All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

38. எழுந்திடும் காதல் காவியம்

 

VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்
(@vsv14)
Estimable Member Author
Joined: 6 months ago
Posts: 53
Topic starter  

இவ்வளவு மாதங்களுக்குப் பிறகு ஆரவி தனக்கு அழைப்பதைக் கண்டு வியந்து போனாள் வினோதா. இதை அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை எனலாம். 

 

நீண்ட நேரமாகச் செல்பேசி ஒலி எழுப்பிக் கொண்டு இருந்ததால் அதைக் கைப்பற்றி ஆன் செய்து காதில் வைத்து,”ஹலோ ஆரவி” என்றாள். 

 

“ஹாய் வினோதா அக்கா. எப்படி இருக்கீங்க?” என்று அவளது நலனை விசாரிக்கவும், 

 

வினோதா,“ம்ஹ்ம். நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க? உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னுக் கேள்விப்பட்டேன். உன்னோட ஹஸ்பண்ட் அண்ட் உன் மாமனார், மாமியார் நல்லா இருக்காங்களா?” என்று இயல்பாக கேட்டாலும் அது தனக்குள் சுருக்கென்று தைப்பதை தவிர்க்க முடியவில்லை ஆரவியால். 

 

அப்படி இருந்தாலும் கூடத் தன்னைச் சமாளித்துக் கொண்டு,”எல்லாரும் நல்லா இருக்காங்க” என்று பதிலளித்தாள். 

 

“ஓகேம்மா” என்றவளிடம், மெதுவாகப் பேச்சை ஆரம்பிக்கும் விதமாக, 

 

“உங்களோட ஃப்ரண்ட் பிரஹாசினி எப்படி இருக்காங்க அக்கா?” என்று அவளிடம் வினவினாள் ஆரவி. 

 

அதைக் கேட்டதும் மயக்கம் வராத குறையாகிப் போயிற்று வினோதாவிற்கு. 

 

இவள் ஏன் திடீரென்று பிரஹாசினியைப் பற்றிக் கேட்கிறாள்? என்று குழம்பியவள், அதை ஆரவியிடம் கேட்கவும் செய்தாள்.

 

“அவளைப் பத்தி எதுக்குத் திடீர்னுக் கேட்கிறம்மா? நீங்க ரெண்டு பேரும் அந்தளவுக்குப் பேசினது இல்லையே?” எனக் கேட்டாள் வினோதா. 

 

“ஆமாம் அக்கா. ஆனால் இப்போ அவங்களைப் பத்தின விவரங்கள் எனக்கு உடனே வேணும். ப்ளீஸ் அவங்க எந்த ஊரில் இருக்காங்கன்னு சொல்லுங்க. இல்லைன்னா, அவங்களோட மொபைல் நம்பரையாவது எனக்குக் கொடுங்க” என்று அவளிடம் கெஞ்சினாள் ஆரவி. 

 

அதில் உச்சபட்ச அதிர்வில் மௌனித்து விட்டாள் வினோதா.

 

அவளுக்கு அவளது கேள்வியையும், அதிலிருந்து கெஞ்சலையும் நம்பவே முடியவில்லை. 

 

இவள் எதற்காக இதையெல்லாம் கேட்கிறாள் என்று தான் இருந்தது வினோதாவிற்கு. 

 

“ஹலோ அக்கா” என்று அவளை அழைக்கவும், 

 

“அவளைப் பத்தின விவரங்களை எல்லாம் சேகரிச்சு நீ என்னம்மா பண்ணப் போற?” என்று வினா எழுப்பினாள். 

 

அதற்கு ஆரவியோ,”அவங்க எனக்கு அண்ணியாகப் போறாங்க அக்கா! அப்படின்னா நான் அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கனும் தானே?” என்றதும்,

 

“என்னது?” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் வினோதா. 

 

“ஆமாம்க்கா” என்றவளிடம்,

 

“உண்மையாகவா சொல்ற?” என்று நம்ப முடியாமல் கேட்டாள் வினோதா. 

 

“உண்மை தான்க்கா” என்றவள், தன்னுடைய தமையனின் காதல் விவகாரத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அனைத்தையும் ஒப்புவித்து முடிக்க இப்போது அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தால் வினோதாவிற்குக் கண்ணைக் கட்டி விட்டது. 

 

“ஹேய்! நீ என்னம்மா சொல்ற? இதையெல்லாம் என்னால் சத்தியமாக நம்பவே முடியலை!” என்று கூறியவளுக்கு இது எப்படி சாத்தியம்? என்று தான் எண்ணம் எழுந்தது. 

