நேரில் காணும் போது ஏனோ மனம் சற்று கனக்க தான் செய்தது.
 
 
அவளின் நினைவுகள் மணலில் எழுதிய எழுத்துக்கள் அல்லவே காற்று வந்து கலைத்து விட்டுச் செல்ல, கரும்பலகையில் கிறுக்கிய கிறுக்கல்களும் அல்லவே துணியைக் கொண்டு துடைத்து அழித்து விட, அது அவனின் மனமென்னும் கல்வெட்டில் செதுக்கிய சிற்பம் அல்லவா...! அத்தனை எளிதாக அழிக்கவோ மறக்கவோ முடியாது.
 
 
ஆரம்பத்தில் தன்னைத் துரத்தும் அவளின் நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவித்தவன் தன்னைத் துரத்தும் அந்த நினைவுகளில் இருந்து தப்பிப்பதற்காகவே அதிகம் ஓடி ஓடி உழைக்கத் தொடங்கினான்.
 
 
அதோடு சேர்ந்து வேறு ஒரு வைராக்கியமும் அவனை உழைத்து முன்னேற வேண்டும் என்ற வெறியை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொண்டதில், மினியின் நினைவுகள் சற்று இல்லை ரொம்பவே பின்னுக்குத் தள்ளப்பட்டது என்னவோ உண்மை தான்.
 
 
பிறகு உண்மையிலேயே வேலைகளில் மூழ்கி அவளை மறக்க துவங்கியிருந்தவனுக்கு இல்லையில்லை அப்படி எண்ணி இருந்தவனுக்கு ஓய்வாக அமரும் ஒரு சில நிமிடங்கள் கூட மனதின் ஓரம் மின்னி மறையும் அந்த முகம் அது அத்தனை எளிதல்ல என்பதைப் படம் பிடித்துக் காட்டியிருந்தது.
 
 
மனதோடு நடத்திய பல வருட போராட்டத்திற்குப் பிறகு அவளுக்கு என்று ஒரு வாழ்க்கை அமைந்து சந்தோஷமாக வாழ மாட்டாளா என்ற ஏக்கமும் கவலையும் மனதை அறிக்கத்தான் செய்தது. அப்படி அமைய வேண்டும் என்பதும் தான் அவன் ஆசையாக இருந்தது.
 
 
ஆனால் அப்படி நடந்து தான் இருக்கிறது என்பது நிதர்சனமாய்க் கண் முன் தெரிய வர, அதைக் கண்டு சந்தோஷத்தில் குதுகலிக்க வேண்டிய மனமோ, கொஞ்சம் ஏதோ ஒரு புரியாத உணர்வில் துவள தான் செய்தது.
 
 
‘இப்போ ஏன் இப்படி இருக்க...?! வேற நீ என்ன எதிர் பார்த்த உனக்காகப் பத்து வருஷமா கிழக்கே போகும் ரயில் ராதிகா போல ரயில் பின்னே எழுதாம பிளைட் பின்னே எழுதி அனுப்பிக் காத்து இருக்கணும்னு நினைச்சியா...?!’ என அவன் மனசாட்சி நக்கல் செய்ய,
 
 
‘சேச்சே... அவளுக்கு நல்ல வாழ்கை அமையணும்னு தான் நான் நினைச்சேன்...’ என அதற்குப் பதிலளித்துக் கொண்டு இருந்தவனை,
 
 
“ஹே... பப்பா...” என்ற அந்தக் குட்டி தேவதையின் குரல் கலைத்தது. அதில் தன் வைராக்கியத்தை எல்லாம் விட்டு ஆர்வமும் படபடப்புமாகத் திரும்பி அவர்களைப் பார்த்தான் அபய்.
 
 
அங்கு இருபத்தி எட்டு வயதிற்குள் மதிக்கக் கூடிய ஒரு அழகிய இளைஞன் வட இந்திய தோற்றத்தோடு நின்றிருந்தான். அந்தச் சின்னச் சிட்டு அவன் மீது தாவி குதித்து ஏறி முகமெங்கும் முத்தமழை பொழிய... அதைக் கண்ட அபய்யின் மனமெங்கும் ஏக்கம் அலை அலையாகப் பரவியது.
 
 
‘ரோஹித்... வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்...” என்று சின்னவளுக்குக் குறையாத குதுகலத்துடன் பெரியவளும் குதுகலிக்க... அதைக் கண்ட அபய்யின் கண்களில் ஒரு சிறு வலியும மனதில் வெறுமையும் படர்ந்தது.
 
 
“உங்க ஞாபகமாவே இருந்தது அதான்...” என்றவாறே ரோஹித் அங்கிருந்து போகலாமா என்பது போலத் தலையசைப்பில் கேட்க, பதிலுக்குத் தலையசைத்துத் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்ட மிரு,
 
 
“உங்கன்னு பொய் சொல்லாத, உன் பேபி ஞாபகம்னு சொல்லு...” என நொடித்துக் கொண்டாள்.
 
 
“ஹே நிஜமா பெரிய பேபி ஞாபகமும் தான் டா... கிளம்பி போய் நாலு நாள் ஆச்சே...” என்று கூறிக் கொண்டு வந்தவன் ஒரு சிறு இடைவெளி விட,
 
 
அவனை நம்பாத பார்வை பார்த்த மிரு போலியாக முறைக்க, “எங்க யாருகிட்ட வம்பு இழுத்து வெச்சு இருக்காளோன்னு ஒரே பக்கு பக்குன்னு இருந்ததா... அதான் அடிதடி வரை போறதுக்குள்ள கிளம்பி வந்துட்டேன்...” என்று சிரிக்காமல் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கூறியவனைக் கொலைவெறியோடு பார்த்துக் கொண்டு இருந்தாள் மிரு.
 
 
“சுஷு... உங்க அம்மா காளி அவதாரம் எடுக்கறதுக்குள்ள நாம எஸ் அகிடுவோமா...?” என்று குழந்தையிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருந்தவனையும் அவர்களுக்குள் இருந்த அன்னியோனியத்தையும் உணர்ச்சி துடைத்த கண்களோடு பார்த்துக் கொண்டு இருந்தான் அபய்.
 
 
இதற்கு மேல் அங்கு இருக்கவோ அதைப் பார்க்கவோ விரும்பாதவன் அவள் வாழ்க்கையில் குறுக்கிட விரும்பாது விலகி செல்ல முயல, அத்தனை நேரம் அவனுக்கு எதிராகப் பேசிய மனசாட்சியோ, ‘உன்னை நினைவு இல்லாதது போல நடந்து கொண்டவளை அப்படியே விட்டு விட்டா செல்வது...?’ என்று கேள்வி எழுப்பியது.
 
 
அதை ஒதுக்கி தள்ளி எழுந்து வெளியே செல்ல முயன்றவனின் கால்கள் அவன் அனுமதி இல்லாமல் அவர்களை நோக்கி சென்றது. அதற்குள் அபய்யின் இயல்பு குணம் தலை தூக்கி இருக்க...
 
 
கதவை நோக்கி நகர்ந்தவர்களின் வழியை மறித்தது போல வந்து நின்றவன், “ஹாய் டார்லிங்...” எனக் கண்களில் டன்டன்னாகக் குறும்பும் இதழில் விரிந்த புன்னகையுமாகக் கூற, இதைக் கொஞ்சமும் எதிர்ப்பார்த்திராத மிரு அதிர்ந்து நின்றவள், ஒரு திடுக்கிடலோடு ரோஹித்தை திரும்பி பார்த்தாள்.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 580
Topic starter  
 
உயிர் – 2
 
 
“ஹாய் டார்லிங்...” என இப்படித் திடிரெனத் தன முன் வந்து அபய் நிற்பான் எனக் கொஞ்சமும் எதிர் பார்த்திராதவள், உச்சபட்ச அதிர்வோடு திரும்பி தன் அருகில் இருந்த ரோஹித்தை பார்க்க...
 
