All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தேவன் உருக்கும் இசை (05)

 

VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 57
Topic starter  

அத்தியாயம் 5

 

 

 

அதிர்ந்து விழித்து நின்றவளை தோளை பிடித்து உலுக்கிய அவள் தோழி திவ்யா “ இமாயா என்னடி ஆச்சு ?” என்று கேட்டாள்...

 

ஒருத்தி மூச்சிரைக்க ஓடி வந்து “டி இமாயா இவளோட பேச்ச நீ நம்பிடியா டி ? ”என்று அவள் கேட்டதும், 

 

அவளின் புரியாத பார்வையை எதிர்நோக்க வேண்டிய நிலை “ அடி பைத்தியக்காரி! இந்த லூசு திவ்யா இருக்கால ” அவள் உண்மையை கூற வரும்போது அவளின் தோழி விழியசைத்து வேண்டாம் என்று சைகை செய்ய இமாயாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது..

 

“எனக்கு கால் பண்ணி நாய் மாதிரி கத்த வச்சிட்டு இந்த பொண்ணு என்ன பண்றா? ” பார்த்தீபன் யோசிக்க.. மறுமுனையில் எவ்வித சத்தமும் கேட்கவில்லை..

 

”ஏய் லைன்ல இருக்கியா?” அலைபேசியில் அவனின் குரல் கேட்க.. நொடியில் அழைப்பு துண்டிக்கப்பட்டது..

 

பார்த்தீபன் அழைப்பு துண்டிக்கப்பட்ட அலைபேசியை கோபமாக முறைத்தான்.. ஏதோ அலைபேசி திரையில் அவளின் முகம் தெரிவது போல் பார்த்து வைத்தான்..

 

“என்னடி சொல்ற? ”

 

“உன்ன முட்டாள் ஆகிட்டு இருக்காங்க டி... கொஞ்சம் உன்ன சுத்தி பார்த்தீனா! அவங்க ஃபேஸ் ரியாக்ஷன் எப்படின்னு கண்டுபிடிக்கலாம்..” என அவள் கூறியதும் , சுற்றி நின்ற தோழியர் கூட்டத்தை பார்த்தவளுக்கு நன்றாக விளங்கியது..அவளை வைத்து செய்து இருக்கிறார்கள் என..

 

வேண்டும் என்றே பார்த்தீபனின் அலைபேசி எண்ணை கொடுத்து அவனிடம் திட்டு வாங்க வைத்து , அதில் அவர்கள் குளிர் காய்கிறார்கள்.. அவள் மனம் உலை கனலாக கொதிக்க ஆரம்பித்தது..

 

தன்னை ஒருவன் ஏமாற்றி கர்ப்பம் ஆக்கி இருக்கிறான் என்ற பொய்யை அவளிடம் கூறிய தோழி திவ்யா மீது அக்கணம் வெறுப்பை ஏற்படுத்தி விட..

 

‘ பளார் ’ என்று வேகமாக காற்றை கிழித்துக் கொண்டு வந்த கரம் இடியாக அவள் கன்னத்தில் இறங்கியது..

 

அடி வாங்கியவள் கன்னத்தை பிடித்துக் கொண்டு பின்னால் சரிந்ததும் மற்றைய தோழிகள் அவளை பிடித்துக் கொண்டனர்..

 

”இமாயா எதுக்குடி அவள அடிச்ச?” ஒருத்தி அவளுக்காக பரிந்து கொண்டு வர..விட்டாள் அவளுக்கு ஒரு அறை கன்னத்தை பிடித்துக் கொண்டு “என்னை எதுக்குடி அடிச்ச? ” அழுவது போல் அவள் கேட்டாள்..

 

“இதோ இவளுக்காக தானே நீ வந்த மொத்தமா சேர்ந்து அந்த பையன் கிட்ட என்னையே அசிங்கப்படுத்திடீங்கள்ல.. எவளாவது என்கிட்ட பேச வந்தீங்க கன்னம் இருக்காது சொல்லிட்டேன்! ” சீற்றத்துடன் நாக்கை மடித்து எச்சரித்து ஆத்திரத்துடன் அவள் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் அவள்...

 

“என்னடி இவ இப்படி சீரியஸா எடுத்துகிட்டு பேசிட்டு போறா? நாம‌ இத விளையாட்டுக்கு தானே பண்ணோம்.. ” ஏற்கனவே அடிவாங்கியவள் சொன்னாள்..

 

“இமாயாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்கு முன்னாடியே தெரியும்..தெரிஞ்சிகிட்டு என்ன பயன் அவளை கோவப்படுத்துனது தான் மிச்சம்..” அவள் சொன்னாள்..

