All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட் லைஃப் - 34

 

VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 68
Topic starter  

நைட் லைஃப் - 34

வீட்டில் பாத்திரங்கள் உருளும் சத்தத்துடன் முகத்தை சுருக்கியபடியே கண் விழித்தான் திலக். மெத்தையில் புரண்டு படுத்தவன் கடிகாரத்தை பார்க்க மணி ஏழு ஆகி இருந்தது. அவனின் விடுப்பு முடிந்து இன்று அலுவலகம் போக வேண்டும் என்பதனால் சலிப்புடனே எழுந்தான். அவனின் நாசியை தாலிக்கும் வாசம் நிரப்ப அதனை நுகர்ந்தபடியே எழுந்து அடுப்பங்கரைக்கு சென்றான். அங்கு தோளில் துண்டுடன், தோசை ஊட்டிக் கொண்டிருந்தான் சித்தார்த். திலக் வீட்டிற்கு வந்து இரண்டு நாள் ஆகி இருந்தது. அவன் பத்திரமாக யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக திலக் வீட்டில் மறைத்து வைத்திருந்தார்கள். திலக் வீட்டில் சும்மா இருக்க மனம் இல்லாமல் அவனுக்கு உதவியாய் வேலை செய்து கொடுத்துக் கொண்டிருந்தான். “எதுக்கு ப்ரோ காலையிலே இவ்ளோ பண்ணிட்டு இருக்கீங்க? உங்களுக்கு வேணும்ன்னா ஆர்டர் பண்ணிக்கலாம்ல.. நானும் ஆபிஸ்ல சாப்பிட்டுபேன்” என்று கேட்டபடியே கிட்சன் உள்ளே வந்தான் திலக். வியர்வையை துடைத்தபடியே அவனை பார்த்த சித், “சும்மா உங்க காசுல உக்காந்து சாப்புட ஒரு மாதிரி இருக்கு.. அதான் சின்ன சின்ன வேலை பண்றேன்..” என்றான். “ப்ரோ இன்னிக்கு நான் ஆபிஸ் போகணும் நீங்க தனியா மேனேஜ் பண்ணிப்பிங்கல?” என கேட்டான் திலக். அதில் மெலிதாய் முறுவலித்தவன், “வீட்டுக்குள்ள தானே இருக்க போறேன் சோ எனக்கு ஒன்னும் ஆகாது.. இந்த இடத்தை பத்தி யாருக்கும் தெரியாது” என்றான். அதற்கு சம்மதம் தெரிவித்தவன் குளிக்க செல்ல அவனை தடுத்தான் சித்.

 

“ப்ரோ.. ஒரு வேலை எனக்கு ஏதாவது ஆனா என்னோட அக்கௌன்ட்ல இருக்குற பணத்தை மட்டும் என் அம்மா கிட்ட கொடுத்துடுங்க.. என் தங்கச்சி கல்யாணத்துக்கு யூஸ் பண்ணிப்பாங்க” என கனத்த இதயத்துடன் கூறிட திலக்கிற்கு என்னவோ போல் ஆனது. “அதலாம் ஒன்னும் ஆகாது, நேத்து தான் மித்திரன் சார் கிட்ட பேசுனேன் சீக்கிரமே சி.எம்-அ அர்ரெஸ்ட் பண்ணிடுவாங்க சோ உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது” என்றிட சித்தார்த் லேசாக தலையை அசைத்தான். இத்தனை நாட்கள் அவர்கள் உடன் இருந்ததிலே தனக்கு என்ன மாதிரியான முடிவிருக்கும் என்று அறிந்தவனுக்கு கடைசியாக அவன் குடும்பத்தை பார்க்க முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் பரவியது. 

