All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

முத்தம் 6

 

VSV 3 – முத்தம் ஒன்றை பிச்சு தா
(@vsv3)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

முத்தம் 6

 

பிறகு நேரம் கடந்து செல்ல செல்ல மூவரிடமும் கேள்வியை கேட்டு கொண்டே வர. அதற்கு மூவரும் சரிசமமாக பதிலடி கொடுக்க. இறுதியாக அதிரூபன் "சரி. மோனிகா நீ பிரிட்டிஷ் இலக்கியத்தை நல்லா தெரிஞ்சி வைச்சிருக்க. ஆனா, நீ அமரிக்கன் இலக்கியத்தில் வீக். அதனால, நீ அமரிக்கன் இலக்கியத்தில் ரிசர்ச் பண்ணு. சானக்கியா, நீ அப்படியே மோனிகாவுக்கு ஆப்போசிட். சோ, நீ பிரிட்டிஷ் இலக்கியத்தை ரிசர்ச் பண்ணு. ஃபைநலி, ஆராதனா யூ ஆர் ஜஸ்ட்.. எனக்கு என்ன சொல்றதுனு தெரியவே இல்லை. ஏனா, எல்லா இலக்கியத்திலும் நீ நல்லா பதில் சொல்ற. நீ டயஸ்போரால ரிசர்ச் பண்ணு. எல்லாருக்கும் தனித்தனி டாபிக் கொடுத்திருக்கேன். சானக்கியா நீ இனிமே இங்க வியாழக்கிழமை வரணும். மோனிகா நீ செவ்வாகிழம வர. கடைசியா ஆராதனா நீ வெள்ளிக்கிழமை வா. நீங்க நா சொல்லி தர அந்த ஒரு நாள்ல கத்துகிட்ட எல்லாத்தையும் மீத ஆறு நாள் ரிசர்ச் பண்ணனும். நா கண்டிப்பா உங்களுக்கு கேள்விகள் எழுப்புவேன். நேரமாச்சு நீங்க மூனு பேரும் போகலாம்." என அதிரூபன் அனைத்தையும் பேசிய பின் சானக்கியா அவனை பார்க்காமல் அப்படியே விறுவிறுவென நடக்க மோனிகா பின்தொடர்ந்து சென்றாள். ஆராதனா "அதிரூபன். நா உன்கிட்ட பேசணும். இப்ப நா பேசலாமா?" என அவனிடம் வேண்டுகோள் விடுக்க "கண்டிப்பா ஆராதனா. என்ன விஷயம்?" என கேட்க "சார், ஐ.. ஐ ஜஸ்ட் லவ் யூ. யோசிச்சு பதில் சொல்லுங்கள்." என்றதோடு அவ்விடம் விட்டு சென்றாள். ஆராதனாவின் வார்த்தைகளை கேட்டதும் "ஏய் ஆராதனா..ஓய்?" என ஓடியவனின் கையை பிடித்த ஜெயவள்ளி "அதி என்ன டா நீ? ஏன் இப்படி ஓடுற?" என கேள்வி கேட்டார். "அம்மா ஆராதனா பிரபோஸ் பண்ணினா என்னனு கேக்கும் முன்ன ஓடினாள். ஜெயு சானக்கியா எனக்கு நீ பார்த்த பொண்ணா இருந்தாலும்.. கொஞ்சம் லவ் பண்ண சிரமமாதான் இருக்கு. பட், திஸ் ஆராதனா..? ஏன் மா இவள உங்களுக்கு தெரியுமா?" என அன்னையுடன் பேச ஆரம்பிக்க மறு பக்கம் ரஞ்சனாவின் இல்லத்தில்.. வீட்டினுள் நுழைந்தவள் ரஞ்சனாவை கட்டியணைத்து "பெரியம்மா!!! நீங்க மட்டும் இந்த ஹெட்ஃபோன் வழியா பதில் சொல்லாமல் இருந்திருந்தால் ஆர்யன் மாமாகிட்ட வசமா சிக்கியிருப்பேன். இன்னைக்கி சானக்கியா திட்டு வாங்கினது எனக்கு ஒரு பக்கம் வலிச்சது. ஆனா, அவளுக்கு இது தேவை தான்." என்றதோடு 

 

என் ஜன்னல் வந்த காற்றே ஒரு தேநீர் போட்டு தருவா? உன் வீட்டில் வந்து தங்க பெண்தோழி நானும் வரவா? என் வாசல் கோலம் பார்த்து ஒரு கவிதை சொல்லும் வானம். என் கைகள் கோர்த்து கொள்ள அட காற்றுக்கு என்ன நாணம்? நான் கால்கள் கொண்ட தென்றல், நடமாடும் சாலை மின்னல். நான் கூந்தல் கொண்ட மேகம், நலமாக பாடும் ராகம். 

