About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
“நா அப்ளே பண்ணல அத்தான்." என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.
"நீ பண்ணாமலா இந்தத் தேதில வந்து ஜாயின் பண்ணச் சொல்லி ‘டேட்’டோட கால் லெட்டர் வரும். அதுவும் இன்டர்வியூ கூட அட்டன் பண்ணாம ஸ்டெயிட்டா ஜாயினிங்க ஆர்டர் வந்திருக்கு." என்றவன் தன் மடிக்கணினியைத் திறந்து, கோகோவிற்கு வந்த மின்னஞ்சல் வேலையைப் பற்றியும் அதை வழங்கிய நிறுவனத்தைப் பற்றிய உண்மைத் தன்மையையும் பரிசோதித்தான்.
"எனக்கும் அதே டவுட் தா அத்தான். நா யாருக்கிட்டயும் வேல வேணும்னு மெயில் அனுப்பல. எந்த இன்டர்வியூவும் அட்டன் பண்ணல. அப்படி இருக்குறப்போ வந்து சேரச் சொல்லி ஒரு மெயில் வந்திருக்கு. உண்மையிலேயே உண்மையான கம்பெனி தா அனுப்பிருக்குமா?. இல்ல வெளிய என்ன வர வைக்க யாரோ டிராமா போடுறாங்களா?." என்றபடி குறுக்கும் நெடுக்குமாக அறையை அளந்து கொண்டிருந்தவளை ஒரு பார்வை பார்த்தான்.
அந்தப் பார்வையின் பொருள், 'இவா பெரிய எலிசபெத் பேத்தியா! யார் கண்ணலயும் பட்டிடக் கூடாதுன்னு மறைச்சி மறைச்சி வளக்குறாங்க. இவள வெளில கொண்டு வர இமெயில் மூலமா தூது அனுப்புறாங்க.’ என்பது.
"நிச்சயம் அது போலி கம்பெனியாத்தா இருக்கும். ஆஃபிஸ் மும்பைன்னு போட்டிருக்கு. அங்க என்ன வர வச்சி வித்திட்டா?" என விழி விரிய கேட்டவளின் தோரணை ரசிக்கும் படி தான் இருந்தது. ஆனால் இளாவிற்கோ,
'ரிட்டன் வாங்க மாட்டோம்னு சொல்லிச் சேல்ஸ் பண்ணச் சொல்லனும்.’ என மனம் கேலி செய்தது.
அதை உணராத கோகோ, "யாரோ என்ன வச்சி ப்ராங்க் பண்றாங்க. நாம போலிஸ்ல இந்த ஃபோர்சரியப் பத்திக் கம்ப்ளைட் பண்ணுவோமா?. அப்பத்தா நாளைக்குத் தலைப்புச் செய்தில, 'ஊருக்குள் நடமாடும் இமெயில் ஆசாமிகள்... ஜாக்கிரதை... அறியாத தெரியாத நபர்களிடமிருந்து வரும் இமெயிலை யாரும் ஓப்பன் செய்ய வேண்டாம்..' ன்னு சுருக்கமா சொல்லிட்டு, விரிவான செய்திகளா ஒரு மணி நேரத்துக்கு நாலு தடவ சொல்லுவாங்க. வாங்க இளாத்தான் போலிஸ்க்குப் போவோம்." என அவனை உளுக்க, அவன் அசைந்து கொடுத்தானே தவிர எதுவும் சொல்லவில்லை.
"இளாத்தான் என்னாச்சி.?"
"கோகோ… இது போலி இல்ல. உண்மையான மெயில் தான். Zeron consultantல இருந்து தா உனக்கு ஜாப் ஆஃபர் பண்ணிருக்காங்க." என்றது தான் தாமதம்,
"என்ன! அந்தக் கம்பெனில உண்மையிலும் உண்மையாவே எனக்கு வேல பாக்க வாய்ப்பு கிடைச்சிருக்கா!! வாவ்! சூப்பர் மேட்டரு." என அவனைக் கட்டி அணைக்க வந்தவளை எட்ட நிறுத்தினான் அவன்.
'கட்டிப் பிடிக்கக் கூடாதா. இட்ஸ் ஓகே.' என்பதுபோல் அவனின் கட்டில் இருந்த தலையணையை அணைத்து நடனமாடத் தொடங்கி விட்டாள்.
