About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
காலம் தாண்டிய பயணம் 14
மித்ரனின் பார்வை பூஜையின் முன்னே அமர்ந்திருக்கும் மகிழின் மீதுதான் இருந்தது.
தன் மகனா அவன் என்ற கேள்வியுடன் அவனைத் தான் பார்த்திருந்தான்.
உள்ளே மனதோ 'இல்லை இல்லை உன் மகன் இவனில்லை... இவன் கொடூரமானவன் உன் மகன் தான் மென்மையாவன் ஆகிற்றே!' என்று எடுத்துக்கொடுக்க, அவன் மனது உள்ளே வலித்தது...
கண் முன்னே இருந்தும் யாரையும் காக்க முடியாத நிலை அவனுக்கு...
அவன் காதல் மனைவியைக் காக்க முடியவில்லை... அவன் உயிர் நீரில் உருவான குழந்தையின் வரவை அறிந்த அன்றே பிரியும் நிலை... இதோ ஆசையாய் இத்தனை ஆண்டுகள் வளர்த்த மகன் வேறொருவனாய் மாறி நிற்கையில் தடுக்க முடியாத நிலை...
மகனின் காதலின் ஆழம் அவன் அறிந்தது தானே! இன்று அவனே அவன் காதலுக்கு எமனாய் மாறி நிற்பதைத் தடுக்க முடியாத நிலை...
இவை எல்லாம் சேர்த்து... ஒரு கணவனாய் ஒரு தந்தையாய் ஒரு மாமனாய் ஏன் ஒரு மனிதனாய்க் கூடத் தோன்றுவிட்ட உணர்வு அவனுக்கு...
சற்று முன்னர் மகன் இனியாவை தூக்கி வந்தபோது அவன் அதிர்ந்த அதிர்வு அவன் மட்டுமே அறிவான்...
கூடவே தான் தான் ஆத்ரீக வளவன் என்று உரக்க கத்திய மகன் அவன் நெஞ்சில் வேலைப் பாச்சிய வேதனை அவனுள்...
வான்மீகியிடம் திரும்பியவனோ "ஏன் சாமி சொல்லல, இவன் தான் அந்த ஆத்ரீகன்னு ஏன் சொல்லல" என்று இயலாமையுடன் கேட்க,
அவரோ பெருமூச்சுடன் "அது மகிழுக்குத் தெரிவது நல்லதல்ல மகனே! தெரிந்தால் இப்படி ஏதும் விபரீதம் வந்துவிடும் என்ற பயத்தினால் தான் சொல்லவில்லை... மார்த்தாண்டனால் உன்னுள் அவன் நினைவைக் கொண்டு வரமுடியவில்லை, அவனால் அவனை அடக்க முடியாது கூடவே அவனின் பாதியான உன்னையும் அடக்க முடியாமல் போனதாலேயே அது சாத்தியமானது ஆனால் ஆத்ரீகன் மீது அப்படி இல்லையே! மீண்டும் கொண்டு வந்துவிட முடியும், அதனாலேயே மறைத்தேன். எதற்குப் பயந்தேனோ அதுவே இப்போது நடந்துவிட்டதே!" என்றவர் கலக்கத்துடன் பேச, மித்ரன் செய்வதறியாது நின்றான்.
துயிலேனோ "சுவாமி வேறு வழி ஏதும் இல்லையா?? உலகம் அழிவின் பால் நெருங்கி நிற்கின்றதே! இதற்கு என்னதான் முடிவு?" என்று கேட்டான்.
வான்மீகியோ "எல்லாம் எல்லை கடந்துவிட்டது துயிலா? இனிமேல் நடக்கவிருக்கும் துயரம் நீங்க வேண்டும் என்றால், மார்த்தாண்டன் மனது மாற வேண்டும். அது என்றும் நடக்காத ஒன்று… இல்லையேல் ஆத்ரீகனுள் இருக்கும் மகிழ் விழித்துக்கொள்ள வேண்டும், அதுவும் சாத்தியமில்லை... அத்தனை சக்தி படைத்தவன் ஆன்மாவை மீறி மகிழின் நினைவுகள் வெளியே வருவது அசாத்தியமானது. முடிந்தவரை போராடியாகிவிட்டது இனிமேல் முடிவு பைரவனின் கையில்... அவன் ஒருவன் நினைத்தாலேயற்றி மகிழை வெளியே கொண்டு வர முடியாது, ஆத்ரீகனை அடக்க அவனால் மட்டுமே முடியும். அதற்கு உள்ளே இருக்கும் மகிழின் நினைவுகள் வெளியே வரச் சிரிதேனும் போராட வேண்டும்" என்றார் கொஞ்சமே ஒளிந்திருக்கும் நம்பிக்கையுடன்...
