All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

முத்தம் 5

 

VSV 3 – முத்தம் ஒன்றை பிச்சு தா
(@vsv3)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

ரஞ்சனாவின் இல்லத்தில். உறக்கத்தில் இருந்து எழுந்த ஆராதனா "அம்மா? அம்மா? எங்க இருக்கீங்க மா?" என மீண்டும் துடித்தாள். அவளின் சத்தம் கேட்டு எழுந்து வந்த ரஞ்சனா "ஆரு! என்னமா? அம்மா இங்க தான் இருக்கேன். ஒன்னும் இல்ல வா. வந்து உட்கார், தண்ணி குடி." என அவளை சமநிலை படுத்த "ஆர்யன் மாமா. அம்மா நா ஆர்யன் மாமாவ பார்த்தேன்." என்றதும் ரஞ்சனா மகிழ்ந்தார் "ஆர்யனை பார்த்தாச்சா? அவன்கிட்ட நீ உன் ஆசைய சொன்னியா? அவங்க வீட்டுக்கு எப்ப போகலாம்?" என சந்தோஷத்தில் கேள்வியை அடுக்கும் தன் ஒரே உறவை பார்த்தவள் அழுகையை கட்டுபடுத்தி "அம்மா..ஆ..ஆர்யன் வீட்ல வேற பொண்ணு பார்த்துட்டாங்க. ஜெயவள்ளி அத்த என் அம்மா நந்தகிக்கு கொடுத்த வாக்கை காப்பாத்தவே இல்ல. மொத்தமா மறந்துட்டாங்க." என்றதும் கோபத்தில் ரஞ்சனா "என்ன??? சத்தியம் செய்தவளே சத்தியத்தை மறந்துட்டாளா? அவ வீடு உனக்கு தெரியும் தான?" உடனே 'ஆம்' என தலையை ஆட்ட "அப்போ வா. நம்ம இப்ப அங்க போறோம். நியாயத்தை கேக்குறோம். உனக்கு நடந்தது ஞாபகம் இருக்குல. உனக்கு உன்னுடைய ஆர்யன் தேவை. நா உனக்கு ஆர்யனை திருமணம் செய்து வைக்கிறேன்." என்றதோடு தன் மகளை தனது நான்கு சக்கர வாகனத்தில் ஜெயவள்ளியின் வீட்டிற்கு சென்றார்கள். வாகனம் வந்த சத்தத்தை கேட்ட ஜெயவள்ளி 'யாரு அது?' என்ற சந்தேகத்தோடு வாசல் வர வாகனத்தை விட்டு வெளிவந்த ஆராதனாவை பார்த்தவர் "ஆராதனா? வா உள்ள" என சாதாரணமாக அழைத்தார். இதை கேட்டதும் ரஞ்சனா கதவை திறந்து வெளிவந்ததும் ஜெயவள்ளியை பார்த்து "நீங்க அதிரூபனுடைய ஹேச் ஓ டி தான? இவங்க தான் நந்தகியோட அக்காவா? சொல்லு ஆராதனா?" என பார்வை ரஞ்சனாவை நோக்கி இருந்தாலும், கேள்வி என்னவோ ஆராதனாவிற்கு தான். "நா நந்தகியுடைய அக்காவா இருந்தா என்ன உன் பையன் வேலை பார்க்கும் இடத்துல ஆசிரியரா இருந்தா என்ன? உன்கிட்ட நா கேக்குறேன், நந்தகி ஆர்யனை என் பொண்ணுக்கு கட்டிக்கொடுனு கேட்டாலா? சொல்லு டி!" என்றார் கோபமாக. மேலும் தொடர்ந்து "சரி வாக்கு கொடுத்த, நா அதை இல்லைனு சொல்லமாட்டேன். ஆனா, அந்த வாக்கை எப்படி நீ மறக்கலாம்? தெரியாமல் தான் கேக்குறேன் என் தங்கச்சிகிட்ட ஒரு வார்த்தை பேசுறது வாக்குக்கு சமம். அப்பாவிபொண்ணு டி அவ. அப்படிப்பட்ட அவகிட்ட நீ வாக்கு கொடுத்திருக்க. அந்த வாக்கு படி இதோ, என் பொண்ணு ஆரு அவ காதலிச்சு கல்யாணம் பண்ண காதலனை விட்டுட்டு உன் பையனுக்கு கழுத நீட்ட வந்திருக்கா. அதோட, இவ மணக்கோலத்துல நந்தகி முன்ன நின்னது.. என் தங்கச்சிக்கு துரோகமாக தோணுச்சு ஏன் தெரியுமா? உன் சத்தியம் தான்! அதுல உடைஞ்சு போனவள். எங்க நாலபின்ன நீ அவ பொண்ணை உன் பையனுக்கு கேக்க வரும் போது, சத்தியத்தை மீறிட்டோமே னு நினைச்சவள் தூக்கு மாட்டி தொங்குனா. இப்படி சத்தியத்தின் பெயர்ல ஒரு கொலை பண்ணிட்டு. இவ வாழ்க்கையை கெடுத்து, எங்க நிம்மதியை கெடுத்து உன் பையனுக்கு நீ நல்ல வாழ்க்கை அமைச்சு தர வேற இடம் பார்த்திருக்க." என்ற ரஞ்சனாவின் வார்த்தைகள் ஜெயவள்ளி குத்தியது, குற்றஉணர்ச்சியில் தள்ளியது. "நா அம்மா இறந்த பிறகு ஊருக்கு போகவே இல்ல." என்றதும் ரஞ்சனாவின் கோபம் எல்லைமீறியது "என்ன காரணம் இது? சத்தியம் மறந்து போச்சுனு ஒத்துக்கல. ஆனா காரணம் மட்டும் நல்லா வைச்சிருக்க? இதோ பார், சத்தியம் பண்ணி கொடு ஆராதனாவுக்கு தான் அதிரூபன்.." ஆராதனா "இல்ல ஆர்யன் மாமா. ஆர்யன் மாமா என் உசுரு. அதனால, நா ஆர்யன் மாமாவ திருமணம் செஞ்சிருப்பேன்." என்றதும் ஜெயவள்ளி குழம்பி போனார். "சரி, நா சத்தியத்தை மீறவே மாட்டேன். ஆ..அது வந்து என் பையனுக்கு நா ஆராதனாவ கட்டி வைக்கிறேன்." என்றதும் ரஞ்சனாவின் வண்டியில் இருவரும் வீட்டிற்கு சென்றார்கள். 