 

திலக் சாப்பிட்டு முடிந்ததும் வேலைக்கு கிளம்ப வழக்கம் போல் அவன் அமரும் இடத்திற்கு அருகே சாதனாவும் ஆருத்ராவும் தீவிரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தலையில் தட்டிவிட்டு அவனிடத்தில் அமர சாது அவனை முறைத்தாள். “சும்மா சும்மா மண்டையில அடிக்காதிங்க அப்பறம் குழம்பி போயிரும்.. ஏற்கனவே நானே குழப்பத்துல இருக்கேன்” என தலையை தேய்த்துக் கொண்டாள். அவள் செயலில் சிரித்தவன், “அந்த களிமண்ல குழப்புறதுக்கு என்ன இருக்கு?” என கேட்டபடியே லாகின் செய்தான். அவனை ஏகத்துக்கும் முறைத்தவள், “ஆல்வின் சார் எப்படிபட்டவருன்னு புரிஞ்சிக்கவே முடியலை” என அமைதியான குரலில் கூறினாள். “லுக் சாது, அவரு எப்படிப்பட்ட ஆளா வேண்ணாலும் இருந்துட்டு போகட்டும்.. நம்ம ஜட்ஜ் பண்ண முடியாது.. இது மித்திரன் சார் வேலை அவரு பாத்துப்பாரு. நீங்க ரெண்டு பேரும் இப்படி அனாவசியமா பண்றது அவரை இன்னும் கோவப்படுத்துனா என்ன பண்றது சோ எப்போதும் போல இருங்க” என அதட்டினான். “இல்ல சார் பாவம் இனி, அவளுக்கு அவரை புடிச்சி இருக்கு.. வேலையில புரொபஷனலா இருக்கனும்ன்னு தான் அதை எதையும் காட்டிக்காம இருக்கா.. ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப பீல் பண்றா.. அவளுக்கு இது வரை யார் மேலையும் கிரஷ் கூட வந்ததே இல்ல... எனக்கு அவளை நினைச்சா தான் ஆல்வின் மேல கோவமா இருக்கு..” என்றாள் ஆருத்ரா. அவன் கெட்டவனா இல்லை நல்லவனா என்ற ஆராய்ச்சியை தாண்டி தன் தோழியை காயப்படுத்திக் கொண்டிருக்கிறானே என்றிருந்தது அவளுக்கு. 

 

மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே இனி சோர்ந்த முகத்துடன் சாதுவையும் ஆருவையும் ஆல்வின் அழைத்ததாக அழைக்க இருவரும் யோசனையுடனே அங்கு சென்றார்கள். 

 

“கூப்பிட்டிங்களா சார்?” என சாதாரணமாய் கேட்டாள் ஆரு. அவளை முறைப்புடன் பார்த்தவன், “புதுசா பண்ண போற ப்ராஜெக்ட் உடனே நீங்க டிராப் பண்ணிடுங்க.. நான் இங்க லாஞ் பண்ண போறது இல்ல.. ஹென்றிய ரிட்டர்ன் ஜேர்மன் போக சொல்லிட்டேன்.. அவன் அங்க வேலைய ஆரம்பிப்பான்” என்றிட இருவருக்கும் அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எதனால் திடீரென்று இந்த முடிவு என கேட்க வாய் வரை வார்த்தைகள் வந்தாலும் அதனை கேட்கும் இடத்தில் அவர்கள் இல்லாததனால் கேட்காமல் அமைதியாய் நின்றார்கள். “அண்ட் மோரோவர், கம்பெனிக்காக நீங்க பண்ணி கொடுத்த பேட்டன் நானே வாங்கிக்குறேன்.. சோ அதுக்கான காண்ட்ராக்ட் அப்பறம் பேமென்ட் பத்தி மிஸ்.இனி உங்க கிட்ட பேசுவாங்க.. அந்த பேடன்ட் எனக்கு மொத்தமா வேணும்.. உங்க பிரைஸ் என்னவோ அதை சொல்லி வாங்கிக்கோங்க.. அப்பறம் உங்களை டெம்பரவரியா தான் இங்க நெட்வொர்க் லீட்ல அப்பாயின்ட் பண்ணேன்.. நெக்ஸ்ட் மத் முடிஞ்சதும் நீங்க திலக் டீம்ல ஜாயின் பண்ணிக்கோங்க” என்றிட இருவரும் அமைதியாய் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தார்கள். எதனால் திடீரென்று இங்கு இவ்வளவு மாற்றம் செய்கிறான் என அவர்களுக்கு புரியவில்லை. ‘ஒரு வேல கோவத்துல இதலாம் பண்றானோ’ என்று கூட நினைத்தாள் ஆரு. 

“நீங்க ரெண்டு பேரும் போலாம்” என வழக்கத்தை விட இறுக்கத்துடன் கூறிட இருவரும் லேசாக தலையை அசைத்தபடியே அங்கிருந்து சென்றார்கள். 

