About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
காலம் தாண்டிய பயணம் -11
மித்ரனுக்கு வந்த கோபத்தில் தலைவலி கூடியது தான் மிச்சம்...
எழுந்தமர்ந்தவன் எதிரில் சற்று தொலைவில் நின்றிருந்தவனை முடிந்த மட்டும் முறைத்தான்.
அவன் பார்வையை உணர்ந்த எதிரில் இருந்தவனோ புன்னகையுடன் அருகில் நின்றிருந்தவளிடம் "இங்கயே உக்காரு வந்துடுறேன்" என்று மொழிந்தவன் இவனை நெருங்க, இன்னும் கோபம் தான் வந்தது மித்ரனுக்கு...
அதில் மீண்டும் புன்னகை அவனுக்கு… சின்னப் புன்னகையுடனே "ப்ப்பா இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே முறச்சிட்டு இருப்ப? சீக்கிரம் எழுந்துக்கோ இது என்ன இடம் ஏதுனு விசாரிக்க வேணாமா? ஒரு டெடிகேஷன் இல்லப்பா உன்கிட்ட" என்றான் மகிழ்.
அதில் சலித்துக் கொண்ட மித்ரனோ "என்ன யாழ் பண்ணி வெச்சிருக்க நீ? இது உனக்குத் தேவையா? எதுக்கு வந்த நீ? அதுலயும் டோல்லையும் கூட்டிட்டு வந்திருக்க, உனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு" என்று எழ முயல முடியாமல் போனது மித்ரனுக்கு…
சட்டெனக் கால்கள் ஒத்துழைக்க வில்லை மீண்டும் எழுந்தவாக்கில் அவன் அமர்ந்து விட, கரத்தை நீட்டி இருந்தான் மகிழ்...
அதனைப் பற்றி எழுந்தவனோ மகனின் முதுகில் ஒரு அடி வைத்து, அங்கே மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தவளை நோக்கி நடை போட்டான்.
கூடவே மகிழும் நடக்க, "ஏன்டா இடியட் நீ தான் கொழுப்பு எடுத்துப்போய் வந்தன்னா இவ எதுக்குடா?" என்று பல்லைக் கடித்தபடி கேட்க,
அவனோ "நீங்க உங்க காதலைத் தேடி வந்தீங்க, நான் என் காதலோட உங்க காதலத் தேடி வந்திருக்கேன்" என்க, முதலில் அவன் சொன்னது புரியாமல் போனாலும் மேலும் இரண்டு எட்டு வைத்து அவன் சொன்னதை உள்வாங்கிய மித்ரனுக்கு புரிந்தது சேதி...
"யாழ்" என்று அதிர்ச்சியாய் அவன் முகம் பார்க்க, அவனும் சம்மதமாய் தலையசைத்தவன் "ஷி இஸ் மை லவ்ப்பா... என் தேவதை, என்னோட தேடல்… என் ஸ்பைசி" என்றான் குரலில் அத்தனை காதலை சுமந்து.
மித்ரனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை... மகனின் இரண்டு வருட தேடல் அவன் அறிந்தது தான். ஆனால் இந்தத் திருப்பம் அவன் அறியவில்லை...
"ஏன் யாழ் எங்கிட்ட சொல்லல, டோல் தான் உன் ஆளுன்னு?" என்று கேட்க, அந்தக் கேள்வியே மகிழிக்கு தித்தித்தது.
அது அவன் முகத்திலேயே பிரதிபலிக்க, மித்ரனின் மனம் சட்டெனச் சுருங்கியது.
"இவ்வளவு லவ் வெச்சிட்டு அப்பறம் ஏன் யாழ் இங்க? திருப்பிப் போவோமான்னு கூடத் தெரியாம உன் காதலையும் புதைக்கப் பார்த்திருக்கியே!" என்றவனின் குரலில் மித மிஞ்சிய வேதனை தான் தெரிந்தது.
"ப்பா சில உணர்வுகளை வெளில சொல்ல முடியாதுப்பா... அப்படித்தான் உனக்கான என்னோட உணர்வுகளும்... உனக்கு இல்லாத எதுவும் எனக்கும் வேணாம்ப்பா அதனால தான் அவகிட்ட கூட என் காதல நான் சொல்லல, அம்மாவ உன்கிட்ட கொடுத்துட்டு தான் எனக்குன்னு அவளை எடுத்துப்பேன்ப்பா, சோ என்ன பண்ணுறீங்க புருஷனும் பொண்டாடியும் சேர்ந்து ஜோடியா எங்கள சேர்த்து வைக்கிறீங்க, அப்பறம் அவ கிட்ட காதலை சொல்லி நான் சம்சாரி ஆகிக்கிறேன்" என்றான் மகிழ்...
