All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

ராமனின் மோகனம் ஜானக...
 
Notifications
Clear all

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்

Page 5 / 5
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
 
ஜானகி மந்திரம் 40
 
 
​மறுநாள் காலை 10 மணி.
 
​கண்டாலா SSG கல்லூரி வளாகம் திருவிழா போல அல்லோல கல்லோலப்பட்டு கொண்டிருந்தது.
​2004-ல் படிப்பை முடித்து வெளியேறிய அந்த பேட்ச் மாணவர்கள், ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே மண்ணில் காலடி எடுத்து வைத்திருந்தார்கள்.
 
​2010-ல் இன்ஸ்டாகிராமோ, வாட்ஸ்அப்போ கிடையாது. ஆர்க்குட்டும் பேஸ்புக்கும் பிறந்திருந்தாலும், முகத்தை பார்த்து பேசி ஆண்டுகள் பல கடந்துவிட்டிருந்தன. தொலைந்துபோன தொடர்புகள் திடீரென நேரில் கிடைத்த உற்சாகத்தில், கல்லூரி கேட் கதவுகளுக்குள் நுழைந்த ஒவ்வொருவரும் குழந்தைகளாக
மாறியிருந்தார்கள்.
 
"​டேய் விக்கி! அன்னைக்கு எலும்பும் தோலுமா திரிஞ்ச, இப்போ தொப்பையோட பளபளன்னு சேட்டு மாதிரி வர்ற?"
 
​"ஹேய் பூஜா! ரெண்டு குழந்தைக்கு அப்புறம் ஆளே மாறிட்டடி... புருஷன் என்ன பண்றாரு?"
 
​"மச்சான் கெளதம்! அரியர் வச்சு சுத்துனவன், இப்போ சொந்தக் கார்ல வந்து இறங்குற? பிசினஸ் பிச்சிகிட்டு போகுதா?"
 
​"ஏய் மாலினி! உன் பொண்ணு க்யூட்டா இருக்கிறாளே, உன்ன மாதிரியே இல்லையே! மாமியார் டார்ச்சர்லாம் இப்போ ஓகேயா?"
 
​"டேய் கார்த்தி! காலேஜ்ல கெத்தா சுத்திட்டு இருந்த இப்போ பாப்பாவுக்கு டயபர் வாங்குற குடும்பஸ்தன் ஆயிட்டயடா! நேரக் கொடுமை!"
 
காலம் ரொம்ப கெட்டிக்காரத்தனமான எடிட்டர். ஏழு வருடங்களில் அவர்களின் உடலமைப்பிலும், வாழ்க்கையிலும் தன் இஷ்டத்திற்கு ரீ-எடிட் செய்திருந்தது. காலம் செய்திருந்த மாற்றங்களை, நண்பர்கள் ஒருவரையொருவர் நக்கலாகவும், உரிமையோடும் கிண்டல் செய்து பேசினார்கள்.
 
​கட்டிப்பிடிப்புகளும், கைகுலுக்கல்களும், உரத்த சிரிப்புகளுமாக பழைய நினைவுகள் தூசி தட்டப்பட்டன.
​காலேஜ் பிரின்சிபால் ஓய்வுபெற்று விட்டதால் அவர் வரவில்லை. ஆனால், சற்றே முதிர்ச்சியடைந்த முகங்களோடு பேராசிரியர் வர்மா, பேராசிரியர் குல்கர்னி மற்றும் மேடம் சோனாலி ஆகியோர் வந்திருந்தார்கள். பழைய மாதிரி கலாய்க்காமல், மாணவர்கள் அவர்களின் காலை தொட்டு கும்பிட்டு ஆசி பெற்றார்கள். சிலர் தங்களின் பழைய வகுப்பறைக்குள் நுழைந்து, தாங்கள் அமர்ந்திருந்த மர டெஸ்குகளையும் சேர்களையும் தடவிப் பார்த்தார்கள். 6 வருடங்களுக்கு முன்பு மரத்தில் செதுக்கி வைத்திருந்த பெயர்களை தேடிப்பிடித்து, அதன் அருகே நின்று போட்டோ எடுத்து கொண்டிருந்தார்கள்.
 
ரீயூனியனுக்கு ஒரு Unwritten Rule அட்மின்ஸ் ஏற்படுத்தி இருந்தனர். குழந்தைகள் வரலாம், ஆனால் கணவன் அல்லது மனைவியை எக்காரணம் கொண்டும் கூட்டிக்கொண்டு வரக் கூடாது! கல்லூரி நினைவுகளின் சுதந்திரமான காற்றில் குடும்பக் கட்டுப்பாடோ, பார்ட்னரின் முறைப்போ குறுக்கிடக் கூடாது என்பது இந்த பேட்ச் ரியூனியன் ரூல்.
 
​ஞாயிற்றுக்கிழமை என்பதால் லேப்களும் கேண்டினும் பூட்டப்பட்டிருந்தன. 
​இருந்தாலும் வந்திருந்தவர்கள் சும்மா இருக்கவில்லை. கேண்டீன் மர பெஞ்சுகளின் மீது அமர்ந்து, அன்னைக்கு 'கட்டிங் சாயா' பாண்டு மாமா டீ ஊற்றிக் கொடுத்த பழைய நாட்களை நினைவுகூர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் பூட்டியிருந்த லேப் ஜன்னல் வழியே உள்ளே எட்டிப்பார்த்து, அங்கே இருந்த மைக்ரோஸ்கோப்புகளையும் டெஸ்ட் டியூப்களையும் காட்டி பழைய கதைகளை பேசினார்கள். சிலர் தங்கள் பழைய க்ரஷ் வந்தால், அவர்களை தனியாக தள்ளி கொண்டு போய், (இருங்க பதட்டப்படாதீங்க) கைகுலுக்கி, "அன்னைக்கு உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன் ஆனா சொல்லவே இல்லை..." என்று வெட்க புன்னகையோடு பழைய கணக்குகளை தீர்த்துக்கொண்டிருந்தார்கள்.
 
​ரீயூனியனுக்கு ஆர்கனைஸ் செய்த குழுவின் தலைவரான சிக்கியும், அவனது டீமும் சும்மா இருக்கவில்லை. முன்கூட்டியே நண்பர்களிடையே தலைக்கு இவ்வளவு என்று கலெக்ஷன் போட்டு, அருமையான லஞ்ச், கூல்ட்ரிங்க்ஸ், டீ காபி மற்றும் ஸ்நாக்ஸ் ஐட்டங்களை வெளியிலிருந்து ஸ்பெஷலாக ஆர்டர் செய்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.
 
காலேஜ் காலத்தில் ‘ஜெய் பஜ்ரங் பலி’னு கெத்தா சுத்துன சிக்கி, இன்னைக்கு ஒரு பிரைவேட் ஃபைனான்ஸ் கம்பெனில கலெக்ஷன் ஆபீசரா சேல்ஸ் டார்கெட்டுக்காக மேனேஜர்கிட்ட நாள் முழுக்க திட்டு வாங்குற பஞ்ச பரதேசியா மாறியிருந்தான்!
 
​"கல்யாணத்துக்கு அப்புறம் கெத்தெல்லாம் கலைஞ்சு போய் மாசம் பொறந்தா EMI கட்டி கட்டியே பிரஷர் வந்திருச்சுடா..." என்று அவன் புலம்பிய புலம்பலில், அத்தனை பரிதாபமும் சிரிப்பும் கலந்திருந்தது!
 
 
அலைந்து திரிந்து மீண்டும் ஒரே கூட்டுக்கு வந்த பறவைகளை போல, ரீயூனியனுக்கு வந்தவர்கள் அவரவர் காதல், கல்யாணம், குடும்பம் என்கிற சொந்த விக்கெட்டுகள் விழுந்த கதைகளை பேசி முடித்ததும், அங்கிருந்த மொத்த கூட்டத்தின் அட்டென்ஷனும் அந்த ஒரு காதலின் மீதுதான் லேண்ட் ஆனது! ... 
 
​மனோ - மைதிலி காதல்!
 
​கல்லூரி டேஸ்ல கேர்ள்ஸ் எல்லாத்தையும் பொறாமைப்பட வைத்த, பாய்ஸ் எல்லாத்தையும் 'இப்படி ஒரு லவ் நமக்கு செட்டாகாதான்னு' ஏங்க வச்ச, மொத்த கேம்பஸ்யும் புரட்டிப்போட்ட.... அந்த ஐகானிக் ஜோடியை பற்றி அவர்களால் பேசாமல் இருக்க முடியவில்லை.
 
​"டேய்... மனோவும் மைதிலியும் என்ன ஆனாங்கடா?"
 
​"அவங்க லவ் சேரவே இல்லையாமே?"
 
"மனோ அன்னைக்கு ஆக்சிடென்ட்டுக்கு அப்புறம் எங்க போனான், என்ன ஆனான் சொல்லிட்டு யாருக்குமே தெரியலையாம்..."
 
​"அவ்வளவு deep love டா அது... இப்படிப் ஆயிடுச்சே!"
 
​"மைதிலி இன்னும் கல்யாணமே பண்ணிக்கலையாமே, நிஜமாவா?"
 
​அனைவரையும் பிணைக்கும் ஒரே பொது கவிதையாக மாறினாள் மைதிலி; விடுபட்ட ஹைக்கூ வரியாக மாறினான் மனோ.
 
ஒரு காலத்தில் முழு வளாகத்தையும் தன் வசீகரத்தால் கட்டிப்போட்ட மனோ இப்போது எங்கே? மைதிலி இப்படி இருக்கிறாளே! இதெல்லாம் தான் அன்றைய ட்ரெண்டிங் டாக்.
 
வருடகணக்காகவா ஒருவனை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் போகும்? ஆயிரத்துக்கு மேல் கொண்ட ஒரு பேட்ச்சில், ஒருவருக்கு கூடவா அவனை பற்றிய சின்ன இன்ஃபர்மேஷன் கூட தெரியாமல் இருக்கும்? அவன் ஏன் நண்பர்களை தொடர்பு கொள்ளவில்லை? ஆள் அப்படியே காற்றில் கரைந்து மாயமாய் மறைந்துபோனானா? அல்லது உயிரோடு இருக்கிறானா இல்லையா?
​விடையே இல்லாத கேள்விகளும், அதை சுற்றி படர்ந்த குழப்பங்களும் தான் அன்று அந்த வளாகத்தில் இருந்தவர்களின் உரையாடல்களை ஒரு கனத்த புதிராக மாற்றியிருந்தன.
 
​டைரக்டர் ஜேம்ஸ் கேமராமேன் கேமராவோடு உலா வந்துகொண்டிருந்தான். அவனுக்கு இது வெறும் பழைய நண்பர்களின் கெட்-டுகெதர் மட்டும் இல்லை; உயிரோட்டமான ஒரு சினிமா கதைக்கான களம்!
​உண்மையில், அவனது தேடல் அங்கே கல்லூரி வளாகத்தில் ஆரம்பிக்கவில்லை. தூங்காமல் நைட்டே ஸ்பாட்டுக்கு வந்து விட்டான். லோனாவாலா ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கிய நொடியிலிருந்தே அவனது விசாரணைகள் தொடங்கிவிட்டன. காலேஜ் சமயத்தில் எடுத்திருந்த குரூப் போட்டோவில் மனோவை ஜூம் பண்ணி, நிறைய பிரிண்ட் எடுத்து வைத்திருந்தான். அங்கிருந்த டீக்கடைக்காரர், ஆட்டோ டிரைவர்கள் என அனைவரிடமும் மனோவின் போட்டோவை காட்டி விசாரித்து, அவன் காண்டாக்ட் நம்பரை கொடுத்துவிட்டு வந்திருந்தான்.
 
காலேஜில் விசாரிப்பதை விட இந்த மாதிரி இடங்களில் விசாரித்தால் தான் கூடுதல் தகவல் கிடைக்கும் என்பதை அவனுடைய கணிப்பு.
 
​"இந்தக் கதைக்கு என்னதான்டா கிளைமாக்ஸ்?" - அவனுள் இருந்த இயக்குநனின் தவிப்பு அவனை சும்மா இருக்க விடவில்லை.
​மனோவை பற்றி ஏதாவது ஒரு சின்னக் கிளூ சிக்காதா, இந்த லவ் ஸ்டோரியோட அந்த மிஸ்ஸிங் க்ளைமாக்ஸ் முடிச்சு அவிழாதா என்கிற வெறியோடு, ஆளாளிடம் பேட்டி எடுப்பது போல விசாரணையை தொடர்ந்தபடி கேம்பஸை சுற்றி வந்துகொண்டிருந்தான்.
 
​பாபி, சந்தீப், பிரேம், மணிஷ் நால்வரும் ஒரு கோடியில் தனியாக நின்று கொண்டிருந்தார்கள்.
​ஏற்கனவே புனேவில் மனோவை தேடும்போதே பாபியை இவர்கள் சந்தித்துவிட்டதால், மற்றவர்களை போல அங்கே பெரிய ஆரவாரமோ கட்டிப்பிடிப்புகளோ இல்லை. மாறாக, நால்வரின் முகத்திலும் அதே பழைய கவலை மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.
 
​அவர்கள் மற்ற நண்பர்களை பார்க்கும்போது சம்பிரதாயமாக சிரித்தாலும், அந்தச் சிரிப்பின் அடியில் ஒரு மெல்லிய நிசப்தமும் ஏமாற்றமும் அப்பட்டமாக தெரிந்தது. நால்வரின் பார்வைகளும் அவ்வப்போது தங்களை அறியாமலேயே கல்லூரி வாசலை நோக்கியே போயின.
 
​"டேய்..." சந்தீப் மெதுவாக தன் சிரிப்பை நிறுத்திவிட்டு பாபியின் தோளைத் தொட்டான்.
 
"நம்ம குரூப்ல எல்லாரும் இருக்கோம்டா... ஆனா மனோ மட்டும் இல்ல... மனச என்னமோ போட்டு புரட்டி எடுக்குது."
 
​அந்த ஒரு வார்த்தையில் அங்கே நின்றிருந்த நால்வரின் போலி சிரிப்பும் சட்டென அடங்கியது.
 
​"அவன் இல்லாம இந்த கெட்-டுகெதரே எனக்கு முழுசா இல்லாத மாதிரி இருக்கு பாபி," என்றான் பிரேம், நெஞ்சில் கனத்த பாரத்தோடு.
 
​மணிஷ் தலையைக் குனிந்துகொண்டான். "நாங்க புனே பூரா சுத்தித் தேடிட்டோம் பாபி. அவன் பழைய வீடு இருந்த ஏரியா, பிரண்ட்ஸ் சர்க்கிள்னு எங்கயுமே அவனப் பத்தின ஒரு சின்னக் குறிப்புக்கூட கிடைக்கலடா. ஆளு அப்படியே காத்துல கரைஞ்ச மாதிரி போயிட்டான். அவன் உயிரோட இருக்கானா, இல்ல..."
 
​"டேய்! வாய மூடுரா!" பாபி அதட்டினான். அவனது குரலில் கோபத்தை விட பயமே அதிகமிருந்தது.
 
​"அவனுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது. அவன் எங்கயோ இருக்கான். வேற ஏதோ ஒரு சூழ்நிலையில நம்மகிட்ட பேசாம இருக்கான்... அவ்ளோதான்," என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வது போலச் சொன்னான் பாபி.
 
சந்தீப்: ​"ஆனா இவ்வளவு நாள் இப்படி அவன் நம்ம கூட பேசாம, கண்டுக்காம இருக்க வாய்ப்பே இல்லை. அந்த விஷயம் தான் மனசு ரொம்ப உறுத்துது?" 
 
பாபி: "அந்த டிரஸ்ட் அக்கவுண்ட் பேங்க் ரூட்டை வச்சு அட்ரஸ் கண்டுபிடிக்க ட்ரை பண்ணீங்களா... அதுல ஏதாச்சும் கிளூ கிடைச்சதா ?"
 
​சந்தீப் பெருமூச்சு விட்டான். 
 
"இன்னும் அந்த டிரான்ஸாக்ஷன் ரூட்டை தான் டிரேஸ் பண்ணிட்டு இருக்கோம். ஆனா செக்யூரிட்டி ரீசன்ஸ்னால பேங்க்ல டீடைல்ஸ் தர மாட்டேங்குறாங்க. ட்ரை பண்ணிட்டு தான் இருக்கோம்... ஆனா இதுவரைக்கும் எந்த தகவலும் சிக்கலடா."
 
​நால்வரும் சில நொடிகள் மௌனமாயினர்.
​"அவன் மைதிலியை தேடிப்போன அன்னைக்கு அந்த ஆக்சிடென்ட் நடக்காம இருந்திருந்தா... இன்னைக்கு அவன் நம்ம கூட கெத்தா நின்று இருந்திருப்பான்லடா..." பிரேம் முணுமுணுத்தான்.
 
​"இப்போ அதை பேசி என்ன பண்றது?" என்று பாபி குரல் தழுத்தழுக்க ஆரம்பித்து,
 
​"நேத்து நைட் மைதிலிக்கு கால் பண்ணி பேசினேன்டா... அவ இன்னைக்கு வர்றா. மனோவை பத்தி நேத்து சொன்னபோதே அவ அப்படியே நொறுங்கிப்போயிட்டா. நம்ம எல்லாருக்கும் கல்யாணமாகி, குடும்பம்னு செட்டில் ஆயிட்டோம்... ஆனா அவ இன்னமும் அவனை மனசுல வச்சுக்கிட்டு யாரையுமே கல்யாணம் பண்ணிக்காம தனியாவே வாழ்ந்துட்டு இருக்காடா. அவ இன்னும் அவனை மறக்கல... இன்னைக்கு அவ நேர்ல வந்து என் முன்னாடி நிக்கும்போது, அவ முகத்தை நான் எப்படி பார்க்க போறேனோ? அவளை என்ன சொல்லி சமாதானப்படுத்த போறேன்னு எனக்கு உண்மையாவே தெரியலடா..." என்று முடித்தான்.
 
​சந்தீப் பெருமூச்சு விட்டு, வானத்தை பார்த்தபடி தன் கலங்கிய கண்களை மறைக்க முயன்றான்.
 
​"அவங்க ரெண்டு பேரோட காதலுக்கும், நல்ல மனசுக்கும் நிஜமாவே ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கணும். ஆனா விதி இப்படி நடுவுல வந்து எல்லாத்தையும் பாழாக்கிடுச்சே... இவன் இப்போ எங்க, எந்த நிலைமையில இருக்கான்னுகூட தெரியாம நாம இப்படி நிக்கிறோமே..."
​சந்தீப் சொல்லி முடிப்பதற்குள், அங்கிருந்த நால்வரின் கண்கள் ததும்பிக் வழிந்தன.
​வார்த்தைகள் எதுவும் வரவில்லை. 
 
பிரேம் தன் கையால் முகத்தை மூடிக்கொள்ள, மணிஷ் பாபியின் தோளை இறுக்கமாக பற்றிக்கொண்டான். வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், தொலைந்துபோன தன் நண்பனுக்காகவும், காதலில் தோற்றுப்போய் நிற்கும் தோழிக்காகவும் அந்த நான்கு பேரும் கலங்கிக் கொண்டிருந்த அந்த நொடி, அங்கிருந்த அத்தனை பேரையும் தாண்டி அவர்களின் உண்மையான நட்பை பிரதிபலித்தது.
 
பாபி, சந்தீப், பிரேம், மணிஷ் நால்வரும் கண்ணீரோடு தவித்துக் கொண்டிருந்த அந்த வேளையில், 
 
சஞ்சுவும் இந்துவும் அவர்களை நோக்கி வந்தார்கள்.
​சஞ்சு ஸ்லீவ்லெஸ் அனார்கலியிலும், இந்து கலர்ஃபுல் இந்தோ-வெஸ்டர்ன் பாலாஸோ குர்தியிலும் 2010-ன் நேர்த்தியான நவீனப் பெண்களாக காட்சி அளித்தார்கள்.
​நால்வரின் கலங்கிய கண்களையும், அங்கே படர்ந்திருந்த அழுத்தமான அமைதியையும் பார்த்ததும் சஞ்சுவுக்கு நிலைமை புரிந்தது.
 
​சஞ்சு: ஃபீல் பண்ணாதீங்கடா... எல்லாம் நம்ம கையை மீறி நடந்து போச்சு. நாம என்ன பண்ண முடியும்? ஏதாவது அப்டேட் உண்டா?
 
​பாபி கலங்கிய கண்களை கர்ச்சீப் எடுத்து ஒற்றிக்கொண்டே மனோவை இதுவரை கண்டுபிடிக்க முடியாததையும், நேற்றிரவு மைதிலி போனில் உடைந்து பேசியதையும் அவர்களிடம் கூறினான்.
 
​கேட்டதும் சஞ்சுவின் முகத்தில் வேதனை படர்ந்தது.
​"இடைப்பட்ட காலத்தில் அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நாங்க எவ்வளவோ வற்புறுத்தினோம்... அவ ஏதேதோ சாக்கு சொல்லி சமாளிச்சுட்டாடா... அதான் நடக்காம போயிருச்சு. மனோவின் wherabouts-ம் தெரியல. இன்னும் எவ்வளவு நாள் தனியாவே இருக்க முடியும்? சொன்னா கேட்கவே இல்லை" - சஞ்சு குரல் தடுமாற சொன்னாள்.
 
​இந்து தன் பெருமூச்சை அடக்க முடியாமல், " மனோவை மறக்க முடியாமதான் அவ இன்னும் கல்யாணம் பண்ணிக்கலன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். நாங்க பீல் பண்ண கூடாதுன்னு, அவ பீல் பண்ணாத மாதிரியும், இந்த விஷயத்தை நெனச்சு கவலைப்படாத மாதிரியும், அவ நடிச்ச நடிப்பிருக்கே, அவளுக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம். இந்த உலகத்துல நல்லவங்களுக்குத்தானே இப்படி எல்லாம் நடக்குது... அவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் லைட்டா, கொஞ்சம், கொஞ்சூண்டு நல்லது நடந்திருக்கலாம்..." என்று கலங்கினாள்.
 
​அப்போது சஞ்சுவின் மொபைல் போன் அடித்தது. கால் ஃபிரம் மைதிலி.
 
சஞ்சு காலை அட்டென்ட் செய்து: ​"ஹேய் சுட்கி! எங்கடி இருக்க? நாங்க எல்லாரும் காலேஜ்லதான் இருக்கோம். உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்?" - என்று கேட்க,
 
​"சஞ்சு... on the way டி. டாக்ஸில வந்துகிட்டு இருக்கேன். வழியில் செம ட்ராபிக். இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல லேண்ட் ஆயிடுவேன்!" என்றாள் மைதிலி.
 
​"சீக்கிரம் வாடி... பசங்க எல்லாரும் வந்துட்டாங்க," என்று போனை வறுத்த சஞ்சு, 
 
"மைதிலி கார்ல வந்துகிட்டு இருக்காளாம், இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவா," என்று எல்லோருக்கும் அப்டேட் கொடுத்தாள்.
 
சொல்லிவிட்டு போனை துண்டித்த நொடி, அவளது நெஞ்சினுள்ளே ஏதோ ஒன்று விண்விண்ணென்று தெறித்தது.
 
​'மனோ வந்துட்டானா? அவனைப் பத்தி ஏதாச்சும் தகவல் கிடைச்சதா?'—இந்தக் கேள்வி தொண்டைக்குழி வரை வந்து, வார்த்தைகளாக உதட்டோரம் முட்டி நின்றது. போனை மறுபடியும் காதில் வைத்து, சஞ்சுவிடம் ஒரே ஒரு வார்த்தை கேட்டுவிட துடித்தது மனசு.
​ஆனால், கேட்கவில்லை. கஷ்டப்பட்டு அந்த ஆவலை, தவிப்பை, நெஞ்சின் அடியாழத்தில் அமுக்கி அடக்கிக்கொண்டாள்.
​சில கேள்விகளுக்கு போன் உரையாடல்கள் தகுதியானவை அல்ல. மனோவின் பெயரை போன் ஸ்பீக்கரில் கேட்டு, அது தரும் அதிர்ச்சியைத் தாங்கும் வலிமை இப்போது அவளது உடம்பில் இல்லை. ஏமாற்றமோ அல்லது நம்பிக்கையோ... எதுவாக இருந்தாலும் அதை நேருக்கு நேர், தன் நண்பர்களின் கண்களைப் பார்த்துத் தெரிந்துகொள்வதுதான் நியாயம்.
 
டாக்ஸி கண்ணாடி வழியே தெரிந்த சாலை மெல்ல மறைந்து போக, கல்லூரி வளாகத்தில், தனக்காக என்ன மாதிரியான நிஜம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியாத அறியாமை ஒருபுறம்... அவன் முகத்தை பார்த்துவிடும் ஏக்கம் மறுபுறம். 'வருவானா... மாட்டானா?' என்கிற ஒற்றைக் கேள்வி, விடையற்ற தியானம் போல அவளது யோசனைகளை ஆழமாக விழுங்கி கொண்டிருந்தது.
 
இதற்கிடையே, மைதிலி காரில் வந்துகொண்டிருக்கும் தகவலை கேட்டதும் பாபியின் முகத்தில் வேதனையையும் தாண்டி ஒரு மெல்லிய நெகிழ்ச்சி படர்ந்தது.
 
​"வரட்டும்... வரட்டும்... அவளை பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சு தெரியுமா?" - பாபி ஒரு பெருமூச்சோடு வானத்தை வெறித்துப் பார்த்தபடி சொன்னான்.
 
​"அன்னைக்கு ஆக்சிடென்ட் நடந்த அப்புறம், அவ ஆஸ்பத்திரிக்கு வர்றேன்னு கதறினப்போ நான்தான் அழுத்தமா தடுத்து ஊருக்கு போகச் சொன்னேன். அவகிட்ட கடைசியா போன்ல பேசின அந்த நிமிஷத்தோட சரி... அதுக்கப்புறம் இந்த ஏழு வருஷத்துல அவளை நேர்ல பார்க்கவே இல்லைடா. இன்னைக்கு அவளைப் பார்க்குறதுக்காக என் மனசு எவ்வளவு தவிச்சுகிட்டு இருக்குன்னு எனக்குத்தான் தெரியும்..."
 
சஞ்சு பாபியின் தோளை ஆறுதலாக தட்டிக் கொடுத்தாள்.
 
​சற்றுத் தள்ளி, பழைய DSG குரூப் பெண்கள்—ஸ்ரேயா, சலோனி, பிரணவி, தன்வி, திஷா, மஹிமா—தனியாக ஒரு குரூப்பாக நின்று கொண்டிருந்தார்கள்.
​அவர்களை பார்த்ததும் சஞ்சுவுக்கும் இந்துவிற்கும் லைட்டா சந்தேகம் வந்தது.
 
​"என்னடி இந்து... DSG கேர்ள்ஸ் அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் தனியாவே நிக்குறாங்க? பழைய மாதிரியே தெனாவட்டா திரியுறாங்களா, இல்ல ஏதாச்சும் மாறியிருக்காங்களா? பிரணவியை மட்டும் லாஸ்ட் வீக் ஒரு மேரேஜ்ல பார்த்து பேசினேன்... புலம்பி தள்ளினாள்", என்றாள் சஞ்சு.
 
​"வா... போய் பேசி தான் பார்ப்போமே. பழசையெல்லாம் மனசுல வச்சுக்காம சும்மா நலம் விசாரிப்போம்," என்று இந்து சஞ்சுவை அழைத்து கொண்டு அவர்களிடம் சென்றாள்.
 
​அங்கே போய் பேசியபோதுதான் தெரிந்தது... அவர்கள் முந்தைய மாதிரி இல்லை! "My life, My Rules" ன்னு தெனாவட்டாக திரிந்தவர்களை வாழ்க்கையின் கரடுமுரடான அனுபவங்கள் நிறையவே மாற்றியிருந்தன.
​எல்லாருக்கும் திருமணமாகிவிட்டிருந்தது. குடும்பக் கஷ்டங்கள், கணவனின் பிசினஸ் நஷ்டம், மாமியார் கொடுமை, குழந்தை வளர்ப்பு எனப் பல்வேறு குடும்பப் பிரச்சினைகளில் சிக்கி சின்னா பின்னமாகியிருந்தார்கள். படிக்கும்போது பணக்கார திமிரில் சுற்றிய முகங்களில், இப்போது வாழ்க்கையின் வடுவும் களைப்பும் அப்பட்டமாக தெரிந்தன.
 
​"ஏண்டா அன்னைக்கு காலேஜ்ல அவ்வளவு திமிருத்தனமாவும், மத்தவங்களை அசிங்கப்படுத்தியும் நடந்துக்கிட்டோம்?" என்கிற குற்ற உணர்ச்சியும் வருத்தமும் அவர்களின் உரையாடலில் வெளிப்பட்டது.
 
2008 உலகளாவிய நிதி நெருக்கடியின் போது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சடாரென கீழே சரிந்தது. அதிக விலைக்கு வாங்கி சேர்த்திருந்த நூறு கிளைகளின் ஸ்டாக் மதிப்பு ஒரே அடியில் பாதியாக குறைய, பிசினஸ் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது.
​அதை ஈடுகட்ட, புதிய மாடல்கள் செய்யவும், விரிவாக்கத்திற்காக வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்கவும் முயற்சித்த இடத்தில் மேலும் தவறான கணக்கு வழக்குகள். கார்ப்பரேட் நகைக்கடைகளின் கடுமையான போட்டி, வங்கி வட்டிச் சுமை என எல்லாமே சேர்ந்து கழுத்தை நெரிக்க, வங்கியினர் ஸ்ரேயா அப்பா ரத்தன்குமாரின் சொத்துக்களை முடக்க தொடங்கினர்.
​அப்பாவின் கடன்களையும், பாரம்பரிய பிராண்டையும் காப்பாற்ற வேறு வழியின்றி, மும்பையின் மிகப்பெரிய டெக்ஸ்டைல் முதலாளியின் மகனுக்கு ஸ்ரேயாவை திருமணம் செய்து வைத்தார்கள்.
​ஆனால், அந்த பணம் அவளது வாழ்க்கையை காப்பாற்றவில்லை. அவள் கணவன் ஒரு சைக்கோ. சந்தேகப் புத்தியும் பணத் திமிரும் கொண்ட அவனுடன் நரக வேதனையை அனுபவித்த ஸ்ரேயா, இறுதியில் டைவர்ஸில் வந்து நின்றாள். அப்பாவின் பிசினஸையும் காப்பாற்ற முடியாமல், தன் சொந்த வாழ்க்கையையும் தொலைத்துவிட்டாள்.
​நூறு கிளைகள் இருந்த இடத்தில், இப்போது ஏதோ மிச்சமிருக்கும் மூன்று ஜூவல்லரி ஷாப்களை மட்டுமே அவளும் அவளது வயதான தந்தையும் கஷ்டப்பட்டு மேனேஜ் செய்து கொண்டிருக்கிறார்கள்.
​காலம் தன் கையில் வைத்திருக்கும் சாட்டையால் யாரை, எப்போது, எப்படி அடிக்கும் என்பதே தெரியாது. ஸ்ரேயா அதை புரிந்துகொள்ள ரொம்ப நாட்களாகவில்லை இங்கே
மிகவும் தர்மசங்கடத்தோடு நின்றிருந்தாள். 
 
