About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
காலை வேளை.
ரயில்வே ஸ்டேஷனில் தனியா அமர்ந்திருக்கிறான் சஜித்.
என்ன! தனியாக வா!! என அதிர்ந்தாலும் அது தான் உண்மை.
தலை, படிக்கட்டுகளைப் பார்ப்பதும் பின் ரயில் தண்டவாளத்தைப் பார்ப்பதுமாக இருக்க, பச்சை நிற விழிகள் இப்போது அவனின் விரலைக் கவனித்தது.
ஒரு கரத்திற்கு ஐந்து விரல்கள் தானா!. இல்லை சில தினங்களுக்கு முன் வரை சஜித் என்ற சத்யாவிற்கு மட்டும் பத்து விரல்கள் இருந்தது. ஆனால் நடந்த நிகழ்வால் அது ஐந்தாக மாறியது.
ரயிலில் அவன் பக்கத்தில் உரிமையுடன், 'சத்யா...' என்றபடி கரம்பற்றிக் கொள்பவள், அவனைத் தொட்டு பேசும் உரிமையை எடுத்துக் கொண்டாள்.
இன்று அந்தக் கரம் வெறுமையாக இருக்கிறது.
காலை நேரம் ரயில் நிலையம் எப்பொழுதும் கூட்டமாகத் தான் இருக்கும்.
அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் அவளின் மெல்லிய கொலுசொலியை சஜித்தால் அடையாளம் காண முடிந்தது அவனுக்கே வியப்பாக இருந்தது.
கோகோவை பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டே நடந்து வந்து, தூரமாக நின்று கொண்டாள்.
இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது. இருவரும் ஒன்றாக அமர்ந்து, பேசி, உண்டு, கரம்பற்றி நடந்து.
இருவரும் இடையே எதுவோ நடந்திருக்க வேண்டும். சென்ற அத்தியாயத்தில் நம் கோகோவின் புலம்பலுக்கும் அது தான் காரணமாக இருக்க வேண்டும்.
அப்படி என்ன நடந்ததென்றால்...
"கொஞ்ச இருங்க. உங்க கிட்ட யாராது கேள்வி கேட்டா என்ன பண்ணுவிங்க. பதில் சொல்லுவிங்க. இல்ல எனக்குப் பதில் சொல்ல விரும்பமில்லன்னு சிம்பாளிக்கா சைலண்டா இருப்பிங்க. ஆனா இந்தச் சத்யா! கேள்வி கேட்ட என்ன திட்டிட்டான். மிரட்டிட்டான். அதுவும் அவனோட பச்ச கண்ண விரிச்சி பயங்காட்டி விரட்டி விட்டான்.
அதுனால நா முடிவு பண்ணிட்டேன், இனி அவனுக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல. அன்னம் தண்ணி இனி அவன் வீட்டுல பிழங்கப் போறதும் இல்லன்னு. இனி அவன் எனக்குப் பக்கத்து வீட்டுக்காரெங்கிடையாது. எங்கூட ட்ரெயின்ல ட்ராவல் பண்ற ஒரு stranger. அதாவது எவனோ ஒருத்தேன்.
ஒரு மாசமா பாக்குற பொண்ணு தானே, கொஞ்ச வாய் ஓவரா பேசினாலும் தொந்தரவு பண்ணாத, பழக ஸ்வீட் கேர்ள் தானேன்னு நினைக்காம. Don't Cross your limit ன்னு சொல்லிட்டான்."
'ஸாரிங்க ஃப்ளாஷ் பேக் ஓப்பன் பண்றதுக்கு முன்னாடி கோகோ புலம்ப ஆரம்பிச்சிட்டா. இதோ இப்ப சொல்றேன். என்ன நடந்துன்னா.'
ஆர்ட் கேலரி நடந்தது முடிந்த மறுநாள் வேலைக்கு வந்தவளை ரிப்பேக்கா பாராட்ட, அலுவலகவாசிகள் பிடித்துக் கொண்டனர்.
"ரிபேக்கா மேம் அவ்ளோ ஈசியா யாரையும் பாராட்டமாட்டாங்க. அவங்க கிட்டையே நல்ல பேர் வாங்கிருக்கன்னா ட்ரீட் வேணும் கோகோ."