மித்ரன் அடுத்து பேச முதல் இனியா அமர்ந்திருந்த மரத்தின் அருகே தந்தையும் மகனும் வந்துவிட, பேச்சு அப்படியே தடைப்பட்டது.
மித்ரனோ "என்னாச்சு டோல்?" என்றான் அவள் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த விதம் கண்டு கேள்வியாக...
அவள் பதில் உரைக்கும் முன்பு மகிழே "ரொம்ப வாமிட்ப்பா அவளுக்கு... நான் மயக்கம் தெளிஞ்சு எழுந்து பார்த்தேன் வாமிட் பண்ணிட்டு இருந்தா... அதான் இங்க உட்கார சொன்னேன். குடிக்க தண்ணீர் கொடுக்கணும், இங்க கண்ணுக்கு எட்டுன தூரத்துக்கு மணல் மட்டும் தானே தெரியுது… ஆட்கள் யாரையும் காணோம். என்ன இடம்னும் புரியல… கொஞ்சம் நடப்போம்" என்றான்.
மித்ரனும் இனியாவிடம் "டோல் நடக்க முடியுமாடா மாமா வேணா தூக்கிக்கட்டுமா?" என்று கேட்க, மகிழோ முடிந்த மட்டும் தந்தையை முறைத்தான்.
மித்ரனுக்கு மகனின் முறைப்பு புரிந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை…
இனியாவுக்கோ தலைவலி உயிர் போனது. ஏற்கனவே வாந்தி எடுத்ததன் விளைவாக உடலில் சக்தி மொத்தமும் வடிந்தது போல் இருக்க, நடக்க முடியும் என்று தோன்றவில்லை...
முயன்று மித்ரனைப் பார்த்தவள் "தல வலிக்குது மாமா" என்று அவன் கரங்களைப் பற்றிக்கொள்ள, அவனுக்குப் பாவமாய் போய்விட்டது.
இத்தனை தூர காலப்பயணத்தை அவள் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் உண்டான ஒவ்வாமை இது என்பது இரு ஆண்களுக்கும் புரிந்தது.
மகிழின் கண்களிலோ வேதனை...
அவனுக்கோ அவளை ஆறுதலாய் அணைத்துக்கொள்ள உள்ளம் பரபரத்தது.
அது மித்ரனின் கண்ணில் இருந்தும் தப்பவில்லை...
மகனின் தோளில் ஆதரவாய் அழுத்தம் ஒன்றைக் கொடுத்தவனோ இனியாவை கைகளில் தூக்கிக் கொண்டான்.
அவளிடம் அதற்கு மறுப்பு இருக்கவில்லை என்பதை விட, மறுப்பு சொல்லத் தோன்றவில்லை என்பதே உண்மை...
மித்ரனிடம் ஒரு அந்நியத்தன்மை அவளுக்குத் தோன்றியதே இல்லை அல்லவா??
அப்படியே மூவரும் சிறிது தூரம் சென்றிருக்க, அங்கே அவர்களுக்கு எதிரில் ஒரு வயதானவர் ஒருவரைக் கண்ட ஆண்கள் இருவருக்கும் உண்மையில் நிம்மதி தான்...
நடையை எட்டப்போட்டு அவரிடம் நெருங்கினர்.
மகிழோ அவரிடம் "பெரியவரே, இது எந்த இடம்? இங்க குடிக்க தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்க, அவரோ "இது காலபைரவன் கோட்டை மகனே" என்று அருகில் மித்ரனின் கையில் இருக்கும் இனியாவைப் பார்த்தவர் தனது பைக்குள் இருந்த குடுவை போன்ற ஒன்றை எடுத்து மகிழிடம் கொடுத்திருந்தார்.
மித்ரனோ யோசனையுடன் இனியாவை கீழே இறக்கி, மகிழின் பொறுப்பில் விட்டவன் "இது எந்த வருஷம் பெரியவரே? ஊருக்குள் எப்படி போகணும்?" என்றான் சரியாக வந்திருக்கிறோமா என உறுதிப்படுத்த எண்ணி...