சஞ்சுவையும் இந்துவையும் பார்த்ததும் அவளது முகம் சுருங்கி, குற்ற உணர்ச்சியோடு கண்கள் தரையை பார்த்தன. அன்னைக்கு மைதிலியையும் இவர்களையும் ஒதுக்கி வைத்து, அசிங்கப்படுத்திய அத்தனை சம்பவங்களும் நினைவுக்கு வந்து அவளை குறுக வைக்க, பேசுவதற்கு வார்த்தைகளின்றி தயங்கி தயங்கி நின்றாள்.
 
​மைதிலியையும் மனோவையும் பற்றிப் பேச்சு வந்தபோது, சலோனி சங்கடத்தோடு கேட்டாள்: "மைதிலியும் மனோவும் வரலையா?"
 
​ சஞ்சு பெருமூச்சு விட்டாள். "அவன் எங்க இருக்கான்னே யாருக்கும் தெரியல... மைதிலி on the way..."
ஸ்ரேயா தன் தயக்கத்தை உடைத்து, "மனோவுக்கு என்ன ஆச்சு சஞ்சு?" என்று கேட்க... லோனாவாலா விபத்து தொடங்கி, இன்றுவரை அவன் முகவரி தெரியாமல் போயிருப்பது வரை நடந்த அத்தனை சம்பவங்களையும் சஞ்சு சுருக்கமாக விவரித்தாள்.
 
​கேட்கக் கேட்க, ஸ்ரேயாவின் கால்களுக்கு அடியிலிருந்த பூமி நழுவுவது போலிருந்தது.
​கல்லூரி நாட்களில் மைதிலியின் மீது கொண்ட பொறாமையினாலும், மனோவை தன் வசப்படுத்த முடியாத ஆத்திரத்தினாலும் தான் செய்த அத்தனை சதிகளும், அசிங்கமான வேலைகளும் அவளது மனக்கண் முன் வரிசையாக வந்து போயின. 'தான் விதைத்த அந்த நஞ்சுதான் இந்த இரண்டு பேரின் வாழ்க்கையையும் இன்று இந்தச் சூனியத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறதா?' என்ற எண்ணம் அவளது நெஞ்சில் அனலாய் உருண்டது.
 
​ஸ்ரேயா சுலபத்தில் உடைந்து அழக்கூடியவள் அல்ல. கல்லூரி நாட்களில் அவளிடம் இருந்த அந்த அசுரத்தனமான திமிரும் அகந்தையும் எல்லாரையும் மிரள வைக்கும். ஆனால், வாழ்க்கையின் அனுபவங்களும், குடும்பப் பிரச்சினைகளும், இப்போது இந்த அதிர்ச்சிச் செய்தியும் சேர்ந்து அவளது தற்காப்பு சுவர்களை அடியோடு தகர்த்திருந்தன.
​அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்தது.
​உடலெல்லாம் நடுங்க, சஞ்சு, இந்து மற்றும் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த பாபி, சந்தீப், பிரேம், மணிஷ் என அனைவரையும் பார்த்து தன் இரு கைகளையும் கூப்பி வணங்கினாள்.
 
​"தயவுசெய்து... தயவுசெய்து என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்கடா!" - அவளது குரல் விம்மலில் உடைந்தது.
​"அன்னைக்கு சின்னத்தனமான ஈகோவுல நான் பண்ணின அத்தனை தப்பும் இப்போ என் முன்னாடி வந்து என்னை சாகடிக்குது. மனோவுக்கும் மைதிலிக்கும் இந்த நிலைமை வர்றதுக்கு நான் தான் முழுக்காரணம். மைதிலி இப்போ வர்றா இல்லை? அவ வந்ததும் அவ கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கக்கூட நான் தயாரா இருக்கேன்! Iam sorry!" என்று ஒரு காலத்தில் தெனாவட்டாக சுற்றிய ஸ்ரேயா, இன்று அத்தனை பேரின் முன்னாலும் கெஞ்சி அழுதுகொண்டிருந்தாள்.
​DSG குரூப் பெண்கள் அனைவரும் திகைப்பாக ஸ்ரேயாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
​சஞ்சுவும் இந்துவும் ஒரு கணமும் யோசிக்கவில்லை. உடனே முன்னே வந்து, கண்ணீரோடு நின்றிருந்த ஸ்ரேயாவின் கைகளை பற்றிக் கொண்டார்கள்.
 
​"ஏய் ஸ்ரேயா... லீவ் இட் டி!" என்றாள் சஞ்சு மிகவும் மிருதுவான குரலில்.
 
​"அன்னைக்கு நாம எல்லோருமே சின்னப் பசங்க. வயசுக்கோளாறுல எது சரி, எது தப்புன்னு தெரியாம பண்ணின விஷயங்கள் அது. அதை இன்னமும் மனசுல வச்சுக்கிட்டு இப்படி உன்னை நீயே சித்ரவதை பண்ணிக்காத. நடந்தது நடந்து போச்சு... இனிமே அதை மாத்த முடியாது இனிமயாவது ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்கலாமே," என்று அவளுக்கு ஆறுதல் கூறினாள்.
 
​பாபியும் நட்புணர்வுடன் அருகில் வந்து, "ஆமா ஸ்ரேயா... பழைய கதையையெல்லாம் தோண்டி குறை சொல்ல இங்க யாருமே வரல. மைதிலியும் இதையெல்லாம் மனசுல வச்சுக்கிற ஆள் இல்லை. நீ அழாத," என்றான் பெருந்தன்மையோடு.
 
​விஷத்தை விதைத்த இடத்திலும் பூக்களை மட்டுமே தூவும் அந்த நண்பர்களின் அன்பை கண்ட கணத்தில், ஸ்ரேயாவின் இதயத்தின் அடியாழத்தில் உறைந்துகிடந்த பனிப்பாறைகள் சடசடவென உடைய தொடங்கின. காலத்தின் வடுக்களோடு அலைந்து திரிந்த அந்த பெண்ணின் மனதிலிருந்த அத்தனை கசப்புகளும் அகன்று, ஒரு மெல்லிய அமைதியும், விவரிக்க முடியாத நெகிழ்ச்சியும் அவளை முழுமையாக ஆட்கொண்டன.
 
ஸ்ரேயா: நீங்கல்லாம் மன்னிச்சிட்டீங்க!! ஆனா மைதிலி என்னை மன்னிப்பாளா தெரியலையே..
 
இந்து அதற்கு பதில் சொல்வதற்குள்,
 
​கல்லூரியின் பிரதான கேட் வழியே ஒரு கார் வழுக்கிக் கொண்டே நுழைந்து, பார்க்கிங்கில் வந்து நின்றது.
 
​காரின் கதவு திறக்க... மைதிலி காரை விட்டு கீழே இறங்கினாள்!
 
தொடரும்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
 
ஜானகி மந்திரம் 40 A
 
​கார் கதவை திறந்து மைதிலி காலடி எடுத்து வைத்த அந்த நொடி, கல்லூரி வளாகமே ஒரு கணம் மூச்சை பிடித்துக்கொண்டது.
​அவள் அணிந்திருந்த எலிகன்ட்டான பாஸ்டெல் பீச் நிற காட்டன்-சில்க் சேலையின் மெல்லிய பார்டர், காலை வெயிலில் மிளிர்ந்தது. அதற்கு பொருத்தமான டீப் பிளம் நிற எல்போ-லென்த் ஜாக்கெட், அந்த பீச் நிறத்தோடு அழகாக கான்ட்ராஸ்ட் ஆகி, அவளது தோற்றத்திற்கு ஒரு தனித்துவமான மிடுக்கை கொடுத்திருந்தது.
​அவளது சருமத்தின் நிறம் காலேஜ் காலத்தில் இருந்த கருப்பிலிருந்து, இப்போது ஒரு வசீகரமான 'டஸ்கி' டோனுக்கு மாறியிருந்தது. அது வெறும் க்ரீம்கள் தந்த மாற்றமல்ல; இத்தனை வருட போராட்டங்களை ஜெயித்த அவளது நம்பிக்கையும், தனித்துவமும் அவளது சருமத்திற்கு தந்திருந்த கம்பீரமான பொலிவு!.
இடுப்பு வளைவை அதிகப்படுத்தி காட்டாமல் மிக நாகரிகமாக மறைத்திருந்த நேர்த்தியான சேலை மடிப்புகள், அவளது இடுப்பு வளைவுக்கு சிற்பத்தின் ஜீவனை கொடுத்திருந்தன!
 
​கையில் மெல்லிய சில்வர் ஸ்ட்ராப் கொண்ட 'ஃபாஸ்ட்ராக்' லேடீஸ் வாட்ச்.
​தலைமுடியை லூஸ் ஹேராக விட்டிருந்தாள்; அவளது சுருள் முடிகளை ஒரு சிறிய கிளிப் கொண்டு அழகாக பின்னால் பின்செய்திருந்தாள். அந்த எளிமையான அலங்காரத்தில் கூட அவளிடம் ஒரு பொலிவும், போராட்டங்கள் தந்த முதிர்ச்சியும் அப்பட்டமாக தெரிந்தன.
 
​மைதிலியின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த நண்பர்களின் நடுவே, அதுவரை படர்ந்திருந்த சோகமான உரையாடல்களும் கனத்த சூழலும் சட்டென விலக, ஒரே நொடியில் பேரலை போல உற்சாகக் கூச்சல் வெடித்தது!
 
​"ஹேய்... மைதிலி வந்துட்டாடா!"
​கேம்பஸே அதிரும் அளவுக்கு 'ஓஹ்ஹ்ஹ்'வென நண்பர்கள் ஆரவாரம் செய்து அவளை வரவேற்றார்கள்.
 
அவளை கவனிக்காத மற்றவர்கள், ஏன் இந்த ஆரவாரம் என்று திரும்பிப் பார்க்க, மைதிலி வந்ததை புரிந்து கொண்டார்கள்.
​உற்சாக குரல்கள் மைதிலியின் வருகையை கேம்பஸில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
 
​மொபைல் நெட்வொர்க்கில் வாரம் தவறாமல் நட்பு பரிமாறப்பட்டிருந்தாலும், வெறும் 'வாய்ஸ் காலில்' கிடைக்காத நேரில் பார்க்கும் நிஜம், சஞ்சுவையும் இந்துவையும் ஒரே நொடியில் 'ட்ரிகர்' செய்தது.
 
உரையாடல்களால் நிரப்பப்பட்ட அந்த ஆறு வருட இடைவெளியை ஒரே அடியில் கடக்கத் துடித்தன இருவரின் கால்களும். கூட்டத்தை விலக்கி கொண்டு ஓடிவந்த சஞ்சு, மைதிலியை நெஞ்சோடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக்கொள்ள, அடுத்த கணமே வந்து சேர்ந்த இந்துவும் இருவரையும் சேர்த்து தன் கரங்களால் வளைத்துக்கொண்டாள்.
 
போன் கால்களின் வழியே கடத்த முடியாத, வார்த்தைகளில் விவரிக்க முடியாத, ஒரு பேரன்பின் கவிதை அங்கே எழுதப்பட்டது. சொற்களற்ற அந்த அணைப்பு, அவர்களை மீண்டும் பழைய கல்லூரியின் ஜிலுஜிலுப்பான நாட்களுக்கே கொண்டு போய் நிறுத்தியது.
 
​பாபி, சந்தீப், மணிஷ், பிரேம், டைரக்டர் ஜேம்ஸ் என அனைவரின் உடம்பிலும் ஒரு சிலிர்ப்பான மொமென்ட் கடந்துபோனது. உண்மையான காதலின் சாட்சியாக நிற்கும் தேவதையை காண்பதில் அவர்களின் கண்கள் கலங்கினாலும், உதடுகளில் கான்ட்ராஸ்ட்டாக புன்னகை அரும்பியது.
​தோழிகளின் உணர்ச்சிப்பூர்வமான காட்சியை கண்டதும் பாபி நெகிழ்ந்து, பக்கத்தில் நின்றிருந்த மற்ற நண்பர்களை பார்த்து நெஞ்சார சொன்னான்:
​"டேய்... பாருடா! அன்னைக்கு காலேஜ்ல பார்த்த மாதிரி இல்லாம, இப்போ பார்க்கவே எவ்வளவு அழகா, ஸ்டைலா, கம்பீரமா மாறிருக்காடா..."
 
​சொல்லிவிட்டு, தூரத்தில் எங்கேயோ ஒரு புள்ளியை பார்த்து தன் கலங்கிய பார்வையை திருப்பிய பாபி, நெஞ்சில் கனத்த ஏக்கம் பொங்க... முணுமுணுத்தான்:
 
​"டேய் மனோ... எங்கடா இருக்க...? வந்து பாருடா, உன் மைதிலியை..."
 
மற்ற மாணவ மாணவிகளின் பார்வைகளும் மைதிலியின் மீது நிலைத்து நின்றன. அந்த பார்வைகளில் வெறும் அழகை கண்டு வியக்கும் சாதாரண ரசனை இல்லை; மாறாக, ஒரு மாபெரும் ஆச்சரியமும் திகைப்பும் படர்ந்திருந்தன. கல்லூரி காலத்தில் சஞ்சுவையும் இந்துவையும் தவிர வேறு யாருமே மைதிலியை ஒரு பொருட்டாகக்கூட நினைத்ததில்லை.
​கடைசி நாளில் ஆடிட்டோரியத்தில், ஏளனப்படுத்தப்பட்டு அழுது வடிந்த முகத்தோடு, எளிய தோற்றத்திலும் பார்த்த அந்த பழைய மைதிலி எங்கே... இத்தனை ஆண்டுகள் கழித்து, வாழ்க்கையின் கடுமையான புயல்களை எல்லாம் எதிர்கொண்டு, நம்பிக்கையும் கம்பீரமும் ஒருசேர மிளிரும் ஒரு பெண்ணாக நிமிர்ந்து நிற்கும் இந்த மைதிலி எங்கே! 
 
அன்னைக்கு அட்ரஸ்ஸே இல்லாம இருந்த பொண்ணு, இன்னைக்கு இவ்வளவு 'கிளாஸா' மாறின சம்பவத்தை விட, 'இப்படி ஒரு உண்மையான காதலா!' என்கிற பிரமிப்பு எல்லாரையும் உலுக்க... ஒருவித மெய்சிலிர்ப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
​மூன்று தோழிகளும் ஒருவரையொருவர் இறுக்கமாக அணைத்தபடி, வார்த்தைகளின்றி அழுதுகொண்டிருந்தார்கள். மரங்களின் இலைகளுக்கிடையே கசிந்த சூரிய ஒளி அவர்களின் முகங்களில் வெளிச்சத்தையும் நிழலையும் மாற்றி மாற்றி நெய்கிறது.
​காரணங்கள் ஏதுமின்றி அவர்களின் கண்களிலிருந்து வழிந்த ஆனந்தக் கண்ணீர்த்துளிகள், பல வருடப் பிரிவின் காயங்களை மெல்லக் கழுவி ஆற்றுவது போல அந்த இடத்தில் ஒரு ஜீவனுள்ள கவிதையாய் மாறுகிறது!
 
​பாபியும் மற்ற நண்பர்களும் தோழிகளை நோக்கி நெருங்கினார்கள்.
​சந்தீப் தன் வழக்கமான டோனில்,
 
"போதும்... போதும்! இப்பதான் அவ வந்திருக்கா... அதுக்குள்ள அவளை கசக்கி ஜூஸ் பிழிஞ்சிராதீங்க!" என்று சஞ்சுவையும் இந்துவையும் கலாய்த்தான்.
 
​மூவரும் அணைப்பிலிருந்து விலகி, சிரித்தபடியே தங்கள் கண்ணீரை துடைத்துக் கொண்டார்கள். அதை தொடர்ந்து பாபியும் மற்ற நண்பர்களும் மைதிலியிடம் நலம் விசாரித்தார்கள். மைதிலி அனைவரிடமும் புன்னகையோடு கைகுலுக்கி நலம் விசாரித்து, அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டாள்.
​அப்போது, ஸ்ரேயாவும் அவளது கேங்கும் நெருங்காமல் தள்ளி ஒதுங்கி நிற்பதை பாபி கவனித்தான்.
 
"Hey girls... அங்கயே ஏன் நிக்கிறீங்க? இங்க வாங்க!" என்று பாபி அவர்களை கூப்பிட்டான்.
 
அவர்கள் சங்கடத்துடன் மைதிலியிடம் போகலாமா வேண்டாமா என்று யோசித்தபடி வர ஆரம்பித்த அந்த சிறிய இடைவெளியில், பாபி மைதிலியை பார்த்து மெல்லிய குரலில்:
​"மைதிலி... ஸ்ரேயா இப்போ பழையபடி இல்லை, ரொம்பவே மாறிட்டா. அன்னைக்கு இருந்த பணத் திமிரும் ஆட்டிட்யூடும் இப்போ அவகிட்ட துளிகூட இல்லை. வாழ்க்கையில் படற அடிகள்தான் ஒவ்வொருத்தருக்கும் உண்மையான பாடத்தை கத்துக் கொடுக்கும்ங்கிறது அவ விஷயத்துல ரொம்பவே உண்மை. ரொம்ப உடைஞ்சு போயிருக்கா..." என்றான்.
 
​ஸ்ரேயா மற்றும் அவளது தோழிகளின் பாடி லாங்குவேஜை பார்த்ததுமே மைதிலிக்கு பாபி சொன்னது உண்மைதான் என்று புரிந்து போனது. ஸ்ரேயா முன்னால் நடந்து வர, அவளது தோழிகள் அவளுக்கு இணையாய் பக்கத்தில் நடந்து வந்தார்கள். ஸ்ரேயாவின் நடையில் பழைய நிமிர்வு இல்லை; குற்ற உணர்ச்சியால் கூனிக் குறுகி நடந்து வந்தாள்.
 
​மைதிலியை நெருங்கிய ஸ்ரேயா, கைகூப்பி, "தயவுசெய்து என்னை மன்னிச்சிரு மைதிலி... அன்னைக்கு பணத் திமிர்ல உங்க வாழ்க்கையில ரொம்பவே விளையாடிட்டேன். கடவுள் அதுக்குரிய தண்டனையை எனக்குக் கொடுத்துட்டான். சொந்த வாழ்க்கையும் கேள்விக்குறியாகி, பிசினஸும் எல்லாமே லாஸ் ஆகி, என் திமிருக்கும் ஈகோவுக்கும் ஏகப்பட்ட அடி வாங்கிட்டேன்... என்னை மன்னிச்சிரு plsss!" என்று சொல்லியபடியே அவளது காலில் விழப்போனாள்.
​மைதிலி பதறிப்போய் அவளை தூக்கி நிறுத்தினாள்.
 
​"என்ன SRK... நீ இப்படி இருக்கக் கூடாது! எங்க SRK-வுக்கு அழகே அந்த கெத்துதான். நீ இப்ப மாறினது எனக்கு சந்தோஷம். மத்தவங்களை மதிக்க ஆரம்பிச்சது நல்லது தான். ஆனா ஒண்ணு, ஆயிரம் பிரச்சனை வரட்டும் போகட்டும்... உன்னோட அந்த கெத்தை என்னைக்குமே விட்றாத! உன் மேல எனக்கு கோபமே கிடையாது, அதையெல்லாம் நான் நினைச்சுப் பார்க்குறதே இல்லை..."
 
​ஸ்ரேயாவின் கண்களில் நீர் முட்டி நின்றது. அவளது தளர்ந்த தோற்றத்தை பார்த்த 
 
மைதிலி, "எனக்கு இதெல்லாம் வேண்டாம்... எனக்கு பழைய SRK-தான் வேணும். நான் ஏத்துக்க மாட்டேன்! நீ இப்படி நின்னீனா நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன்!" என்றாள் உறுதியாக.
 
​இதே இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், தங்கள் வாழ்க்கையை அழித்த ஒருத்தியை மறுபடியும் பார்க்க நேர்ந்தால், ஏளனம் செய்து ஆசை தீரப் பழிதீர்த்திருப்பார்கள். ஆனால், தன் வாழ்வை சிதைத்தவளையும் மன்னிக்கத் துடிக்கும் மைதிலியின் இந்த மாபெரும் மனசை பார்த்து சஞ்சு, இந்து, பாபி மற்றும் அங்கிருந்த அத்தனை நண்பர்களும் பிரம்மிப்பில் உறைந்து நின்றார்கள்!
 
​மைதிலி ஸ்ரேயாவை பார்த்து, "Come on SRK! I want my old SRK back! I don't like this fragile version of you!" என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, அவளுக்கு பின்னால் நின்ற சலோனி, பிரணவி, திஷா, தான்வி, மகிமா எல்லாரையும் பார்த்தாள். 
 
"Come on girls! What happened to all of you? Where is that fierce attitude? Bring it back!" என்றாள்.
 
​ஸ்ரேயா அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு, கண்ணீரை சட்டென துடைத்துக் கொண்டாள். மைதிலியின் வார்த்தைகள் அவளுக்குள் ஏதோ ஒரு தீயை மூட்ட, தன் பாடி லாங்குவேஜை பழையபடி கெத்தாக மாற்றினாள். தோளை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தினாள்.
 
​"You really think you can replace me or beat my attitude, Mythili? No way... I am SRK, always!" 
 
என்று அவள் பழைய தெனாவட்டான ஆட்டிட்யூடோடு சொல்லிவிட்டு, உதட்டில் ஒரு மெல்லிய புன்னகையை சிதறவிட்டபடி தொடர்ந்தாள்:
  
​"But one thing மைதிலி... இந்த SRK யாருக்கும் தலைவணங்க மாட்டான்னு உனக்கே தெரியும். ஆனா அன்னைக்கு நான் பண்ணது தப்புங்கிற உண்மையை ஒத்துக்காம கடந்து போற அளவுக்கு நான் கோழையும் இல்லை! So yeah, I am sorry for what I did to you! இது பயந்து கேட்கிற மன்னிப்பு இல்ல... உன்னோட நல்ல மனசுக்கு இந்த SRK கொடுக்குற மரியாதை!"
 
​அதை பார்த்த மைதிலி கைதட்டி, "விசில் அடிங்கப்பா... தோ! இதுதான் எங்க SRK! தப்புன்னு தெரிஞ்சா அதை ஒத்துக்கவும் செய்யணும், அதே நேரம் நம்ம சுயமரியாதையை விட்டு தராம கெத்தாவும் நிக்கணும்! இனிமே உனக்கு வர்ற எந்த பிரச்சனையா இருந்தாலும் இதே ஆட்டிட்யூடோட ஃபேஸ் பண்ணு... அசால்ட்டா அடிச்சு தூள் பண்ணிரலாம்!" என்றாள் உற்சாகத்தோடு.
 
​மைதிலி பேச்சை கேட்டு பெருமிதமடைந்த சஞ்சுவும் இந்துவும் ஆளுக்கு ஒரு பக்கமாக சென்று மைதிலியின் தோளில் கை வைத்து, அவளது பரந்த மனதை கண்டு பெருமையோடு பார்த்தார்கள். ஸ்ரேயாவும் அவள் கேங்கும் இப்போதுதான் இன்னும் அதிகமாக வெட்கி தலை குனிந்தார்கள்.
 
'இவ்வளவு நல்ல மனசுக்காரியை போய் விரோதியா நினைச்சு அவ வாழ்க்கையை கெடுத்துட்டோமே' என்று அவர்களுக்கு இன்னும் அதிகமான மன கஷ்டம்.
 
மைதிலி அதை புரிந்து கொண்டவளாய், அதையெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர்களை சகஜப்படுத்தும் நோக்கத்தில், சாதாரணமாக அவர்களை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டாள்.
 
​அடுத்ததாக மைதிலி, மனோவை பற்றி கேட்கலாமா வேண்டாமா என்று மனதிற்குள் யோசித்து கொண்டிருந்தவேளையில், பாபியே அந்த விஷயத்திற்கு வந்தான்.
 
​"மனோ விஷயத்துல.." என்று ஆரம்பித்து அவர்கள் தேட எடுத்த நடவடிக்கைகள் எல்லாத்தையும் சொல்லி, அவனை இன்னும் கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை சொன்னான் டைரக்டர் ஜேம்ஸும் சேர்ந்து லோக்கலில் அலைந்து திரிந்து விசாரித்ததை பற்றி சொன்னான். 
 
"ஆனா... அவனைப் பத்தி யாருக்குமே எதுவுமே தெரியல. அவன் எங்க போனான், இப்போ எங்க இருக்கான்னு எந்த ஒரு க்ளூவும் கிடைக்கல..."
 
​டைரக்டர் சொல்லி முடித்த கணத்தில், அதுவரை இருந்த உற்சாக சூழல் மாறி, அந்த இடத்தில் திடீரென ஒரு கனத்த அமைதி படர்ந்தது.
 
​மைதிலியின் மனதுக்குள் 'ஜிலீர்' என்றது. 'அவனுக்கு என்ன ஆச்சோ தெரியலையே... உயிரோடு இருப்பானா இல்லையா...' என்ற எண்ணம் எழுந்ததும், அவளது நிதானம் லேசாக தடுமாறியது. அவளது விழிகளில் தவிப்பு கண்ணடித்துவிட்டு போனது.
 
​சூழலின் தீவிரத்தை உணர்ந்த சந்தீப்பும் மணிஷும் உடனடியாக சூழலை இயல்புநிலைக்குக் கொண்டுவர முயன்றார்கள்.
 
​சந்தீப் முன்வந்து, "சரி ஓகே... அவன் எங்கேயோ சந்தோஷமா, நல்லபடியா இருக்கான்னு நாம நினைச்சுப்போம் மைதிலி."
 
மணிஷ்: " அவனை தேடுற முயற்சியை நாம கைவிடப் போறதில்லை. அவனுக்கு என்ன ஆச்சு எங்க இருக்கான்னு தெரியற வரைக்கும் நிச்சயமா முயற்சி தொடரும். ஆனா, இத்தனை வருஷம் கழிச்சு நாம எல்லாரும் ஒண்ணா மீட் பண்ற இந்த ரீ-யூனியன் மொமெண்ட்டை நாம வீணாக்க வேண்டாம்... வாங்க!" என்று சொல்ல, 
 
மற்றவர்களும் மைதிலிக்கு தயக்கமும் வருத்தமும் வராதபடி அனைவரும் இயல்பாகப் பேசி அவளை உற்சாகப்படுத்தினார்கள்.
​நண்பர்கள் தன் உணர்வுகளுக்கு தரும் மரியாதையைப் பார்த்த மைதிலி, தன் தவிப்பை மறைத்து கொண்டு, அவர்களுக்கு தைரியமூட்டும் விதமாக புன்னகையோடு பேசத் தொடங்கினாள்.
 
​"ஹேய்... என்ன எல்லாரும் எனக்காக பேசுறீங்களா ? நான் ஒண்ணும் அப்செட் ஆகலடா! நிஜமா எனக்கும் அதேதான் தோணுது. அவன் எங்கேயோ நல்லபடியா, ஹேப்பியா இருப்பான்... இருக்கட்டும்! அவனுக்கான நேரம் வரும்போது அவன் கண்டிப்பா தேடி வருவான். அதுவரைக்கும் நான் கூலாதான் இருப்பேன்!" என்று உறுதியான குரலில் சொல்லி, நண்பர்களுக்கு நம்பிக்கை தந்தாள்.
 
அதைத் தொடர்ந்து, மற்ற டிபார்ட்மென்ட் நண்பர்களும் பிற மாணவ மாணவிகளும் மைதிலியை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். மைதிலியோடு பேசுவதற்கும், குரூப் போட்டோக்கள் எடுப்பதற்கும் பெரிய போட்டாபோட்டியே நடந்தது. மைதிலியும் பழைய நினைவுகளில் மூழ்கி, எல்லாரோடும் சிரித்துப் பேசி அந்த தருணத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்.
 
அதன் பிறகு, வழக்கமான ஒரு ரீ-யூனியனில் நடக்கும் அத்தனை கலாட்டாக்களும் அங்கே மெல்ல ஆரம்பமாகின.
​ஆரம்பத்தில் இருந்த அந்த முதல் கட்ட பாச விசாரணைகளும், உணர்ச்சிப்பூர்வமான தருணங்களும் கடந்ததும், கேம்பஸ் பழையபடி ஜாலியான ரகளைக்கு மாறியது. 'யார் யாருக்குக் கல்யாண ஆச்சு?', 'யார் அதிகமா வெயிட் போட்டிருக்கா?' என்று ஆளாளுக்குக் கூட்டம் கூட்டமாக நின்று கலாய்த்துக் கொண்டார்கள்.
 
மதியம் மணி 12
 
மைதிலி மனதிற்குள் ஒரு யோசனை ஓடிக்கொண்டே இருந்தது. இவ்வளவு தூரம் தனக்கு எல்லாமுமாக இருந்த சஞ்சுவிடமும் இந்துவிடமும் தான் லண்டன் செல்லப்போகும் விஷயத்தை சொல்லாமல் மறைப்பது சரியில்லை என்பதை மைதிலி உணர்ந்தாள்.
 
​கூட்டத்திலிருந்த இருவரையும் சைகை செய்து தனியாக அழைத்துச் சென்றாள் மைதிலி.
 
​"டி... உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்," என்று மைதிலி ஆரம்பித்து, ஆபீஸ் வேலையாக தான் லண்டன் செல்லப்போவதையும், அங்கேயே பெர்மனென்ட்டாக செட்டிலாக முடிவெடுத்திருப்பதை பற்றியும் சொன்னாள்.
​சொல்லி முடித்த மறுநொடி... சஞ்சுவும் இந்துவும் டென்ஷனின் உச்சத்திற்கே போய்விட்டார்கள்!
 
​"ஹேய்! லூசு மாதிரி பேசாத மைதிலி! என்ன லண்டனா? முடியவே முடியாது!" என்று சஞ்சு கத்தினாள்.
 
​இந்து குறுக்கிட்டு, "வேலையை உடனடியா ரிசைன் பண்ணு மைதிலி! இங்கேயே நல்ல கம்பெனியில வேலை கிடைக்காதா என்ன? உன்னை நாங்க லண்டனுக்கு அனுப்பவே மாட்டோம்!" என்று குதித்தாள்.
 
​"இங்க இந்தியாவுல இருக்கும்போதே எங்க கல்யாணத்துக்கு அப்புறம் உன்னைப் பார்க்க முடியாம போச்சு... இதுல நீ லண்டனுக்கு போயிட்டா அவ்வளவுதான்! அப்புறம் நாங்க உன்னை பார்க்கவே முடியாது!" என்று இருவரும் மாற்றி மாற்றி பொரிந்து தள்ளினார்கள்.
 
​மைதிலி புன்னகையோடு அவர்களை சமாதானப்படுத்த முயல, சஞ்சு மேலும் கோபமானாள்.
 
​"பெர்மிஷன் வாங்க வந்தியா? இல்ல, இன்ஃபர்மேஷன் சொல்ல வந்தியா? டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்டு, பேக்கிங் முதற்கொண்டு முடிச்சுட்டு இங்க வந்து நிக்குற... இந்த ஆப்பர்ச்சூனிட்டி உனக்கு வந்தன்னைக்கே இந்த விஷயத்தை எங்ககிட்ட சொல்லிருக்க வேண்டாமாடி?" என்று எகிறினாள்.
 