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல லெக்சர் வந்துருவாறு ஒழுங்கா உட்காருங்க டி” ஒருத்தி கூறியதும் அனைவரும் தத்தமது இருக்கையில் அமர்ந்து விட்டனர்..

 

வகுப்பை விட்டு வெளியே வந்த இமாயாவுக்கு மனதில் கொதித்து கொண்டிருந்த கோப கனல்களை அணைக்க முடியாது தவித்தாள் அவள்..

 

இமாயா இருபத்திரண்டு வயது இளம்பெண்.. கல்லூரியில் இறுதி ஆண்டை நெருங்கி கொண்டு இருக்கிறாள்..இசைகவி மனம் விட்டு தன் மனதில் உள்ளதை அனைத்தும் சொல்வது என்றால் இவளிடம் மட்டுமே இருவருக்கும் தமக்கை தங்கை என்ற உறவை தாண்டி நண்பிகள் என்ற பிணைப்பே இருவரிடமும் இருக்கும்..

 

கேன்டீனில் காஃபி ஒன்றை ஆர்டர் செய்து அதற்காக பார்த்துக் கொண்டு இருந்த சமயம் அவளின் அலைபேசி அலறியது..

 

மேசை மீது வைத்திருந்த அலைபேசியை பார்த்தவளுக்கு புது எண்ணில் இருந்து அல்லவா அழைப்பு வந்தது..

 

‘யாரா இருக்கும் நியூ நம்பர் வேற’ என மனதில் நினைத்துக் கொண்டே அழைப்பை ஏற்று காதில் வைத்த பிறகே எல்லாம் முடிந்தது...

 

“ஏய்! உனக்கெல்லாம் அறிவு இல்லையா டி? தூங்குற மனுஷனை எழுப்பிவிட்டு, அது பத்தாததுக்கு ஒரு பொண்ண ரேப் பண்ணி புள்ளைய குடுத்துட்டேன்னு சும்மா இருக்குறவன் மேல பழியை தூக்கி போட்டல்ல நீயெல்லாம் உருப்படுவியா டி? " அவனின் மரியாதை இல்லாத பேச்சு அவளுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது..

 

“சார் கொஞ்சம் டீசண்டா ரெஸ்பெக்ட் குடுத்து பேசுனா குறைஞ்சி போய்டுவீங்கலோ? ” என்று அவள் சொன்னது தான் தாமதம்..

 

நீள் சோஃபாவில் அமர்ந்திருந்தவன் எழுந்து லுங்கியை கட்டி அவளிடம் சண்டைக்கு கிளம்ப தயாராகி விட்டான் பார்த்தீபன்...

 

மறுமுனையில் அவனோ “ஓஹோ! மேடம்க்கு டீசண்டா வேற பேசணுமா ? இதுல நாம ரெஸ்பெக்ட்டும் குடுக்கணுமோ? வேணும்னா உங்க கால்லையும் விழுறேன் மேடம்..ச்சீ நீ எல்லாம் பொண்ணா டி தப்பே செய்யாதவன் மேல உன்னால எப்படி என் மேல பழி சுமத்த முடிஞ்சிது ! ஹான் ” கண்மண் தெரியாத கோபம் தன் ஒழுக்கத்தை ஒருத்தி கேவலமாக சித்தரித்து இருக்கிறாள் என்கிற கோபம்..

 

பார்த்தீபன் இயல்பில் நல்ல மனிதன் தான் இருப்பினும் தான் செய்யாத ஒன்றிற்கு தப்பை ஏற்று கொள்பவன் இல்லை.. காலேஜில் பெண்களை சைட் அடித்தது உண்டு ஏன் கடைத்தெரு, மால் போகும் இடமெல்லாம் சைட் அடித்து வைப்பான்.. ஆனால் ஒருவரையும் சீண்டியதோ, கிண்டலாக பேசியதோ அவன் வைத்துக் கொள்ளவதில்லை ஆயிரம் பேர் போவார்கள் வருவார்கள் அன்றைய நாளோடு முடிந்தது..

 

இதில் இமாயா அவன் மீது சுமத்திய பழி அதனை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...

 

அதன் வெளிப்பாடே அவளிடம் கோபமாக வெடித்துக் கொண்டு இருந்தான்..

 

அவனின் பேச்சு அவளுக்கு ஒவ்வாத தன்மையை கொடுக்க..தன் தோழிகள் தூண்டி விட்டதால் அல்லவா தனக்கு இந்த நிலை அவனுடன் நிதானமாக பேச முனைந்தால்..