இவர்கள் இங்கே பேசிகொண்டிருக்க, பூஜையில் இரு மேடையில் யாழினியும், இனியாவும் படுக்க வைக்கப்பட்டிருந்தனர்.
முதலில் இனியாவை பலிகொடுத்து அந்த மண்டையோட்டின் எண்ணிக்கையை நூறாக்கி மீண்டும் அந்த ஆமாவாசை நாளுக்குச் சென்று யாழினியைப் பலி கொடுத்தால், மோகினிக்கு உடல் கிடைத்துவிடும். கூடவே ஆத்ரீகனின் சக்தியும் பன் மடங்கு பெருகும் அதன்பின் அவர்களை ஆழிக்கும் ஆயுதமான அந்த முத்து மாலை தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்...
உலகுக்கே சர்வ நாசம், அதன் பின் உலகமே அவர்கள் பிடியில்...
இதுவே மார்த்தாண்டனின் திட்டம்...
இதோ ஏத்தனை எத்தனையோ பிறவிகளில் தோற்று இன்று இத்தனை நூற்றாண்டு போராட்டத்தின் பின் அவன் எண்ணங்கள் நிறைவேறக் காத்திருக்கிறது.
"ஆத்ரீகா, வென்று விட்டோமடா மகனே! இனிமேல் நம்மை மிஞ்ச இந்த உலகில் யாரும் இல்லை... தெய்வமாம் பைரவனாம் இனி யார் வருகிறார்கள் என்று பார்ப்போம்" என்று உரக்க சத்தமிட்டு அவன் இறுமாப்பை வெளிப்படுத்தியவனோ மீண்டும் "கொன்று பலி கொடுத்துவிடு ஆத்ரீகா" என்று உரக்கச் சொல்ல, ஆத்ரீகனோ இனியாவின் அழிக்க அவள் அருகில் நெருங்கினான்.
இங்கே மித்ரனோ "வேணாம் யாழ்... வேணாம்டா... உன் காதல்டா அவ" என்று கத்தியவன் பேச்சு அவனுள் இருக்கும் மகிழுக்கு கேட்டால் தானே!!!
"மித்ரா டூ சம்திங்" என்று தனக்கு தானே சொல்லிகொண்டவன் மனதோ அவனிடம் இருக்கும் அந்த ஒன்றை மண்டையோட்டை ஞாபகப் படுத்தியது. கூடவே சித்தர் வான்மீகி சொன்னவைகளும் ஞாபகம் வந்தது.
அன்று மார்த்தாண்டன் யாழியைக் கவர்ந்து சென்ற அன்று அந்த நாய் அவனிடம் பறித்த அந்த மடையோட்டை மித்ரனின் கையில் தானே சேர்த்திருந்தது.
அதுக்காகத் தானே இனியாவை பலி கொடுக்கப் போகிறான் அது இருந்தால் அவளையாவது இப்போது காப்பாற்றலாமே என்ற எண்ணம் உதிர்க்க, "மார்த்தாண்டா அவளை விடு, உன்னோட அந்த ஒன்றை மண்டையோ என்கிட்ட தான் இருக்கு, அத கொடுத்துடுறேன் அவளை விடு" என்று கத்தினான்.
மார்த்தாண்டனோ நாடியில் கை வைத்துப் புன்னகைத்தவன் "அப்படியா? ஆனால் எனக்கு அது வேண்டாம் என்று தோன்றுகிறதே! என்னை விட்டுச் சென்றது சென்றதாகவே இருக்கட்டுமே! இப்போது என் மகன் மீண்டு வந்த சந்தோசத்தைக் கொண்டாட பலி ஒன்று வேண்டாமா? கூடவே அந்தப் பைரவன் தடுத்த வழியையும் தாண்டி வென்றான் மார்த்தாண்டன் என்று உலகம் போற்ற வேண்டாமா?" என்று கேட்டபடி ஆத்ரீகனுக்கு கண் காட்ட, அவனும் கேலிப்புன்னகையுடன் தயாரானான்.
