All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தீரா காதலின் தேடல்..? , தேடல் - 13 .

 

VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 46
Topic starter  

தேடல் - 13

 

அதிர்ந்த ஆதியின் இதழ்களோ பாவையை கண்டு “மகிழ்” என்று முனுமுனுத்ததோடு இதயம் வேகமாக துடித்து கண்களும் கலங்கி விட, நண்பன் நிலையை கண்டு வருந்திய சசியோ பாவையின் நாடி துடிப்பை கவனித்து கொண்டிருந்தான்.

 

“மதி” என்று அவளின் நமாத்தை உச்சரித்து கொண்டிருந்த பூமியை கண்டு ‘தன்னவள் மகிழ் தான் நண்பனின் காதலி மதியா.. இல்லையென்றால் இத்தனை நாள் தன்னவளை காணாததால்.. இவள் என் கண்ணுக்கு மகிழ் போல் தெரிகிறாளோ’ என்று எண்ணி மாறி மாறி பார்த்தவனின், மனமோ உன்னுடைய மகிழ் தான் அவனின் மதி என்று உரைத்ததில் நொறுங்கி விட்டாலும் அவளின் உயிரே காக்க வேண்டுமென்ற எண்ணத்தில், 

 

அவளின் கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சிக்க, பூமியோ முடிந்தவரை நகர்ந்து தன்னவளின் அருகில் வந்ததில் ஒரு பக்கம் அடிப்பட்டதில் தலையில் வலி, மறுபக்கம் தன்னவளின் நிலை கண்டு இதயமே பரிபோனது போன்ற வழியுடன் “மச்சான்.. மதி..” என்று ஏதோ கூற முயற்சிக்க,

 

அதை உணர்ந்த சசியோ “மச்சான் தலையில அடிப்பட்டதுல அண்கான்சியஸ் ஆயிட்டா போல.. மத்தபடி உயிருக்கு எந்த பிராப்ளமும் இல்ல..” என்று கூறி உறைந்திருக்கும் ஆதியை உலுக்கியவனோ “மச்சான்.. ஆம்புலன்ஸ் வருறவர டைம் வேஸ்ட் பண்ண முடியாது.. பூமிக்கு பிளட் ரொம்ப லாஸாகுது.. எவ்வளவு சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போறோமோ அவ்வளவு நல்லது.. சீக்கிரம் தூக்குடா” என்று கூறி அவனுடன் தூக்க முயற்சிக்க, 

 

 

அவர்களை தடுத்த பூமியோ “வேண்..டாம் மச்..சான் நா.ன் பிழை..க்க மாட்டேன்.. என்னோட கடைசி ஆசை..யா நினைச்சி மதி கழுத்..துல நீ தா..லி கட்டு..டா” என்று திணறியவாறு கூறி, தனது சட்டையிலிருந்த தாலியை ஆதியின் கையில் வைத்தவனோ “கட்டு..டா..” என்று கூறியதில், ஆதியோ அதிர்ந்து விட, 

 

சசியோ “பைத்தியம் மாதிரி பேசாத பூமி.. சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போனா கண்டிப்பா உன்ன காப்பாத்தலாம்.. அதுக்கு அப்புறம் உன் மதி கழுத்துல நீயே தாலி கட்டு.. பிளீஸ்டா எங்களுக்கு கோ- ஆப்ரேட் பண்ணு” என்று கூறியதை காதில் வாங்காதவனோ, 

 

ஆதியின் கைபற்றி “மச்சா..ன்.. எனக்காக பெத்தவங்க..ளயே விட்டுட்டு வந்த..வள நான் ஏமாத்தி..டேன்டா.. பிளீஸ்..டா தாலிய கட்டு.. அவ..ள உன்கிட்ட ஒப்படச்சு..ட்டேன்னு நிம்மதி..யா கண்ண மூடிடுவேன்” என்று கூறியும் அசையாமல் இருப்பவனின் கரத்தை தன் தலையில் வைத்தவனோ “என்மேல சத்தியம்..டா.. அவ கழுத்..துல தாலி கட்..டு” என்றவனின் கண்களோ சிறிது சிறிதாக மங்களடைய,

 

அவனின் நாடித்துடிப்பை பரிசோதித்த சசியோ “பீ சீரியஸ் மச்சி.. முதல தாலிய கட்டு மத்தத அப்புறம் பாத்துக்கலாம்” என்று கூற, அவனோ ‘எப்படிடா’ என்பது போல் பார்க்க,

 

அதை உணர்ந்தவனோ “ஆதி.. நீ அவ கழுத்துல தாலி கட்டாம.. இவன் ஹாஸ்பிட்டல் வர மாட்டான்.. நீ யோசிச்சிட்டே இருந்தேன்னா இவன் செத்துருவான் பரவாயில்லையா” என்று குரலை உயர்த்தி கூறியதை கேட்டு பூமியின் நிலையை கண்டவனோ, 

 

நண்பனின் உயிரை கருத்தில் கொண்டு கையிலிருந்த தாலியை வேகமாக, அவள் கழுத்தில் கொண்டு சென்று மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கி கொண்டவன், முதலில் பெண்ணவளை தூக்கி காரில் கிடத்திவிட்டு இரண்டாவதாக சசியின் உதவியுடன் பூமியையும் காரில் ஏற்ற, இம்முறை அவனும் தடுக்கவில்லை.

