All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

பாரிஜாத மலர் என் கை சேருமா?-45

 

VSV 30 – பாரிஜாத மலர் என் கை சேருமா?
(@vsv30)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 53
Topic starter  

 

அத்தியாயம் : 45

 

முன்னா வந்து நிற்க அங்கே இருந்த அனைவருக்குமே அடுத்து என்ன நடக்கும் என தெரிந்தது…பல்லவி ரவிவர்மன் அருகில் ஓடி போனவள். 

 

பல்லவி “ அச்சா பையுவை ஏதும் செய்ய வேணாம் என சொல்லுங்க…அவர் என் பார்த்தாவு என் மோள்களின் அச்சன் நிங்கள் மூத்த மருமகன்…நிங்கள் சொன்னால் பையு கேட்பான் அச்சா “...என பதறி கொண்டு சொன்னாள். 

 

ரவிவர்மன் கல்லாக நின்று இருந்தார்…அவர் முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லை பல்லவி அடுத்து கார்த்திகாவிடம் போனவள்…அவள் கைகளை பற்றி கொண்டவள். 

 

பல்லவி “ கார்த்தி அவர் உன் அளியன்( அக்கா கணவன்)...நிங்கள் சொன்னால் பையு கேட்பான் உன் சேச்சிக்காக இதை செய் கார்த்தி “...என அழுதவாறே கேட்டாள்…தமக்கை கையை ஆதரவாக பற்றியவள். 

 

கார்த்திகா “ பையு என் மேலே சத்தியம் நிங்கள்…அனியன் மேலே கை வைக்க கூடாது என்னை போல என் சேச்சி…இந்த வயதில் மூளியாக நிற்க கூடாது “...என்றாள். 

 

பைரவ் “ முன்னா அம்மாவன் போதையை தெளிய வைத்து அவர் மூறிக்கு அழைத்து போ…அவரை காப்பாற்ற சொல்லி கேட்டது என் அம்மாயி அவர் சொல்லை இப்போ என்று இல்லை எப்பவும் என்னால் மீற முடியாது…

 

பல்லவி அம்மாயி உங்க பார்த்தாவு  இப்படி மாற காரணம் நிங்கள் தான்…இதை விட அவர் நிங்களட ஜீவித்தை பணயம் வைத்திருக்கிறார்…

 

நான் வாய் திறந்தால் முத்தச்சன் உங்க பார்தாவு வாயை நிரந்தரமாக மூடி விடுவார் காரணம்…நிங்கள் அவர் மூத்த மோள் இன்னும் ஒன்று நம்ம ஒருத்தருக்கு தீங்கு செய்தால் அது பல மடங்காக நமக்கு திருப்பி வரும்…

 

நிங்களால் தான் அவந்தி, பூஜா இப்படி வளர்ந்து நிற்கின்றார்கள்…பல்லவி அம்மாயி நிங்கள் தானே அம்மவானை வரவழைத்து…பாருங்க அவர் செய்த வேலையால் முத்தச்சன் மற்ற தரவாடு முன்னே தலை குனிந்து நிற்கிறார். 

 

இவங்க யாரு தெரியும் தானே?...என் அப்பூப்பனும் யுவாவின் முத்தச்சனும்  ஈ தரவாடுவின் சம்பந்த குடும்பம்…அதை விட அவங்க வயது என்ன அம்மாவன் வயது என்ன ரொம்ப தரக்குறைவாக பேசி விட்டார்…

 

இப்போ அவர் இருக்கும் நிலையில் எதை சொன்னாலும் புரியாது…நாளை இவங்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேணும் முன்னா என்ன அம்மாவன் எழுந்து விட்டாரா?...என கேட்டான். 

 

முன்னாவும் இன்னும் இரண்டு கார்ட்ஸ்ம் மாதவனுக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து விட்டு…வாயில் எலுமிச்சம்பழ ஜூஸை புகட்ட அவர் போதையில் அதை சாப்பிட்டவர்…இறுமினார் .