 
அவனும் அதிர்வும் குழப்பமுமாக அபய்யை தான் புரியாத பார்வை பார்த்தப்படி நின்று கொண்டு இருந்தான். என்ன செய்வது எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் விழித்தவள், ‘என்ன நடந்தாலும் அபய்யை யார் என்றே தெரியாது எனச் சமாளித்து விட வேண்டும்... ரோஹித்திற்கு மட்டும் என் கடந்த கால வாழ்க்கை தெரிந்தது அவ்வளவு தான், நான் செத்தேன்...’ என்ற ரீதியில் யோசித்தவள்,
 
 
‘அவன் அப்படி அழைத்து குழந்தையை என்று சொல்லி சமாளித்துவிடலாமா...?’ எனச் சட்டெனத் தோன்றிய எண்ணத்தோடு, திரும்பி அபய்யை பார்க்க... அந்த விடாகண்டனோ மிருவிற்கு அந்த வாய்ப்பை கூட அளிக்காமல் அவளையே இமைக்காமல் பார்த்தப்படி நின்று கொண்டு இருந்தான்.
 
 
அதில் இருந்த ஒரு வாய்ப்பும் தவறிப் போனதில் ‘வடை போச்சே’ என்பது போல மிரு முழிக்க, அதற்குள் அபய் “ஹொவ் ஆர் யூ மினி டார்லிங்...” என வேறு கேட்டு இருந்தான்.
 
 
அபய்யின் வாய் மொழியில் விளிக்கப்படும் இந்த மினி டார்லிங் என்ற வார்த்தைகளுக்காக ஒரு காலத்தில் காத்திருந்ததும், அப்படி அவன் விளிக்கும் போது வண்ணத்துப் பூச்சியைப் போல் அவன் முன் சென்று நிற்பதும் மனதில் நிழலாட, அதற்கு நேர்மாறான இன்றைய நிலையின் நிதர்சனம் புரிய, மிரு பதில் அளிப்பதற்குள்
 
 
ரோஹித், “மினி... சாரி இவங்க மினி இல்லை மிர்னா...” என நீ யாரையோ நினைத்துக் கொண்டு தவறாகப் பேசறீங்க என்று அபய்யிடம் விளக்கம் அளிக்க முயன்றான்.
 
 
‘அட விளக்கெண்ணெய்... ஆளு தான் மீசை தாடியெல்லாம் இல்லாம சும்மா நெய் குழந்தை மாதிரி இருக்கான்னு பார்த்தா... ஆளும் பச்சை புள்ளையா இருக்கியேடா...!!’ என மனதிற்குள் ரோஹித்தை கழுவி ஊற்றியவன் பதில் அளிப்பதற்குள், ரோஹித் எடுத்துக் கொடுத்த பாயிண்ட்டை பிடித்துக் கொண்ட மிரு,
 
 
“எஸ்... நீங்க வேற யாரையோ நினைத்து என்கிட்டே பேசறீங்கன்னு நினைக்கறேன் மிஸ்டர்...” எனவும், “எக்சாட்லி... நானும் அதைத் தான் அவருக்குப் புரிய வைக்க நினைத்தேன் பேபி...” எனக் கூறியவாறே ரோஹித் மிருவை பார்த்து புன்னகைத்தான்.
 
 
அவனின் அந்தப் பேபி என்ற அழைப்பு மேலும் அபய்யை கடுப்பாக்க, “நோ... நோ... ஷி ஸ் மை லவ்... இது லவ்வர்ஸ் கோரல், உங்களுக்குப் புரியாது... மேடம் என் மேல கோபமா இருக்காங்க, அதான் என்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்றாங்க... டோன்ட் வொர்ரி நான் பார்த்துக்கறேன்... நீங்க கொஞ்சம் அப்படி ஓரமா ஒதுங்கி நின்னு வேடிக்கை பாருங்க... மேடம் வாயாலேயே ஒத்துக்க வைக்கறேன்...” என்றவன் மிருவை நோக்கி இரண்டடி எடுத்து வைக்க,
 
 
மிரு இரண்டடி பின்னால் நகர்ந்தால் மிரட்சியோடு, அபய்யை பற்றி நன்கு அறிந்தவள் என்பதால் அவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டால் அதிலிருந்து பின்வாங்க வைப்பதோ சமாளிப்பதோ அவ்வளவு எளிதல்ல என்பது புரிய, இப்போது ஏன் இந்த அதிரடி என்று புரியாமலும் எப்படித் தப்பிப்பது எனத் தெரியாமலும் வேறு வழியின்றி ரோஹித்தை பார்த்தாள்.
 
 
அதுவரை இருவரையும் குழப்பத்தோடு மாறி மாறி பார்த்தப்படி நின்றிருந்த ரோஹித் “பாஸ்... வெய்ட், வெய்ட்... வாட், லவ்வர்ஸா... ஹா ஹா ஹா...” என வாய் விட்டு சிரித்தவன், “அப்போ நிச்சயமா இந்தப் பீஸ் நீங்க நினைக்கற ஆள் இல்லை... அதுக்கு நான் கேரண்டி, பிகாஸ் மேடமுக்கு லவ்னாலே பிடிக்காது...” எனப் பேசிக் கொண்டு சென்றான்.
 
 
பின் மிருவின் பக்கம் திரும்பி “அது என்ன சொல்லுவ அடிக்கடி, “ஆஹான்... லவ் எனக்கு ஆல் லாங்குவேஜ்லையும் பிடிக்காத ஒரே வார்த்தை... ஆஆங்ங்...” எனக் கூறி சிரித்தான்.
 
 
‘இப்போ இது ரொம்ப முக்கியம், நீ தனியா வா...’ என மனதிற்குள் பல்லைக் கடித்தப்படி ரோஹித்தை அர்சித்துக் கொண்டு நின்றிருந்தாள் மிரு.
 
 
“ஒன்பது வருஷமா இவ கூட இருக்கேன் பாஸ்... என் லவ்வை சொன்ன அன்னைக்கு விட்டா பாருங்க ஒரு அடி, இப்போ வரை வலிக்குது... அதுல இருந்தே நான் டூ ஸ்டேப் பேக் தான்...” எனக் கன்னத்தைத் தடவியபடி பேசியவனை முறைத்த மிரு, ‘இவன் வேற மானத்தை வாங்கறான்...’ என எண்ணினாள்.
 
 
“ஆனா அப்பவும் நீங்க விலகினது போலத் தெரியலையே...?!” என அபய் ஒரு மாதிரியான குரலில் ரோஹித் கையில் இருந்த சுபிக்ஷாவையும், அவனை நெருங்கி நின்றிருந்த மிருவையும் பார்த்தப்படி கேட்கவும், “அதெப்படி சார் விலக முடியும், ஐந்து வருஷ காதலாச்சே... இவ கைல கால்ல விழுந்து சம்மதம் வாங்கறதுக்குள்ள எங்க ஸ்டேரைட்டா அறுபதாம் கல்யாணம் தானோன்னு நான் நினைச்சுப் பயந்தது எனக்குத் தானே தெரியும்...” என்றவன்,
 
 
சற்று தயங்கி “உங்களை ஒண்ணு கேட்கலாமா சார்...?” எனவும், “ம்ம்..” என அபய் ஆமோதிக்க, “நீங்க அபய்வரகுணன்... அம் ஐ ரைட்...” என ஒரு வித தயக்கத்தோடு கேட்க, “இதைக் கேட்கவா இவ்வளவு யோசிச்சிங்க... எஸ், ஐ ம் அபய்... ப்ளீஸ் டூ மீட் யூ...” எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனுக்குக் கொஞ்சமும் ரோஹித்தின் மேல் கோபம் எல்லாம் இல்லை...
 
