About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
சில்லாஞ்சிருக்கியே - 16
மந்திரமூர்த்தியைக் காவலதிகாரிகள் கைது செய்து அழைத்துக் கொண்டு செல்லப் போக அவரோ,
“நான் என் மனைவி கிட்டயும் அந்த யாஷ் கிட்டயும் பேசணும்” என்று கூற அனுமதிக்கபட்டார்.
முதலில் மஞ்சுளாவை நோக்கிச் செல்ல அவரோ, “தயவு செய்து கிட்ட வராத… உன் மூஞ்சில முழிக்குறதையே பாவமா நினைக்குறேன். இப்படி கூடப் பொறந்தவனை கொன்னுட்டு இவ்ளோ நாள் எப்படி உன்னால நிம்மதியா நடமாட முடியுது. உன்கூட இத்தனை வருஷம் வாழ்ந்துருகேன்னு நினைக்கும்போது அருவெறுப்பா இருக்கு. நீ கட்டுன தாலி கூட என் கழுத்துல இருக்கக் கூடாது” என்று கூறியவர் தாலியை கழட்டி அவர் முகத்திலேயே விட்டெறிந்தார்.
“பொண்டாட்டி நம்மள பார்க்க வருவான்னு எல்லாம் கனவுல கூட நினைச்சுராத. நீ இருக்குற பக்கம் தலைவச்சுக் கூடப் படுக்கமாட்டேன்” என்று வெறுப்பைக் காரி உமிழ்ந்தவர் திரும்பி நின்றுக் கொண்டார்.
மனையாளின் பேச்சில் அவரின் மனது வெதும்பியது.
அடுத்ததாக யாஷிடம் வந்தவர், “ப்ளீஸ் உயிர் பிச்சை போடு. மாத்து மருந்து ஒன்னே ஒன்னு போடல தானே… அதை மட்டும் போட்டு விடு ப்ளீஸ்” என்று கெஞ்ச அவனோ,
“இப்படி தானே அன்னைக்கு என் அப்பா உயிருக்காக உன்கிட்ட கெஞ்சுருப்பார். அப்போ நீ மனசு இறங்குனியா?” என்று கேட்க,
“தப்பு தான் தப்பு தான். உயிரோட மதிப்பு தெரியாம தப்பு பண்ணிட்டேன். ப்ளீஸ் என்னைக் காப்பாத்து” என்று கதற,
“என்னை என்ன உன்னை மாதிரி உயிரோட மதிப்பு தெரியாதவன்னு நினைச்சியா. உனக்கு விஷ ஊசி போட்டுருந்தா உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிருக்கும். நான் போட்டது விஷ ஊசியே இல்ல.” என்றிட அவரோ அவன் கால்களில் விழுக போக,
“இருக்குற கோபத்துக்கு என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. அன்னைக்கு எங்க அப்பாவைக் கொன்னு என்னையும் என் அம்மாவையும் தவிக்க விட்டல. இனிமே பொண்டாட்டி பிள்ளைங்க இல்லாம ஜெயில்ல தனியா கிட… அப்போ தான் புத்தி வரும்” என்றவன் திரும்பிப் பார்க்காமல் செல்ல அவரின் கண்கள் நேத்திரனைக் கண்டது. அவனோ அவரைச் சிறிதும் கண்டு கொள்ளவில்லை.
பிறகு போலிஸ் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். விறுவிறுவென வந்த யாஷோ காரினுள் அமர்ந்து குலுங்கி அழுதான். அதனைக் கண்ட தமிழோ ஓடிச் சென்று அவனை மடியில் சாய்த்து,
“ஒண்ணுமில்ல… அழாதீங்க ப்ளீஸ். உங்க அப்பா சாவுக்கு நியாயம் வாங்கி கொடுத்தாச்சு, இது நீங்க சந்தோஷப் பட வேண்டிய நேரம். ப்ளீஸ் அழாதீங்க” என்று முதுகினை நீவி விட, அவனோ அவளின் இடுப்பைக் கட்டிக் கொண்டு சிறுபிள்ளை போன்று அழுதான். கொஞ்சம் நேரம் அழட்டும் என்று விட்டாள். சற்று நேரத்தில் அழுகையை நிறுத்தியவன் நிமிர்ந்து தமிழின் முகத்தை நோக்கினான்.