அவரோ "இது ஐந்தாம் நூற்றாண்டு மகனே, வருடம் நானூற்றி ஐம்பது, அதோ தெரிகிறது காலபைரவன் கோட்டை இப்படியே சிறிது தூரம் சென்றால் ஊருக்குள் சென்று விடலாம்" என்றவர் குடுவையைப் பெற்றுக்கொண்டு முன்னே நடக்க, மகன் தந்தை இருவர் கண்ணிலும் அதிர்ச்சியின் ரேகை...
அதற்குள் இங்கே இனியா ஓரளவுக்கு தேறி விட, மித்ரனோ அவளிடம் நிலைமையை விளக்கியவன் "டோல் லிசன் இது நம்ம கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம். நம்பக் கஷ்டம் தான் ஆனா இட்ஸ் ஹெப்பன்ட்... சோ என்னோட வைஃப்பக் கண்டுபிடிக்க இங்க வந்திருக்கோம், டிரஸ்ட் மீ உனக்கு எதுவும் ஆகாம பார்த்துக்க வேண்டுயது மாமாவோட பொறுப்பு" என்றான் அவள் கண்களைப் பார்த்தபடியே தவிப்புடன்...
அவளோ புன்னகையுடன் அவனைப் பார்த்தவள் "இது நீங்க காப்பாத்திக் கொடுத்த உயிர் மாமா, ஊர்ல பிடிக்காத கல்யாணம்... அதுக்கு பயந்து வாழ வழிய தேடி ஓடி வந்த என்ன, என் மானத்த அழிக்க நினைச்சவங்க கிட்ட இருந்து காப்பாத்தி இத்தன நாளா கூடவே வெச்சு பார்த்துகிட்ட உங்களுக்குச் செய்யாம யாருக்கு மாமா" என்க,
மகிழோ இடையில் "வாழப் பிடிக்காம வந்தியா? அப்போ உன் லவ்வர் கூட ஓடி வரலையா?" என்று அதிமுக்கிய கேள்வியைக் கேட்டு மித்ரனின் முறைப்பைப் பெற்றுக்கொண்டான்.
அவளோ இடம் வளமாகத் தலையசைத்து மகிழைப் பார்த்தவள் "இவங்க என்னையும் சேர்த்து கூட்டிட்டு வந்தது எவ்வளவு நல்லதா போயிடிச்சு, இதுல என் பங்கும் இருக்குறதுல எனக்குச் சந்தோசம் தான்... இன்னொரு நல்ல விஷயம் இது என்னோட ஊரு, நிச்சயம் என்னால ஏதாச்சும் உதவி செய்ய முடியும்" என்றாள்.
அதுவரை அவள் பேசிய நீண்ட வசனம் இதுவாகத் தான் இருக்கும்...
இவர்களிடம் பயந்து அவள் வார்த்தைகளை முழுங்க வேண்டியதில்லையே! அதனாலேயே விஜயாவிற்கு அடுத்து இவர்களிடம் சாதாரணமாய் இருந்தது அவள் பேச்சு...
மித்ரனோ "உன்னோட ஊரா?" என்று கேள்வி எழுப்ப, மகிழோ "மித்து இப்படியே இங்கயே பேசிட்டு இருக்க போறியா? ஏற்கனவே சம்மந்தமே இல்லாத இடத்துல வந்து மாட்டிக்கிட்டோம்னு இருக்கு வா ஊருக்குள்ள போய் விசாரிப்போம்" என்றவன் மீண்டும், "அதுசரி நீ மனசுல நினைக்கிற இடத்துக்குத் தான் அந்த மாலை கொண்டு போகும்னு சொன்ன, அப்போ அம்மா காணாம போன நேரத்துக்குத்தானே போய் இருக்கணும், அப்பறம் எப்படி இவ்வளவு நூற்றாண்டு கடந்து?" என்று மண்டையைக் குடையும் கேள்வியைக் கேட்டான்.
அதில் மித்ரன் இனியாவிடம் கேட்க வந்த கேள்வி திசை மாறி இவன் கேள்வியில் வந்து நின்றது.
"எஸ் அப்படி தான், ஆனா நான் மனசுல என் யாழ் இருக்குற இடத்துக்கு வரணும்னு நினைச்சேன் யாழ்… சோ நாம இங்க வந்திருக்கோம் அப்படினா எப்படியோ என் யாழ் இங்க வந்து சிக்கி இருக்கனும்" என்றான் சரியாகக் கணித்து...
