About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 27 & நிறைவுப்பகுதி
சென்னை நேரு அரங்கத்தில் அகில இந்திய ஒவிய கண்காட்சி திறப்பு விழா பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரசியல் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள், ஓவியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அந்த பிரமாண்ட அரங்கத்தில் குழுமியிருந்தனர். தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறையின் அமைச்சர் சங்கரபாண்டியன் அனைவரையும் வாழ்த்தி வரவேற்புரை நிகழ்த்திய பின் தன் பேச்சை தொடங்கினார்.
“தொடர்ந்து வருடாவருடம் நடந்த சென்னை ஓவிய கண்காட்சியில் எல்லாருடைய கருத்தையும் மனதையும் கவர்ந்தது போகன் என்பவரின் ஓவியம் தான். வரலாற்று சிறப்பு மிக்க ஓவியமாகவும் இருந்தது. அதே சமயம் ஏதோ ஒரு கதையின் பகுதியாக தோன்றியது. ஒவ்வொரு வருடமும் அவருடைய ஓவியத்தை பார்ப்பதற்காகவே வெளிநாட்டு பயணிகள் வருவதாக கேள்விப்பட்டேன். கலா ரசிகர்களும், அயல்நாட்டினரும் போகனின் ஓவியத்தை விலைக்கு வாங்க தயாராக இருந்தாலும் அவர் தன் படைப்பை யாருக்கும் விற்காமல் தமிழக அரசின் கண்காட்சிக்கே தொடர்ந்து தன் ஓவியங்களை அனுப்பி வைத்துள்ளார்.
எனவே அவரின் ஓவியத்தை பாராட்டி தமிழக அரசு, அவருக்கு கலை செம்மல் விருது வழங்க முடிவு செய்துள்ளது. இந்த கண்காட்சியின் கடைசி நாளான நாளை மறுநாள் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. எனவே போகன் அரசின் அங்கிகாரத்தை ஏற்று கொண்டு விருதை பெற்று செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லி நன்றியுரையுடன் தன் பேச்சை முடித்துக் கொண்டார்.
வருடாந்திர கண்காட்சியை ஏற்பாடு செய்யும் மேனேஜர் அமைச்சரின் பேச்சை கேட்டு திடுக்கிட்டார். “என்ன இது அமைச்சர் திடீர்னு போகனுக்கு விருது கொடுக்க போறதா அறிவிச்சுட்டாரு. நானே இது வரைக்கும் அவரை பார்த்தது இல்ல. அவர் பிஏவும் எப்பவாச்சும் தான் போனை எடுப்பாரு. நாளை மறுநாள் அவரை எப்படி வரவைக்கிறது? கூப்பிட்டா வருவாரா? வரலைனா அமைச்சருக்கு பதில் சொல்லணுமே” என்று தன் செக்ரட்டரி பெண்ணிடம் புலம்பியபடி திலீப்பிற்கு போன் செய்தார்.
திலீப் நித்யாவுடன் தன் மாமனார் வீட்டிற்கு விருந்துண்ண வந்திருந்தான். போன் அடிக்கவும், “நித்தி போனை எடுத்து ஸ்பிக்கர்ல போடு” என்றான் சட்டையை போட்டபடி
நித்யா போனை ஆன் செய்ததும், “திலீப் சார், ஒரு முக்கியமான விஷயம்”
“சொல்லுங்க”
“கலை பண்பாட்டு துறை அமைச்சர் போகன் சாருக்கு கலை செம்மல் விருது கொடுக்க போறதா அறிவிச்சிருக்காரு. அதுவும் நாளன்னிக்கு போகன் சார் சென்னை நேரு அரங்கத்துல இருக்கணும். எப்படியாவது அவரை வரவச்சிடுங்க திலீப்”
“சாரி சார். அவர் வரமாட்டாரு” உடனே திலீப்பிடமிருந்து பதில் வந்தது.
