About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
#வாகை_சூட_வா_25
#கௌரிவிமர்சனம்
#வரமாய்_வந்த_உயிரே
குடும்பம், குழந்தைக்காக ஏங்கும் கணவன் மனைவி, அவங்களோட அன்பு, அவங்க குடும்பத்தில் நடக்கும் பாலிடிக்ஸ் தான் கதை……
வைசு & சக்தி, ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் குழந்தை இல்ல….
அவங்க பார்க்காத ட்ரீட்மென்ட் இல்ல…போகாத கோவிலும் இல்ல….
அவங்களுக்கு பெருசா குறையும் இல்ல தான்….
அப்படி இருந்தும் குழந்தை வர தாமதம்….
குறை மட்டுமே சொல்லும் மாமியார்கள் நடுவில்….
பவித்ரா கொஞ்சம் தனித்து தான் தெரியராங்க….
சராசரி மாமியார் தான் …..என்ன வைஷுவை நல்லாவும் பார்த்துக்கரங்க…..
அதுக்கு மேல அவ கணவன் சக்தி…..
கண்ணே மணியேனு, கொஞ்சிட்டே இருந்தா தான் காதலா????
ரொம்பவே understanding கணவன்….
ட்ரீட்மென்ட்ல அவ அனுபவிக்கும் வலியை உணர்ந்து அது வேணாம்னு சொல்லற இடத்தில் இருந்து…..
ஒரு ஒரு விசயத்திலும் சக்தியிடம் இருக்கும் புரிந்துணர்வு…..
ஜஸ்ட் awesome….
மனைவியின் வலியை உணர்ந்து கொள்ளும் கணவன் கிடைப்பது எல்லாம் வரமே…..
அதில் ரொம்ப லக்கி வைஷு…..
ஒரு கட்டத்தில், plz அவங்களுக்கு குழந்தை வந்தரணும்னு நம்மையே யோசிக்க வெச்சிட்டாங்க ரைட்டர்….
அவ நாத்தானர் காயு கிட்ட, உனக்கு வேணாம்னு சொல்லற குழந்தையை எனக்கு குடுனு கேட்கும் போது, கண்ணு எல்லாம் கலங்கிட்டு….
அதில், செல்வம் செய்தது ரொம்ப சிறப்பு…..
அவங்களுக்கான தேவதை வந்ததும், வைஷு தாத்தா சொன்ன மாறி அவங்களுக்கு ராஜா குட்டி வந்ததும் ரொம்ப நல்லா இருந்தது…..
கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர்…..
போட்டியில் வெற்றி பெற வாழ்
த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
@kalaikarthi ரொம்ப சாரி சிஸ்... 🙏🙏🙏🙏😌😌😌😌🙏🙏🙏🙏🙏 நான் உங்களோ கமெண்ட்ட நேத்து நைட் தான் பாத்தேன். வெரி வெரி சாரி சிஸ்........
உங்க ரிவீயுக்கு ரொம்ப நன்றி சிஸ். ரொம்ப சந்தோஷமா இருக்கு.... thank you so much sis 🙏 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🙏 🙏 🙏
#வாகைசூடவாபோட்டிக்கதை
#vsv10
கனவுகள் வெல்ல காரியம் துணை
Kavi Chandra சிஸ்டர் அவர்கள் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
கடல் நீரில் அமிழ்ந்து விட்ட குமரிக்கண்டத்தை பற்றிய கதை இது.
பவித்ரா... குமரிக்கண்டத்தை பற்றி ஆராய்கிறாள். அங்கு தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிரூபிக்க போராடுகிறாள்.
தமிழும் தமிழர்களும் வெற்றி பெறக் கூடாது என ஒரு கூட்டம் அதை தடுக்க முற்படுகிறது.
இவளை பொற்கோவிலில் சந்திக்கும் விக்ரம் இவளின் மேல் காதலில் விழ இவளின் ஆராய்ச்சிக்கு உதவுகிறான்.
ரன்னிங் ரேசிங் ஃபைட் என நகர்கிறது கதை..
ஸ்ரீலங்கா ஆஸ்திரேலியா என்ன பல இடங்களுக்கு ஆதாரங்களை தேடி செல்கிறார்கள் விக்ரம் பவித்ரா மற்றும் அபிநவ்.
எதிரிகளிடமிருந்து தப்பித்து தன் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றாளா பவித்ரா என்பது கதையில்..