"எப்போவ், நீ குழப்பாத முதல்ல, என்னையும் யாழ் எங்குற அம்மாவையும் யாழ் எங்குற… சொன்னாலும் கேக்குறது இல்லை, இனிமேல் நீ கூப்பிட்டா ரெண்டு பேரும் திரும்பப் போறோம் மாட்டப் போற நீ" என்றவனது ஆர்வம் மித்ரனையும் தொற்றிக்கொள்ள, இப்போதே அவன் மனைவி கிடைத்து விட்டதைப் போல் பூரிப்பு அவனிடம்...
அதன் பின் அவர்கள் பயணம் தொடர சிறிது தூரத்திலேயே ஊரின் நுழைவாயில் கண்ணில் பட்டது.
அங்கே அந்த நுழைவாயில் அருகே யாரோ நிற்பது தெரிந்தது ஆனால் முதுகுத் தோற்றம் தெரிந்ததால் முகம் தெரியவில்லை…
இன்னும் நெருங்க நெருங்க மித்ரனுக்கு முகத்தில் அத்தனை பரவசம் வந்து போனது. கூடவே ஏனென்று புரியாத கலக்கமும்...
காரணம் அந்த உருவத்துக்கு முன்னே நின்று பேசிய அவனவள்,
எத்தனை வருடம் கழித்து காணும் அவள் முகம்... பார்த்துக்கொண்டே தான் இருந்தான்...
இங்கே தான் இருக்கிறாள் என்று தெரியும், அவன் மனமும் அதையே அடித்துச் சொன்னது ஆனால் இவ்வளவு விரைவில் அவளைக் காண்போம் என்றே எண்ணவில்லை அவன்...
இப்போது கண்டுவிட, பார்த்தது பார்த்தபடியே மெல்ல அவர்களை நெருங்கினான்.
சற்றுத் தொலைவில் தான் அவர்கள் நின்றிருக்க பேசுவது எதுவும் புரியவில்லை ஆனால் முன்னே நின்றிருந்தவனை அவள் அணைத்து அழுதது புரிய, மித்ரனின் உடலில் ஒரு திடுக்கிடல்...
அடுத்து என்னவென்று உணர்வதற்கு முன்பே அந்த ஆடவன் யாழினியை தூக்கிச் சென்றிருக்க, "யாழ்" என்று கத்தியபடி பின்னால் ஓடினான் மித்ரன்.
வானில் பறப்பவனை ஓடிச் சென்று பிடித்து விடத்தான் முடியுமா என்ன?
சிறிது தூரத்தில் அவன் அவ்விடத்திலே மடிந்து அமர, அவன் தோளில் ஒரு கரம் ஆதரவாய் அழுத்தம் கொடுத்தது.
___________________________
மாலை நேரம் அங்கே அந்தக் குகைக்குள் ஒரு ஓரத்தில் கண்களில் மிரட்சியுடன் அமர்ந்திருந்தாள் யாழினி...
அங்கே அருபமாய் நின்றிருந்த மோகினியோ யாழினியைப் பார்த்தபடி "வளவா என்னைப்போலவே இருக்கிறாளடா" என்க, புன்னகைத்த மார்த்தாண்டனோ "உன்னைப் போலாவா?" என்று கேட்டு மீண்டும் சத்தமாய் சிரித்தவன் "உன்னைப் போல இல்லையடி, நீயே தான்" என்றிருந்தான் அவன்.
அவளோ கேள்வியாகப் பார்க்க, அவனே மீண்டும் "உன் மறுபிறவி அவள்... உனக்கான உடலும் அவளே!" என்றான்.
அவளோ சந்தோசமாகப் புன்னகைத்தபடி "இன்னும் என்ன தாமதம் வளவா, இப்போதே இவள் உடல் எனக்கு வேண்டும், எம் மகன் இந்த உலகை ஆள வேண்டும். மக்களின் மரண ஓலத்தின் முன்னே சிம்மாசனமாய் எம் தீய சக்தி சாம்ராச்சியம் வீற்றிருக்க வேண்டும் வளவா" என்றாள் கண்களில் தீயுடன்...
"இன்றே நிகழும் கவலை வேண்டாம், நள்ளிரவு வரை பொறுத்திரு, இன்னும் சில மணி நேரங்களில் நம் ஆத்ரீகன் நம் கைகளில்" என்றான் யாழியைப் பார்த்தபடியே!
யாழினிக்கோ அவன் முகத்தைப் பார்க்கப் பார்க்க ஏதோ செய்தது...
கண்களை இறுக மூடியவளின் உதடுகளோ "தேவ்" என்ற உச்சரிப்பை விடவில்லை...