“சார், அமைச்சருக்கு என்னால பதில் சொல்ல முடியாது. அவர் வரலைனா அவ்வளவு மரியாதையா இருக்காது. தயவு செஞ்சு அவர்கிட்ட விஷயத்தை சொல்லி புரிய வையுங்க, ப்ளீஸ்”
“அவர் வர்றதுக்கு சான்ஸே இல்ல. பட் ஐ வில் டிரை மை பெஸ்ட்” என்று போனை வைத்தான்.
*****
மேக்னா ஆசைப்பட்டது போல அகத்தியன் அவர்களின் கதையை அனிமேஷன் படமாக்கி இருந்தான். இறுதி கட்ட வேலைகள் முடிந்து விட முதலில் அதை தன் மனைவிக்கு காட்ட வேண்டும் என்று மேக்னாவை அழைத்தான்.
“மோகி என் கூட வா”
பூந்தோட்டத்திலிருக்கும் வண்ணத்துபூச்சிக்களை ரசித்து கொண்டிருந்தவள் அங்கிருந்து வர மனமில்லாமல் “எங்கே” என்றாள்
“சொல்றேன் வா டி”. ஆனாலும் அவள் இயற்கை காட்சியிலேயே லயித்திருக்க, ஒரு வண்ணத்துபூச்சி மேக்னாவின் இதழில் அமர்ந்து தேனருந்த அதில் கடுப்பானவன் சட்டென அதை தட்டி விட்டான்.
“ப்ச். அகன் எதுக்கு அதை தட்டி விட்டிங்க?”
“யு ஆர் மைன். அந்த பட்டாம்பூச்சி எப்படி என் பொண்டாட்டி லிப்ஸ்ல உட்காரலாம்? அதுக்கு தான் ஏக்கர் கணக்குல தோட்டமும் தோட்டம் பூரா பூக்களும் பூத்து குலுங்குதே. அதையெல்லாம் விட்டுட்டு என் மோகி கிட்ட வந்தா எனக்கு கடுப்பாகாதா?” என்றபடி அவள் இதழ்களில் இதழ்பதித்து இளைப்பாற தொடங்கினான்.
“போதும், தோட்டக்காரங்களுக்கு ஃப்ரீ ஷோ காட்டாதீங்க. வாங்க உள்ளே போகலாம்” என்று அவன் இதழ்களுக்குள் முனங்கியவளை அப்படியே இரு கைகளில் ஏந்திக் கொண்டு,
“கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
நுரையால் செய்த சிலையா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி இதழ்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டேவீட்டிற்குள் சென்றான்.
படுக்கையறைக்கு தான் செல்ல போகிறான் என்று அவள் நினைத்திருக்க, அவனோ வீட்டினுள் இருந்த திரையரங்கு பகுதிக்கு சென்று நீள் இருக்கையில் அவளை மெதுவாக உட்கார வைத்து அவளை அணைத்தபடி நெருங்கி அமர்ந்தான்.
கேள்வியாக பார்த்தவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல் திரையை உயிர்ப்பித்தான். அதில் அவர்களின் வாழ்க்கைச் சித்திரம் படமாக ஓடுவதை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் தன்னவனின் தோளில் சாய்ந்து, அவன் இடுப்பை தன் கைகளால் கோர்த்துக் கொண்டு அந்த படத்தையும் அதில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் பார்க்க தொடங்கினாள். ஒவ்வொரு காட்சியிலும் அவள் உணர்ச்சி வசப்படும் போது மேக்னாவின் கரங்கள் அகத்தியனை மேலும் இறுக்கி கொள்ளும். அவனும் ஆதரவாக அவள் முதுகை தடவி கொடுத்து அவ்வப்போது மனைவியின் நெற்றியிலும் உச்சந்தலையிலும் முத்தமிட்டு அவளை ஆசுவாசப்படுத்தினான்.