 

இனியும் அவன் சொன்ன வேலையை செய்ய போக, அவளை தடுத்தான் ஆல்வின்.

“மிஸ்.இனி” என்றழைக்க அவளுக்கு அவள் பேரே கசந்தது. இத்தனை நாட்களாய் கேரமல் என்றழைத்து அவளை இம்சை செய்தவன் இப்பொழுது இப்படி அழைக்க அவளுக்கு வேதனையாக இருந்தது. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் அவன் பக்கம் திரும்பினாள். “இன்னிக்கு ஈவினிங் இருக்குற மீட்டிங் பத்தி மறந்துறாத, தேவையான எல்லா டாக்குமெண்ட்ஸ்யும் எடுத்துக்கோ” என்றிட அமைதியாய் அவள் வேலையை பார்க்க சென்றாள். 

 

அனைவரும் அவர்களின் வேளையில் மூழ்கிவிட, ஆருத்ரா நொடிக்கு ஒரு முறை அவளின் போனை பார்த்துக் கொண்டிருந்தாள். மித்திரநிடமிருந்து நேற்று இரவு ஒரே ஒரு மெசேஜ் வந்தது. அதன் பின் அவளிடம் அவன் பேசவே இல்லை. அனலில் தவிப்பது போல் அவனின் நலனை வேண்டி தவித்துக் கொண்டிருந்தாள். அவன் இப்பொழுது எங்கிருக்கிறான் என்று கூட அவளுக்கு தெரியவில்லை. அவன் கவலை ஒரு பக்கம் இருந்தாள் இனி பற்றியும் யுகி பற்றியும் கவலை இன்னும் அதிகமாய் இருந்தது. ஆம், ராகவ் சென்றதிலிருந்து யுகி அவளாகவே இல்லை. வாயை திறந்து அவள் ஒன்றும் கூறாமலிருக்க ஆருத்ராவிற்கு மேலும் தலைவலி தான் அதிகரித்தது. 

 

அதோ இதோவென்று நேரம் ஓடிட ஆருத்ராவும் சாதனாவும் ஒன்றாய் வீட்டிற்கு கிளம்பினார்கள். இனிய ஆல்வின் உடன் தனியாய் அனுப்பவே அவர்களுக்கு பயமாக இருந்தாலும், இனி கொடுத்த நம்பிக்கையில் அவர்கள் கிளம்பினார்கள். 

 

திலக் வீட்டில் மாலையில் தூங்கி எழுந்த சித், அவனரையில் அமர்ந்திருந்த இரண்டுபேரை கண்டு அதிர்ச்சியில் உறைந்தான். முகமூடி அணிந்திருந்தார்கள் கையில் பெரிய கத்தியுடன் அவன் உறங்குவதையே ஒரு மணி நேரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை கண்டதுமே சித் பயத்தில் மெத்தையில் பின்னே செல்ல, ஒருவன் அவனை அழுத்தமாய் பார்த்தபடியே எழுந்து வந்தான். உருண்டு தப்பிக்க பார்க்க இன்னொருவன் சித் காலை பிடித்துக் கொள்ள பயத்தில் வெடவெடத்து போனான். அச்சத்தில் நா மேல்லன்னத்தில் ஒட்டிக் கொள்ள மிரட்சியுடன் அவர்களை பார்த்தான். தன் சாவு நிச்சயம் என்று அறிந்திருந்தவனுக்கு சாவை எதிரில் கண்டதும் மேலும் பயம் அதிகரித்தது. கூறிய வாள் போல் இருக்கும் நீண்ட கத்தி ஒன்றால் சித்தார்த் தொடையை கிழித்தான். வலியில் பெரும் குரலெடுத்து அவன் கத்த மற்றொருவன் அவனின் நாக்கை துண்டித்தான். சத்தம் மட்டுப்பட்டாலும் வலி உயிரை உருஞ்சியது. இருவரும் சேர்ந்து விளையாட்டு பொருள் போல் சித் உடலை கிழித்து அவனின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துக் கொண்டிருந்தார்கள். சித் தப்பிக்க பார்க்க அவனின் தலைமுடியை இறுக பற்றியவன் சித் மணிக்கட்டில் நரம்பை கிழித்தான். அவர்களின் எண்ணமே அவன் துடி துடித்து சாகவேண்டும் என்பது. அதனை மிக கச்சிதமாக செய்துக் கொண்டிருந்தார்கள். வாக்கு மூலம் கொடுத்ததற்காக நாக்கை துண்டித்தவர்கள், அடுத்ததாய் போதை பொருள் விஷயத்தை பார்த்ததற்காக அவனின் கண்ணை பறித்தார்கள். மெத்தை முழுவதும் அவனின் ரத்தமாக இருக்க கண் தெரியாமல் ஊமையாக அழுதான். அடுத்து என்ன செய்ய போகிறார்களோ என்ற பயத்தில் அவனிருக்க கனத்த பொருள் ஒன்று அவன் தலையில் மோதியது தான் அவன் நினைவில் கடைசியாக இருந்தது. அவனின் ரத்தம் அந்த அறை எங்கிலும் தெறிக்க அவனின் காலை பிடித்து இழுத்தபடியே நடு கூடத்தில் அவனை போட்டார்கள். லேசாய் அவன் உயிர் அவனின் தொண்டைகுழியில் துடித்துக் கொண்டிருக்க, கத்தியை சரியாக அங்கே சொருகி அதனையும் நிப்பாட்டினான். 