மீண்டும் மித்ரனுக்கு தோல்வி, அவன் மனம் மூளையென அனைத்தும் ஒரு அவசர கதியில் இயங்க, மனமோ சட்டென வான்மீகியின் வார்த்தைகளை எடுத்துக்கொடுத்தது.
'மார்த்தாண்டனால் உன்னுள் அவன் நினைவைக் கொண்டு வரமுடியவில்லை, அவனால் அவனை அடக்க முடியாது. அவனின் பாதியான உன்னையும் அடக்க முடியாமல் போனதாலேயே அது சாத்தியமானது. ஆனால் ஆத்ரீகன் மீது அப்படி இல்லையே!'
சட்டென வான்மீகியின் புறம் திரும்பியவனோ "சாமி அவனால அவனைக் கட்டுப்படுத்த முடியாதுனா என்னையும் கட்டுப்படுத்த முடியாதுனு சொன்னீங்க தானே! என்னை எதுவும் பண்ணல இப்போ வரை இனிமேலும் பண்ண மாட்டான் தானே!" என்று கேட்க, வான்மீகிக்கு ஏதோ புரிவதை போலிருக்க, அவர் முகத்தில் வெளிச்சம்...
"ஆம் மகனே! அவன் அவன் உயிரைக் காணிக்கையாய் செலுத்தி உனக்குப் பிறவி கொடுத்திருப்பதால் உன்னைக் கட்டுப்படுத்த முடியாது... நிச்சயம் முடியாது" என்றார்.
மித்ரனோ சட்டென மார்த்தாண்டனை பார்த்தவனோ "மார்த்தாண்டா, இப்போ இத நீ நிறுத்தலனா... என் மூச்ச அடக்கி என்னை நானே அழிச்சிப்பேன்" என்று உரக்க குரல் கொடுக்க, முதலில் சாதாரணமாக இவன் குரலுக்குத் திரும்பியவனின் முகம் இறுதி வரியில் அதிர்ச்சியைத் தத்தெடுத்துக் கொண்டது.
இருந்தும் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டவனோ "சாகப் போகிறாயா? என் வெற்றியைக் காணாமல் சாகப் போகிறாயா? அத்தனை அவசரம் எதற்கு மித்ரா நானே வழியனுப்பி வைக்கின்றேன் பொறுமை கொள்" என்று கேலி பேச, சிறிது நேரம் என்றாலும் அவன் முக மாற்றம் மித்ரனின் கண்களிலிருந்து தப்பவில்லை...
அடுத்து எதையும் யோசிக்கவில்லை அவன் மூச்சை இழித்துப் பிடித்துத் தன்னை தானே அழித்துக் கொள்ளப் பார்க்க, சட்டென அவனது மந்திர கட்டுக்கள் அவிழ கீழே விழுந்திருந்தான்.
எழுந்தவன் கண்ணில் ஒரு வழியைக் கண்டுபிடித்து விட்ட வெளிச்சம்...
மார்த்தாண்டனுக்கோ கோபம் எல்லை கடந்தது. அவன் உருவாக்கியவன் இப்போது அவனுக்கே அவன் இலட்சியத்தில் இடராய் இருப்பான் என்று அவன் கனவா கண்டான்.
மித்ரனோ மீண்டும் மார்த்தாண்டனைப் பார்த்தபடி இதழ் வளைத்த புன்னகையுடன் மூச்சை உள்ளே இழுக்க, இந்த முறை பதறியது என்னனோ மார்த்தாண்டன் தான்.
"மித்ரா" என்ற அழைப்புடன் அவனை நெருங்கியவன் "வேண்டாம்" என்றான் தீர்க்கமான குரலில்...
மித்ரனின் புன்னகையும் அவனுடன் நின்றிருந்தவர்களின் புன்னகையும் ஒருங்கே விரிய, மார்த்தாண்டனுக்கு மண்டை சூடாகியது...
அவனுக்குப் பிறவி கொடுத்த தன் முட்டாள் தனத்தை எண்ணி எரிச்சல் கொண்டவனோ "என்ன வேண்டும் உனக்கு?" என்றான் கோபம் கொப்பளிக்கும் குரலில்...
அதற்கிடையில் அவன் அருகில் நொடியில் நெருங்கிய ஆத்ரீகனோ மித்ரனின் கழுத்தில் தன் வலக்கரம் வைத்து அவனைத் தூக்கி அந்தரத்தில் பிடித்தவன் "யார் தந்தையை யார் மிரட்டுவது... உன் உயிர் உனக்குப் பாரம் என்றால் நானே போக்கி விடுகிறேன்" என்று இன்னும் அழுத்த, மித்ரனின் முகம் வேதனையைத் தத்தெடுத்துக் கொண்டது.