முடியும் தருவாயில் திலீப்பிடமிருந்து போன் வரவே திரையின் காட்சியை நிறுத்தி, தன் கைப்பேசியை உயிர்பித்து அதை ஸ்பீக்கரில் போட்டான். திலீப் மேனேஜர் பேசிய விஷயத்தை சுருக்கமாக சொல்லி முடிக்கும் வரை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்து விட்டு,
“நான் என்ன பதில் சொல்லுவேன்னு தெரிஞ்சும் போன் பண்றீயே, அறிவு இருக்காடா உனக்கு?” என்றான் லேசான எரிச்சலுடன்
“தெரியும் பாஸ். இது அரசாங்கம் ஏற்பாடு செஞ்சது. போகலைனா மரியாதையா இருக்காது” என்றான் திலீப் தயங்கிய குரலில்
“அப்போ நீயே போய் வாங்கிக்க”
“பாஸ் நான் எப்படி போக முடியும்? நீங்க தானே போகன்”
“போகன் யாருனு அவங்களுக்கு தெரியாது. நீ சென்னையில தானே இருக்க. நித்யாவோட போய் நீ தான் போகன்னு சொல்லி அவார்டை வாங்கு”
“போகன் யாருனு அவங்களுக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம். ஆனா எனக்கு தெரியுமே பாஸ். உங்களோட கிரிடிட்ஸை நான் எடுத்துக்க முடியாது. ஐயம் சாரி பாஸ்”
“அப்போ என்ன பண்ணனுங்கிற? என்னை அங்கே வரச்சொல்றீயா? நீ எனக்கு ஆர்டர் போடறீயா?” என்றான் அகத்தியன் அடக்கப்பட்ட கோபத்துடன்
திலீப் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், “திலீப் உன்கிட்ட தான் கேக்கறேன்” என்றான் உறுமலாக
அதுவரை அவர்களின் பேச்சில் தலையிடாமல் கேட்டுக் கொண்டிருந்த மேக்னா, கணவனிடமிருந்து போனை பிடுங்கி,
“திலீப் விருது வாங்க போகன் வருவாருனு சொல்லிடு”
“சரிங்க அண்ணி. நீங்க இருக்கற தைரியத்துல தான் நான் அவருக்கு போனே பண்ணேன். நான் வச்சுடறேன்” என்று போனை சட்டென்று அணைத்து விட்டான். இல்லையென்றால் அகத்தியன் மீண்டும் திட்ட ஆரம்பித்து விடுவானே என்ற பயம் அவனுக்கு.
இப்போது அகத்தியன் மனைவியை முறைத்து பார்த்தான்.
“என்ன முறைக்கறீங்க?” எனக்காக தானே இங்கே இருந்து எங்கேயும் போகாம அழிச்சாட்டியம் பண்றீங்க? பாவம் திலீப் மட்டும் வெளி வேலைங்களை பாத்துட்டு இருக்கான். ஓழுங்கா போய் அவார்ட் வாங்கிட்டு வாங்க. அதுமட்டுமில்லாம நம்மளோட இந்த படத்தை வெளியிடறதுக்கு நீங்க சென்னை போய் தானே ஆகணும்”
“மோகி உன்னை இந்த நிலைமையில விட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். உன்னை விட எனக்கு எதுவும் முக்கியமில்ல. ஓருதடவை பட்டதே போதும்” என்றான் கரகரப்பான குரலில்
எதை சொல்கிறான் என்று தெரிந்தாலும் வேண்டுமென்றே அவனை வம்பிழுத்தாள். “என்ன என் நிலைமை?”
“தெரியாத மாதிரி கேட்காதே மோகி” என்றவன் அவள் முன்பு மண்டியிட்டு அவளின் மேடிட்ட வயிற்றை வருடினான். “இந்த முறை நம்ம குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன். குழந்தை பிறந்து பெரிசாகட்டும். உங்களுக்கு அப்புறமா தான் எனக்கு எல்லாம்” என்றபடி அவள் வயிற்றில் முகம் புதைத்தான்.