ஏன் இவ்வளவு சந்தோஷம்.?
அவள் லட்சியத்தின் முதல் படி ஏற உள்ளாளே அதான் சந்தோஷம்.
Zeron consultant. அது ஒரு ad campaign agency. அதில் அவளுக்கு ஒரு பணியை ஒதுக்கி, சம்பளத்தையும் குறிப்பிட்டு அந்த மின்னஞ்சல் வந்துள்ளது. அதுகூட அவளுக்குச் சந்தோஷத்தைத் தரவில்லை. அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது ரிபேக்கா என்று போடப்பட்டிருந்த கையெழுத்து தான்.
ரிபேக்கா தான் அதன் முதலாளி. அவளுக்குக் கீழ் கோகோவிற்கு பணியா!
அவளின் பார்வையில் எப்படி கோகோ சிக்கினாள்?
"கன்சல்டெண்ட் ஆரம்பிச்சி த்ரீ டூ ஃபோர் மன்த் தா ஆகிருக்கும். இப்ப போய் நா என்னோட திறமைய காட்டி எக்கச்சக்க கஸ்டமர்ஸ்ஸ பிடிச்சிக் கொண்டு வந்து குடுத்தா!, ரிபேக்கா மேம் என்ன பாராட்டுவாங்க. அவங்க கையால விருது வாங்குறதையும் லட்சியமா சேத்துக்குவோம். மும்பைல வேல, தனி வீடு எடுத்துத் தங்களாமா இல்ல ஹாஸ்டல்ல சேரலாமா? எது வசதி அத்தான்.? அத்தான்... அத்தான்..." என்றாள் வெகுநேரமாகக் கணினியை மூடி வைத்து யோசனையில் இருந்தவனை பார்த்து.
"அத்தான். என்னாச்சி?"
"நீ ஜாம் ஆப்ளே பண்ணியா?"
"இல்ல."
"அப்றம் எந்தப் பேஷிஸ்ல உனக்கு ஜாப் குடுத்திருக்காங்க?"
"எங்கிட்ட திறம இருக்கு அத்தான்."
"என்ன திறம?"
"என்னோட இன்ஸ்டா பக்கம் வந்து பாருங்க. தெரியும் என்னோட டேலன்ட்." என ரோசமா சொல்ல,
"அப்படி இன்ஸ்டா பாத்து வந்தவங்க இமெயில நமக்கு அனுப்பிருக்கனும். உனக்கு இல்ல." என்றபோது அவளின் புருவங்கள் முடிச்சிட்டது.
"உன்னோட எல்லா சோஷியல் மீடியா பேஜ்ஜும் நம்ம ரெண்டு பேரோட கண்ட்ரோல்ல இருக்கு. கான்டாக் ஐடில இருந்து இமெயில் வரை எல்லாமே உனக்கும் எனக்கும் மொதுவா இருக்குற ஐடி தான்.
வந்த மெயில் உன்னோட பர்ஷ்னல் ஐடிக்கு வந்திருக்கு. எப்படி? நீயா அப்ளே பண்ணாம தானா டயிப்பாகி போயிடுச்சா?. அப்படியே போனாலும் உன்னோட sent optionல அது காட்டலயே." என்றபோது அவளும் யோசித்தாள்.
அவள் போடும் பதிவுகளிலிருந்து வீடியோ, ஏன் வரும் குறுஞ்செய்திவரை, அனைத்தையும் அவளின் பாதுகாப்பு கருதி கண்காணிக்கும் வழக்கம் அவனுக்கு உண்டு. அதைச் சோதித்து பார்த்தான். அதில் எதுவும் இல்லை.
இப்போது யாரால் அனுப்பப்பட்டது என்றே தெரியாத ஒரு இமெயிலுக்கு எதிர்வினை ஆற்றி ஏமாந்து விடக் கூடாது என நினைத்தவன்,
"இதுல இருக்குற மேட்டர் உண்மை தான். ஆனா எப்படி வந்ததுன்னு தெரியாம இத அக்சப்ட் பண்ணக்கூடாது. போ. போய் வேற வேலையப் பாரு.”
'என்ன ரிபேக்கா மேம் கிட்ட வேல பாக்க முடியாதா?' என அதிர்ந்து போனவள்.