தன் யாழ் தன்னைக் கொல்வதா??? கூடவே மகன் முகத்தில் இத்தனை ரௌத்திரம் என்று மித்ரன் பார்த்திராத ஒன்று...
இப்போது புன்னகைப்பது மார்த்தாண்டனின் முறை ஆனது...
"பார்த்தாயா மித்ரா நம் மகனின் வீரத்தை... உன்னை நீயே அழித்துக்கொண்டால் மட்டுமே எனக்கு ஆபத்து... உன்னை என்னால் அழிக்கவும் முடியாது, ஆனால் பார் நம் மகனால் உன்னை அழிக்க முடியும்" என்று சொல்லிச் சிரித்தவன் "நம் மகனின் கையால் உயிரைவிட ஆசையாய் இருக்கிறாய் போல் இருக்கிறதே!" என்றான்.
மீண்டும் அவனே "ஒரு நிமிடம் என்னையே அசைத்து விட்டாயே! என்னில் பாதி என்று நிரூபிக்கிறாயடா... என்ன பார்க்கிறாய்? நீ என்ன நினைத்துச் செய்தாய் என்று தெரியவில்லை... நிச்சயம் உன் உயிரை நீயே பறித்துக் கொண்டால் என் சாகாவரம் செயலிழந்து போகும். அதனாலேயே என் தடுமாற்றம்... ஆனால் நம் மகன் கையால் நீ அழிவதென்றால் நிச்சயம் எனக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று சத்தமாய் புன்னகைத்தான்.
"என்ன ரகசியத்தை அவனே உடைக்கின்றான் என்று பார்க்கிறாயா??? எதிரியே இல்லாமல் வென்றால் நன்றாகவா இருக்கும் உன்னால் முடிந்தவற்றை நீ செய்தால் தான் வெல்வதிலும் எனக்குத் திருப்தி… இதற்குப் பின் நீயும் என்னைத் தான் வணங்க வேண்டும்" என்றான் முகம் விரகசிக்க...
ஆத்ரீகனோ விடாமல் இன்னும் அழுத்தத்தைக் கூட்டியவனோ "ஆணையிடுங்கள் தந்தையே இவன் கதையை முடித்து விடுகிறேன்" என்க, மித்ரனோ அவன் முகத்தையே பார்த்தபடி "யா..ழ் நா..ன் உன் மித்..துடா, என்..னைப் பாரு யாழ், நீ இப்..போ வெளிய வ..ந்தா மட்டும் தான் யாழ் இந்..த உலக..த்தை அழிவுல இரு..ந்து காப்..பாத்த முடியும்" என்று திக்கி திணறிப் பேசி முடித்தவனின் முகத்தை ஆத்ரீகன் ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை...
மார்த்தாண்டனோ ஆத்ரீகனைப் பார்த்து இல்லை என்பதாய் சைகை செய்ய, அவனோ சட்டென மித்ரனைக் கீழே விட்டான்.
மித்ரனோ எழுந்தவன் "யாழ்" என்றபடி ஆத்ரீகன் அருகில் நெருங்க, அவனோ கை நீட்டி அவன் அசைவைத் தடுத்திருந்தான்.
மார்த்தாண்டனோ "ஹா...ஹா அவன் இப்போது உன் யாழ் இல்லை மித்ரா நம் மகன் ஆத்ரீகன்... அன்றே செல்ல வேண்டி இருந்த இவன் உயிரைக் காத்தது நீ... இல்லையே இன்று என் மகன் பூரண உடலோடு எனக்குக் கிடைக்க, இன்னும் நான் ஆண்டுகள் தவம் இருந்திருக்க வேண்டும்... அந்த நன்றிக்கேனும் உன்னை விட்டுவைக்க வேண்டுமே!" என்றவனைப் புரியாமல் பார்த்தான் மித்ரன்.
