All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

முத்தம் 7

 

VSV 3 – முத்தம் ஒன்றை பிச்சு தா
(@vsv3)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

முத்தம் 7

 

வெண்ணிலவு தன் வேலையை முடித்துவிட்டு ஆதவன் தன் வேலையை ஆரம்பிக்க. பூலோகவாசிகளும், அவர்களுடைய அன்றாட வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள். அதிரூபன் தன்னுடைய துறைக்கு வந்ததும் அவனை பார்த்த ரஞ்சனா "அதிரூபன், நா உன்கிட்ட முக்கியமான விஷயத்தை சொல்லணும்." என்றார் ஆணவன் வந்தும்வராததுமாக. "எஸ் மேம், சொல்லுங்கள்." என ஹச்ஓடி பதிலுக்கு காத்திருக்க ஒரு மாணவி "விஆர் சார் நீங்க கொடுத்த அசைன்மேன்ட் எங்க வைக்கணும் சார்?" என அதிரூபனிடம் கேட்க "என் டேபில் பக்கத்துல வைச்சுடு. அன்ட், செமினார் ரெடி ஆகிக்கோங்க. யூ மே கோ (நீ போகலாம்)" என அந்த மாணவியிடம் தகவல்களை கூறிவிட்டு தலைமை ஆசிரியை பார்த்தவன் "உனக்கும் சானக்கியாவுக்கும் மேரேஜ் நடக்க போகுது தானே?" அதற்கு அவன் 'ஆம்' என தலையசைக்க "இனி நீ அவளுக்கு கைட்டா இருக்க வேணாம். அதிரூபன் ரிலேஷன் இடையில் ரிசர்ச் பண்ண முடியாது. அதனால, சானக்கியாவ இனி என்கிட்ட அனுப்பு." என்றதோடு முடித்து கொண்டார். "ஓகே மேம். நா சொல்லிடுறேன். அப்புறம் மோனிகா மேம்?" "அதிரூபன் நீங்க என் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடந்தா ஓகே. மோனிகாவ பத்தி நா சொல்ல என்ன இருக்கு? அவளும் ஆராதனாவும் உங்களோடு தான் ரிசர்ச் செய்வாங்க. இத நா தனியா வேற சொல்லணுமா?" ரஞ்சனா எப்போதும் தன்னுடைய கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற ஆணவம் அவர் மனதில் கடந்த சில வருடமாகவே இருக்கிறது. அது கடந்த ஒரு வருடத்தில் அதிரூபன் புரிந்து கொண்டான். சரியாக அந்த சமயத்தில் ஆராதனாவை பார்த்தவன் 'இவ எதுக்கு இங்க இருக்கா?' என நினைக்கையில் "ஆர்யன்! அப்புறம் இன்னைக்கி என் பெத்டே, ஒரு கிப்ட் தர முடியுமா?" என அவன் பக்கம் சென்று பேசாமல் அலைபேசியின் வழி பேச "பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆராதனா. என்ன கிப்ட் வேணும்?" என தோழமை உறவோடு பேச "இது உனக்கு தான். நா மனசுல இருக்கிறது எல்லாம் சொல்லணும்." என முழு அன்புடன் அலைபேசியில் முத்தத்தை கொட்டி தீர்க்க அவனோ சிலை போல் செவியில் இருந்து அலைபேசியை எடுக்க முடியாமல் தவிக்க இறுதியாக ஆராதனா "சரி, நா லோகேஷன் அனுப்புறேன். காலேஜ் முடிஞ்சிடும் சீக்கிரம் வா. நம்ம தனிமையில சந்திக்க வேணாமா ஆர்யன் மாமா." என புன்னகையோடு சென்றாள். அதிரூபன் அலைபேசியை காதிலேயே வைத்து இருந்ததற்கு காரணம் உண்டு. அவன் எதிரே இரண்டு ஆசிரியர்கள் அமர்ந்திருந்த காரணத்தினால் அவன் வேறு வழியின்றி நடித்து வந்தான். ஆராதனாவின் செயலை பார்த்து அவர்கள் அதிர்ச்சியில் இருக்க இதை கவணித்ததும் அவள் சென்ற பின்னர் "சரி, நா நாளைக்கு வந்துடுறேன் மாதங்கி. உன்னை நா படத்துக்கு கூட்டிட்டு போறேன்." என அதிரூபன் பொய் பேசினான். ஆனால்.. ஆணவன் ஒரு விஷயத்தை மறந்து போனான் பாவையவள் தன்னை ஏன் 'ஆர்யன்' என ஏன் அழைக்க வேண்டும் என்பதை மறந்தான். 

