About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
தன்னுடைய முதுகலைப் படிப்பையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த பிறகுப் பியூட்டீசியன் படிப்பிலும் தேர்ச்சி பெற்றப் பிரஹாசினிக்கோ, மணப்பெண் அலங்காரங்கள் செய்யக் கேட்டுக் கொஞ்சம், கொஞ்சமாக ஆட்கள் வரத் தொடங்கினர். அதைப் பார்த்து அவளது வீட்டார் அவளை நினைத்துப் பெருமிதம் அடைந்தார்கள்.
அதேபோல்,”பக்கத்து ஊரிலிருந்தும் கூட மேக்கப்புக்கு ஆர்டர் வருது. நான் அதுக்குப் போகவா?” என்று விருச்சிகனிடமும், உமாராணியிடமும் அனுமதி வேண்டி நின்றாள் பிரஹாசினி.
“நீ தனியாகப் போக வேண்டாம்மா. உன்னை நீரஜ் கொண்டு போய் விட்டுட்டு வரட்டும்” என்று அவளுக்கு சம்மதம் அளித்து விட்டார்கள் இருவரும்.
அதில் அவளது திறமையைக் கண்டு, பிரஹாசினிக்குத் தனியாக ஒரு அழகு நிலையத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
அவளது கையிலும் கணிசமாகப் பணம் புழங்கத் தொடங்கவும் அதைப் பெரியப்பாவிடம் ஒப்படைத்தாள்.
ஆனால் அவரோ,”எனக்கு எதுக்கும்மா? இதை நீயே வச்சுக்கோ. இனிமேல் வர்ற பணத்தையும் நீ தான் வச்சுக்கனும். அது உன்னோட உழைப்பில் வந்தப் பணம். அதை நாங்க வாங்கிக்கிறது நியாயமில்லை” என்றவர், அவள் பியூட்டீசியன் வேலையில் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அவளது வங்கி கணக்கில் போடத் தொடங்கி விட்டார் விருச்சிகன்.
மணமகள் அலங்காரத்திற்கு என்று அவ்வப்போது பக்கத்து ஊருக்குச் சென்று வந்ததால் அங்கே வசிக்கும் தனது இளங்கலை கல்லூரித் தோழி வினோதாவுடன் இன்னும் நெருக்கமான தோழியாகி விட்டாள் பிரஹாசினி.
தனது முதுகலைப் படிப்பின் இறுதி வருடத்தில் இருந்த ஆரவிக்குத் தொடர்ந்து நல்ல, நல்ல வரன்கள் வந்து கொண்டிருந்ததால் அவளது பெற்றோர்,
“ஆருவைப் பொண்ணுக் கேட்டு வந்துட்டே இருக்காங்க. எல்லாமே நல்ல வரனாகத் தெரியுது. இப்போ என்ன முடிவு எடுக்கிறதுன்னு குழப்பமாக இருக்கு” என்று திவ்யனிடம் கூற,
அவனோ,”அப்படின்னா அவங்களோட ஜாதகம், ஆருவோட ஜாதகத்தோட பொருந்திப் போகுதான்னுப் பார்த்து எது பொருந்துதோ அந்த வரனை அவளுக்குக் கல்யாணம் முடிச்சு வைங்கம்மா” என்று அவர்களிடம் உரைத்தான்.
“அப்படிங்குற? இதைப் பத்தி முதல்ல ஆருகிட்டே கேட்போம்” என்று மகளை அழைத்துப் பேசினார் சோமசுந்தரி.
“எனக்குக் கல்யாணம் செய்துக்க ஓகே தான்ம்மா. ஆனால், என்னோட படிப்பை முடிச்சிட்டுக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” எனத் தன் ஒப்புதலைக் கூறி விட்டாள் ஆரவி.
“இவளே சம்மதம் சொல்லியாச்சு. அப்பறம் என்ன? மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிங்க” என்றான் திவ்யன்.
“அதுக்குன்னு இப்போவேவா? நான் தான் படிச்சு முடிக்கனும்னு சொன்னேன்ல அண்ணா?” என்றவளிடம்,
“உடனே வரனைப் பார்த்து உனக்கு முடிச்சு வைக்க மாட்டோம்டா. பையனைப் பத்தியும், அவனோட குடும்பத்தைப் பத்தியும் நல்லா விசாரிச்சுட்டுத் தான் உனக்குக் கல்யாணம் பண்ணி வைப்போம். அதுக்கு நிறைய நாள் ஆகலாம். நீ அதுக்குள்ளே உன்னோட படிப்பை முடிச்சிடுவ” என்று அவளிடம் சமாதானமாக உரைத்தார் மகுடபதி.