 

“சாரி சார் என் ப்ரண்ட் என்கிட்ட பொய்யை சொல்லி உங்க மேல பழியை தூக்கி போட்டுட்டா அதுக்கு நான் வருத்தம் தெரிவிச்சிகுறேன்..” என்றாள்..

 

“நீங்க சாரி சொன்னா நான்  அஸ்பெக்ட் பண்ணனுமா? அதெல்லாம் முடியாதுடி என்கிட்ட ஏதோ காரணம் சொல்லி தப்பிக்க பாக்குற நீ ?”அவனின் கோபம் இன்னும் அதிகரித்தது..

 

அநியாயத்துக்கு அவளுக்கு மேசையில் வைத்திருந்த காஃபி பார்த்தீபனிடம் பேச சென்று ஆறி தண்ணீராக போய் இருந்தது..

 

பேராசிரியர் வகுப்பிற்கு வருவதற்கு இரண்டு நிமிடங்களே இருக்க..இவனிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று நினைத்தாள்..

 

“சாரி சார் இத தவிர என்னால வேற எந்த பதிலும் சொல்ல முடியாது..” என்று சொன்னவள் அழைப்பை துண்டித்து அவனை பிளாக் லிஸ்டில் சேர்த்து விட்டாள்...பெரு மூச்சுடன் தன் வகுப்பறைக்கு நடையை கட்டினாள் அவள்.. காஃபிக்கான பணத்தை தட்டில் வைத்து விட்டே சென்றிருந்தாள்..

 

அலைபேசியை பார்த்து அவன் உதடுகள் ஏளனமாக சிரித்தது..‘ உன் காலேஜ்க்கே வரேன் டி சர்க்கஸ் குட்டி ’ மனதில் எண்ணினான்...

 

விஷ்ணு தேவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உயர்ந்த நெற்றியில் கீறாக திருநீறு பூசி ,வெள்ளை நிற வேஷ்டி அதில் கருப்பு  கரை வந்ததை கட்டி, கருப்பு நிற ஷர்ட் அணிந்து கை முட்டி வரை ஷர்ட்டை மடித்து விட்டு படிகளில் தாவி கீழே இறங்கிய சமயம்..“ மாமா ” பிள்ளைகள் கூச்சல் இட்டு அவனை காலோடு கட்டிக் கொண்டார்கள்..

 

அவனின் முகம் மெல்லிசையாக குளிர்வடைந்தது.. உதட்டில் சிரிப்பும், சந்தோஷமும் அதிகரிக்க..வெண்ணிற பல் வரிசைகள் அவனை மேலும் வசீகரமாக காட்டியது..

 

மூவரையும் கையில் தூக்கிக் கொண்டான் விஷ்ணு தேவன்.. இதனையெல்லாம் மணியம்மையுடன் சேர்ந்து காலை உணவுக்கான பாத்திரங்களை எடுத்து வைத்த ஜனார்த்தினி அவர்களை கண்டு முகம் பூரிப்பில் மலர்ந்தது..

 

“ டேய் குட்டீஸ் எப்படா வந்தீங்க? அம்மா எங்கே? ” அவர்களின் கேள்விகள் கேட்டுக் கொண்டே நீள்விருக்கையில் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான்..

 

“ நான் சொல்லுதேன் மா..மா..” கடை குட்டி சிங்கம் அவனிடம் சொல்லி அரிசி பற்களை காட்டி சிரித்தான் நான்கு வயது யாதவன்..“ சொல்லுங்க யாது குட்டி ” அவனை தூக்கி மடியில் வைத்து கன்னத்தில் முத்தமிட்டு அவன் கேட்க..

 

“ அத்து..அம்மா எனக்கு மம் வேந்தும்னு கேட்டு குக் பண்ணி தது போயிட்டாங்க..” அழகாக அவனின் மழலை மொழியில் சொன்னான்..

 

அவன் மழலை குரலில் உள்ளம் நனைந்த அவன்..“ சிங்க குட்டிக்கு பசி வந்துருச்சா? சரி அம்மா கிட்ட போவோம்..” என்றதும் அவனை தூக்கி கொண்டு செல்ல..மற்ற இரு பிள்ளைகளும் யாமினி , யுவிதா அவனோடு இருக்காமல் வெளியே விளையாட சென்றுவிட்டார்கள்..

 

“ ஜானு அம்மா நீ எப்ப வந்த ? ” என்று கேட்டுக் கொண்டே உணவு மேசை அருகில் சென்றான்..“ காலைல வந்துட்டேன் ப்பா..நீ வேற தூங்கிட்டு இருந்த அதான் அம்மாச்சி கிட்ட சொன்னேன் உன்னை எழுப்ப வேண்டாம்னு..” அவனுக்கான உணவை பரிமாறிய படி அவள் சொல்ல..