"யார் அனுப்பிருந்தா என்ன! கம்பெனி உண்ம, கால் லெட்டரும் உண்ம. நா அந்தத் தேதில போகலன்னா எனக்குக் கிடச்ச வாய்ப்ப நா மிஸ் பண்ணிட்டேன்னு அர்த்தம்."
"அதுக்கு."
"மும்பை போய் ஜாய் பண்ணப் போறேன்!"
"நடக்காத காரியம்."
"ஏ நடக்காது?."
"நடக்காது."
"அதா ஏன்னு கேட்டேன்.?"
"உங்கண்ணே என்ன சொல்வான்?. உன்ன இங்க இருக்குற சென்னைக்கே தனியா விட்டது இல்ல. ஒரு வர்ஷம் காண்ட்ராக்ட் போட்டு மும்பைல எப்படி வேல பாக்க விடுவான்?. அத்தைய என்ன சொல்லிச் சமாளிப்ப?. ஒரு வேள இந்த மெயில் போலியா இருந்தா? நீ மும்பைக்கிப் போய் ஏமாந்து நிப்ப. இதெல்லாம் தேவையில்லாதது. போ..." என அவளைப் பேசவே விடாது அவனே பேசி வெளியே துரத்திக் கதவை மூடினான்.
மறுநாள் காலைக் கதவைத் திறக்கும்போது கோகோ வாசலில் நின்றுகொண்டிருந்தாள்.
நகரவே இல்லயா! என ஆச்சர்யமாகப் பார்த்தவனுக்கு நிறம் மாறியிருந்த சுடிதார், 'வீட்டுக்குப் போய்த் தூங்கி எந்திரிச்சி, குளிச்சி முடிச்சி பய பக்தியோட வந்திருக்கேன்.' என்றது.
மணி ஏழு தான் என்று சுவற்றில் தொங்க விட்டிருந்த கடிகாரம் சொல்ல, 'எதற்கு இவ்வளவு காலையில் வந்துள்ளாய்.' எனப் பார்வையாலேயே கேட்டான்.
அவள் வாயெல்லாம் பல்லாக, உரிமையுடன் அவனின் கரம் பற்ற, "என்ன விசயம் கோகிலா? எதுக்கு வந்த.?" எனக் காட்டமாகக் கேட்டான்,
"வீட்டுல எப்படி சம்பதிப்பாங்கன்னு தான கேட்டிங்க?. அதுக்காகத் தா எல்லாத்தையும் கூட்டீட்டு வந்திருக்கேன். வீட்ட சமாளிச்சிட்டா மும்பை போகலாம்ல."
"உனக்காகவெல்லாம் என்னால பேச முடியாது."
"நீங்கப் பேசவே வேண்டாம் அத்தான். புன் சிரிப்போட பக்கத்துல நின்னா மட்டும் போதும்." என்றவள் அவனின் கரம்பற்றி இழுத்துச் சென்றாள்.
சேஃபாவில் அனைவரும் அமர்ந்திருக்க, இருவரும் ஜோடியாக வருவதை பார்த்து விழி விரித்தனர்.
அவர்களின் பார்வையை உணர்ந்தவன் வேகமாகக் கரத்தை உறுகப் பார்க்க, அது வரமாட்டேன் என்றது.
"அத்த, மாமா, ம்மா, ண்ணா. நாஞ்சொன்னத நம்பலன்னா இப்ப அத்தான் கிட்டயே கேட்டுக்கங்க. சொல்லுங்க அத்தான்." என்றவளை,
'பேசவே வேண்டாம்னு சொல்லிட்டு, பேசச் சொல்ற.' என்பது போல் பார்க்க,
"ம்ச்... என்ன அத்தான் நீங்க? உங்களுக்குச் சங்கட்டமா இருக்கும்னு தா நானே சொல்லிட்டேன். இருந்தாலும் நீங்களும் ஒருக்க உங்க வாயால சொல்லிடுங்க."
'எத...' இளாவின் மைண்ட் வாய்ஸ்.
"என்னடா இது?. இவா சொல்றது உண்மையா?" எனக் கோபமாக ஆரம்பித்தார் யசோதா.
"ம்மா... அது."