 

வந்த வேலை முடிந்தது என்று இருவரும் வந்த வழியிலே தப்பித்து சென்றார்கள். இரண்டுமணி நேரம் கழித்து தான் வேலையை முடித்து விட்டு திலக் வீட்டிற்கு திரும்பினான். சித் வீட்டில் இருப்பது தெரியக் கூடாது என்பதனால் வாசலில் பூட்டி விட்டு சென்றிருந்தான். கதவை திறந்துமே குப்பென்று ரத்தவாடை வீச, இருட்டிய வீட்டில் மின் விளக்கை போட்டவன் கூடத்தில் பிணமாக கண்ட சித்தார்த்தை பார்த்ததும் பயத்தில் வெளறி விட்டான். தடுமாறி கீழே விழுந்தவன், அதிர்ந்த விழிகளுடன் பின்னோக்கி செல்ல, அவன் கையில் பிசு பிசுப்பாக ஏதோ ஒட்டியது. கையை பார்க்க சித்தார்த் ரத்தம். அடுத்த நொடி அவனின் அலறல் சத்தம் அந்த தெருவே கேட்டது. 

 

ஆல்வின் காரை ஒட்டிக் கொண்டிருக்க இனி அமைதியாகவே வந்தாள். இருவரும் மீட்டிங்கிற்காக சென்று கொண்டிருந்தார்கள். முதலில் மவுனத்தை கலைத்தது ஆல்வின். “இனி, அடுத்த மாசத்துல இருந்து நீ வேற இடத்துல வேலை பார்த்துக்க.. நான் இந்த மத் எண்ட் திரும்ப ஜேர்மன் போறேன்.. எனக்கு அப்பறம் என்னோட ஜேர்மன் ஸ்டாப் ஒருத்தர் தான் இங்க வேலை பாக்க வர போறாரு..” என ரோட்டை பார்த்தபடியே கூறிட, இனி அவனை இமைக்காமால் பார்த்தாள். போகாதே என்று சொல்ல வார்த்தை தொண்டை வரை எட்டினாலும் அதனை சொல்ல உரிமை இருக்கிறதா என்று தோன்றீயது அவளுக்கு. அவள் பதிலுக்கு முன்பே அவள் போன் அடிக்க, எடுத்து பார்த்தாள். ஆருத்ரா அழைத்திருக்க புருவ முடிச்சுடனே ஏற்று பேசினாள். 

 

“இனி.. எங்க இருந்தாலும் உடனே வீட்டுக்கு வா.. சித்... சித்.. சித்தை கொன்னுட்டாங்க” என பதட்டத்துடன் கூறிட, “சித்தை கொன்னுட்டாங்களா?” என திகைப்புடனே ஆல்வினை பார்த்தாள் இனி. அவள் கூறியதை கேட்டதுமே ஆல்வின் ஸ்டியரிங்கை அழுத்தமாய் பற்றினான் 

கருத்து திரி:

https://kavichandranovels.com/community/vsv-39-%e0%ae%a8%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-comments/


   
ReplyQuote

You cannot copy content of this page