பூவிழி சொல்லி இவனைப் பற்றி அறிந்திருக்கிறாள் தான்...
ஆனால் அது தன்னைச் சுற்றி இப்படி பின்னப்பட்ருக்கும் என்று இதுவரை அறிந்திருக்கவில்லை...
இப்போது தெரிந்து கொண்ட உண்மை வலிக்க, கரங்களோ அவளை நம்பி அவளுக்குள் பூத்திருந்த சிறு மொட்டை அரவணைத்துக் கொண்டது.
இதே நேரம் அங்கே பைரவன் கோயிலில், அதே மனநிலையில் தான் மித்ரனும் அமர்ந்திருந்தான்.
மகிழோ "என்ன சொல்லுறீங்க? அது எப்படி சாகா வரம் பெற்ற ஒருத்தன் மறுபிறவி எடுக்கலாம்? இதெல்லாம் எப்படி நம்புறது?" என்று எரிச்சல் குரலில் சத்தமாய்க் கேட்க, புன்னகைத்தார் வான்மீகி...
சற்று முன்னர் தான் ஊருக்குள் நுழைந்திருந்தனர் மூவரும்...
அவர்களை முதலில் கண்டது என்னவோ துயிலன் தான். பார்த்ததும் முதலில் அதிர்ச்சி தான் அவனுக்கு, பின்னர் யாரென்று விசாரித்தத்தில் நிலைமை ஓரளவுக்குப் புரிய தந்தையிடம் அழைத்து வந்திருந்தான்.
கோயிலில் தியானத்தில் அமர்ந்திருந்த இளவேந்தன் மித்ரனைக் கண்டதும் "இன்னும் யாரின் உயிரை எடுக்க வந்திருக்கிறாய் மார்த்தாண்டா, எத்தனை உயிரைக் கொன்று குவித்தும் உன் வெறி அடங்கவில்லையோ?" என்றவர் கோபமாய் எழ, ஒரு குரல் அவரைத் தடுத்தது.
"மகனே அவசரம் வேண்டாம், நீ நினைப்பது சரியே ஆனாலும் இவன் கொடூரனல்ல" என்றவர் வேறு யாருமில்லை, சித்தர் வான்மீகி தான்.
தேவை ஏற்படின் அவர் அங்கே தோன்றுவார் என்பது இளவேந்தன் அறிந்ததே...
இன்றும் அதேபோல் திடீரென அங்கே தோன்றிய அவரை வணங்கிய இளவேந்தனோ "சுவாமி தாங்கள் சொல்ல வருவது?" என்று கேள்வியுடன் நிறுத்த, வான்மீகி தொடர்ந்தார்.
"உன் மூத்ததையர்கள் என்னிடம் கொடுத்துச் சென்ற பொறுப்பை நிறைவேற்றவே எம்பெருமானார் ஈசனின் அவதாரமான பைரவனின் துணையுடன் இவர்களை இங்கு வரவழைத்தேன் மகனே!" என்றவர் மகிழிடம் "உன் தந்தையை அழைத்து வந்துவிட்டாயே வளவா... மிக்க நன்றி" என்றார் புன்னகையுடன்...
அங்கு நின்றிருந்த மற்ற நால்வரும் குழப்பதுடன் நிற்க, வான்மீகியோ "இவன் மார்த்தாண்டனின் மறுபிறவி" என்று சொன்னவர் மகிழைப் பார்த்து அர்த்தமாய் புன்னகைத்தார்.
அவர் புன்னகையின் பின் ஒளிந்திருக்கும் ரகசியம் அவர் மட்டுமே அறிந்தது.
அந்த நேரம் தான் மகிழ் அந்தக் கேள்வியைக் கேட்டது…
"மார்த்தாண்டன் சாகா வரம் பெற்றவன் தான். ஆனால் மறுபிறவி அவன் முடிவு... அவன் மனைவி மோகினி, மறுபிறவி எடுக்கவிருக்கிறாள் என்று அறிந்தவனோ பல நாள் யாகத்தின் பதிலாய் அவன் உயிரின் பாதியை காணிக்கையாய் செலுத்தி மறுபிறவி எடுத்திருந்தான்... அதன் விளைவால் இங்கு அவனால் அவனது இரத்த சொந்தம் அவன் உறவுகள் தவிர்த்து யார் கண்ணுக்குக்கும் புலப்பட முடியாமல் போனது. அதில் அவனுக்குக் கவலை இருந்ததில்லை ஆனால் அவன் எண்ணியது போல் மறுபிறவி எடுத்திருந்தாலும் துரதிஷ்ட்ட வசமாக அவனால் அவன் மறுபிறவியான உன்னுள் அவனது கடந்த கால ஞாபகத்தைக் கொண்டு வர முடியவில்லை... அப்படி நிகழ்ந்திருந்தால் பேரழிவு நிச்சயம்" என்றார் இறுதியில் மித்ரனை பார்த்தபடி...