அவன் தலைகேசத்தை கலைத்து விட்டபடி, “என்ன அகன் இது? சின்ன குழந்தையாட்டம் பேசறீங்க. அத்தை மாமாவை இங்கே வரசொல்லிடுவோம். அவங்க என்னை நல்லா பாத்துக்கிறாங்க. நீங்க போய்ட்டு வாங்க”
“ம்ஹூம் நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். போன தடவை மாதிரி நான் போயிட்டு வர்றதுக்குள்ள உனக்கு எதாவது ஆகிட்டா” என்றான் குரல் நடுங்க
சென்ற பிறவியில் குழந்தையையும் அவளையும் பறி கொடுத்ததின் வலியை நினைத்து இன்றும் தவிக்கிறான் என்று மேக்னாவிற்கு புரிந்தது. அதனாலேயே அவள் கருவுற்றது தெரிந்த நொடியிலிருந்து அவளை விட்டு நகராமல் வீட்டிலேயே அனைத்து வேலையையும் செய்து முடிக்கிறான். தோட்டத்தில் இருந்தாலும் அவளை தேடிக் கொண்டு வந்து விடுவான்.
எப்போதும் அவன் சொல்லும், “யு ஆர் மைன்” என்ற வார்த்தைகள் மேக்னாவிற்கு மிகவும் ஸ்பெஷல். “உனக்காக பிறந்தேனே எனதழகா” என்று பாட தோன்றியது. தன் மடியில் சேயாக முகம் புதைத்திருந்தவன் என்ன சொன்னாலும் அவளை விட்டு அசைய மாட்டான் என்று புரிந்து போனது. அதற்கு மேல் அவளை யோசிக்க விடாமல் அகத்தியன் தன்னவளை மென்மையாக தன் ஆளுமைக்குள் கொண்டு வந்திருந்தான்.
*****
விருது வழங்கும் விழா மேடையில் அனைவரும் குழுமி இருக்க, மேனேஜர் திலீப்பிடம் பத்தாவது முறையாக, “திலீப் போகன் சார் வந்திடுவார் இல்ல” என்றார் சந்தேகமாக
“வந்துடுவார் சார். நீங்க அடிக்கடி சந்தேகமா கேட்டு என்னையும் டென்ஷன் பண்ணாதீங்க” என்றபடி போனை எடுத்து மேக்னாவிற்கு அழைத்தான் அது ஸ்விட்ச் ஆஃப் என்ற வரவும் கவலையோடு மேனேஜரை பார்த்தான்.
அதே சமயம் அமைச்சரின் பிஏ மேடையில் விருதுகளை அறிவித்து கொண்டிருந்தார். “இப்போது சிறந்த ஓவியராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போகன் அவர்களுக்கு அமைச்சரின் கையால் கலைச்செம்மல் விருது வழங்கப்படும். போகனை மேடைக்கு அழைக்கிறோம்” என்று கூற திலீப்பிற்கும் மேனேஜருக்கும் வியர்த்து வழிந்தது.
அகத்தியன் வரவில்லை என்றால் அது அரசாங்க அங்கிகாரத்தை அவமதித்தது போலாகி விடுமே என்று கவலைப்பட்டனர். அப்போது அனைவரும் பலமாக கைத்தட்டவும் இருவரும் திரும்பி மேடையை பார்த்தனர்.
அகத்தியன் தன் மனைவியின் கரத்தை பற்றியபடி மேடை ஏறிக் கொண்டிருந்தான். அப்போது தான் திலீப்பிற்கு மூச்சே வந்தது. தைரியமாக அகத்தியனுக்கு போன் செய்து, “என்ன பாஸ் வரமாட்டேன்னு சொன்னீங்க?”
“என்னடா நக்கலா? யார்கிட்ட சொன்னா வேலையாகும்னு தெரிஞ்சு போட்டு கொடுத்துட்டு எதுவும் தெரியாத மாதிரி கேக்கறியா?” என்றான் அகத்தியன் கடுப்புடன்
“நீங்க எனக்கு வேணா பாஸா இருக்கலாம். ஆனா உங்களுக்கு பாஸ் அவங்க தானே” என்று கிண்டலடிக்க
“டேய்” என்று அகத்தியன் ஏதோ திட்ட எத்தனிக்க, “என்ன அங்கே பேச்சு, வாங்க எல்லாரும் வெயிட் பண்றாங்க” என்ற மேக்னாவின் குரல் கேட்டது.