​"ப்ளீஸ்டி... இது என் கரியருக்கு ரொம்ப முக்கியமான ஆப்பர்ச்சூனிட்டி. எனக்கு இருக்குற ஒரே சொந்தம், ஒரே உறவு நீங்க மட்டும்தான்... உங்களை தவிர எனக்கு வேற யாருமே இல்லை. அப்புறம் நான் இங்க இருந்தா என்ன, லண்டன்ல இருந்தா என்ன? அதுவுமில்லாம லண்டன் எல்லாம் இப்போ ஒரு பிளைட் தூரம்தான்டி... புது ஊரு, புது இடம், புது நண்பர்கள், மனசு கொஞ்சம் 'ஃபிரெஷ்'ஷா இருக்கும்னு நினைக்கிறேன்..." என்று மைதிலி வெறுமையாய் சிரித்தாள்.
 
​அந்த சிரிப்பு ஒரு முகமூடி என்பதை சஞ்சுவும் இந்துவும் நொடியில் உணர்ந்து கொண்டார்கள். தன் தனிமையையும், மனதிற்குள் புதைத்து வைத்திருக்கும் துயரத்தையும் மறைக்கவே அவள் அந்தச் போலி சிரிப்பை ஏந்தியிருக்கிறாள் என்பதை இருவராலும் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.
​மைதிலி தன் சூழ்நிலையை நிதானமாக எடுத்து சொல்லி, அவர்களை மெல்ல சமாதானப்படுத்தினாள். அவளது முடிவை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவளது எதிர்காலத்தையும்,அவளை தின்று கொண்டிருக்கும் தனிமையையும் பார்த்து, அரைகுறை மனதோடு இருவரும் ஒருவாறாக சம்மதித்தார்கள்.
 
​அப்போது மைதிலி வாட்சில் டைம் பார்த்துவிட்டு:
​"லஞ்ச் முடிஞ்சதும் நடக்கப்போற மத்த நிகழ்ச்சிகள்ல என்னால கலந்துக்க முடியாதுடி... சாயங்காலம் 5 மணிக்கு எனக்கு ஃபிளைட். உங்களை பார்த்து இந்த விஷயத்தை சொல்லிட்டு போகணும்னுதான் வந்தேன். நான் இப்பவே மும்பை கிளம்பினாதான், ஏர்போர்ட் போயி, செக்-இன், போர்டிங் புரோசீஜர்ஸ் எல்லாம் முடிக்க கரெக்ட்டா இருக்கும். இன்டர்நேஷனல் ஃபிளைட் இல்லையா... ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே ஏர்போர்ட்ல ரிப்போர்ட் பண்ணியாகணும்..."
 
​"ஐயோ... அதுக்குள்ள கிளம்ப போறியாடி?"
 
​சஞ்சுவும் இந்துவும் அதிர்ச்சியோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். இத்தனை வருடங்கள் கழித்து, இப்போதுதான் அவளை பார்த்து ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை... அதற்குள் மீண்டும் ஒரு பிரிவா?
​ஆறு வருட இடைவெளியை நிரப்ப அந்த ஒரு மணி நேரம் போதவே இல்லை. மறுபடியும் தங்களை விட்டு தூரமாய்ப் போகப் போகிறாள் என்ற எண்ணமே இருவரின் நெஞ்சையும் பாரமாக அழுத்தியது. பிரிவின் அந்த மெல்லிய வலி, மூவரின் பார்வையிலும் அமைதியாய் வந்து அமர்ந்துகொண்டது.
 
​அந்த நேரம், டைரக்டர் ஜேம்ஸிற்கு அலைபேசியில் ஓர் அழைப்பு வந்தது. போன் திரையில் மின்னிய முன்பின் தெரியாத அந்தப் புதிய எண்ணை எடுத்து, "ஹலோ..." என்றான்.
 
​மறுமுனையில் பேசியவர் கூறிய விஷயத்தை கேட்க கேட்க, ஜேம்ஸின் முகத்தில் அதிர்ச்சி, ஆச்சரியம், திகைப்பு என அத்தனை உணர்ச்சிகளும் கூட்டணி அமைத்து படர்ந்தன.
​பேசியே முடித்த மறுநொடி, சற்றும் தாமதிக்காமல் பாபியையும் மற்ற நண்பர்களையும் கூட்டத்தில் தேடித் தன் பார்வையை சுழற்றினான். தூரத்தில் பாபி யாருடனோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும், அடித்துப் பிடித்து ஓடி சென்றான்.
 
​பதற்றத்தோடு மூச்சிரைக்க வந்து நிற்கும் டைரக்டரை பார்த்து பாபி குழப்பத்தோடு நோக்க, ஜேம்ஸ் பதட்டமாக கத்தினான்:
 
​"டேய்... மனோ எங்க இருக்கான்னு தெரிஞ்சிடுச்சுடா!"
 
​அந்த வார்த்தையை கேட்ட அடுத்த கணமே பாபியின் ரத்த ஓட்டத்தில் ஒரு பயங்கரமான பரபரப்பு தொற்றிக்கொண்டது. பாய்ந்து அவனது சட்டையை பற்றிப் பிடித்துக் கொண்டு, "என்னடா சொல்ற?! உண்மையாவா?!" என்றான்.
 
​"உண்மைதான்டா! இங்க பக்கத்துலதான் இருக்கான்... லோனாவாலாவுலதான் இருக்கானாம்! காலையில அவன பத்தி சுத்தி இருக்கிற நிறைய பேர் கிட்ட போட்டோவை காட்டிக் கேட்டு, என்னோட நம்பரை கொடுத்துட்டு வந்தேன்ல... அதுல ஒருத்தர்தான் இப்போ கால் பண்ணாரு. அவன் இருக்கிற இடத்தை காட்டுறேன்னு சொல்லி வெயிட் பண்ணிட்டு இருக்காரு! போலாமாடா?!"
 
பாபி: நெஜமாத்தான் சொல்றியா?
 
டைரக்டர்: டேய்! இதுவரைக்கும் நான் சொன்னது நிஜம்தான். போட்டோவை நிறைய பிரிண்ட் எடுத்து ஒரு சில பேரு கொடுத்துட்டு தான் வந்தேன். ஆனா இவர் சொல்ற ஆளு நம்ம மனோதானான்னு போய் பார்த்தா தானே தெரியும்.
 
​ஜேம்ஸ் சொன்ன விஷயத்தை பாபி மற்ற நண்பர்களிடம் ஓடிச் சென்று சொல்ல, அங்கே இருந்த அத்தனை பேரும் ஒரே நொடியில் பரபரப்பின் உச்சத்திற்குச் சென்றார்கள். பாபி அடுத்த நொடியே மைதிலி, சஞ்சு, இந்து மூவரையும் தேடி ஓடினான்.
​அவர்களை தேடிக் கண்டுபிடித்து, இந்த விஷயத்தை சொன்னதும்... சஞ்சுவும் இந்துவும் பேச்சு மூச்சற்று போக, மைதிலியோ அப்படியே திகைத்து நின்றாள்!
 
​நெஞ்சிற்குள் பூட்டி வைத்திருந்த ஏக்கம், தவிப்பு, காதல் என அத்தனை உணர்வுகளும் கட்டவிழ்த்து விட்டது போல் ஒரே நொடியில் அவளது முகத்தில் வந்து குவிந்தன. உதடுகள் நடுங்க, நம்ப முடியாத ஒரு செய்தியை கேட்டவள் போல அவளது பார்வையில் தவிப்பும் நம்பிக்கையும் மாறி மாறி மின்னின.
 
'மனோ... பக்கத்துலதான் இருக்கானா?!' — அந்த ஒரே ஒரு எண்ணம் அவளது இதயத் துடிப்பில் படபடப்பை ஏற்றியது.
​விஷயத்தை கேள்விப்பட்டு ஸ்ரேயாவும் அவளது கேங்கும் பதறியடித்து ஓடி வந்தார்கள். சுற்றியிருந்த மற்ற மாணவர்களுக்கும் விஷயம் தெரியவர, அந்த இடமே ஒட்டுமொத்தமாக பரபரப்பானது. அனைவரும் மனோ தானானு கன்ஃபார்ம் பண்ணிரலாம் என்று கிளம்ப தயாரானார்கள்.
 
​சஞ்சு பதற்றத்தோடு, "ஐயோ! வாங்கடி... உடனே போலாம்!" என்று கத்தினாள்.
 
​பாபி சுற்றிலும் கூடிநின்ற மற்ற நண்பர்களை பார்த்து, "Friends... இந்த விஷயம் கரெக்ட்டா இல்லையான்னு நமக்கு இன்னும் முழுசா தெரியல. Get together நடக்கட்டும். அதனால நாங்க முதல்ல போய் செக் பண்ணிட்டு உங்களுக்கு வந்து தகவல் சொல்றோம்!" என்று சொல்லிவிட்டு, 
 
"டேய் சிக்கி.. வந்தவங்கள கவனிடா..", என்றதும், அவன் ஆமோதித்து தலையாட்டினான்.
 
பிறகு, "டேய் டைரக்டர்... வாடா!" என்று பாபி உரக்க கத்தினான். 
 
​மறுநொடி, மைதிலி, சஞ்சு, இந்து, பாபி, சந்தீப், மனிஷ், பிரேம், ஜேம்ஸ், ஸ்ரேயா மற்றும் அவளது கேங் என அத்தனை பேரும் பார்க்கிங் பகுதியை நோக்கி அரக்க பறக்க ஓடத் தொடங்கினார்கள். 
 
ஆறு வருடங்களுக்கு முன்னால், கல்லூரியின் கடைசி நாளில் எப்படி டென்ஷனாக அத்தனை பேரும் கூடி நின்றார்களோ... அதே தவிப்பை தான் ரீயூனியனுக்கு வந்தவர்கள் இன்றைக்கும் உணர்ந்தார்கள்.
 
பார்க்கிங்கை அடைந்ததும், சஞ்சுவும் இந்துவும் தாங்கள் வந்த காரை அப்படியே அங்கே விட்டுவிட்டு, மைதிலி வந்த காரில் ஏறி அமர்ந்தார்கள். டாக்ஸி டிரைவர் அவர்கள் பதட்டத்தை பார்த்து அவசரமாக ஏறி காரை ஸ்டார்ட் செய்தார். ஸ்ரேயா, சலோனி, பிரணவி மூவரும் மகிமாவின் காரில் ஏறிக்கொள்ள, தான்வியின் காரில் திஷா ஏறி அமர்ந்தாள். பாபியின் காரில் சந்தீப் ஏறிக்கொண்டான். மணிஷ் தன் பைக்கில் ஏற, பிரேமின் பைக்கிற்கு பின்னால் டைரக்டர் ஜேம்ஸ் தாவியமர்ந்தான்.
 
​அடுத்த நொடி.. அத்தனை வாகனங்களும் லோனாவாலாவை நோக்கி சீறி பறந்தன!
 
தொடரும்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
 
 ஜானகி மந்திரம் 41
 
​லோனாவாலா ரயில்வே ஸ்டேஷன் வாசலில் பிரேமின் பைக் சீறி வந்து நிற்க, பின்னால் அமர்ந்திருந்த டைரக்டர் ஜேம்ஸ், பைக்கை முழுமையாக நிறுத்துவதற்கு முன்பே துள்ளிக்குதித்து இறங்கினான்.
 
​காதருகே வைத்திருந்த அலைபேசியில், "எங்க இருக்கீங்க சார்?" என்று கேட்டபடியே சுற்றிலும் பார்வையை சுழற்றினான். அடுத்தடுத்த விநாடிகளில் கார்களும் பைக்குகளும் வரிசையாக வந்து நின்று புகையை வெளித்தள்ளின. இறங்கிய நண்பர்கள் அத்தனை பேரின் முகத்திலும் பதற்றமும் பரபரப்பும் அலைமோதின.
​போனில் பேசியபடியே சுற்றிலும் தேடிய ஜேம்ஸை பார்த்து, தூரத்தில் நின்றிருந்த ஒருவர் கையை உயர்த்தினார்.
 
"தம்பி! இங்க இருக்கேன்... லெப்ட்ல பாருப்பா!"
​ஜேம்ஸ் இடப்பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு, அவரை நோக்கி ஓடினான். அவருக்கு சுமார் 50 வயதிருக்கலாம். முகத்திலும் உடம்பிலும் வயது தன் தடங்களை பதிக்கத் தொடங்கியிருந்தது. கண்களில் ஒரு சோடாபுட்டி கண்ணாடி. வாகனங்களில் இருந்து இறங்கிய பாபியும், மைதிலியும் மற்றவர்களும் ஜேம்ஸை பின்தொடர்ந்து டென்ஷனாக ஓடி சென்றார்கள்.
 
​ஜேம்ஸ் அவரருகே சென்று மூச்சிரைக்க, "சார்... போன்ல சொன்னது உண்மையா? மனோவை பார்த்தீங்களா?" என்று கேட்க, 
 
அவர் நிதானமாக, "ஆமாப்பா... இந்த தம்பியை எனக்கு நல்லா தெரியுமே", என்றார்.
​அதற்குள் அனைவரும் வந்து அவர்களை சூழ்ந்துகொண்டார்கள். திடீரென அத்தனை பேர் ஓடிவந்து சூழ்ந்ததும், பெரியவர் புரியாமல் பார்த்தார்.
 
​"சார்! அவன் இப்போ எங்க?... நாங்க மனோவை தேடுற விஷயம் உங்களுக்கு யாரு சொன்னா?" என்று ஜேம்ஸ் கேட்க....
 
​"தம்பி, என் பேரு கங்காதர். இங்க டூரிஸ்ட் கைடு, லேண்ட் புரோக்கர், வீடு புரோக்கர்னு எல்லா வேலையும் பார்க்குறவன். காலையில நீங்க வந்து விசாரிச்சதை ஸ்டேஷன்ல புக் ஷாப் வச்சிருக்காரே ராம்லால்... அவரு சொன்னாரு. போட்டோவை காமிச்சதும், எனக்கே சட்டுனு அடையாளம் தெரியல்லை. அது பழைய போட்டோ போல... வேற யாருக்கும் அடையாளம் தெரிஞ்சிருக்காது ஆனா நான் அவங்க வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வர்றதுனால எனக்கு தெரியும். அதான் ராம்லால்கிட்ட நம்பர் வாங்கி உங்களுக்கு கால் பண்ணேன்..." என்று சொல்லி தன் கையிலிருந்த போட்டோவை நீட்டினார்.
​பாபி படக்கென்று அதை வாங்கி பார்த்தான். காலேஜ் டைமில் எடுக்கப்பட்ட ஏதோ ஒரு குரூப் போட்டோவில் மனோவின் முகத்தை ஜூம் செய்து பெரிதாக்கியிருந்தான். பாபியிடமிருந்து மைதிலி அதை தவிப்போடு வாங்கி பார்த்தாள். மனோவின் போட்டோதான்!
 
போட்டோ ஒவ்வொருத்தராக கைமாறியது. அவர்களின் பதட்டத்தையும் தவிப்பையும் பார்த்த கங்காதர் திகைத்தார்.
 
​"சார்... இப்போ எங்க சார் அவரு?" மைதிலியின் குரல் உடைந்து, கண்கள் கலங்கின.
​கங்காதர் அவளது கலக்கத்தை பார்த்துவிட்டு, 
 
"நீங்க எல்லாரும் இப்படி டென்ஷனா வந்து நிக்கிறதை பார்த்தா ஏதோ முக்கியமான விஷயம்னு தோணுது. இந்த தம்பியையும் அவங்க அம்மாவையும் எனக்கு ரொம்ப நாளாவே தெரியும்மா... நான்தான் அவங்களுக்கு இங்க வீடு பார்த்து கொடுத்தேன். ஸ்டேஷன் பக்கத்திலேயே இருக்கிற திலக் ரோட்ல தான் வீடு இருக்கு. 'வாழ்ந்து கெட்ட குடும்பம்'னு கேள்விப்பட்டேன். சுலோச்சனா அம்மா எனக்கு நல்ல பழக்கம். அவங்க வீட்டுக்காரர் இறந்ததுக்கு அப்புறம் அவங்களும் மனோ தம்பியும் இங்க வந்து செட்டில் ஆயிட்டாங்க. இடையில எப்பவோ மனோ தம்பிக்கு ஆக்சிடென்ட் ஆனதா கேள்விப்பட்டேன்... அவரு இப்ப இருக்கிற நிலைமைக்கு அதுதான் காரணம்ன்னு தெரிஞ்சுகிட்டேன்.. அவங்க இங்க வந்து ரெண்டு வருஷம் ஆகப்போகுது. எந்த உதவி வேணும்னாலும் அம்மா என்கிட்டதான் கேட்பாங்க..." 
 
​சுலோச்சனா, மனோ என்று பெயர்களை கச்சிதமாக சொல்கிறார் என்றால், இது நிச்சயம் தங்கள் மனோதான் என்பதை பாபியும் நண்பர்களும் உறுதியாக உணர்ந்துகொண்டார்கள்.
 
ஆனாலும் நிலைமை அது இதுன்னு ஏதோ பொடி வச்சி பேசுறாரே என்று பாபிக்கு உள்ளூர டவுட் கிளம்பியது.
 
​சஞ்சுவும் இந்துவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, நம்பிக்கை பொங்க கைகளை பிடித்துக்கொண்டார்கள். ஸ்ரேயாவின் முகத்திலோ 'தான் செய்த தப்பால்தான் இவங்க குடும்பத்துக்கு இப்படி ஒரு நிலைமையா?' என்ற குற்ற உணர்ச்சியும், அவனை பற்றிய உண்மையை அறியும் பதற்றமும் மேலும் கூடியது. மைதிலி வார்த்தைகளின்றி, அவள் கைகளுக்கு மறுபடியும் கிடைத்த மனோவின் போட்டோவையே பார்த்தபடி உணர்ச்சிப் பெருக்கில் உறைந்து நின்றாள்.
 
​பாபி பொறுமையிழந்து, "ரொம்ப நல்ல செய்தி சொன்னீங்க சார்! அவனைத்தான் நாங்க ஆறு வருஷமா தேடிக்கிட்டு இருக்கோம்... இப்போ அவன் எங்க இருப்பான்?" என்று கெஞ்சாத குறையாக கேட்டான்.
 
கங்காதர்: சொல்றேன்பா... நீங்கல்லாம் யாரு? என்று கேட்க,
 
சந்தீப்: சார், நாங்கல்லாம் காலேஜ்ல அவன் கூட படிச்சவங்க. அவன் எங்க உயிர் நண்பன் சார். அவனை தான் ரொம்ப வருஷமா வலை வீசி தேடிட்டு இருக்கோம்... இப்பவாவது சொல்லுங்க. எங்க இருப்பான் அவன்? அவனை உடனே பார்த்தாகணும்.
 
"ஓஹோ சிநேகிதன்களா!!! இப்ப கரெக்ட்டா எங்க இருப்பார்னு தெரியலப்பா... ஆனா, தினமும் தவறாம சாயங்காலம் 5 மணிக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துருவாரு. கரெக்டா ஆறு மணி வரைக்கும் அங்க தான் இருப்பாரு. என்னத்த சொல்றது? அந்த தம்பிய பார்த்தாலே மனசுக்கு கஷ்டமா இருக்கும்ப்பா.. என்ன பிரச்சனையோ என்னவோ ஆக்சிடென்ட்னாலதான் இப்படி இருக்கிறதா அம்மா சொன்னாங்க! தம்பி இந்நேரம் வீட்லயும் இருக்கலாம்... வீடு எனக்கு தெரியும், நான் வேணா கூட்டிட்டு போறேன்."
 
​கங்காதர் பரிதாப உணர்வோடு சொன்ன விதமும், பெருமூச்சு விட்டதும், பாபி உட்பட நண்பர்கள் அனைவருக்கும் ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கிறதோ என்ற சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது.
 
பாபி பதட்டமாக,
"என்ன சார் என்னென்னமோ சொல்றீங்க? ரொம்ப பயமாருக்கு. என்ன விஷயம் சார்? வெளிப்படையா சொல்லுங்க...", என்று கெஞ்ச,
 
என்னதான் நண்பர்களாக இருந்தாலும், சுலோச்சனா அம்மாவின் அனுமதி இல்லாமல் அத்தனை பெரிய விஷயத்தை சொல்லிவிடக் கூடாது என்ற தயக்கம் அவரை தடுத்தது.
 
கங்காதர் பரிதாபமாக அவர்கள் எல்லாரையும் பார்த்து,
"அதான் வந்துட்டீங்களே, நீங்களே தெரிஞ்சுக்கவீங்க. வாங்க, வீடு எனக்கு தெரியும், நானே கூட்டிட்டுப் போறேன்", என்றார்.
 
​"ஐயோ தெய்வமே... கூட்டிட்டு போங்க சார்!" என்று பாபி, சந்தீப், மணிஷ், பிரேம் அனைவரும் அவர் காலில் விழாத குறையாக கேட்டுக்கொண்டார்கள்.
 
​'தினமும் தவறாம சாயங்காலம் 5 மணிக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துடுவாரு...' கங்காதர் சொன்ன இந்த வரிகள் மைதிலியின் மனதுக்குள் அதிர்வை ஏற்படுத்தின.
​ஆறு வருடங்களுக்கு முன்பு, இதே ஐந்து மணி ரயில் பயணம்தான் அவளது உலகத்தை தலைகீழாக புரட்டிப் போட்டது. அதுக்கும் இதுக்கும் முடிச்சு போட்டு என்னென்னமோ யோசித்தாள். 
இது வெறும் தற்செயல் தானா, அல்லது விதி அவளோடு விளையாடும் மற்றொரு ஆபத்தான விளையாட்டுக்கான தொடக்கமா? '
உள்ளுக்குள் பயங்கர தவிப்பும் விவரிக்க முடியாத ஓர் பயங்கர உணர்வும் அவளை ஆட்கொண்டன.
 
பாபி: சார், வீடு பக்கத்துல தானா? நடந்து போயிரலாமா? இல்ல, வண்டியில போலாமா?
 
கங்காதர்: 
​"வண்டி எல்லாம் இங்கேயே இருக்கட்டும்ப்பா, நடந்தே போயிரலாம்... பக்கத்துலதான்," என்று முன்னால் நடக்க, அனைவரும் நெஞ்சில் படபடப்போடு அவரை பின்தொடர்ந்து நடந்தார்கள்.
 
'மனோவை அதே பழைய மாதிரி பார்க்கப் போகிறோமா, அல்லது கங்காதர் சொன்ன புதிரான வார்த்தைகளுக்கு பின்னே ஏதேனும் கசப்பான உண்மை ஒளிந்திருக்கிறதா?' என்ற கேள்விகள் பாபி, மைதிலி உட்பட அனைவரின் மனதையும் உலுக்கின. 
 
லோனாவாலா ரயில்வே ஸ்டேஷனை தாண்டி, மதிய வெயிலின் மிதமான உஷ்ணமும், கடைத்தெருவில் மக்களின் சலசலப்பும் பின்னணியில் கேட்க, திலக் ரோட்டின் வளைந்து நெளிந்த குறுகிய தெருக்களில் அவர்கள் நடந்தார்கள்.
பயமும் எதிர்பார்ப்பும் பின்னிப்பிணைந்த அந்த அமைதியான நடையில், நண்பர்களின் மூச்சுக்காற்று மட்டுமே உரக்கக் கேட்டது.
 
கங்காதர் சொன்னபடியே வீடு மிக அருகில் இருந்தது. மூன்று நிமிட நடைப்பயணத்திலேயே அந்த வீட்டின் வாசலில் வந்து நின்றார்கள்.
​சாலையோரத்திலேயே அமைந்திருந்த அந்த வீடு, ஹில் ஸ்டேஷன்களுக்கே உரித்தான பாணியில் வர்ணம் மங்கிய மரச் சட்டகங்கள், தடிமனான கான்கிரீட் சுவர்கள் மற்றும் சரிவான தகரக் கூரையோடு நின்றிருந்தது. வீட்டுக்கு முன்னால் ஒரு சிறிய காம்பவுண்ட் சுவரும், கேட்டும் இருந்தன.
 
​கங்காதர் முன்னால் சென்று கேட்டை திறந்து, கதவை தட்டி, "அம்மா..." என்று கூப்பிட்டார்.
​வெளியே நின்றிருந்த நண்பர்கள் அத்தனை பேரும் மனோதான் கதவை திறப்பானோ என்ற உச்சக்கட்டப் பதற்றத்தோடும் எதிர்பார்ப்போடும் மூச்சை அடக்கிக் கொண்டு நின்றார்கள்..
 
​சில விநாடிகளில் தாழ்ப்பாள் திறக்கப்படும் சத்தம் கேட்டது. உள்ளிருந்து சுலோச்சனா அம்மா வெளியே வந்து பார்த்தார். கதவருகே நின்றிருந்த கங்காதரையும், அவருக்கு பின்னால் கேட்டில் கூட்டமாக நின்றிருந்த இளைஞர்களையும் இளைஞிகளையும் பார்த்து, என்னவென்று புரியாமல் ஒரு கணம் விழித்தார்.
​ஆனால், கூட்டத்தில் நின்றிருந்த பாபி, சந்தீப், மணிஷ், பிரேம் ஆகியோரை பார்த்த அடுத்த விநாடி... அவரது பார்வையில் அடையாளம் கண்டுகொண்ட ஒளி தோன்றி மறைந்தது. பூனே பங்களாவிற்கு இவர்கள் வந்து சென்றதை அவர் மறக்கவில்லை.
​பல வருடங்களுக்கு பிறகு, மகனின் நண்பர்களை வாசலில் பார்த்ததும், சுலோச்சனா அம்மாவின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. ஆனால், அது சாதாரண புன்னகை அல்ல... வாழ்ந்து கெட்டு, காலத்தின் கைகளால் அடிபட்டு, கஷ்டத்தின் விளிம்பில் நிற்கும் ஒரு குடும்பத்தை சந்திக்க வரும்போது அரும்பும் தவிப்பும், சங்கடமும் கலந்த புன்னகை.
 
​அவரை பார்த்த பாபிக்கு மனசே கேட்கவில்லை. பூனே பங்களாவில் கம்பீரமாக, ஒரு ராணியைப் போல வலம் வந்த சுலோச்சனா அம்மாவா இது? அலங்காரங்கள் ஏதுமின்றி, மிகவும் எளிமையான ஒரு சாதாரணப் புடவையில் நின்றிருந்த அவரை பார்த்தபோது பாபிக்கும் மற்ற நண்பர்களுக்கும் மனசு ரணமானது. 
 
பாபி தன்னிலைக்கு வந்து, "அம்மா... எப்படிமா இருக்கீங்க? பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சு? என்ன ஞாபகம் இருக்காம்மா... நான் பாபி! ரொம்ப கஷ்டப்பட்டு உங்க வீட்டை தேடி கண்டுபிடிச்சு வந்திருக்கோம்மா..." என்றான் 
 
​சுலோச்சனா சட்டென்று சுதாரித்துக்கொண்டு, "உன்னைத் தெரியாம இருக்குமாப்பா? நல்லாவே ஞாபகம் இருக்கு. ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்குறதுல டக்குனு அடையாளம் தெரியல... எல்லாரையும் நல்லா ஞாபகம் இருக்கு. சந்தீப், மணிஷ், பிரேம்..." என்று சுற்றிலும் நின்றிருந்தவர்களை பார்த்தபடி சொன்ன சுலோச்சனா... மைதிலி, சஞ்சு இந்து, ஸ்ரேயா and மற்ற பெண்களை பார்த்து, "இந்த பொண்ணுங்கல்லாம் யாருப்பா?" என்று கேட்டார்.
 
​"இவங்கல்லாம் எங்க கூட படிச்சவங்கதான்ம்மா. இன்னைக்கு கண்டாலா காலேஜ்ல எங்க செட்டுக்கு ஒரு கெட்-டுகெதர் நடக்குது. அதுக்காகத்தான் எல்லாரும் வந்தோம். மனோவைத்தான் ரொம்ப வருஷமா தேடிக்கிட்டு இருந்தோம். நீங்க இருக்கிற இடம் எங்களுக்கு தெரியல... மனோ இல்லாம, அவனை பார்க்காம, அவன் கூட பேசாம ரொம்ப கஷ்டப்பட்டோம். கெட்-டுகெதர் வந்த இடத்துல மனோவை பத்தி ரயில்வே ஸ்டேஷனில் விசாரிக்கும்போதுதான் கங்காதர் அண்ணன் அறிமுகம் கிடைச்சது. அவரை பிடிச்சு இங்க வந்தோம்," என்று நடந்ததை சுருக்கமாக விவரித்தான் பாபி.
​அனைவரையும் வெளியே நிற்க வைத்து பேசுவதை உணர்ந்த சுலோச்சனா, "அப்படியாப்பா... எல்லாரும் தயவுசெஞ்சு உள்ள வாங்க," என்று சொல்ல,
 
​அந்த நேரத்தில் கங்காதர், "சரிம்மா, நான் கிளம்புறேன். தம்பிக நம்ம மனோவை பத்தி விசாரிச்சுக்கிட்டு சுத்திட்டு இருந்தாங்க, அதான் நான் கூட்டிட்டு வந்து விட்டேன். நீங்க பேசுங்கம்மா," என்று சொல்லிவிட்டு விடைபெற்று சென்றார்.
 
​அவரை வழி அனுப்பிவிட்டு சுலோச்சனா உள்ளே செல்ல, அவரது அழைப்பை ஏற்று அனைவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள். ஆனால், மனோ உள்ளே இருப்பானா, இருந்தால், என்ன நிலையில் இருப்பான் என்ற பயமும், பதற்றமும், தவிப்பும் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் அடங்காமல் கொந்தளித்து கொண்டிருந்தது.
 
​சிறிய வீடு என்று சொல்ல முடியாது ஓரளவுக்கு மீடியமான வீடு. ஹால் மாதிரி ஒரு முன்னறை, அதை ஒட்டி ஒரு சிறிய பெட்ரூம், பக்கத்தில் இன்னொரு அறை, ஒரு ஓரத்தில் கிச்சன் மற்றும் பேக்யார்டு. ஹாலில் ஒரே ஒரு சோபாவும், இரண்டு நாற்காலிகளும் மட்டுமே கிடந்தன. சுலோச்சனா அம்மாவை பாபி சோபாவில் அமர வைக்க, மற்ற அனைவரும் நின்று கொண்டே இருந்தார்கள். மைதிலியும் மற்றவர்களும் தங்கள் பார்வையை சுற்றிலும் சுழற்றி மனோ எங்கேனும் தென்படுகிறானா என்று தேடினார்கள். ஆனால், அந்த வீட்டில் அவன் இருப்பதாகவே எந்த அடையாளமும் தெரியவில்லை.
 
​"இருங்கப்பா... சாப்பிடுறதுக்கு ஏதாச்சும் பண்றேன்," என்று சுலோச்சனா எழுந்து செல்ல முயல, "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாமா... நாங்க மனோவை பார்க்கத்தான் வந்தோம்," என்றான் பாபி.
 