துயிலேனோ "இவை எல்லாம் எதுக்காக சுவாமி?" என்றான் கேள்வியாக...
பின்னே இத்தனை உயிர் எடுக்கப்பட்டிருக்க, இதோ காலம் கடந்தும் தொடர்கிறதே!
வான்மீகியோ "எல்லாம் மார்த்தாண்டனின் பேராசை துயிலா, அவன் தந்தை வீரவேந்தன் மட்டுமே அறிந்த ரகசியம் இந்தக் காலம் கடக்கும் முத்து மாலை… அரத்த மோகினிக்கு இது தெரியும். அதனை அடைய ஆவல் கொண்டாள் அவள். ஆனால் ஊருக்குள் வர முடியாது என்பதால் அவள் தேர்ந்தெடுத்தவன் தான் அவளது மகள்மீது காதலில் திளைத்திருந்த மார்த்தாண்டன். அவனும் அவள் சொல்படி அதனை அடையக் காத்திருந்தான். ஆனால் இறுதி வரை அந்த ரகசியத்தை அறிய முடியாமல் போன கோபம் அவனை மூர்க்கனாக்கியது. அதனாலேயே அகோரிகளுடன் யாகம் செய்து இந்த உலகையே அடக்கி ஆள அவன் உயிர் நீரை இவ்வுலகில் உதயமாக்கினான். அதுவரை அந்த முத்துமாலை மீதிருந்த அவன் ஆசை உலகையையே ஆளும் பேராசையாக மாறியிருந்தது. ஆனால் வீரவேந்தனோ பிறக்க முதலே அவன் கருவை அழித்திருக்க, இன்னும் மூர்க்கமாகி இருந்தான் மார்த்தாண்டன்... இதோ அவன் மனைவி மகனை இவ்வுலகில் மீண்டும் கொண்டு வருவேன் என யாரும் நெருங்க முடியாத அகோராதிபதியாக மாறி நிற்கிறான்" என்றார்.
அவர் சொன்னவற்றை உள்வாங்கிய மித்ரனோ "அப்பறம் எப்படி என் மனைவியைக் காப்பாத்துறது சாமி? என்றவனின் மனதில் இருந்த கவலை அவன் குரலிலேயே பிரதிபலித்தது.
அவரோ "கவலை வேண்டாம் மகனே! மார்த்தாண்டன் உன் மனைவியை எதற்காக அழைத்து வந்தானோ அந்த எண்ணம் ஈடேற அவனுக்கு இவள் உதவி வேண்டும். காலம் கடந்து அவன் பயணம் செய்தாலேயன்றி கடந்து சென்ற அந்த அமாவாசை நாளை விரைவில் அடைய முடியாது, அவன் மனைவிக்கு உடலும் அழிக்க முடியாது" என்றார் இனியாவைக் காட்டியபடி...
மித்ரனோ "இவளா, இவ எதுக்கு? இவளுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையே" என்றான் அவசரமாய்...
வான்மீகியோ புன்னகைத்தவர் "தொடர்பு இல்லை என்பது உன் எண்ணம் மகனே! உன்னவளின் இரத்த சொந்தம் அவள்… இவளைப் பலி கொடுத்தால் தான் அந்த மார்த்தாண்டனுக்குக் காலப் பயணம் செய்ய வழி பிறக்கும்" என்றார்.
"இரத்த சொந்தமா?" என்று கேட்டவனுக்கு எல்லாம் புதிராகவே தோன்றியது.
அவனைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு விடயமும் ஏதேதோ வினாவைத் தொக்கியே நிற்கின்றது.
கிடைக்கும் விடையும் இன்னொரு வினாவை எழுப்புகிறதே!
வான்மீகி புன்னகைத்தவர் "இவள் யாழின் இனிமையானவளன்றோ?" என்று வினாத் தொடுக்க, மித்ரனின் எண்ணத்தில் 'இனிக்குட்டியையும் நம்ம கூடவே வெச்சு பார்த்துக்கலாம் தேவ்' என்ற மனைவியின் வார்த்தைகள் சட்டென உதிர்த்தது.
