All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட் லைஃப் - 38

 

VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 68
Topic starter  

நைட் லைஃப் - 38

சிதம்பரத்தின் இறுதி சடங்கை முடித்து விட்டு வருத்தம் தேய்ந்த முகத்துடன் இருட்டிய வீட்டில் நுழைந்தான் ரோகன். வீடு வெறுமையாக இருப்பது போல் அவன் மனமும் வெறுமையாக இருந்தது. பெற்ற தந்தையே கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்வு அவனை கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துக் கொண்டிருக்க, சோர்வாக உள்ளே நடந்தான். வீட்டில் யாருமே இல்லை. திடீரென்று கதவை திறந்து கொண்டு வந்த ஆல்வின் ரோகன் முதுகிலே ஓங்கி உதைத்தான். அதில் தட்டு தடுமாறிய ரோகன் தரையில் விழுந்து உருண்டு திரும்ப, ஆல்வினை கண்டு குழம்பினான். “நீ.. நீ எப்படி..” என அதிர்ச்சியாக கேட்க, கோவத்தில் ருத்ர மூர்த்தியாக மாறியிருந்த ஆல்வின் ரோகன் சட்டையை பிடித்து உயர்த்தி அவன் முகத்திலே சரமாரியாக குத்தினான். “பிளடி ராஸ்கல் அவன் கூட சேர்ந்துட்டு என்னவே கொல்ல பாக்குறியா? உன்ன சும்மா விடக் கூடாது டா” என கோவத்தில் மேலும் குத்தினான். வலி பொறுக்க முடியாத ரோகன் அலறினான்.

 

“என்ன பண்றிங்க.. எதுக்காக என்ன இப்படி அடிக்குரிங்க.. நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியலை..” என அடிவாங்கியபடியே கத்தினான். அடிப்பதை நிறுத்திய ஆல்வின் அவனின் சட்டை காலரை கொத்தாக பற்றி இழுத்து, “நடிக்காத டா.. என்ன கொல்லவே ஆளு அனுப்பிட்டு இப்போ ஒன்னும் தெரியாதவன் மாதிரி பேசுறியா?.. எவ்ளோ பிராட் வேலை டா பாப்ப? நீயும் உன் அப்பாவும் சேர்ந்து கூடவே இருந்து துரோகம் பண்ணிட்டிங்க.. உன்ன நான் சும்மா விட மாட்டேன் டா” என மேலும் அடிக்க வர, “நிறுத்துங்க.. நீங்க எதுக்கு இப்படி பேசுறீங்கன்னு எனக்கு தெரியலை.. நான் எதுவுமே பண்ணலை.. நானே அப்பா என்ன விட்டு போய்ட்டாரேன்னு கவலையில இருக்கேன் நீங்க என்னடான்னா என் மேல பழி போட்டுட்டு இருக்கீங்க..” என அழுதபடியே கூறிட அவன் வயிற்றிலே குத்தினான் ஆல்வின். 

 

“ச்சே.. கேவலமா நடிக்குற.. காசுக்காக உன் அப்பனையே கொன்னு இருக்க” என ஆல்வின் கூறிட அதில் அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தான். அவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் எப்படி ஆல்வினுக்கு தெரிந்தது என்ற அதிர்ச்சி. “என்ன என்ன.. சொல்றிங்க அண்ணா.. எனக்கு எதுவுமே புரியலை.. எதுக்காக இப்படி என் மேல பழி போடுறிங்க” என பச்சையாக நடித்தான். 

 

“ச்சி.. அசிங்கமா இருக்கு உங்களை எல்லாம் என்னோட சொந்தம்ன்னு சொல்லிக்க.. ஆருத்ரா சொன்னப்போ கூட நான் நம்பவே இல்ல.. நீங்களா இருக்காதுன்னு நினைச்சேன்.. ஆனா உன் புத்திய காட்டிடல” என வெறுப்புடன் கூறினான். ரோகனுக்கோ எந்த உண்மையை பற்றி பேசுகிறான் என எதுவும் புரியவில்லை. மறைப்பதற்கு பல விஷயங்கள் இருக்க அதில் எதனை கண்டுக் கொண்டான் என தெரியாமல் முழித்தான். 