 

பரந்தராமன் குடும்பத்தினர் இவர்கள் வீட்டின் வாசல் வழியாக நுழைந்தாலும் அவர்களுக்கான வீடு அறையுடன்  பெரிதாக அமைக்கப்பட்டு இருப்பதால் இவர்களோடு சேர்ந்து உண்ண அவசியம் ஏற்படவில்லை..

 

“ பச்..என்ன ஜானு ” அவன் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள..“ இன்னைக்கு கடைத்தெருவுக்கு போய் பொருட்கள் எல்லாம் வாங்க இருக்கு தேவா..நம்ம ஊர பார்த்து ஒரு வருஷம் ஆச்சு ஊரையும் சுத்தி பார்த்து ரெண்டு பேரும் பேச வேண்டியதை பேசிப்போம்.. இதுக்கு ஏன் ப்பா மூஞ்ச தூக்கி வச்சிருக்க உனக்கு இந்த மூஞ்சி செட் ஆகல..” நமட்டு சிரிப்புடன் அவள் சொன்னதும் அவனும் சிரித்து விட்டான்..

 

மணியம்மை சகோதர்களை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தபோது மகனின் வீட்டை ஏக்கமாக பார்த்து விட்டு அவர்களோடு ஒன்றி விட்டார் அவர்..அச்சமயம் தனுஷ் வீட்டிற்குள் நுழைந்து கொண்டான்..

 

மேனேஜர் அறையில் அமர்ந்திருந்த இசைகவிக்கு ஓரிடத்தில் இருக்க முடியவில்லை..நகை கடையில் வேலைகள் நேர்த்தியாக நடந்தாலும் அதனை கண்காணிக்க வேண்டியது அவளது பணி அல்லவா அதனை சரியாக செய்ய வேண்டிய கடமை அவளுடையது ஆயிற்றே அதற்காகவே மேகநாதன் அவரின் வயதை காட்டி இசைகவிக்கு மேனேஜர் பொறுப்பை கொடுத்தார்..

 

மேனேஜர் அறையை விட்டு சுற்றி மேற்பார்வை இடுவதற்கு மெல்ல நடை போட்டு ஒவ்வொரு இடமாக பார்த்தாள்..

 

ஊழியர்களின் வேலை குறை கூறுவதற்கு இருக்கவில்லை.. அனைத்தும் நேர்த்தியாக இருந்தாலும் ஓரிடத்தில் அவள் பார்வை இடுங்கியது..

 

“ கணேஷ் சார்! ” நடுத்தர வயது மனிதர் கணேஷை அழைத்தாள் அவள்..“ சொல்லுங்க மேம் ” பணிவாக அவர் கேட்டார்..

 

“ இந்த பக்கம் ராகைல நிறைய எம்டி ஃபாக்ஸ் இருக்கு.. இதெல்லாம் அப்புறப்படுத்தி அதே நகை டிசைன் இல்ல புது டிசைன் நகைகளை வைக்கலாமே? ” அவரை அழுத்தமான பார்வையுடன் கண்டிக்கும் வகையில் அவள் கேட்க..அவரோ “ அது மேம்..அந்த இடத்துல புது டிசைன் வகை நகைகளை வைக்கலாம்னு இருக்கோம்..அந்த வகை டிசைன் நகைகள் உருவாக்குறதுக்கு சில காலம் தாமதம் ஆகலாம் அதுனாலதான்..” அவர் பேச்சை இழுக்க...

 

“ ஓகே என்னால புரிஞ்சிக்க முடியுது பட் நியூ டிசைன் ஜுவல்லரிஸ் வரும் வரைக்கும் ஸ்டாக்ல இருக்குற வேறு நகைகளை இங்க வச்சி ராக்கையை நிறப்பிடுங்க கணேஷ் சார் இதுக்கு பிறகு இந்த மாதிரி நடக்கக்கூடாது..” என்று அவளின் ஆளுமை நிறைந்த குரலில் சொன்னதும்..“ ஷுவர் மேம்..” அவர் சொல்ல , “ ம்ம்..” என்றவள் முன்னால் திரும்பியதும் அவள் முன்பு சிவப்பு நிற ரோஜா பூங்கொத்துடன் கையில் வைத்துக்கொண்டு புன்னகை முகமாக ஒரு ஆடவன் நின்றிருந்தான்..அவள் உதடுகளோ “ ஆரியன் ” என்ற பெயரை உச்சரித்தது..

 

 

தொடரும்.....

 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 8 months ago
Posts: 142
 

@vsv4 சூப்பர் 👌🥰🥰


   
ReplyQuote

You cannot copy content of this page