About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
@gowri-karthikeyan கதை தொடங்கும் போதே.. இப்படித்தான் முடிக்கணும் என்று முடிவு செய்து விட்டேன்.
குமரி கண்டம் இருந்ததிற்கு குமரி கண்டமே சாட்சியாக வந்தது.
மிக்க நன்றி 🥰 🙏
#வாகை_சூட_வா_25
#கௌரிவிமர்சனம்
#சில்லாஞ்சிருக்கியே
சிம்பிள் & நீட் ஸ்டோரி….
யாஷ், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து இருந்தாலும்….தமிழ் நல்லா தெரியுது….
தமிழை ரொம்ப பிடிச்சும் போகுது யாஷ்க்கு…..
செங்கோட்டைக்கு வரான்…..தமிழை பிடிக்க …. சாரி சாரி தமிழை படிக்க….
அங்க தான் நம்ம தமிழ்….டீ கடை வெச்சி இருக்கா…
இப்ப யாஷ் எதுக்கு வந்து இருக்கான்னு தெரியுது இல்ல…..
அவன் வந்த வேலை வேற அப்படினாலும்….
தமிழும் ஒரு காரணம்….
தமிழ் நேத்து நட்பு ரொம்ப சூப்பரா இருந்தது….
அதற்கு குறைவில்லாமல், நேத்து ஓட சொல்லாத காதல் ரொம்ப கியூட்….
யாஷ் & தமிழுக்கு பிடிச்சி இருந்தாலும்….
யாஷ்க்கு சரி சொல்ல, அவ சின்ன வயசில் யாரோ ஒருத்தர் போட்ட செயின் தடுக்குது…..
அதை போட்டவங்களுக்காக இத்தனை வருஷமும் காத்திருக்க…..
யார் அவன்?????
நேத்து ஓட ஒரு தலை காதல் என்னாச்சி????
யாஷ் & தமிழ் காதல்????
கதை ரொம்ப நல்லா இருந்தது……
கடைசில வெச்ச டுவிஸ்ட் சூப்பர்…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்க
ள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
லிங்க்👇👇👇👇
#வாகை_சூட_வா_25
#கௌரிவிமர்சனம்
#எழுந்திடும்_காதல்_காவியம்
காதல் கதை தான் அப்படினாலும்…. குடும்பத்தோட முக்கியத்துவமும் இதில் இருக்கு….
அம்மா அப்பா இல்லாம, பெரியப்பா, பெரியம்மா, அண்ணனோட வளர்ற பிரஹா….
அவ பெற்றோர் இருந்து இருந்தா கூட இவளை இவளோ நல்லா பார்த்து இருக்க மாட்டாங்க….
விருச்சகன், உமா ரொம்பவே பாசம் பிரஹா மேல….
நீரஜும் தான்…உமா பையன் ….
பிரஹா, வெளியூரில் தங்கி படிக்க…. திவ்யன் மேல காதல்….
ஆன சொல்லப்படாத காதல்….எங்க பெரியப்பா, பெரியம்மா நல்லா வளர்க்கல அப்படினு நினைச்சிருவாங்களோ அப்படினு பயம்….
திவ்யனும், அதை புறிஞ்சிட்டு தங்கை கல்யாணம் முடிய டைரக்ட்டா அவளை கல்யாணம் பண்ற பிளான்….
திவ்யனின் காதல், காத்திருப்பு, அவன் டாட்டூ எல்லாம் அருமை....
ரமணி….அவங்க பையனுக்கு பிரஹா குடுக்காததில் என்ன பேச்சு பேசுது..
அவங்க எப்படி சேர்ந்தாங்க அப்படிகரது
மீதி கதை…..
கதை ரொம்பவே நல்லா இருந்தது…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர்
ஜி 💐💐💐💐💐
#திரா_ஆனந்த்_விமர்சனம்
#வாகை_சூடவா_போட்டி_கதைகள்
கடந்த 5/6 நாளா ஒரு கதைய தான் படிச்சேன். ரொம்ப பெரிய கதை… ரொம்ப ரொம்ப… அப்படி எந்த கதை தெரியுமா??!!
#பாரிஜாத_மலர்_என்_கை_சேருமா
ஹான் சேந்துடுச்சி… முதல்ல கதை பேர பாத்ததும் என்னடா யாரு பேரும் பாரிஜாதம் இல்லையே ஏன் இந்த தலைப்புனு நினைச்சேன். ஆனா எப்படியே match பண்ணிட்டாங்க கதாசிரியர்.