​பாபி அப்படி சொன்னதுதான் தாமதம்; சுலோச்சனாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து கொட்டியது. அத்தனை பேரையும் பார்த்தபடி அவர் விசும்பி விசும்பி அழ தொடங்க, என்ன சொல்வதென்று தெரியாமல் அனைவரும் திகைத்துப்போய் நின்றார்கள். அவர் கொஞ்சம் நிதானமடையட்டும் என்று கொஞ்ச நேரம் அமைதியாக காத்திருந்தார்கள்.
 
​பாபி மட்டும் பொறுக்க முடியாமல், "அழாதீங்கம்மா... தயவுசெஞ்சு அழாதீங்க! மனோவுக்கு என்ன ஆச்சு? அவன் எங்க? இப்போ வீட்ல இல்லையா? அவனுக்கு என்ன தான் ஆச்சு? ஏன் இப்படி தலைமறைவா இருக்கிறான்? யோசிச்சு யோசிச்சு மண்ட வெடிச்சிடும் போலருக்கு. தயவு செய்து சொல்லுங்க" என்று தவிப்போடு கெஞ்ச,
 
சுலோச்சனா தன் சேலை முந்தானையால் கண்ணீரை துடைத்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.
 
​"அவன் இப்ப வீட்டுல இல்லப்பா... என்னன்னு சொல்லுவேன்... ஏதுன்னு சொல்லுவேன்? எப்படில்லாம் இருந்த குடும்பம்! எத்தனை பேருக்கு சோறு போட்ட குடும்பம்... என்னோட பையனும் ராஜா வீட்டுக்கண்ணுக் குட்டி மாதிரி இருந்தான்! இன்னைக்கு அவன் நிலைமையை பார்த்தா..."
 
​அவர் இந்தப் பீடிகையோடு ஆரம்பித்தபோதே, ஏதோ ஒரு மாபெரும் அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்து அனைவரின் நெஞ்சிலும் பயமும் நடுக்கமும் தொற்றிக்கொண்டது.
 
சுலோச்சனா தொடர்ந்தார்.
​"அவன் லவ் பண்ண பொண்ணை தேடி ட்ரெயின்ல போகும்போது ஆக்ஸிடென்ட் ஆகி ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆன விஷயம் உங்களுக்கெல்லாம் தெரியும். நீங்க எல்லாரும் கூடத்தான் அங்க இருந்தீங்க... எனக்கு ஞாபகம் இருக்கு. ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சு, 'கோமால இருக்குறவன் சீக்கிரம் கண்ணு முழிச்சிருவான்'னு டாக்டர்கள் உறுதி சொன்ன பிறகுதான் அவங்கப்பா உங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பி வச்சாரு. ஆனா, அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா? கோமால இருந்து கண்ணு முழிச்சவன்... அவன் அவனாவே இல்லை! எப்ப பார்த்தாலும் மைதிலி, சன்ஷைன் இந்த ரெண்டு பேரைத்தான் மாத்தி மாத்தி பிதற்றுவான்."
 
​சுலோச்சனாவின் குரல் இன்னும் தழுதழுத்தது.
 
​"'என் மைதிலி!'... 
 
'என் மைதிலிக்கு ஆபத்து!'...
 
'அவளைத் தடுத்து நிறுத்தியிருக்கணும், முடியாம போச்சே!'... 
 
'தப்பு பண்ணிட்டேனே, எனக்காகத்தானே எல்லாத்தையும் செய்தாள்!'...
 
'அவளை என்னால காப்பாத்து முடியலையே!'... இதே வார்த்தைகளைத்தான் திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருப்பான், முணுமுணுத்துகிட்டே இருப்பான். நாங்க பதறிப்போய் டாக்டர்ஸ் கிட்ட கேட்க, அவங்க பல வகையான டெஸ்ட்டுகள் எடுத்து பார்த்தாங்க."
 
​அந்த துயர சம்பவத்தை நினைவுகூர்ந்தபடி சுலோச்சனா தொடர்ந்தார்:
 
​"டாக்டர்ஸ் ஸ்கேன் பண்ணிப் பார்த்துட்டு, சைக்கியாட்ரிஸ்ட் நிறைய பேரை கன்சல்ட் பண்ணி அதிர்ச்சியான ஒரு விஷயத்தை சொன்னாங்க. அவனுக்கு 'Retrograde & Anterograde Post-Traumatic Amnesia' வோட சேர்த்து 'Fixated Traumatic Memory Loop' என்ற ஆபத்தான மனநலப் பாதிப்பும் ஏற்பட்டிருக்குன்னு சொன்னாங்க. அதாவது, அந்த விபத்து நடந்த அன்னைக்கு சாயங்காலம் 5 மணி வாக்குல அவனோட மண்டையில் அடிபட்டு மூளையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அவனோட நினைவாற்றலை அந்த ஒற்றைப் புள்ளியிலேயே முடக்கி வச்சிருச்சாம்! அதுக்கு மேல அவனால எதையும் யோசிக்கவோ, புதிய நினைவுகளை மூளையில பதிவு பண்ணவோ முடியாத சூழ்நிலையில்... அதிலேயே அவன் மூளை 'ஹேங்' ஆகி நிக்குதுன்னு சொன்னாங்க. 
 
பெரிய சைக்கியாட்ரிஸ்ட்ல இருந்து பெரிய பெரிய நியூராலஜிஸ்ட் வரைக்கும் கூப்பிட்டு போய் காமிச்சோம்ப்பா... அவங்க எல்லாரும் சொன்ன விஷயம் என்னன்னா... எத்தனையோ ஆக்ஸிடென்ட் கேஸ், மெமரி லாஸ் பார்த்திருக்கோம்... ஆனா, ஒரே ஒரு குறிப்பிட்ட நேரத்துலயும், ஒரே ஒரு சம்பவத்துலயும் மட்டும் நினைவுகள் உறைஞ்சு போய் நிக்கிற இந்த மாதிரி ஒரு விசித்திரமான கேஸை நாங்க பார்த்ததே இல்லை! மருத்துவ வரலாற்றுலயே இது ரொம்ப அபூர்வமான, அரிதான கேஸ்'ன்னு சொன்னாங்கப்பா.
 
அதுக்காக அவனுக்கு 'Hyperbaric Oxygen Therapy' கொடுத்து பார்த்தாங்க. மூளை நரம்புகளை தூண்டுறதுக்காக 'Cognitive Rehabilitation Therapy', 'Transcranial Magnetic Stimulation' சிகிச்சைன்னு எதையுமே விட்டு வைக்கல. வீரியமான நரம்பியல் மருந்துகளையும் கொடுத்தாங்க..."
 
​கண்ணீரோடு தொடர்ந்தார் சுலோச்சனா:
​"சொத்து, பணம் எல்லாம் இருந்தும் என்னப்பா பிரயோஜனம்? இவனை பழையபடி மீட்டெடுக்க படாத பாடு பட்டோம்... மும்பை, டெல்லினு இந்தியால இருக்குற பெரிய பெரிய நியூரோ சர்ஜன்ஸ், சைகியாட்ரிஸ்ட் எல்லாரையும் போய் பார்த்தோம். லட்சக் கணக்குல பணத்தை கொட்டியும் அவனுக்கோ எந்த முன்னேற்றமும் இல்லை!
 
அப்புறம் டாக்டர்ஸ் என்ன சொன்னாங்கன்னா, மன அழுத்தத்தை குறைக்க இயற்கை சூழல்ல வச்சிருந்தா ஏதாச்சும் நல்ல மாற்றம் வரலாம்னு யோசனை சொன்னாங்க. அதுக்காக அவங்கப்பா அவனை மாத்தேரானில் இருக்குற நம்ம எஸ்டேட்டுக்கு கூட்டிட்டுப்போய் வச்சு வீட்டிலேயே ட்ரீட்மென்ட் கொடுத்தாரு. ஆனா, அங்கயும் எந்த முன்னேற்றமும் இல்லை! மாறாக, அங்கிருந்து அடிக்கடி யாருக்கும் தெரியாம எஸ்கேப் ஆகி லோனாவாலா ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துருவான். முதல் தடவை அவன் எங்க போனான்னு தெரியாம, தேடித் திரிஞ்சு, தவிச்சு கடைசியில இங்க லோனாவாலா பிளாட்பாரத்துல உட்கார்ந்திருக்கிறதை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்தோம். எப்போ பார்த்தாலும் அவன் வாயில இருந்து வர்ற ஒரே விஷயம்... 'மைதிலியை காப்பாத்த தவறிட்டேன், அவளை கைவிட்டுட்டேன், என்னாலதான் அவ வாழ்க்கை நாசமாச்சு'... அவனோட மூளை அந்த நிமிஷத்துல உறைஞ்சுபோச்சு, அதுலருந்து வெளியேவே வரல!
 
வெளியே போக விடாம ரூமுக்குள்ளேயே பூட்டி போட்டா, பெல்ட் எடுத்து, இல்லன்னா கைல கிடைக்கிற எதையாவது எடுத்து அவனே அடிச்சுக்குவான். என்ன பண்றதுனே புரியல. இதையெல்லாம் பார்த்துட்டு டாக்டர்ஸ் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் எச்சரிச்சாங்க... 'அவன் பிதற்றுறப்பவோ அல்லது அந்த 5 மணி ரயில்வே ஸ்டேஷன் போற விஷயத்தை யாராவது தடுத்து நிறுத்த முயன்றாலோ, அவன் ரொம்ப வயலன்ட் ஆக வாய்ப்பு இருக்கு. அவனை யாரும் தடுக்கக் கூடாது. ஒருவேளை அவனை கட்டுப்படுத்த நினைச்சா, 'தான் ஏதோ மாபெரும் தப்பு பண்ணிட்டோம்'ங்கிற குற்ற உணர்ச்சி அவனுக்குள்ள அளவுக்கு அதிகமா கூடி, கோபப்பட்டு தன்னையே தண்டிச்சுக்கவோ அல்லது தற்கொலை பண்ணிக்கவோ துணிஞ்சுருவான்... அதனால் அவன் போக்கிலேயே விட்டுடுங்க'ன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க.
 
சுலோச்சனா பேசப்பேச அங்கே நின்றுருந்தவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியின் நிசப்தம்.
 
அதைத்தொடர்ந்து ​சுலோச்சனாவின் குரல் அழுகையினால் வெடித்தது.
​"அதுக்கப்புறம் எங்க குடும்பத்துக்கு சோதனைக் காலம். அவங்கப்பா எதிர்பாராத விதமா ஒரு ரோட்டு விபத்துல இறந்து போயிட்டாரு. தொழிலை கவனிக்க ஆள் இல்லாம நஷ்டம் அடைஞ்சுகிட்டே போச்சு. எல்லா ஷேர்களையும் டிரஸ்டுக்கு கொடுத்துட்டு, பாம்பேக்கு போய் ஸ்டே பண்ணினோம். ஆனா அங்கயும் இவன் ஒழுங்கா இருக்கல... அடிக்கடி அங்கிருந்து கிளம்பி லோனாவாலா ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்துருவான். இவனை தேடி அலைய முடியாம, நான் பேசாம இங்க லோனாவாலாவுக்கே வீடு மாறி வந்துட்டேன். இப்போ எங்கேயும் ஓடாம சைலண்டா இருக்கான்.
 
இங்கே வந்தப்புறமும் இவனை பார்த்துக்கிறது சாதாரண விஷயம் இல்லப்பா... இவனுக்குன்னு மாசாமாசம் நியூரோ மெடிசின்ஸ், வழக்கமான மெடிக்கல் செக்கப்னு ஏகப்பட்ட செலவு.
​அந்த டிரஸ்ட்ல இருந்து வர்ற பணத்தை வச்சுத்தான் இதையெல்லாம் ஏதோ பார்த்து பார்த்து செஞ்சு சமாளிச்சுக்கிட்டு இருக்கேன். இதெல்லாம் பண்றதாலதான் இவன் ஓரளவுக்கு, இப்படி நடமாடிக்கிட்டாவது இருக்கான்... இல்லைனா என்ன ஆகியிருக்குமோ தெரியல!
 
எப்படி ராஜா மாதிரி கம்பீரமா இருந்தவன்... இன்னைக்கு பித்து புடிச்ச மாதிரி, இப்படி இருக்கானேனு நினைச்சு ஒவ்வொரு நாளும் நான் செத்து செத்து பிழைச்சிக்கிட்டு இருக்கேன்பா!
 
​ஆனா, அதுக்காக மற்ற பைத்தியங்கள் மாதிரி அவனை நினைச்சுறாதீங்க. சட்டையை கிழிச்சிட்டு அலையுற டைப் கிடையாது. இவனுக்கு பைத்தியம்லாம் இல்லை! இவனோட மூளை, அன்னைக்கு சாயங்காலம் 5 மணிக்கு மேல மேற்கொண்டு வேலை செய்யுறதையே ஒட்டுமொத்தமா நிறுத்திடுச்சு! அதுக்கப்புறம் உலகத்துல நடந்த விஷயங்கள் எதுவுமே அவனுக்கு ஏறல. என்ன நடந்தாலும் அவனுக்கு புரியாது, மூளையில பதிவாகாது.
 
காலையில எந்திரிச்சு எங்க போறான், என்ன பண்றான்னு தெரியாது... ஆனா நாள் பொழுது தவறாம கரெக்டா சாயங்காலம் 5 மணிக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு போயிருவான். நைட்டு தூங்குறதுக்கு மட்டும் வீட்டுக்கு வருவான். இடைப்பட்ட நேரத்துல எங்க போறான், என்ன பண்றான்னு கேட்டாலும் சொல்ல மாட்டான். என்ன கேட்டாலும் அந்த வார்த்தைகள் மட்டும் தான் திரும்ப திரும்ப வரும். வேறு பதில் வராது. 
 
ராஜா மாதிரி மனோவுக்கு, இப்படி ஒரு நிலைமை ஆயிடுச்சேங்கிற விஷயத்தை வெளியில யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு அவங்கப்பாதான் மறச்சிட்டார். 'அவன் கூட படிச்ச நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ மற்றவங்களுக்கோ அவனோட பரிதாபமான நிலைமை பத்தித் தெரிய வேண்டாம்மா... எதுக்கு எல்லாரையும் தேவையில்லாம கஷ்டப்படுத்தணும்? எல்லாரோட மனசுலயும், அவங்க முன்னால பார்த்த மாதிரி கம்பீரமா இருந்த மனோவே நினைவுல இருக்கட்டும்'ன்னு சொல்லி தடுத்துட்டாரு. அதனாலதான் நானும் இதுவரைக்கும் யார்கிட்டயும் சொல்லாம, ஒதுங்கியே வாழ்ந்துட்டேன். இன்னைக்கு எல்லாரும் எப்படியோ தேடி கண்டுபிடிச்சு வந்துட்டீங்க, சொல்ல வேண்டிய நிலைமை.
நான் உயிரோட இருக்குற வரைக்கும் இவனை கவனிச்சுப்பேன்... எனக்கு அப்புறம் இவனை பார்த்துக்க யாரு இருக்கா?"
 
​சுலோச்சனா விக்கி விக்கி அழுது கொண்டே இந்த விஷயத்தை சொல்லி முடிக்க... அதைக கேட்டுக்கொண்டிருந்த பாபி, சந்தீப், மணிஷ், பிரேம், ஜேம்ஸ் என நண்பர்கள் அத்தனை பேரின் நெஞ்சமும் பிளந்தது போல இருந்தது.
​குறிப்பாக மைதிலி... 'என் மைதிலியை காப்பாத்த தவறிட்டேன்' என்று அவன் ஆறு வருடங்களாக மைதிலி ஞாபகமாக தன் நினைவையே இழந்து உறைந்து போயிருக்கிறான் என்பதை கேட்ட கணத்தில், அவளது உலகம் முற்றிலுமாக நொறுங்கி சிதைந்தது. அளவிட முடியாத துயரத்தில் அங்கே நின்றிருந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் சுக்குநூறாக உடைந்துபோய், வார்த்தைகளின்றி அழுது துடித்தார்கள்.
 
தொடரும்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
 
ஜானகி மந்திரம் 41 A
 
சுலோச்சனா தாங்க முடியாத அந்த துயரத்தை இறக்கி வைத்து முடித்த கணத்தில், மைதிலியின் நெஞ்சுக்குள் எஃகுச் சுவரொன்று அடியோடு உடைந்து விழுந்தது. இவ்வளவு நாட்களாக தன் பேரையே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு, தன் உயிருக்கு உயிரானவன் ஒரே புள்ளியில் உறைந்து நிற்கிறானா?'—இந்த எண்ணம் அவளது இதயத்தில் கூர்மையான ஈட்டிகளாய் இறங்கியது. தாங்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவளது உடலும் மனமும் ஒருசேர அதிர்ந்தது.
 
​சிந்தனை மரத்துப் போன அந்த விநாடி, சுற்றிலும் நின்றிருந்த அத்தனை பேரையும் விலக்கிக்கொண்டு ஓடிச்சென்று சுலோச்சனாவின் அருகே கீழே அமர்ந்து, அவர் கால்களை இறுகப் பற்றிக் கொண்டு, கதறி அழுதாள் மைதிலி.
 
​"அம்மா... என்ன மன்னிச்சிடுங்கம்மா! நான் தான்மா அந்த மைதிலி... என்னாலதான் மனோவுக்கு இந்த நிலைமை! ஐயோ... என்னாலதான் அவனோட வாழ்க்கையே நாசமாப் போச்சு! ஆனா... ஆனா நான் வேணும்னு எதையும் செய்யலமா..." என்று ஒவ்வொரு வார்த்தையையும் முழுமையாக சொல்ல முடியாமல், மூச்சு வாங்கியபடி விக்கி விக்கி கதறினாள். 
​மைதிலி திடீரென சுலோச்சனாவின் கால்களில் விழுந்து உண்மையை உடைத்த கணத்தில், அங்கே நின்றிருந்த அனைவரும் ஷாக்கில் உறைந்து போனார்கள். 
 
'இவ ஏன்டா திடீர்னு இப்படி பண்ணா? ஏற்கனவே அம்மா சுக்குநூறா உடைஞ்சு போயிருக்காங்க... இப்போ இந்த உண்மையையும் உடைச்சு இன்னும் என்ன பூகம்பத்தை கிளப்பப் போறாளோ!' என்பது போல ஒருவரையொருவர் தவிப்போடு பார்த்துக்கொண்டார்கள். அந்த சிறிய ஹாலின் நிசப்தத்தில் அனைவரின் நெஞ்சிலும் பயப்பந்து உருண்டது.
​சுலோச்சனா சில கணங்கள் விழிநீரோடு உறைந்து போய் மைதிலியை பார்த்தார். அந்தப் பார்வையில் கோபமில்லை, வெறுப்பில்லை... ஆழமான ஒரு வெறுமையும், தத்துவார்த்தமான அமைதியும் மட்டுமே இருந்தது.
 
பிறகு ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தி, தன் முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டார். அமர்ந்திருந்தபடியே மைதிலியின் தோள்களை பற்றி, மெல்ல எழுந்திருக்க செய்து தன் பக்கத்திலேயே அமரவைத்தார். கண்ணீர் வடிந்த அவளது கன்னங்களை மென்மையாய் துடைத்து விட்டார்.
 
​"முதல்ல உன் மேல எனக்கு அளவுகடந்த கோபமும் ஆத்திரமும் இருந்தது உண்மைதான்மா... ஆனா, அன்னைக்கு நிஜமாவே என்ன நடந்துச்சுங்கிற உண்மையை அப்புறமா விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன். இதுல உன் மேலயும் எந்த தப்பும் இல்லை... மனோ மேலயும் எந்த தப்பும் இல்லை. காலம் செய்த கோலம்... விதியோட விளையாட்டுன்னு சொல்றதைத் தவிர வேற என்னம்மா சொல்ல முடியும்?"
​மனோவின் அம்மாவிடமிருந்து வந்த புரிதலும் மன்னிப்பும் மைதிலியின் குற்ற உணர்ச்சியை இன்னும் அதிகமாக்க, அவள் சுலோச்சனாவின் மடியில் முகம் புதைத்துக் குலுங்கி குலுங்கி அழுதாள். சுலோச்சனா அவளை தட்டி கொடுத்து தலையை வருடி ஆறுதல்படுத்தினார்.
​வாழ்ந்து கெட்ட ஒரு தாயும், காதலனின் நிலைகண்டு நொறுங்கிப் போன ஒரு காதலியும்... ஒரே துயரத்தின் இரு முனைகளில் நின்றிருந்த இரு பெண்கள், அந்த நொடியில் ஒருவருக்கொருவர் புகலிடமாய், ஆதரவாய் மாறிப்போன காட்சி... அங்கே நின்றிருந்த நண்பர்கள் அத்தனை பேரின் பார்வைகளிலும் ஓர் ஈரத்திரையை படரச் செய்தது.
 
​கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு, மெல்ல அந்த ஹாலின் கனத்த சூழல் மாற தொடங்கியது. சுலோச்சனா அம்மா தான் முதலில் இயல்பு நிலைக்கு வர முயன்றார். அழுது தீர்த்துவிட்ட மைதிலிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, சுற்றிலும் நின்றிருந்த நண்பர்கள் பக்கம் பார்வையை திருப்பினார்.
 
​"சரிப்பா... நீங்களாம் இப்போ என்ன பண்றீங்க? படிச்சு முடிச்சுட்டு எல்லாரும் வேலைக்கு போயிட்டீங்களா? கல்யாணம்லாம் ஆயிடுச்சா?" என்று மெல்லிய புன்னகையோடு ஒவ்வொருவராக விசாரிக்க ஆரம்பித்தார்.
 
​பாபி தொண்டையை செருமிக்கொண்டு, "ஆமாம்மா... ஒரே ஒரு தடவை கல்யாணம் ஆயிருச்சு.. அந்த சோக கதையை ஏன் கேக்குறீங்க... என்னை சிங்கப்பூர்ல கேட்டாக, சிம்லால கேட்டாக, சிமோகால கேட்டாக, என் கிரகம் சொந்த ஊர்ல, சொந்தக்கார பொண்ண, கல்யாணம் பண்ணி படாத பாடு பட்டுட்டு இருக்கேன்..." என்று ஆரம்பித்து, திருமணம் செய்து அவதிப்படும் கதையை காமெடியாக சொன்னான்.
அடுத்தது ஒவ்வொருவரின் விவரங்களையும், மற்ற பெண்களையும் அறிமுகப்படுத்தி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் சுருக்கமாக கூறினான். 
 
​சுலோச்சனா ஒவ்வொன்றையும் தலையசைத்து கேட்டுக் கொண்டாலும், அவரது வார்த்தைகளில் ஒரு தாய்க்கே உரிய வருத்தம் இழையோடிக் கொண்டுதான் இருந்தது.
 
​"எல்லாரும் நல்ல நிலைமையில இருக்கீங்க... சந்தோஷம்ப்பா. மனோவும் பழையபடி இருந்திருந்தா இந்நேரம் உங்க கூட..." என்று அவர் இழுத்தபோதே, நிலைமையின் கனம் மீண்டும் எல்லாரையும் தாக்கியது.
 
அதைத்தொடர்ந்து,
 
"இவ்வளவு தூரம் தேடி வந்ததுனால எல்லா விஷயத்தையும் உங்க கிட்ட சொல்லிட்டேன்... ஆனா நீங்க அவனை பார்க்க வேண்டாம். பாக்காமலே கிளம்புறது தான் நல்லது...", என்றார் அர்த்தத்துடன்.. மனோவின் நிலையை நேரில் பார்த்து நண்பர்கள் யாரும் தேவையில்லாமல் அதிர்ச்சியிலும் வேதனையிலும் உடைந்துபோய்விடக் கூடாது என்ற கவலையோடு சொன்னார் சுலோச்சனா.
 
பாபி மைதிலியை ஒரு பார்வை பார்த்தான். அவள் எண்ண ஓட்டத்தை அப்படியே படித்தது போல அவனுக்கு புரிந்தது... 
 
​பாபி: "அம்மா... வந்தது வந்துட்டோம். கெட்-டு-கெதர் நடக்குற இடத்துல மத்த பசங்கெல்லாம் எங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க... அவங்களை எல்லாம் பார்த்து, பேசி அனுப்பி வச்சுட்டு, திரும்ப சாயங்காலம் 5 மணிக்கு லோனாவாலா ஸ்டேஷனுக்கு வந்து மனோவை பார்த்துட்டு போனாதான் சரியாக இருக்கும். அவனை பார்க்காம இங்கிருந்து போனோம்னா எங்க மனசு ஆறவே ஆறாது, என்னவோ தெரியலமா... என்னையோ, நண்பர்களையோ, ஏன்... மைதிலியையோ அவன் பார்த்தா அவனுக்கு பழைய ஞாபகம் திரும்ப வரலாம்னு எனக்குத் தோணுது" என்றான் உறுதியான குரலில்.
 
​அவன் சொன்னதை கேட்ட பிறகு... சஞ்சுவும் இந்துவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். மைதிலியின் லண்டன் ட்ரிப் கேன்சல் தான் என்பது அவர்களுக்கு புரிந்துவிட்டது. 'மைதிலி நம்மை விட்டு தூரமாக போக மாட்டாள்' என்ற எண்ணம் அந்த துயரத்திற்கு நடுவிலும் அவர்களுக்குள் ஒரு சிறிய ஆறுதலையும் சந்தோஷத்தையும் தந்தது.
 
​பாபி சொன்னதை கேட்டு சுலோச்சனா பதறிப்போய், "வேண்டாம்பா... அவன இப்போ இருக்கிற கோலத்துல நீங்க பார்த்தா தாங்க மாட்டீங்க. அவனுக்கு பழைய ஞாபகம் எதுவும் வராது, உங்களை பார்த்தாலும் அடையாளம் தெரியாம அவன் சொன்னதையே சொல்லிட்டு இருப்பான். நாம எல்லாருமே அவனுக்கு வெறும் ஜடப்பொருள்கள் மாதிரிதான்ப்பா! அவனை பொறுத்தவரைக்கும் அன்னைக்கு நடந்த அந்த ஒரு சம்பவம் மட்டும்தான் அவனோட மூளையில ஸ்டக் ஆகி நிக்குது. அதைத் தவிர உலகத்துல நடக்குற எல்லாமே அவனுக்கு உபயோகமில்லாத விஷயங்கள் தான்... அதுவும் அவனுக்கு எந்தப் பொருட்டுமே இல்லாத வெறும் காத்து மாதிரி! அவனோட மூளையில அது ஏறவே ஏறாது. நீங்க யாரு, என்னன்னு அவன்கிட்ட போய் தலைகீழா நின்னு கத்தினா கூட அவனுக்கு அது புரியாது... அவனால அதை ஏத்துக்கவே முடியாது," என்று அவர்களை தடுத்து நிறுத்த முயன்றார்.
 
மைதிலி கலங்கிய கண்களோடு சுலோச்சனாவின் கைகளைப் பற்றி, "அம்மா ப்ளீஸ்மா... ஒரு தடவை... ஒரே ஒரு தடவையாவது அவரை நாங்க நேர்ல பார்க்கிறோமேமா," என்று கெஞ்சினாள்.
 
​பாபியும், "ஆமாம்மா... அவனுக்கு ஞாபகம் வருதோ இல்லையோ, அவனை பார்க்காம நாங்க கிளம்புறது கண்டிப்பா சரி வராதுமா. காலேஜ்ல எப்படில்லாம் இருந்தோம் ஒருத்தருக்கு ஒருத்தர் எல்லாத்தையும் பகிர்ந்துகிட்டு நகமும் சதையுமா இருந்தோம்... எங்களுக்கு ஒண்ணுன்னா அவன் துடிச்சு போயி என்ன வேணாலும் செய்வான். அவன் இந்த நிலைமையில் இருக்கிறான்னு கேள்விப்பட்ட பிறகும் அவனை பார்க்க கூட செய்யாமல் நாங்க எப்படி போக முடியும்...என்னடா??? என்று மற்ற நண்பர்களை பார்க்க.... அவர்களும் கண்கலங்க தலையாட்டினார்கள்.
 
பின்னர் பாபி சுலோச்சனாவை பார்த்து, "அப்புறம்... அவனோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எல்லாம் இருந்தா கொஞ்சம் கொடுங்கம்மா, நானும் ஒரு தடவை படிச்சு பார்த்துக்கிறேன். ஒரு ஜெராக்ஸ் கூட எடுத்துக்கிறேன்," என்றான் அக்கறையோடு.
 
சுலோச்சனா எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.
 
​"இல்லம்மா... எப்படி இருந்தாலும் அவனை நாங்க நேர்ல பார்த்துட்டுதான் போவோம். அவனை பார்க்காம எங்களால இருக்க முடியாது," என்ற நண்பர்களின் உறுதியை பார்த்ததும் சுலோச்சனா அம்மாவின் மனமும் மாறியது.
 
'ஆறு வருஷத் தேடலுக்கு அப்புறம் வந்துட்டு அவனை பார்க்காம போக மாட்டாங்க' என்பதை அவரும் புரிந்து கொண்டார்.
 
​"சரிப்பா... நீங்க சொல்றதையும் கேட்க போறதில்லை. ஆனா வந்ததுதான் வந்துட்டீங்க, அட்லீஸ்ட் ஒரு டீயாவது குடிச்சிட்டுப் போங்க," என்று சுலோச்சனா அம்மா அன்போடு அழைக்க, 'அவரை இந்த நிலையில் கஷ்டப்படுத்தக் கூடாது' என்று யோசித்த சஞ்சுவும் இந்துவும் உடனே சரி என்று தலையாட்டினார்கள்.
 
​"ஐயோ அம்மா... நீங்க ஆராம்சே உட்காருங்க! நாங்களே டீ போட்டு எடுத்துட்டு வர்றோம்," என்று உரிமையோடு சொன்ன சஞ்சுவும் இந்துவும், சுலோச்சனா காட்டிய கிச்சனுக்குள் நுழைந்தார்கள். பாத்திரங்களையும் டீத்தூளையும் தேடி எடுத்து டீ போடத் தொடங்கினார்கள்.
 
​டீ தயாரானதும், சூடான கோப்பைகளை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தார்கள். சுலோச்சனா அம்மாவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் டீயைக் கொடுத்துவிட்டு, அமைதியாக பருகினார்கள். அந்தத் தேநீரின் சூடு நிச்சயமாக அவர்களின் நெஞ்சில் உறைந்திருந்த கனத்தை கரைக்க போவதில்லை. டீயைக் குடித்து முடித்ததும், சுலோச்சனா அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு அனைவரும் கிளம்பினார்கள்.
​யாருக்குமே காலேஜில் நடக்கும் ரி-யூனியனுக்கு போக விருப்பமில்லை. யாருடைய மனசும் எதையுமே ஏற்கும் நிலையில் இல்லை. ஆனால், திஷா, தான்வி, மகிமா ஆகிய மூவருக்கும் அவர்களின் சொந்தக் குடும்பப் பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட அவசர வேலைகள் காரணமாக உடனடியாக கிளம்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் மட்டும் கனத்த மனதுடன் நண்பர்களிடம் விடைபெற்று புறப்பட்டு சென்றார்கள்.
 