"என்ன பார்க்கிறாய்... இவன் மறுபிறவி எடுத்தது இதோ நிற்கிறாளே இவள் கொடுத்த வாக்கின் பலன்" என்று மந்திர கட்டில் நிற்கும் பூவிழியைக் காட்டியவன் மீண்டும் "முன்பொரு ஜென்மத்தில் நம் மனைவியிடம் நம் குழந்தையைக் காப்பேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறாள் அதனால் இவளுக்கே மகனாய் பிறந்தவன் இறந்து உன் மகனாக யாழினி வயிற்றில் உதிர்க்க வேண்டும் என்பது விதி... ஆனால் நீயோ சென்று கொண்டிருந்த அவன் உயிரின் பாதியை போகவிடாமல் உன் மூச்சுகாற்றின் அண்மை கொண்டு நிறுத்தி இருக்க, நம்மைப் போல் நம் மகனும் பாதியாய் இரு பிறவியாய் பிரிந்தான். உன் யாழினி வயிற்றில் ஒரு பாதியும் உன் வளர்ப்பு மகனாக இன்னொரு பாதியும்... இதோ அவன் பிறவி இரண்டையும் இணைத்து அவனுக்கு முழு உயிர் கொடுத்தாகி விட்டது. அவன் சக்தியும் முழுமை ஆகிவிட்டது... இனி யாராலும் அவனை வெல்ல முடியாது.. அன்று நீ அவனைக் காக்க வில்லை எனில் நிச்சயம் என் வெற்றி சத்தியமில்லை... அதனாலேயே என் பாதியான உன்மீது சற்று கனிவு தோன்றுகிறதடா" என்றான் உல்லாச மனநிலையுடன்...
தன்னை இதற்குப் பிறகு யாரால் அழிக்க முடியும் என்ற இறுமாப்பு அவனை எல்லாவற்றையும் பேச வைத்திருந்தது...
மித்ரன் அப்படியே சிலையாய் நின்றிருக்க, ஆத்ரீகனும் மார்த்தாண்டனும் பூஜை அருகே விரைந்தனர்.
மார்த்தாண்டனோ யாழினி முன்னே பூஜையில் அமர, அவன் அருகே ஆத்ரீகன் இனியாவின் முன்னே அமர்ந்தான்.
ஒரே நேரத்தில் இரு பூஜைகளும் ஆயத்தம் ஆனது...
மித்ரன் அப்படியே நிற்கக் கண்ட வான்மீகியோ "மகனே மனதைத் தளர விடாதே நிச்சயம் உன்னால் உன் மகனை வெளியே கொண்டு வர முடியும்... உன் மூச்சுக் காற்றில் உயிர் பெற்றான் என்றானே செல் என்னவென்று யோசி, அந்த மாலை உன் உதிரம் உன் மகனின் இருப்பிறவிகள் சேர்ந்த அந்த ஆத்ரீகனின் உதிரம் களப்பின் மார்தாண்டனை அழிக்கும் ஆயுதமாகும் சந்தர்ப்பத்தைத் தவற விடாதே!" என்று அவனுக்கு நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைக்க...
முயன்று மனதில் தைரியத்தை வரவழைத்தவனோ பூஜை அருகே சென்றான்.
பெண்கள் இருவரும் மயங்கிய நிலையில் இருக்க, நடப்பவை எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை...
பூஜையில் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருக்கும் மகனை நெருங்கிய மித்ரனோ ஏதேதோ பேசினான்.
அவர்கள் ஒன்றாய் கழித்த பொழுதுகளின் இனிமைகளை அவனுள் புகுத்த முனைய, மூடி இருந்த அவன் கண்களில் எந்த மாற்றமும் இல்லை...
உதடுகள் அதன் போக்கில் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தது.
இறுதியாய் அங்கேயே சரிந்து அமர்ந்த மித்ரனோ "உன் மித்து பேசுறேன் யாழ்... உன் அப்பா உனக்கு வேணாமா யாழ்? என்னோட யாழ் எவ்வளவு மென்மையானவன், இப்போ நீ காதலிச்ச பொண்ணையே கொல்லப் போறியா?? அப்பா உன்ன அப்படியா யாழ் வளர்த்தேன்... ஒருவாட்டி அப்பானு கூப்பிட மாட்டியா?" என்று ஏக்கக் கேள்வியுடன் நிறுத்த,
மூடி இருந்த ஆத்ரீகனின் கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் வழிய, கண்களைத் திறந்தவனின் கண்களில் இருந்த இரத்த சிவப்பு நிறம் காணாமல் போயிருந்தது.
மித்ரனோ மகிழ்வுடன் "யாழ்.. யாழ்.. அப்பா யாழ்.." என்று தன்னைச் சுட்டிக்காட்டி பேசினான்.
