All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

பாரிஜாத மலர் என் கை சேருமா?-50

 

VSV 30 – பாரிஜாத மலர் என் கை சேருமா?
(@vsv30)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 54
Topic starter  

 

அத்தியாயம்: 50

 

ஆரபி அறைந்ததும் ராஜீவ் அவளை பார்த்த பார்வையில் கொலை வெறி மின்னியது…

 

ஆரபி “ மரியாதையாக நடந்து கொள்ளு நான் யாரென நினைத்த ஆரபி பைரவ் சாம்ராட் ரகுநந்தன்…பெண்ணுங்க என்றால் உனக்கு அவ்வளவு இளக்காரமாக போய் விட்டதா?...

 

அதுவும் உன்னை நம்பி ஒரு பெண்ணு கழுத்தை நீட்டி இருக்கு அவளுக்கு துரோகம் செய்ய எப்படி உனக்கு மனசு வந்தது…

 

என்ன சொன்ன உனக்கு வாரிசாக அதை ஏன் இப்போ வரைக்கும் கடவுள் உனக்கு தரவில்லை தெரியுமா?...உன்னை போல ஒரு அயோக்கியனாக தான் அந்த பையன் வளருவான் என்று…

 

எனக்கு என்ன கண் இல்லையா?...என் புருஷன் நடக்க முடியாதவர் என்று தெரிந்து தான் அவர் கையால் தாலி வாங்கினேன். 

 

அவரை பற்றி என்ன தெரியும் உனக்கு…பிறப்பிலே ராஜகுமாரன் ஆனால் அவர் மனசில் இருக்கும் காருண்யம் என்ன விலை கொடுத்தும் வாங்க நினைத்தாலும் வாங்க முடியாது…

 

அந்த மலைஜாதி மக்களை பாரு என் புருஷனுக்காக உயிரை கொடு என்றால் கூட அடுத்த நிமிஷம் ஏன் எதற்க்கு என கேட்காமல் கொடுப்பாங்க…காரணம் அவர் அவங்க மேலே வைத்திருக்கும் காருண்யம் அப்படிப்பட்ட ஒன்று. 

 

என்ன சொன்ன சுகமா?...இல்ல தெரியாமல் தான் கேட்கிறேன்…உங்களை போல ஆண்களுக்கு எங்க உடல் தான் கண்ணுக்கு தெரியுமா?....அதற்குள்ளே இருக்கும் மனசு தெரியவே தெரியாதா?...

 

நீ தம்புரான் தான் ஆனால் ஒரு பெண்ணின் இதயத்தை உன்னால் என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாது. 

 

நீ எல்லாம் என்ன மனுஷன் அது தான் கடவுள் உனக்கு எல்லா வசதி வாய்பை தந்து இருக்கிறார் தானே…பிறகு எதற்காக அந்த இல்லாத மக்களின் கண்ணீரை வாங்கி கொள்கிற…

 

அவங்க கண்ணீர் விட்டால் உன்னை மட்டுமல்ல உன் மொத்த தரவாடுவையும் இதோ வீற்றிருக்கும் இந்த பகவதி தாய், ருத்திரன் எரித்து சாம்பலாக்கி விடுவாங்க…

 

காதல் என்றால் என்ன என்று நினைத்த…பாரு காதலுக்கு உதாரணமாக நிற்கிறாங்க கார்த்திகா மா… அவங்களும் உன்னை போல தரவாடுவில் பிறந்த இளவரசி தான் …அவங்க புருஷன் உடம்புக்கு முடியாதவர் என தெரிந்தும் காதலித்தாங்க…

 

இருபத்துநான்கு வயதில் புருஷனை இழந்து நின்றாங்க திரும்ப கல்யாணம் செய்ய சொன்ன போது கூட மறுத்து…தன் புருஷன் நினைவாக உள்ள தன் பையன் கூட வாழ்ந்து கொண்டு இருக்கிறாங்க…

 

என் புருஷனும் அப்படி தான் அவர் மனதில் இன்னும் ஆரணி அக்கா இருக்கிறாங்க….அதை என் கிட்ட கூட சொன்னார் அதை நான் தப்பாக நினைக்கவே மாட்டேன் அது தான் உண்மை காதல்…

 

அவர் இதயத்தில் இந்த ஆரபிக்கும் இடம் உண்டு அது எனக்கு தெரியும்…இந்த ஜென்மத்தில் அவர் எப்படி இருந்தாலும் கூட என் புருஷன்…

 

பெத்தவங்க பெயர் தெரியாது, மதம், ஜாதி தெரியாது வசதி இல்லாத இந்த அனாதைக்கு வாழ்வு தந்த தேவன் அவர் “...என்றாள்.