ஆரவி,“அப்படின்னா சரிங்கப்பா” என்றவள் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தவும், அவளுக்கான வரனைத் தேடுவதில் முனைப்பாகச் செயல்பட்டனர் அவளது குடும்பத்தினர்.
பிரஹாசினியின் மேற்படிப்பு முடிந்ததும் உடனே அவளுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு விருச்சிகனை அவசரப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் அவரது சுற்றத்தார்.
உமாராணியின் உறவினர்களோ, அவரும், அவரது கணவரும் பிரஹாசினியைத் தங்களது வீட்டில் வைத்து வளர்க்க முடிவெடுத்த சமயத்திலேயே,”இதெல்லாம் உனக்குத் தேவையா என்ன? உங்களுக்குத் தான் சிங்கக்குட்டி மாதிரி ஆம்பளப் பையன் இருக்கானே? அவனை வளர்த்துட்டு ஜம்முனு இருக்க வேண்டியது தானே? இவளைத் தலையில் கட்டிட்டு இருக்கனும்னு உங்களுக்கு என்னத் தலையெழுத்தா? இவளை ஏதாவது ஆசிரமத்தில் கொண்டு போய் விடு” என்று அவர்கள் இருவரையும் கரித்துக் கொட்டினர்.
“அப்படியெல்லாம் விட முடியாது. இவ எங்களோட மகளாகத் தான் வளருவா” என்று அவர்களிடம் உறுதியாக உரைத்து விட்டதால் அவர்கள் யாரும் இன்னமும் இவர்களது வீட்டுப் பக்கம் வருவதே இல்லை.
ஆதலால், அவர்களது தொல்லையிலிருந்து தப்பித்து விட்டனர்.
ஆனால், விருச்சிகனின் உறவினர்கள் தள்ளி இருக்காமல், அவரது ஜவுளிக்கடைகளில் வியாபாரம் நன்றாகப் போய்க் கொண்டிருப்பதை அறிந்து கொண்டு இது தான் சாக்கென்று மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ள முயன்றனர். ஆனால் விருச்சிகனும், அவரது குடும்ப உறுப்பினர்களும் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை.
தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற மாதிரியான வரன் தகைந்து விடவும், அந்த மாப்பிள்ளையை ஆரவிக்குத் திருமணம் முடித்து வைக்க முடிவெடுத்தார்கள் அவளது பெற்றோரும், தமையனும்.
அவளது படிப்பு முடிந்தவுடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்க, அந்தச் சமயத்தில் தான், தனது கையில் பிரஹாசினியின் பெயரின் சுருக்கத்தைப் பச்சைக் குத்திக் கொண்டு வந்திருந்தான் திவ்யன்.
அதைக் கண்டவுடன் அவனது பெற்றோரும், தங்கையும் ருத்ர தாண்டவமாடி விட்டனர்.
“என்னடா செஞ்சி வச்சிருக்கிற? இது என்னக் கருமம்? உன் கையில் என்னத்தைப் பச்சைக் குத்தி இருக்க? சொல்லுடா!” என்று அவனைத் திட்டித் தீர்த்தவர், ஒரு படி மேலே சென்று அவனை அடிக்கவும் செய்தார் சோமசுந்தரி.
“ஏன்டா இப்படி பண்ண? நம்ம வீட்டில் யாருமே பச்சைக் குத்தினது இல்லையே! உனக்கு மட்டும் எப்படித் தோணுச்சு?” என்று மகனை அதட்டினார் மகுடபதி.
அதற்கு,”எனக்குப் பச்சைக் குத்திக்க ஆசையாக இருந்துச்சு. அதான் குத்திக்கிட்டேன்” என்று பதிலளித்தான் திவ்யன்.
அதைக் கேட்டு,”ஓஹ். அப்போ யாரோட பேர் அது?” என்றாள் ஆரவி.
“பேர் எல்லாம் இல்லை. சும்மா தான்” என்று மழுப்பிப் பேசவும்,
“பொய் செல்லாதீங்கண்ணா. அதைப் பார்த்தாலே தெரியுது. யாரோட பேரையோ தான் பச்சைக் குத்தி இருக்கீங்க” என்று கிடுக்கிப்பிடி கேள்வி கேட்ட தங்கையிடம்,
“நான் தான் இல்லைன்னு சொல்றேன்ல? இதை விடுங்க” என அவர்களிடம் கத்தி விட, ஆரவியின் திருமண வேலைகள் காரணமாக அதற்குப் பிறகு அதைப் பற்றிப் பேச சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
அந்த வீட்டில் நிகழும் முதல் திருமணம் என்பதால் ஆரவியின் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தினர்.