"ஓகே. எங்க போகலாம்?." எனக் கேட்க, அனைவரும் பப்பிற்கு அழைத்தனர்.
"பப்பா!!! டிஸ்கோ வா!! பார்ட்டி வேண்டாமே!."
"அப்ப ஹோட்டல் போலகலாம். Rooftop restaurant. செம்மையா இருக்கும்." என்று கோகோ ஒரு மாதம் வாங்கும் சம்பளத்திற்கு ஒரே நாளில் வேட்டு வைக்கப் பார்க்க,
"சிம்பிளா கேளுங்களேன்." என அதையும் மறுத்துவிட்டாள்.
ஏனெனில் போன வாரம் தான் அவளுக்குச் சம்பளம் வந்தது. அதை மொத்தமாகத் தன் அண்ணன் பிரணவனிடம் ஒப்படைக்க வேண்டும். அவன் தரும் சொற்ப தொகைக்குள் தான் அவளின் செலவுகளை அடைக்க வேண்டும்.
"மும்பை மாறி மாடன் சிட்டிக்கு போய் நானும் மாடனா வாழ்றேன்னு காட்ட, கிழிஞ்சி போன ஜீன்ஸு, காத்து வாங்குற டாப்பு, மூஞ்சிக்கி போட க்ரீமுன்னு கண்ட வாங்குறேன்னு மொத்ததையும் செலவு செஞ்சிடுவா. நாக்கேள்வி பட்டிருக்கேன் வாரத்துல ரெண்டு நாள் கட்டாயம் பார்ட்டி நடக்குமாம். அதுவும் பப்புல சரக்கு பார்ட்டி. அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஆகாதுங்க. கைல காசு இருந்தா தான செலவு செய்வா! அதுனால அத பிடிங்கி வைங்க. ஒரு பொட்டப்பிள்ள கைல அளவுக்கு மீறிப் பணம் பிளங்குனா மத்தவங்கள மதிக்காதுங்க." என்ற அண்ணியால் அவளின் செலவுகளைக் கணக்கு காட்ட வேண்டும்.
"அப்பச் சாக்லேட் வாங்கித் தா. நாங்க சொல்ற கடைல. நாளைக்கி வரும்போது அது இல்லாம வரக் கூடாது." என்க, கோகோ சஜித்தின் கடையைத் தேடிச் சென்றாள்.
சிறிய கடை தான். உள்ளே பெரியதாகயிருந்தது.
தயாரிக்கும் சாக்லேட்கள் அனைத்தும் கண்ணாடி சட்டத்தில் மிகவும் சிறிய அளவில் சாம்பிளாகக் காட்சிப் படுத்தப்பட்டு வைத்திருந்தனர். யாருக்கும் அமர்ந்து மணிக் கணக்கில் கதைகள் பேசிக் கொண்டே உண்ண அனுமதி கிடையாது.
அது ஆர்டர் கொடுத்து விட்டு, அது வரும் வரை காத்திருக்க மட்டுமே.
அந்தக் காத்திருப்பு நேரத்தை வீணடிக்காது அவர்களின் சாக்லேட்டுகளை சுவை பார்க்க ஒரு மிக்ஷின் அங்குப் பொருத்தப்பட்டிருந்தது.
சில்வர், கோல்டு என அத்தனை கலர்களில், விதவிதமாக வித்தியாசமான வடிவத்தில் சாக்லேட் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது, 'எனக்குச் சுகர் இருக்குங்க.' என்று சொல்பவர்கள் கூட எடுத்து வாயில் போட்டுக் கொள்வர்.
Dark Chocolate, Milk Chocolate, Baking Chocolate, Chocolate Liquorரென வரிசையாக எழுதியிருக்க,
"ஒன் மினிட். Liquor னா ஆல்கஹால் தான."
"பட் இதுல ஆல்கஹால் கிடையாது மேம்." என்றார் பணியாள்.
அனைத்தா சாக்லேட்டுகளும் அடங்கிய கிஃப்ட் பேக்கை ஆர்டர் செய்துவிட்டு சோஃபாவில் அமர்ந்தவளுக்கு காபி பருக ஆசை வந்தது.
"Excuse me. Can I have a cup of coffee?"