ஆசிரமம்/இல்லம்ல வளந்த நாயகி. அப்ப அங்க பிரச்சனை பண்ணவோ இல்ல அத சரி பண்ணவோ வரவங்க தான் நாயகனா இருக்கனும். எதிர்பார்த்த மாறியே அப்படி தான் இருந்துச்சி. ராதிகா, ஆரபி கதாபாத்திரம் ஓகே தான். சில இடத்துல இவங்க back ground சொல்லியாச்சு… இவங்க characterisationம் சொல்லியாச்சி. அப்ப படிக்கறவங்களுக்கே அது புரியும்ல ஏன் திரும்ப திரும்ப அத சொல்லனும். முக்கியமா ராதிகா யுவராஜ்கிட்ட சம்பளம் அதிகமா தர சொல்லிட்டு, இத வச்சி பசங்களுக்கு எதுனா வாங்கி தருவேன்னு சொல்லுவ அப்ப தான் அப்படி feel ஆச்சு.
மத்தபடி கதை ரொம்ப நல்லா இருந்துச்சி. கொஞ்ச பொறுமை வேணும். 52 அத்தியாயம். மலையாளம் வர வார்த்தைகள் முதல்ல கொஞ்சம் odd இருந்துச்சி. அப்பறம் போக போக நானும் மலையாளத்துல பறய ஆரம்பிச்சி செட் ஆகிட்டேன்.
ஆரணி/ரகு நந்தன்/கன்யா அதிகமா வரலைனாலும் அவங்க மேல எல்லார்க்கும் இருக்க மதிப்ப புரிய வச்சி இருக்காங்க. பைரவ் - சீக்ரெட்டோடவே சுத்தற கதாநாயகன். முன்னாடி wheel chair பத்தி தெரிஞ்சிட்டாலும் ராஜீவ் வந்ததும் reveal ஆகுற scene மாஸ்ஆ இருக்கும். தனுஜ் ராதிகா fight சூப்பரா இருக்கும். எல்லா கலந்து படிக்கறப்ப நல்லா இருக்கும். ஆசிரமம் - அரண்மனை change over அருமை.
வாழ்த்துக்கள் @vsv30 💐💐
நன்றி!!!
இங்ஙனம்
திரா ஆனந்த்
#சில்லாஞ்சிருக்கியே #வாகைசூடவா_போட்டிக்கதை
#vsv25
Kavi Chandra sister தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்
யாஷ் அவனின் சில்லு wow 🥰
தமிழ் ஜோதி அவள் பாட்டியின் டீ கடையை நடத்தி வருகிறாள்
இவளின் சிறு வயது நண்பன் நேத்ரன். இவர்களின் நட்பு அருமை.
யாஷ் தமிழ் மொழியின் மேல் கொண்ட பற்றினால் அதை பற்றி ஆராய செங்கோட்டை வருகிறான்
அதை பற்றி அறிய மட்டும் தான் வருகிறானா என்பது கதையில்
தமிழின் டீக்கடையில் வேலையில் இருக்கிறாள் தேன்மொழி அவளின் ஆறு மாத குழந்தையுடன். இவள் மீது கல்லூரி காலங்களிலேயே காதல் வயப்படுகிறான் நேத்ரன் ஆனால் அது கைகூடாமல் போகிறது.. பின் ஒரு பெரும் பிரச்சனையில் அதிரடியாக அவளை கை பிடிக்கிறான். தமிழுக்கு யாஷ் மீது காதல் ஏற்படுகிறது ஆனாலும் தன் கழுத்தில் இருக்கும் ஒரு செயினும் அதில் இருக்கும் ஜோ என்ற எழுத்தும் அவளை தடுமாற வைக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பதும் அவள் காதல் கை கூடியதா என்பதும் கதையில். விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤️
Good luck 🥰 🌹
#வாகைசூடவாபோட்டிக்கதை
#vsv11
கள் விழி மயக்கம்
Kavi Chandra அவர்கள் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்.
அஜித்ரேவன் பிசினஸ் உலகில் ஆளுமை செலுத்துபவரின் பேரன்கள் இருவர்
ப்ரஜித்ரேவன் சஜித்ரேவன்
இருவருக்கும் ஏற்படும் மோதலில் சஜித் இவர்களின் விட்டு விலகிச் சென்று தலைமறைவாகி விடுகிறான். இவர்களின் அன்னை சித்தாரா. அவருக்கு கொடுத்த வாக்கின்படி தலைமறைவாகிய தம்பியை வெளியில் வரவைக்க அவனின் கனவு தொழிற்சாலையை நஷ்டத்தில் தள்ளுகிறான் ப்ரஜித் .