 
மினிக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விடாதா என்ற எதிர்ப்பார்ப்பு மட்டுமே பல நாட்கள் அவன் உறக்கத்தைத் தடை செய்து கொண்டு இருந்தது. அது இன்று கண் முன் சாத்தியமாகி இருப்பதைக் கண்டு அலைபுறுதலோடு இருந்த மனம் சற்று ஆசுவாசம் அடைந்ததென்னவோ நிஜம் தான்.
 
 
ஆனால் ஏதோ ஒன்றை தவறவிட்டது போன்ற ஒரு தவிப்பும் மனம் முழுவதும் படரத் தொடங்கி இருந்தது. இப்போதைக்கு அதைப் பற்றி எல்லாம் எண்ணாமல் ஓரம் தள்ளியவன், அங்கிருத்து நிச்சயம் விலகி தான் சென்று இருப்பான்.
 
 
அவள் வாழ்க்கைக்கு இடயூறாகவோ தடையாகவோ இருந்து விடக் கூடாது என்று..! ஆனால் அது அவனின் மினி குறைந்த பட்சம் அவனைக் கண்டதும் ஓடி வந்து பேசும் அளவிற்கு இப்போது இருவருக்குள்ளும் சூழ்நிலை சரி இல்லை என்றாலும், இயல்பாக ஒரே ஒரு பார்வை பார்த்திருந்தாலுமே போதும், அவள் வெளிப்படுத்திய அந்த அந்நிய பார்வை தான் அவனைப் பெரிதும் சீண்டிவிட்டது.
 
 
அதுவே அவளின் கண்களைச் சில நொடிகளாவது தன்னைப் பயத்தோடும் பதட்டத்தோடும் பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் தர, அதை உடனே செயல்ப்படுத்தினான்.
 
 
இது தான் அபய், தனக்குத் தோன்றுவதை வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் செயல்ப்படுத்துவான்.
 
 
சிறு குழந்தைகள் தனக்கு மிகவும் பிடித்த பொம்மையைச் சற்று வளர்ந்த பிறகு விளையாடாமல் அப்படியே வைத்து இருப்பர், சில வருடங்களில் வீட்டில் இருப்பவர்கள் வேறு யாருக்காவது கொடுத்து அதை அவர்கள் கையில் வைத்து விளையாடுவதைப் பார்க்கும் போது தன்னை மீறி அதன் மேல் உரிமை உணர்வு எழுமே...!!
 
 
அது போலத் தான், தான் பிரிந்து விட்டோமே அவள் வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும், என நினைத்தவன் தான். ஆனால் தன் பொருள் கை விட்டு போனதன் வலி இன்னும் அவனுக்கு மனதில் பதியவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் இப்போது அமையவில்லை, எனவே சாதரணமாகப் பேசி விட்டு செல்லவே முனைந்தான்.
 
 
இல்லை நல்லவேளை இதுவரை அப்படி ஒன்றை அபய் உணரவில்லை என்று நினைக்க வேண்டுமோ...? ஒருவேளை உணர்ந்து இருந்தால் சற்றும் யோசிக்காமல் மிருவை தூக்கிக் கொண்டு சென்றாலும் சென்றுவிடுவான்.
 
 
ஒரு சிறு அறிமுகத்திற்குப் பிறகு விடைப் பெற முயன்றவனை, “பாஸ் உங்க மினி...” எனத் தயக்கத்தோடு ரோஹித் இழுக்கவும், நக்கலான ஒரு பார்வையை மிருவை நோக்கி நொடிக்கும் குறைவான நேரம் பார்த்தவன்,
 
 
“நிச்சயம் இவங்க இல்லை...” எனப் பதிலளிக்க, “எப்படிச் சார் கண்டுபிடிச்சீங்க...?” என ஒரு ஆர்வத்தில் ரோஹித் கேட்டுவிட, ‘இப்போ அது ரொம்ப முக்கியம்...’ என்று மனதிற்குள் பல்லை கடித்தபடி நின்றிருந்தாள் மிரு.
 
 
இருவரும் பேசபேச, அவளுக்குத் தான் ரத்த அழுத்தம் எகிறியது. ஏனென்றால் அபய்யை பற்றி நன்கு தெரிந்தவள் என்பதால் அவன் எப்போது எப்படி நடந்து கொள்வான் என ஒரு முடிவுக்கு வர முடியாது என்று அறிந்து இருந்தவள்,
 
 
‘இதற்கு மேல் இவன் எதையும் பேசி சொதப்பிடும் முன் கிளம்பிவிட்டால் நல்லது’ என நினைத்து இருக்க, மிருவின் மனதின் தவிப்பை உணராது ரோஹித் மேலும்மேலும் அபிய்யிடம் பேச்சு கொடுத்துக் கொண்டு இருந்தான்.
 
 
“அது தான் இவங்க இல்லைன்னு தெரிஞ்சிடுச்சே அப்பறம் டிடேயில் எதுக்கு, வேண்டாம் விடுங்க...” எனக் குறும்பாகக் கூற, “எப்படின்னு ஒரு ஆர்வம் தான் சார்...” தெரிந்தே ஆக வேண்டும் போலக் குரலில் ரோஹித் கூற,
 
 
“ம்ம்... ஒகே...” எனத் தன் தோள்களை அசால்டாகக் குலுக்கியவன், மிருவின் மேல் தன அழுத்தமான பார்வையைப் பதித்தப்படி நெருங்க, மிருவிற்கு மனம் தடதடக்கத் துவங்கி இருந்தது. ‘இப்போ என்ன சொல்லப் போறானோ...?!’ என்ற கேள்வியோடு அவனைப் பார்த்தவளுக்கு அப்போது தான் அபய்யின் பார்வை தன் இதழின் மேல் நிலைத்து இருப்பது தெரிந்தது.
 
 
அதன் பின் மூச்சு விடக் கூட மறந்து துடிக்கும் தன் இதழ்களைக் கட்டுப்படுத்த போராடியவள், பற்கள் கொண்டு கீழ் உதட்டை கடித்து தன் பதட்டம் வெளியே தெரியாமல் மறைக்க முயல, அவளின் முயற்சியை நொடியில் கண்டு கொண்டவனுக்கு இதுவே போதுமானதாக இருக்க,
 
 
“இதோ இந்த ஆரஞ்சு பழத்தை வெட்டி வெச்சது போல இருக்கே இந்த லிப்ஸ் தான் காட்டிக் கொடுத்தது வித்தியாசத்தை, என் மினிக்கு அப்படியே செரி பழ நிறத்தில் அதே பளபளப்போடு இருக்கும்...” என்ற சத்தமாகக் கூறியவன், “சுவையும்...” என்றான் மெல்லிய முணுமுணுப்போடு அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்...!
 
 
ரோஹித்துமே இந்தப் பதிலை எதிர் பார்க்கவில்லை என்பதால் இதற்கு என்ன பதிலளிப்பது எனத் தெரியாமல் திகைத்து நிற்க, அதற்குள் தன்னை மீட்டுக் கொண்ட மிரு, “கிளம்புவோமா...?” என அபய்யின் மீதான தன் ஒட்டு மொத்த கோபத்தையும் வார்த்தைகளில் காண்பித்தவள், ரோஹித்தை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
 
 
நகர்வதற்கு முன் அபய்யை ‘நீயெல்லாம் திருந்தவே இல்லையா...?!’ என்பது போல ஒரு வெறுப்பான பார்வை பார்த்து விட்டு செல்ல, அவனோ அதற்க்கெல்லாம் அசருபவனா என்ன...?! அசால்ட்டாக மிருவை பார்த்துக் கண்சிமிட்டினான்.
 