​மிச்சமிருந்த அத்தனை பேரும் லோனாவாலா ரயில்வே ஸ்டேஷன் அருகிலிருந்த ஒரு காபி ஷாப்பிற்கு சென்றார்கள்.
​அங்கே போய் உட்கார்ந்ததுமே, ஸ்ரேயாவால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. குற்ற உணர்ச்சி தாங்காமல், மீண்டும் ஒருமுறை அழுது தீர்த்தாள். "எல்லாத்துக்கும் நான் தான் காரணம்... நான் மட்டும் அன்னைக்கு அப்படிப் பண்ணாம இருந்திருந்தா..." என்று கதறி அழுத அவளை சமாதானப்படுத்த நண்பர்களுக்கு ஏகப்பட்ட ஆறுதல் வார்த்தைகளும், ஏராளமான பேப்பர் நாப்கின்களும், அன்பான அணைப்புகளும் தேவைப்பட்டன.
 
​பாபி மெதுவாக நகர்ந்து சென்று, கெட்-டு-கெதரில் இருந்த சிக்கிக்கு போன் செய்தான். நடந்த அதிர்ச்சிகரமான உண்மைகள் அனைத்தையும் சுருக்கமாக விவரித்தான்.
​விஷயத்தை கேட்ட சிக்கி அதிர்ச்சியில் உறைந்து போனான். பாபி அவனைத் தேற்றி, "சிக்கி... இந்த விஷயம் இப்போதைக்கு அங்கே இருக்கிற வேற எந்தப் பசங்களுக்கும் தெரிய வேண்டாம். அப்புறம் வந்த எல்லாரோட மூடும் கெட்டுப் போயிடும், கெட்-டு-கெதரே பாழாயிடும். நீ அங்கேயே இரு... எங்கள பத்தின அப்டேட் ஏதாவது கேட்டா... இல்ல, அது fake நியூஸ், மனோவை கண்டுபிடிக்க முடியலன்னு மட்டும் சொல்லு. Get together முடிஞ்சு எல்லாரையும், வழியனுப்பி வச்சுட்டு எனக்கு போன் பண்ணு," என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
 
​காபி ஷாப்பில் ஒரு பெரிய டேபிளை ஆக்கிரமித்து உட்கார்ந்திருந்த நண்பர்களின் முகத்தில் அமைதியும் சோகமும் மட்டுமே எஞ்சியிருந்தன. ஏதோ ஒரு துக்க வீட்டிற்கு வந்ததை போல, யாருமே ஒரு வார்த்தை பேசாமல், 5 மணிக்காக நிமிடங்களை மெளனமாக விழுங்கிக் கொண்டிருந்தார்கள். பாபி மட்டும், ஜெராக்ஸ் எடுத்துட்டு வந்திருந்த மனோவின் மெடிக்கல் ரிப்போர்ட்டை திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருந்தான். நிறைய போன்கள் செய்து யாரிடமோ சந்தேகங்கள் கேட்டுக் கொண்டிருந்தான்.
 
மாலை 5 மணி
 
​டைரக்டர் ஜேம்ஸ் முன்னாடியே கங்காதர் அண்ணனுக்கு போன் செய்து வழக்கமாக மனோ எந்த இடத்தில் இருப்பான் என்பதை விசாரித்திருந்தான்.
 
"இரண்டாவது பிளாட்பார்ம்ல நடுவுல இருக்கிற அந்தப் பழைய சிமெண்ட் பெஞ்ச்லதான் தம்பி உட்காருவாரு," என்று கங்காதர் சொன்ன இடத்தை மனசில் குறிவைத்துக்கொண்டு அனைவரும் லோனாவாலா ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்கள்.
 
​மதிய வெயிலின் உஷ்ணம் தணிந்து, மாலை நேரக் குளிர்க்காற்று ஸ்டேஷனுக்குள் பரவத் தொடங்கியிருந்தது. வந்து போகும் ரயில்களின் சத்தமும், ஸ்பீக்கரில் விட்டு விட்டு ஒலிக்கும் இந்தி, மராத்தி ரயில் அறிவிப்புகளும், மக்களின் அவசர ஓட்டமுமாக, அந்த ரயில் நிலையம் வழக்கமான பரபரப்போடு இயங்கிக் கொண்டிருக்க... நண்பர்கள் கூட்டம் மட்டும் கவலையாக நடந்து சென்றது.
​நெஞ்சை அடைக்கும் படபடப்பும், கை கால்களை நடுங்க வைக்கும் உச்சக்கட்ட டென்ஷனும் அத்தனை பேரையும் ஆட்கொண்டிருந்தன.
​குறிப்பாக மைதிலி... நடக்கும் திறனற்று தள்ளாடிய அவளுக்கு ஆதரவாக சஞ்சுவும் இந்துவும் இரண்டு பக்கமும் அவள் கைகளை பிடித்து தாங்கியபடி கூட்டி சென்றார்கள்.
 
​கங்காதர் சொன்ன அந்த குறிப்பிட்ட இடத்தை நெருங்கியதும், அனைவரும் சற்றுத் தூரத்திலேயே அப்படியே நின்றுவிட்டார்கள்.
 
​அங்கே... 
 
பிளாட்பாரத்தின் அந்த சிமெண்ட் பெஞ்சில் ஒரு உருவம் அமர்ந்திருந்தது. அடர்ந்த தாடி, சற்றே கலைந்த பரட்டைத் தலை, ஆனால் உடம்பில் அழுக்கில்லாத நீட்டான சட்டை-பேண்ட். வந்து போகும் ரயில்களையே வெறித்துப் பார்த்தபடி, உதடுகளுக்குள் ஏதோ ஒரு வார்த்தையை திரும்பத் திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தது அந்த உருவம்.
 
​கூர்ந்து பார்த்த அத்தனை பேருக்கும் உடனே புரிந்துபோனது—காலத்தால் உருக்குலைந்து போய் அமர்ந்திருக்கும் அந்த உருவம், வேறு யாருமல்ல... தங்கள் மனோதான்!
 
​ஆறு வருஷத்துக்கு முன்னாடி கேம்பஸுக்குள் கம்பீரமாக வலம் வந்த அதே மனோதான். ஆனால், உடம்பில் அந்த பழைய பிரகாசம் அணைந்து போயிருந்தது. ஹார்டு டிஸ்க் கிராஷ் ஆன கணிப்பொறி போல, உயிரிருந்தும் உணர்வில்லாமல் உறைந்திருந்த அந்த உருவத்தை பார்த்த நொடியில், நண்பர்கள் அத்தனை பேரின் நெஞ்சிலும் ஏதோ ஒரு பெரிய கண்ணாடி பாத்திரம் சுக்குநூறாக உடைந்து சிதறியது.
 
மைதிலி ​ 'ஐயோ!' என்று தலையில் அடித்துக்கொண்டு ஓவென்று கதறினாள். சஞ்சுவும் இந்துவும் அவளை தடுத்து ரொம்ப சத்தம் போடாமல் கட்டுப்படுத்தினார்கள். 
​பாபி, சந்தீப், பிரேம், மணிஷ் என ஆண்களின் கண்களிலும் கட்டுப்படுத்த முடியாமல் நீர் சுரந்து பார்வையை மறைத்தது. ஸ்ரேயா, சலோனி, பிரணவியும் தாங்க முடியாமல் ஒரு ஓரமாக உட்கார்ந்து விட்டார்கள். மொத்தத்தில் வார்த்தைகளின்றி அத்தனை பேரும் அந்த இடத்திலேயே நொறுங்கி போனார்கள்.
 
பெண்களை சற்று தள்ளி நிற்குமாறு சைகை செய்துவிட்டு, பாபி அவனை நோக்கி சென்றான். பிரேம், சந்தீப், மணிஷ், ஜேம்ஸ் நால்வரும் அவன் அடியை ஒட்டி அமைதியாக பின்தொடர்ந்தார்கள்.
​பெஞ்சை நெருங்க நெருங்க... மனோவின் தோற்றம் அவர்களுக்கு தெளிவாக தெரிந்தது.
 
​அவன் அழுக்குப்பிடித்த பைத்தியம் இல்லை. அம்மா தினமும் கவனித்து கொள்வதால் சுத்தமான, துவைத்த சட்டை-பேன்ட் தான் அணிந்திருந்தான். ஆனால், அந்த உடைகளில் எந்த நேர்த்தியும் இல்லை.
​ஆறு வருடங்களுக்கு முன்னால், ஜிம்மிற்கு சென்று உடம்பை மிடுக்காக வைத்திருந்த அந்த பழைய மனோ இப்போது இல்லை. ஒழுங்கான உடற்பயிற்சியோ, எந்த இயக்கமோ இல்லாததால் தளர்ந்துபோன தோள்கள், ஒழுங்கற்று கத்திரிக்கப்படாத தாடியும், ஒளிராத முகமும்...
​எல்லாவற்றிற்கும் மேலாக அவனது கண்கள்!
 
​முன்பு எப்போதுமே ஒரு கம்பீரமும், குறும்புச் சிரிப்பும் மின்னும் அந்த விழிகளில், இப்போது எந்த உணர்ச்சியும் இல்லை. காலியாகக் கிடந்த தண்டவாளத்தை வெறித்துக்கொண்டிருந்த அந்தப் பார்வையில் வெறுப்பான வெறுமையும், ஜீவனற்ற தன்மையும் மட்டுமே படிந்திருந்தன. உலகம் அவனை சுற்றி இயங்கி கொண்டிருந்தது; ஆனால் அவன் உலகம் ஆறு வருடங்களுக்கு முன்பே உறைந்து போயிருந்தது.
​உதடுகள் மட்டும் தன்னிச்சையாக, மெல்லிய குரலில்,
 
"மைதிலி...
 
அவளை தடுத்து நிறுத்தியிருக்கணும், முடியாம போச்சே!'... 
 
'தப்பு பண்ணிட்டேனே!!!"
 
'அவளை என்னால காப்பாத்த முடியலையே!'...
 
என்று முணுமுணுத்து கொண்டேயிருந்தன.
​அவனிடம் அழுக்கில்லை, பட்டினி இல்லை. ஆனால், வாழ்வதற்கான எந்த ஆசையும் இல்லை. பாட்டரி டிஸ்சார்ஜ் ஆன ஒரு எலக்ட்ரானிக் பொம்மை போல, எந்தவித உணர்ச்சியுமின்றி அமர்ந்திருந்த அவனது தோற்றம்... நண்பர்களின் நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்தது.
 
​அவன் அருகே நின்றபடி ஒரு நிமிடம் செய்வதறியாமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
 
அவன் பெஞ்சில் அமர்ந்து தண்டவாளத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த அந்த தோற்றம்... காதலின் ஆழத்திலும், அதன் வலியிலும் உறைந்துபோன வரலாற்றின் நாயகர்களை நினைவூட்டியது!
​காதலி பிரிந்த துயரத்தில் உலகத்தையே மறந்து, தன் வாழ்வையே பாழ்படுத்திக் கொண்ட தேவதாஸையும்; காதலின் தீவிரத்தால் பைத்தியமாகி வனாந்தரங்களில் அலைந்த மஜ்னுவையும்; காதலுக்காக தன் உயிரையே கொடுத்த அம்பிகாபதியையும் கதைகளில் படித்திருக்கிறோம். ஆனால், மனோ அவர்களை எல்லாம் தாண்டிவிட்டான் போல தோன்றியது!
 
​அவர்களாவது உணர்ச்சிகளின் உச்சத்தில் அழிந்து போனார்கள். மனோவோ, உயிரிருந்தும் உணர்வுகளற்று, 'டைம் லூப்'பில் சிக்கிய ஒரு மெஷின் போல, ஆறு வருடங்களாக ஒரே புள்ளியில் உறைந்துபோய் அமர்ந்திருந்தான். ஒரு நவீன சோகக் காவியத்தின் பிம்பமாய் அவன் அந்தப் பெஞ்சில் உட்கார்ந்திருந்த விதத்தைப் பார்க்கும்போது... நண்பர்களுக்கு மூச்சு முட்டியது!
 
அதற்கு மேல் தாங்க முடியாமல் பாபி மெல்ல முன்னால் நகர்ந்தான்.
 
​"டேய்... மனோ! நான்டா... பாபி வந்திருக்கேன்டா!"
​மனோ திரும்பவே இல்லை. அவனது பார்வை காலியாக கிடந்த அந்த தண்டவாளத்தின் ஏதோ ஒரு புள்ளியைத்தான் வெறித்துக் கொண்டிருந்தது.
​பாபிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மேலும் அருகே சென்று, அவன் தோள்களை பிடித்து மெதுவாக உலுக்கினான்.
 
​"டேய்! பாபி வந்திருக்கேன்டா... என்னை பாருடா மனோ! தோ சந்தீப், மணிஷ், பிரேம் எல்லாரும் வந்திருக்காங்கடா... டேய் மனோ!"
 
​பாபி கத்தியும் கதறியும் உலுக்கியும் மனோவிடம் எந்த அசைவும் இல்லை. சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு மெதுவாக தலையை திருப்பி அவர்களை ஒருமுறை பார்த்தான். ஆனால் அந்த பார்வையில் எந்தப் பிரக்ஞையும் இல்லை! ஏதோ வழியில் கிடக்கும் தூணையோ, மரத்தையோ பார்ப்பது போல வெற்றுப் பார்வையால் அவர்களை கடந்து, மீண்டும் தண்டவாளத்திற்கே அவனது பார்வை திரும்பியது.
​அவன் உதடுகள் நிறுத்தும் எண்ணமின்றி அதே மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டே இருந்தன:
 
"மைதிலியை... தடுத்து நிறுத்தியிருக்கணும்... முடியாம போச்சே..."
 
​தூரத்தில் நின்றுகொண்டிருந்த பெண்களாலும் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை. கதறியபடி அனைவரும் அவனை நோக்கி ஓடிவந்தார்கள்.
 
​பாபி: "டேய் மனோ...தோ பார்ரா! உன் மைதிலி வந்திருக்காடா... உன்னோட சன்ஷைன்டா!" என்று கத்தினான்.
​'சன்ஷைன்' என்ற வார்த்தையை கேட்டதும், மைதிலியின் உலகம் அடியோடு சுழன்றது. மனோ அமர்ந்திருந்த பெஞ்ச்சின் முன்னே அப்படியே முட்டி போட்டு அமர்ந்தாள். அவனது ரெண்டு கைகளையும் தன் நடுங்கும் கரங்களால் இறுகப் பற்றிக் கொண்டாள்.
 
​"மனோ... மனோ இங்க பாருங்க! நான் தான்... உங்க மைதிலி! உங்க சன்ஷைன் வந்திருக்கேன் மனோ! நான் பேசுறது உங்க காதுல கேட்கலையா? எங்கே பார்த்துட்டு இருக்கீங்க... என்னை பாருங்க மனோ, இங்க பாருங்க!"
 
​அவளது கதறல் அந்த பிளாட்பாரத்தின் இறைச்சலையும் தாண்டி எதிரொலித்தது. அவனது முகத்தை தன் இரு கைகளாலும் பற்றி, தன் பக்கம் திருப்ப முயன்றாள். மனோவின் முகம் திரும்பியது... அவளது கண்களை நேராய் பார்த்தான்.
 
​ஆனால்... ஐயோ! அந்த விழிகளில் எந்த ஒளியும் இல்லை. 'தன் உயிருக்கு உயிரான மைதிலிதான் தன் முன்னே நின்று கதறுகிறாள்' என்ற எந்த உணர்ச்சியும் அந்தப் பார்வையில் துளிக்கூட மின்னவில்லை. ஆறு வருடங்களாக எவளது பெயரை தன் உயிராக சுமக்கிறானோ, அதே மைதிலி எதிரே நின்று கதறியபோதும் அவனுக்கு அடையாளம் தெரியவில்லை!
 
​ஒரு கணம் அவளது முகத்தை பார்த்தவன், அடுத்த விநாடி ஏதோ தேவையற்ற குப்பையை பார்ப்பது போல அலட்சியமாக பார்வையை விலக்கி கொண்டு, மீண்டும் தண்டவாளத்தையே வெறிக்க தொடங்கினான். 
 
பிளாட்பாரத்தில் கடந்துபோன பயணிகள் சிலர், அழுதுகொண்டிருக்கும் இவர்களை பார்த்து நின்று சுவாரசியமாக எட்டிப் பார்த்தார்கள். என்னவென்று விசாரித்தபோது, ஜேம்ஸ் சுருக்கமாக விஷயத்தை சொன்னதும், பரிதாபப்பட்டு, உச்சிகொட்டிவிட்டு தங்கள் வழியே கடந்து சென்றார்கள்.
 
​"மனோ... பிளீஸ் மனோ! நாம காலேஜ்ல லவ் பண்ணிட்டுருந்த அந்த நாட்களை யோசிச்சு பாருங்க... ஆன்லைன் சாட்டிங், ரோமியோ ஜூலியட்... அந்த மழை... ராத்திரி நேரங்களில் பேசுவோமே sweet nothings... எதுவுமே உங்க ஞாபகத்துக்கு வரலையா மனோ? என்னை அடையாளம் தெரியலையா?" என்று நினைவூட்ட போராடினாள்... ம்ம்ஹும்... தோல்விதான். அவன் கைகளை எடுத்து தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள்.
 
பாபியும் அவனிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டான். 
 
'அஞ்சு மணி ட்ரெயின் போயிருச்சா?"
 
'இல்ல, ட்ரெயின் இன்னைக்கு லேட்டா?'
 
வழக்கம்போல் அவனின் முகத்தை பார்த்த மனோ, சம்பந்தமே இல்லாத யாரோ ஒரு நபரை பார்ப்பது போல பார்வையை விலக்கி கொண்டு, மீண்டும் அந்த தண்டவாளத்தையே வெறிக்க தொடங்கினான்..
 
​'இவன் எதுக்குடா இப்போ சம்பந்தமே இல்லாம இந்த நேரத்துல இதையெல்லாம் கேட்டுட்டு இருக்கான்?' என்பது போல நண்பர்கள் பாபியை புரியாமல் பார்த்தார்கள்.
 
ஏதேதோ கேள்விகள் கேட்டு மனோவை கவனித்துக் கொண்டிருந்த பாபி, ஒரு கட்டத்தில் ஓரமாக ஒதுங்கினான். மற்ற நண்பர்களும் அவர்கள் பங்குக்கு முயற்சி செய்தார்கள்.
 
சுற்றிலும் நின்றிருந்த சந்தீப்பும் பிரேமும் மனோவின் கைகளை பிடித்துக்கொண்டு, "டேய் மனோ... யோசிச்சு பாருடா!..." என்று அவனை பிடித்து நிமிர்த்தி, பழைய சம்பவங்களை சொல்லி நினைவூட்ட போராடினார்கள்.
​ஆனால், எந்த பிரயோஜனமும் இல்லை.
 
​மருத்துவர்கள் சொன்ன அந்த கொடூரமான நிஜம் நண்பர்களின் முகத்தில் அறைந்தது. சுலோச்சனா சொன்னது உண்மைதான், அவனது மூளை ஒரே புள்ளியில் லாக் ஆகி உறைந்துபோய்விட்டது! அதற்கு வெளியிலிருக்கும் எந்த மனிதனும், எந்த நினைவும், எந்த உணர்ச்சியும் அவனது மனதைத் தொடவே முடியாது. அவன் ஒரு ஜடப் பொருளாக இருப்பதை நினைத்து அவர்களால் தாங்கவே முடியவில்லை. கதறியழும் மைதிலியை தூக்கி நிறுத்தினார்கள். மாலை சூரியன் மங்கத் தொடங்க, லோனாவாலா ரயில்வே ஸ்டேஷனின் அந்த பிளாட்பார்ம்... அத்தனை நண்பர்களின் கசப்பான கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தது.
 
நேரம் போய்க் கொண்டே இருந்தது. ​அனைவரும் மனோவின் நிலைமையை பார்த்து அழுது தீர்த்து, ஒரு கட்டத்தில் தெம்பையெல்லாம் இழந்து நின்றார்கள். கண்ணீரும் வற்றிப்போய், வார்த்தைகளும் அற்றுப்போக, துக்கம் தோய்ந்த கண்களால் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அடுத்து என்ன செய்வது என்றே யாருக்கும் தெரியவில்லை.
 
​ தொடரும்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
 
ஜானகி மந்திரம் 41 B
 
மாலை 6 மணி நெருங்கி கொண்டிருந்தது.
​திடீரென, மனோ தன் பாட்டுக்கு சிமெண்ட் பெஞ்சிலிருந்து எழுந்தான். சுற்றிலும் நின்றிருந்த நண்பர்கள், தண்டவாளத்தில் சென்ற ரயில், பிளாட்பாரத்தில் உலவிய மனிதர்கள் என உலகின் எந்த சலசலப்பும் அவனது மூளையை தொடவில்லை. ஒரு ரோபோவை போல... சாவி கொடுத்து இயங்க வைக்கப்பட்ட ஒரு பொம்மையை போல, யாரையும் பார்வையால் கூட தீண்டாமல், எந்தவித உணர்ச்சியுமின்றி தன் பாட்டுக்கு ஸ்டேஷனை விட்டு வெளியே நடந்து சென்றான். மெஷின் போல அவன் போவதை அத்தனை பேரும் செய்வதறியாது ஸ்தம்பித்து நின்றார்கள்.
 
அடுத்து வந்த நிமிடங்களில் யாருமே எதுவுமே பேசவில்லை. ​பாபி தலையில் கை வைத்தபடி தீவிர யோசனையில் மூழ்கியிருந்தான்.
​ஸ்ரேயா, சலோனி, பிரணவி மூவரும் ஒரு ஓரமாக அமைதியாக நின்று கொண்டிருக்க ... மைதிலி அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தாள். முற்றிலுமாக தளர்ந்து, உடைந்து, சிதைந்து போயிருந்தாள் அவள். பக்கத்தில் சஞ்சுவும் இந்துவும் அவளுக்கு ஆதரவாகத் தோள் கொடுத்து அமர்ந்திருந்தார்கள்.
 
​மற்ற நண்பர்கள் மெதுவாக பாபியை நெருங்கினார்கள்.
 
​சந்தீப்: "என்னடா பண்றது? இவன் நிலைமை இப்படி படுமோசமா இருக்கு... ஊருக்கு போறதுக்கு மனசு வரல. ஆனா போகாமலும் இருக்க முடியாது" என்று அங்கலாய்ப்பாக பேசினான்.
 
​மணிஷ்: "இங்க இருந்தும் என்னடா பிரயோஜனம்? அவனை பார்த்தல்ல... எப்படி இருக்கான்னு? வருஷக் கணக்கா இப்படித்தான் இருக்கான். நாம இருந்து மட்டும் என்ன பண்ண முடியும்? பார்க்க பார்க்க நமக்கு வேதனையாத்தான் இருக்கும்," என்றான் தளர்ந்த குரலில்.
 
​பிரேம் தன் தலையில் அடித்துக்கொண்டான். "எப்படில்லாம் இவனை ஹீரோ கணக்கா பார்த்திருக்கோம்! இப்போ இப்படிப் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுப் போச்சே! ஏன்டா வந்தோம்னு இருக்கு..."
 
​ஸ்ரேயாவும் கண்களை துடைத்தபடி அவர்களை நெருங்கி, "நம்ம சைடுல வேற நல்ல டாக்டர்ஸை இன்னொரு முறை கன்சல்ட் பண்ணா என்ன? எனக்குத் தெரிஞ்ச நல்ல நியூரோ சர்ஜன்ஸ் நிறைய பேர் இருக்காங்க... முயற்சி பண்ணி பார்க்கலாம்" என்றாள். 
 
​சந்தீப் அழுகை பீறிடப் பேசினான்: "பார்த்தல்ல, அவன் எப்படி இருக்கான்னு... நடைபிணமா இருக்கான்! இந்தியா பூரா இருக்கிற எல்லா பெரிய டாக்டர்களையும் பார்த்ததா அவங்கம்மா சொன்னாங்கல்ல. மண்டையில அடிபட்டாலே அது ரொம்ப கஷ்டமான விஷயம். அதுக்கப்புறம் குணமாக்குறது சாதாரணமில்ல. மூளையில அடிபட்டு பிளட் உறைஞ்சு 'பிரைன் டெத்' ஆன பேஷண்ட்ஸை நாம எவ்வளவு பேர் பார்த்திருக்கோம்? ஏதோ இவன் இந்த அளவுக்கு நடமாடுறதே பெரிய விஷயம். சுலோச்சனா அம்மா சொல்றதெல்லாம் கேட்டா, வாய்ப்பே இல்லைன்னுதான் தோணுது. அவனை என்னால இப்படிப் பார்க்க முடியல... மனசு ரணமாகுது. நான் கிளம்புறேன்டா!"
 
​ஆளாளுக்கு மனவேதனை தாங்காமல் எதையெதையோ சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார்கள். உணர்ச்சிகளின் அலைக்கழிப்பில் கிளம்பிய புலம்பல்கள், பாபியின் காதுகளை தொட்டதே தவிர அவனது கவனத்தை கலைக்கவில்லை. தீவிரமான யோசனையில் இருந்தான்.
 
ஒரு பக்கம் மனோவின் நிலைமை மிகப் பெரிய கஷ்டத்தை கொடுத்தாலும், எழுதி வைத்திருந்த ஸ்கிரிப்ட்க்கு ஒரு நல்ல கிளைமாக்ஸ் கிடைக்கும் என்று வந்திருந்த டைரக்டர் ஜேம்ஸுக்கு இப்படி ஆகிப்போச்சே என்று இன்னொரு பக்கம் மிகப்பெரிய ஏமாற்றம். 
 
​ஜேம்ஸ் தளர்ந்த குரலில், "சரி, நம்மால என்ன பண்ண முடியும்? சில விஷயங்களை ஏத்துக்கிட்டுதான் ஆகணும். கதையோட கிளைமாக்ஸுக்காக ஏதேதோ கற்பனை பண்ணினேன். ஆனா மனோ இப்படி இருப்பான்னு கனவுல கூட நினைச்சு பார்க்கலடா. ஒரு விஷயம் சொன்னா தப்பா நினைச்சுக்காதீங்க... உயிருள்ள பொணம் மாதிரி இருக்குறதுக்கு, அவன் செத்தே போயிருந்திருக்கலாம். தாங்க முடியலடா!" என்றான்.
 
​அந்த வார்த்தையை கேட்டதும், பாபியின் விழிகளில் ஒரு நெருப்புப் பொறி பறந்தது!
 
​எல்லாரையும் ஒருமுறை கூர்மையாக பார்த்துவிட்டு, "நிறுத்துங்கடா!" என்றான் பாபி குரலை உயர்த்தி. ​
 
​"ஏன்டா இப்படி எழவு வீட்ல பொலம்புற மாதிரி பொலம்புறீங்க? அவன் ஒண்ணும் செத்து போய்ரலியே... உசுரோடு தானே இருக்கான்! நடமாடிட்டுதானே இருக்கான்? அதனால இந்த எழவு புலம்பலை முதல்ல நிறுத்துங்க... காது வலிக்குது. இவனை இப்படியே விட்டுட்டு போக முடியாது. கண்டிப்பா ஏதாச்சும் பண்ணலாம்!" என்று டென்ஷனாக சொல்ல, மைதிலி உட்பட அத்தனை நண்பர்களும் அதிர்ச்சியோடு அவனை ஏறிட்டுப் பார்த்தார்கள்.
 
​சந்தீப்: "அவன் நிலைமையை நேர்ல பார்த்ததப்புறம் கூட ஏதாச்சும் பண்ணலாம்னு சொல்றியே பாபி... புரிஞ்சுதான் பேசுறியா, இல்ல சும்மா வெத்து நம்பிக்கைக்காக பேசுறியா?" என்று கேட்டான்.
 
​பாபி பார்வையில் சீற்றம்.
 
​"டேய் சந்தீப்! என்ன பத்தி உனக்கு தெரியும் தானே? சும்மாலாம் வார்த்தைய விட மாட்டேன். காலேஜ் காலத்துல இருந்தே நம்ம பசங்க பிரச்சனையை என் பிரச்சனையா நினைச்சவன் நான். உங்க பிரச்சனையில இறங்கி தலையிட்டப்போ சில விஷயம் பாசிட்டிவ்வாவும் முடிந்திருக்கு, நெகட்டிவ்வாவும் முடிஞ்சிருக்கு... ஆனா, களத்துல இறங்கணும்னு முடிவு பண்ணிட்டா நான் பின்வாங்க மாட்டேன். வெத்து வேட்டா பேசுறவன் நான் இல்லை!"
 
​பிரேம் ஆச்சரியத்துடன், "அது எங்களுக்கு தெரியாதா பாபி... இப்போ மனோ விஷயத்துல நீ என்ன பண்ணனும்ன்னு நினைக்கிற? அதை சொல்லு?" என்று கேட்டான்.
 
​பாபி ஒரு கணம் பெஞ்சில் அமர்ந்திருந்த மைதிலியை பார்த்தான். அவளது விழிகளில் ஒரு மெல்லிய எதிர்பார்ப்பு தளிர்ப்பதை பார்த்தவன், பிறகு நண்பர்கள் எல்லாரையும் பொதுவாக பார்த்து, நம்பிக்கையான குரலில் பேசத் தொடங்கினான்.
 
​"நம்ம உயிருக்கு உயிரான நண்பன், இந்த நிலைமையில இருக்குறதைப் பார்த்துகிட்டு, எதுவுமே பண்ணாம ஊருக்கு திரும்பி போறதுக்கு எனக்கு மனசு வரலடா. நாமளும் விட்டுட்டு போயிட்டா அவன் இப்படி பொணம் மாதிரி தான் நடமாடிகிட்டு இருப்பான். வந்தாச்சு... இந்த நிலைமையில் அவனை பார்த்தாச்சு... ரெண்டுல ஒண்ணு பார்த்துட்டுத்தான் போவேன்! இதோட முடிவு பாசிட்டிவ்வாவும் இருக்கலாம், இல்ல, நெகட்டிவ்வாவும் போகலாம். இப்போவே அவன் ஆறு வருஷமா living corpse மாதிரி தான் இருக்கான்... இதுக்கு மேல என்னடா புதுசா நெகட்டிவா நடந்திர போகுது? அதனால நான் செய்ய வேண்டியதை செய்யத்தான் போறேன். என் கூட இருக்குறவங்க வரலாம்... பயப்படுறவங்க கிளம்பலாம்!"
​அவன் வார்த்தைகளில் இருந்த தன்னம்பிக்கையும், தெளிவும், அத்தனை பேரின் நெஞ்சிலும் உறைந்திருந்த நம்பிக்கையின்மையை மெல்ல அசைக்க தொடங்கியது.
 
​அத்தனை நேரமும் முடங்கிக்கிடந்த மைதிலி, பாபியின் இந்த வார்த்தைகளை கேட்டதும் மெல்ல எழுந்து நின்றாள். அவளது கண்களில் மீண்டும் நம்பிக்கை ஒளி மின்னியது. அவளுக்கு பாபியை பற்றி நன்றாகவே தெரியும். விஷயம் இல்லாமல் அவன் பேச மாட்டான்.
 