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰 🌹
@zeenath நன்றி நன்றி.. எந்த வித ட்விஸ்ட் வெளிப்படுத்தாமல்.. கதையின் கருவை அழகாக விமர்ச்சித்து இருக்கீங்க நன்றி ☺️
#வாகைசூடவாபோட்டிக்கதை
Uiyr Ullavarai Yaan Unathe
#vsv52
Kavi Chandra சிஸ்டர் அவர்களின் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்.
பூமாதேவி.. மாரியப்பன்.. இவர்களின் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகள் பற்றிய கதை.
தென்றல்.. இவர்கள் வீட்டில் வேலை செய்கிறாள் அவன் மீது தீராத பாசம் பூமாதேவிக்கு. எப்படிப்பட்ட பாசம் என்றால் பேரன்பேதிகளை விட இவளின் மீது அதிக அன்பு. அந்த அதீத அன்பே இவளின் மேல் வெறுப்பை உண்டாக்குகிறது இவரின் பேரன் விஷ்ணு வரதனுக்கும் பேத்தி சுரேகாக்கும்.
ஆரம்பத்தில் இருந்தே இவள் மீது வெறுப்பை கொட்டுகிறான் விஷ்ணு.
ஒவ்வொரு நிமிடமும் அவள் மனம் நோகும் படி அவளை வதைத்துக்கொண்டே இருக்கிறான்.
இவனுக்கு நிகராக சுரேகாவும் இவள் மீது வெறுப்பையும் துவேசத்தையும் கொட்டுகிறாள். ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் அவள் மீது அதிக அன்பு கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் விஷ்ணு தன் கனவு பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறான். அவள் கிடைத்தாளா என்பதும் தென்றல் மீது இவனுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்பதும் கதையில்.
இதற்கிடையில் பிரகல்யா ராகுலுடன் வசித்து வருகிறாள்..
மற்றொரு ஜோடியாக விஷ்வாவும் ரேணுகாவும். இவர்களோடு அதிரடியாக இணைந்து கொள்கிறான் விஷ்ணுவின் நண்பன் கார்த்திக்.. சுரேகாவை காதலித்து மணந்து கொள்கிறான்.
பெரிய கூட்டு குடும்பமாக நகர்கிறது கதை.
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤️
Good Luck 🥰 🌹
சில்லாஞ் சிருக்கியேகதை சூப்பர். தமிழ் நேத்திரன் நட்புடன் பழகி கொண்டு இருக்க யாஷ் வெளிநாட்டில் இருந்து ஊர் சுற்றி பார்க்க வருகிறான். தமிழ் யாஷ் மோதல் இருந்தாலும் பிடித்தம் இருக்கிறது இருவருக்கும். நேத்திரன் படித்து விட்டு விவசாயம் பார்க்க தமிழ் டீக்கடை பாட்டியின் ஞாபகம் வைத்து நடத்த. யாஷ் தமிழை ஊர் சுற்றி காட்ட சொல்ல. தேன்மொழி விதவை மகன் இருக்க அப்பா அம்மா தனியாக இருந்து கொள் என்க இவளுக்கு ஆதரவாக தமிழ் நேத்திரன் இருக்க . நேத்திரன் அப்பா சைலண்ட் வில்லன் ஊருக்குள் நல்லவன் ஆனால் காரியம் ஆக எதையும் செய்வான். நேத்திரன் அம்மா செம. யாஷ் யாரு. தமிழ் பாட்டி உனக்கானவனை 25வயதில் சொல்லுகிறேன் என்று கழுத்தில் செயின் கதையை சொல்லிவிட்டு பெயரையை சொல்லாமல் போய்விட்டது. யாஷ் அக்கறையும் பிடிக்கிறது காதலும் சொல்ல என்ன செய்ய என்று தவிக்க நேத்திரன் தேனு கல்யாணம் எதிர்பாராமல் நடக்க . ருத்திரன் வரவு வேறு. சஸ்பென்ஸ் விலகி சுபம் ஆகிறது கதை. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன். யாஷ் நிரம்ப பிடிச்சிருக்கு.