 
மூவரும் அங்கிருந்து செல்வதையே பார்த்தப்படி நின்றிருந்த அபய்யின் கண்களில், அப்போதே ரோஹித் தோள்களில் தொத்தியபடி அவன் கழுத்தை கட்டி கொண்டு தன்னையே பார்த்தப்படி செல்லும் சுபிக்ஷா பட, அவளை நோக்கி யோசிக்காமல் ஒரு பறக்கும் முத்தத்தைப் பறக்கவிட்டான்.
 
 
ஏனோ அவர்கள் இருந்த வரை தெரியாத ஒரு தனிமை உணர்வும் ஏக்கமும், அவர்கள் விலகிய அடுத்த நொடி மெல்ல படர தொடங்கி இருந்தது.
 
 
தன் அறையை நோக்கி நடக்கத் தொடங்கியவனை ஓட்டமும் நடையுமாக வந்து எதிர் கொண்டான் விக்டர். அபய்யின் அந்தரங்க உதவியாளன், அபய் கையால் இட்ட வேலையை தலையால் செய்து முடிப்பவன், கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக அபய்யோடு இருப்பவன்,
 
 
அபய் ஒன்றும் இறுக்கமானவனோ உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாதவனோ கிடையாது. எப்போதும் அவன் இருக்கும் இடம் கலகலப்பிற்குப் பஞ்சம் இல்லாமல் இருக்கும், ஆனால் அவனையும் எப்போதும் கலகலப்பாக வைத்து இருப்பது விக்டர் தான்.
 
 
இந்த ஒரு குணத்திற்காகவே அவனைத் தன்னோடு சேர்த்துக் கொண்டான் அபய். தன் தனிமையை விரட்ட, அனைவரும் இருந்தும் யாருமற்று இருப்பது அத்தனை எளிதல்ல.
 
 
கிட்டதட்ட பத்து வருடங்களாக அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பவனுக்குத் தவிர்க்க முடியாத சில நேரங்களில் தன்னைச் சார்ந்தவர்களை மனம் தேடும், அந்தத் தவிப்பை கூட வெளிகாட்டிக் கொள்ள விரும்பாதவன் அதைத் தனக்குள் மறைத்துக் கொண்டு இன்னும் அதிகமாக அந்த நேரங்களில் வேலையில் மூழ்கி விட முனைவான்.
 
 
ஆனால் அபய்யின் நிழலாக இருப்பவனுக்குப் புரியாதா அவன் மனது. மெல்ல தன் குரங்கு சேட்டையும் கோணங்கி தனமுமான செயல்களால் அபய் மனதை திசை திருப்பித் தொடர்ந்து தன்னைத் திட்டுவது போல எதையாவது செய்து, அதில் அவனைப் பிஸியாக்கி விடுவான்.
 
 
அபய்க்கும் விக்டரின் இந்தச் செயல் தெரிந்தாலும், தெரிந்து கொண்டது போலக் காண்பித்து கொள்ள மாட்டான். ஆனால் அவன் மேல் உள்ள பிடித்தம் இன்னும் அதிகமாகும்.
 
 
இப்போது கூடத் தான் கொடுத்த வேலையைச் செய்து முடிக்கத் தான் சென்று விட்டு வந்து இருக்கிறான் எனத் தெரிந்தாலும், “வாங்க சார்... நான் வந்து பன்னிரண்டு மணி நேரம் ஆகுது... இப்போ தான் என்னைப் பார்க்க உங்களுக்கு டைம் கிடைத்ததா...?!” என வம்பிழுத்துக் கொண்டே நடந்தான்.
 
 
“ஏன் கேக்க மாட்டீங்க... பாஸா இருக்கறது ரொம்ப ஈஸி ஜி... ஆனா அவருக்குப் பிஎவா இருக்கறது அவ்வளவு ஈஸி இல்லை தெரிஞ்சுக்கோங்க... அது நெம்பக் குஷ்டம், இங்க தொழில் தொடங்க போற நீங்க கூட இன்னைக்குத் தான் வந்து இருக்கீங்க... உங்களுக்கு வாக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக இந்த வேலையைப் பார்க்க நான் இங்கே வந்து இருபது நாள் ஆகுது... என்னைப் பார்த்து, இந்தக் கடமை கண்ணாயிரத்தை பார்த்து ரொம்ப அசால்டா கேக்கறீங்க கேள்வி...” என மாடுலேஷனோடு பேசியவன்,
 
 
“என்னை என்ன உங்களைப் போல உட்கார்ந்த இடத்தில இருந்து ஈஸியா வேலை பார்க்கற ஆளுன்னு நினைச்சீங்களா...? பறந்து பறந்து பல வேலைகளை செய்றவன், இதுல நடுவுல நடுவுல பொதுச் சேவை வேற...” எனத் தன் புகழை பாடியப்படி வந்து கொண்டு இருந்தவனை, அபய் நக்கலாக ஒரு பார்வை பார்த்தவன், “யாரு நீ பொதுச் சேவை...” என்றான்.
 
 
லிப்ட்டில் இருந்து வெளியே வந்து கொண்டு இருந்தவனின் முன் வந்து வழி மறிப்பது போல நின்றவன், “நம்பலையா நீங்க..?” எனவும், “வழியை விடுடா...” என அதற்குப் பதில் அளிக்காமல் தன் அறையை நோக்கி சென்றவனின் பின்னால் ஓடியவன்,
 
 
“நிஜம் பாஸ்... நானும் சேவை எல்லாம் செய்வேன்...” என்றான் என்னை நம்புங்க என்பது போன்ற பாவமான குரலில், “எது இந்த சாப்பிடற சேவை தானே... அதாவது நல்லா இருக்குமா..? இல்ல, அதுவும் நீ செய்யற வேலை போல தான் இருக்குமா...?!” என்றான்.
 
 
அதில் அழும் பாவனையோடு முகத்தை வைத்து கொண்டு, “பாஸ்ஸ்ஸ்..” என்றான் விக்கி. அதற்குள் தன் அறைக்குள் நுழைந்தவன், “சரி, சரி... அழாதே, நம்பறேன்... என்ன செஞ்ச... இன்னைக்கு நீ எந்தக் குழந்தைகிட்ட இருந்தும் ஸ்நாக்ஸ் பிடுங்கி சாப்பிடலையா...?!” என்றான்.
 
 
“பாஸ்... நான் எவ்வளவு பெரிய காரியம் செஞ்சுட்டு வந்து இருக்கேன்... நீங்க இப்படி கலாய்க்கறீங்க...” என முகத்தைத் தூக்கியவன், “ஒரு பெண்ணோட வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுத்துட்டு வந்து இருக்கேன்...” என்றான்.
 
 
அதில் இரு புருவத்தையும் வியப்பாக உயர்த்தியவன், “எங்க...? என்ன ஆச்சு...? ஏதாவது அக்ஸிடன்ட்டா...” எனக் கேட்க, “அதெல்லாம் இல்லை பாஸ்... பேங்க்ல தான்...” என்றவன், “இருங்க இருங்க... திருட்டு, கொள்ளை எல்லாம் எதுவும் இல்லை...” என அவனே சேர்த்து சொன்னான்.
 