“சாரி ஜோ. சின்னதா நம்மள மீறி விஷயம் வெளிய தெரிஞ்சா கூட மொத்த திட்டமும் வீணா போயிடும். அதனால தான் உன்கிட்டயும் நடிக்க வேண்டியதாப் போச்சு. அதுமட்டுமில்ல இப்போ உன் முன்னாடி நிக்குற யாஷை நீ விரும்பனும்னு ஆசைப்பட்டேன். அதனால தான் நடிச்சேன். என்னை மன்னிச்சுரு” என்க அவளோ,
“கோபம் இருக்கு தான். ஆனா காட்ட வேண்டிய நேரத்துல காட்டிகுறேன். இப்போ வீட்டுக்குப் போலாம்” என்றிட அவள் கூற்றில் சிரித்தவன்,
“ஒரு நிமிஷம்” என்று விட்டு அலைபேசியை எடுத்தவன் தனது அன்னை கிளாராவுக்கு காணொளி அழைப்பு விடுத்தான். அழைப்பு ஏற்கப்பட்டதும்,
“அம்மா உன் பையன் ஜெயிச்சுட்டேன்” என்று பெருமையாகக் கூற அந்த அமெரிக்க பெண்மணி கண் கலங்கினார். அவருக்கும் ஹேசல் விழிகள். அதனால் தான் யாஷுக்கும் ஹேசல் விழிகள்.
“எனக்குத் தெரியும் யாஷ். நீ கண்டிப்பா போன விஷயத்தை நல்லபடியா முடிப்பன்னு. இருந்தாலும் என் பயம் உனக்குப் புரியாது” என்று பேச,
“மாம்… இனிமே எந்தப் பயமும் இல்ல. அப்புறம் உன்னோட மருமக கிட்ட பேசுறியா?” என்றிட தமிழுக்கோ தூக்கி வாரிப்போட்டது.
“என்ன பண்றீங்க நீங்க?” என்று அவன் பயந்து கேட்க,
“ஹே ஜோ… அம்மாக்கு எல்லாமே தெரியும்” என்றபடி அலைபேசியை அவளிடம் கொடுக்க மாறிமாறி நலவிசாரிப்புகள் முடிய பிறகு,
“32 வருஷமா ஜோ ஜோ ஜோன்னு புலம்பாத நாள் இல்ல மா… நான் கூடச் சொல்லுவேன். அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருகும்னு. ஆனா அவன் தான் ரொம்ப ஹோப்போட இருந்தான். கடைசில எல்லாமே நல்லபடியா முடிஞ்சுது. ரொம்ப அழகா இருக்கமா. உன்னை நேர்ல பார்க்க ஆசைப்படுறேன் அவன் கூட நீ இங்க வரணும் கண்டிப்பா. அப்போ தான் கல்யாணத்துக்கு ஒகே சொல்லுவேன்” என்று அவர் கூற,
“கண்டிப்பா வரேன் ஆண்டி” என்றாள்.
“அத்தைன்னு உரிமையா கூப்பிடு தமிழ்.” என்று அவர் கண்டிக்க,
“சரிங்க அத்தை” என்றாள் சிரித்தபடி. பிறகு அழைப்பு துண்டிக்கப்பட அங்கு நேத்திரனும் மஞ்சுளாவும் தயக்கமாக வந்து நின்றனர்.
மஞ்சுளாவோ, “எங்களை மன்னிச்சுரு பா யாஷ்.” என்க அதில் பதறியவன்,
“என்ன சித்தி நீங்க. அவர் செஞ்சதுக்கு நீங்க என்ன செய்வீங்க?” என்றான்.