​"என்ன பண்ணப் போற பாபி?" — மைதிலியின் குரல் நடுங்கினாலும் அதில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
 
​பாபி தன் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த மனோவின் மெடிக்கல் ரிப்போர்ட்டை வெளியே எடுத்தான். அதை தன் கையில் ஓங்கி தட்டியபடி, அத்தனை பேரையும் பார்த்து ஒரு புதிர் புன்னகையை சிந்தினான்.
 
​"Retrograde & Anterograde Post-Traumatic Amnesia' வோட சேர்த்து 'Fixated Traumatic Memory Loop' ங்கற மனநலப் பாதிப்பு மனோவுக்கு ஏற்பட்டிருக்குன்னு ரிப்போர்ட் சொல்லுது. அதாவது, விபத்து நடந்தன்னைக்கு சாயங்காலம் அவனோட மண்டையில் அடிபட்டு மூளையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அவனோட நினைவாற்றலை ஒற்றைப் புள்ளியிலேயே முடக்கி வெச்சிருக்கு! அதுக்கு மேல அவனால எதையும் யோசிக்கவோ, புதிய நினைவுகளை மூளையில பதிவு பண்ணவோ முடியாத சூழ்நிலையில்... அதிலேயே அவன் மூளை 'ஹேங்' ஆகி நிக்குதுன்னு சொல்றாங்க. லூப் மாதிரி ஒரே விஷயம் திரும்ப திரும்ப அவன் மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு. அதாவது 
'மைதிலியை தடுத்து நிறுத்தியிருக்கணும், முடியாம போச்சே!'... 
 
'தப்பு பண்ணிட்டேனே"
 
'அவளை என்னால காப்பாத்த முடியலையே!'... 
 
மைதிலி ஆடிட்டோரியத்தில் அவமானப்பட்டது, அதை தடுக்காமல் இவன் பார்த்துக் கொண்டிருந்தது, பலியாடு மாதிரி அவ மாமா பையனை கட்டிக்க போற ஆபத்துல இருந்து மைதிலியை காப்பாற்ற முடியாதது. இதுதான் அவன் மனசுகுள்ள திரும்ப திரும்ப ஓடிக்கிட்டே இருக்கு.
 
அந்த லூப்பை உடைக்கணும்னா நாம ஒரு சில விஷயங்களை பண்ணணும்... கஷ்டம் தான்.... ஆனா முடியாதுன்னு கிடையாது."
 
​பாபி சொன்ன அந்த வார்த்தை பிளாட்பாரத்தில் ஒரு பூகம்பத்தைப் போல வெடித்தது! அனைவரும் அதிர்ச்சியாக அவனை பார்த்தார்கள்.
 
சந்தீப் நம்பிக்கையற்ற குரலில்: என்னடா சொல்ற? பெரிய பெரிய டாக்டர்களாலும் செய்ய முடியாததை, நாம செய்யலாம்னு சொல்றியா?... என்று கேட்க,
 
பாபி: "ஏண்டா முடியாது. டாக்டர்ன்னா என்ன கடவுளா? அவங்க சொல்லிட்டா எல்லாம் சரியாயிருமா? நம்ம மனோ... நம்ம மனோவா தான் இருக்கான். நல்லா இருக்கான். அவனுக்கு ஒண்ணும் ஆகல...."
 
கண்கலங்க நம்பிக்கையாக பேசும் அவனை எல்லோரும் ஆச்சரியமாக ஏறிட்டு பார்க்க,
 
பாபி தொடர்ந்தான். "அப்படின்னு நான் நம்புற மாதிரி.. நீங்களும் நம்புங்க... அப்பதான் அவனை சரிப்படுத்த முடியும்."
 
மைதிலி அவன் நம்பிக்கையை பிடித்துக் கொண்டு,
 
"சரி ஓகே. நீ இப்ப என்ன சொல்ல வர, அதை சொல்லு?"
 
பாபி: இப்போ நான் சொல்லப்போறது சைகியாட்ரில கொடுக்குற எலக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மென்ட் மாதிரிதான். மூளையில ஏற்படுற கடுமையான அழுத்தத்தை உடைச்சு, அதை இயல்பு நிலைக்கு கொண்டு வரத்தான் அந்த எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பாங்க. இதுவும் அது மாதிரிதான்... ஆனா எக்ஸாக்டா அது இல்ல! ஒரு ஹோமியோபதி டைப் ஷாக் ட்ரீட்மென்ட்ன்னு வச்சுக்குங்களேன்!"
 
​பிரேம் புரியாமல் நெற்றியை சுருக்கி, "ஹோமியோபதியா? புரியலையேடா..." என்றான்.
 
​"Yes. நான் ஆரம்பத்துல ஒரு ஹோமியோபதி மருந்து கம்பெனில சேல்ஸ் ரெப்பா வேலை பார்த்தேன். ஹோமியோபதில ஒரு அடிப்படை லாஜிக் உண்டுரா... 'முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்', 'விஷத்தை விஷத்தாலதான் முறிக்கணும்!' இப்போ வெளியில இருந்து நாம என்னதான் புதுசு புதுசா மருத்துவங்களை முயற்சி பண்ணினாலும் அவனோட மூளை அதை ஏத்துக்கல, அந்த லூப்பை விட்டு வெளியே வரவும் மாட்டேங்குது. டாக்டர்கள் பண்ண ட்ரீட்மென்ட் எல்லாம் அந்த லூப்பை உடைச்சி, அதிலிருந்து அவனை வெளியேற வச்சு, அவனை நார்மலா மத்தவங்கள மாதிரி செயல்பட வைக்கிற முயற்சிகள் தான். அது நடக்கல. ஒரே ஆங்கில்ல தான் அவங்க யோசிச்சிருக்காங்க. நாம மாத்தி யோசிப்போம். அந்த லூப்பை உடைக்க ஒரே வழி... அதே லூப்புக்குள்ளேயே நாம போய் இறங்குறதுதான்! அவனை வெளியே கொண்டுவர முயற்சி பண்றதை விட அந்த லூப்புக்குள்ள, அவனோட அந்த பூட்டப்பட்ட உலகத்துக்குள்ள, நாமளே கதவை திறந்துட்டு உள்ள பூந்துற வேண்டியதுதான்!"
 
அனைவருக்கும் குழப்பம் அதிகமாகி கொண்டு போனதே தவிர புரியவில்லை. ஆனால்... மைதிலி பாபிக்கு இணையான கூர்மையும், புத்திசாலித்தனமும் கொண்டவள் என்பதால், அவன் சொல்ல வந்ததன் ஆழத்தை சட்டென்று புரிந்துகொண்டாள்!
 
மைதிலி: அன்னைக்கு நடந்த சம்பவத்தை அப்படியே ரீ-கிரியேட் பண்ணி, அதிர்ச்சி வைத்தியம் டைப்ல ஏதாவது கொடுக்கலாம்னு சொல்றியா?
 
​பாபி: "No, No... அது சரிப்பட்டு வராது. முதல்ல, அன்னைக்கு நடந்த சம்பவத்தை அப்படியே ரீ-கிரியேட் பண்ணி, அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாமான்னுதான் யோசிச்சேன். ஆனா திரும்ப திரும்ப யோசிச்சு பார்க்கும்போது, அது கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகாதுன்னு புரிஞ்சுது! ஏன்னா... அன்னைக்கு நடந்ததை அப்படியே செஞ்சா, அவன் மூளை மறுபடியும் அதே லூப்லதான் போய் உட்காரும். லூப் உடையாது. ஏன்னா ஏற்கனவே அவன் அதைத்தான் பண்ணிட்டு இருக்கான். அதனால, அந்த லூப்பை ஒடச்சி அவனை வெளியே கொண்டு வரணும்னா அந்த லூப் ஓடிக்கிட்டு இருக்கும்போதே... அன்னைக்கு நடக்காத, ஆனா அந்த லூப்போடு நேரடியாக சம்பந்தப்பட்ட வேறு ஏதாவது ஒரு புதிய விஷயத்தை நாம அந்தச் சூழலுக்குள்ள அதிரடியா, அதிர்ச்சி வைத்தியம் மாதிரி புகுத்தணும்!"
 
​அவன் தீவிரத்தை கண்டு, நண்பர்கள் அவர்களுக்குத்தான் ஷாக் ட்ரீட்மென்ட் கிடைத்தது போல் நின்றார்கள்.
 
​"ஒரே பாதையில சுத்தி சுத்தி போய்ட்டு இருக்குற ரயிலுக்கு முன்னால டிராக்கை டக்குனு மாத்துற மாதிரி... அந்த லூப்புக்குள்ள எதிர்பாராம நடக்குற அந்த புதிய சம்பவம், அவனோட மூளைக்குள்ள ஒரு மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கும்! ஷாக் ட்ரீட்மென்ட் மாதிரி, அந்த அதிர்வுதான் ஆறு வருஷ லூப்பை உடைச்சு, அவனோட மூளையை தூக்கத்துல இருந்து விழிச்சுக்க வைக்கலாம்! இப்படி புதுசா ஒண்ணை நுழைச்சு டிராக்க மாத்தி விட்டு, அவனை வெளியே இழுத்துட்டு வர ட்ரை பண்ணலாம்."
 
​பாபி சொன்ன லூப்பை உடைக்கும் நுட்பமான விளக்கம் அங்கே நின்றிருந்த யாருக்குமே உடனடியாக புரியவில்லை. 'இவன் என்னடா ஏதேதோ வித்தியாசமான தியரியெல்லாம் பேசுறான்?' என்பது போல ஒருவரையொருவர் குழப்பத்தோடு பார்த்தார்கள்.
 
அத்தனை நேரமும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த மைதிலி, திடீர் உற்சாகம் காரணமாக, பாய்ந்து ஓடிவந்து பாபியை கட்டிப்பிடித்துக் கொண்டாள்! பின்னர் விலகி அவனது கைகளை பற்றி பலமாக உலுக்கியபடி, உணர்ச்சிப் பெருக்கில் பேசினாள்.
 
​"பாபி... எனக்கு... எனக்கு புரியுது பாபி! நீ என்ன சொல்றன்னு எனக்கு முழுசா புரியுது! அவனை எப்படியாவது காப்பாத்திரு பாபி... பிளீஸ்!" என்று கதறியபடி பேச அவளது கண்ணீர் பாபியின் கையை நனைத்தது.
 
மற்றவர்கள் இன்னமும் புரியாமல் திகைத்து நிற்க, பாபி மைதிலியை மெல்ல தேற்றிவிட்டு, "இருங்க... இந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை வச்சே உங்களுக்கு இன்னும் தெளிவா விளக்குறேன்," என்று கூறி 
​பாபி தன் கையில் இருந்த மனோவின் மெடிக்கல் ரிப்போர்ட்டை விரித்து, அதில் இருந்த குறிப்பிட்ட வரிகளை தன் விரலால் தட்டிக் காட்டினான்.
 
​"இங்க பாருங்க... மனோவின் Neuro-Psychiatric Evaluation ரிப்போர்ட்ல 'Post-Traumatic Retrograde Amnesia'-னு போட்டு, பிராக்கெட்ல 'Severe Hippocampal Synaptic Block with Sensory Gating Failure'-னு தெளிவா போட்டுருக்கு! அவனோட Diagnosis Summary ல ரெண்டு முக்கியமான விஷயங்களை நோட் பண்ணியிருக்காங்க..."
 
​நண்பர்கள் புரியாமல் பார்க்க, பாபி அதை தன் பாணியில் விளக்கத் தொடங்கினான்:
 
​Memory Fixation at Event Point: "அதாவது, விபத்து நடந்த அன்னைக்கு அவனோட மூளையில 'ஹிப்போகாம்பஸ்' பகுதி அடைஞ்ச பயங்கரமான அதிர்ச்சியினால, அவனோட நினைவாற்றல் அந்த 5 மணி சம்பவத்தோடயே அப்படியே உறைஞ்சு போயிருக்கு. புதிய நினைவுகளை பதிவு பண்ற அந்தச் சர்க்கூட்ல ஒரு பெரிய பிளாக் ஏற்பட்டுருக்கு."
 
​Impaired Stimulus Processing / Sensory Gating Failure: "வெளியில இருந்து நாம என்னதான் கத்தினாலும், கதறினாலும் அந்த உணர்வுகளை மூளைக்குள்ள அனுப்ப விடாம அவனோட 'Sensory Gating System' தடுத்துடுது. அதனாலதான் நாம யாரு போய் நின்னாலும், அவன் நம்மைக் கடந்து வெறும் காத்தைப் பார்க்குற மாதிரி பார்க்குறான்.
 
ரிப்போர்ட்ல அவங்க இதை ஒரு 'Dead-End'னு முடிச்சுட்டாங்க. அதனால அவனை குணமாக்க வழியில்லைங்கற மாதிரி பீல் பண்ணிருக்காங்க. ஆனா... அவனோட 'Subconscious Memory'-ல அந்த 5 மணி சம்பவம் மட்டும் 'Hyper-consolidated Memory'-யா லாக் ஆகி நிக்குதுங்கிறதை அவங்க கவனிக்க தவறிட்டாங்க! அதை நான் இப்போ நேர்ல செக் பண்ணப்போதான் கண்டுபிடிச்சேன்!"
 
மற்றவர்கள் கேள்வி கேட்கும் முன் பாபியே தொடர்ந்தான்.
​"நானே எக்ஸ்பிளைன் பண்றேன். இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னால, நான் சம்பந்தமே இல்லாத கேள்விகள் அவன்கிட்ட கேட்டேன்னு நீங்க நினைச்சிருப்பீங்க. ஆனா அப்படி கிடையாது. நான் அந்த கேள்விகள் கேட்டப்ப என்ன நடந்துச்சு தெரியுமா? சாதாரணமா அவன்கிட்ட வேறு எந்த விஷயங்களை கேட்டாலும், எந்த ரெஸ்பான்சும் இல்லை. ஆனா... 'அஞ்சு மணி ட்ரெயின் வந்துருச்சா?' ட்ரெயின் லேட்டா?' 'மைதிலி கிளம்பிட்டாளானு?' அவனுடைய memory loop சார்ந்த கேள்விகளை கேட்டப்போ... அவனோட பார்வை வழக்கமான வெற்று பார்வையா இல்லாம, ஒரு சில விநாடிகள் எக்ஸ்ட்ராவா என் முகத்துல வந்து தங்கிச்சு! அதை நான் கிளியரா நோட் பண்ணேன்."
 
​அவன் சொன்ன இந்த நுட்பமான அறிவியல் விளக்கத்தை கேட்டதும், நண்பர்களின் முகத்தில் உறைந்திருந்த குழப்பம் மெல்ல விலக தொடங்கியது.
 
​"So LHS is equal to RHS... டாக்டர்ஸ் கொடுத்த ரிப்போர்ட்டில் இருந்து கிடைத்த விஷயங்கள், அதுபோக நான் அனுமானித்த இந்த லூப் சம்பந்தப்பட்ட விஷயங்கள், இதெல்லாம் கூட்டி கழிச்சு பார்க்கும்போது அவனோட பூட்டப்பட்ட மூளைக்குள்ள ஊடுருவிப் போக ஒரே ஒரு வழிதான் இருக்கு... அது அந்த 5 மணி சம்பவம் மட்டும்தான்! அதனாலதான் சொல்றேன்... ஆறு வருஷத்துக்கு முன்னால் நடந்த அதே சம்பவ சூழலை, அதே மனிதர்களை வச்சு மீண்டும் உருவாக்கப்போறோம். ஆனா, அன்னைக்கு நடக்காத ஒரு புதிய சம்பவத்தை அந்த டிராக்குக்குள்ள பாய்ச்சப்போறோம். ஒரே டிராக்ல போய்ட்டு இருக்குற ரயிலுக்கு முன்னால வேற டிராக்கை காட்டணும் அப்படியே டக்குனு மாத்தி விடணும். அதை இதமா பதமா மாத்துனா சரிப்பட்டு வராது, எலக்ட்ரிக் ஷாக் கொடுத்த மாதிரி டக்குனு மாத்தணும்... அந்த எதிர்பாராத திருப்புமுனை, அவனோட 'Traumatic Loop'ஐ சுக்குநூறா உடைச்சு, அவனோட மூளையை மீண்டும் ரீ-பூட் பண்ணி இயல்பு நிலைக்கு கொண்டு வரும்!"
 
மைதிலி குறுக்கிட்டு: "பாபி... நீ சொல்றது எல்லாம் சரிதான். ஆனா, அந்த லூப்பில் புதுசா நாம் ஒரு விஷயத்தை நுழைக்கும் போது... அன்னைக்கு நடந்த மாதிரியே அவன் மூளை அதே குற்ற உணர்ச்சியிலயும் அதிர்ச்சியிலயும் மறுபடியும் லாக் ஆகி, அவனோட நிலைமை இன்னும் மோசமாகி, 'பிரைன் ஹெமரேஜ்' மாதிரி ஏதாச்சும் ஆயிட்டா என்ன பண்றது? அது அவனோட உயிருக்கே ஆபத்தா போய் முடியாதா?" என்று டென்ஷனில் கேட்க,
 
பாபி அவளது கேள்வியில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு,
 
"ஆபத்துன்னு பார்த்தா எதுவுமே பண்ண முடியாது. நாமளும் எல்லார மாதிரி வேடிக்கை பார்த்துட்டு கையை கட்டிட்டு சும்மா நிக்க வேண்டியதுதான். ஆறு வருஷமா இப்படி பைத்தியம் மாதிரி இருக்கிறான், யாருக்கு என்ன பிரயோஜனம்? அவனுக்கே பிரயோஜனம் இல்லாம இருக்கான். ரிஸ்க் எடுத்து பார்த்தா தான் என்ன? நான் அந்த டிராக்கை மாத்தப்போறேன் மைதிலி! பழைய கதையை அப்படியே ரீ-கிரியேட் பண்ணினாத்தான் அது அவனோட உயிருக்கு ஆபத்து. ஆனா நாம செய்யப்போற புதிய மாற்றம், அவனோட ஆழ்மனசுல இருக்குற பழைய அழுத்தத்த உடைக்க வாய்ப்பு இருக்கு! அது என்ன மாற்றம், நாம நாளைக்கு என்ன பண்ணப்போறோம்ங்கிறதை இப்போவே யோசிச்சு குழப்பிக்காதீங்க. நாளைக்கு சாயங்காலம் வரைக்கும் டைம் இருக்கு ... என்னை நம்புங்க!"
 
சந்தீப் யோசனையோடு தலையை சொரிந்துகொண்டே பாபியை பார்த்துக் கேட்டான்:
​"எல்லாமே ஓகேதான்டா பாபி... ஆனா எனக்கு முதல்ல இருந்தே ஒரு சந்தேகம்! அவனுக்கு விபத்து நடந்து அடிபட்டது, ட்ரெயினை விரட்டிட்டு போனப்போ, 'தலேகாவ்ன்' பக்கத்துல எங்கேயோ ஒரு இடத்துலதானே? அப்போ கண்டிப்பா நேரம் மாலை அஞ்சு முப்பது இல்லனா ஆறு மணி இருக்கலாம். ஆனா நீ சொல்றது, டாக்டர்ஸ் சொல்றது, இந்த ரிப்போர்ட்ல இருக்கறது எல்லாமே அந்த '5 மணி' சம்பவத்தையே சுத்தி சுத்தி வருது.
​அவன் லோனாவாலா ஸ்டேஷன்ல வந்து உட்காருறது, ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப பேசுறதுன்னு இதெல்லாம் யோசிச்சு பார்த்தா லாஜிக்காவே இல்லையேடா! அடிபட்ட அந்த 'தலேகாவ்ன்' இடத்துல என்ன நடந்துச்சோ, அந்த இடமும் அங்கு நடந்த சம்பவங்களும்தானே அவனோட மூளையில லூப்பா வந்து நிற்கணும்?"
 
​பாபி அதற்கு பதில் சொல்லும் முன்பாகவே... மைதிலி குறுக்கிட்டு, தன் அனுமானத்தை பகிர்ந்துகொண்டாள்.
 
​"இல்ல சந்தீப்... நாம நினைக்கிற மாதிரி, அடிபட்ட அந்த துல்லியமான விநாடியில என்ன நடந்துச்சோ அதுமட்டும்தான் மூளையில உறைஞ்சு நிற்கணும்னு அவசியம் இல்லன்னுதான் தோணுது. 'Traumatic Brain Injury' நடக்குறப்போ மனித மூளை எதை எப்படிப் பதிவு பண்ணிக்கும்னு யாராலயும் துல்லியமா கணிக்க முடியாது.
 
​என் கெஸ் என்னன்னா... இதில 'Retrograde Emotional Amnesia' கூட சேர்ந்திருக்கலாம். ஒருத்தனுக்கு தலையில பலத்த காயம் ஏற்படுற அந்த 'Physical Trauma'வுக்கு முன்னாடி... அவனோட ஆழ்மனசு எதை உச்சக்கட்ட அதிர்ச்சியாவோ, மிகப்பெரிய குற்ற உணர்ச்சியாவோ பதிவு பண்ணியிருக்கோ, அந்த 'Emotional Point'-லதான் அவனோட மூளை முடங்கிப்போக அதிக வாய்ப்பிருக்கு!
 
​அன்னைக்கு லோனாவாலா ஸ்டேஷன்ல 5 மணி ட்ரெயின்ல என்னை தடுத்து நிறுத்தி காப்பாத்த முடியாமப்போன அந்த ஒரு விஷயம் தான் அவனோட மூளையில ஆழமாப் பதிஞ்ச கடைசி உணர்ச்சியா இருந்திருக்கலாம். அதுக்கப்புறம் அவன் ட்ரெயினை விரட்டிட்டு வந்ததெல்லாம் ஒரு டென்ஷன்ல, பதட்டத்துல, 'Automated State'-ல பண்ணின விஷயம் தானே. யோசிக்க அதுல என்ன இருக்கு. அதனாலதான், விபத்து நடந்த இடம் தலேகாவ்னா இருந்தாலும்... அவனோட 'Subconscious Mind' அந்த 5 மணி லோனாவாலா ஸ்டேஷன் சம்பவத்துலயே 'Freeze' ஆகி நிக்குதுன்னு நினைக்கிறேன்!"
 
என்று சொல்லிவிட்டு பாபியை பார்க்க, ​பாபி ஆமோதிப்பாக தலையசைத்தான்.
 
"எக்ஸாக்ட்லி மைதிலி! டாக்டர்ஸ் ரிப்போர்ட் காட்டுறதும் இந்த சாத்தியக்கூறைத்தான்..."
 
அனைவரும் ஒரு சில நொடிகள் அமைதியாக நிற்க,
 
பாபி முடிவுரை எழுதும் விதத்தில் பேசினான்: OK.... களத்துல இறங்கியாச்சு. நாளைக்கு சாயங்காலம் 5 மணிக்குத்தான் அவனோட அந்த 6 வருஷ பழைய டிராக்கை மாற்றி அமைச்சு, அவனை வெளியே இழுத்துட்டு வரப்போற நாள்! எல்லா முயற்சியும் பண்ணுவோம். நிச்சயமா மனோ பழையபடி நமக்கு திரும்பி கிடைப்பான்னு நம்புவோம்... இதுவரைக்கும் பசங்க பிரச்சினைகளில் ஈடுபட்ட போது நானா ஏதோ ஐடியா பண்ணி என்னென்னவோ செஞ்சிட்டு இருந்தேன். அதனால நல்லாவும் முடிஞ்சிருக்கு காமெடியாவும் முடிஞ்சிருக்கு. ஆனா இந்த முறை என் குலதெய்வமான ஜெஜூரி கண்டோபா பாபாவை துணைக்கு அழைச்சுக்கிட்டு செய்றேன்... பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு..."
 
தமிழ்நாட்டு கிராமங்களில் கருப்பசாமியையும் அய்யனாரையும் கும்பிடுவது போல, மகாராஷ்டிர மண்ணில் அவனுக்கு எல்லாமே அவனது கிராம தெய்வமான 'கண்டோபா' தான்!
 
​பாபியின் ஆணித்தரமான பேச்சும், அறிவியல் பூர்வமான விளக்கமும் நண்பர்களிடம் படர்ந்திருந்த துக்கத்தையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு, ஒரு புதிய நம்பிக்கை தீயை ஏற்றி வைத்தது.
 
​அத்தனை நேரமும் புலம்பிக்கொண்டிருந்த யாருக்குமே இப்போது ஊருக்கு திரும்பிப் போகும் எண்ணம் துளிகூட இல்லை!
​நண்பனின் வாழ்க்கையை மீட்கப்போகும் அந்தப் போராட்டத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்கள். 
 
லோனாவாலாவிலேயே தங்குவதற்கு ரூம்கள் புக் செய்யப் புறப்பட்டார்கள்.
 
​(தொடரும்)


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
 
ஜானகி மந்திரம் 42
 
ஒருபக்கம் கடந்த கால நினைவுகளின் பாரம், மறுபக்கம் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற பயத்தின் நிழல்... நண்பர்கள் அனைவரையும் சூழ்ந்திருக்க, லோனாவாலாவின் குளுமையான மலைச் சாரலில் இந்த கதையின் இறுதி பயணம் வேகமெடுக்க தொடங்கியது...
 
​1. விடுதி வருகை
 
​காட்சித் துணுக்கு 1: லோனாவாலாவின் மனசுக்கு இதமான மலைச் சாரல். திரையில் மின்னுகிறது விடுதியின் பெயர்ப்பலகை — 'லோனாவாலா கிராண்ட் ஸ்பிரிங்ஸ்'.
 
​காட்சித் துணுக்கு 2: ஹோட்டல் வரவேற்பறையில் பாபி, சந்தீப், மணிஷ், பிரேம், டைரக்டர் ஜேம்ஸ், மைதிலி, சஞ்சு, இந்து, ஸ்ரேயா, சலோனி, பிரணவி அனைவரும் நின்றிருந்தார்கள்... பாய்ஸ்க்கு இரண்டு ரூம், கேர்ள்ஸ்க்கு இரண்டு ரூம்.
 
​காட்சித் துணுக்கு 3: அறைக் கதவின் திறப்பு... பைகளை தூக்கிப் போடும் வேகம்...
 
​காட்சித் துணுக்கு 4: ஜன்னலை திறந்ததும் முகத்தில் மோதும் பனிப்புகை. எல்லாமே கண் சிமிட்டும் நேரத்தில் சட்டென மாறி மறைகின்றன.
 
​2. இரவு உணவு மேஜை உரையாடல்
 
​காட்சித் துணுக்கு 1: உணவகத்தின் வெளிச்சப் பின்னணியில் வட்ட மேஜை. எல்லாரும் சூழ்ந்து அமர்ந்திருக்கிறார்கள்.
 
​காட்சித் துணுக்கு 2: பாபியின் முகம் பளீச்சென நெருங்கி வருகிறது — கண்களில் அத்தனை கணப்பும் தீவிரமும். கைகளை அசைத்து அவன் எதையோ காரசாரமாக விளக்குகிறான்.
 
​காட்சித் துணுக்கு 3: மைதிலியின் முகம் — புருவம் உயர்த்தி, சந்தேகத்தோடு அவள் கேட்கும் கேள்விகள்.
 
​காட்சித் துணுக்கு 4: பாபி புன்னகைத்து, உதட்டசைவில் அவளுக்கு விடைதரும் பாவனை.
 
​காட்சித் துணுக்கு 5: சுற்றியிருப்பவர்களின் அமைதியான தீவிர முக பாவனைகளும், பாபி மற்றும் மைதிலியின் தீவிரமும் மாறி மாறிப் பளிச்சிட்டு மறைகின்றன.
 
​3. வழி அனுப்பி வைக்கும் நேரம் - மறுநாள் காலை 10 மணி
 
​காட்சித் துணுக்கு 1: காலை 10 மணி வெளிச்சம். காரின் கதவுகள் தடதடவென மூடும் சத்தம்.
 
​காட்சித் துணுக்கு 2: காரின் உள்ளே — மைதிலி, சஞ்சு, இந்து, ஸ்ரேயா, சலோனி, பிரணவி. மஞ்சாருக்கு அருகே இருக்கும் மைதிலியின் சொந்த ஊருக்கு கிளம்புகிறார்கள். கலவரமாக பார்த்தபடி கை அசைக்கும் முகங்கள்.
 
​காட்சித் துணுக்கு 3: கார் புகையை கிளப்பிக்கொண்டு மறைய...
 
​காட்சித் துணுக்கு 4: ரோட்டோரத்தில் பாபியும் அவனது நண்பர்களும். காரைப் பார்த்தபடி, தீவிரமாக உரையாடிக்கொண்டே விடுதியை நோக்கி திரும்பி நடந்து செல்லும் காட்சிகள் வேகவேகமாக மாறுகின்றன.
 
​4. இரட்டைப் பாதை பரபரப்பு
 
​காட்சி 1 (பயணம்): வேகமாக செல்லும் கார்.. மைதிலியும் மற்றவர்களும் உம்மென்று இருக்கிறார்கள். கார் அவள் சொந்த ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் வாசலில் நிற்கிறது. மைதிலியும் தோழிகளும் காரை விட்டு இறங்குகிறார்கள்.
 
​காட்சி 2 (விடுதி): அறையில் பாபியும் நண்பர்களும் சீரியஸ் முகங்களுடன் அவரவர் வேலையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
 
​காட்சி 1 (ஊர்): மைதிலி தோழிகளுக்கு வீட்டை காண்பிக்கிறாள். வாசலில் அவள் மாமாவும் அத்தையும் புன்னகையுடன் வரவேற்கிறார்கள். எல்லா விஷயத்தையும் மாமா அத்தைக்கு விளக்குகிறார்கள்.
 
[அவசர குறிப்பு: மாமாவும் அத்தையும் முன்பு டார்ச்சர் செய்திருந்தாலும், 3 வருடங்களுக்கு முன் அவர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது மைதிலி செய்த உதவியால் உறவு சிக்கல்கள் மாறி இருந்ததால், இப்போது புன்னகையுடன் வரவேற்கிறார்கள். செய்த குற்றங்களுக்காக, மாமா பையன் சஞ்சீவ் பெர்மனெண்டாகவே கவர்மெண்ட் மாப்பிள்ளையாக ஜெயிலில் இருக்கிறான்]
 
​காட்சி 2 (விடுதி): டைரக்டர் தீவிரமாக எதையோ குறிப்பெடுத்து கொண்டிருக்கிறான். பிரேம் போனில் மனைவியிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறான். அவனை பார்த்து நக்கல் அடித்தபடி பாபி, சந்தீப் மற்றும் மணிஷ் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் பாபி போன் அடிக்க ஃபோனைப் பார்த்து பாபி முகம் கலவரமாக, டிஸ்ப்ளேயில் அவன் மனைவி பெயர். இப்போது சந்தீப்பும் மணிஷும் அவனை பார்த்து சிரிக்கிறார்கள்.
 
​திரை மையப்புள்ளி: சுவர் கடிகாரம் பளிச்சென ஜூம் ஆகிறது — மணி மாலை 4! இரண்டு இடங்களில் நடக்கும் பரபரப்பான நிகழ்வுகளும் அந்த 4 மணி புள்ளியில் வந்து விறுவிறுப்பாக ஒன்றிணைகின்றன.
 