 

வேலையை முடித்துவிட்டு அதிரூபன் மனதில் கோபத்தோடு ஆராதனா அனுப்பிய இடத்திற்கு சென்றான். அதே சமயம், அவளும் மணலில் அமர்ந்து 'ஆர்யன் ஆராதனா ஆர்யதனா. எனக்கும் என் மாமாவுக்கு குழந்தை பிறந்தா..இந்த பெயரை தான் வைப்பேன். மாமா என்னை பார்க்க எப்ப தான் வருவ? என்ன தான் இருந்தாலும் நீ வாத்தியார். வேலைய முடிச்சுட்டு வா.' என காத்திருக்க அவனது வாகனத்தின் சத்தம் கேட்டு எழுந்து அவன் பக்கம் செல்ல அந்த நேரத்தில் அவ்விடத்தில் தூரமாக அவளை அழைத்து சென்றவன் "என்ன நெனப்பில இருக்கிற நீ? உன்னால் என் நிம்மதி இல்லாமல் போகப்போகுது. இனி என் வாழ்க்கையில நுழையாத." என அவளை கண்டித்தான். "சரி, ஆனா.. நா ஒன்னு சொல்லுறேன். உங்க அம்மா ஜெயவள்ளி என் அம்மா நந்தகிகிட்ட வாக்கு கொடுத்ததை நீங்க தெரிஞ்சுக்கணும்." என அவள் பேச இடையில் "உன்னை நா அடிக்க யோசிக்க மாட்டேன்." என சத்தமாக பேசியவனுக்கு தாகம் எடுக்க ஆராதனா "என் பைல ஜுஸ் இருக்கு. வேணுமா?" என கேட்க "ஹம், தாங்க்ஸ் ஆராதனா." என அவளோடு நடந்து வந்தவன் பாவையிடம் இருந்து அந்த பாட்டிலை வாங்கி பருகினான். பிறகு காலத்தின் போக்கில் நேரங்கள் சென்றது..

 

சானக்கியா அழுது கொண்டே இருந்தாள். அவளை பார்த்த பைரவி "என்னடி ஆச்சு? ஏன் இப்படி அழுகுற? மாப்ள ஏதாவது சொன்னாரா?" என பதறி போய் கேட்க "அம்மா. நா இனி ரூபனோட இருக்க முடியாது. என்னை ரஞ்சனா மேடம் தான் கையிட் பண்ண போறாங்க. ரொம்ப வருத்தமா இருக்குமா." என அழுக ஆரம்பித்தில் பதறியவர் முழுவதையும் கேட்ட பின் "அட நீ அவனை கட்டிட்டு ஏழெழு ஜென்மங்கள் ஒன்னா இருக்க போறீங்க. இதுல, சின்னபிள்ளை தனமா பேசிட்டு என்னமோ ஏதோனு பதறிட்டேன் தேவகி!!" என அவர் தன் அன்றாட வேலைகளை பார்க்க சென்றார். "பைரவி இன்னைக்கு நா சமைக்கவா?" என சுதாகர் முன் வந்து பேச "அடேங்கப்பா! பொண்ணுங்க இரண்டு பேருக்கும் நீயே சமைச்சு கொடுனு சொல்றது. என் சமையலை நல்லா குறை சொல்லிட்டு இருந்தீங்க. நா நல்லாவே சமைக்க மாட்டேன்னு சொல்லாமல் சொல்லி காட்டுறது எனக்கு தெரியுது." பைரவி சோகமாக பேசியதை கேட்டவர் "சரி, நீயே சமைச்சுக்கோ. நா தேவகிக்கு படிக்கிறாளா இல்ல ஃபோன்ல சாட் ஏதாவது செய்யுறாலானு பார்க்குறேன்." இதை கேட்டதும் "ஹான்! என் மனசு போலவே நினைப்பீங்கனு பார்த்தா? உங்க பொண்ணுக்கு தான் முதல் மரியாதை. உங்க பைரவிய நீங்க கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க. ஒரு பேச்சுக்கு சொன்னா அப்படியே கைவிடுது நியாயமான விஷயமா?" என்றதும் "ஆண்டவா! இந்த பொண்டாட்டிகலை புரிஞ்சு வைச்சுறது ஈஸியா இருந்தாலும்.. அவங்க எப்ப என்ன பேசுவாங்கனு தெரிஞ்சுக்க முடியல. எப்படி முருகா நீங்க ரெண்டு கல்யாணம் பண்ணிங்க?" என வாய்விட்டு பேசவும் "அப்பா மனசுக்குள்ள பேசுறத நினைச்சு வாய்விட்டு பேசுறீங்க." தேவகி நகைத்து கொண்டு போக. 