"உண்ம தான்த்த. சொல்லுங்க அத்தான். நாம காதலிக்கிறேங்கிறத." என்றவள் அளவில் பெரியதாக இருக்கும் பாறாங்கல்லைத் தூக்கி அவன் தலையில் போட்டு விட்டான்.
'லவ்வா! அதுவும் உம்மேலயா!'
"கடந்த ஆறு மாசமாவே எங்களுக்குள்ள அந்த மாறி எண்ணம் இருக்கு. போன மாசம் ஊருக்கு வந்திட்டு போனப்பத்தா அத லவ்வுன்னு உறுதி பண்ணிட்டு போனாரு அத்தான். இப்போதைக்கி யார்க்கிட்டயும் சொல்ல வேண்டாம் கொஞ்ச நாள் போட்டும்னு தா நினைச்சோம். ஆனா சூழ்நிலை அப்படி அமைஞ்சிடுச்சி." என்க, தலையைக் கூட அசைக்காது நின்றான் இளவேந்தன்.
"என்ன சூழ்நிலை வந்திடுச்சி.?" என்றாள் கோகோவின் அண்ணி.
"அது அத்தான் மும்பைல கை நிறைய சம்பாதிக்கிறாரு. அவருக்கு இணையா நா இருக்கனும்னு ஆசப்பட்டு மும்பைலயே ஒரு வேலைக்கி ஏற்பாடு பண்ணிருக்காரு.”
‘நானா!!’
“அவர் கூட மும்பைல இருக்க வேண்டிய சூழ்நிலை. யாரும் எதுவும் தப்பா பேசிடக் கூடாதுல அதான்... என்ன உரிமையோட மும்பைக்கு கூட்டிட்டு போக விரும்புறாரு." என்றாள் நாணிக் கோணி.
பரஞ்சோதிக்கு பரம சந்தோஷம். தங்கை மகள் மருமகளாக வருவதில். ஆனால் யசோதாவோ தன் அண்ணன் மகளில் ஒருத்தியைத் தான் ஏற்பேன் என வாதம் செய்ய, சத்தமிடாமல் கோகோவை இழுத்து வந்தான் இளா.
"என்ன உலறிட்டு இருக்க?." எனக் கோபமாகக் கத்தினான்.
"உதவி அத்தான் உதவி. இதுவரை எனக்கு நீங்கப் பண்ண உதவிக்குக் கை மாறா இந்தக் கோகோ பண்ற உதவி." என்றவளை முறைக்க மட்டும் தான் முடிந்தது.
"இது உதவியா?. உனக்கு மும்பை போனும்னா உண்மையச் சொல்லி உன் அண்ணேங்கிட்ட பர்மிஷன் வாங்கனும். அத விட்டுடு லவ்வு… மேரேஜ்னு கண்டத பேசாம, 'நா விளையாட்டுக்குப் பேசினே.'ன்னு போய்ச் சொல்லு." என விரட்ட,
"உங்களுக்கு ஜோசியத்து மேல நம்பிக்க இருக்கா.?"
"ம்ச்... உன்ன நா போய் அவங்கக்கிட்ட உண்மையச் சொல்லச் சொன்னேன்."
"பதில் சொல்லுங்க அத்தான்."
"எனக்குக் கிடையாது."
"ஆனா அத்தைக்கு இருக்கு. இன்னும் ஒரு வர்ஷத்துல உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலன்னா நீங்கச் சன்னியாசியா மாறிடுவிங்கன்னு நேத்து சொல்லி விட்டிருக்கான்."
"அதுக்கு."
"தீவிரமா உங்களுக்குப் பொண்ணு பாத்திட்டு இருக்காங்க."
"சோ."
"எனக்கு நீங்க மும்பைல வேலை பாக்க உதவி பண்ணா உங்களுக்கு ஒரு வர்ஷம் டயம் கிடைக்கும். அதுக்குள்ள உங்க மனசுல இருக்குற பொண்ணுக்கிட்ட உங்க காதல சொல்லிக் கரெக்ட் பண்ணிடுங்க."
'அடப்பாவி! உனக்கும் அங்க ஆள் இருக்கா.! சொல்லவே இல்ல.’
மயக்கம் தொடரும்...
மயக்கம் : 4
Latest Post: பாய்மரக் கப்பல் - Story Thread Our newest member: sujitha Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page