“இதோ வந்துட்டேன் மோகி” என்று அவளுக்கு பதில் சொல்லிவிட்டு, “உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன்டா” என்றபடி போனை அணைத்தான் அகத்தியன்.
சிரித்துக் கொண்டே போனை வைத்த திலீப், மேனேஜரின் குழப்பமான பார்வையை பார்த்து, “என்ன சார் பாக்கறீங்க, அவர் தான் என்னோட பாஸ் அகத்தியன் என்னும் போகன்” என்றான்.
“அது சரி, பக்கத்துல இருக்கற அந்த பொண்ணை தான் யாருனு யோசிச்சிட்டு இருந்தேன். அவங்க தானே போகனோட ஓவியங்கள் எல்லாம் அவங்க கதையை அடிப்படையா கொண்டது, கதை திருடி ஓவியம் வரையப்பட்டிருக்குனு சண்டை போட்டாங்க. காப்பி ரைட்ஸ் பத்தி பேசி நானும் உங்களை வரவச்சேன். நீங்களும் அவங்களை உங்க பாஸ்கிட்ட பேச கூட்டிட்டு போனீங்க. இப்போ என்ன இவங்களும் உங்க பாஸூம் ஒண்ணா வந்து இருக்காங்க? ஒருவேளை அவங்க சொன்னது போல அவங்க கதையை தான் உங்க பாஸ் வரைஞ்சாரா? அதுக்கு தான் இரண்டு பேரும் ஒன்னா வந்திருக்காங்களா?”
“சார் அது ஒரு பெரிய கதை. சிம்பிளா சொல்லணும்னா காப்பிரைட்ஸ் கேட்டு வந்த மேக்னாவையே என் பாஸ் சொந்தமாக்கிக்கிட்டாரு. புரியலையா? அவங்க இப்போ என் பாஸோட வைஃப்”
அப்போது தான் மேனேஜர் மேக்னாவின் மேடிட்ட வயிற்றை பார்த்து வாயை பிளந்தார். “அப்போ அவங்க கூட வந்த இன்னொரு பொண்ணு”
“அவளை நான் கட்டிக்கிட்டேன். அவளுக்கு இப்போ தான் கன்பார்ம் ஆச்சு. மயக்கமா இருக்குனு வீட்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா”
“அப்போ நீங்க கன்வின்ஸ் பண்ண கூட்டிட்டு போகல. கன்சீவ்வாக்க கூட்டிட்டு போயிருக்கீங்கனு சொல்லுங்க” என்று பலமாக சிரித்தார் மேனேஜர்.
எபிலாக் / நிறைவு பகுதி
போகன் அமைச்சரிடம் சென்று கைக்குலுக்கி, “சார் ஐயம் போகன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவர் அவனருகில் இருந்த மேக்னாவை கேள்வியாக பார்க்க,
“இவங்க மோகனா, என்னோட மனைவி” என்றான் புன்னகையோடு
“இவங்களை மாடலா வச்சு தான் ஓவியங்கள் வரைஞ்சிருக்கீங்க. கரெக்ட்டா?” என்றார் அமைச்சர்
அகத்தியன் புன்னகையோடு தலையசைக்க, இருவரையும் வாழ்த்தி தன் கையில் இருந்த கலைச்செம்மல் விருதிற்கான கேடயத்தை கொடுத்து பதக்கத்தை அவன் கழுத்தில் அணிவித்தவர்.