ஹே!! கவிதை கொண்ட குயிலே.. நீ பாட பாட சுகமா? உன் கையொப்பம் தான் கேட்பேன்.. நான் மட்டும் தனியா வரவா?

 

அப்போது நன்றாக ஆடிய ஆராதனா ரஞ்சனாவை பார்த்து சிரிக்க அவரும் இவளை பார்த்து சிரிக்க. "நீ அடுத்த என்னைக்கு போகணும்?" என ரஞ்சனா கேட்க "வெள்ளி கிழமை நா என் மாமா இரண்டு பேரும் ஒன்னா.." என வெட்க பட "ஆரு, நினைச்ச மாதிரி நடத்தியாச்சு. நா உனக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சு தருவேன். நீ முதல்ல கேட்ட போது நா யோசிச்சேன். இப்ப, இனி இப்படியே போயிட்டு வா." என ஆராதனாவிற்கு அறிவுரை செய்தார்.

 

****

"பைரவி என்ன டி தோசை ஊத்துற? முருக்கு மாதிரி முருகலா இருக்கும்னு பார்த்தா.. கருக வைச்சு தர?" என சுதாகர் செல்ல சண்டை போட "உங்க அளவுக்கு எனக்கு சமையலே வராது. நல்லா சமைக்க வராதுனு தான் என் அத்த சமையல்காரன் சுதாகரனை கட்டி வைச்சாங்க." என கடுகடுவென பேசும் கணவரின் முகத்தில் சிரிப்பை வரவைத்தார். பைரவியின் தாய் அவள் கல்லூரி படித்து முடித்ததும் இறைவனடி சேர. தன் மகனுக்கு பைரவியை கட்டி வைக்க நினைத்தார்‌ சுதாகரின் தாயார். ஆனால்.. பைரவியின் தந்தை முழு நேரமும் குடி என குடிகாரனா வாழும் ஒரு தந்தையால் பைரவியின் வாழ்க்கை கேள்விக்குறியானது. ஆனால் அதையும் மீறி சுதாகரனுக்கு கட்டி வைத்தார் அவரின் தாயார் சானக்கியா வந்ததும் "அம்மா!!!" என்ற சத்தத்தோடு வந்தவள் "சானக்கியா? என்னமா ஆச்சு?" என பைரவி பதறினார். "அதிரூபன் போயும் போயும் ஆராதனானு ஒருத்தி முன்ன என்னை ரொம்ப அவமானம் படுத்தும் போது அந்த ஆராதனாவோட பார்வை பார்க்கும் போது எனக்கு வயிறு எரிஞ்சது." என விஷயத்தை சொல்லவும் தாயார் மகளிடம் "அட, இவ்வளவு தானா? என்னமோ அவ உன் வாழ்க்கையை கெடுத்த மாதிரி பேசுற? மாப்ள பார்க்குற வேலை அப்படி. எல்லாரும் இருக்கும் போது உனக்கு முக்கியத்துவம் தந்தால் மத்தவங்க என்ன நினைப்பாங்க. எல்லா நேரமும் அதிரூபன் உனக்கானவன் தான். உனக்கும் அதிரூபனுக்கு முகூர்த்த தேதி பார்த்தாச்சு." என தாயார் கூறவும் மகிழ்ச்சி அடைந்தவள் "அப்படியா? எப்போ?" என்றாள் சந்தோஷமாக. "ஆமா சானக்கியா ஐப்பசி மாசம் முதல் முகூர்த்தம் உனக்கும் அதிரூபனுக்கும், மாதங்கிக்கும் அவளுடைய மாப்பிள்ளைக்கும். இதோ, பாரு இன்விடேஷன். உன் ஸ்கூல்,காலேஜ் தோழிகளுக்கு வாட்ஸ்ஷப்ல போட்டுவிடு." இப்படி கல்யாண விஷயத்தை கேட்ட போது துள்ளி குதித்தாள். 