@kalaikarthi மிக்க நன்றிகள் சகி😍😍 கதையின் விமர்சனம் பார்த்து மிக்க மனமார்ந்த மகிழ்ச்சி😍😍🧡🧡
நேசம் வளர்க்க நெஞ்சம் தாராயோ கதை சூப்பர்.ஓரு தங்கையின் சுயநலம் எல்லோருடைய வாழ்க்கையும் வாழ வடாமல் சசெய்கிறது. செம்பருத்தி சீ இவள் மனுசிதானா?. குறிஞ்சி செம. பாரி வாவ் அவள். நரசிம்மனுக்கு கொடுத்து வைக்க வில்லை. கண்ணன் தாமரை டூ மச். மல்லிகா பாவம். விஷ்ணு சூப்பர். முல்லை அழகு. கோவார்த்தன் தப்பிச் சுட்டான். மனம் சம்பந்தப்பட்ட கருத்து செம. பிரகலாதன் ரோஜா சூப்பர். பிரகலாதன் பாரி சேர்வாங்க என்பது நிரம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துகள். வாழ்க வளமுடன். செம்பருத்தி மாதிரி ஆள்கள் பார்க்க பயமாக இருக்கு.
#வாகைசூடவாபோட்டிக்கதை
#போகனின்மோகனாங்கி
மோகனாங்கி
#vsv32
முன் ஜென்ம கதை
இந்த ஜென்மத்தில் அகத்தியன் மேக்னவாக வாழும் இவர்கள் முன் ஜென்மத்தில் அகன் மற்றும் மோகனா...காதல் கொண்டவர்கள் சில சூழ்ச்சியால் வாழ முடியாமல் இவர்களின் காதல் கை சேராமலே முடிவுக்கு வருகிறது.அகன் மேல் கோபம் கொண்டு அவன் தனக்கு துரோகம் இழைத்ததாக நினைத்து தன்னையே மாய்த்துக் கொள்கிறாள் மோகனா. இவளின் வருகைக்காக ஏழு ஜென்மமாக காத்திருக்கிறான் அகன்... இந்த ஜென்மத்திலும் அவளை சேர முடியாமல் பல பிரச்சனைகள் எழுகிறது அவை அனைத்தையும் முறியடித்து தன் ஓவியப் பெண்ணை தன்னவளாக ஆக்கிக் கொண்டானா அகன் என்பது கதையில்.. இன்னொரு ஜோடியாக திலீப் மற்றும் நித்யா.
முன் ஜென்மத்து அகனை விட இந்த ஜென்மத்து போகன் தன் மோகி மீது அளவு கடந்த காதலை செலுத்துகிறான். She is mine என்று அவள் அருகில் செல்லும் அனைவரையும் கர்ஜித்து தள்ளி வைப்பதெல்லாம் வேற லெவல் அதில் அவளின் பெற்றோரும் உற்ற தோழியும் அடக்கம் 😀
மிகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤️
Good luck 🥰 🌹
#வாகை_சூட_வா_25
#கௌரிவிமர்சனம்
#கனவுகள்_வெல்ல_காரியம்_துணை
சஸ்பென்ஸ், டுவிஸ்ட் & டர்ன்ஸ் கதை செம்ம🥰🥰🥰🥰
குமரி கண்டத்தை பத்தியும், அதில் உதித்த தமிழ் மொழி தான் முதன்மையான மொழி அப்படினு பவி ஒட ஆய்வறிக்கை கூறுகிறது….
பவி, தொல்பொருள் ஆராய்ச்சி மாணவி….
அந்த ஆய்வறிக்கை, வெளி வர கூடாதுனு ஒரு கும்பலே சுத்துது….
காரணம், தமிழ் மொழி முதன்மையான மொழியா இருக்க கூடாதுனு நினைக்கரவங்க தான்….
அது மட்டும் இல்லாம, பவிக்கு குமரி கண்டம் இருந்த இடத்தில் போய் ஆராய்ச்சி பண்ணனும்….
அதுக்காக, ஸ்பான்சர் தேடி அலைய…..
பவியை பார்த்து பிடிச்சி போய்….விக்ரம் அவன் அப்பா கிட்ட பேசி ஸ்பான்சர் செய்ய….
கூடவே அவன் லவ் புரோபோசலும் …..
அதில் ஹேப்பி ஆன பவி, அவ கனவுகள் பலிக்க போகுதுனு இருக்க…
அவன் அப்பா வைக்கரார் அங்க ஒர் டுவிஸ்ட்….
அதையும் சரினு, அவளோட லட்சியத்தை தேடி போகும் நேரத்தில், அந்த கும்பலால் ஆபத்து…..
அதில் மன அழுத்தம் உண்டாகி…தான் என்பதையும் மறந்து போயரா…..
ஒரு கட்டத்தில், விக்ரம் அவ மேல உள்ள கோவங்கள் மறைந்து, காதல் வெளிப்பட…..
அவளை தேடி போனா…..?????
ஒரு வழியா, ஆராய்ச்சியில் இறங்க….