இதற்கிடையில் தனக்கென ஒரு பிசினஸ் அமைத்துக் கொண்டு அதில் முன்னேறி வரும் மனைவி ரபேக்காவையும் விவாகரத்து செய்ய முயல்கிறான். ரபேக்காவை ரோல் மாடலாக எடுத்து அவளின் கீழ் வேலை பார்க்க வருகிறாள் கோகோ என்னும் கோகிலா.
வீட்டில் அனுமதி பெற தன் அத்தான்
இளவேந்தனின் உதவியை நாடி அவனோடு பயணப்படுகிறாள் மும்பைக்கு. அங்கு தமிழ் பேசும் பக்கத்து வீட்டு பையனுக்கு இவளே சத்யா என்று பெயரிட்டு அவனோடு நட்பாக பழகுகிறாள். இவளின் துரு துருப்பும் சேட்டைகளும் வேற லெவல் 🥰 மும்பையில் இவளுக்கு தோழியாகிறாள் துகிரா. இளவேந்தனுக்கு ஒன் சைடு ஆக ஒரு காதல். சத்யாவும் கோகோவும் காதலிக்கிறார்கள். பின்பு அந்த காதலை மறுக்கிறான் சத்யா.
ப்ரஜித் ரபேகா
சத்யா கோகோ
இளவேந்தன் துகிரா
மூன்று ஜோடிகளும் என்ன ஆனார்கள் என்பது கதையில். இதில் சஜித்ரேவன் யார் என்பதும் கதையில்.
சற்று பெரிய கதை தான் ஆனால் மிகவும் சுவாரசியமாக நகர்ந்தது கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அடுத்து என்ன என்ற ஆவலை தூண்டியது.
நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤️
Good luck 🥰 🌹
#வாகைசூடவா_போட்டிகதை
#காலம்_தாண்டியும்_காதலைத்_தேடி
#VSV_28
காலம் தாண்டியும் காதலை தேடி
Kavi Chandra உங்கள் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்.
தேவ் மித்ரன், தளிர் யாழினி
மகிழ் யாழன், இனியாள்
இவர்களைச் சுற்றி கதை. தலைப்பே கதையைச் சொல்லிவிடுகிறது.
மார்த்தாண்ட வளவன் அவன் மோகினிக்கு உடல் வேண்டி காலம் காலமாக நாக மச்சத்தில் பிறக்கும் பெண்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறான். இதில் யாழினி மாட்டிக்கொள்ள. அவளைத் தேடி ஐந்தாம் நூற்றாண்டிற்கு பயணம் ஆகிறார்கள். மற்றவர்கள். மார்த்தாண்டனை வெற்றி கொண்டு எப்படி தங்களின் நிகழ் உலகுக்கு வந்தார்கள் என்பது கதையில்.
இதற்கு மேல் கூறினாள் படிப்பவர்களுக்கு சுவாரசியம் குறைந்து விடும் அதனால் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். 🥰❤️
Good luck 🥰 🌹
#வாகைசூடவாபோட்டிக்கதை
vsv
மனதில் நின்றவள்
சகஸ்தா பானு.. சப்தரிஷி..
தன் இன்டர்னுக்காக அத்தை என் வீட்டுக்கு வருகிறாள் சகஸ்தா அங்கு அத்தையின் மகனாக ரிஷி அவனின் கம்பனிலேயே இவள் இன்டர்னாக சேருகிறாள்.. அவள் மேல் காதலில் விழுகிறான் ரிஷி. ஆனால் அதை ஏற்க மறுக்கிறாள் பெண்.. அவளின் கடந்தகால வடுவினாள். ரிஷியின் அதிரடி காதல் அவளின் வலிகளை மறக்க செய்ததா என்பதும்
எவ்வளவு தடைகள் வந்தாலும் தன் மனம் கவர்ந்தவளை கைப்பிடித்தானா ரிஷி என்பதும் கதையில்.
ரிஷியும் சாஸ்தாவும் மனதில் நின்று விட்டார்கள்..
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤️
Good luck 🥰 🌹
Latest Post: கையில் மிதக்கும் கனவா நீ..!! (முதல் பாகம்) - Story Thread Our newest member: Jayam Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page