 

முன்னா “ பாஸ் ராஜ்குமாருக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும்…நாங்க அவரை மூறிக்கு கொண்டு போகிறோம்”... என சொல்லி விட்டு மாதவனை அழைத்து கொண்டு போக… அவர் பின்னால் பல்லவி, அவந்தி, பூஜா போனார்கள். 

 

ரவிவர்மன் “ தம்புரான் கஜன் தம்புரான் தேவன் என்னை மன்னிக்க வேணும்…என் கொட்டாரத்தில் என் மருமகனால் உங்களுக்கு அவமானம் நேர்ந்து விட்டது…பைரவ் சொன்னது போல நாளை மாதவன் நிங்களிடம் மன்னிப்பு கேட்பார்…

 

அப்படி அவர் கேட்கவில்லை என்றால்… பிறகு அவர் ஈ கொட்டார வாயிலை கூட மிதிக்க முடியாது…எனக்கு என் மோள் மட்டுமல்ல என் பகுமானமும் முக்கியம் “...என்றார். 

 

கஜன் “ புரிகிறது தம்புரான் சரி நாளை மகா பூஜை இருக்கிறது…நாங்க கட்டாயமாக வருவோம் காரணம் என் சொச்சு மோன் தான் நிங்களுக்கு அடுத்த பிங்காமியாக…நம்ம மொத்த தரவாடுகளும் அறிவிக்க போகிறது எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும் நாங்க கிளம்புகிறோம்…அதற்க்கு பிறகு தான் பரிசுகள், கொண்டாட்டங்கள் எல்லாம் “...என்றார். 

 

தேவன் “ ரகு தம்புரான் மாதவன் நட்பு கொண்ட தரவாடு… நம்ம எதிரி தரவாடு கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள்…கஜன் தம்புரான் சொன்னது போல எல்லாம் அந்த குருவாயூரப்பன் ஆசியால் நல்லதாக நடக்கட்டும்….நாங்க கிளம்புகிறோம் “...என்று சொல்லி விட்டு அவர்களை தொடர்ந்து மற்ற உறவுகளும் கிளம்பினார்கள். 

 

ரவிவர்மன் “ விஜயா, அருள் இன்று என் மருமகனால் நான் மற்ற தரவாடுகள் முன்னே தலை குனிந்தது போதும்…நிங்கள் அவரை போல ஏதும் செய்து வைத்தால் நான் மனுஷனாக இருக்க மாட்டேன்…புரிகிறதா?...ஜாக்கிரதையாக இருங்க இது என்  எச்சரிக்கையாக எடுத்து கொள்ளுங்கள். 

 

மீனு எனக்கு மனசு சரியில்லாமல் இருக்கு..நீ மற்ற வேலைகளை பாரு “...என்றவர் அங்கே நின்ற குருமூர்த்தியிடம். 

 

ரவிவர்மன் “ மன்னிக்க வேணும் என் மருமோன் பேசியது தப்பு தான்…அதுவும் சேட்டன் ,அம்மே முன்னாடி மோள்களை பற்றி தவறாக பேசினால்…அவங்க மனசு எப்படி வலிக்கும் என தெரியும்… இந்த தப்பு தான் கடைசி தடைவையாக இருக்கும் இனி இது போல நடக்காது “...என்றார். 

 

குருமூர்த்தி “ வேணாம் ராஜா நீங்க எங்களை விட உயரத்தில் இருப்பவங்க…அதை விட எங்க ராஜகுமாரியின் புருஷன் உண்மையை சொன்னால்… நீங்க இப்போ மன்னிப்பு கேட்டதே எங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு. 

 

சாதாரண ஆளுங்களே சட்டென செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்க மாட்டாங்க…ஆனால் நீங்க ராஜா அதுவும்  உங்க மருமகன் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்பது…சரியாக இல்லை என் பெண்ணுங்க புருஷன்கள் பற்றி தெரியும் இப்போ அவங்க புகுந்த வீடு பற்றி தெரிந்து கொண்டேன். 

