About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்: 47
JET industry...
அதன் தலைமை இருக்கையில் பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் இந்தரஜித்ரேவன் அமரும்போது அதற்குக் காரணமாக இருந்த சஜித்ரேவனை பார்த்து உள்ளம் பேரெல்லை கொண்டது.
அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த நிறுவனத்தை மீட்கும் கரமாய் சஜித் இருந்தது, தலைமை வேண்டாம் என்று இந்தரை அமர வைத்தது, அவருக்கு அத்தனை பெருமிதமாய் இருந்தது.
அது மீட்டிங்க ஹால்.
நிறுவனத்தைக் கையகப்படுத்தியிருக்கும் புதிய நிறுவனத்தின் முதலாளியை வரவேற்கவென நடத்தப்பட்ட கூட்டம் அது.
புதிய முதலாளியை எதிர்நோக்கி காத்திருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது சஜித்தினீ வருகை.
நிர்வாக இயக்குனர்கள் மத்தியில் மைக்கில் ஆனந்தமாகத் தன் மகனின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்த இந்தர், சித்தாராவின் அருகில் அமர்ந்திருந்த சஜித்தை மேடைக்கு அழைத்தார்.
அணிந்திருந்த கோர்ட்டை சரி செய்தபடி இந்தரின் அருகில் சென்றவனை ரசிக்கக் கண்கள் பற்றவில்லை கோகோவிற்கு.
'ஏ கடவுள் நமக்கு ரெண்டு கண்ண வச்சாரு. சில க்ராமிக்ஸ படத்துல காட்டுற மாறி நிறைய கண்ணு இருந்தா, அது முழுக்க நா என்னோட சத்யாவ ஃபில் பண்ணிருப்பேன்.' எனக் கடவுளைத் திட்டிக் கொண்டே சஜித்தின் கம்பீரத்தை பருகியபடி விருந்தினர் நாற்காலியில் சாமியாடியவளை, துகிரா தான் கீழே விழாதபடி பார்த்துக் கொண்டாள்.
'செக்கேன்ட டயம் அவன கோர்ட் சூட்ல பாக்குறேன். பஸ்ட் டயம் பாத்தப்ப ரசிக்க முடியல. ப்பா.... இப்ப வார்த்தையே இல்ல. அவ்ளோ அழகு என்னோட சத்யா.' என்ற உளறல்கள் சொல்லும் அவள் எந்த அளவிற்கு போதையில் உள்ளாள் என்று.
திடீரென இந்தர் பேச்சை நிறுத்த, அனைத்து தலைகளும் வாசலில் நின்றிருந்த ப்ரஜித்தை திரும்பிப் பார்த்தன.
உதடுகளில் கணிக்க முடியாத புன்னகையை படரவிட்டவன் நிதானமாக மேடையே பார்த்துபடி நடந்து வந்தான்.
அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ரிபேக்காவின் இதயத்துடிப்பு எகிறியது.
நண்பனுக்கும் கணவனுக்கும் இடையில் இழுபடும் தன் நிலையை அறவே வெறுத்தவள், ஓடிச் சென்று ப்ரஜித்தை தடுக்கப் பார்த்தாள் பயத்துடன்.
பயம்…
நேற்று மகேந்தர் குடும்பம் ப்ரஜித்தை தூண்டி விட்டதால் உண்டானது.
அனு, "மறுபடியும் மறுபடியும் * கிட்ட நீ தோத்திட்டே இருக்க. நீ அந்த வீட்டுல செல்லாக்காசு தான்னு இன்னொரு டயம் நிறுபிச்சிட்டான்."
"எந்தப் பதவி அவனுக்குக் கிடைக்கக் கூடாதுன்னு நீ சொன்னியோ அந்தப் பதவி இனி அவனுக்குத் தான். JET industry மொத்தமும் அவனுக்குத் தான்."
"நாம வின் பண்றோமோ இல்லயோ அவன் வின் பண்ணக் கூடாது. உங்களுக்குள்ள நடக்குற இந்தப் போட்டிய முடிச்சி வச்சிடு."
"நாளைக்கி அவன் அந்தச் சேர்ல உக்காரக் கூடாது." எனத் தந்தையும் மகனும் மாறிமாறி தங்களின் திட்டம் தந்த தோல்வியை ப்ரஜித்தின் மீது திணித்து, சஜித்தைக் கொலை செய்யத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தை ரிபேக்கா கேட்க நேர்ந்தது.
ரேவன் குடும்பத்து பலமே அந்த இரும்பு ஆலை தான். அதை முடங்க வைத்து, ஆலையின் நன்மதிப்பை கெடுத்து, திவாலாகும் நிலையில் ஆலையைத் தங்களின் பெயருக்கு மாற்ற வேண்டும் என்பது அவர்களின் பல ஆண்டுகால திட்டம்.