 

“இதைப் பத்திப் பிரஹா எங்ககிட்ட எதுவுமே சொன்னது இல்லையே!” என்றாள் வினோதா. 

 

“ஆனால் என் அண்ணா அவங்களை லவ் பண்றது அவங்களுக்கும் தெரியும்ன்னும், அவங்களும் அவரை லவ் பண்றாங்கன்னும் சொன்னார் அக்கா” எனக் கூறினாள் ஆரவி.

 

“இது என்னப் புதுக் கதை சொல்றம்மா? நான் எதுவாக இருந்தாலும் பிரஹாசினிக்கிட்டே பேசிட்டு, அவளுக்கு விருப்பம் இருந்தால் தான் அவளோட விவரத்தை எல்லாம் உனக்கு அனுப்ப முடியும்” என்று அவளிடம் தீர்க்கமாக உரைத்து விட,

 

“எனக்கு ஒரு விஷயத்துக்கு மட்டும் பதில் சொல்லுங்க ப்ளீஸ்!” என்றவளிடம், 

 

“என்னம்மா?” என்றாள் வினோதா. 

 

“அவங்களோட அப்பா, அம்மா ஒன்னும் ரொம்ப ஸ்ட்ரிக்ட் கிடையாதுல்ல?” என்று கேட்ட ஆரவிக்குத் தனது தமையனின் காதல் எப்படியாவது கல்யாணத்தில் முடிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

 

“பிரஹாசினியோட அப்பா, அம்மா அவ சின்ன வயசாக இருக்கும் போதே இறந்துட்டாங்கம்மா. அவளை அவளோட பெரியப்பாவும், பெரியம்மாவும் தான் எடுத்து வளர்த்துட்டு இருக்காங்க” என்பதைக் கேட்டதுமே ஆரவிக்குள் அதிர்ச்சியும், குற்ற உணர்ச்சியும் ஒருங்கே உருவானது. 

 

“என்னக்கா சொல்றீங்க?” என்றவளிடம்,

 

“ஆமாம்மா. இந்த விஷயம் எனக்கும், சௌமியா, அனிகாவுக்கும் மட்டும் தான் தெரியும். மத்த யாருக்கும் தெரியக் கூடாதுன்னு அவ எங்ககிட்ட காறாராகச் சொல்லிட்டாள்” என்றுரைத்தாள் வினோதா. 

 

அதில் மிகவும் மனமுடைந்து போயிற்று ஆரவிக்கு.

 

பிரஹாசினியின் சொந்தக் கதை என்னவென்று தெரியாமல் அவளை வெளிப்புறத்தை மட்டுமே கணித்து அவள் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்ட தனது மடத்தனத்தை எண்ணி நொந்து போனாள். 

 

“ச்சே இது தெரியாமல் நான் அவங்களை ரொம்ப வெறுத்து ஒதுக்கிட்டேனே!” என்று முனகினாள் ஆரவி.

 

அதைக் கேட்ட வினோதாவிற்கோ இது காலம் கடந்த ஞானேதயமாக மனதிற்குப்பட்டது. ஆனால் வெளியே சொல்லவில்லை அவள். 

 

“அக்கா” 

 

“சொல்லும்மா?” 

 

“நீங்கப் பிரஹா அண்ணி கிட்டே உடனே பேசிட்டு எனக்குப் பதில் சொல்ல முடியுமா ப்ளீஸ்? இல்லைன்னா எனக்கு அவங்க நம்பர் அனுப்புங்க. நான் பேசுறேன்” என்று வினவினாள் ஆரவி. 

 

உடனே,”இல்லை. வேண்டாம்மா. நானே அவ கிட்டே பேசிட்டுச் சொல்றேன்” என்றதும், 

 

“ஓகேக்கா. நான் வெயிட் பண்றேன்“ என்று கூறி அழைப்பை வைத்த அடுத்த கணமே தனது தமையனுக்கும், பெற்றோருக்கும் செல்பேசியில் தொடர்பு கொண்டுப் பிரஹாசினியின் குடும்பத்தைப் பற்றி விவரித்து விட்டாள் ஆரவி. 

 

அதைக் கேட்ட திவ்யனோ, செய்வதறியாது திகைத்துப் போய் நின்றான்.

