All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

பாரிஜாத மலர் என் கை சேருமா?-46

 

VSV 30 – பாரிஜாத மலர் என் கை சேருமா?
(@vsv30)
Estimable Member Author
Joined: 6 months ago
Posts: 54
Topic starter  

 

அத்தியாயம்:46

 

பைரவ் பிறப்பிலே ராஜகுமாரன் பல நகரங்களில் உள்ள தொழில் சாம்ராஜ்ஜியத்தில் அவன் பெயர் தெரியாதவர்கள் யாருமே இல்லை…

 

அவனுக்கு உறவில் மணப்பெண்ணு இருக்க அதை விட பெண்ணு கொடுக்க பல ராஜவம்சம் தவம் இருக்க…அதை எல்லாம் புறம் தள்ளி விட்டு மற்றவர்கள் நலனுக்காக தன் கை பற்றியவன்…

 

தன் வார்த்தைக்கா பணக்கார வாழ்க்கையை ஹோம் பசங்களுக்கு கொடுத்தவன்… தன் ராஜகுமாரன் அடையாளத்தை விட்டு சாதாரண மனுஷனாக வாழ்ந்து கொண்டு இருப்பவன். 

 

அப்படிப்பட்டவன் கை தாலி அவளுக்கு கிடைத்தது அவள் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலன்…ஆரபி தன் அலங்காரங்கள் கலைந்தவள் தாலியை தவிர மேலதிகமாக போட்டு இருந்த நகைகளை கழட்டி வைத்தாள் …

 

தன் இடைவரை பின்னி இருந்த கூந்தலை அவிழ்த்து சிக்கெடுத்து விரித்து விட்டு பால்கனி நோக்கி போனாள். 

 

யாருக்குமே காத்திருக்காது சூரியதேவன் ஓய்வெடுக்க போனதும்…நிலவு மகள் வானில் பவனி வந்து கொண்டு இருந்தாள்…அந்த ஏகாந்ததை ரசித்தவாறே அவளுக்கு பிடித்த பாடலை பாட ஆரம்பித்தாள்…

 

வெண்ணிலவே வெண்ணிலவே தன் மதியே 

என்னுடனே வா வா 

நிலவே நிலவே வா வா…

 

வேறு துணை யாருமில்லை 

விதி வழியே வந்தேன் 

நிலவே நிலவே வா வா…

 

 

என்று வானில் வலம் வரும் நிலவை பார்த்து பாட ஆரம்பித்தாள்…

 

அஞ்சேல் அஞ்சேல் என்றே 

அருகினிலே வந்தானே 

அபயமே தந்தானே 

ஆதரித்தான் 

அன்புரைத்தான் யாரிவரோ 

நானறியேனே…

 

பைரவ் அவளை சந்தித்த முதல் நிகழ்வை எண்ணி பார்த்தாள் …

 

இன்பநிலா இன்பநிலா 

ஒடத்திலே ஏற்றியே 

வைத்தானே 

இதயம் கோவில் கொண்டானே 

எந்த ஊரோ என்ன பேரோ 

எங்கிருந்தோ வந்தான் 

எங்கிருந்தோ வந்தான் 

இதயம் கோவில் 

கொண்டானே…

வெண்ணிலவே தன் மதியே 

என்னுடனே வா வா 

நிலவே நிலவே வா வா… 

 

என பாடி முடிக்க அவளை பின்னால் இருந்து கட்டி கொண்டாள் ராதிகா..

 

ராதிகா “ வாவ் சூப்பராக இருந்தது டி இந்த பாட்டு நம்ம ஆயா அவங்க ரேடியோ பெட்டியில் கேட்கும் பாட்டு தானே…நானும் கேட்டு இருக்கிறேன் பட் செம போர் என போய் விடுவேன்.. ஆனால் அந்த பாட்டை உன் வாய்ஸில் கேட்கும் போது சூப்பராக இருக்கு டி “...என்றார். 