 

ரஞ்சனாவின் வாகனம் வெளியே சென்றதும் வைனவேந்தன் மனைவியின் பக்கம் வந்து "என்னாச்சு ஜெயா?" என்றதும் அவர் அழத்தொடங்கினார். "சரி வா உள்ள போய் பேசலாம்." என தன்னவளை தங்களுடைய அறையில் அமரவைத்து தண்ணீரை கொடுக்கவும் அவசரஅவசரமாக விழுங்கியவர். இதழை சேலையில் துடைத்து விட்டு அவரிடம் "என்னங்க. அந்த ஆராதனா நந்தகி பொண்ணு..அவ அம்மாவுக்கு நா கொடுத்த சத்தியத்தின் படி அவ வாழ்ந்து வந்திருக்கா. ஆராதனா வேற ஒரு பையனோடு திருமண கோலத்தில் வந்து நின்னதும் துடிச்சு போய் தூக்குல தொங்கி இருக்கா. அதுல இருந்து அவ பெரியம்மா வீட்ல தான் இருந்திருக்கா. எல்லாத்தையும் அவ பெரியம்மா ரஞ்சனா தெரிஞ்சதும். இப்ப, நம்ம பையனுக்கு திருமணம் செய்து வைக்க சொல்லுறாங்க. என்னங்க..ஆனா எனக்கு இப்ப ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. ஒரு விஷயம் மட்டும் பிடிபடவில்ல. ஆர்யன் மாமா ஆர்யன் மாமானு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுறா அந்த ஆர்யன் யாரு?" என இறுதியாக தன்னவள் பேசியதை கேட்டதும் விழிகளில் தட்டச்சு அடித்தவர் தன்னை சமன் செய்து கொண்டு "நீ தூங்கி ரெஸ் எடு. ஏற்கனவே, ரொம்ப டெம்டா இருக்க. படுத்து தூங்கு. நா சம்மந்திகிட்ட பேச வேண்டியது இருக்கு." என்றதோடு அவ்விடம் விட்டு சென்றார். 'என்ன இது? கூல் டவுன் வைனவேந்தன். இப்போதைக்கு சமாளிச்சாச்சு. சீக்கிரம் சானக்கியாவ அதிக்கு கல்யாணம் செஞ்சு வைச்சிடலாம்.' என்றதோடு தனது நான்கு சக்கர வாகனத்தில் பறந்தார்.