அவனோ வான்மீகியைக் கேள்வியாகப் பார்க்க, அவரோ புன்னகையுடன் அவன் எண்ணம் சரி என்பது போலக் கண்களை மூடித்திறந்தார்.
அடுத்த நொடி இனியாவின் அருகில் சென்று அவள் கன்னத்தப் பற்றியவனுக்கு "டோல்" என்றதை அடுத்து பேச்சே வரவில்லை...
அவளது பெயருக்காகவே அவளை 'டோல்' என்று அழைத்தவனுக்கு உண்மையில் அவள் தான் இவள் என்று எண்ணுகையில் அத்தனை உவகை உள்ளுக்குள்...
கூடவே எத்தனை பெரிய இடரிலிருந்து தப்பி இருக்கிறாள் என்று கவலை கொள்ளாமலும் இருக்க முடியவில்லை
அன்று போல் இன்றும் அவளைக் காப்பது போல அப்படியே நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் அவன்.
அவளோ என்னவென்று புரியாமல் தான் பார்த்திருந்தாள்.
அவளை விடுவித்தவனோ "டேய் டோல், என்ன தெரியுதாடா, மாமாவ தெரியுதா?" என்றான் தழுதழுத்த குரலில்...
இந்தக் கேள்வி அபத்தம் என அவனுக்கே தெரியும், அவன் அங்கே இருக்கும்போது ஐந்து வயதுக் குழந்தை அவள், மொத்தமாய் ஒரு நான்கைந்து முறை யாழினியுடன் பார்த்திருக்கிறான் அவ்வளவே, அப்படி இருக்கையில் அவளுக்கு இவனை எங்கனம் ஞாபகம் இருக்கப் போகிறது.
அவள் என்ன சொல்வதென்று விழிக்க, தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவனோ வான்மீகியிடம் "இதுக்கு என்ன தான் சாமி முடிவு, இப்படி இத்தன பேர் காலம் கடந்தும் கஷ்டத்த அனுபவிக்கிறதுக்கு முடிவே இல்லையா? இத்தனைக்கும் அந்தக் காலம் கடந்து வர்ற மாலை தான் பிரச்சனைனா அத உருவாக்காமலே இருந்திருக்கலாமே" என்றான் ஆற்றாமையுடன்...
அவனைப் பொறுத்தவரை அந்த ஓலைச்சுவடியின் சொந்தக்காரர் வான்மீகி என்னும்போது, அந்த மாலையை உருவாக்கியதும் அவர் என்பது அவன் எண்ணம்.
அவரோ "தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்பதும் இருக்கும் மகனே! அந்தக் காலம் கடந்து பயணிக்கும் மாலை உருவாக்கப்பட்ட நோக்கம் அந்த மார்த்தாண்டனின் அழிவு ஒன்றே! அவனை அழிக்கும் ஆயுதம் அது... யாம் அறியா பல மர்மங்கள் பல வருடங்களின் முன்பே உணர்ந்து கொண்ட சித்தர்கள் உருவாக்கியது அது... அது உங்கள் கையில் கிடைக்க உதவியவன் நான் அவ்வளவே!" என்றார்.
மகிழோ இடையில் "பல வருஷம் முன்னாடி உருவாக்குனதுனா அப்படினா அது எங்க ரெண்டு பேரோட இரத்துல எப்படி வேலை செஞ்சிச்சு?" என்று கேட்டான்.
வான்மீகி "மார்த்தாண்டனின் பிறவி அவனது இந்தக் காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பு இருந்த ஒன்று அவன் ஒவ்வொரு பிறவியிலும் தோற்று இறுதியாய் எடுத்த பிறவி தான் இது... ஒவ்வொரு முறையும் அவனை அழித்துக் கடவுள் இவ்வுலகத்தை காத்திருக்க, தீரா ஆசை கொண்டவன் மீண்டும் மீண்டும் பிறந்தான். அதில் இம்முறை அவனுக்குச் சாகா வரமும் கிடைத்திருக்க, அவன் ஆட்டம் அதிகரித்திருந்தது. முப்பிறவிகளிலும் அவன் இரத்தம் தாங்களே அதனாலேயே இவை எல்லாம் சாத்தியமானது" என்றவர் முடிக்க,
துயிலேனோ "சுவாமி, இத்தனை சக்தி வாய்ந்தவன் அவன் என்றால் ஏன் அவனால் அந்த முத்து மாலையை அடைய முடியவில்லை... அதனைக் கவர்ந்து அவனுக்குத் தேவையானவற்றை செய்திருக்க முடியும் தானே! பின்னர் ஏன் இந்தப் பெண்ணைக் பலியாக்க வேண்டும்" என்றான் இனியாவைக் காட்டி...