 

“ நானும் ரொம்ப வருஷத்திற்க்கு பிறகு இந்த பாட்டை கேட்டேன் மா “...என குரல் வர திரும்பி பார்க்க…கார்த்திகா, பைரவ், யுவராஜ், ஓமனா நின்று இருந்தார்கள்…

 

ஓமனா “ தம்புராட்டி என்ன அழகான கானம் பட்சே இதில் உள்ள அர்த்தம் எனக்கு தெரியாது…பட்சே உங்க குரல் மதுரகானம் போல எங்களை மயக்கி விட்டது…

 

தம்புரானுக்கு ஓவியம் தீட்ட பிடிக்கும் நினக்கு பாட பிடிக்கும் போல…அழகான ஜோடி தான் நிங்கள் இருவருமே என் கண்ணு நிங்கள் மேலே பட கூடாது இருங்க திருஷ்டி எடுத்து வருகிறேன் “...என்று போனாள். 

 

ஆரபிக்கு முகம் சிவந்து போய் விட்டது வெட்கத்தில்…ஹோம்மில் பாடுவது வேறு அவர்கள் கூட வளர்ந்த உறவுகள்…ஆனால் இவர்கள் புது உறவுகள் அதுவும் பைரவ் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். 

 

கார்த்திகா “ ஓமனா சொன்னது போல மோளே மதுர கானம் தான்…என் அம்மே தான் பழைய பாடல் பாடி கேட்டு இருக்கிறேன் ரகு சேட்டா போன பிறகு அவங்க பாடுவது இல்லா…

 

காரணம் சேட்டாவுக்கு அம்மே பாடும் கானம் பிடிக்கும்…அவர் போன பிறகு அவங்க கானம் பாடுவதில்லா…இந்த அரண்மனையின் உயிர்ப்பு அவரோடு போய் விட்டது. 

 

ரொம்ப நாளைக்கு பிறகு நிங்கள் கானம் எங்க மனசை குளிர்வித்து விட்டது…நான் இவங்களை அழைத்து வந்தது உங்க கூட ஊண் கழிக்க…வா மோளே ஊண் கழிக்க ராதிகா நிங்களும் வாங்க மோளே”... என்றாள். 

 

 

ராதிகாவுக்கு சாப்பிட யாரும் சொல்ல வேணுமா?...முதல் ஆளாக வந்து சாப்பிட தொடங்கினாள்…கார்த்திகா பரிமாற வர அவளை அமர வைத்து விட்டு ஆரபி தான் பரிமாறினாள்…

 

 

அதற்க்கு பிறகு தான் அவள் சாப்பிட அமர்ந்தாள் விருந்து சாப்பாடு தான் சைவம் தான் என்ன இனிப்பு அதிகமாக சேர்த்து இருந்தாங்க…

 

கார்த்திகா “ மோளே ஆரபி, ராதிகா நாளை சாயங்காலம் ஆறுமணிக்கு மகா பூஜை ஆரம்பமாகும்…உங்க டிரஸ் நாளைக்கு தான் நான் கொண்டு வந்து தருவேன்…இந்த பூஜை தான் உங்க வாழ்க்கையில் முக்கியமானது…கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேணும் சரி சீக்கிரமாக தூங்க போங்க…எனக்கு வேலை இருக்கு ஓமனா வா நம்ம போகலாம் “...என்றாள். 

 

 

திருஷ்டி எடுத்து வந்த ஓமனா நால்வருக்கும் சுற்றி விட்டு போனார்…ராதிகா, யுவராஜ் பால்கனிக்கு பேச போக ரூம்மில் இருந்தது ஆரபி, பைரவ்

 

 

பைரவ் “ உன் கானம் உண்மையில் என் மனதை அசைத்து விட்டது ஆரபி…ஆரணி பற்றி இப்போ நான் பேச கூடாது தான் பட் அவளை மறக்க முடியாது என்னால்…

 

 

பொய் சொல்ல மாட்டேன் அவள் என் நினைவுகளில் வாழ்கிறாள்… ஆனால் நீ என் பாதி அதில் எந்த மாற்றமும் இல்லை …உன்னை ஏற்று கொள்ள கொஞ்ச காலம் எனக்கு வேணும்.

 

என் கடமைகளில் தோள் கொடுக்க வந்த உன்னை…நான் ஏமாற்ற மாட்டேன் என்னை நீ நம்பலாம் “...என்றான். 