“இல்ல யாஷ் ப்ரோ… எப்பேற்பட்ட துரோகம் இதெல்லாம். பெரியப்பா இல்லாம நீங்களும் பெரியம்மாவும் எவ்வளவு கஷ்டபட்டுருப்பீங்க. ஆனா இங்க நாங்க எதுவுமே தெரியாம சந்தோஷமா வாழ்ந்துருக்கோம்னு நினைக்கும்போது மனசுக்கு வருத்தமா இருக்கு.” என்க,
“தெரிஞ்சு செஞ்ச அந்த மனுஷனே நிம்மதியா இருக்காரு. நீங்க என்ன செய்வீங்க. விடு ப்ரோ. சித்தி நீங்களும் இனிமே வருத்தப்படாதீங்க.” என்க பிறகு அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். நேத்திரனோ,
“ப்ரோ அந்த ஆளு மேல எப்படி ப்ரோ டவுட் வந்துச்சு உங்களுக்கு” என்று கேட்க அவனோ,
“ஆக்சுவலி முதல் நாள் உங்க வீட்டுல நான் தங்கியிருந்தேன்ல அப்போ ஒரு விஷயம் நோட் பண்ணேன். அப்பா படத்துக்கு, தாத்தா படத்துக்குச் சித்தி பூஜை எல்லாம் பண்ணி பயபக்தியோட கும்பிட்டாங்க. ஆனா அவரு அந்தப் பக்கம் கண்டுக்க கூட இல்ல. அதை வச்சே எனக்கு டவுட் ஸ்டார்ட் ஆயிடுச்சு. அப்புறம் அவரோட ஆக்டிவிடிஸ் ஒவ்வொன்னையும் நோட் பண்ணி கடைசியா பிளானை போட்டுத் தூக்கியாச்சு.” என்றான்.
“பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்னு சும்மாவா சொலுவாங்க. இவர் எல்லாருக்கும் ஒரு பாடம். தப்பு செஞ்சி தெனாவெட்டா வாழலாம். ஆனா கண்டிப்பா அப்படியே இருந்துற முடியாது. ஒரு கட்டத்துல மாட்டித் தான் ஆகணும்” என்று மஞ்சுளா கூற யாஷோ அவரை ஆச்சர்யமாகப் பார்த்தான்.
“என்னப்பா அப்படி பார்க்குற?”
“இல்ல சித்தி பொதுவா கிராமத்துப் பொம்பளைங்க கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு வாழ்வாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன். ஆனா நீங்க கிரேட் சித்தி.” என்று அவன் கூற,
“அது கல்லான் ஆனாலும் கணவன் புல்லான் ஆனாலும் புருஷன். அதாவது படிக்கதவனா இருந்தாலும் படிச்சவனா இருந்தாலும் கணவன் கணவன் தான்னு பொருள். அதுகாக என்னைத் தப்பு செஞ்சாலும் அவனை அனுசரிச்சு போகணும்னு எந்த அவசியமும் இல்ல. நான் அந்தாளுக்கு பயந்தேன் தான். ஆனா அது அவர் மேல இருந்த மரியாதைல வந்தது. அவருக்கு மரியாதை ஒன்னு தான் கேடு” என்க தமிழோ,
“அத்தை… உனக்குள்ள இம்புட்டு அறிவா” என்று வியந்தாள். தேன்மொழியோ,
“உங்களை நான் டெரர் பீசுன்னு நினைச்சேன் அத்தை” என்று கூற,
“அப்போ இப்போ காமெடி பீஸ்னு சொல்றியா?” என்க,
“ஐய்யயோ இல்லைங்க அத்தை” என்று பயப்பட,
“டேய் நேத்திரா… எனக்குப் பயப்படவும் ஒரு ஜீவன் இருக்கு பாரேன்” என்க அவனோ சிரித்தான்.
“அவ எனக்கே பயப்படுவா” என்று கூற அதில் முறைத்தவள்,
“உங்க கிட்ட கூச்சம் தான் பட்டேன். பயப்பட ஒன்னும் செய்யல” என்றவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள, வெகுநாட்களுக்குப் பிறகு கல்லூரியில் பார்த்த தேன்மொழி அவனுக்குத் தெரிந்தாள்.
இவ்வாறாகப் பேசிச் சிரித்தபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
நேத்திரன், தேன்மொழி மற்றும் மஞ்சுளா நேத்திரனின் வீட்டிற்கு சென்றிட, தமிழும் யாஷும் அவரவர் வீட்டிற்கு செல்லும் பொருட்டு நடந்து வந்தனர். தமிழின் முகத்தில் இன்னுமே வாட்டம் காணப்பட்டது.