“உங்க ஓவியங்களை பத்தி சில வார்த்தைகள் சொல்லுங்க மிஸ்டர் போகன். உங்க ஓவியத்துல ஒரு கதை இருக்கறதா எனக்கு தோணும். உங்க காதல் மனைவியை மாடலா வச்சு வரைஞ்சிருக்கீங்கனா அது நிச்சயமா உங்களோட காதல் கதையா இருக்க வாய்ப்பிருக்கு. விருப்பமிருந்தா அதை எங்களுக்கு சொல்லலாமே”
“ஓவியத்துல இருந்த கதையை அனிமேஷன் படமா எடுத்திருக்கோம். உங்க முன்னாடி இந்த மேடையில அந்த படத்திற்கான அறிவிப்பையும் டிரெய்லரையும் வெளியிட்டா சிறப்பா இருக்கும். அனுமதிப்பீங்களா சார்” என்றாள் மேக்னா இடையிட்டு
“ரொம்ப சந்தோஷம். இங்கேயே டிரெய்லரை திரையிட சொல்றேன். படத்தோட பேர் என்ன?”
“போகனின் மோகனாங்கி” என்று அகத்தியன் சொன்னதும் அமைச்சர் அறிவிப்பையும் கொடுத்து காட்சிகளை ஒளிப்பரப்ப ஆணையிட்டார்.
குமரி கண்டத்தின் வரலாற்று சிறப்புகளையும் வளங்களையும் கூறும் விதமாக வடிவமைக்கப்பட்ட காட்சிகளோட தொடங்கி அகன் மற்றும் மோகனாங்கியின் காதல் பார்வையில் முடிந்தது.
டிரெய்லரை பார்த்து அரங்கமே கைத்தட்டி ஆரவாரித்தது. மேக்னாவின் பெருமிதத்தை கண்ட அகத்தியன், “என்ன மோகி உன் ஆசை நிறைவேறிடுச்சா?” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.
அவள் அவன் கரத்தை அழுந்த பற்றி, “தேங்க்ஸ் அகன்” என்றாள்
“எதுக்குடி? படம் எடுத்ததுக்கா?”
“இல்ல. என்னை தேடி கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு”
அதற்குள் முழுப்படத்தையும் அப்போதே போட சொல்லி பொதுமக்கள் ஆர்ப்பரிக்க, அமைச்சர் அனைவரையும் அமைதிப்படுத்திவிட்டு அகத்தியனிடம், “படத்தை பார்க்க எல்லாரும் ஆவலா இருக்காங்க. இப்போதைக்கு உங்க கதையோட கரு, அதாவது மாரல் ஆஃப் த ஸ்டோரியாச்சும் சொல்ல முடியுமா போகன்?” என்று கேட்க அகத்தியன் சம்மதமாக தலையசைத்தான்.
அமைச்சர் அவன் கரத்தில் மைக்கை கொடுக்க பேச ஆரம்பித்தான்.
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. - திருவள்ளுவர்
கணவன் மனைவி இரண்டு பேருக்குமிடையில கருத்து வேறுபாடு வரலாம், வரும். அதுல யாராவது ஒருத்தர் மேல தப்பு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
அப்படி கருத்து வேறுபாடு வரும் போது அதை சரி செய்யாம அப்படியே விடக்கூடாது. தன்னோட சூழ்நிலையை தன் துணைக்கு விளக்கி அவங்களை சமாதானம் செய்து அவங்களோட சேர்ந்து வாழணும். மனக்கசப்பை சரி செய்யாம விட்டுட்டா அது அப்படியே மனசுல தங்கி நாளடைவில வெறுப்பாவோ விரக்தியாவோ மாறிடும். அதுக்கப்புறம் அது கணவன் மனைவி உறவுல விரிசலை ஏற்படுத்திடும். அதனால மனைவி கொண்ட ஊடலை சரி செஞ்சு அவங்களை சமாதானப்படுத்தி அவங்க கிட்ட சரணாகதி ஆயிட்டா வாழ்க்கை அமோகமா இருக்கும்
ஆனா இந்த கதையில் வர்ற அகனுக்கு மனைவியோட ஊடலை சரிசெய்ய வாய்ப்பு கிடைக்கல, அதனால அவன் தவமிருந்து பலஜென்மம் எடுத்து தன் மேலிருந்து பழியை மனைவிக்கு புரிய வைக்கிறான்”
“அவன் மனைவி அவனோட சமாதானத்தை ஏத்துக்கிட்டாங்களா?” அமைச்சர் ஆர்வமாக கேட்க
“சமாதானமாகி அவங்களையே அவனுக்கு சமர்ப்பணமாக்கிட்டாங்க” என்று அர்த்தத்துடன் தன்னவளின் மேடிட்ட வயிற்றை பார்த்தான். அமைச்சர் புரியாமல் விழிக்க, மேக்னா அவனை எச்சரிக்கை செய்யும் விதமாக தன் உதட்டின் மேல் ஒற்றை விரலை வைத்து அதற்கு மேல் பேசாதே என்று குறிப்பு காட்டினாள்.