 
‘அப்போ வேறென்ன...?!’ என்பது போலப் பார்த்து இருந்தவன், வாயை திறந்து எதுவும் கேட்கவில்லை. “என்னன்னு கேட்டா என்னவாம்...? பொறாமை...” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தவன்,
 
 
“இன்னைக்கு மதியம் பேங்க்ல ஒரு லேடி டெபாசிட் செய்ய வந்து இருந்தாங்க... அவங்களுக்கு என்ன ப்ரேச்சனையோ இல்லை யாருக்கு என்ன தேவையோ பாவம், அவங்க வீட்டுக்காரரை டெபாசிட் செய்ய முயற்சி செஞ்சாங்க...” எனக் கதை சொல்லி கொண்டு இருக்க,
 
 
“ஹே... அவங்க வீட்டுக்காரருக்கு டெபாசிட் செய்ய வந்தாங்களா...?” என இடையிட்டவனைப் போலியாக முறைத்தவன், “என்ன பார்த்தா அவ்வளவு முட்டாள் போலவா இருக்குப் பாஸ்... அந்தம்மா அவங்க வீட்டுக்காரரை தான் டெபாசிட் செஞ்சுது பாஸ்...
 
 
ONE HUSBAND AND EIGHTY RUPEES ONLYன்னு எழுதி வெச்சிட்டு எனக்கு முன்னாலே தான் லைன்ல நின்னுக்கிட்டு இருந்தது... பார்த்ததும் பாவமா போச்சு... அதான் அக்கா உங்களுக்கு என்ன ப்ரச்சனைன்னு எனக்குத் தெரியலை, ஆனா ஒரு தம்பியா நினைச்சு சொல்றேன்...
 
 
உங்க வீடுகாரரை டெபாசிட் செய்றதுக்குப் பதிலா அடகு வெச்சா இன்னும் லாபம் அதிகம், சரி ஒரு வீட்டுகாரரை தான் டெபாசிட் செஞ்சிட்டீங்க... மத்தவங்களையாவது என்ன செய்யறதுன்னு நல்லா யோசிச்சு முடிவு செய்ங்கன்னு சொல்லிட்டு வந்தேன்...” எனச் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல அபய்யோ புரை ஏறும் வரை வெடித்துச் சிரித்துக் கொண்டு இருந்தான்.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 580
Topic starter  
 
உயிர் – 3
 
அபய் சிரித்துக் கொண்டே இருந்ததில் முகமெங்கும் சிவந்து போய்க் காட்சியளித்தவனை ஒரு தாயின் வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தான் விக்டர்.
 
 
சற்று நேரத்திற்கு முன் ரெஸ்டாரண்டினுள் இருந்து வெளியில் வந்தவனின் முகத்தில் சிந்தனை ரேகைகளைக் கண்ட நினைவு விக்டருக்கு வந்து போனது.
 
 
அதை மாற்ற எண்ணியே அபய்யிடம் பேசியவன் இப்போது அவனின் முகத்தில் பூத்த புன்னகையைக் கண்டு அமைதியானான். (நல்ல வேலை பாஸ்க்குப் பார்வேர்ட் மெசேஜ்ஸ் படிக்கற பழக்கம் இல்லாததால நான் தப்பிச்சேன்... இதை வெச்சு தான் என் பொழப்பு ஓடுதுன்னு அவருக்குத் தெரியாம பார்த்துக்கணும்...)
 
 
“கே பாஸ்... எனக்கு நேரமாச்சு உங்களுக்கு நான் இருக்கறது போல எனக்கு வேலை செய்ய யாரும் இல்லை... நான் தான் என்னோட வேலைகளைச் செஞ்சு ஆகணும், காலையில் சீக்கிரம் எழுந்திருக்கணும் நான் போய்த் தூங்க போறேன்...” என்றபடியே கதவை திறந்தவனை நிமிர்ந்து பார்த்த அபய், எதிரில் தெரிந்த காட்சியில் ஒரு கணம் அப்படியே அசையாது இமைக்காமல் கூடப் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
 
இவர்களுக்கு எதிரில் இருந்த அறையின் கதவை சரியாக அதே நேரம் திறந்து கொண்டு இரவு உடையான ட்ராக் பாண்ட் டி-ஷர்ட் அணிந்திருந்த ரோஹித் கையில் இருந்த போனில் யாருடனோ பேசியபடி வெளியே வருவதும் அவன் பின்னே சுபிக்ஷா ஓடி வருவதும் தெரிந்தது.
 
 
இவர்கள் இருவரையும் புன்னகையும் வாஞ்சையுமாகப் பார்த்தபடி இரவு உடையுடன் மிர்ணா நின்று கொண்டிருப்பதும் தெரிய, ‘இவங்க இங்கே தான் இருக்காங்களா...?’ என, எதிர் அறையிலேயே இருப்பார்கள் எனக் கொஞ்சமும் எதிர்பார்த்திராதவன் மனதிற்குள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டான்.
 
 
கையில் இருந்த அலைபேசியில் கவனமாக ரோஹித் நடந்து சென்று விட, அவன் பின்னால் பேண்ட்டை பற்றியபடி நடந்து கொண்டிருந்த சுபிக்ஷா, எதிர் அறையில் இருந்த அபய்யை கண்டப்படியே இரண்டடி முன்னால் நடந்தவள், ரோஹித்தின் கால்களைத் தாண்டி மீண்டும் மெல்ல எட்டிப்பார்க்க, அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் அபய்.
 
 
அவர்கள் கண்ணில் இருந்து மறைந்த பிறகே பார்வையைத் திருப்பியவனுக்கு அப்போதே மினி தன்னைப் பார்த்தபடி நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
 
 
இருவரும் சில நொடிகள் நேருக்கு நேராக எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தாத பார்வையோடு பார்த்துக் கொண்டிருக்க, முதலில் முகத்தைத் திருப்பிக் கொண்டு கதவை அடைத்து இருந்தாள் மிர்னா.
 
 
அபய் தொழில் தொடங்கப் போவது டெல்லியில் அல்ல, மும்பையில் அங்கே தான் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதேபோல அவன் தங்குவதற்கான வீடும் மிகப் பிரம்மாண்டமாகக் கோடிகளில் புரளுபவர்கள் மட்டுமே தங்கும் பகுதியில் தயாராகக் காத்திருந்தது அபய்யின் வரவிற்காக...
 
 
டெல்லியில் தொழில் சம்பந்தப்பட்ட ஒரு பேச்சுவார்த்தையை முடிக்கவும், அரசாங்கத்திடம் சில ஒப்புதல்களை வாங்குவதற்காகவுமே ஒரு வாரம் இங்குத் தங்கும் திட்டத்தில் வந்திருந்தான் அபய்.
 
 
இப்போது எண்ணிப் பார்க்கையில் மினியும் இங்கு அறை எடுத்து தங்கி இருப்பதைக் கண்டவனுக்கு அவளும் இந்த ஊரில் வசிப்பவள் இல்லை என்பது தெளிவாக, அடுத்து எங்கு இருக்கிறாள் என்ன செய்கிறாள் என அறிந்து கொள்ள எண்ணம் சென்றது.
 
 
அவன் நினைத்தால் அதை அரை மணி நேரத்தில் தெரிந்து கொள்ள முடியும், இருந்தாலும் சரியாகச் சென்று கொண்டிருக்கும் அவள் வாழ்க்கையில் தன்னால் எந்த வித குழப்பமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணியவன் அந்த எண்ணத்தைக் கைவிட்டவனாக அடுத்தடுத்து தன் வேலைகளைப் பற்றிச் சிந்திக்கத் துவங்கி இருந்தான்.
 