 

 

"கணா காண்கிறேன் கண்ணாலனே..ஓரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே!! மண்ணை கொண்டாடும் சேலை சேலை.. மார்ப்பை கொண்டாடும் தாலி தாலி என்று மடியை கொண்டாடும் மாலை மாலை என்று மகிழ்வேன்! தேவகி..அக்காவுக்கு கல்யாணம் உன் தோழிகளுக்கும் சொல்லு." என பள்ளிவிட்டு வீட்டினுள் நுழைந்த தங்கையிடம் செல்லமாக நடனமாடி தன்னுடைய அறைக்கு காதலோடு துள்ளி திரிந்தாள் பாவை. மற்றொரு பக்கத்தில் ஜெயவள்ளியின் மனம் இந்த திருமணத்தை மகிழ்ச்சியாக நடத்த விரும்பவில்லை. காரணம், நந்தகிக்கு அவர் செய்து கொடுத்த சத்தியம். அதை நினைத்து சமையலுக்கு வெங்காயம் நறுக்கையில் தெரியாமல் விரலில் கத்திபட்டு தன் வேலையை காட்ட "அம்மா!!!!!" என கத்தினார் ஜெயவள்ளி சத்தம் கேட்டு வந்த மாதங்கி "என்னமா நீ, காயம் பாரு எவ்வளவு நீளமா இருக்கு? அப்பா!!!!" என மாதங்கி வைனவேந்தனை அழைத்தாள். பிறகு அதிரூபன் "மாது அம்மா கைய காயப்படுத்தும் வரை நீ என்ன செஞ்ச?" என கேள்வி கேட்டான் "அண்ணா ஸ்கந்து கிட்ட பேசிட்டு இருந்தேன்." என்றதும் "இனி அடுப்பங்கறைக்கு நீ 

போன் கொண்டு போக கூடாது. இது என் கட்டளை, போய் டின்னர் சமைக்கிற வேலைய பார். நா அம்மாவுக்கு கட்டு போட்டு விடுறேன்." என முதலுதவி செய்தான் அதிரூபன். சுதாகரிடம் பேசிவிட்டு வந்தவர் தன் மனையாளின் காயத்தை பார்த்து "ஜெயா? என்ன இப்படி?" என கவலையோடு அவளை தன் மார்பில் புதைத்தவுடன் 'அம்மாவும் அப்பாவும் தனியா இருக்கட்டும். நா என் வேலைய பார்க்குறேன்.' என மனதோடு பேசியவன் அவ்விடம் விட்டு சென்றான். "என்னங்க, நா நந்தகிக்கு கொடுத்த வாக்கை காப்பாத்த நினைக்கிறேன்." என்றார் அழுகையோடு "நம்ம பையனுக்கு தோஷம் இருக்கு ஜெயவள்ளி." என்றதும் மேலும் அழுக தொடங்கினார். "என்ன சொல்றீங்க? பரிகாரம் இருக்கா?" என கேள்வி கேட்டார். "இருக்கு ஜெயா. நம்ம பையனுக்கு ஜாதகப்படி இரண்டு சம்சாரம். முதல் சம்சார வாழ்க்கை நிலைக்காதுனு சொன்னார். அதனால, இரண்டு முகூர்த்தம் அமைஞ்சிருக்கு. முதல் முகூர்த்தம் அதி ஒரு கழுதைக்கு தாலி கட்டணும். இரண்டாவது முகூர்த்த நேரத்தில நம்ம பையன் பொண்ணு இரண்டு பேருக்கும் திருமணம்." சந்தோஷமாக கூறும் தன்னவனை பார்த்த அவரின் ஜெயா "ஏங்க வாழைமரம் எல்லாம் வேணாம். முதல் முகூர்த்ததுல அந்த ஆராதனாவ கட்டி வைச்சு அனுப்பிடலாம். பிறகு சானக்கியா,அதிரூபன் கல்யாணம் சிறப்பா நடக்கும்." என அவர் பேசியது வைனவேந்தனுக்கு கோபத்தை வரவழைத்தது. "என்ன ஜெயவள்ளி நீ இப்படி பேசுவனு நா கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கவே இல்ல? ஆராதனாவும் ஒரு பொண்ணு. நீ கொடுத்த வாக்கை நீ மறந்துட்டு புதுசா வேற பொண்ணு பார்த்து..ஹய்யோ! ஏன் ஜெயா இப்படியெல்லாம். யாராவது அவங்க செஞ்சு கொடுத்த சத்தியத்தை மறப்பாங்களா?" என தன் மனையாளை திட்டினார். மீண்டும் அவளிடம் "ஜெயா, இதே நந்தகி உன் இடத்துல இருந்து வாக்கு கொடுத்து மாதங்கிய மறந்து வேற ஒரு பொண்ணு பார்த்திருந்தால்..? அப்ப நீ என்ன செய்வ?" என தங்களது மகளை வைத்து பேசவும் "முடியாது! எனக்கு வாக்கு கொடுத்து ஏமாத்துறவங்க வாழ்க்கை நல்லாவே இருக்காது." என கோபமாக சொல்லவும் தான் புரிந்து கொண்டார். பிறகு கணவரை பார்த்து "அப்ப..சானக்கியா? அவங்ககிட்ட நம்ம என்ன சொல்றது?" என இப்போது தான் சரியான பாதையில் சிந்திக்க தொடங்கினார். "ஜெயா, இப்ப என்ன செய்யனு எனக்கும் தெரியாது? பத்திரிகைகள் அடிச்சு சாமி முன்ன வைச்சிருக்கேன். நாளைக்கு முதல் வேலையா சுதாகர்கிட்ட போய் முக்கிய விஷயத்தை சொல்லணும்." என வைனவேந்தன் தன்னந்தனியாக பேச "ஏய்! நா பாட்டுக்க பேசிட்டு இருக்கேன் நீ ஏன் திரும்ப ஒரு மாதிரி கவலையா இருக்க?" என மீண்டும் துடித்தார். "ஏங்க, அந்த ஆராதனா ஒரு முறைகூட நம்ம அதிய அதிரூபன்னு கூப்பிடவே இல்ல. எப்பவும் ஆர்யன் மாமானு தான் கூப்பிடுறா? உங்களுக்கு ஆர்யன்னு யாரைவது தெரியுமா?" என இறுதியாக தன்னவள் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. 'வாழ்க்கையில இப்படியெலாம் திருப்புமுனை நடக்குது? ஆராதனாவுக்கு அதியை கட்டி வைக்கலாம். ஆனா.. அதி சானக்கியா மேல உயிரையே வைச்சிருக்கான். வாக்குக்காக ஆராதனா கட்டி வைக்க ஜெயா நினைக்கிறா. ஆண்டவா! எப்படியாவது எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்த கல்யாணம் அதி வாழ்க்கை நல்ல படியா நடக்கணும்.' மாதங்கி சமைத்த உணவை சாப்பிட்டு முடித்தவுடன் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அறைக்கு வந்த மாதங்கியின் அலைபேசி அலறியது. அழைத்திருப்பது வேறு யார்? அவளது வருங்கால இணை ஸ்கந்தன் தான் அழைத்திருந்தான். 