 

“அண்ணா நீங்க எதையோ தப்பா நினைச்சிட்டு பேசுறிங்க.. நீங்க நினைக்குற மாதிரி இல்ல” என கூறிய ரோகன் அப்படியே பின்னே நகர, அவனை நோக்கி நடந்த ஆல்வின், “நடிக்காத.. என்ன கொல்ல ஆளுங்களை அனுப்பிட்டு உன் அப்பனையே கொன்னவன் தானே நீ..” என்றிட அதிர்ச்சியில் உறைந்தான் ரோகன். இந்த உண்மை எப்படி அவனுக்கு தெரிந்தது என்று தெரியவில்லை. 

 

“நான் அப்படி எல்லாம் பண்ணலை அண்ணா நீங்க தப்பா நினைச்சிட்டு பேசுறிங்க.. நான் ஏன் அப்படி பண்ண போறேன்..” என கேட்டபடியே பின்னால் நகரந்தான். இங்கிருந்து எப்படியாவது தப்பித்து ஓட வேண்டும் என்று நினைத்தான். 

 

“நீ அனுப்புன ஆளுங்களே வாக்கு மூலம் கொடுத்துட்டாங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த இடத்துக்கு போலீஸ் வரும்... அது மட்டுமா பண்ண.. என்னோட கம்பனி அக்சஸ் கோட் லீக் பண்ணது மட்டும் இல்லாம நீயும் உன் அப்பாவும் சேர்ந்து பல கம்பனிய ஹேக் பண்ணி இருக்கீங்க.. இதுல கட்சி ஆளுங்களை நீங்களே மிரட்டி இருக்கீங்க... இந்த விசயம் எல்லாம் கட்சி ஆளுங்களுக்கு எப்போவோ தெரிஞ்சி போச்சு.. இன்னும் கொஞ்ச நேரத்துல உன்ன மொத்தமா ரவுண்டு கட்ட இங்க ஆளுங்க வந்துருவாங்க” என ஆல்வின் கூற அதிர்ச்சியில் உறைந்தான் ரோகன். ஒட்டு மொத்த உண்மையும் வெளிவரும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அடுத்த அதிர்ச்சியாக ஆல்வின், “வருசையா அவ்ளோ தப்பு பண்றிங்க.. ஆள் கடத்தல், போதை மருந்துன்னு தப்புக்கு மேல தப்பு பண்ணிட்டே இருக்கீங்க..” என வெறுப்புடன் கூறிட தனது மொத்த கதையும் முடிந்தது என்று நினைத்து ஸ்தம்பித்து நின்றான் ரோகன். 

 

அவன் தந்தையை கொன்ற பின்பு இந்த தொழிலை செய்யாமல் கம்பெனியை மட்டும் பார்த்துக் கொண்டு நிம்மதியாய் வாழலாம் என்று நினைத்திருந்தான். அவனுக்கு முழு தையிரியமே அவன் தந்தை தான். அவரை நம்பி தான் இந்த காரியங்களை எல்லாம் செய்தான். அவருக்கு பின் தனியாளாக இதனை செய்யும் தையிரியம் அவனுக்கு கொஞ்சமும் இல்லை. இனிமேல் தவறு செய்யாமல் வாழலாம் என்று நினைக்கையில் அவன் செய்த தவறுகள் அனைத்தும் அவனை சூழ்ந்துக் கொள்ள இதில் இருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்று நினைத்தான். 

 

இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு போலீஸ் வந்து விட்டாள் தன் நிலை அவ்வளவு தான் என்று நினைத்தவன், தப்பிக்க வழியை யோசித்தான். பயத்தில் பின்னால் நகரந்தபடியே செல்ல ஆல்வின் அவனை முறைத்தபடியே அவனை நோக்கி நடந்தான். சட்டென்று பழம் வெட்டும் கத்தியை எடுத்த ரோகன் அதனை ஆல்வின் நோக்கி காட்ட, அவன் அப்படியே நின்றான். 