 

அதிரூபன் வீட்டில்..

 

"என்னங்க. நா சொல்லுவேன் தப்பா நெனக்கவே கூடாது." என ஜெயவள்ளி திக்கி பேச "நீ முதல்ல சொல்லு நா அதை எப்படி எடுத்துக்கனு எனக்கு தெரியும்." என வைனவேந்தன் சரியாக பேச "ஆராதனாவ நம்ம பையனுக்கு முதல்ல கட்டி வைச்சுடுவோம். பின்ன சானக்கியாவுக்கு கட்டி வைச்சோம்னா சானக்கியா அதிரூபன் வாழ்க்கை நல்லா இருக்கும்." என பாதியோடு ஜெயவள்ளி நிறுத்த "அப்ப அந்த ஆராதனாவை கைவிட சொல்ற! ஜெயா நீ என்ன இன்னும் சின்னபுள்ள தனமா பேசிட்டு. ஒன்னு சுதாகர்கிட்ட போய் விஷயத்தை சொல்லணும். இல்லேனா, ஆராதனாவுக்கு நம்ம நிலைய புரியவைக்கணும். தேவையில்லாமல் மூனு பேரு வாழ்க்கைய கெடுத்து என்னத்த பார்க்கபோற?" என தன் தந்தை இப்படி கத்தி பேசுவதை பார்த்த மாதங்கி "நீங்க என்ன சொன்னிங்க பா?" என தன் மகள் கேள்வி கேட்டதும் அனைத்து விஷயங்களையும் மகளிடம் கூறினார். "அப்ப, நீங்க உங்களுக்குள்ள சண்டை போடுறதுக்கு வாழப்போற அண்ணாகிட்ட பேசலாம் தானே? சானக்கியாவோட அண்ணா ரொம்ப வருஷம் பழகவே இல்ல. இருந்தாலும், அண்ணா வாழ்க்கையில மூனாவது மனுஷனா நம்ம முடிவு பண்ணுறது தப்பு பா. நா ஸ்கந்துகிட்ட பேசிட்டு தூங்குறேன்." என்றதோடு அவ்விடம் விட்டு சென்றால். மாதங்கி பேசுவதும் சரி தானே? வாழ்க்கையை வாழப்போவது அதிரூபன் அவன் தான் தன்னுடைய வாழ்வை யாரோடு வாழ வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது.

 

 

கண்ணாமூச்சி ரேரே.. கண்டுபிடி யாரு!!! இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என தெரியுது இப்போது..இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது!!! 

 