தொடர் சோதனைகள் தான்….
இதில் ரொம்ப பிடிச்ச விசயமே, இயற்கையே அவங்களை ஒரு ஒரு இடரில் இருந்தும் காத்து நிக்கரது தான்…..
பல கூஸ் பம்ஸ் கதையில்…..
கதை சூப்பர்…..எனக்கு ரொம்ப பிடிச்சது
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
லிங்க்👇👇👇👇
#வாகை_சூட_வா_25
#கௌரிவிமர்சனம்
#நேசம்_வளர்க்க_நெஞ்சம்_தாராயோ
ஹ்ம்ம், எங்க அது தான் தரத்துகுள்ள இவங்க பார்ட் 2 ல தொடரும்னு போட்டாங்கலே ரைட்டர்🥺🥺🥺🥺🥺
அப்பறம் எங்க இருந்து வளர்க்கிறது…..
பாவம் இல்ல எங்க பிரகலாதன்…..
சரி இவனை அப்பறம் பாவம் பார்ப்போம்….
“ஒரு பிள்ளை கண்ணில் வெண்ணெய், இன்னொரு பிள்ளை கண்ணில் சுன்னாப்பு”
இப்படி நாம கேள்வி பட்டு இருப்போம்.. .
இங்க அப்படியே தான் நடக்குது.. ..
அதும் ஒரு தாயே இப்படி பண்ணினால்?????
தாமரைக்கு - விஷ்ணுவுக்கு மூணு பிள்ளைகள்…..
கண்ணன், செம்பு, பாரி….இதில் பாரி தான் பாவத்துக்கு உரியவள் …..
பாரி ஓட காதலன் தான், தனக்கு ஏத்த கணவன் அப்படினு இந்த செம்பு அவ அம்மா தாமரையை பிரைன் வாஷ் பண்ணி கட்டிக்கிச்சி….
அதுக்கு உடந்தை அவ நொண்ணன் கண்ணனும் தான்…..
அவ காதலன் நரசிம்மனுக்கு எங்க போச்சி புத்தினு நினைக்கலாம்…..
அவனை கார்னர் பண்ணினது, அவன் தங்கச்சி குறிஞ்சியை வைத்து…..
அது மட்டும் இல்லாம, அவன் ஆத்தாக்கு நல்ல மருமக இவ தானாம் அப்படினு எக்கச்சக்க பிட்டு போட்டு கல்யாணம் பண்ணிக்கரா….
அப்படியும் அடங்கினலா இல்ல….
இல்லவே இல்லை…..
அவ இன்னும் திருந்தள மாமா moment…..
அவளோ ஆத்திரங்கள் வருது…..
கடைசியா பிரகா கேட்ட….ஒரு ஒரு கேள்வியும் சும்மா ஸ்லிப்பர் ஷாட் கேள்விகள்…..
ஏன் ரைட்டர் 18 எபிஸ் தானே வந்து இருக்கு….
இன்னும் எழுதி இருக்கலாம் இல்ல….
பிரகா - பாரி பார்ட் படிக்க ரொம்ப ஆவலா இருந்தேன்…..
முக்கியமா சொல்லியே ஆகனும், முல்லை எனக்கு ரொம்ப பிடிச்சது இவளை…
அடுத்து குறிஞ்சி…..இவளை எனக்கு ரொம்ப பிடிச்சது…..
பாரபட்சம் பார்க்காத, உண்மையை முகத்துக்கு நேரா சொல்றதில் இவளுக்கு நிகர் இவள் தான்…..
இவ வாழ்க்கை சரி ஆனதில் ரொம்ப சந்தோசம் தான் எனக்கு…..
ஆன அந்த சொம்ப அப்படியே விட்டிங்களே…..ரொம்ப சோகம் பா நானு🥺🥺🥺🥺🥺
எப்ப வரும் பார்ட் 2…. ஆவலுடன் வெயிட்டிங்🤩🤩🤩🤩🤩
போட்டியில்
வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐
லிங்க்👇👇👇👇
@gowri-karthikeyan நன்றி நன்றி நன்றி 🥰🙏
கதையை இரசித்து படித்து விமர்சனம் செய்திருக்கீங்க ரொம்ப சந்தோஷம்.
கூஸ்பம்ஸ் ஃபீல் பண்ணீங்களா.. வாவ் இதைத் தவிர வேற என்ன வேணும். மிக்க நன்றி 🥰
Latest Post: வாகை சூடவா ரிவ்யூ Our newest member: Nalini Rajamanickam Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page