 
மிர்னா வளர்ந்து வரும் மிகச் சிறந்த ஆடை வடிவமைப்பாளர், ஹிந்தி திரைப்பட உலகில் இரண்டு வருடங்களாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவள். அதற்கு முன்பு ஃபேஷன் ஷோக்கள் விளம்பரப் படங்கள் என்று அதில் மட்டும் தன் முத்திரையைப் பதித்துக் கொண்டிருந்தவளை இரண்டு வருடங்களுக்கு முன்பு அவள் பொறுப்பேற்று நடத்திய ஒரு பெயர் சொல்லும் அளவிலான மிகப்பெரிய ஃபேஷன் ஷோ வேறு தளத்திற்குக் கொண்டு சென்றிருந்தது.
 
 
அந்த ஷோவில் வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம் என்ற நிலை இருக்க, அதில் அணிவகுத்த அனைவருக்கும் ஆடை வடிவமைத்தாள் மிர்னா. அதோடு மட்டுமல்லாமல் ஷோஸ்டாப்பராக நடை பயின்ற இந்தி திரை உலகின் கனவுக் கன்னி என்று அனைவராலும் பாராட்டப்படும் சுஷ்மா ராவ் என்ற பிரபலமான நடிகைக்கு ஆடை வடிவமைக்கும் வாய்ப்பு மிர்னாவுக்கு அமைந்தது.
 
 
தனக்குக் கிடைத்த வாய்ப்பை எப்போதும் போல மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள் மிரு. தன் பல வருட கனவு நினைவாவதற்கான வாய்ப்பை தவற விட அவள் தயாராக இல்லை.
 
 
அதில் தன் திறமை அனைத்தையும் காட்ட, அந்த ஷோ அப்படிப் பிரபலமடைந்தது. அதே போல அவளின் ஆடை வடிவமைப்பும் பிரபலமாகத் தொடங்கியிருந்தது.
 
 
அந்த ஷோவில் சுஷ்மா அணிந்திருந்த ஆடை அவளுக்கு மிகவும் பிடித்துப் போக, அந்த மாதம் நடைப்பெற இருந்த விருது வாங்கும் விழாவிற்குத் தனக்கென்று பிரத்யேகமாக ஒரு ஆடையை வடிவமைத்துக் கொடுக்கச் சொல்லி மிர்னாவிடம் கோரிக்கை வைத்தாள் சுஷ்மா.
 
 
அதன்படி வெகுவாக அக்கறை எடுத்து தன் தொழில் மேல் எப்போதும் இருக்கும் காதலால் மிர்னா வடிவமைத்துக் கொடுத்த ஆடை, அந்த வருடத்திற்கான மிகப் பெரிய விருது வழங்கும் விழா எந்த அளவிற்குப் பேசப்பட்டதோ அதே அளவிற்குச் சுஷ்மா அணிந்திருந்த ஆடையும் பேசப்பட...
 
 
அதன்பிறகு இதுவரை யாரும் மிர்னாவை திரைப்படத்துறையில் பயன்படுத்தவில்லை என்பதை அறிந்து கொண்ட சுஷ்மா, தனக்கெனப் பிரத்தியேக வடிவமைப்பாளராக மிர்னாவை நியமித்துக் கொண்டாள்.
 
 
சுஷ்மாவுக்கு என்று ஒரு தனிப் பெயரும், ரசிகர் வட்டமும் எப்போதும் உண்டு என்பதால் அவள் கேட்பதை செய்து கொடுக்கத் தயாரிப்பாளர் பக்கம் எப்போதும் தயாராகவே இருந்தார்கள்.
 
 
இப்போது சுஷ்மாவிற்காகத் திரைப்படங்களில் மிர்னா ஆடை வடிவமைப்பாளராக இரண்டு வருடங்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். இப்போதும் கூட ஒரு படப்பிடிப்புச் சம்பந்தமாகத் தான் அனைவரும் இங்கு வந்து தங்கி இருக்கின்றனர்.
 
 
இது ஒரு ராஜா காலத்து கதை, அதில் இளவரசியாகச் சுஷ்மாவை உருமாற்றிக் காட்டிக் கொண்டிருந்தாள் மிர்னா. அவளின் கை திறமையினால் இந்தப் படம் நிச்சயம் மிர்னாவின் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைய அத்தனை சாத்தியங்களும் கொண்டு இருந்தது.
 
 
படப்பிடிப்புத் தளத்திலேயே கூட உடன் பணிப்புரிபவர்களால், ஒவ்வொரு காட்சிக்கும் அதற்கெனத் தனித் தீம் வைத்து அவள் வடிவமைத்து கொடுத்த ஆடைகளும் அணிகலன்களும் மிகப் பெரிய பாராட்டுதல்களைக் குவித்துக் கொண்டு தான் இருந்தன.
 
 
அந்தப் படப்பிடிப்புச் சம்பந்தமாகத் தான் படக்குழுவினர் அனைவரும் இந்த ஹோட்டலில் தங்கி இருக்கின்றனர். அதிலும் அபய் தங்கி இருக்கும் அதே தளத்தில் கதையின் நாயகன் நாயகி இயக்குனர் தயாரிப்பாளர் என அனைவரும் இருப்பது அவன் அறியாத ஒன்று.
 
 
மறுநாளில் இருந்து ரோஹித்தும் சுபிக்ஷாவும் அவன் கண்களில் படவே இல்லை. அவ்வப்போது மினி எதிர் படுவதோடு சரி, ஆனால் அபய்யும் அவளைக் கண்டுக்கொள்ளவில்லை... அவளும் அதே போலத்தான்.
 
 
தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு அவரவர் வழியில் சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இந்தி திரைப்பட உலகின் பெயர் சொல்லக்கூடிய அளவில் பெரிய மனிதராக இருக்கும் முகர்ஜி அபய் .இந்த ஹோட்டலில் தங்கி இருப்பதை அறிந்து அவனைச் சந்திப்பதற்கு நேரம் கேட்க, முதலில் அவர் யார் எனத் தெரியாமல் தயங்கிய அபய், விக்டர் கூறியதற்குப் பிறகு ‘பெயர் சொல்லும் அளவிலான ஒரு பெரிய மனிதரை தேவையில்லாமல் மனம் நோக செய்ய வேண்டாம்...’ என்ற எண்ணத்தில் அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கினான்.
 
 
ஆனால் அதன்பிறகு எதற்காக நேரம் கொடுத்தோம் என நொந்து போகும் அளவிற்கு அவனைப் படுத்தி எடுத்துவிட்டார் அவர். எப்படியாவது அவனை திரைத்துறையில் முதலீடு செய்ய வைத்துத் தனக்குத் தொழிலில் பங்குதாரராக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது போன்ற ரீதியிலேயே இருந்தது அவர் பேச்சு.
 
 
திரைத்துறையைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது இந்தத் துறையில் ஆர்வம் இல்லை என்றெல்லாம் நாசூக்காக அபய் எவ்வளவோ தடுத்து பார்த்துவிட்டான்.
 
 
ஆனால் அபய்யின் பெயர், புகழ், வசதி பற்றி நன்கு அறிந்திருந்தார் என்பதால் அத்தனை எளிதாக அவரால் அபய்யை விட்டு விட முடியவில்லை. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இடையிடையே வந்தும், அபய்யைக் காணும் இடங்களில் எல்லாம் இதையே மறைமுகமாகவும் நேரடியாகவும் பேசிக்கொண்டிருந்தார் முகர்ஜி.
 