இரவில் உறங்கி கொண்டு இருந்த அதிரூபன் பனிமூட்டமான நேரத்தில் கண்விழித்து பக்கத்தில் இருந்த லேம்பை எதர்ச்சியாக கைவைக்க மஞ்சள்நிற வெளிச்சத்தில் அவன் தன் இடது பக்கம் திரும்ப அங்கு வெள்ளையும் மஞ்சளும் கலந்தது போன்ற மேனி ஒன்று சிறியதாக அந்த வெண்ணிற பொர்வையினுள் அடைந்து கிடந்தது. 'இது எந்த இடம்? நா எப்படி வந்தேன்? ஏன் என் உடம்பு ரொம்ப சோர்வா இருக்கு?' என மனதில் கேள்விக்கு பதில் சொல்லும் படியாக பக்கத்தில் இருந்த நபர் சற்றே திரும்ப அதிர்ந்து போனான் அதிரூபன். பிறகு அவ்விடம் விட்டு எழுந்து மின்விளக்கை அனைத்துவிட்டு கடகடவென ஓடினான் வீட்டை நோக்கி. வீட்டிற்கு வந்ததும் மணியை பார்க்க அது மூனு என காட்ட கடகடவென தன் அறையினுள் புகுந்தவன் குளித்துவிட்டு சாதாரணமான உடையை அணிந்து கொண்டு கண்ணாடியில் முகத்தை பார்த்தவன் அப்போது அலைபேசியில் சானக்கியாவின் புலனமுகப்பை பார்த்ததும் ஓங்கி கண்ணாடியில் குத்தினான். சத்தம் கேட்டு ஓடி வந்த மாதங்கி அண்ணனின் அறைகதவை தட்ட பெற்றோர்களும் பதறிபோய் வந்து "என்னாச்சு மாது?" என குழப்பமாக கேட்க "என்ன ஆச்சுன்னு தெரியலமா அண்ணா ரூம்ல இருந்து சத்தம் வந்தது எந்திருச்சு கதவை தட்டி பார்த்தேன் தெருக்கவே மாட்டேங்குறாரு. ரொம்ப பயமா இருக்குமா அப்பா தயவு செஞ்சு கதவை உடைத்து விடுங்கப்பா செலவானாலும் பரவாயில்லை." என மாதங்கி கண்களில் கண்ணீரோடு அண்ணனுக்காக வருத்தம் அடைய வைனவேந்தன் "அதிரூபா! அதிரூபா என்ன பண்ணிக்கிட்டு இருக்க ஜெயா, மாது தள்ளி போங்க நான் இந்த கதவ உடைக்கிறேன்." என்றதும் அவர்கள் சற்று தூரம் தள்ளி நிற்க தந்தையவர் கதவை உடைத்தார். 

 

அதிரூபனின் வலது கரத்தில் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி கிடந்தான். கண்ணாடியோ உடைந்து கிடந்தது ஏன் இவன் இப்படி செய்தான் என்ற கேள்வி மூவரின் மனதிலும் ஏற்பட அவனைத் தூக்கிக் கொண்டு அந்த நேரத்தில் மருத்துவமனையை நாடி சென்றார்கள். வைணவேந்தன் தன்னுடைய நண்பனான நகுலனிடம் கூட்டிச் சென்றார். தன் நண்பன் இந்த நேரத்தில் அழைத்திருக்கிறார் என்றால் ஏதேனும் அவசரமான விஷயமாக இருக்கும் என்று கருத்தில் கொண்டு நேரடியாக அவரும் தனது நண்பனின் மனதின் வலியை புரிந்து கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவர் "என்னாச்சு வைணவேந்தன்?" "நகுலா அதிக்கு கையில அடிபட்டு இரத்த இரத்தமா வருது. என்ன எதுன்னு கொஞ்சம் பாரு. கண்ணாடியில் கையை குத்திட்டான் போல.. செப்டிக்கா இருந்தா உடனே எடுத்தரணும் இல்லையா, அதான் ஹாஸ்டல் கூட்டிட்டு வந்தேன். எங்க போறதுன்னு தெரியலை. உன்கிட்ட தான் கூட்டிட்டு வர தோணுச்சு. என் பையனுக்கு ட்ரீட்மென்ட் பார்." "நீ கவலையே படாத மச்சி கண்டிப்பா உன் பையன நான் டிரீட்மென்ட் பண்ணி குணமாக்குறேன் சரியா நீ அப்படி போய் உட்காரு." நகுலனும் வைணவேந்தனும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள் இருவரும் தோழமையோடு இன்றுவரை வலம் வருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு அவர்களது தோழமை உறவின் மீது நம்பிக்கை இருவரிடமும் சரிசமமாக இருக்கிறது. வைனவேந்தனுக்கு பத்திரிக்கையாளராக வேண்டும் என்ற ஆசையின் காரணத்திற்காக இருவரும் கல்லூரியில் மட்டும் படிப்பதற்கு பிரிவதற்காக சூழ்நிலை ஏற்பட்டது. நகுலன் தன் மேற்படிப்பிற்காக யூரோப் சென்று டாக்டர் பட்டத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய உடனே அவனது தங்கை ஜெயவள்ளியை காதலித்து மணந்து கொண்டான் வைனவேந்தன் பிறகு நகுலனும் வைணவேந்தனின் தங்கை பிந்துவை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உண்டு. இதுவே நகுலன் மற்றும் வைணவேந்தனுக்கு இடையே இருக்கும் உறவாகும்.

 

இச்சு தா💋 கொஞ்சம் பிச்சு தா😘


   
ReplyQuote

You cannot copy content of this page