நீதி பொதுவானது என நினைக்கும் அரண்மனை இது…நான் உங்க கிட்ட  ஒன்று தான் கேட்பது என் பெண்ணுகளை உங்களையும் உங்க பேர பசங்களையும் நம்பி விட்டு போகிறோன்…அவங்களை சந்தோஷமாக பார்த்து கொள்ள வேண்டியது உங்க பொறுப்பு “...என்றார். 

 

மீனாட்சி “ குருமூர்த்தி நாளை மகா பூஜை இருக்கு…நீங்க கட்டாயமாக வர வேணும் பெண்ணுங்களை பெத்தவங்க என்ற முறையில்…பாதர், மதரை வர சொல்ல முடியாது அது அவங்க மதத்திற்க்கு சில வேளை எதிராக இருக்கும்…நீங்க கட்டாயமாக வர வேணும் “...என்றார். 

 

குருமூர்த்தி சரியென சொல்லி விட்டு கிளம்ப போக ஆரபி அவர், சாந்தியின் காலில் விழுந்தாள்….அவளை பார்த்து ராதிகாவும் விழ இருவரையுமே அணைத்து ஆசீர்வாதம் வழங்கியவர். 

 

சாந்தி “ நாங்க நாளை வருவோம் மா…உங்களுக்கு கிடைத்த வாழ்க்கை யாருக்குமே கிடைக்காத வாழ்க்கை…

 

அதனால் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து வாழ வேணும் ஆரபி பற்றி எனக்கு கவலை இல்லை…ராதிகா உன் வாலை சுருட்டி கொண்டு அடக்கமாக இரு புகுந்த வீட்டில் பிறந்த வீ்ட்டு மானத்தை வாங்கி விடாதே…

 

உங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் உங்க புருஷன் கூட மனசு விட்டு பேசுங்க…உங்க அம்மா, அப்பா எப்பவுமே உங்களுக்கு துணையாக இருப்போம் சரியா?...ராஜகுமாரி கார்த்திகா நீங்க தான் இவங்களுக்கு அம்மாவாக இருந்து நல்லது, கெட்டது சொல்லி கொடுக்க வேணும். 

 

என் பெண்ணுங்களை பார்த்து கொள்ளுங்க…அவங்க தவறு ஏதும் செய்தால் திட்ட வேணாம் எடுத்து சொன்னால் புரிந்து கொள்வாங்க…இதை ஒரு அம்மாவாக கேட்கிறேன் “...என்றார். 

 

கார்த்திகா “  என்ன சேட்டத்தி இதை எல்லாம் நிங்களுக்கு பறயனோ?...ஞானான இவங்களை பார்த்து கொள்கிறேன் “...என்றாள். 

 

ரோகிணி ஆரபி, ராதிகாவை கட்டியணைத்து விட்டு… தன்னிடம் நட்பாக பழகிய நயனா, நிவியையும் அணைத்து விட்டு…பெத்தவங்க உடன் கிளம்பினாள். 

மீனாட்சி “ பையு, யுவா நீங்க உங்க ரூம்க்கு போக…நான் வருகிறேன் கார்த்திகா நீ பேத்திகளை அழைத்து கொண்டு அவங்க ரூம்க்கு போ மா”...என்றார்…அவர் சொன்னது போல அனைவருமே தங்கள் ரூம்க்கு போனார்கள்…ஆரபி, ராதிகா இருந்த கெஸ்ட் ரூம்க்கே அவர்கள் அழைத்து வந்தாள் கார்த்திகா..

கார்த்திகா “ ஆரபி, ராதிகா குஞ்சு நிங்கள் இன்று மட்டும் இங்கே தான் தங்கி கொள்ள வேணும்…நாளை மகா பூஜை நடக்க இருப்பதால் சுத்தபத்தமாக இருக்க வேணும்…என்ன இவள் நம்ம பார்த்தாவு மூறிக்கு அழைத்து போகாது… இங்கே கொண்டு வந்து விட்டாள் என தப்பாக நினைக்க வேணாம் மா இது தான் காரணம். 

 

நிங்கள் டிரஸ் சேன்ஸ் பண்ணி கொள்ளுங்கள்…நான் உங்களுக்கு பட்சணம் எடுத்து வருகிறேன்…வந்து அனியன் பேசியதை தப்பாக எடுத்து கொள்ள வேணாம் மா சேச்சி தான் படபடவென பேசும். 