 
அப்போது கூட அபய்க்கு இவரிடம் தான் மிர்னா பணி புரிவது என்று எல்லாம் தெரியாது. இப்படியே ஒரு வாரம் கடந்திருந்தது, கடைசிக் கட்ட படப்பிடிப்பிற்காக வந்து இருந்தவர்களின் பணி 95 சதவீதம் முடிவடைந்த நிலையில் மிச்சம் இருக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர் அவரவர் துறையைச் சார்ந்தவர்கள்.
 
 
அன்று காலை தொழில் துறை மந்திரியை சந்திப்பதற்காக அபய்யும் விக்டரும் ஹோட்டலில் இருந்து வெளிவரும் பாதையில் நடந்து வந்து கொண்டிருக்க...
 
 
எதிராக மிர்னாவும் மற்றொரு அழகிய மங்கையும் ஹோட்டலுக்குள் வந்து கொண்டிருந்தனர். கிட்டதட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கிறான் அபய்.
 
 
முட்டியை விடச் சற்று நீண்டிருக்கும் முக்கால் பேண்ட் எனப்படும் ஜெக்கிங்ஸ் வகைப் பேண்ட்டும், இளம் மஞ்சள் நிறத்தில் பனியன் துணியும் வலை துணியும் இணைந்தது போன்று ஒரு தோற்றத்திலான கையில்லாத மேலாடையும் அணிந்து, கொண்டை என்றும் சொல்ல முடியாத தலை விரித்து விடப்பட்டு இருக்கிறது என்றும் கணிக்க முடியாத வகையிலான ஒரு வகையான கலவையான தலை அலங்காரத்தில் மிகப் பெரிய கருப்பு நிற வளையங்கள் காதில் ஆட என வந்து கொண்டு இருந்தவளை இதுவரை அபய் இப்படி ஒரு தோற்றத்தில் பார்த்திராததால், எதிரில் வந்து கொண்டிருந்தவளை எதேச்சையாகப் பார்த்தவனின் கண்கள் அதன் பிறகு அவள் மேல் இருந்து நகர மறுத்தது.
 
 
வெகு அலட்சியமாக அவள் ஆடை அணிந்து இருப்பது போன்று தோன்றினாலும் அது அவளுக்கு அத்தனை வாகாகவும் பாந்தமாகவும் அழகாகவும் பொருந்தியிருந்தது. அதிலும் அந்த மேலாடைக்கும் அவள் அணிந்திருந்த பேண்ட்டும் இடையே இரண்டு இன்ச் அளவிற்கு இடைவெளி இருக்க அந்த மேலாடை இடையை இருக்கப் பிடித்திருந்த பேண்ட்டை தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் அவ்வப்போது உரசி சென்று கொண்டிருந்தது. அந்த இடைவெளியில் அவளின் எலுமிச்சை நிற இடை அழகாகக் காட்சியளித்தது அபய்க்கு...
 
 
நடந்து வந்து கொண்டிருந்தவன் அப்படியே நின்று இமைக்க மறந்து அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளோ இங்கு ஒருத்தன் இருப்பதைக் கூட உணராதது போலத் தன் கூட வந்து கொண்டிருந்தவளிடம் ஏதோ பேசி சிரித்தபடியே சென்றுவிட்டாள்.
 
 
அவளையே பார்த்துக் கொண்டிருந்த அபய்க்கு ஏதோ ஒன்று உறுத்த திரும்பி தன் அருகில் நின்றிருந்த விக்டரை பார்த்தான். அவன் உறுத்தல் சரியே என்பது போலக் கண்கள் மின்ன திறந்த வாய் மூடாமல் ஆவெனப் பார்த்துக் கொண்டிருந்தான் விக்டரும். அதைக் கண்டதும் அபய்க்குக் கண்மண் தெரியாத அளவிற்குக் கோபம் பொங்கியது. ஏன் இத்தனை கோபம் என்று அவனுக்குமே தெரியவில்லை.
 
 
ஆனால் விக்டர் அப்படிப் அவளைப் பார்த்ததை மட்டும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, “விக்டர்...” எனப் பல்லைக் கடித்தபடி அபய் அழைக்கவும், அதில் தன் உணர்வு பெற்று திரும்பியவனுக்கு அபய் தன் மேல் கோபமாக இருப்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.
 
 
எப்போதும் “விக்கி” என்று அழைப்பவன் கோபமாக இருக்கும் நேரங்களில் மட்டுமே தான் இப்படி விக்டர் என்று முழுப் பெயர் சொல்லி அழைப்பான். அசடு வழிந்தபடியே திரும்பியவன் “சாரி பாஸ்” என்றபடி நடையைத் தொடர முயல,
 
 
ஆனால் அபய் நின்ற இடத்திலிருந்து நகராமல் விக்டரை உக்கிரத்துடன் பார்த்தபடி நின்றிருந்தான். அதில் மீண்டும் அபய்யை நெருங்கிய விக்கி “சாரி பாஸ்... நான் அவங்க ஃபேன் ஆகிட்டேன் பாஸ்...” என அசடு வழிந்தபடியே வாயெல்லாம் பல்லாகக் கூறினான்.
 
 
“இப்படித்தான் ஒரு பெண்ணைப் பார்க்கிறதா...?” என்று கேள்வி கேட்க, “அதான் சொன்னேனே பாஸ்... இந்தியா வந்ததுக்குப் பிறகு தான் இவங்களைப் பத்தி எனக்குத் தெரியும், பொழுது போகாம தான் அந்தப் படத்தைப் பார்த்தேன்... ஆனா அவங்க அழகு, நளினம், நடிப்பு எல்லாம் சேர்ந்து மொத்தமாகப் பிளாட் ஆகிட்டேன் பாஸ்...” கனவு உலகில் மிதப்பது போலக் கூறியவனைப் புரியாமல் பார்த்தவன்,
 
 
“அவ சினிமால நடிக்கிறாளா...?”
 
 
“ஆமா பாஸ் உங்களுக்குத் தெரியாதா...?! அவங்கதான் இப்போ கரண்ட்ல இருக்க இளைஞர்களின் கனவுக்கன்னி...” என்றவன், “சுஷ்மா ராவ்... பேருக் கூட எவ்வளவு அழகா இருக்குல்ல பாஸ்...” என்றதில், அவ்வளவு நேரம் ‘மினி திரைப்படத்தில் நடிக்கிறாளா...?!’ என்ற அதிர்வோடு நின்றிருந்தவன்,
 
 
‘அப்போதே இவன் வேறு யாரையோ பற்றிக் கூறுகிறான்’ எனப் புரிய, “ஏய் யாரை பத்தி சொல்றே...?”
 
 
“அதான் பாஸ்... இப்ப போனாங்களே ரெட் கலர் டிரஸ்ல, அப்படியே ஊட்டி தக்காளி மாதிரி...” என்று கூறியவன் அவங்கதான் இந்தி பட உலகில் நம்பர் ஒன் ஹீரோயின் பாஸ்... அவங்களுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா வயசுலயும் ரசிகர்கள் இருக்காங்க... அதுல நானும் ஒருத்தன்...” என்று பெருமையுடன் கூறிக் கொள்ள, தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது அபய்க்கு,
 
 
‘சற்று நேரத்தில் ஏதேதோ யோசிக்க வைத்து வயிற்றில் புளியைக் கரைத்து விட்டானே’ என்பது போல ஒரு போலி முறைப்பை அவனை நோக்கி செலுத்தியவன், “நட...” என்றபடியே தன் நடையைத் தொடரவும், அப்போதே ‘விக்கி சொன்ன சுஷ்மா ஒரு நடிகை என்றால் அவளோடு இத்தனை நெருக்கமாக மிர்னாவுக்கு என்ன வேலை...? இவள் யார் இங்கு...?’ என்று கேள்வி மனதில் எழ,
 
 
“கூட வந்த அந்தப் பொண்ணு யாரு...?”
 