அத்தனை நேரம் அமைதியாய் பூஜையில் இருந்த மார்த்தாண்டனோ மாற்றம் உணர்ந்து விழிகளைத் திறந்தவன் "ஆத்ரீகா" என்றொரு அழைப்பைச் சிந்தினான்.
அவ்வளவு தான்... அத்தனை போராட்டத்தின் பின்பு மகிழின் உணர்வுகள் மேலேழுந்தது எல்லாம் ஒரு நொடிதான் அடுத்த நொடி ஆத்ரீகன் விழித்துக்கொள்ள, இரத்தச் சிவப்பாய் மாறிய அவன் விழிகளின் வீச்சில் தூரச் சென்று விழுந்தான் மித்ரன்...
அதனைக் கண்ட மாரத்தாண்டனின் இதழ்கள் அலட்சியமாய் விரிய, அவன் பார்வையில் 'என் ஒற்றை அழைப்புக்குக் கட்டுப்படுவான் என் மகன்' என்ற பெருமை ஒளிந்திருந்தது.
மீண்டும் விழிகளை மூடிக்கொண்ட ஆத்ரீகன் மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்க, அதன் பின்னான மித்ரனின் போராட்டம் பேச்சுகள் எல்லாம் அவனைச் சென்றடையாவிட்டாலும் மயக்கத்தில் படுத்திருந்த இனியாவின் காதினுள் புகுந்து கொண்டது.
அவள் மயக்கத்திலிருந்து லேசாகக் கண்ணை விழிக்க, முயன்றவளுக்கு உடலை அசைக்க முடியவில்லை...
மெல்ல வறண்ட இதழை ஈரப்படுத்தியவளோ முன்னே அமர்ந்திருந்தவளின் மீது பார்வையைச் செலுத்தினாள்..
இதழ்களோ "மகிழ்" என்று மொழிந்தது..
அவனிடம் அசைவில்லை என்றதும் சற்று பார்வையைத் திருப்ப, அங்கே மித்ரன் அவள் விழிகளில் விழுந்தான்.
"மாமா" என்றவளின் குரலில் அவள் புறம் அவன் பார்வை திரும்ப, "டோல், உனக்கு ஒன்னும் ஆகாதுடா மாமா இருக்கேன்ல" என்றவன் மகிழிடம் மீண்டும் பேச விழைய ஒரு குரல் அவனைத் தடுத்தது.
மித்ரனோ அப்படியே அசைவற்று நின்றுவிட்டான்...
இந்தக் குரல்... இந்த ஒருகுரலைக் கேட்க, அவன் பட்ட பாடுகள் தான் எத்தனை எத்தனை...
எத்தனை இரவுகள் தனிமையில் இக்குறலுக்காக ஏங்கித் தவித்திருப்பான்.
ஆனால் இன்று காதின் அருகே கேட்டும், திரும்பினால் அருகில் சென்று விடும் தூரத்தில் இருந்தும் அசைய முடியவில்லை அவனால்...
மனதோடு உடலும் மரத்துவிட கண்களில் குருதித்துளி ரணப்பட்டு ஆவியாகி வெளியேறியது.
மீண்டும் அதே குரல் "தேவ்" என்று மொழிய, அதற்கு மேல் முடியாமல் மனைவியின் புறம் திரும்பியவனுக்கு அவளை அப்படியொரு நிலையில் பார்க்கவே முடியவில்லை....
அவளுக்கோ அவனைப் பிரிந்து சில மாதங்கள் தான், அதுவே அவளைக் கூறு போட்டிருக்க... அவனுக்கோ அது சில ரணமான வருடங்களின் நீட்சி அல்லவா???
"யாழ்" என்று அழைத்தவனுக்கு அவளை நெருங்கச் சூழ்நிலை இடமளிக்க வில்லை...
அவளிடம் செல்லக் காலை வைத்த கணம் இங்கே கண்களைத் திறந்துகொண்டான் ஆதரீகன்...
மந்திர உச்சரிப்புகள் முடிந்திருக்க, ஐம்பூதங்களும் இப்போது ஆத்ரீகனின் கட்டுப்பாட்டில் நின்றிருந்தது.