 

ஆரபி “ ஆரணி அக்காவை நான் மறந்து விடுங்க என்றால் என் சுயநலம்…கார்த்திகா மா சொன்னாங்க உங்களுக்காக தான் அவங்க உயிரை விட்டாங்க என்று…

 

பாம் இருக்கு என தெரிந்தவுடனே உங்களை காரில் இருந்தி தள்ளி விட்டு அவங்க உங்க கண் முன்னே வெடித்து சிதறி விட்டாங்க என்று…

 

அதனால் தான் உங்களால் நடக்க முடியாமல் போனது என்று…அப்படிப்பட்ட அவங்களை நான் மறந்து விடுங்கள் என சொன்னால் என்னை போல நன்றி கெட்டவள் இந்த உலகில் இருக்க மாட்டாங்க…

 

இந்த தாலி இந்த பந்தம், அரண்மனை  எல்லாம் அவங்க தானே எனக்கு கொடுத்தது…தெய்வத்தை யாருமே மறந்து விடுங்க என சொல்ல மாட்டாங்க…

 

இறந்தவங்க எல்லாமே தெய்வம் அதை தான் எல்லா மதமும் சொல்கிறது…நீங்க அவங்களை மறந்து விட வேணாம் அது தான் நீங்க வாழ்நாளில் செய்யும் மிக பெரிய பாவம் ஆகும் “...என்றவளின் கரம் பற்றிய பைரவ் அந்த கரத்தில் தன் முதல் முத்தத்தை பதித்தான். 

 

யுவராஜ் பால்கனியில் நிற்க ராதிகா…கார்த்திகா எடுத்த வந்த பால் பாயச்சை ஒரு கப்பில் ஊற்றி மூன்றாவது முறையாக சுவைத்து கொண்டு இருந்தாள். 

 

யுவராஜ் “ ராதிகா ரொம்ப தேங்க்ஸ் நீ தனுஜை அண்ணனாக ஏற்று கொண்டதற்க்கு….அவன் ரொம்ப பாவம் ராதிகா கண் முன்னே சுனாமியால் தன் குடும்பத்தை பறி கொடுத்தவன் …

 

அவனுக்கும் உனக்கும் டேர்ம் சரியில்லை என்று நினைத்தேன் பட் அவனை நீ சபையில் பெருமைபடுத்தி விட்ட “...என்றான். 

 

ராதிகா “ ரொம்ப உருக வேணாம் அவன் கூட கோபம் இருக்கு தான் அது வேற.. .இது வேற ஆமாம் அவன் ஏன் தனியாக இருக்கிறான் சீக்கிரமாக அவனுக்கு ஒரு பெண்ணை பார்த்து கட்டி வைக்க வேணும்…

 

நான் தான் பார்ப்பேன் கேரளா பெண்ணு இல்ல தமிழ் நாட்டு பெண்ணு.. அப்போ தானே அவனை அவள் கூட சேர்த்து நான் டார்ச்சர் பண்ண முடியும் “...என சொல்லி சிரித்தாள். 

 

 

யுவராஜ் மனதில் கல்மிஷம் இல்லாத சிரித்தவள்…முகத்தை பற்றியவன் அவள் இதழ் மேலே இருந்த… பால் பாயாசத்தை துடைத்து தன் உதட்டில் வைத்தான்…இப்படி இரு ஜோடிகளும் வண்ண கனவுகளோடு தூங்க போனார்கள்…

 

 

மறுநாள்  கார்த்திகா வந்து அவர்களுக்கு பூஜை நேரத்தின் போது…அணிய வேண்டிய உடைகளை கொடுத்தாள் ஆரபிக்கு சிவப்பு புடவை முந்தானை பச்சை…. ராதிகாவுக்கு மஞ்சள் புடவை முந்தானை சிவப்பு இரண்டும் பட்டு புடவை கூடவே மரகதம், ரத்தினம் பதித்த நகைகள். 