 

"ஸ்கந்து! என்ன கேப்டன் அதிசயமா வீடியோ கால் பண்ணியிருக்கீங்க?" ஆம், ஸ்கந்தனின் தொழில் நாட்டை காப்பாற்ற போராடும் போர்தொழில். "எனக்கு இன்னும் ஒரு மாசம் தான் லீவ். பிறகு நா காஷ்மீர் போயிடுவேன். சீக்கிரமா, என் மாதங்கியை தூக்கிட்டு போக ஆசை படுறேன். ஆமா, மாதங்கி நா மிலிடிரில வேலை பார்க்குற விஷயம் தெரிஞ்சதும் நிறைய பேர் வேணாம்னு சொல்லிட்டாங்க. உனக்கு மட்டும் ஏன் சரி சொல்ல தோணுச்சு?" இந்த கேள்வியை மாதங்கியிடம் பலமுறை கேட்டுள்ளான். "ஹய்யோ, ஸ்கந்து நாட்டை காப்பாற்றும் வீரனை இணையாக்குறது எனக்கு பல மடங்கு சந்தோஷத்தை தருது. அதனால, இனி நீங்க இந்த கேள்வியெலாம் கேட்க கூடாது." 

 

வின்னோடு மின்னாத விண்மீன் எது? அது அது உன் புன்னகை. ஒற்றை பூ பூக்கின்ற தேசம் எது? அது அது உன் பாதுகை. துடிக்கும் எரிமலை எது? அது என் நெஞ்சம் தானடி..இனிக்கிற தீ எது? அது உந்தன் தீண்டலே! சுடுகிற பொய் எது? அது உந்தன் நாணமே அன்பே! கண்ணுள்ளே கரைந்த நிலவு.. எனது இரவை திருடுதோ? உயிரினை வருடுதோ? கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு..உனது கனவை வரைந்ததோ இருதயம் இணைந்ததோ!

 

இச்சு தா💋 கொஞ்சம் பிச்சு தா😘

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page