‘ச்ச ரொம்ப தான் அவளைக் கஷ்டப்படுத்திட்டோம். யாஷா ருத்திரனான்னு ரொம்பவே தவிச்சுருப்பா’ என்று நினைத்தவன் அவள் வீட்டிற்குள், அவள் நுழையப் போகும் சமயத்தில் தானும் நுழைந்து வேகமாகக் கதவை அடைத்துக் கொண்டான்.
“என்ன பண்ணுறீங்க நீங்க?” என்று அவள் கேட்க அவனோ,
“என்னலாமோ பண்ண ஆசை தான்” என்றான் கிறக்கமாய்.
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று முனுமுனுத்தவள் செல்லப் போக, அவளைச் செல்ல விடாமல் தடுத்தவன் அவளது முகத்தைத் தன் கைகளில் தாங்கினான். அவ்வளவு தான். தமிழின் கண்களில் கண்ணீர் ஆறு பெருக்கெடுத்து ஓடியது.
“ஹே சில்லு எதுக்கு அழுகுற சாரி நான் செஞ்சது தப்பு தான். எனக்குப் புரியுது”
“உங்களுக்குப் புரிஞ்சுருந்தா என்னை அப்படி தவிக்க விட்டுருப்பீங்களா எத்தனை நாள் நான் நைட்டு குற்றவுணர்வுல தூங்காம தவிச்சுருக்கேன் தெரியுமா. நான் ஏன் ரெண்டு பேரையும் விட முடியாம அவ்ளோ தவிச்சேன்னு இப்போ தான் எனக்குப் புரியுது. ஆனா உங்களுக்குத் தெரியும் தானே. தெரிஞ்சே நான் கஷ்டபடுறதை வேடிக்கை பார்த்தீங்க தானே” என்று கேவினாள்.
“அப்படி எல்லாம் இல்ல சில்லு. நீ இவ்ளோ வருத்தபடுவன்னு தெரியாது எனக்கு. சரி சர்ப்ரைசா இருக்கட்டுமேன்னு தான்…” என்று இழுக்க,
"வாயில நல்லா வருது” என்றாள். பிறகு அவனோ பட்டென அவளின் காலில் விழ,
“ஹே என்ன பண்றீங்க… எந்திரிங்க” என்றிட,
“இல்ல சில்லு. எனக்கு அப்போ புரியல. நீ கண்ணு கலங்க என்னைப் பார்க்கும்போது தான் உன்னை எவ்ளோ கஷ்டப்படுதியிருக்கேன்னு புரியுது. அப்படி செஞ்சுருக்கக் கூடாது. அட்லீஸ்ட் உன்கிட்ட மட்டுமாச்சு விஷயத்தைச் சொல்லிருக்கணும். சந்தோஷமா கேட்க வேண்டிய விஷயத்தைச் சங்கடத்தோட கேட்க வச்சுட்டேன் சாரி” என்று அவன் கூற அவன் மெய்யாகவே வருந்துவது அவளுக்கு நன்கு புரிந்தது.
“சரி பரவாயில்ல. முதல்ல எழுந்துறீங்க” என்று அவனைத் தூக்கி நிறுத்தினாள். அவன் கண்கள் கலங்கியிருந்தது. அதைக் கண்டதும்,
“ஐயோ என்ன நீங்க?” என்றவள் அவனது கண்ணீரை துடைத்து விட்டவள்,
“சரி விடுங்க நான் மறந்துட்டேன். யாஷும் எனக்கே ருத்திரனும் எனக்கே. போதுமா” என்றவள் அவனின் மூக்கை பிடித்து ஆட்டினாள்.
“நாளைக்கு பாஸ்போர்ட் அண்ட் விசா அப்ளை பண்ண போகணும்.” என்று அவன் கூற அவளோ,
“பாஸ்போர்ட் ஏற்கனவே வச்சுருக்கேன்” என்றிட அவன் முகத்திலோ ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது.