ரஞ்சித்தும், அவனது பெற்றோரும், ஆரவியின் வீட்டாருடன் நல்லவிதமாகவே நடந்து கொண்டார்கள்.
தன்னுடைய திருமணத்திற்குத் தன் நெருங்கிய தோழர், தோழிகளுக்கு அழைப்பு விடுத்த ஆரவியோ,
தனது சீனியர்களான சௌமியா, அனிகாவிடம் மட்டுமே செல்பேசி தொடர்பில் இருந்ததால் அவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மூலமாக மின் அழைப்பிதழை அனுப்பி வைத்தாள்.
ஒரே ஊராக இருந்த போதும் வினோதாவிடம் கூட அவள் அதிகமாகப் பேசி இருக்கவில்லை. அவளது நிலையே அப்படியென்றால் பிரஹாசினியுடைய கைப்பேசி எண் கூட ஆரவியிடம் இல்லை. எனவே அவளுக்குத் தன் திருமண அழைப்பிதழை அனுப்பி வைக்கவில்லை.
ஆரவிக்கான நகைகளையைம், சீரையும் குறைவில்லாமல் செய்தார்கள்.
அப்போதும் கூடத் திவ்யனை விடாமல் அவனது கையில் இருக்கும் பச்சையைப் பற்றிக் கேட்டு நச்சரித்தாள் ஆரவி.
“அதெல்லாம் உனக்கு இப்போ எதுக்குடா? நீ உன்னோட புகுந்த வீட்டுக்குப் போகனும்ல? அதுக்குத் தேவையானதை எல்லாம் எடுத்து வை” எனக் கூறி அவளை அனுப்பி விட்டான் அவளது தமையன்.
இப்படியாகத் தாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமலேயே ஒருவரின் மேல் மற்றொருவர் அளவில்லாத காதலை வைத்திருந்தார்கள் திவ்யனும், பிரஹாசினியும்.
இப்போது அவர்கள் சேர்வதற்கான தருணம் வந்து விட்டது எனலாம்.
திவ்யனின் தங்கை ஆரவியும், அவளது கணவன் ரஞ்சித்தும் தங்களது வீட்டை அடைந்ததும்,அவர்களை வரவேற்று நீர் கொடுத்து,”தலை தீபாவளியை நல்லா கொண்டாடினீங்களா?” என்று அவர்களிடம் விசாரித்தார் ரஞ்சித்தின் தாய் அறக்கொடி.
“ஆமாம் அத்தை. நீங்க எப்படி கொண்டாடினீங்க?” என்றதற்குப் பதில் சொல்ல என்று அந்த நாள் அப்படியே கடந்து விட்டது.
அடுத்த நாள் தன்னுடைய வேலைக்குச் செல்வதற்கு ஆயத்தமாகி விட்டு,”நீ அந்தப் பொண்ணைப் பத்தி விசாரிப்ப தானேம்மா?” என மனைவியிடம் கேட்டான் ரஞ்சித்.
“என்ன இந்த விஷயத்தில் என்னைச் சந்தேகப்பட்றீங்களா?” என்று கேட்டு அவனை முறைத்தாள் ஆரவி.
“இல்லம்மா. உனக்குத் தான் அவங்களைப் பிடிக்காதே! அதான்” என்றவுடன்,
“ஆமாம். ஆனால் எங்க அண்ணாவோட மனைவி ஆகப் போகிறவங்களை எனக்குப் பிடிக்காமல் போகுமா? அதனால் நான் அவங்களோட மொபைல் நம்பர் அண்ட் அட்ரஸைக் கண்டிப்பாக கேட்டு அண்ணாகிட்ட சொல்லுவேன்” என்று உறுதியாக கூறிய மனைவியிடம்,”எஸ்! நீ இப்படித் தான் யோசிக்கனும்னு நான் ஆசைப்பட்டேன். அதை நிறைவேத்திட்ட” என்று கூறிப் புன்னகைத்து அவளது கன்னத்தில் முத்தம் பதித்து விட்டு வேலைக்குக் கிளம்பிச் சென்றான் ரஞ்சித்.
அதற்குப் பிறகுத் தனது தமையன் மற்றும் கணவரிடம் சொன்னதைப் போலவே தனது சீனியர்களில் ஒருவரான வினோதாவிற்கு அழைப்பு விடுத்தாள் ஆரவி.
- தொடரும்
எழுந்திடும் காதல் காவியம் - கருத்து திரி
Latest Post: பாய்மரக் கப்பல் - Story Thread Our newest member: Sahithya varun Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page