 

அவள் பேச்சு அங்கே உள்ளவர்கள் மனதை அசைத்தது…மீனாட்சி, கார்த்திகா கண்கள் கலங்க ரவிவர்மன் முகம் கனிந்தது …பைரவ் அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான். 

 

ராஜீவ் “ எந்தா தைரியம் இருந்தால் ஒரு பெண்குட்டி என்னை கை நீட்டி அடிப்ப…இது வரைக்கும் பெத்தவங்க கூட என்னை கை நீட்டியது இல்லா நீ கை நீட்டி விட்ட…இதற்க்கு பிறகு உன்னை விட்டால் என் தரவாடு மக்கள் மட்டுமல்ல எந்த தரவாடும் மக்களும் மதிக்க மாட்டாங்க. 

 

என்ன சொன்ன உன் பார்த்தாவு காருண்யம் உள்ளவன் என்றா….சரி பார்க்கலாம் அவன் காருண்யம் இப்போ அவன் பார்யா மானத்தை எப்படி காப்பாற்ற போகிறது என்று…பைரவ் நினக்கு ஒரு சவால் உன் கண் முன்னே உன் பார்யாவை தூக்கி கொண்டு போக போகிறேன்…

 

முடிந்தால் அவளை காப்பாற்றி கொள்ளு… உன்னால் வாழ் நாள் பூராகவும் எழுந்து நடக்க முடியாதே பிறகு எப்படி இவளை காப்பாற்ற போகிற “...என்றவன். 

 

ஆரபி கையை பிடிக்க அவள் அவனை அறையை கை ஓங்க…ராஜிவ் விட்டான் அறை ஆரபி தடுமாறி கொண்டு கீழே விழுந்தாள்…ஆரு, ஆரபிமா என அங்கே இருந்த அனைவருமே சத்தம் போட்டார்கள்…

 

ராஜிவ் “ திரும்பவுமா அடிக்க கை ஓங்குகிற…என் தரவாடுவுக்கு வா உனக்கு இருக்கு என்றவன்…அவள் கை பிடித்து இழுத்து கொண்டு போக அங்கே ஓம குண்டத்தின் நெருப்பு அவள் காலை பதம் பார்க்க அம்மா என சத்தம் போட்டாள்…ராஜீவ் அதை கூட பார்க்காது இழுத்து கொண்டு பைரவ்வை தாண்டி போக அவனால்  அடுத்த அடி நகர முடியவில்லை. 

 

அவன் திரும்பி பார்க்க ஆரபி கையை பைரவ் பற்றிருந்தான். 

 

ராஜிவ் “ பைரவ் வேணாம் எனக்கு சமபலம் இல்லாதவன் கூட மோத கூடாது என்று தான்…நான் உன் மேலே கை வைக்காது போகிறேன்  அவள் கையை விடு”...என்றான். 

 

பைரவ் அவனை நிதானமாக பார்த்தவன்…ஆரபி கையை விட்டவன் ஆரபியின் ஒரு கையை பற்றி இருந்த ராஜிவ் கையை சட்டென பிடித்தான்…

 

அந்த பிடி ஆயிரம் யானைகளுக்கு சமமாக இருந்தது.. விடு பைரவ் என ராஜீவ் சத்தம் போட அந்த கையை பற்றி தள்ளி விட ராஜீவ் தூர போய் விழுந்தான். 

 

பைரவ் “ என்ன சொன்ன உனக்கு சமபலம் உள்ள ஆள் வேணும் என்றா! என்ன மோதலாமா?...என கேட்டு கொண்டு தன் சக்கர நாற்காலியின் கைபிடியை …பற்றி கொண்டவன் சட்டென எழுந்து நின்றவன்… நாற்காலியை தன் காலால் உதைக்க அது பின்னால் போய் விழுந்தது. 

 

ராஜீவ் மட்டுமல்ல ஆரபி தொடக்கம்…அனைவருமே அதிர்ச்சியாக நின்று இருந்தனர்…பைரவ் அருகே நின்றிருந்த ஆரபி அவன் கை, கால் எல்லாம் தடவி விட்டவள்…அழுதவாறே. 

 

ஆரபி “ உங்களால் நிற்க முடிகிறது அப்போ நீங்க நடப்பீங்க தானே…இது உண்மை தானே பிரமை இல்லை தானே”... என கேட்டாள்…தன்னை தடவிய கையை பற்றிய பைரவ் தன் நெஞ்சோடு அணைத்து கொண்டவன். 

 

பைரவ் “ இல்லை ஆரபி என் பார்யாவுக்கு ஒன்று என்றால் எப்படி என்னால் பார்த்து கொண்டு இருக்க முடியும்…உன் பிரேமத்திற்க்கு முன்னால் ஏதுவும் நிற்க முடியாது நீ பட்ட வலிக்கு உன் பார்த்தாவு கணக்கு தீர்க்க வேணாமா?...என்றவன் அவளை தூக்கி கொண்டு அங்கே இருந்த நாற்காலியில் இருக்க வைத்தவன். 

