About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
தன் கையில் இருந்த மங்கலநாணைப் பார்த்து விட்டுத் தன் அருகில் இருந்த மங்கையைப் பார்த்துப் புன்னகை உதிர்த்தான் திவ்யன்.
ஆம்! அந்த மண்டபம் முழுவதும் மங்கல வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருக்கத் திவ்யனும், பிரஹாசினியும் தங்களது இரு குடும்பத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தங்கள் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கப் போகும் நன்னாளும், தருணமும் தான் அது!
தன்னவளை ரசிக்கும் வேலையில் பிசியாக இருந்த தமையனைப் பிரஹாசினிக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஆரவியோ,”அண்ணா! இப்படியே தாலியைக் கையில் வச்சிட்டு நாள் முழுசும் பார்த்துக்கிட்டே இருக்கப் போறீங்களா என்ன? அதைச் சீக்கிரம் அண்ணியோட கழுத்தில் கட்டுங்க!” என்று அவனுக்கு அறிவுறுத்தினாள்.
அதைக் கேட்டவுடன் அவளையும், தன்னைப் புன்னகையுடன் ஏறிட்டுக் கொண்டிருந்த பிரஹாசினியும் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்த்து விட்டுக்,”கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” என்ற ஐயரின் வார்த்தைகளுக்கு இணங்க, மங்கல வாத்தியங்கள் முழங்கப் பிரஹாசினியின் கழுத்தில் மங்கலநாணைப் பூட்டினான் திவ்யன்.
அதன் பின்னர், தனது நாத்தனார் கடமையைச் செய்யும் விதமாக மீதமிருந்த இரண்டு முடிச்சுக்களைப் போட்டு விட்டாள் ஆரவி.
அதைக் கண்டு மஞ்சள் அரிசி மற்றும் பூக்களைத் தூவுவதன் மூலமாக அங்கிருந்த அனைவரும் திவ்யனையும், பிரஹாசினியையும் ஆசீர்வதித்தார்கள்.
அதன் பின்னர், தனது நெற்றியில் குங்குமம் வைத்து விட்ட திவ்யனைக் நேசம் பொதிந்த பார்வையுடன் ஏறிட்டாள் பிரஹாசினி.
அவளுக்கு ஒரு கண் சிமிட்டலைப் பதிலாகக் கொடுத்தான் திவ்யன்.
“வாழ்த்துகள் அண்ணா, அண்ணி!” என்று உற்சாகமாக உரைத்தாள் ஆரவி.
தனது வாழ்த்தையும் அவர்களுக்குத் தெரிவித்தான் ரஞ்சித்.
மணமகனுக்கு கழுத்துச் சங்கிலி மற்றும் கைச்சங்கிலியைப் போட்டு விடும் சடங்கைப் புன்னகையுடன் செய்து முடித்தான் நீரஜ்.
திவ்யன்,“இதெல்லாம் எதுக்குங்க?”
“இது எங்களோட முறை மாப்பிள்ளை. நீங்க ஏத்துக்கிட்டுத் தான் ஆகனும்” என்றான் நீரஜ்.
அதைப் பார்த்து மனம் நிறைந்து போயிற்று மகுடபதிக்கும், சோமசுந்தரிக்கும்.
அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டுத், தனது கணவனுடன் சேர்ந்து தன் பெரியப்பா, பெரியம்மாவிடம் ஆசி வாங்கிய பிரஹாசினியோ,”எனக்கு என் அப்பா, அம்மாவோட முகங்கள் எல்லாம் ஞாபகமே இல்லை. அப்படி எனக்கு அப்பா, அம்மான்னா அது நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான். என்னை அந்தளவுக்கு உங்க சொந்தப் பொண்ணு மாதிரி வளர்த்து இப்போ ஊரே மெச்சுற மாதிரி இப்படிக் கல்யாணமும் செய்து வச்சிருக்கீங்க! அதுக்கு ரொம்ப நன்றி” என்று அவர்களிடம் கண்ணீர் பொங்க உணர்வுப்பூர்வமாகத் தனது நன்றியைத் தெரிவித்தாள்.
உடனே,”நாங்க உன் அப்பா, அம்மான்னு தானே நீ சொன்ன! அப்பறம் எதுக்கு எங்களுக்குத் தாங்க்ஸ் சொல்லிட்டு இருக்கிற! நீ எப்பவும் சந்தோஷமாக இருக்கனும்!” என்று அவளுக்கும், திவ்யனுக்கும் ஆசி வழங்கினர் விருச்சிகன் மற்றும் உமாராணி.
ஆனால் அந்தத் திருமணத்திற்கு வந்திருந்த உமாராணியின் உறவினர்களோ, இவ்வளவு வருடங்களாகப் பிரஹாசினியை வளர்த்தது மட்டுமின்றி இப்போது அவளுக்குக் கண்ணுக்கு நிறைவாகத் திருமணமும் செய்து வைத்திருப்பதை எண்ணி ஆச்சரியம் அடைந்தனர் என்றால், விருச்சிகனின் சொந்தங்களின் வயிறோ அடுப்பில்லாமல், விறகில்லாமல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
அதுவும், தானும், தன்னுடைய பசங்களும் பிரஹாசினியின் திருமணத்திற்கு வர மாட்டோம் என்று கூறிய ரமணியும், அவரது குடும்பமும் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு அந்தத் திருமணத்தைக் கண்டுக் காதில் புகை விட்டுக் கொண்டிருந்தனர்.