அகத்தியன் அமைச்சரிடம் நன்றி கூறி விட்டு மனைவியுடன் மேடையிலிருந்து கீழே இறங்கினான். திலீப் அவர்கள் அருகே வரவும், “மாமியார் வீட்டு விருந்தெல்லாம் முடிஞ்சதா? நித்யாவை கூட்டிட்டு கிளம்பு. போகலாம்” என்றான் அகத்தியன்
“பாஸ், நித்யா பிரெக்னன்ட்டா இருக்கா. இப்போ தான் கன்பார்ம் ஆச்சு. இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு வர்றோம்” என்று தலையை சொரிந்தான்.
இருவரும் அவனுக்கு வாழ்த்து சொல்லி நித்யாவையும் நேரில் சென்று பார்த்துவிட்டு கன்னியாகுமரி கிளம்பினார்கள். மேக்னாவிற்கு பேறு காலம் நெருங்கி விட்டதால் அவள் பெற்றோர்கள் அவளை பிறந்த வீட்டிற்கு அழைத்து செல்ல வந்தார்கள். அவளை அனுப்ப மனமில்லாமல் அவர்களையும் அங்கேயே தங்க வைத்து விட்டான் அகத்தியன்.
அடுத்த இரண்டு வாரத்தில் மேக்னாவிற்கு ஆண் குழந்தை பிறந்து விட, அவர்களின் காதலுக்கு சாட்சியான நிலவின் பெயரை குறிக்கும் விதமாக குழந்தைக்கு நிலவன் என்று பெயர் வைத்தனர்.
பெளர்ணமி இரவில் நிலா முற்றத்தில் நிலவனுக்கு அமுதூட்டிக் கொண்டிருந்த தன் மோகனாவை விழிகளால் விழுங்கி கொண்டிருந்தான் அகத்தியன். தீரா காதலோடு தன்னையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பவனிடம் என்ன என்பது போல புருவம் உயர்த்தினாள்.
“மோகி, இந்த நிலவன் எப்பவும் உன் மடியிலயே இருக்கான். நீயும் இப்பல்லாம் என்னை கண்டுக்கறதே இல்ல. நான் உனக்கும் உன் பையனுக்கும் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தணும்”
“என்ன அது?”
“யு ஆர் மைன்”
“உனக்காக பொறந்தேனே எனதழகா!
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு வருசங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்”
மேக்னா இனிமையான குரலில் அவனை பார்த்து காதலுடன் பாட அவள் மோகன குரலில் கசிந்துருகி மோகத்துடன் அவளை நெருங்கினான் அகத்தியன்.
கணவன் மனைவி உறவுகளுக்கிடையே ஏற்பட்ட பிணக்கை சரிசெய்ய அகத்தியனுக்கு மறுஜென்ம வாய்ப்பு கிடைத்தது போல நமக்கெல்லாம் கிடைக்காது. எனவே இருப்பது ஒரு வாழ்க்கை, வாழும் வரை சண்டை சச்சரவில்லாமல் ஊடலை சரிசெய்து வருடங்கள் போனாலும் காதலுடன் இன்புற்று இணைந்து வாழ்வோம்.
நன்றி! சுபம்!
குறிப்பு : இந்த கதையை பற்றிய உங்கள் விமர்சனங்களையும் கருத்துக்களையும் எதிர்ப்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறேன். நன்றி!
Latest Post: நேசம் 15 Our newest member: P.Paramu Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page