 

“கிட்ட வராத.. வந்த உன்ன கொன்னுடுவேன்.. ஒழுங்கா இங்க இருந்து போய்டு” என கூறியபடியே நிற்க ஆல்வின் அசையாமல் நின்றான். அவன் அடுத்த அடி எடுத்து வைக்கும் முன்பு கதவை திறந்து கொண்டு இனியும், காவல் துறையினரும் அந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களை அதிர்ச்சியுடன் பார்த்த ரோகன் சுதாரிப்பதற்கு முன்பே காவலதிகாரிகள் அவனை சிறைபிடித்தார்கள். 

 

“எதுக்கு சார் என்ன அர்ரெஸ்ட் பண்றிங்க.. நான் எந்த தப்பும் பண்ணலை.. என்ன விடுங்க” என அவன் துள்ளிக் கொண்டிருக்க அவனை இரண்டு பேர் இழுத்து பிடித்தார்கள். 

 

“சி.எம்மை நீ தான் கொன்னிங்கன்னு எங்க கிட்ட வீடியோ ஆதாரமே இருக்கு.. அதுவும் இல்லாம மிஸ்டர்.ஆல்வினை கொலை செய்ய நீ ஆளுங்களை அனுப்பி இருக்க.. அந்த ஆளுங்க எங்களுக்கு வாக்குமூலம் கொடுத்துட்டாங்க” என்றிட ரோகன் ஆல்வினை அதிர்ச்சியுடன் பார்த்தான். 

 

சிதம்பரம் தவறு செய்கிறார் என்று தெரிந்ததுமே ஆல்வின் அவர் என்ன செய்கிறார் என்று கவனிக்க அவர் அறையில் மறைமுகமாக ஒரு கேமரா ஒன்றை வைத்திருந்தான். அதில் ரோகன் அவரை கொலை செய்தது மொத்தமும் பதிவாகி இருக்க அதனை அப்படியே காவல் துறையிடம் கொடுத்து விட்டான். ரோகனை அவர்கள் அழைத்து செல்ல சோர்ந்து போய் அமர்ந்தான் ஆல்வின். இன்னுமே அவனுக்கு அவனின் சித்தப்பாவையும் ரோகனையும் நினைத்து ஆத்திரம் அதிகரித்தது. கூடவே இருந்து கொண்டு துரோகம் செய்து இருக்கிறார்களே என்ற ஆதங்கம் அவனுக்கு. அவனருகில் அமர்ந்த இனி அவன் கையை பிடிக்க அவளை பார்த்து வலியுடன் புன்னகைத்தான். இவர்களை நம்பி அவளை தவறாக நினைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வும் அவனுக்கு இருந்தது. 

 

“எல்லாமே சரி ஆகிடும் ஆல்வின்” என இனி மென்மையான குரலில் கூறிட உடனே அவளை இருக்கமாய் அனைத்துக் கொண்டான். அவன் செயலில் திடுக்கிட்டவள், ஒரு நிமிடம் யோசித்து அவனை அனைத்துக் கொண்டாள். அவன் தலையை பரிவாக வருடியவள், “எதுனாலும் ஓபன்னா சொல்லுங்க” என்றிட, அவளை நிமிர்ந்து பார்த்தவன் இனி தோளில் முகத்தை புதைத்தான்.

 

“அவன் என்னோட ப்ரெண்ட், இவங்க ரெண்டு பேரும் என்னோட ஃபேமிலி.. என் கூடவே இருந்து இவ்ளோ பெரிய விஷயத்தை பண்ணி இருக்காங்களேன்னு நினைக்கவே கோவமா வருது.. ஹென்றிய ரொம்ப நம்புனேன்..எனக்கு இருந்த ஒரே ப்ரெண்ட் அவன் தான்.. ரோகனும் அங்கிள்லும் இப்படிலாம் பண்ணாங்கன்னு தெரிஞ்சா அப்பா ரொம்ப ஹர்ட் ஆவாரு..” என புலம்ப இனி அமைதியாய் கேட்டுக் கொண்டு இருந்தாள். அவளை நிமிர்ந்து பார்த்தவன், “தேங்க்ஸ் இனி என்ன நம்புனதுக்கு.. அன்னிக்கு என்ன நம்பாம நீயும் ஆருத்ரா போல சந்தேகபட்டியோன்னு கோவபட்டேன்..” என்றான். 