நன்மதிப்பை கெடுத்தது, திவாலாகும் நிலைக்குத் தள்ளியது என அனைத்தையும் ப்ரஜித்தை வைத்து வெற்றிகரமாகச் செய்தவர்களின் கைக்கு நிறுவனம் கிடைக்கவில்லை என்பது தான் பெரும் சோகம்.
ஆலையின் பெருவாரியான பங்குகள் NITF ltd என்ற பெயரில் சஜித் வாங்கி நிறுவனத்தைத் தனதாக்கி, இந்தருக்கே அதைப் பரிசாக்கியது அவர்களில் பல ஆண்டுகால திட்டத்திற்கு கிடைத்த பெரும் இடி.
இத்தனை ஆண்டுகளாக அவர்களைச் சுரண்டி தொழில் வளர்த்ததை சஜித் கண்டுபிடித்தால் என்னவேண்டுமானாலும் செய்வான் என்பதால் ப்ரஜித்தை தூண்டி விட்டுக் கொண்டிருந்தனர்.
அதற்கு ஏற்றார் போல் ப்ரஜித்தும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இங்கு வந்து சேர, பயந்து போனாள் ரிபேக்கா.
"ப்ரஜி எதுவா இருந்தாலும் அப்றம் பேசிக்கலாம். ப்ளீஸ்..." என்றபடி கணவனின் எதிரே வர, அவளின் இடையில் கைக்கொடுத்துத் திருப்பியவன், "இன்னைக்கி பேச வேண்டியத இன்னைக்கி தா பேசனும் கண்ணம்மா." என்று விட்டு மேடைக்குச் சென்றான்.
அங்கு, "வெல்கம் மை ப்ரதர்." என்று கரம் விரிக்க, அதில் சஜித் நுழைத்தது அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி தான்.
ப்ரஜித், "நீ குடுத்த கிஃப்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஐ என்ஜாய்." என்றான் காதில்,
"நம்ம டீலே அதான." என்றவனின் உதடுகள் மெல்லியதாய் சற்று திமிருடன் விரிந்தன.
'என்னடா நடக்குது இங்க.' என்பதுபோல் அனைவரும் முழிக்க, இளவேந்தன் சற்று கணித்திருந்ததான் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து போடும் திட்டம் என்று. ஆனால் எதற்காகவென்று தெரியவில்லை.
"பைனலி விட்டுட்டு ஓடின அவனோட காதலிக்கிட்டயே வந்து சேந்திட்டான். வாழ்த்துக்கள் இந்த ஸ்டீல் இன்டஸ்டியோட பொறுப்ப எடுத்துக்கிட்டது." என்று மைக்கைப் பிடித்து ரேவன் குழுமத்தின் வாரிசாய் சஜித்தை வரவேற்பதாகவும், அவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் பேச, அவனுக்குப் பக்கத்தில் சஜித்தும், ப்ரஜித்திடம் பட்ட அவமானங்கள், அடிகள், வலிகள் என எதையும் காட்டாது நின்றான்.
இதற்கு முன் சட்டையைப் பிடித்துச் சண்டை போட்டது இவர்கள்தானா என்றிருந்தது அனைவருக்கும்.
மீட்டிங் முடிந்து அனைவரும் கலைந்து செல்ல, தன் இருமகன்களையும் ஒரு சேர பார்த்ததில் மகிழ்ந்துபோன சித்தாரா, "கண்ணா..." என்றபடி கரம் விரித்தார். சஜித்தை தள்ளி விட்டு விட்டு உட்புகுந்தான் ப்ரஜித்.
அதைப் பார்த்தபடி நின்றிருந்த சஜித்திடம்,
ரிபேக்கா, "என்ன நடக்குது சஜி இங்க? எல்லாமே ப்ளானா?"
இந்தர், "எதுக்கு இந்த நாடகம்?" எனக் கோபமாகவே கேட்டார்.
"நல்லாக் கேளுங்க. நா வேண்டாம்னே. இந்த யூஸ்லஸ் தா கேக்கள." என அலட்சியமாகக் கூறிய ப்ரஜித்தின் மீது பாய்ந்தாள் கோகோ.
'என்னோட சத்யாவ எப்படி யூஸ்லஸ்னு சொல்லலாம். அன்னைக்கி அநாதன்னு சொன்ன. இன்னைக்கி யூஸ்லஸ்ஸா...' எனச் சண்டைக்கு நிற்க,
ப்ரஜித், “நம்ம சண்டைய அப்றமா பாத்துக்கலாம் குலாப்.” என்று தூரம் நிற்க வைக்க, இளா தான் அவளை அடக்கினான்.