 

அவள் பாதத்தை பிடித்து பார்க்க அது ஓம குண்டல தீயை மிதித்ததால் பொசுங்கி போய் இருந்தது…அவள் காலை அவன் பற்றி பார்த்து கொண்டு இருக்க பின்னால் இருந்து ஒருவன் அடிக்க வர…

 

சட்டென அவனை தடுத்து விட்டான் உதை யுவராஜ் அது போல மற்றவர்களும் வர பிரணா, முகே என பைரவ் அழைக்க… 

 

“சேட்டா நாங்க பார்த்து கொள்கிறோம் நீங்க சேட்டத்தியை பாருங்க “...என்றவர்கள் புகுந்து விளையாட ஆரம்பிக்க …விஜயன், அருள் அட பாவிங்களா! இவங்க பைரவ், யுவராஜ் மேலே கோபம் உள்ளவங்க போல நடித்து இருக்கிறாங்க….

 

அப்போ எங்க ரகசியங்களை உளவு பார்த்து பைரவ்வுக்கு சொன்ன எட்டப்பன் இவங்க தான் என நினைத்தார்கள். 

 

பைரவ் தன் மேலே போர்த்து இருந்து அங்கவஸ்திரத்தை எடுத்தவன்…அதை  இரண்டாக கிழித்து ஆரபி காலில் கட்டி விட்டவன்… அவள் கன்னத்தை தடவி விட்டு எழுந்தவன் தன் விரலை வாயில் வைத்து…

 

ஏதோ ஒரு சத்ததை எழுப்பினான் கொஞ்ச நேரத்தில் யாருமே எதிர் பாராத வகையில்…மக்களை பிடித்து வைத்தவர்கள் சட் சட்டென கீழே விழுந்தார்கள்…அது போல ராதிகா, நயனா, நிவி, நிலாவை பிடித்து இருந்தவர்கள் கூட கீழே விழுந்தார்கள். 

 

பைரவ் நிதானமாக நடந்தவன் ருத்திரன் காலில் இருந்த அபிஷேக குங்குமத்தை அள்ளி.. தன் நெற்றி, வெற்றி மேனி எங்கும் பூசியவன்… கைகள் இரண்டை கோர்த்து நெட்டி முறித்து விட்டு தன் தலையை இடது, வலது பக்கமாக அசைத்தவன்…

 

ராஜீவ் அருகில் போனான் இன்னும் அதிர்ச்சி தெளியாமல் இருந்த ராஜீவ் காலில் தன் காலால் ஏறி மிதிக்க அவன் அலறல் சத்தம் கேட்டது. 

 

பைரவ் “ என்ன சொன்ன சமபலம் இல்லாதவன் கூட மோத முடியாதா?...இப்போ மோது டா என் ஆரணியை கொலை செய்தது போதாது என்று என் ஆரபி மேலே நினக்கு பிரேமமா? கொண்ட...

 

நினக்கு எந்த தைரியம் இருந்தால் என் வீட்டு பெண்குட்டிகளை பணயமாக பிடித்து இருப்ப…நான் நடக்க ஆரம்பித்து நான்கு வருஷமாகி விட்டது டா உங்களை போல துரோகிகளை இனம் காண தான் இந்த நாடகம்..

 

என் தம்பிங்க மூன்று பேரை தவிர இந்த உண்மை யாருக்குமே தெரியாது என்பதை விட நான் சொல்லவில்லை…முத்தச்சன் நிங்கள் மோன், மருமோளை கொலை செய்தது ஸ்ரீகங்கா தரவாடு தான்…

 

திலகன் தம்புரானின் அனியன் ராஜ்குமார் அதை எல்லாம் ஆதாரத்தோடு கோர்ட்டில் கேஸ் பைல் பண்ணி விட்டேன். 

 

என் விபத்துக்கு காரணம் கூட இந்த பட்டி தான்…எனக்காக உயிர் கொடுத்தாள் ஆரணி இப்போ என் கண் முன்னே என் பந்தம், மக்கள் மேலா கை வைக்க…

 

நீ வருவ என்று எனக்கு தெரியும் டா பட்டி(நாய்)  அது தான் மலை ஜாதியில் விஷ அம்பு எய்பவங்களை பக்கத்தில் நினக்கு தெரியாமலே நிற்க வைத்தேன்…என் சைகை கேட்டால் மட்டும் தான் அவங்க வெளியே வந்து குறி பார்ப்பாங்க அவங்க என் மக்கள்..