 

“எங்களுக்கு சந்தேகத்தை விட குழப்பம் தான் அதிகமா இருந்துச்சு... அதுவும் இல்லாம உங்க கூட இத்தனை மாசம் பழகி இருக்கேன்.. ஏதோ ஒரு ஓரத்துல உங்களை கெட்டவனா பாக்க வேணாம்ன்னு தோனுச்சு” என்றாள் இனி. 

 

அன்று காரில் சென்று கொண்டு இருக்கும் பொழுது, ஆருத்ரா சித்தார்த் இறந்த விடையத்தை கூறியதுமே இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நிச்சயம் தன்னை இனி சந்தேகபடுவாள் என அவன் விரக்த்தியான நினைக்க, “ஆல்வின், ப்ளீஸ் என்ன நடக்குதுன்னு சொல்லுங்க... நீங்க என் கிட்ட வெளிப்படையா பேசுங்க.. தயவு செஞ்சி உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லன்னு உங்க வாயால சொல்லுங்க” என கெஞ்சும் குரலில் இனி கூறிட, அவளை ஆச்சரியமாய் பார்த்தான். அவனை சுற்றி இருக்கும் அனைவரும் இவ்வளவு தவறுகள் செய்யும் பொழுது கூட தன்னை நம்புகிறாலே என்று இருந்தது அவனுக்கு. 

 

“எதுக்காக என்ன நம்புற?” என அவளை பார்த்து வினாவ, இனிக்கு அதற்கான பதில் இல்லை. அவள் மனம் அவனை தவறாக யோசிக்கவே மறுத்தது. அவள் அமைதியை கண்டவன், “இது எல்லாம் நான் பண்ணலை.. அன்னிக்கு மித்திரனை பார்த்துட்டு போனதுக்கு அப்பறம் அவரு தனியா பேசனும்ன்னு மெசேஜ் பண்ணாரு.. அப்போ தான் எனக்கு இதை எல்லாம் அங்கிளும் ரோகனும் பண்றாங்கன்னு புரிஞ்சுது.. ஆனா அவங்களுக்கு பின்னால வேற ஒருத்தன் இருக்கான்னு சொல்லி அதை கண்டு புடிக்க என் ஹெல்ப் கேட்டாங்க.. அவங்களுக்கு அது ஹென்றியா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு” என்றிட அவனை அதிர்ச்சியாக பார்த்தாள். அந்த நேரம் அவர்கள் கார் பின்னே வேறு சில கார்கள் துரத்திக் கொண்டு வர உடனே காரை வேகமாய் ஓட்டிய ஆல்வின் அவர்களிடமிர்ந்து தப்பிக்க பார்த்தான். 

 

செல்லும் வழியிலே இனி போலீஸ்க்கு தகவல் கொடுக்க அவர்களை காக்க வந்து விட்டார்கள். அன்று இரவு முழுவதும் இதே வேளையில் இருந்ததனால் ஆருத்ராவிற்கு அவளால் தகவல் சொல்ல முடியாமல் போனது. 

 

அன்று நடந்ததை நினைத்து பார்த்த இனி, “என்னோட நம்பிக்கை வீண் போகல.. ஹென்றிய மித்திரன் சார் பார்த்துப்பாரு.. நீங்க பீல் பண்ணாதிங்க” என்றாள். அதில் நேராய் அமர்ந்த ஆல்வின் அவள் தோளில் சாய்ந்து, “கொஞ்சம் கஷ்ட்டமா தான் இருக்கும் ஆனா உன் பக்கத்துல இருந்தா எனக்குன்னு நீ இருக்குற ஆறுதலா இருக்கு” என்று கூறி அழகாய் புன்னகைத்தான்.  

 

கருத்து திரி:

https://kavichandranovels.com/community/vsv-39-%e0%ae%a8%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-comments/


   
ReplyQuote

You cannot copy content of this page