“தேங்க் காட். அப்போ விசா மட்டும் எடுத்தா போதுமா. ஒகே சீக்கிரம் எடுத்துறலாம். நாம அமெரிக்கா போயிட்டு அம்மாவைப் பார்த்துட்டு அப்புறம் அங்க ஒரு இடத்துக்குப் போறோம் அது உனக்கான சர்ப்ரைஸ். அப்புறம் அம்மாவோட இங்க ரிடர்ன் வந்து அப்பா சமாதி முன்னாடி கல்யாணம் ஓகேவா” என்றிட அவளோ,
“எல்லாமே ஒகே அந்த சர்ப்ரைஸ் மட்டும் சொல்லுங்களேன் ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்ச,
“கெஞ்சுனாலும் சரி கொஞ்சுனாலும் சரி சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ் தான்” என்றிட உதட்டைச் சுளித்துக் கொண்டாள்.
மறுநாளே சென்று விசா விண்ணப்பித்து வந்தனர். அதன் பிறகு தனது பெயரில் இருக்கும் சொத்துக்களில் தமிழின் நிலத்தை மட்டும் எடுத்துக் கொண்டவன் மற்ற அனைத்தையும் நேத்திரனின் பெயருக்கே மாற்றி எழுதினான். நேத்திரன் எவ்வளவு மறுத்துக் கூறியும் யாஷ் கேட்கவில்லை. எப்படியோ பத்து நாட்கள் கழிய விசாவும் வந்து சேர நேத்திரன், தேன்மொழி, மகிழ் மற்றும் மஞ்சுளாவிடம் விடைபெற்றுக் கொண்டு சென்னை பேருந்தில் ஏறியவர்கள் மறுநாள் சென்னையை அடைந்து அங்கிருந்து அமெரிக்காவிற்கு விமானம் ஏறினர்.
விமானப் பயணத்தை முதன்முறையாக அனுபவித்தாள் தமிழ். 22 மணி நேர பயணத்திற்கு பிறகு சான் ப்ராசிச்கொவில் இறங்கினர்.
யாஷின் வீடு அமைந்திருக்கும் இடம் கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ-வில். வீட்டு வாசலில் வந்து இறங்க க்லாராவோ ஆரத்தி தட்டுடன் தயாராக இருந்தார்.
“வா மா தமிழ்” என்று வரவேற்றவர் இரவருக்கும் ஆர்த்தி சுற்றிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார். அவர்களின் வீடு பக்கா தமிழர்கள் வீடு போன்று அவ்வளவு அழகாக இருந்தது.
கிளாரா தமிழை மிகவும் அன்பாகக் கவனித்துக் கொண்டார். பிறகு யாஷோ அவனது அறைக்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கு சுவர் முழுவதும் அவளது சிறு வயது புகைப்படங்கள் தான் இருந்தது. அதனைப் பார்த்துத் தமிழுக்கு கண்கள் கலங்கியது.
“அப்படி என்ன உங்களுக்கு என்னைப் பிடிச்சுருக்கு?” என்று கேட்க அவனோ,
“அதுவா அது…” என்று ஏதோ சொல்ல வருவது போல வந்து, “பிடிச்சுருக்கு… ரொம்ப பிடிச்சுருக்கு. அவ்ளோ தான். காரணம் எல்லாம் தெரியலை” என்றான். அவனின் அன்பில் நெகிழ்ந்தாள் பெண்ணவள். அவளை இறுக்கமாக அணைத்தவனோ,
“நீ என் வீட்டுல என் ரூம்ல இருக்க சில்லு. என்னால நம்பவே முடியல” என்றான் மகிழ்ச்சியாக. பிறகு விடுவித்தவன்,
“சரி ஒகே சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா நாம ஒரு இடத்துக்குப் போகணும்” என்றவன் கண்ணடித்துவிட்டு சென்றான்.