ரமணியின் இரண்டு மகன்களும் பிரஹாசினியின் அழகைக் கண்டு அவள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று திவ்யனின் மீது துளிர்த்தப் பொறாமையில் பொசுங்கினார்கள்.
ஆனால் அதற்கு நேர்மாறாக, அவர்களது மற்ற நல்ல மனநிலை கொண்ட சொந்தங்கள் யாவரும் திவ்யன் மற்றும் பிரஹாசினியை மனதார ஆசீர்வதித்துக் கொண்டு தான் இருந்தார்கள்.
அதேபோல், பிரஹாசினியின் தோழிகளான சௌமியா, அனிகா மற்றும் வினோதா தங்களது குடும்பத்துடன் வந்து தோழியையும், அவளது கணவனையும் வாழ்த்தி விட்டு அவர்களது கல்யாணச் சாப்பாட்டை வயிறார உண்டு விட்டுப் போனார்கள்.
அனைத்துச் சடங்குகளும் முடிந்திருக்கப் பிரஹாசினியை அவளது புகுந்த வீட்டாருடன் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர் அவளது குடும்பத்தினர்.
அங்கேயும் அனைத்து சம்பிரதாயங்களை முடித்த பின்னர் இரவு சடங்கிற்குப் பிரஹாசினியைத் தயார்படுத்தி அவளது கணவனின் அறைக்கு அனுப்பி வைத்து விட, அந்த அறைக்குள் நுழைந்தவளோ, தனது கணவனிடம் சென்று அவனது நெஞ்சில் சாய்ந்து தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள் பெண்ணவள்.
இந்த இனிமையான தாக்குதலை எதிர்பாராத திவ்யனின் கரங்களோ மனைவியின் தோளைச் சுற்றி அனிச்சையாக கட்டிக் கொண்டது.
“பிரஹா, என்னம்மா ஆச்சு?” என்று அவளிடம் கனிவாக வினவினான் கணவன்.
அதற்கு அவளோ,”இந்த நாளுக்காகத் தானே நம்ம மூனு வருஷம் காத்திருந்தோம்! உங்களைப் பக்கத்தில் இருந்து கூட என்னால் பார்க்கவோ, பேசவோ என்னால் முடியலை. அது இப்போ தான் நிறைவேறி இருக்கு. அதான் அந்த உணர்வை நான் அனுபவிச்சிட்டு இருக்கேன்!” என்று மெல்லிய குரலில் உதிர்த்தாள் அவனது மனையாள்.
அதைக் கேட்ட அவனுக்கும் அதே உணர்வு தான் இருந்தது என்பதால் அவளை இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்டான் திவ்யன்.
அவளுக்காகத் தன் வீட்டின் மாடியில் ஒரு அறையை எழுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தவனோ, அதை தங்களது திருமணத்திற்கு முன்னரே கட்டியும் முடித்து இருந்தான்.
அந்த அறையில் இருந்து கொண்டு தான் அவர்கள் இருவரும் இப்போது பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதேபோல், தன்னவள் அழகுக்கலையில் தேர்ச்சிப் பெற்றிருப்பதை ஒருநாள் அவளுடன் செல்பேசி உரையாடலை மேற்கொண்டிருக்கும் அவளது வாயிலாக அறிந்து கொண்டவனோ, அந்த அறையின் ஒரு பகுதியில் அதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வைத்திருந்தான் திவ்யன்.
அது மட்டுமில்லாமல் பிரஹாசினியின் குடும்பம் எவ்வாறு அவள் வெளியூர்களுக்குச் சென்று மணப்பெண்களுக்கு மேக்கப் போட்டு விடுவதை ஊக்குவித்து அனுப்பி வைத்தார்களோ, அதே போல் தானும் அவளுக்கு ஒரு நல்ல ஊக்குவிப்பாளராக இருப்பதாகச் சத்தியம் செய்து கொடுத்தான்.
அவள் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்க அது தடையின்றி தொடர அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் பிரஹாசினிக்கு வாக்களித்தான் திவ்யன்.
தங்கள் மூன்று வருட காத்திருப்பையும் தவ வாழ்வையும் ஈடு கட்டும் வகையில் விடியல் வரையிலும் தாங்கள் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருந்த காதலை மென்மையான கூடலின் மூலமாகப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.
திவ்யனும், பிரஹாசினியும் தங்களது வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறி எப்போதும் அதில் அன்பும், நல்ல இல்லறமும் திவ்யப்பிரகாசமாக மங்காது ஒளிரட்டும் என்று அவர்களை ஆசீர்வதித்து விட்டுச் செல்வோம் நாமும்!
- சுபம்
எழுந்திடும் காதல் காவியம் - கருத்து திரி
Latest Post: வாகை சூடவா ரிவ்யூ Our newest member: Sahithya varun Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page