 

அனியன் ரொம்ப அமைதியான ஆளு…என் கூட எண்ணி இரண்டு வார்த்தைக்கு மேலே பேச மாட்டார் அப்படிப்பட்டவர்…

 

இன்று உங்களை மட்டுமல்ல என் பார்த்தாவு குடும்பம், சேட்டத்தி குடும்பத்தை கூட தப்பாக பேசி விட்டார்…அது மட்டுமல்ல குடித்து வேற இருந்தார் நிச்சயமாக நாளை அவருக்கு அச்சன் ஒரு பூஜை வைப்பார்….நீங்க கவலைப்பட வேணாம் ரெஸ்ட் எடுங்க”... என சொல்லி விட்டு கார்த்திகா போனாள்…

 

கார்த்திகா போனதும் ராதிகா அப்பாடா என கட்டிலில் விழுந்தவள்…பழக்கம் இல்லாத புடவை உறுத்த அதை கழட்டி வீசி விட்டு வெறும் பாவாடை, ஜாக்கெட் என்று இருந்தாள். 

 

ஆரபி “ ராது என்ன டி செய்கிற அது கல்யாண புடவை டி இப்படியா?...தூக்கி போடுவது அதுவும் “ச்சீ ச்சீ” கருமம் கருமம் இப்படியா நிற்ப?... போய் வேற டிரஸ் மாற்றி விட்டு வா…

 

இங்கே பாரு தாலியை உறுத்துகிறது என தாலி மேலே கை வைத்த அம்மா கிட்ட கால் பண்ணி சொல்லி விடுவேன்...போ போய் டிரஸ் சேன்ஸ் பண்ணி விட்டு வா…கார்த்திகா அம்மா வந்து விடுவாங்க “...என்றாள். 

 

ராதிகா “ ஏய்! இங்கே உன்னை தவிர வேற யாருமில்லை…நான் என் நியூட்டாகவாக நிற்கிறேன் இப்படி தான்… இந்த அரண்மனையில் பாதி பேர் டிரஸ் பண்ணி கொண்டு வேலை செய்வதை பார்த்து இருக்கிறேன். 

 

அது தான் நானும் இப்போ கேரளா மருமகள் இல்லையா?...இப்படி டிரஸ் பண்ணினேன் உனக்கு  இது  அசிங்கமாக இருக்கா?...அம்மாவுக்கு கால் பண்ணி விடாதே டி அவங்க திட்ட தொடங்கினால் விடிந்து விடும் கூடவே என் காது டமாரம் கிழிந்து விடும்.

 

நான் சின்னதாக குளியல் போட்டு விட்டு வருகிறேன்…கார்த்திகா ஆன்ட்டி சாப்பாடு கொண்டு வருவாங்க அதை வேணாம் என சொல்லாது வாங்கி வை…செம பசியில் இருக்கிறேன் பிறகு உன்னை தான் கடித்து சாப்பிடுவேன்…என சொல்லி விட்டு குளிக்க போனாள். 

 

அவள் போன பிறகு தன் கழுத்தில் தொங்கிய தாலியை எடுத்து ஆரபி பார்த்தாள்…அவள் வாழ்க்கையில் இது எல்லாம் நினைத்து கூட அவள் பார்க்கவில்லை…அவள் பிறந்த பிறப்புக்கு சாதாரண குடும்ப ஆளுங்களே பெண் எடுக்க தயங்குவாங்க…

 

ஏன் சதீஷ் கூட அவள் கூட முறையற்ற வாழ்க்கை வாழ ஆசைபட்ட காரணம்…அவள் பிறப்பு அவள் தன் ஹோம் அதில் உள்ள தன் உறவுகளுக்காக வாழ்ந்து முடித்து விடலாம் என நினைக்க…அவள் வாழ்வில் எதிர்பாராத வரவாக வந்தவன் தான் பைரவ் தேவன் அனுப்பிய ரட்சகன் அவன்…

 

மலர் பூக்கும்…


   
ReplyQuote

You cannot copy content of this page