‘அப்படி என்ன சர்ப்ரைஸா இருக்கும்’ என்று யோசித்தவள் பிறகு தயாராகி வந்தாள். மூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தனர். வந்ததும் அவளின் கண்களைத் துணிக் கொண்டு கட்டியவன் அவளைக் கை பிடித்து மெதுவாக மாலை உச்சி போன்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
“கட்டை அவுத்தா இடத்தை ரசிச்சுட்டே வருவேன்ல” என்று அவள் கேட்க
அவனோ, “அதெல்லாம் அப்புறம் ரசிச்சுக்கலாம்’ என்றவன் சிறிது தூரம் அவ்வாறே அவளை அழைத்து வந்தான். வர வேண்டிய இடம் வந்ததும் அவளை அமர வைத்தவன் அவளருகில் தானும் அமர்ந்தான். அவளின் கண்களில் கட்டியிருந்த துணியைக் கழட்டியவன் அவள் தலையைத் திருப்பிப் பார்க்காதவாறு பிடித்துக் கொள்ள அவளோ,
“என்ன தான் செய்யுறீங்க?” என்று சிணுங்கினாள். அவளுக்கோ ஆர்வம் தாங்கவில்லை. அவளின் கண்களையே அவன் ஆழ்ந்து பார்க்க வழக்கம்போல அவனது பார்வை வீச்சை தாங்க முடியாமல் அவளது முகம் வெட்கி சிவந்தது. அவளின் முகத்தில் குடியேறிய சிவப்பை பார்த்தவன்,
“நௌ இட்ஸ் டைம் டு ப்ரேக் தி சர்ப்ரைஸ்” என்றவன் அவளின் தலையை மெல்ல திருப்பி அந்தக் காட்சியைப் பார்க்கச் செய்தான். பார்த்தவளின் விழிகள் வெகுவான ஆச்சர்யத்தில் விரிந்தன. அவர்கள் வந்திருந்த இடம் “யோஸ்மைட் பையர் பால்ஸ் (Yosemite Fire Falls). இங்கு சூரியன் அஸ்தமன நேரத்தில் சூரியனின் கதிர்கள் அருவியோடு உருகி ஓடுவது போன்று காட்சி தரும். இயற்கையின் பிரம்மிப்புகளில் இதுவும் ஒன்று. அதனை இமைக்க மறந்து அவள் பார்க்க
“உதிக்கும் சூரியனும்
உருகவிட்டதோ தனது செந்நிறத்தை
உன் வெட்கத்தின் செம்மையில்
உஷ்ணம் கொண்டு“ என்ற வரிகளைக் கூறியவன்,
“ப்ரூவ் பண்ணிட்டேன் மேடம். போதுமா?” என்றிட அவளுக்கோ அவனை நினைத்துச் சொல்லவியலா அளவிற்கு சந்தோஷம் ஏற்பட்டது. தான் சாதாரணமாகக் கூறிய ஒரு வார்த்தைக்காக இந்த அளவிற்கு மெனக்கிட்டு தன்னை அழைத்து வருவான் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை. காற்றுக் கூடப் புகாத அளவிற்கு தன்னவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
“இப்போ என்னைக் கல்யாணம் பண்ணிபீங்களா மேடம்” என்று அவன் கேட்க அவளோ,
“இப்போவே கூடக் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றாள்.
“பண்ணிட்டா போச்சு” என்றவன் தனது சட்டை பையினுள் வைத்திருந்த ஜோ டாலர் செயினை எடுத்து அவளுக்கு அணிவித்தான். இன்று முழுவதும் பெண்ணவளை சந்தோஷத்தில் திளைக்க விடுவதே தலையாயக் கடமையாக யாஷ் நினைத்திருந்தான் போலும். அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் சென்றது. தனது மகிழ்ச்சியை ஆடவனின் இதழ்களில் பொருத்தி அவன் அன்று கூறியது போலவே முத்தம் கொடுத்தவள் பின்பு விலகி,
“இந்தக் கிஸ் எப்படி?” என்றாள் புருவம் உயர்த்தி.
“முந்திக்கு பரவாயில்ல. ஆனா இன்னும் ட்ரைனிங் வேணும் போல. கொடுத்துறலாம்” என்றவன் கண்களைச் சுருக்கி சிரிக்க அதில் தன்னை தொலைத்தவள்,
“பூனை கண்ணா” என்று கூறி அவனது விழிகளில் இதழ் பதித்தாள். பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்தனர். அடுத்த நாள் வீட்டில் க்லாராவுடன் நேரத்தைச் செலவிட்டவர்கள் அதன் பின் மறுநாள் மூவரும் இந்தியாவிற்கு விமானம் ஏறினர்.
தொடரும்...
Latest Post: வாகை சூடவா ரிவ்யூ Our newest member: Sahithya varun Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page