சஜித் இந்தரிடம் ஒரு காகிதத்தை நீட்டினான். அதைக் கண்டவருக்குப் பெரும் அதிர்ச்சி.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்.
ஆஜித்ரேவன் இறந்து ஒரு வாரம் சென்றிருக்கும். ஸ்மித்தா ப்ரஜித்தின் மூளையை சளவை செய்யத் தொடங்கிய காலம் அது.
இருவருக்கும் குரு ஸ்தானத்தில் இருந்த ஆஜித்தின் இறப்பு பெரும் இழப்பு தான்.
ப்ரஜித்தால் ஆஜித்தின் மரணத்தை விபத்து என்றோ, மாரடைப்பு என்றோ ஏற்க முடியவில்லை.
துப்பறியத் தொடங்கியவனுக்கு, ஆஜித் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது.
முதலில் அதைச் சஜித்திடம் தான் கூறினான்.
ப்ரஜித், "ஏ எதுக்குன்னு கண்டுபிடி.”
சஜித், “யாருன்னு எப்படின்னு நீ தெரிஞ்சாட்டு வா." என வேலைகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.
"ஜனார்த்தனன். அந்த ** தா காரணம்." எனச் சில நாட்களில் ஆஜித்ரேவன் எப்படி கொல்லப்பட்டார் என்பதை கண்டுபிடித்து விட்டான் ப்ரஜித்.
ஏன் என்ற காரணத்தைச் சஜித் விளக்கினான்.
இரும்பு ஆலையைத் தவிர்த்து அவர்களுக்குப் பல தொழில்கள் உள்ளன.
அதில் ஒன்று தான் பார்மா அதாவது மருந்து தயாரிக்கும் நிறுவனம்.
JET குழுமத்தின் கீழ் இருக்கும் கூட்டாண்மை நிறுவனம்.
அதன் பொறுப்பு மொத்தமும் ஸ்மித்தாவின் மகன் ஜனார்த்தனனின் வசம் இருந்தது.
அதைப் போதை மாத்திரைகள் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்றியிருந்தான் அவன்.
கிலோ கணக்கில் உற்பத்தி செய்து வியாபாரம் நடக்க, ஆஜித்ரேவன் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்தார். பின் மிரட்டினார். ஆதலால் அவரைக் கொலை செய்துவிட்டு தயாரித்த சரக்குடன் வெளிநாட்டில் பதுங்கிக் கொண்டான்.
"இவன் தான்னு தெரிஞ்சிடுச்சில்ல. இந்த உலகத்துல எந்த மூளைல இருந்தாலும் அவன உயிரோட விடமாட்டேன்." என ஆவேசமாக ப்ரஜித் புறப்பட,
“நம்ம ரேவன் க்ரூப் இப்ப ஆபத்துல இருக்கு. அத தா முதல்ல மீட்கனும். அதுவர கொஞ்சம் பொறுமையா இரு” எனத் தடுத்த சஜித்தின் மீது ப்ரஜித் ஆவேசமடைந்தான்.
"அதெப்படி பொறுமையா இருக்கச் சொல்ற?." எனக் குதிக்க சஜித் சமாதானம் செய்தான்.
ஆஜித்ரேவனின் கனவு அந்த JET industry. இந்தியாவில் தவிர்க்க முடியாத குழுமமாக ரேவன் குழுமம் இருக்க வேண்டும். அது அவரின் லட்சியம். ஜனார்த்தன் செய்து வைத்த வேலை வெளியே தெரிந்தால் மீடியா ரேவன் க்ருப்பைத் தான் குறை சொல்லும். அவரின் கனவு சிதையும். ஆஜித்ரேவனின் மீது பழி வந்து விழும்.
அத்தோடு சில காலமாக CEO பதவியில் இருந்தவனுக்கு, நாற்காலிக்கு அடியில் மகேந்தர் தோண்டி வைத்த பள்ளமும் தெரியவந்தது.
இப்பொழுது இருக்கும் சூழலில் முதலில் கவனிக்கப் படவேண்டியது குழுமம் தான் என்க, ‘ஆஜித்ரேவனை விடக் குழுமம் தான் பெரிதா’ எனச் சண்டையிட்டுச் சென்றான் ப்ரஜித்.
பின் ஒருநாள், "அப்ப எப்ப தா அவன கொல்றதாம்.?" என இறங்கி வந்தான்.
"முதல்ல அந்தப் பார்மா கம்பெனிய நம்ம க்ரூப்ல இருந்து எடுக்கனும். அடுத்து நம்ம குழுமத்துக்கும் சம்மந்தமில்லாத எல்லாத்தையும் தூக்கி எரியனும்."
"எப்படி?"
"சிட்னில என்ன நடந்ததுன்னு ஞாபகம் இருக்கா?" என்க, இருவரின் உதடுகளும் அர்த்தத்துடன் விரித்தன.