 
“சாரி பாஸ் கூட யார் வந்தாங்கன்னு எனக்குத் தெரியாது... என் கண்கள் என் சுஷ்மாவை தவிர வேறு யாரையும் பார்க்காது... நான் இந்த விஷயத்தில் ராமர் மாதிரி...” எனத் தன் மனைவியை மட்டுமே பார்ப்பேன் என்பது போன்ற பாவனையில் கூறியவனைக் கொலைவெறியோடு பார்த்தவன்,
 
 
“இப்போ உன்னோட சுஷ்மா உடன் வந்த பொண்ணு யாருன்னும் எதுக்காக அவங்களோட இருக்கான்னும் எனக்கு அஞ்சு நிமிஷத்துல டீடெயில்ஸ் வேணும்... டீடெயில்ஸோட வந்து சேரு...” என அழுத்தமான குரலில் கூறியவன் தன் வேக நடையுடன் கார் இருந்த பக்கமாகச் சென்றுவிட்டான்.
 
 
“ஹீரோயினை பத்தி என்னை தெரிஞ்சுக்கச் சொன்னால் கூடப் பரவால்ல, கூடப் போற ஏதோ ஒரு எடுப்பு பத்தி தெரிஞ்சு எனக்கு என்ன ஆகப்போகுது...” எனப் புலம்பியவாறே ரிசப்ஷன் நோக்கிச் சென்றான். அங்கு இருந்த பெண்ணிடம் தன் நகைச்சுவை பேச்சின் மூலம் தேவையான தகவல்களைக் கேட்டு அறிந்து கொண்டு அடுத்த நான்காவது நிமிடம் அபய்யின் காரில் அவனருகில் அமர்ந்து இருந்தான்.
 
 
“கூடப் போன எடுப்பு பேரு...” என்று தொடங்கியவன், அபய் ஓர் உக்கிர பார்வையைச் செலுத்தவும், கப்பென வாயை மூடிக் கொண்டு “கூடப் போனாவங்க பேரு மிர்ணா பாஸ்... அவங்கதான் என் செல்லத்தோட காஸ்டியூம் டிசைனர்... இதில் இன்னொரு கொடுமை தெரியுமா பாஸ், என் செல்லம், டைரக்டர், புரொடியூசர் அத்தனை பேரும் நீங்க தங்கியிருக்கிற அதே ப்ளோர்ல தான் இருக்காங்க... இது முதலேயே தெரிஞ்சிருந்தா நான் எனக்கும் அதே ப்ளோர்ல ஒரு ரூம் போட்டு இருப்பேன், நமக்கு செலவா முக்கியம் பாஸ்....” சுஷ்மா இருக்கும் தளத்தில் தங்குவதே பாக்கியம் என்கிற தோரணையில் பேசிக கொண்டே சென்றவனின் மற்ற வார்த்தைகள் எதுவும் அபய்யின் காதில் விழ கூட இல்லை.
 
 
‘நான் பேஷன் டெக்னாலஜி படிக்கணும், அதில் நிறையப் புதுமையைக் கொண்டு வந்து சாதிக்கணும் மாமு...’ என்ற கண்கள் மின்ன பேசிய முகமும் கண்களும் மனக் கண்ணில் வந்து போனது.
 
 
‘உன் ஆசை நிறைவேறியது சந்தோஷமா இருக்கு மினி...’ என்று எண்ணிக் கொண்டவனுக்குப் பாவம் தெரியவில்லை, அதற்கு அவள் பட்ட துன்பங்களும் வலிகளும், ஒருவகையில் அதற்கெல்லாம் தானே காரணமாக இருந்ததும்,
 
 
மிர்னாவை பற்றி மட்டும் அறிந்து கொண்டவன் யோசனை முழுவதும் அவளையே சுற்றி வந்து கொண்டிருந்தது. சட்டென ஏதோ தோன்ற “அப்போ அந்த நம்மளை தினமும் டார்ச்சர் கொடுக்கும் ப்ரொடியுசர்...?” எனக் கேள்வியாக அதை நிறுத்த,
 
 
“ஆமா பாஸ் அவர் தான் இந்தப் படத்தோட புரொடியூசர்...”
 
 
“ஓ...” என்றவன், சில நொடிகள் தீவிர யோசனைக்குப் சென்ற பிறகு “அவர் ஏதோ பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கிறதா நம்மளை இன்வைட் பண்ணி இருந்தாரே, அது எப்போ...?” என்றான்.
 
 
“இன்னைக்குத் தான் பாஸ்... நீங்க தான் போக வேண்டாமுன்னுச் சொல்லிட்டீங்களே, நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா சுஷ்மா கூட நின்னு ஒரே ஒரு செல்பி எடுக்கணும்னு, என் கனவுல லட்சியத்தில மண்ணள்ளிப் போட்டு இருக்கீங்க நீங்க...” என மனவருத்தத்தோடு, விட்டால் அழுது விடுபவன் போன்ற முகப் பாவனையோடு விக்கி பேசிக் கொண்டே சென்றான்.
 
 
“ஈவ்னிங் பார்ட்டி எத்தனை மணிக்கு...?”
 
 
“ஏழு மணிக்கு பாஸ்...” எனத் தன் போலி அழுகையை நிறுத்திவிட்டு வியப்பாக அபய்யை பார்த்தவனுக்கு, அபய் இத்தனை கேள்விகள் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கிறான் என்றால் அதில் ஏதோ இருப்பது தெளிவாக, தன் விளையாட்டுத் தனத்தைக் கைவிட்டவன்,
 
 
“நாம பார்ட்டிக்கு போக வேணுமா...?” எனக் குரலில் ஒரு தீவிரத்தைக் கொண்டு வந்து கேட்கவும்,
 
 
அவனைத் திரும்பி கூடப் பார்க்காமல் “எஸ்” என்றவன், “ஆமா உன்னுடைய ஆசையை லட்சியத்தை நிறைவேத்தலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்... உனக்காக இது கூட செய்யலைனா எப்படி.. நீ உன் ஆசைப்படியே எத்தனை செல்பி வேணும்னாலும் எடுத்துக்கோ...” என்றபடியே காரை செலுத்த தொடங்கினான்.
 
 
“நம்பிட்டேன் பாஸ்... நம்பிட்டேன்...” என நம்பா பார்வையோடு சொன்னவன், அன்று மாலைக்குள் தங்கள் வேலைகளை முடிக்க அவசரமாகத் திட்டத்தை மாற்றி அமைத்தவன், “பார்ட்டிக்கு செல்ல வேறு ஏதாவது ஏற்பாடு செய்ய வேணுமா பாஸ்...?” என்றும் கேட்டு தெரிந்து கொண்டான். இது தான் விக்கி எத்தனை குறும்பு தனம் இருந்தாலும் வேலையில் கில்லி, இல்லையென்றால் எப்போதோ அபய் அவனைத் துரத்தி விட்டு இருப்பான்.
 
 
அழகிய கரிய நிற டீ ஷர்ட் வெளிர் நீல நிற ஜீன்ஸ் அணிந்து பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்தவனை வரவேற்றது வாயெல்லாம் பல்லாக இருந்த முகர்ஜி மட்டுமல்ல, வாயிலுக்கு நேரெதிராகக் கருப்பு நிற முட்டி வரை மட்டுமே நீண்டிருந்த பளபள குட்டை ஆடையில் கையில் வைன்னுடன் நின்றிருந்த மிர்னாவும் தான்.
 
 


   
ReplyQuote

You cannot copy content of this page