 

தன்னவள் அவளை இத்தனை வருடங்களாக வளர்த்தக் குடும்பத்தின் மேலிருந்த மரியாதை நிமித்தமாகத் தான் தன்னுடைய காதலை ஏற்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டவனுக்குப் பிரஹாசினியை உடனே பார்க்க வேண்டும் என்ற தவிப்பு அதிகரித்தது. 

 

இப்போதும் கூட அவள் தன்னை அவளது வீட்டிற்கு வரச் சம்மதிக்க மாட்டாள் என்பது திவ்யனுக்கு நன்றாகவே தெரியும்.

 

எனவே பிரஹாசினி மறுப்புத் தெரிவித்தாலும் கூடத் தான் அவளை ஒரு போதும் விட்டு விலகக் கூடாது என்பதில் உறுதியாகி விட்டான். 

 

அதேபோல் தன்னுடைய பெற்றோரிடமும் தனது முடிவைக் கூறி விடவும்,”எங்களுக்கு ஓகே தான். ஆனால் அந்தப் பொண்ணோட பெரியப்பாவும், பெரியம்மாவும் இதுக்கு என்ன சொல்றாங்கன்னுப் பார்ப்போம்” என்று அவனிடம் கூறி விட்டார்கள் சோமசுந்தரி மற்றும் மகுடபதி. 

 

அதே சமயம், ஆரவியிடம் சொன்னதைப் போல் தன்னுடைய தோழி பிரஹாசினிக்குச் செல்பேசியில் அழைத்து விட்டுக் காத்திருந்தாள் வினோதா.

 

ஏற்கனவே தனது குடும்பம் தனக்குத் திருமணத்திற்கு வரன் பார்க்கப் போவதாக முடிவெடுத்து இருப்பதை எண்ணி மனதிற்குள்ளேயே வருந்திக் குமைந்து கொண்டிருந்தவளோ, தற்போது தோழியிடம் இருந்து வந்த அழைப்பைக் கண்டு ஆசுவாசம் அடைந்து, அவளிடம் பேசுவதன் மூலம் தனது மன பாரத்தைக் குறைத்துக் கொள்ள எண்ணி அழைப்பை ஏற்று,”ஹலோ வினோ” என்று பேசியவளிடம், 

 

“ஹேய் பிரஹா! உனக்கு விஷயம் தெரியுமா?” என்றவளோ சிறிது நேரத்திற்கு முன் தன்னிடம் ஆரவி சொன்ன அனைத்தையும் அவளிடம் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் வினோதா. 

 

 அதைக் கேட்டவுடன் தனது உணர்வுகளை எப்படி வெளிக் காட்டுவது எனத் தெரியாமல் சிக்கித் தவித்தாள் பிரஹாசினி. 

 

இதற்காகத் தானே இத்தனை வருடங்களாகத் தான் காத்திருந்தோம்! என்ற மகிழ்ச்சி உணர்வுப் பிரவாகத்தில் உழன்றாள். 

 

அவளைச் சத்தமாக அழைத்த வினோதாவோ,”லைன்ல இருக்கியாடி பிரஹா?” என்றாள். 

 

“ஹாங்! இருக்கேன் வினோ” என்றவளுக்குத் தன்னைச் சமாளித்துக் கொள்ளச் சில நிமிடங்கள் தேவைப்பட்டது. 

 

தன்னைச் சமன்படுத்திக் கொண்ட அடுத்த நிமிடமே,”அந்த ஆரவிப் பொண்ணு உண்மையிலேயே உங்கிட்ட இப்படி பேசினாளா?” என்று ஆர்வத்துடன் வினவியவளை எண்ணி வியப்படைந்தாள் அவளது தோழி.

 

மேலும்,”ப்ளீஸ் சொல்லு வினோ!” எனக் கெஞ்சவும், 

 

“ஆமாம் பிரஹா. அந்தப் பொண்ணு தான் என்னை உடனே உங்கிட்ட பேச சொன்னாங்க” என்று கூறி அவளுக்கு உறுதி அளித்தாள் வினோதா. 

 

“அப்போ அவர் என்னோட வீட்டுக்குக் குடுமபத்தோட வந்து என் பெரியப்பா, பெரியம்மா கிட்டே என்னைப் பொண்ணுக் கேட்கத் தயாராக இருக்காரா? இது எப்படி சாத்தியம்? அவளுக்குத் தான் என்னைக் கண்டாலே பிடிக்காதே!” என்று சோகமாக கூறினாள் பிரஹாசினி. 