அவன் அமர்ந்திருந்த பூஜைக்கான இடத்தைத் தவிர மற்ற இடங்களில் சுற்றிலும் மழை அதன் ஆதிக்கத்தை செலுத்தி இருக்க, இதோ வாளைக் கையில் ஏந்திவிட்டான் ஆத்ரீகன்.
நொடி நேரத்துக்குள் நிகழவிருக்கும் பேராபத்தை தடுக்கும் வழி அறியாமல் மித்ரனோ சட்டைப்பைக்குள் இருக்கும் மாலையை எடுத்து வலது கரத்தினுள் புதைத்துக் கொண்டான்.
தன்னை நோக்கி நீண்ட வாளினையும் அதனை ஏந்தி நின்றவனையும் பார்த்த இனியாவின் மனதுக்குள், அந்த நேரம் அவளிடம் காதல் சொன்ன மகிழின் எண்ணங்களின் பிரவாகம் ஊற்றெடுக்க அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.
தனது கரத்தில் அந்த வாளால் ஒரு கோடு போட்டுகொண்ட ஆத்ரீகனோ அந்த இரத்தத் துளியை இனியாவின் கழுத்தில் சிந்த விட்டான்.
தன்மேல் சொட்டிய இரத்ததின் வெப்பம் உணர்ந்த இனியாவின் பார்வை அவனைத் தாண்டி எங்கும் அகலவில்லை...
அவள் விழிகளை ஊருடுவிய அவன் பார்வையும் உக்கிரம் பெற, இரத்தத்துளி சிந்திய இடத்தைக் குறி பார்த்து வீசிய அவனது வாளானது அவள் கழுத்தை அடைய ஒரு நொடி இடைவெளியில் சட்டென நின்றது.
நடந்த செயலில் ஆத்ரீகனின் பார்வை உக்கிரமடைய, மித்ரனைக் கண்களால் எரித்தான்.
அவன் ஓங்கிய வாளைக் கைகளால் பிடித்துத் தடுத்த மித்ரனின் செயல் அவனை மூர்க்கனாக்கி இருக்க, கையில் இருந்த வாளில் அழுத்தத்தைக் கூட்ட, மித்ரனின் கரத்திலிருந்து குருதி தெரித்தது...
அப்போதும் மித்ரன் வாளை விடவில்லை... மாறாக அவன் இதழ்கள் புன்னகைத்தது...
அத்தனை நேரம் அதனைப் பார்த்துக்கொண்டிருந்த மாரத்தாண்டனுக்கு ஏதோ தவறாகப் பட, புரிந்து கொண்ட நொடி, பூஜையில் இருந்தும் அவனால் பாதியில் எழ முடியாது என்பதை உணர்ந்தவன் "ஆத்ரீகா வேண்டாம்" என்றான் சத்தமாக, கோபத்தில் இருந்த மகனுக்கு அது கேட்காமல் போனது.
இந்த முறை அதிக கோபத்தில் பார்த்த அவன் பார்வையில் தூக்கி வீசப்பட்ட மித்ரனின் கையிலிருந்த முத்து மாலை அவர்கள் இருவர் உதிரத்திலும் நனைந்திருந்தது.
மித்ரன் அந்த வாளைப் பிடித்த காரணமும் அதுதானே!...
அந்த முத்து மாலையோ தானாக ஒரு வாளாக மாற்றம் பெற, இப்போது மார்த்தாண்டனின் முகம் கோபத்தில் ஜொலித்தது.
இவன் என்ன செய்து விடுவான் என்ற எண்ணத்துடன், அவனை அப்படியே விட்டிருக்க, இதோ அவனை அழிக்கும் ஆயுதத்தைக் கொண்டு வந்து விட்டானே!
அமர்ந்த பூஜையை விட்டு எழுந்தால் யாழினியின் உடல் தன்னால் அழிந்துவிடும், எழவும் முடியாமல் மித்ரனைத் தடுக்கவும் முடியாமல் கோபத்தோடு அவனைப் பார்த்தவன் "ஆத்ரீகா அவனைக் கொன்று விடு, என்னை நெருங்க விடாதே" என்றவன் "பூஜையை விட்டு எழ வேண்டாம்" என்று கட்டளையும் பிறப்பித்தான்.
வான்மீகியோ நிலைமை உணர்ந்து "மித்ரா, மார்த்தாண்டனை கொன்று விடு, அவனால் பூஜையை விட்டு எழ முடியாது, பூஜையில் வைத்தே அவனைக் கொன்றால் மட்டுமே உன் மனைவியின் உயிர் உடல் இரண்டுமே மீளும்" என்று சத்தமாய் கத்தினார்.