 

நீண்ட நேரமாக புத்தகத்தில் மூழ்கியிருந்த சானக்கியா மணியை பார்க்க கடிகாரம் மூன்று ஐம்பாத இருக்கவும். மோனிகா அழைக்கவும் சரியாக இருந்தது. "ஐயையோ! டயம் கீப்அப் பண்ண ஆலாரம் வைக்க மறந்துட்டேன். குளிக்கணுமா?" என தனக்கு தானே பேசியவள். "வேணாம். அப்படி குளிக்காம போனா..எப்படி ரொமன்ஸ் நடக்கும்? அதனால், புடவை கட்டி பூ வைச்சு போறேன். என் ரூபனை பார்த்து என்னை ஏன் இப்படி அதிகாரம் பண்ணுறனு சட்டைய பிடிச்சு அவனுடைய கழுத்து வளைவில் கைகளை கோர்த்து அப்படியே கண்ணுள்ளே கண்ணு வைச்சு கண்ணில் மட்டும் கற்பு போயாச்சுனு டுயட் பாடுவோம். இவ ஒரு தொல்லை. சானக்கியா சானக்கியா சீக்கிரம் கிளம்பு." என கால்களில் சக்கரங்கள் கட்டிய படி ஓடினாள். சானக்கியா அலைபேசியை எடுக்காமல் இருந்தனால் தோழியவள் நேரடியாக அதிரூபனின் வீட்டிற்கு வந்தடைந்தாள். அவளை பார்த்த மாதங்கி "யார் நீ?" என கேள்வி எழுப்பினாள் "நா அதிரூபன் சார்கிட்ட படிக்க வந்திருக்கேன். என் பிரண்ட் சானக்கியா வந்துட்டுடாலா?" என மாதங்கியிடம் பேச மாதங்கியோ "ஓ! படிக்க வந்திருக்கியா? யூ நோ நீ என் அண்ணியுடைய தோழி னு நா உன்கிட்ட இத சொல்லுறேன். எனக்கும் உன்ன மாதிரி கிலோஸ் பிரண்ட் இருந்தா. லைக் அண்ணியும் நீயும் மாதிரி நாங்க எப்பையும் ஒன்னாவே இருந்தோம். எங்க காலேஜ் டேஸ் எல்லாம் நெனச்சு பார்த்தாலே செம்மையா இருக்கும்." என மாதங்கியிடம் பேச்சு வார்த்தைகளை நடத்தி வந்தாள் மோனிகா. அதிரூபன் தன் அறையைவிட்டு வெளிவந்தவன் கீழே பார்க்க மோனிகா தன் தங்கையிடம் பேசுவதை கவனித்தவன் அப்போது தான் நினைத்தான். 'ஐயோ? சானக்கியாவும் மோனிகாவும் வந்துட்டாங்க. இப்படி டிரவுசரோட போனா..நா இவங்களை கூப்பிட சொன்னதை சுத்தமா மறந்துட்டேன்னு தெரிஞ்சுடும். உள்ளே போய் ஃபாமலா டிரஸ் பண்ணிட்டு போவோம். அதுவரை இவங்க மாதுவோட பேசிட்டு வரது சரி.' என்றதோடு அறையினுள் புகுந்து கொண்டான். அதிரூபன் உடையை மாற்றிக்கொண்டு கண்ணாடியில் "ஏன் இவனே! இன்னைக்கி இப்ப நீ ஒரு டீச்சர். சோ, அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ." எங்கே சானக்கியாவை பார்த்தால்..அவனது மனம் அவளது அழகை ரசிக்க சொல்லும் ஆதலால், அதிரூபன் தன் மனசாட்சியிடம் பேசி முடிக்க ரஞ்சனாவிடம் இருந்து அழைப்பு வர "மேம்? வாட்ஸ் தி ரிசன் ஃபார் காலிங் மி மேம்? இஸ் தேர் எனி இன்பாட்டன்ட்?" அந்த பக்கம் ரஞ்சனா "........" அழைப்பு துண்டிக்கபட்டது. 

 

 