 

கார்த்திகா “ ஆரபி இது தான் இந்த தரவாடு நிறம் …ராதிகா இது என் புருஷன் தரவாடு நிறம்…ஆரபி என் பிறந்த வீட்டு தம்புராட்டி என்றால் நிங்கள் என் புகுந்த வீட்டு தம்புராட்டி...

 

என் அம்மாயியப்பன் யுவாவை தனக்கு அடுத்த தம்புரானாக இன்று அறிவிக்க போவதாக சொன்னார்…அம்மாயியம்மா தான் உனக்கு இந்த புடவை, நகை எல்லாம் அனுப்பி இருந்தாங்க. 

 

இதை சாதாரண சேலை போல அணிய முடியாத மகாராஷ்டிரா முறையில் தான் அணிய வேணும்…ஏன் என்றால் இது மகா பூஜை மடிசார் போல தான் கிட்ட தட்ட இதுவும் இருக்கும்…நானும் நயனா , நிவியும் உங்களை ரெடி பண்ண வருவோம்”... என்றாள். 

 

மாதவன் எழும் போது தலை வலியில் உயிர் போனது…அவர் எங்கே இருக்கிறார் என கஷ்டபட்டு கண்களை திறந்து பார்க்க முயற்ச்சி பண்ண…

 

பல்லவி “ அவந்தி அச்சன் எழுந்து விட்டிங்களா?...நிங்களால் நாங்க தான் யார் முன்னாடியும் எழுந்து கம்பீரமாக நிற்க முடியாமல் நிற்கிறோம்….உங்க கூட என்ன பேச்சு எனக்கு என் அச்சன் கூட நிங்கள் பேசி கொள்ளுங்கள். 

 

அச்சன் உங்களை சீக்கிரமாக வர சொன்னார்…இதை சாப்பிட்டு விட்டு வந்து தொலைங்க “...என சொன்னவள்… எலுமிச்சம்பழ ஜூஸை அவன் அருகில் உள்ள டேபிளில் வைத்து அவனை முறைத்து விட்டு போனாள். 

 

மாதவன் இங்கே எப்படி வந்தோம்…நான் சிங்கப்பூரில் இருந்து கிளம்பி ஏர்போர்ட் வந்து இறங்கினேன்…பிறகு கார் வந்தது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ஏறியது தான் தெரியும் நல்ல தூக்கம்…

 

அடுத்து தலை வலி பிளக்க என் பேக்கில் இருந்த சரக்கை கொஞ்சம் போட்டு விட்டு  கெஸ்ட் ஹவுஸ்க்கு போக சொன்னால்…அந்த பரதேசி டிரைவர் நேராக இங்கே வந்து இறங்கி விட்டான் போல…

 

கடவுளே என்ன எல்லாம் பேசி தொலைத்தேனோ தெரியாது…அந்த ரவிவர்மன் வேற உண்மை தெரிந்தால் என்னை தரவாடுவிலே ஜீவ சமாதியாக்கி விடுவான்…பைரவ், யுவா பயல்கள் வேற வந்திருக்கிறாங்க பார்க்கலாம் என்ன நடக்க போகிறது என்று நினைத்தவர் எழுந்து குளிக்க போனார்…

ஆரபி, ராதிகா தவிர மற்றவர்கள் எல்லோருமே காலையில் ஹாலில் ரவிவர்மன் அழைப்பின் பெயரில் கூடி விட்டார்கள்…ரவிவர்மன் எதிர்பார்த்த நபர் இன்னும் வரவில்ல….அவர் பார்வை உயர்ந்து பல்லவியை பார்த்தது. 

 

 

பல்லவி “ அச்சா நிங்கள் சொன்னதை அவந்தி அச்சனிடம் சொல்லி  அவரை சாபம் (திட்டி) விட்டு தான் வந்தேன்…இப்போ வந்து விடுவார் “...என்றாள்…அவள் சொன்னது போல மாதவன் ரவிவர்மன் முன்னே வந்து நிற்க…

 

 

ரவிவர்மன் “ நிங்களுக்கு ஸ்ரீகங்கா தரவாடுவில் என்ன வேலை மருமோனே “...என கேட்டார். 

 

மலர் பூக்கும்…


   
ReplyQuote

You cannot copy content of this page