அது நீச்சல் போட்டி. பயிற்சியின்போது முதலிடத்தில் நீந்திக் கொண்டிருந்த ப்ரஜித்தின் முதுகில் அடுத்து வந்தவன் ஏறிக் கொள்ள, ப்ரஜித் அவனையும் இழுத்துக்கொண்டு நீந்தியதால் வேகம் தடைபட்டது.
அவனுடன் சண்டை போட்ட ப்ரஜித்திடம், இது போன்ற சூழலை எப்படி கையாள்வது என்று ஆஜித்ரேவன் அறிவுரை கூறினார்.
"தண்ணிக்குள்ள இருக்கும்போது உன்னோட முதுகுல ஏறிக்கிட்டவங்கூட சண்ட போட்டு ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம். நம்மல டயர்டாக்கி, நம்மல அழுக்கிட்டு அவன் முன்னாடி போய்டுவான். அது மாறியான சந்தர்ப்பத்துல உடல் பலத்தால போராடுத விட மூச்ச இழுத்துப் பிடிச்சிட்டு தண்ணீயோட அடி ஆழத்துக்கு அவனையும் சேத்து இருந்திட்டு போகனும். நாம தோத்திட்டோம்னு காட்டுற மாறி. அப்ப இனியும் இவன நம்பி பலனில்லன்னு நம்மல விட்டுட்டு அவனே போய்டுவான். அப்றம் நீ மேல வந்து தொடர்ந்து நீந்தலாம். இதுல கவனிக்க வேண்டியது மூச்ச இழுத்துப் பிடிச்சி வச்சிருக்குறது." என்று நீந்தும் உத்தியைக் கற்றுத் தர, அதைத் தான் இப்போது இருவரும் தொழிலுக்கு செய்தனர்.
அந்தப் பார்மா நிறுவனம் அவர்களின் நிறுவனத்திலிருந்து தானாக விலக வேண்டும். அதற்கு அவர்களின் நிறுவனம் திவாலாவது போல் செய்ய வேண்டும்.
கிட்டத்தட்ட ஃபீனிக்ஸ் பறவைபோல் தன்னை மாய்த்து மீண்டும் உயிர் பெறுவது.
வேறாரிடமும் நிறுவனம் செல்லக் கூடாது என்பதால் சஜித் வகுத்த வியூகம் தான் அண்ணன் தம்பி பதவிச் சண்டை.
இதனால் அவங்களின் பங்குகள் விலைக் குறைந்தது. வெளியே இருக்கும் சஜித் அதை வாங்கி குவித்தான்.
ப்ரஜித்தின் அலட்சியத்தால் நொடிந்து போகும் என்று பேசப்பட்டது, பயந்து போன அந்த நிறுவனம், ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு முற்றிலும் விலகியது.
எல்லாம் சரியாக நடக்கிறது என்பதை சில சமிக்ஞைகள்மூலம் இருவரும் பகிரங்கமாகத் தெரியப்படுத்தினர்.
தொழிலாளர்கள் ஸ்டெயிக் சஜித் தந்த சமிக்ஞை, சோரூம் திறப்பு விழா ப்ரஜித் சஜித்திற்கு கொடுக்கும் காலக் கெடு. அதற்குள் சஜித் நிறுவனத்தைக் கையகப்பட்டுத்தி இருக்கவேண்டும்.
"கம்பேனிய காப்பாத்திடலாம் சரி. ஜனார்த்தனன எப்படி கொல்றது." என்றவனின் முகத்தில் வெறி.
"தங்கச்சிக்கு கல்யாணம்னா வெளில வந்து தான ஆகனும். அப்ப உனக்கு விருந்தா தர்றேன்." என அழகாய் திட்டம் வகுத்தனர்.
ப்ரஜித், மகேந்தர் ஸ்மித்தா குடும்பத்துடன் நெருக்கமானான்.
அப்போது சஜித் பற்றிய என்ற உண்மை ப்ரஜித்திற்கு தெரியவந்தது.
"நாளைக்கி நடக்கப் போற மீட்டிங்கல உன்ன என்ன சொல்லிப் பதவிய விட்டு இறக்கப் போறாங்கன்னு தெரியுமா?"
"ம்... அநானதன்னு தான." எனச் சர்வசாதாரணமாகச் சொன்னவனின் வார்த்தைகளை ப்ரஜித்தால் ஏற்க முடியவில்லை.
"அநாதைய அநாதன்னு சொல்லாம வேற எப்படி சொல்றது ப்ரஜி." எனச் சாதாரணமாகச் சொல்லி சிரித்தான் சஜித்.
மயக்கம் தொடரும்...
Currently viewing this topic 1 guest.
Latest Post: வனமாலி - (Comment Thread) Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page