"Sorry mam." என்றவன் காபியெல்லாம் இங்க கிடையாது என்க,
"வாட்... காபி இல்லையா!" என அதிர்ந்து போனவள்.
"என்ன அநியாயம் இது. காபி சாப்ல கூடக் காபியோட சேந்து ஸ்னாக்ஸ் சேல் பண்றாங்க. இப்படி சாக்லேட் ஒன்லின்னா போர்டு போட்டா, Shop for saleன்னு உங்க கட வாசல்ல இன்னொரு ஃபோர்டு மாட்ட வேண்டிவரும். ஒரு காபி மிக்ஷின் கிடைக்கலயா?." எனக் கூச்சல் போட்டவள் எனக்குக் காபி வேண்டும் என்று வாதம் செய்தாள்.
"மேம் இங்க சாக்லேட் மட்டும் தான் கிடைக்கும். வேற எதையும் நாங்க விக்கிறது இல்லை." என ஊழியர் கூறினாலும்.
"என்னடா கட வச்சி நடத்துறீங்க. இப்ப சாக்லேட் பிடிக்காதவங்க வந்தா என்ன பண்ணுவிங்க. கடைக்குள்ள வரக்கூடாதுன்னு துரத்தி விட்டிடுவிங்களா.!"
"அப்ப உனக்குச் சாக்லேட் பிடிக்காது." என்றது சஜித்தின் குரல்.
இவளின் சத்தம் கேட்டதும் கேபினில் இருந்தவன் வெளியே வந்திருக்க வேண்டும்.
"சத்யா!!...?" என அவள் விழி விரித்தாள் கோகோ.
அவள் பிரிச்சனைக்குரிய கஸ்டமர் என்றான் கடை ஊழியன்.
'நான் பாத்துக்கிறேன்.' என்பது போல் தலையசைத்தவன் கடைக்குள் செல்ல,
"நீ இந்தக் கடைல வேல பாக்குறியா? என்ன பதவில இருக்க. மேனேஜரா? சத்யா ஒரு காபி மிக்ஷன் வாங்கி வைக்கச் சொல்லேன். எல்லாருக்கும் எல்லாம் பிடிக்காது. அது இருந்தா…" என அவனுக்கு ஐடியா கொடுத்தபடி பின்தொடர்ந்தாள்.
கடையின் அடுத்த பகுதியில் இரு கேபின்கள் இருந்தன. ஒன்று சஜித்திற்கானது. மற்றொரு மேனேஜருக்கானது.
இப்போது சஜித் அவளை அழைத்து வந்தது மேலாளர் அறைக்கு. அங்கிருந்த காபி மிக்ஷினில் அவளுக்கு ஒரு கப்பை பிடித்து, சர்க்கரை கட்டிகளைப் போடப் போக,
"வேண்டாம் சத்யா. எனக்கு ஸ்வீட் பிடிக்காது." என்றவளை ஏன் என்பதுபோல் பார்த்தான்.
"பல்லு சொத்தையாகிடும்னு இல்ல. அப்படி ஆனா ஊசி குத்துவாங்களாம் சத்யா. நீயே சொல்லு வாய்க்குள்ள பெரிய ஊசியால குத்தினா எவ்ளோ வலிக்கும்." எனச் சிறுவயதில் இனிப்பு அதிகம் எடுக்கக் கூடாது எனப் பயங்காட்டியதை விளக்கமாகக் கூறியவளுக்கு, கசப்பு காபியை கலந்து கொடுத்தவனின் அழைபேசி சிணுங்க, வெளியே சென்றான்.
நம் கோகோவிற்கு தான் கால்களும் கைகளும் சும்மா இருக்காதே, பானத்தைப் பருகிய படி, இடத்தைச் சுற்றிப் பார்த்தவள், அவனின் கேபினை நோக்கி நடந்தாள். உள்ளேயும் சென்றாள்.
பாவம் சிங்கத்தின் குகைக்குள் நுழைய ஒரு தனி தைரியம் வேண்டும்.
நம் கோகோவிடம் இருப்பதோ தைரியம் அல்ல அசட்டு துணிச்சல் என்று யார் தான் சொல்வது.
மயக்கம் தொடரும்...
கமெண்ட் திரி:
மயக்கம்: 28
Latest Post: போகனின் மோகனாங்கி - 11 Our newest member: Priya Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page