நேரம்: மாலை 5:05 மணி
​இடம்: லோனவலா ரயில்வே ஸ்டேஷன் — பிளாட்பார்ம் 2
 
​பிளாட்பார்மின் சிமெண்ட் தூண் ஒன்றின் பின்னால் இருந்து இரண்டு உருவங்கள் எட்டிப் பார்க்கின்றன — பாபியும் சந்தீப்பும்.
 
​அடுத்த தூணின் பின்னால் மணிஷ், பிரேம் மற்றும் அதற்கடுத்த தூணில் டைரக்டர் ஜேம்ஸ். பதட்டமாக இருந்தாலும் இயல்பாக இருக்க முயற்சித்து எட்டிப் பார்க்கிறார்கள்.  
 
​தூரத்தில்... பிளாட்பார்மின் வழக்கமான பெஞ்சில், எந்த சலனமுமின்றி அமர்ந்திருந்தான் மனோ.  
 
​மாலை 5 மணிக்கு கிளம்ப வேண்டிய புனே ரயில் இன்னும் பிளாட்பார்மிலேயே நின்று கொண்டிருந்தது. வழி அனுப்ப வந்தவர்கள் ஜன்னல் வழியே ரயிலுக்குள் இருப்பவர்களிடம் பேசி சிரித்துக் கொண்டிருக்க, மனோ மட்டும் அந்த ரயிலையே வெறிக்க வெறிக்க பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
 
​கொஞ்ச நேரத்தில்... விசில் சத்தத்துடன் ரயில் மெல்ல நகரத் தொடங்கியது. ரயில் போகும் திசையையே அவன் பார்வையும் மெல்லப் பின் தொடர்ந்தது.
 
​ரயில் மறைந்து, பிளாட்பார்மில் கூட்டம் மெல்லக் குறையத் தொடங்கியது.
 
​பாபி சட்டென திரும்பி பார்க்க, தூணிற்கு பின்னால் இருந்த மணிஷும் பிரேமும் “என்னடா?” என்பது போல் கையசைத்துக் கேட்டார்கள்.
 
“வெயிட் பண்ணு” என்று பாபி சைகையிலேயே அடக்கினான்.
​அதே நொடி, பாபியின் போன் அதிர்ந்தது. மைதிலிதான்! 
 
​போனை எடுத்த பாபி, "எல்லாம் கரெக்டா போயிட்டு இருக்கு... நாம பேசுனபடி நீங்க 5:55-க்கு கரெக்டா ரெடி ஆயிருங்க! இதுக்கு மேல எனக்கு கால் பண்ணாத பிரேம் or மணிஷ்க்கு பண்ணு" என்று சொல்லிவிட்டு காலை கட் செய்தான்.
 
​ரயில் சென்ற பிறகும், வழக்கம் போல மனோ எந்த அசைவுமின்றி அதே பெஞ்சில் சிலை போல உட்கார்ந்திருந்தான்.
​முதல் பிளாட்பார்மில் நின்றிருந்த கங்காதர் அண்ணன் இவர்களை பார்த்து கொண்டிருந்தார். அண்ணன் ஸ்டேஷனுக்கு வெளியே நான்கு பைக்குகள் ரெடி பண்ணி நிறுத்தியிருந்தார். ஏற்கனவே அவருக்கும் சுலோச்சனா அம்மாவுக்கும் இந்த திட்டம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.  
எல்லா ​ வழிகளும் அடைத்துவிட்ட நிலையில், "அட்லீஸ்ட் கடைசியா ஒரு முயற்சி பண்ணி பார்க்கலாமே..." என்கிற எண்ணத்தில் அம்மா இதற்கு ஒத்துக் கொண்டிருந்தார். அவரை வீட்டிலேயே இருக்கும்படி சொல்லி இருந்தார்கள்.
​சுலோச்சனா இஷ்ட தெய்வங்களான காரிய சித்தி கணபதியையும், குடும்பத்தை காக்கும் மகாலட்சுமி தாயாரையும் மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தார்.
 
​"கணபதி பப்பா... மகாலட்சுமி தாயே... என் பையன் சரியாகணும். பழையபடி எனக்கு கிடைக்கணும்மா... எல்லாரும் சேந்து செய்யுற இந்த முயற்சி நல்லபடியா பலிக்கணும்..." என்று கண்களை மூடி, கண்ணீருடன் கைகூப்பி வேண்டிக் கொண்டிருந்த காட்சி.
 
​மீண்டும் பிளாட்பார்ம் 2:
​நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.  
​தூணுக்கு பக்கத்தில் நின்று, "இவன் அடுத்து என்னதான் செய்யப் போறான்?" என்று பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களுக்கு நொடிக்கு நொடி பதற்றமும் பரபரப்பும் ஏறியது. நிமிடங்கள் நகர நகர, தூணின் மறைவில் நின்றிருந்த அத்தனை பேரின் மூச்சுக்காற்றும் சூடானது!  
 
நேரம்: மாலை 5:55 மணி
 
​6 மணிக்கு மனோ வழக்கம்போல ஸ்டேஷனில் இருந்து கிளம்பி விடுவான. நேரம் மிகக் கரெக்டாக 5:55-ஐ தொட்டது.
 
​தூணிற்கு பின்னால் நின்றிருந்த பாபி, நண்பர்களை பார்த்து "நான் கிளம்பப்போறேன்!" என்று சைகை செய்துவிட்டு, நேராக மனோவை நோக்கி ஓடினான். மற்ற நண்பர்களும் எதற்கும் தயாராக தங்களை ஆயத்தப்படுத்தி கொண்டனர்.
 
​மூச்சிறைக்க ஓடிச் சென்று, மனோவின் முன்னால் போய் நின்றான் பாபி.
 
"அரே கண்டோபா பாபா... ஜெய மல்ஹார்! உன்ன மனசுக்குள்ள நினைச்சு ஆரம்பிச்சுட்டேன்.. நல்லபடியா முடிச்சு கொடுப்பா..." என்று மனதுக்குள் ஒரு முறை வேண்டிக் கொண்டு...
 
​ஆறு வருடங்களுக்கு முன்னால், இதே நாளில், இதே நேரத்தில், இதே இடத்தில், இருந்திருந்தால், அவன் என்ன உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமோ... அத்தனை எமோஷனையும், அத்தனை டென்ஷனையும், அத்தனை பதற்றத்தையும் அப்படியே அச்சு அசலாக தன் முகத்திலும் குரலிலும் கொண்டு வந்து நிறுத்தினான்!
 
​"டேய்! என்னடா இப்படி சும்மா உட்கார்ந்திருக்க? மைதிலி ரயிலில் கிளம்பிப் போயிட்டு இருக்கா... அவளை நீ தடுக்கலயா? நாளைக்கு அவ மாமன், அந்தப் பொறுக்கி பயலுக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வச்சிருவான்டா!"
 
​பாபியின் குரலில் ஆறு வருடங்களுக்கு முன் இருந்த அதே ஆதங்கமும் பதற்றமும் வெடித்து சிதறியது.
​ஆனால், மனோவிடம் உடனடியாக எந்த அசைவும் இல்லை. அதே உறைந்த பார்வை...
 
​"டேய்! என்னடா இப்படி கல்லு மாதிரி உட்கார்ந்திருக்க? உன்னோட மைதிலிடா... உன்னோட Sunshine! உனக்காகத்தான்டா அவ எல்லாவற்றையும் பண்ணினா... உனக்காகத்தான் அவமானப்பட்டு நின்னா... உனக்காகத்தான் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டா! 
 
அவளை மாதிரி ஒருத்தி இந்த ஜென்மத்துல உனக்குக் கிடைக்கவே மாட்டாடா... டேய்! நான் சொல்றது உன் காதுல விழுதா இல்லையா?"
 
No use... அதே freeze ஆன பார்வை.
 
​பாபி விடாமல் கத்தினான்.
 
​"இந்நேரம் அவ ஊருக்கு போய் சேர்ந்திருப்பா... ஆனா, நமக்கு நாளைக்கு வரைக்கும் டைம் இருக்குடா! இப்ப நினைச்சா கூட அவ ஊருக்கு போய் நாம போய் அவளைக் காப்பாத்தலாம்!"
 
​அதுவரை எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவன், மெல்லத் தலைதிருப்பி பாபியை பார்த்தான். உடனே பார்வையை திருப்பவில்லை. லாக் ஆகி உறைந்துபோயிருந்த அவன் கண்கள், வழக்கத்திற்கு மாறாக பாபியின் முகத்திலேயே அதிக நேரம் நிலைத்து பதிந்திருந்தன.
 
மனோவின் அந்த பார்வையை கண்டதும், பாபிக்கு உதட்டோரம் வந்த புன்னகையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டான்.
 
[இருடா சாலா! லூப்புக்ககுள்ளயா இருக்க!!! நீ வெளியே வர வேணாம்... நாங்க உள்ள வரோம்...]
 
​பாபி: டேய்! மைதிலி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் உன்னைத்தானேடா நினைச்சுக்கிட்டு இருந்தா? இப்போ அவளுக்கு எல்லார் முன்னாடியும் ஒரு அவமானம் வரும்போது... தல குனிவு வரும்போது... ஆபத்து வரும்போது... உன்னால எப்படிடா இப்படி குத்துக்கல்லாட்டம் வாய மூடிக்கிட்டு இருக்க முடியுது? சொல்லுரா! மனுசனா நீ எல்லாம்" என்று ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று பாபி கத்தி அவனை உலுக்கினான்.
 
பாபியின் அந்த அதிவேக உலுக்கலில், மனோவின் உடல் முன்னும் பின்னும் பலமாக ஆடியது.
​அதுவரை உணர்ச்சிகள் ஏதுமின்றி 'அவுட் ஆஃப் ஃபோகஸ்'ஸில் உறைந்துபோயிருந்த அவனது விழிகளில், மெல்ல ஒரு அதிர்வும் தடுமாற்றமும் பிறந்தது.
​அத்தனை நாட்களாக உறைந்து கிணறு போல கிடந்த அவன் விழித்திரைக்குள், புதைந்திருந்த பழைய பிம்பங்கள் அலை அலையாக நகரத் தொடங்கின.
​அவன் கருவிழிகள் அங்கும் இங்குமாக அலை பாய ஆரம்பித்து பதட்டம் தொற்றி கொண்டது. இத்தனை காலமாய் 'கமா'வில் உறைந்திருந்த அவனது விழிகளுக்குள், அத்தனை காட்சிகளும் இப்போது 'லைவ்' ஆகப் போவது போல் தோன்றியது.
 
​(மீன் இப்பதான் வலையை நெருங்கியிருக்கு. இன்னும் கொஞ்சம் அதிரடியா வீசுவோம்!) — பாபி மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
 
தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள் பதட்டத்தின் உச்சத்திற்கே சென்றார்கள். சந்தீப் வாட்சில் டைமை பார்த்தான். மணிஷ் சஞ்சனாவுக்கு போனில் லைவ் அப்டேட் சொல்லிக் கொண்டிருந்தான். பிரேம் மற்றொரு போனை கையில் வைத்துக் கொண்டு தயாராக நின்றிருந்தான்.
 
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இன்னும் என்னலாமோ பாபி அவனை பார்த்து கத்தி கூப்பாடு போட்டான்... பிளாட்பார்மில் வந்த மக்கள் என்ன நடக்கிறதென்று வேடிக்கை பார்க்க, டைரக்டர் ஃபீல்ட் க்ளியர் செய்து கொண்டிருந்தான்.
 
நேரம் 6 மணியை தாண்டியது. இந்நேரம் அவன் ப்ரோக்ராம் செய்து வைத்த ரோபோ போல எழும்பி செல்ல வேண்டும். 
 
போயிருவானோ!
 
அனைவருக்கும் டென்ஷன்!!
 
அனைவருக்கும் BP எகிற, சந்தீப் டென்ஷனை அடக்க முடியாமல், அடுத்த தூணுக்கு சென்று பிரேம் கையை பிடித்து கடித்தான்.
 
பிரேம்: ஆஆஆஆ...@@₹%^^.. என்று ஒரு கெட்ட வார்த்தையை உதிர்க்க...
 
சந்தீப்: கத்தாதரா... டென்ஷன்ல என்ன பண்றதுன்னு தெரியாம கடிச்சிட்டேன்.
 
பிரேம்: நாயே! அதுக்கு ஏன்டா என்ன கடிச்சு வச்ச! தூண்ல தலைய முட்டிக்க வேண்டியது தானே!!!
 
அனைவரும் மறுபடியும் மனோவை போக்கஸ் செய்ய....
 
இல்லை!! 
 
அவன் போகவில்லை!! 
 
ஆறு மணி தாண்டியும் அப்படியே அமர்ந்திருந்தான்.
 
சஞ்சு போனில்: கிளம்பிட்டானா?
 
மணிஷ்: இல்ல... உட்கார்ந்து தான் இருக்கான்.
 
சஞ்சனா பக்கத்தில் நின்ற மற்ற தோழிகளிடம் அப்டேட் சொன்னாள். மைதிலிக்கு, முதல் டேஞ்சர் ஜோனை தாண்டிய நிம்மதி.
 
​ரயில்வே ஸ்டேஷனில், ஆவேசம் பொங்கி வழிய, மனோவின் சட்டைக்காலரை பொத்தென்று இறுக பற்றினான் பாபி!
 
​"டேய்! என்னடா ஆச்சு உனக்கு? நான் இவ்வளவு தூரம் கத்துறேன்... நீ எருமை மாடு மாதிரி உட்கார்ந்திருக்க? நீ போறியா... இல்ல, நானே போய் அவ கல்யாணத்தை தடுத்து நிறுத்தட்டுமாடா? என்னடா இப்படி உட்கார்ந்திருக்க? பதில் சொல்றா? எங்க மனோ இப்படி இருக்க மாட்டானே!" என்று ஆத்திரத்தோடு அவனை பிடித்து பலமாக உலுக்கினான்!
 
​அடுத்த நொடி...
​தடுமாறிக் கொண்டிருந்த மனோவின் கண்களின் ஓரத்தில், ஒரு மெல்லிய கண்ணீர்த் துளி மெதுவாக உருவெடுக்க தொடங்கியது. உறைந்த பனி உருகுவது போல, அந்த கண்ணீர் அரும்பி வெளிவருவதை பாபி மிக அருகே கவனித்தான்.
​அவன் கண்ணில் கண்ணீர்த் துளி திரண்டு நின்றதைப் பார்த்ததும், பாபியின் உடலுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடியது!
 
​ஆறு வருடங்களாக பூட்டிக்கிடந்த மனோவின் உணர்ச்சிக் கதவுகள், இத்தனை நாட்களுக்கு பிறகு இப்போதுதான் திறக்க ஆரம்பிக்கின்றன என்பதை உணர்ந்து அவன் சிலிர்த்தான்!
 
​'இதுதான் சரியான சந்தர்ப்பம்!'என்பதை பாபி உணர்ந்தான்.
 
​சட்டென திரும்பி நண்பர்களை பார்த்து சைகை காண்பித்தான்.
 
​அடுத்த நொடி, எல்லாரும் ஓடி வந்தார்கள் பிரேம் கையில் போனுடன் மூச்சிரைக்க ஓடி வந்தான்.
 
​ஸ்கிரிப்ட் படி பாபி சத்தமாக கேட்டான், "டேய்! என்னடா... எல்லாரும் என்ன இப்படி ஓடி வர்றீங்க?"
 
​பிரேம் ரிகர்சல் பண்ணி வைத்திருந்ததால் நாடகத் தனமே இல்லாமல், பதற்றத்தின் உச்சத்தில் பேசினான்: "டேய்! மைதிலி லைன்ல இருக்காடா... போன் சுவிட்ச் ஆஃப் ஆனதுனால யார்கிட்டயும் பேச முடியலையாம். இப்ப ஊருக்கு போய் சேர்ந்ததுமே அங்க யார் போனையோ வாங்கி பேசுறா. மனோகிட்ட கடைசியா ஒரே ஒருமுறை பேசணுமாம்டா!"
 
​பாபி அவசர அவசரமாக போனை வாங்கி, அதை 'ஸ்பீக்கரில்' போட்டு "ஹலோ!" என்றான்.
 
​மறுமுனையில் மைதிலி...
 
அதே ஆறு வருடங்களுக்கு முன்பு இருந்த அதே பீலிங், அதே எமோஷன், அதே டென்ஷனில் பேச தொடங்கினாள். ஸ்பீக்கர் வழியே அவள் குரல் தெளிவாக கேட்டது.
 
​"ஹலோ... யாரு, பாபியா? பாபி, நான் மைதிலி பேசுறேன்டா... நான் ஊருக்கு வந்துட்டேன். இங்க கல்யாண ஏற்பாடு எல்லாம் பரபரப்பா நடந்துட்டு இருக்கு. விட மாட்டாங்க போலிருக்கு பாபி. இந்தக் கல்யாணம் பண்ணாத்தான் அம்மாவுக்கு ஆப்பரேஷன் பண்ணுவேன்னு மாமா உறுதியா சொல்லிட்டாரு. எனக்கும் வேற வழி தெரியல... என் தலையெழுத்து என்னவோ அப்படியே நடக்கட்டும். எனக்கு அதை பத்தி கவலை இல்லை. ஆனா... ஆனா மனோகிட்ட கடைசியா ஒரு தடவை பேசணும் பாபி! என் மேல எந்தத் தப்பும் இல்லைன்னு நான் அவன்கிட்ட சொல்லணும்... அந்த ஒரே ஒரு ஆசையையாவது எனக்கு நிறைவேத்தி வைப்பியாடா?"
 
​அன்றைக்கு என்ன மனநிலையில் அவள் இருந்தாளோ, அதே எமோஷனில், அதே குரல் நடுக்கத்தோடு அவள் பேசிய வார்த்தைகள் அத்தனையும் ஸ்பீக்கர் வழியே வழிந்தது.
​மனோவின் கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல வழிந்து கன்னத்தில் இறங்கியது. "நாம் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம்!" என்ற நம்பிக்கை பாபிக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஏற்பட்டது.
 
​"நீயே நேரடியா பேசு மைதிலி... நான் மனோ கூடத்தான் இருக்கேன். போனை அவன்கிட்ட கொடுக்குறேன்!" என்று சொன்ன பாபி, போன் இன்னமும் ஸ்பீக்கரில் இருந்தபோதே, அதை அப்படியே மனோவின் காதருகே கொண்டு போய் ஒற்றினான்.
 
​மறுமுனையில் மைதிலி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள். குரலில் ஆறு வருடங்களாக ஆழப் புதைத்து வைக்கப்பட்டிருந்த அத்தனை வேதனையும், ஏக்கமும், காதலும் ஒன்று சேர்ந்து கிளர்ந்தெழுந்தன.
 
​"ஹலோ... மனோ... நான் தான்... உன்னோட சன்ஷைன்! உன்னோட மைதிலி பேசுறேன்..."
 
​மனோவின் உடல் லேசாக அதிர்ந்தது.
 
​"இன்னைக்கு ஆடிட்டோரியத்துல இப்படி நடக்கும்னு நான் கனவுல கூட நினைச்சு பாக்கல! எல்லார் முன்னாடியும் உனக்கு இப்படி ஒரு அவமானம் நடக்கும்னு நான் சத்தியமா நினைக்கவே இல்லை... நான் தான் சன்ஷைன்னு இதுவரைக்கும் உன்கிட்ட சொல்லாததுக்கு காரணம்... உன்னை ஏமாத்தணும்னோ, பொய் சொல்லணும்னோ, வேற எந்தக் கெட்ட நோக்கத்திலயோ கிடையாது! நீ நல்லா இருக்கணும்... உன்னை யாரும் எதுவும் சொல்லிர கூடாது... கிண்டல் பண்ணிட கூடாது. என்னால உன் இமேஜ் கெட்டுப் போயிர கூடாதுன்னுதான் நினைச்சேனே தவிர, வேற எதை பத்தியும் நான் நினைக்கவே இல்லை..."
 
​ஆறு வருடங்களுக்கு முன்னால், அதே நாளில் நடந்தது போலவே மைதிலி பதற்றத்தில் பேசிக் கொண்டே சென்றாள். மனோவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து இறங்கியது.
 
​"என்ன இருந்தாலும்... இன்னைக்கு அவங்க ஆடிட்டோரியத்தில் என்னை அவமானப்படுத்தும்போது, எனக்காக ஒரே ஒரு வார்த்தை நீ பேசியிருக்கலாம் மனோ... தடுத்திருக்கலாம்... பரவாயில்லை, என்ன பேசாம இருக்க? நான் சொல்றது உன் காதுல விழுதா? உனக்கு கேட்குதா? என்கிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டியா? இன்னுமா என்னை கெட்டவன்னு நினைக்கிற? நீ ஒரு வார்த்தை கூட பேச முடியாத அளவுக்கா நான் உனக்கு வேண்டாதவளா போயிட்டேன்? மனோ... மனோ..."
 
​அவள் குரல் தேம்பலாக மாறியது.
 
​ஆனால், போனுக்கு பக்கத்தில் நின்றிருந்த சஞ்சனாவும் இந்துமதியும், "போதாது மைதிலி... இன்னும் எமோஷன் பத்தல! இன்னும் சத்தமா கதறு!" என்று கைகளால் பதற்றமாக சைகை காட்டினார்கள்.
 
"எந்த வகையிலும் நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன். நாளைக்கு எனக்கு கல்யாணம் உனக்கு தெரியும்னு நினைக்கிறேன். நானா விரும்பி ஏத்துக்கிட்டதில்லை. என் அம்மாவை காப்பாற்றுவதற்காக ஒத்துக்கிட்டேன். இந்த நரகத்தில் எனக்கு உயிர் வாழ தேவையானது ஒரே ஒரு விஷயம் தான். அது நீ என்னை தப்பா நினைக்கலன்னு சொல்ற அந்த ஒரு வார்த்தை மட்டும் தான். மனோ ஏன் இன்னும் அமைதியா இருக்க? அப்போ நான் தப்பானவன்னு நீயும் நினைச்சுட்டியா?" என்று கதற..
 
இந்த முறை தோழிகள் எல்லாருமே சேர்ந்து எமோஷன் பத்தவில்லை என்று சைகை காண்பித்தார்கள்.
 
​மைதிலி ஒரு நொடி கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள்.
​ஆறு வருடங்களுக்கு முன்னால், ரத்த வெள்ளத்தில் அடிபட்டு, போஸ்ட் கம்பத்தின் கீழே சுருண்டு விழுந்த மனோவின் அந்த பரிதாபக் கோலத்தை தன் மனக்கண் முன்னால் கொண்டு வந்தாள்.
 
​அடுத்த நொடி...
​உயிரைக் கசக்கி பிழிவது போன்ற அத்தனை ஆழமான வேதனையும், ஆக்ரோஷமும் அவளுக்குள் வெடித்தது! தன் அத்தனை ஜீவனையும் ஒன்றாக திரட்டி, உச்சக்கட்ட டெசிபலில் அலறினாள்:
 
​"மனோஓஓஓஓஓஓஓஓஓஓ!..."
 
​அவ்வளவுதான்!
​அந்நொடி... ஆழமான கடலுக்குள் மூழ்கி, மூச்சுத்திணறி செத்துக்கொண்டிருந்த ஒருவன், திடீரென நீரைக் கிழித்துக் கொண்டு மேலே வந்து, காற்றை நுரை தள்ளச் சுவாசிப்பது போல...
 
​ஆறு வருடங்களாக உணர்ச்சிகளற்ற மன உறைநிலையில் கிடந்த மனோ... எலக்ட்ரிக் ஷாக் அடித்தவன் போல தூக்கி வாரிப் போடப்பட்டு 'ஜெர்க்' ஆகி நிமிர்ந்தான்!
 
​அவன் மார்பு கூடும், வயிறும் வேகமாக ஏறிக் இறங்க... மூச்சுக்காற்று காட்டாற்று வெள்ளமாய் நாசி வழியே வெடித்து சிதறியது!
 
​"ஹ்ஹ்ஹ்... ஆஹ்..." என்று தொண்டைக் குழியிலிருந்து ஆழமான, வேதனையான மூச்சு சத்தம் வெளிப்பட்டது.
​ஆறு வருடங்களாகத் திரை போட்டு மூடியிருந்த அவன் கண்கள், திடீரென முழுமையாக திறந்துகொண்டன!
 
​உறைந்த பார்வையிலிருந்து விடுபட்டு, புது வெளிச்சத்தை கண்டது போல் கண்கள் அகல விரிந்தன. பிளாட்பார்மையும், தன் முன்னால் நிற்கும் பாபியையும், சுற்றியிருக்கும் நண்பர்களையும்... இத்தனை வருடங்களுக்குப் பிறகு, 'முதல்முறையாக தெளிவான சுயநினைவோடு' பார்த்தான்!
 
நண்பர்கள் அனைவரும் நம்ப முடியாத சந்தோஷத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
 
​ஆறு வருடத்துக்கு முன்னால் அவர்களுக்கு தெரிந்த மனோ மீண்டும் உயிருடன் பிரசவமாகி வெளிவந்திருந்தான்!
 
பாபிக்கு நன்றாகத் தெரியும் — திட்டமிட்ட ஸ்கிரிப்டில் மனோ இரண்டாவது கட்டத்தை தான் தாண்டி இருக்கிறான். இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கின்றன!
 
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருந்த பாபி, ஸ்கிரிப்ட் படி அடுத்த வேலையை செய்ய தொடங்கினான்.
 
மனோ முகத்தில் படர்ந்திருந்த அந்த அதிர்ச்சியையும், கண்ணீரையும் பார்த்த பாபி, பெருசாக ரியாக்ட் பண்ண வில்லை. வழக்கமான நடைமுறை மாதிரி தன் கையிலிருந்த போனை அவனுக்கு அருகே நீட்டினான்.
 
​மனோ கையை நீட்டிப் போனை வாங்கினான். மனதுக்குள் பூட்டி வைத்திருந்த காதலும், வேதனையும் ஒருசேரப் பொங்கி வர... அந்தத் தீவிரமான உணர்ச்சி பெருக்கால் அவன் கைகளும் விரல்களும் லேசாக நடுங்கின.
 
​போனை காதருகே கொண்டு சென்றவனுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது. நெஞ்சக்கூடு ஏறி இறங்க, வார்த்தைகளை வெளியே கொண்டுவரப் போராடினான்.
​இத்தனை வருடங்களாக ஒரே நினைவுகளில் மட்டுமே வாழ்ந்து, இப்போதுதான் நிஜ உலகிற்கு வந்திருப்பதால்... அவனது குரல் தளுதளுத்து, தடுமாறி, உடைந்த குரலில் வெளிவந்தது.
 
​"ம... மை... மைதிலி..."
 
மறுமுனையில் ஆறு வருஷங்களுக்கு பிறகு மனோவின் குரல் முதன்முதலாக கேட்ட நொடி... மைதிலிக்கு தலைசுற்றியது.
​அவள் கைகளில் இருந்த போன் அதிர்ந்தது. ஆறு வருஷமாக ஓர் உயிரற்ற பொம்மையைப் போல, உறைந்து கிடந்த ஒரு மனிதன்... தன்னுடைய குரலை கேட்டு, தன்னுடைய கதறலைக் கேட்டு மீளா துயிலில் இருந்து விழித்துக் கொண்டிருக்கிறான்!
 
​அவளுக்குள் ஒரு மின்னல் தாக்கியது போன்ற உணர்வு.
​அவன் தன் மேல் வைத்திருந்த காதல் தான் அவன் மனப் பூட்டை உடைத்திருக்கிறது என்கிற உண்மை அவளை உலுக்கியது.
 
​கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர, தொண்டை அடைக்க, "மனோ..." என்று தேம்பியபடி போனை முகத்தோடு இன்னும் இறுகப் பற்றிக் கொண்டாள் மைதிலி.
 
​"இ... இல்லை... சன்... சன்ஷைன்..."
 
​அவன் குரல் உடைந்து, வார்த்தைகள் கோர்வையாக வராமல் தடுமாறியது.
 
​"நான்... நான்... ஒ... ஒன்னும்... தப்... தப்பா... நி... நினைக்கல... சன்ஷைன்..."
 
மனோ பேசியதும், பக்கத்தில் நின்றிருந்த நண்பர்கள் மத்தியில் உற்சாகக் கூச்சல் வெடிக்க பார்த்தது. சந்தீப்பும் மணிஷும் ஒருவரையொருவர் கட்டியணைக்கப் போகும் நொடி...
 
​பாபி சட்டெனத் திரும்பி, கண்ணால் செய்கை காட்டினான்.
 
​'டேய் அடங்குங்கடா!'
 
அவனை பொறுத்தவரை 'இரண்டாவது ஸ்டேஜ் தான் போய்க்கொண்டிருக்கிறது இன்னும் மெயின் ஸ்கிரிப்ட் பாக்கி இருக்கு! இப்பதான் ஆட்டமே ஆரம்பிச்சிருக்கு!'
 
தொடரும்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
 
ஜானகி மந்திரம் 42A
 
மனோ: "உ... உன்னைப் பத்தி... நீ எந்த விளக்கமும் எனக்கு... சொல்ல வேண்டாம். எனக்கு தெரியும்... நான் செஞ்சதுதான் தப்பு... இன்னைக்கு... ஆடிட்டோரியத்தில் பேசி இருக்கணும். பேசாம விட்டுட்டேன்... அவங்க உன்னை அவமானப்படுத்துறதை பார்த்துட்டு... அப்படியே இருந்துட்டேன்... என்னை... என்னை மன்னிச்சிரு... சரி நான் தான் தெரியாம தப்பு பண்ணிட்டேன். என்ன பத்தி உனக்கு தெரியும் தானே. நீயாவது ஒரு வார்த்தை என்கிட்ட பேசிருக்கலாமே. ஏன் என்ன பத்தி நினைக்காம இப்படி ஊருக்கு கிளம்பி போனே?"
 
​மறுமுனையில் மைதிலி கதறி அழுதபடி, தன் முழு உயிரையும் உருக்கி, ஆத்மாவின் ஆழத்திலிருந்து வெளிப்படும் தொனியில் பேசினாள்:
 
​"உன்ன பத்தி நினைக்காம கிளம்பி போகல. என்னோட சூழ்நிலை அப்படி... ஆனா எப்பவுமே உன்னைத்தான் நினைச்சுட்டு இருக்கேன் மனோ... ஐ லவ் யூ மனோ..."
 
​அந்த வார்த்தைகள் சாதாரணக் காதலின் அறிவிப்பு அல்ல; ஆறு வருட வேதனையையும், காத்திருப்பையும் ஒரே நொடியில் பிழிந்து கொடுத்த உருக்கம். பக்கத்தில் நின்ற சஞ்சுவும் இந்துவும் அந்த சூழ்நிலையின் கனத்தையும் அழுத்தத்தையும் தாங்க முடியாமல், தேம்பியபடி மைதிலியை தோளோடு தோளாக கட்டிப்பிடித்து கொண்டனர்.
 