வான்மீகியோ "காரணம் இருக்கிறது துயிலா? இந்த மாலையை அடையவே முடியாது என்பது அவனது சாபம்... எப்படி வீரவேந்தனை அழித்துச் சாகாவரம் பெற்றானோ, அதேபோல் அவரை அழித்ததினாலேயே ஊருக்குள் கால் வைக்க முடியாது என்பதையும் அந்த முத்துமாலையை அடைய முடியாது என்பதையும் சாபமாய் பெற்றான். இதனை அவனும் அறிவான்" என்றார்.
மித்ரனோ "எல்லாம் சரி இப்போ அவனை எப்படி அழிக்கிறது? எப்படி இதுல இருந்து நாங்க தப்பிகிறது?" என்று கேட்டான்.
அவரோ "மார்த்தாண்டனின் அழிவு மூவர் மூலம் நிகழும் என்பது விதி" என்றவர் மித்ரன் மகிழ் இறைவரையும் ஒன்று சேரப் பார்த்தார்.
"மூவரா??" என்று மித்ரனும் மகிழும் குரல் கொடுக்க, மற்றவர்கள் மனதிலும் அந்தக் கேள்விதான் ஓடியது.
"ஆம் மூவர்தான்... அவன் அழிவு நிகழ, அவன் இரத்தம் வேண்டும்... அவன் கைகளால் தான் அவன் அழிவு, இதுவே அவன் சாகா வரத்தின் அடிப்படை... அவன் என்றும் அவனை அழித்துக் கொள்ளவே மாட்டான் என்ற இறுமாப்பு அவனுக்கு... ஆனால் அவன் கெட்ட நேரமோ என்னவோ அவன் உன்னை உருவாக்கியது... அவன் உயிரின் பாதி நீ என்பதால் உன் கையாலும் அவனை அழிக்க முடியும் அதற்கு உன் உதிரமும் அவன் உதிரமும் வேண்டும் அதனாலேயே மூவர்" என்றார்...
அங்கிருப்பவர்களுக்கு புரிந்தும் புரியாத நிலை தான்...
'இவர் தெளிவாகவே பேசமாட்டாரா' என்று கடுப்பாக வந்தது மித்ரனுக்கு...
'அனைவரின் வாழ்க்கையும் சீராகப் போகத் தாங்கள் மட்டும் ஏன் இப்படி மர்மமாகப் போராட வேண்டும்' என்று எரிச்சலே மேலோங்கி இருந்தது அவனுக்கு...
இன்னும் என்ன என்ன நடக்கவிருக்கிறதோ என்ற கேள்வியும் உள்ளே பிரளயத்தை உருவாக்கி இருந்தது.
மித்ரனின் மனதை படித்ததைப் போல மகிழோ "தெளிவா சொல்லுங்க சாமி" என்று கேட்க, அவரோ புன்னகையுடன் "அவனை அழிக்க வேண்டும் என்றால் மித்ரனின் உதிரமும் அவனது மகனின் உதிரமும் மார்த்தாண்டனின் மகனின் உதிரமும் கலந்த அந்த முத்து மாலை வேண்டும்" என்றார்.
மகிழோ 'கிழிஞ்சிது போ, தெளிவா குழப்புறது எப்படினு இவர்கிட்ட தான் படிக்கணும் போல' என்று எண்ணிக் கொண்டான்.
அந்த நேரம் இவர்களைக் கேள்வியாகப் பார்த்தபடி அங்கே வந்திருந்தாள் பூவிழி...
அவளைக் கண்ட மற்றவர்கள் சாதாரணமாய் நிற்க, ஒரு ஜோடிக் கண்களில் அதிர்ச்சி என்றால் இன்னொரு ஜோடிக் கண்களில் அதிர்ச்சியுடன் பரவசமும் சேர அவளையே பார்த்திருக்க, கரங்களோ அவள் உணரும் முன்பே அவளை அணைத்திருந்தது.
காதலைத் தேடும்...
இப்படிக்கு,
உங்கள் VSV-28
Latest Post: நேசம் 15 Our newest member: P.Paramu Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page