ஆத்ரீகனோ அவரைத் திரும்பிப் பார்த்தவன் "நான் இருக்கும்போது, என்னைத் தாண்டி என் தந்தையை கொல்வதா?" என்று கேலியாய் கேட்டபடி இதழ் குவித்து அவன் காற்றை ஊத அவன் இதழ்களிலிருந்து புறப்பட்ட கரும் புகைகள் மித்ரனை வட்டமிட்டது...
மித்ரனோ கையில் இருக்கும் வாள் கொண்டு அவற்றை வெட்டி வீழ்த்த மீண்டும் மீண்டும் எண்ணிக்கை பல்கி பெருகி அவனையே மொய்த்தது.
அவன் படும் பாட்டைப் பார்த்த தந்தையும் மகனும் ஒரு சேரப் புன்னகைத்து மீண்டும் பூஜையை ஆரம்பித்தனர்.
இப்போது மீண்டும் வாள் ஆத்ரீகன் கையில் ஏந்தப்பட்டது.
"மகிழ், எனக்கு எப்பவுமே அன்புக்கு ராசி இல்லை போல, அப்போ என் அத்த என் மேல பாசமா இருந்தாங்க அவங்க என்னவிட்டு போய்ட்டாங்க... அப்பறம் அண்ணி பாசம் வெச்சாங்க அவங்களையும் பிரிஞ்சு வரணும்னு என் நிலைமை... உங்க வீட்டுக்கு வந்து மாமாவோட பாசம் கெடச்சிச்சு, அப்பறம் இங்க வந்து உங்க அன்ப காதலத் தெரிஞ்சிகிட்டேன் ஆனா பாருங்க தெரிஞ்சிகிட்ட கொஞ்ச நேரத்துலயே எல்லாமே முடியப்போகுது... இப்போ சாகப் போறதுல எனக்குக் கவலையே இல்லை... எப்போவோ போக வேண்டிய என்னோட உயிர் இப்படி உங்க கையாள போறதுல சந்தோசம் தான்... ஆனா உலகத்தோட அழிவு என் உயிர் அழிவுல இருந்து ஆரம்பமாகப் போகுதுனு உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது மகிழ்... எனக்காகவே பிறந்தவர் நீங்க, அப்படி இருக்கும்போது நாம சேர்ந்து வாழ வேண்டாமா மகிழ்" என்று அவள் பேசப் பேச, ஆத்ரீகனின் கரமோ உயர்ந்து, மீண்டும் தாழ்ந்து என ஆட்டம் காட்டியது...
உள்ளே மகிழோ ஏற்கனவே தந்தையின் போராட்டத்தில் சிறிது முழித்துக் கொண்டவன், இவள் பேச்சில் வெளி வரப் போராடினான்.
ஆனால் அவனால் முடியவில்லை... இவளது ஒவ்வொரு வார்த்தையும் உள்ளே இருக்கும் மகிழின் மனதை உறுதிப்படுத்த, வெளியே வரத்துடித்தவனை ஆத்ரீகனின் ஆளுமை தடுத்தது.
அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் உள்ளே இருக்கும் மகிழின் போராட்டம் புரிய மனதில் ஒரு நிம்மதி... ஆனால் மார்த்தாண்டனோ கொதித்துப் போய் இருந்தான்.
மகிழ் வெளிப்படும் போதெல்லாம் கரும்புகையின் ஆதிக்கம் குறைந்து அவற்றுடன் போராடும் மித்ரனின் தடைகள் நீங்கிக் கொண்டிருந்தது.
வான்மீகியோ 'பைரவா அந்தப் பெண்ணின் முயற்சியில் துணை நில்... வெளியே வரப் போராடும் அந்த ஆன்மாவுக்கு உன் உதவி வேண்டும்" என்று மனமார வேண்டிக்கொண்ட, அந்த நேரம் அங்கே பைரவன் கோயிலில், அனைத்து மணிகளும் தன்னால் வேகமேடுத்து அசைய, பைரவனின் சிலையில் விழிகள் திறந்து கொள்ள, சிலையிலிருந்து அவனது அருபம் எழுந்து வெளியே வந்தது.
காதலைத் தேடும்...
இப்படிக்கு,
உங்கள் VSV-28
Latest Post: நேசம் 15 Our newest member: P.Paramu Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page