சரியாக சானக்கியாவும் வந்து மாதங்கியிடம் அமர அதிரூபன் தோரனையாக கம்பீர நடையில் நடந்து வந்தவன். இருவரிடமும் "கம் வித் மி." என அவனுடைய புத்தகங்கள் நிறைந்த பாட விலாச அறையினுள் இருந்த நாற்காலியில் அமர அவர்களும் அமர்ந்தார்கள். அதிரூபன் தன் கடமையை ஆற்ற தொடங்கினான். "நீங்க இரண்டு பேரும் இந்த ஆங்கில மொழி பத்தி என்ன நினைக்கிறீங்க? சி பி பிராங்க்(உண்மையா) இருங்க. சொல்லுங்க" என அதிரூபன் ஒரு முறை நடத்த ஆரம்பித்துவிட்டான் என்றால் ஆங்கில மொழியில் மட்டுமே பேசுவான். முதலில் பேசியது மோனிகா "இங்கிலிஸ், இஸ் எ லாங்குவேஜ். ஆனா.. தேவை அதிகமா இருக்கு சார். பேசிக் நல்லா தெரியும் சார்." என்றாள் திடமான குரலில். சானக்கியா "இந்த இங்கிலிஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு கதையும் வெவ்வேறா இருந்தது. கிரீக் மித்தாக இருக்கும். சொசியல் ஹிஸ்டிரியா இருக்கட்டும் எல்லாம் படிக்கும் முன்ன பயமா இருந்தது. பட், படிச்ச பின்ன ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க கேள்வி கேக்கலாம் சார்." என இருவரின் பதிலை மையமாக வைத்து கேள்வி கேட்க ஆரம்பித்தான். "மோனிகா! இந்த கேள்வி உனக்காக இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களை என்னவென்று அழைப்பார்கள்?" என வினாவை ஆங்கிலத்தை கேட்கவும் மோனிகா சிறிதும் யோசனை செய்யாமல் "ஐபீரியன்ஸ். அவங்க தான் இங்கிலாந்துல வாழ்ந்தாங்க. அதோட, இந்த ஐபீரியனஸ்க்கு கழுத்தெழுப்பு பெரியாத இருக்கும்." என தெளிவாக பதில் கூறினாள். "சூப்பர்! சானக்கியா திஸ் இஸ் பார் யூ. இங்கிலாந்தில் வாழ்ந்த நான்கு காட்டுவாசிகள் யார்?" என சானக்கியா இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. சற்று தாமதம் செய்ய அதிரூபன் "என்ன யோசனை இது எல்லாம் யூ.ஜில படிச்சது தானே? என்ன அந்த செமஸ்டர்ல படிச்சதும் இதெலாம் அழிஞ்சு போகும்னா. ஏன் நீயெலாம் முனைவர் பட்டம் வாங்க இங்க வந்திருக்க? தெரியாது தானே?" என ஆங்கிலத்தில் அவளை வருத்தெடுக்க "சார்.. எனக்கு ஸ்டோன்ஹேஞ்ச் பத்தி தெரியும்." என முன்னின்று பேச "நா கேட்ட கேள்விக்கு பதில் வரவே இல்லை. இதுல பதுசா இதிலிருந்து கேள்வி கேளுனு சொல்றியா? சானக்கியா, இப்ப நா உன் ரூபன் கிடையாது. உனக்கு பாடம் நடத்தும் ஆசிரியர். வேஸ்ட் ஆப் டயம். உனக்கு நா ஒரு வொர்க் தரேன். நாலு காட்டுவாசிகள் பெயர் சொல்லமாட்டேன். நீ அவங்களை பத்தி ஒரு செமினார் வியாழகிழமை எடுக்கணும்." என அதிரூபன் கண்டிப்புடன் பேச "சார்!!! மே ஐ கம் இன்?" என்ற கேள்வியுடன் உள்ளே வந்தாள் ஆராதனா. "இனி, ஆராதனாவும் உங்களோடு சேர்ந்து தான் ரிசர்ஸ் பண்ணுவா. ஆராதனா, இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த நான்கு காட்டுவாசிகள் யார்?" என சானக்கியாவிடம் கேட்ட கேள்வியை ஆராதனாவை பார்த்து கேட்க "ஆங்கில்ஸ், செக்ஸான்ஸ், ஜூட்ஸ் கடைசியாக பிட்ஸ். இவங்க நாலு இணத்தில் பெரும்பாலும் ஆங்கில்ஸ், செக்ஸான் அப்புறம் ஜூட்ஸ் பத்தி மட்டுமே பிரிட்டிஷ் அவங்க புத்தகங்களில் சொல்லிருக்காங்க." என மோனிகாவை விட ஒரு படி மேல் தெளிவாக அவளது விடையை அங்கிருந்த கரும்பலகையில் எழுதி போட்டபடி பதில் சொல்ல அதிரூபன் கைத்தட்டினான். இதை பார்த்த சானக்கியா 'என் ரூபன் நல்லா படிக்குறா இவள பாராட்டுற. ஆனா.. எனக்கு என்னவோ இவ உன்னை வலைச்சு போட்டா. இரு டி ஆராதனா நா என் ஆட்டத்தை காட்டுறேன்.' என சானக்கியா பொறாமையுடன் மனதில் ஆராதனாவை பார்வையால் எறித்தாள்.

 

இச்சு தா💋 கொஞ்சம் பிச்சு தா😘


   
ReplyQuote

You cannot copy content of this page