 

எந்தா தைரியம் இருந்தால் என் பார்யா மேலே பிரேமம் என்று சொல்வ…ஒருத்தி கூட ஒழுங்காக வாழ தெரியாத பட்டி என் பார்யா மேலேயா ஆசை வைத்து கை வைத்த…அந்த கையை உடைக்காமல் விட்டால் நான் என்ன பார்த்தாவு?  என சொன்னவன்….

 

ஆரபியை பிடித்த வலது கையை உடைத்தான் ராஜீவ் அலறல் அந்த மலை எங்குமே ஒலித்தது…முன்னா என அழைக்க அவன் அடுத்த செக்கன் இரும்பு ராடு ஒன்றை கொண்டு வந்து பைரவ் கையில் கொடுத்தான். 

 

பைரவ் “ இன்று நான் ருத்திரனுக்கு உன் ரத்தால் தான் அபிஷேகம் செய்ய போகிறேன் என்றவன்…அவன் முகத்தை விட்டு மற்ற பகங்களில் தாறுமாறாக அடித்து பின்னி எடுத்தான்…

 

பைரவ் “ நீ ரொம்ப பாவம் செய்து விட்ட பாவ கணக்கை நேர் செய்ய வேணாமா?...ஸ்ரீகங்கா தரவாடுக்கு வலி என்றால் என்ன என தெரிய வேணாமா?...

 

இப்போ காட்ட போகிறேன் என்றவன் இரும்பு ராடை அவனை நோக்கி தலையில் அடிக்க  ஓங்க ...வேணாம் பைரவ் என கார்த்திகாவும் சாம்ராட் வேணாம் என்று ஆரபியும் ஓரேய நேரத்தில் சத்தம் போட்டார்கள்…

 

ஆரபி மெதுவாக நொண்டி கொண்டு பைரவ் அருகில் வந்தவள்….அவன் தோளை பற்றியவள். 

 

ஆரபி “ வேணாம் ஒரு பெண்ணின் கண்ணீருக்கு நீங்க காரணமாக வேணாம் சாம்ராட்…அவன் மனைவியின் தாலி உங்க கையால் இறங்க வேணாம்….

 

அது மட்டுமல்ல உங்களுக்காக உங்க கடமைகள், குடும்பம் இதை எல்லாம் விட நான் காத்திருக்கிறேன்…இவன் தப்புக்கு தண்டனையை சட்டம் கொடுக்கட்டும் அதை விட தெய்வம் நின்று கொன்று விடும். 

 

நீங்க மற்றவங்களை விட வேறுபட்டவர்…உங்க கையில் ரத்த கறைபடிய வேணாம் இந்த வயதில் உங்க தாத்தா, பாட்டிக்கு கஷ்டத்தை கொடுக்க போகிறீங்களா?..வேணாம் விட்டு விடுங்க உங்க மனைவியாக முதல் தடவை உங்க கிட்ட இதை தான் கேட்கிறேன் “...என்றாள். 

 

கார்த்திகா “ மோனே பைரவ் நிங்கள் ஜெயிலுக்கு போனால்…நிங்கள் திரும்ப வரும் போது இந்த அம்மாயி இருக்க மாட்டேன்… நான் வேணாம் என்றால் இவனை வதம் செய்து விடுங்கள்”...என்றாள். 

 

பைரவ் தன் கையில் உள்ள ராடை தூக்கியெறிந்தவன்…ராஜீவ்வை பார்த்து. 

 

பைரவ் “ உனக்கு இன்று உயிர் பிச்சை அழித்தது இரண்டு பெண்ணுங்க டா…அதுவும் நீ தப்பாக நடக்க பார்த்த என் பார்யா டா அவள் இது வரைக்கும் தனக்காக ஏதுவுமே என் கிட்ட கேட்டது இல்லை…முதல் தடவை கேட்டு இருக்கிறாள் அதுவும் எனக்காக அதை நான் நிறைவேற்ற வேணாமா?...

 

அடுத்து நான் தெய்வத்திற்க்கு சமமாக மதிக்கும் என் அம்மாயி…அவங்க என்னை விட்டு போனால் நான் ஜீவன் இழந்து விடுவேன்.. இது தான் நான் உனக்கு கடைசியாக வழங்கும் சமாபனம் (மன்னிப்பு) இனி இப்படி நடந்து கொண்ட…

 

பிறகு யார் கேட்டாலும் உனக்கு உயிர் பிச்சை போட மாட்டேன்.. யுவா போலீஸ் கிட்ட இவனையும் இவன் ஆளுங்களையும் ஒப்படைத்து விடு”...என்றவன் தன் அருகே நின்ற ஆரபியை அணைத்து கொண்டான். 

 

மலர் பூக்கும்…


   
ReplyQuote

You cannot copy content of this page