 

“அது அப்போவாம் டி. இப்போ அவளுக்கு உன்னைப் பிடிக்குமாம். நான் தான் முதல்லயே சொன்னேன்ல? நீ அதைக் கேட்ட தானே? அப்பறமும் ஏன் இப்படிக் கேட்டுட்டு இருக்கிற? அவங்க வீட்டில் எல்லாருக்கும் உன்னை அந்த திவ்யனுக்குக் கல்யாணம் செய்து வைக்க விருப்பம் தானாம்! நீ இப்போ சொல்லு! நான் உன்னோட மொபைல் நம்பரை ஆரவிக்கு அனுப்பவா? இல்லை, உங்க வீட்டு அட்ரஸையே அனுப்பி வைக்கவா?” என்றவளிடம், 

 

“மொபைல் நம்பர் வேண்டாம் வினோ. நீ என்னோட அட்ரஸையே அனுப்பி வை. அவங்க நேராக என் வீட்டுக்கு வந்து என்னோட பெரியம்மா, பெரியப்பா கிட்டேயே பேசட்டும். நானும், அவரும் இப்போ வரைக்கும் ஃபோனிலோ, நேரிலேயோ பேசினது இல்லை. இனிமேல் அப்படிப் பேசனும்னாலும் அது எங்களோட காதலை எங்க இரண்டுக் குடும்பங்களும் அங்கீகரிச்சதுக்கு அப்பறமாகத் தான் இருக்கனும்!” என்றவளின் குரலில் இருந்த உறுதியில் மலைத்துப் போன வினோதாவோ, 

 

“சரி பிரஹா” என்றவள் அந்த அழைப்பை வைத்து விட்டு ஆரவிக்கு அழைத்து உரையாடினாள். 

 

அவள் கூறியதையெல்லாம் கேட்டதும், அந்தப் பிரஹாசினியும் தனது தமையனை விரும்புகிறார் என்பதை எண்ணி மிகவும் மகிழ்ந்து போனாள் ஆரவி. 

 

“ரொம்ப தேங்க்ஸ் வினோதா அக்கா!” என்று அவளிடம் நன்றி தெரிவித்து விட அவளுக்குப் பிரஹாசினியின் விலாசத்தை அனுப்பி வைத்தாள் வினோதா. 

 

அதற்கும் மீண்டுமொரு முறை நன்றி கூறியவளோ, சிறிதும் தாமதிக்காமல் அந்த விலாசத்தை தனது தமையனுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பினாள் ஆரவி. 

 

அதே சமயம், பிரஹாசினியிடம் அனுமதி பெற்று இந்த விஷயத்தைப் பற்றித் தங்களது இரண்டு தோழிகளான சௌமியா மற்றும் அனிகாவிடம் அறிவித்து விட்டாள் வினோதா. 

 

இதையறிந்து கொண்டதும் அவர்களுக்கும் மிகவும் ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. 

 

அதனால், வெகு நாட்களுக்குப் பிறகுக் கான்ஃப்ரன்ஸ் காலில் பேசிப் பிரஹாசினியிடம் மொத்த விவரங்களையும் கறந்து விட்டனர் மற்ற மூவரும். 

 

அவளைக் கிண்டல் செய்து ஒரு வழியாக்கினர். 

 

அதேபோல், பிரஹாசினி உதிர்த்த வார்த்தைகளை வினோதா மனப்பாடமாகத் தன்னிடம் சொல்லி இருக்க அதை அப்படியே அச்சுப் பிசகாமல் தன் தமையனிடமும், பெற்றோரிடமும் தெரிவித்தாள் ஆரவி. 

 

அதைக் கேட்டதும் பிரஹாசினியின் மீதான நேசம் திவ்யனுக்குள் இன்னும் அதிகமாக வளர்ந்தது என்றால், அவனது பெற்றோருக்கு அவள் மேல் நம்பிக்கை பிறந்தது. 

 

அதே நம்பிக்கையுடன் பயணம் செய்து பிரஹாசினியின் ஊரை அடைந்து அவளது வீட்டிற்கும் சென்று சேர்ந்தனர் திவ்யனும், அவனது குடும்பமும். 

 

அவர்களைத் தங்களது வீட்டு வாசலில் கண்டதும் யார் இவர்கள்? குடும்பம் சகிதமாகத் தங்கள் வீட்டின் முன் நின்று கொண்டு இருக்கிறார்களே? என்று அவர்களைக் குழப்பத்துடன் ஏறிட்டார் உமாராணி.

 

        - தொடரும்

எழுந்திடும் காதல் காவியம் - கருத்து திரி

This topic was modified 3 weeks ago by VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்

   
ReplyQuote

You cannot copy content of this page