​அந்தப் பக்கம் மனோ, வார்த்தைகள் திக்கித் திணற, உடைந்த குரலில் பதில் சொன்னான்:
 
​"க.. கடைசி மூ... மூச்சு இருக்கிற வரைக்கும்.. மனசுக்குள்ள ஞாபகம்ன்னு ஒண்ணு இருக்கிற வரைக்கும்... ஏன் ஞாபகமே இல்லாம போனா கூட... உயிர் பூரா நீதான்... என் நினைப்பு பூரா நீதான் சன்ஷைன்... ஐ லவ் யூ சன்ஷைன்..."
 
​தன் நினைவுகளே முற்றிலும் அழிந்து, உறைந்து கிடந்த ஆறு வருட இருண்ட காலத்திலும், தன் மூச்சும் ஆத்மாவும் அவளை மட்டுமே சுற்றிக் கொண்டிருந்த உண்மையை... தனக்கே அறியாமல், திக்கித் திணறும் சொற்களின் வழியே அவன் வெளிப்படுத்திய விதம், அத்தனை பேரையும் உலுக்கி, நெஞ்சை பிசைந்தது.
 
வேதனை தாங்காமல் மறுமுனையில் மைதிலி கதறி கதறி அழுதாள்.
 
மனோ: "மைதிலி... எ...ன்னை ம...ன்னிச்சிரு! உன்னை ரொம்பக் கஷ்....டப்படுத்திட்டேன்... இனிமே உன்னை நான் கஷ்டப்பட விட மாட்டேன். நீ... நீ எதுக்கும் கவலைப்படாதே... உனக்காக... உனக்காக நான் வர்றேன்... ஐ அம் கம்மிங் ஃபார் யூ மைதிலி!" — தொண்டை அடைக்க, உடைந்த குரலில் போனில் அறிவித்தான் மனோ.
 
​மைதிலி: "உனக்காக... உனக்காக நான் காத்துட்டு இருக்கேன் மனோ..."
 
​அதன் பிறகு அவன் எதுவுமே பேசவில்லை. காலை கட் செய்துவிட்டு மெல்ல திரும்பி பாபியையும் மற்ற நண்பர்களையும் பார்த்தான்.
​அங்கிருந்த நண்பர்கள் அனைவரும் என்ன நடக்குமோ என்ற கலவரத்தோடு அவனை வெறித்து பார்த்தார்கள்.
 
பாபிக்கு மனசுக்குள் படப்பிடிப்பு இருந்தது. 
​கண்களை நொடி அவசரமாக மூடி, மனசுக்குள்ளேயே அவனுடைய உக்கிர தெய்வத்தின் கால்களை பிடித்துக் கொண்டான்.
 
​'அரே... கண்டோபா பாபா! இம்புட்டு தூரம் விஷயத்தை கொண்டு வந்து சேர்த்தாச்சு. இதுவரைக்கும் காப்பாத்தின மாதிரி, இந்த கடைசி கட்டத்துலயும் எந்த சிக்கலும் வராம நல்லபடியா முடிச்சுக்கொடுப்பா... உனக்கு ஜெஜூரி வந்து 'ஜெய மல்ஹார்'னு சொல்லி மஞ்சளை அள்ளி வீசி பெரிய 'பண்டாரா' பூஜையே போட்டுடுறேன்!' எனத் தன் குலதெய்வத்திடம் வேண்டியபடியே, ஒரு பெருமூச்சோடு அடுத்த கட்டத்திற்கு ஆயத்தமானான்!
 
​கண்களைத் திறந்த பாபி, நண்பர்கள் டென்ஷனாக பார்ப்பதை கவனித்து: "ஏன்டா எல்லாரும் இப்படி அனாவசியமா டென்ஷன் ஆகுறீங்க? நம்ம பையன் யாரு... ஒரு ப்ரொஃபெஷனல் பைக் ரேசர்ங்கிறதை மறந்துட்டீங்களா? இப்போ பைக்கை எடுத்து கிளம்புனாக்கூட... அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ள அசால்ட்டா அவங்க ஊருக்கு போயிருவான்... என்னடா மனோ?" என்று தெம்பாக கூறினான்.
 
​மனோவின் உடம்பிற்குள் சடாரென மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. எங்கேயோ இந்த டயலாக்கை ஏற்கனவே கேட்ட மாதிரி ஒரு பீலிங்! இந்த சம்பவங்கள் ஏற்கனவே நடந்தது போன்ற ஒரு உணர்வு அவனுக்குள் ஓடியது. இருந்தாலும், அந்த நொடியின் அவசரத்திலும் பதற்றத்திலும் அதை பற்றி ஆழமாக யோசிக்க அவனுக்கு நேரம் இருக்கவில்லை.
 
​கண்களில் வெறித்தனம் மின்ன, "நி... நிச்சயமா!" என்றான் உடைந்த, ஆனால் நம்பிக்கையான குரலில்.
​பாபி அவன் தோளை தட்டி, "Very good! அப்ப விடாதே அவளை... உன் சன்ஷைனை, உன் மைதிலியை மீட்டுட்டு வரலாம்!" என்று நம்பிக்கையூட்டினான்.
 
​எல்லாரும் அவனுடன் கிளம்ப தயாரானார்கள்.
 
​ஆனால், மனோ கையை உயர்த்தி அவர்களை தடுத்தான். இன்னும் அவனுக்கு பார்க்கும்போது, பேசும் போது, செயல்படும் போது, பழைய ஸ்பீடு கிடைக்கவில்லை. கைகளில் கொஞ்சம் நடுக்கம் இருக்கத்தான் செய்தது.
 
​"நீ... நீங்க யாரும் வர வேண்டாம்டா... நா... நான் பார்த்துக்கிறேன். என்... என் மைதிலியை நிச்சயமா அந்த படுகுழியில விழ விட மாட்டேன்! இது... இதுவரைக்கும் என் வாழ்க்கையில எவ்வளவோ ரேசஸ்ல கலந்துருக்கேன், ஜெயிச்சிருக்கேன்... ஆனா... ஆனா இது மத்த ரேஸ் மாதிரி இல்லை... இது... இது என் வாழ்க்கையில முக்கியமான ரேஸ்! இதுல ஜெயிச்சாத்தான்... எனக்கு வாழ்க்கையே...!" — பழைய வேகத்தில் பேச முடியாமல் திக்கித் திணறி தடுமாற்றத்துடனேயே அவன் பேசினான்.
 
​ஆறு வருடங்களுக்கு முன்னால், இதே நாளில் அவன் பேசிய அதே டயலாக்கை அச்சு பிசகாமல் பேசுவதை பார்த்து நண்பர்கள் ஆச்சரியத்தில் உறைந்து நிற்க...
 
​பாபி மட்டும் சுதாரிப்பாக, "அதெல்லாம் வேண்டாம் கண்ணா... ரேஸ் விட வேண்டிய வேலையே கிடையாது! வேகம் இருக்க வேண்டியதுதான், ஆனா விவேகமும் இருக்கணும். அந்தளவுக்கு ஒண்ணும் அவசரம் இல்லை. நாளைக்கு காலையிலதான் கல்யாணம். பைக்கை பொறுமையா ஓட்டிட்டுப் போனாக்கூட நிதானமா போய் சேர்ந்துரலாம்... அவளையும் கூட்டிட்டு வந்துரலாம். இந்த தடவை உன்னை தனியா விடுற மாதிரி அபிப்ராயம் இல்லை! நாங்களும் உன் கூடவே வரோம்... என்னடா சொல்றீங்க?
 
சந்தீப்: இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு? எங்களுக்கு என்ன வேற வேலை வெட்டியா இருக்கு? சும்மா டீ குடிச்சிட்டு, தம் அடிச்சுட்டுப் பொழுததானே போக்கிட்டு இருக்கோம்... இவங்கள சேர்த்து வச்சுட்டுத்தான் மறு வேலை!" என்று மற்ற நண்பர்களை பார்க்க, அவர்களும் தலையசைத்து ஆமோதித்தார்கள்.
 
​அவன் மறுபடியும், "இல்... இல்லை... நான்... நான் பார்த்துக்கிறேன்..." என்று திக்க, 
 
"இல்லை! இந்த தரம் மட்டும் நாங்க சொல்றதை நீ கேளு !" என்று அவனை அன்பாகக் கட்டாயப்படுத்தி அனைவரும் அவன் கூடவே நகர்ந்தார்கள்.
 
​முதல் பிளாட்பார்மில் நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கங்காதர் அண்ணனுக்கு பாபி சைகை காட்டி, 'எல்லாமே திட்டபடி கரெக்டா நடக்குது!' என்று 'Thumbs Up' குறியீட்டை காட்டினான். கங்காதர் அண்ணன் அந்த அளப்பரிய சந்தோஷமான விஷயத்தைச் சுலோச்சனா அம்மாவுக்கு தெரியப்படுத்த உடனடியாகத் தன் போனை எடுத்தார்.
 
கடைசியா வந்த மணிஷ், கேப்பில் மைதிலிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, 
 
மைதிலி: இல்ல, இல்ல. மனோவை பைக் ஓட்டவே விடாதீங்க... என்று உறுதியாக மறுத்தாள்.
 
​நண்பர்கள் அனைவரும் ஸ்டேஷனுக்கு வெளியே வந்து பைக்குகள் நின்றிருந்த இடத்தை அடைந்தார்கள். 
 
மனோ பதற்றத்துடன் பைக் சாவியை கேட்க, பாபி கொடுக்கப் போகும் தருணத்தில்,
 
மணிஷ் வேகமாக வந்து குறுக்கிட்டு: "இல்ல, மனோ கொஞ்சம் வெயிட் பண்ணு. மேலிடத்து உத்தரவு வந்திருக்கு. கல்யாண மாப்பிள்ளையை பைக் ஓட்ட வச்சு கஷ்டப்படுத்த வேண்டாம்னு சொன்னாங்க, அதனால் வேண்டாம்..." என்று சொல்லிவிட்டு, பாபியை பார்த்துத் திரும்பி 'அங்கிருந்து கால் வந்துச்சு' என்று சிக்னல் காட்டினான்.
 
மனோ: மேலிடத்து உத்தரவா புரியலையே!!! என்று கேட்க,
 
பாபி டக்கென்று புரிந்துகொண்டு,
 
"ஆமா ப்ரோ! மேலிடம்னா மைதிலி. நீங்க இப்ப பைக் ஓட்ட வேண்டாம்! கல்யாண பொண்ணை தூக்கிட்டு வர போறோம். அடுத்தது உங்க கல்யாணம், அதனால நீ தான் கல்யாண மாப்பிள்ளை... அதனால டென்ஷனே ஆகக் கூடாது. மாப்பிள்ளை முகத்துல ஒரு சொட்டு வேர்வை கூட வரக்கூடாது. பைக் ஓட்டுறதெல்லாம் நாங்க ஓட்டுறோம், நீங்க ஜோரா பின்னால உட்காருங்க!"
 
​மனோவுக்கு ஒன்றுமே புரியவில்லை. 'ஏன் இவர்கள் இப்படி வித்தியாசமாக நடக்கிறார்கள்?' என்று யோசித்தபடியே நிற்க, பாபி பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்து, "ஏறுடா!" என்று பின்னாலிருக்கையை காட்டினான்.
 
​மனோ மெல்ல பின்னால் ஏறி அமர்ந்தான்.
​அப்போதுதான் பைக் மிரரில் தன் முகத்தை பார்த்த மனோவுக்கு சந்தேகம் தட்டியது. அடர்த்தியாக வளர்ந்திருந்த தன் தாடியை தடவிப்பார்த்தபடி, "நா... நான் எப்ப... இவ்வளவு... தாடி வளர்த்தேன்?" என்று தடுமாற்றமாக கேட்டான்.
 
​"அதுவா... யூரியா போட்டதனால் வளர்ந்துடுச்சு. போற வழியில சொல்றேன்!" என்று பாபி சிரித்தபடி சொல்ல, பைக் பொறுமையாக கிளம்பியது.
​அவனை தொடர்ந்து மற்ற நண்பர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு பைக்கில் ஏறிக்கொண்டு அவர்களை பின்தொடர்ந்தார்கள்.
 
மனோவுக்குள் பழைய காட்சிகள் பிளாஷ் அடித்தன! ரயிலின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பைக்கில் சீறிப் பாய்ந்த காட்சிகளும்... அட்ரினலின் சுரந்த அந்த அதிவேக விரட்டலும்... சட்டெனக் கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதி ரத்த வெள்ளத்தில் சரிந்த காட்சிகளும் அவன் மனக்கண்ணில் மின்னி மின்னி மறைந்தன. அவன் மனசுக்குள் பழைய விபத்தின் பயமும் குழப்பமும் கிராஸ் ஆகிக் கொண்டே இருக்க... பாபியும் மற்ற நண்பர்களும் அவனிடம் பேச்சுக் கொடுத்து டைவர்ட் பண்ணிக் கொண்டே வந்தார்கள்.
 
​மனோ:
​"ஆ... ஆமா... கேட்கணும்னு நினைச்சேன்டா... ஏன்டா... நீயும் நம்ம பசங்களும் இப்படி ஆளே மாறிப்போயிட்டீங்க? பார்க்குறதுக்கு தொந்தியும் தொப்பையுமா... தலைமுடியெல்லாம் கம்மியா வேற இருக்கு?"
 
​பாபி:
​"அதுவாடா கண்ணா... உனக்கும் கல்யாணம் ஆகி குடும்பம்னு ஒண்ணு வந்தா அப்புறம் தானா தெரியும்!"
பைக்கின் சத்தத்திலும் காற்றின் இரைச்சலிலும் பாபி சொன்னது மனோவுக்கு சரியாக காதில் விழவில்லை.
​"என்... என்ன சொன்ன? எனக்கு புரியலடா?"
​பாபி சிரித்தபடி, "டேய்! கேள்வி கேக்குறது ரொம்ப ஈஸிடா... ஆனா அதுக்குப் பதில் சொல்றதுதான் உலகத்திலேயே மிகக் கஷ்டமான விஷயம்! அதையெல்லாம் அப்புறம் பொறுமையா சொல்றேன்" என்று சத்தமாக கத்தினான்.
மனோவை ரொம்ப யோசிக்க விடாமல் சந்தீப்பும் பிரேமும் டைரக்டரும் மாற்றி மாற்றி பேச்சுக் கொடுத்து, கேள்வி கேட்டு, அவனை தொடர்ந்து டைவர்ட் செய்து கொண்டே வந்தார்கள்.
 
​மணிஷ் மட்டும் போனை எடுத்து மைதிலிக்கு சுருக்கமாக அப்டேட் சொன்னான்: " நாங்க கிளம்பிட்டோம்.... on the way! Everything is fine."
 
​மறுமுனையில் (மைதிலியின் ஊர்):
 
​மணிஷின் வார்த்தைகளை கேட்ட அடுத்த நொடி... மைதிலியின் வீட்டில் உணர்ச்சிப் வெள்ளம் பெருக்கெடுத்தது!
​சஞ்சனா, இந்துமதி, ஸ்ரேயா, சலோனி, பிரணவி என அத்தனை தோழிகளும் சந்தோஷத்தை தாங்க முடியாமல், கண்ணீருடன் மைதிலியை ஒருசேரக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.
 
​மகிழ்ச்சியில் மைதிலியின் நெஞ்சு விம்மித் தணிய... தோழிகளின் அன்பான அணைப்பில் அந்த வீடே உணர்ச்சிப் பெருக்குடன் சிலிர்த்துக் கொண்டிருந்தது! மைதிலி பல வருடம் கழித்து ஊருக்கு வந்திருந்ததால் வீட்டுக்கு வெளியே ஊர்காரர்கள் திரண்டு வந்து பேசிக் கொண்டிருக்க, மாமா அவர்களுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்.
 
ஒன்றரை மணி நேரம் கழித்து:
​அந்த சிறிய கிராமத்திற்குள் நண்பர்களின் பைக்குகள் வரிசையாக நுழைந்தன. அதற்குள் விஷயத்தின் சுவாரசியம் ஊர் முழுவதும் பரவியிருந்தது! அது சின்னஞ்சிறிய ஊர் என்பதால், பைக்குகள் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த மக்கள் எந்தப் பக்கம் போக வேண்டும் என்பதை 'டிராஃபிக் கான்ஸ்டபிள்' போல வழிகாட்டிக் கைகாட்டினார்கள்.
​அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி, நண்பர்களின் அனைத்து பைக்குகளும் நேராக சாகர் மாமாவின் வீட்டு வாசலில் வந்து இன்ஜின் உறுமலை நிறுத்தின. அவர்கள் வந்ததும்,
​வீட்டின் முன்னால் இன்னும் பெருந்திரளான கூட்டம் கூடியது. அந்தப் கூட்டத்தை பார்த்ததும், 'மைதிலியின் கல்யாணத்திற்காக வந்த கூட்டம் போல' என்று மனோ தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
 
​பைக்குகள் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும், வீட்டுக்குள்ளே பெண்கள் கூட்டத்தின் நடுவே நின்றிருந்த மைதிலி சட்டென நிமிர்ந்து இந்துவையும் சஞ்சுவையும் பார்த்தாள். அவர்கள் இருவரும் வார்த்தைகள் ஏதும் பேசிக்கொள்ளவில்லை; கண்களில் நீரரும்ப, "போடி!" என்பது போல புன்னகையோடு தலை அசைத்தார்கள்.
​மைதிலி வீட்டு வாசலுக்கு வந்து பார்த்தாள்.
 
​சற்றுத் தள்ளி, பைக்குகளில் இருந்து இறங்கி அனைவரும் நின்றிருந்தனர். ஊர்க்காரர்கள் அதுல யாரு மனோ என்பது போல் தேட... டைரக்டர் கையால் சுட்டிக்காட்டி அவர்தான் மனோ என்று ரகசியமாக சொல்லிக் கொண்டிருந்தான்.
 
பாபி மனோவை பார்த்து, "அங்க பாருடா..." என்று கைகாட்டினான்.
 
​அங்கே... வாசலில், கண்களில் நீருடன், முகம் முழுக்க காதலுடன் மைதிலி நின்றிருந்தாள்!
 
​அவளை கண்ட அந்த நொடி... மனோவின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
​"ச... சன்ஷைன்..."
 
​மனோவின் உடைந்த அந்த ஒற்றை அழைப்பு காற்றில் மிதந்து வர... அடுத்த நொடி, காலம் தன் ஓட்டத்தை நிறுத்தியது போலிருந்தது!
 
​மைதிலி தன் கட்டுப்பாடுகளை இழந்து, கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவனை நோக்கி ஓடி சென்றாள். 
 
பூமிக்கும் வானத்திற்குமான இடைவெளியை பெருமழை வந்து அடைப்பதை போல... ஆறு வருட பிரிவு, வலி, துயர இடைவெளியை அவளது ஆனந்தக் கண்ணீர்மழை ஒரே அடியில் துடைத்தெறிய... பாய்ந்து சென்று மனோவை இறுக்கமாக கட்டியணைத்து கொண்டாள்!
 
​அவன் மார்பில் தன் முகத்தை புதைத்து அவள் கதற, மனோ அவளை அணைத்து, அவள் தலைமுடியில் தன் கண்ணீரை சிதறவிட்டான்.
​காலம் வலியுடன் எழுதின அத்தனை வரிகளையும் அழித்துவிட்டு, அவர்களை மீண்டும் முதல் நாளின் சந்தோஷ ஆரம்பத்தில் கொண்டு போய் நிறுத்தியிருந்தது. 
 
பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர் தளும்பியது. குறிப்பாக, இவர்கள் காதல் பயணத்தின் ஒவ்வொரு அடிச்சுவடையும் பக்கத்திலேயே இருந்து பார்த்த நண்பர்களுக்கு நெகிழ்ச்சி கலந்த பரவசம். ஒரு மாபெரும் போராட்டத்தில் ஜெயித்துவிட்ட திருப்தி!
 
​சஞ்சனா, இந்துமதி, ஸ்ரேயா, சலோனி, பிரணவி என தோழிகள் அனைவரும் ஒருவரையொருவர் கைகளை கோர்த்துக்கொண்டு விம்மி விம்மி அழுதார்கள்.
 
​ஆறு வருடங்களாக தன்னிலை மறந்து உறைந்து கிடந்த ஒரு உயிர்... காதலின் கரங்களில் மீண்டும் உயிர்த்து நிற்பதை பார்க்கும் போது, அவர்களுக்குள் எழுந்த உணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சந்தீப் மணிஷின் தோளை தட்ட, மணிஷ் கலங்கிய கண்களை துடைத்தபடி சிரித்தான். "எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதுரா' என்பதைப் போல நண்பர்கள் ஒருவரையொருவர் பார்த்து பாசத்துடன் தலை அசைத்துக் கொண்டார்கள்.
 
டைரக்டர் கண்களில் ஒரு சில்வர் ஜூப்ளி படம் மின்னியது. அவன் கதைக்கு அதி அற்புதமான கிளைமாக்ஸ்ம் கிடைத்தது and அவர்கள் இருவரும் சேர்ந்தும் விட்டார்கள். டபுள் தமாக்கா.
 
​அத்தனை பேருமே அந்த நெகிழ்ச்சியான காதல் ஜோடியையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்க...
​திடீரென பாபியின் முதுகில் யாரோ மெல்ல சுரண்டுவது போல் இருந்தது.
 
​உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்த பாபி, "யாருடா அது?" என்ற திரும்பிப் பார்த்தான்.
 
​அங்கே... 'கும்' மென்று ஒரு காந்தக் கண்ணழகி நின்றிருந்தாள்! அந்த கிராமத்து கூட்டத்திலும் தனித்துத் தெரியும் அழகு.
​பாபி சற்றே திகைத்து, "என்னம்மா?" என்பது போல புருவத்தை உயர்த்தி சைகையிலேயே கேட்டான்.
​அவள் வாய்ஸை குறைத்து, கிசுகிசுப்பாக பேச தொடங்கினாள்:
 
"ஒன்னுமில்லைங்க... மைதிலி அக்காவோட லவ் ஸ்டோரியை கேள்விப்பட்டு மனசே ரொம்ப பாரமாயிடுச்சு. ஆனா அவங்களை நீங்களும் உங்க ஃப்ரெண்ட்ஸும் பிளான் பண்ணி சேர்த்து வச்ச விஷயத்தையும் கேள்விப்பட்டேன்... நிஜமாவே நெஞ்சை தொட்டுட்டீங்க!" என்று தன் வலது கையை நெஞ்சில் கை வைத்து பூரிப்போடு காண்பித்தாள். 
 
பாபி அவள் கைவைத்த இடத்தை பார்த்து எச்சில் விழுங்கி, "அதுக்கு இப்ப என்ன?" என்பது போல தடுமாறி கேட்க...
 
​காந்தக் கண்ணழகி தன் கயல் விழிகளை உருட்டி, "உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்று மிகவும் ஆர்வமாக கேட்டாள்!
 
​"ஐயையோ!!" — பாபி வயிற்றெரிச்சலில் தன் தலையில் அடித்து கொண்டான்.
 
​நல்லவேளையாக, சுற்றியிருந்த எல்லாரும் அந்த மெயின் காதல் ஜோடியையே மெய்மறந்து பார்த்து கொண்டிருந்ததால், பாபிக்கு நடக்கும் இந்த சில்மிஷ சோதனையை யாருமே கவனிக்கவில்லை.
 
​பாபி தலையில் அடித்துக் கொள்வதைப் பார்த்த காந்தக் கண்ணழகி குழப்பத்துடன், "ஏங்க... என்னாச்சு? ஏன் தலையில அடிச்சுக்கிறீங்க?" என்று கேட்டாள்.
 
​பாபி அவளை ஏற இறங்க பார்த்து ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, "அதை ஏம்மா கேக்குற... அது ஒரு பெரிய கதை! எனக்கு ஏற்கனவே ஒரு தடவை கல்யாணம் ஆயி தொலஞ்சிருச்சு..." என்று வழக்கம் போல தன் சோகப் பாட்டை பாடத் தொடங்கினான்!
 
தொடரும்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
 

ஜானகி மந்திரம் 43

ஒரு மாதத்துக்கு பிறகு,

​புனேயின் அமைதியான சுற்றுப்புறத்தில் அமைந்திருந்த புகழ்பெற்ற 'ஜோஷி நியூரோ அண்ட் பிஹேவியரல் சயின்சஸ் இன்ஸ்டிடியூட்'.
​மருத்துவமனையின் மூன்றாம் தளத்திலிருந்த அந்த 'Consultation Room', வழக்கமான ஒரு மருத்துவப் பிரிவு என்பதை விட ஏதோ ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ரிசப்ஷன் போல பளபளத்தது.

​மெல்லிய வெளிச்சம் சிந்தும் விளக்குகள், சுவர்களில் நுட்பமான மூளை நரம்பியல் வரைபடங்கள், மூன்றாம் தளத்தின் பிரம்மாண்டக் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே விரிந்து கிடக்கும் புனே நகரத்தின் பேரழகும், தூரத்து சயாத்ரி மலைக்குன்றுகளின் அமைதியான தோற்றமும் என... அந்த தளமே ஒருவித நம்பிக்கையையும் நிம்மதியையும் தன்னகத்தே கொண்டிருந்தது.
​மருத்துவமனைகளுக்கே உரிய காரமான மருந்து நெடி ஏதுமின்றி, ஒரு மெல்லிய சந்தன வாசம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது.

​அங்கே சுலோச்சனா அம்மா, மைதிலி, சஞ்சனா, இந்துமதி, பாபி, சந்தீப், மணிஷ், பிரேம் என அத்தனை பேரும் எதிர்பார்ப்பும் ஏக்கமுமாய் அமர்ந்திருந்தார்கள். ஸ்ரேயாவும் அவளது கேங்கும் பர்சனல் வேலைகள் காரணமாக வர முடியவில்லை; டைரக்டர் ஜேம்ஸ் தன் புதுப்படத்தின் முதல்கட்ட வேலைகளில் பிஸியாகியிருந்தார்.

முதன்மை மனநல மருத்துவர் டாக்டர் சுனில் சவுத்ரி எங்கிருந்தோ வந்து அவர்களிடம் பேசினார்.

​"See... மனோவோட
Cognitive Functions எல்லாமே இப்போ நூறு சதவீதம் நார்மலாகிடுச்சு. Cyclical Memory Loop முழுமையா பிரேக் ஆகி, பழைய நினைவுகள் அத்தனையும் ரீ-செட் ஆயிடுச்சு! நியூரோலாஜிக்கல் டெஸ்ட்ஸ், சிடி ஸ்கேன், இ.இ.ஜி எல்லாமே பெர்ஃபெக்ட்! ஹீ இஸ் கம்ப்ளீட்லி ஆல்ரைட். பிசிக்கலாவும், மென்டலாவும் அவர் இப்போ பழைய ஆரோக்கியமான மனோவா மாறிட்டார்!"

அவர் அளித்த தெளிவான உறுதிமொழி, சுலோச்சனா அம்மாவின் முகம் முழுவதும் நிம்மதியை படரச் செய்தது. மைதிலியின் மனசுக்குள் சந்தோஷம் சிறகடித்து பறந்தது!

​"சீஃப் டாக்டர் உள்ள அவர்கிட்ட முக்கியமா சில விஷயங்கள் பேசிக்கிட்டு இருக்காரு. முடிஞ்சதும் அவரே வெளியே வருவார். வெயிட் பண்ணுங்க..." என்று சொல்லிவிட்டு டாக்டர் சுனில் கிளம்பினார்.

​அடுத்த நொடி... அனைவரின் பார்வையும் சீஃப் டாக்டரின் அறைக்கதவின் மீதே நிலைத்து நின்றது. வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே தெரியாத ஒன்-வே கிளாஸ் பொருத்தப்பட்ட கதவு.

'எப்போது கதவு திறக்கும்? எப்போது அவனை மீண்டும் பழைய மனோவாக பார்ப்போம்?' என்ற ஏக்கம் அங்கே திரண்டிருந்த ஒவ்வொருவரின் விழிகளிலும் கனன்றது.

​சில நொடிகள் யுகங்களாக நகர...

சீஃப் டாக்டரின் அறைக்கதவின் கைப்பிடி சுழன்றது... கதவு மெல்ல திறந்தது...

​அத்தனை பேரின் மூச்சும் ஒரு நொடி உறைந்து நிற்க, அந்த கண்ணாடி கதவை தள்ளிக்கொண்டு மனோ வெளிவந்தான்!

​அடடா... அது இத்தனை காலமாய் சுவிட்ச்-ஆஃப் ஆகி, சுய உணர்வு இல்லாமல் ஃபிரீஸ் ஆகிக் கிடந்த பழைய மனோ அல்ல! இது 'வெர்ஷன் 2.0'!

நேர்த்தியாக ‘ஷேவ்’ செய்யப்பட்ட முகம்... கச்சிதமாக வாரப்பட்ட தலைமுடி... அடர் நீல நிறச் சட்டையின் மேல் பட்டன்களை போட்டு, கைகளை ஸ்டைலாக மடித்துவிட்டபடி... ‘மென் இன் ப்ளூ’வாக,
​அச்சுபிசகாமல், ஹீரோ மாதிரி, முகத்தில் ஒரு கவர்ச்சி புன்னகையோடு ஸ்டைலாக நடந்து வந்தான்!

கேமராவின் ஸ்லோ-மோஷன் ஃபிரேமுக்குள் அடங்குவது போல அவனது ஒவ்வொரு அடியும் அத்தனை கச்சிதம்.

​கதவை தாண்டி வந்து, அங்கிருந்த வரவேற்பறை கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து லேசாக முடியை கைகளால் சீரமைத்துக் கொண்டே, தன் நண்பர்களையும் குடும்பத்தையும் நோக்கி அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் அதே பழைய எனர்ஜியும் மிடுக்கும் ததும்பியது.

​அவனது கண்களில் மின்னிய பழைய குறும்புப் பார்வையையும், ஆரோக்கியமான புன்னகையையும் பார்த்ததும்... அங்கே நின்றிருந்த அத்தனை பேரின் நெஞ்சிலும் ஒரு பிரம்மாண்டமான பரவசம் பொங்கி வழிந்தது!சுலோச்சனா அம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

காதலுக்காக உயிரை கொடுத்து காதலை வாழ வைத்த கதைகளையும், காதலுக்காக உயிரை எடுத்த கதைகளையும் தான் உலகம் இதுவரை கேட்டிருக்கிறது. ஆனால் இவர்களுக்கு... காதலே உயிரைக் கொடுத்து வாழ வைத்திருக்கிறது!

போலித்தனங்களும் பிளாஸ்டிக் உணர்வுகளும் நிறைந்த இந்த நவீன உலகத்தில், 'உண்மையான காதல்' என்பதெல்லாம் வெறும் தியரிதான் என்று சொல்பவர்களுக்கு மத்தியில்... அது இன்னமும் உயிரோடுதான் இருக்கிறது என்பதை நிரூபித்த நாயகனை கண்டு, மைதிலியின் விழிகளில் திரண்டு இருந்த ஆனந்த கண்ணீர் நிச்சயம் அவளுக்கு ஏற்பட்ட வலிகளை கரைக்கும்; அவர்கள் வாழ்க்கையில் புதியதொரு விடியல் பிறக்கும்!

சுபம்



   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
 
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
 
 
கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள் 
 
 


   
ReplyQuote
Page 5 / 5

You cannot copy content of this page