 

அவன் தலையை தன் மடியில் கிடத்தி ஒரு துணியால், அவன் தலையில் குருதி வரும் இடத்தை அழுத்திபிடித்த நேரம் நண்பனின் கையை பற்றிய பூமியோ “அவ..ள நல்லா பாத்து..க்க மச்..சான்” என்று கூறி கண்ணை மூட, அதில் பதறியவனோ, அவன் கன்னம் தட்டி எழுப்ப முயற்சித்தவாறே சசிக்கு கண்ணைக்காட்ட, அவனோ இங்கிருந்து தன் மருத்துவமனையே பக்கம் என்பதால் அங்கையே விரைந்தான்.

 

மருத்துவமனையிக்கு வந்ததும் இருவரையுமே அங்கிருந்த தாதியர்கள் மூலம் ஸ்ட்ரேச்சரில் வைத்து வேறு வேறு அறைக்கு அழைத்து செல்ல, சசியோ “மச்சான்.. நீ அந்த பொண்ணு கூட போ.. நான் பூமிய பாத்துக்குறேன்” என்று கூறி பூமிக்கு, அவனே வைத்தியம் பார்க்க செல்லவேண்டியதால் மகிக்கோ அங்கிருந்த வேற மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க, பணித்துவிட்டு சென்றான்.

 

***

காலை தேனீர் போட்டு மகளை எழுப்ப, அவளின் அறைக்கு வந்த மாதவியோ குளியல் அறையில் இருப்பாள் என்று எண்ணி தேநீரை மேஜையில் வைத்துவிட்டு கண்ணில் படும்படி காற்றிலில் ஆடிக்கொண்டிருந்த கடிதத்தை புருவம் சுருக்கி பார்த்து, அதை எடுத்து படித்தவர் ஒப்பாரி வைத்து அழ தொடங்கிவிட்டார்.

 

 

மனைவியின் சத்தம் கேட்டு, அங்கு வந்த உலகநாதனோ “என்னாச்சி மாதவி.. எதுக்கு அழுகுற.. மதி எங்க” என்று வினவி மனைவி கையிலிருந்த கடித்ததை வாங்கி படிக்க,

 

அதிலோ “அப்பா அம்மா ரெண்டு பேரும் என்ன மன்னிச்சிடுங்க.. என்னால நான் காதலிச்சவன மறந்துட்டு நீங்க சொல்லுற பையன கட்டிக்கிட்டு சந்தோசமா வாழ முடியாது.. அதுனால அவன தேடி போறேன்.. நீங்க இந்த லெட்டர பாக்குற நேரம் அவன் கையால என்னோட கழுத்துல தாலி ஏறியிருக்கும்.. அப்புறம் என்மேல நீங்க இப்போ கோவமா இருக்கலாம்.. ஆனா என்னைக்காவது கோவம் குறைஞ்சி என்ன தேடி வரும் போது உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தருவேன்.. மிஸ் யூ அண்ட் லவ் யூ அப்பா அம்மா” என்று முடித்திருக்க,

 

அவருக்கோ தங்கையை போல் மகளும் செய்த முட்டாள்தனமான காரியத்தை நினைத்து நெஞ்சை பிடித்தவாறு மயங்கி சரிந்துவிட்டார்.

 

கணவனை கண்டு துடித்த மாதவியோ “அய்யோ.. ஏங்க எந்திரிங்க.. என்ன தனியா விட்டுட்டு போயிடாதீங்க” என்று கத்தி கொண்டிருக்க,

 

அப்போது மும்பையிலிருந்து நண்பிக்கு அதிர்ச்சி கொடுக்க எண்ணி, அவளிடம் சொல்லாமல் மதுரை வந்திறங்கி வீட்டிற்குள் நுழைந்த ஹர்ஷாவோ அன்னையின் சத்தம் கேட்டு, அந்த திசையை நோக்கி வந்தவன் உலகநாதனின் நிலையை கண்டு பதறி தன் பையிலிருந்த தண்ணீர் குடுவை எடுத்து முகத்தில் தெளித்தவனோ “அப்பா எந்திரிங்க..” என்று அவர் கன்னம் தட்டி விழிக்க வைத்து, 

 

தன் தோலில் சாய்த்து கொண்டு “என்னாச்சிபா.. ஏன் இப்படி மயங்கிட்டீங்க.. உடம்புக்கு எதுவும் பண்ணுதா” என்று கேட்க, அவரோ கையிலிருந்த கடிதத்தை அவனிடம் நீட்ட, வாங்கி படித்தவனுக்கோ அதிலிருப்பது உண்மை என்பதை கண்கள் நம்ப மறுத்தது.

 

“அப்பா.. இது.. இது” என்று திணறியவனிடம் மாதவியோ “பாவி மவ.. நேத்து நாங்க அவ்வளவு தூரம் சொல்லியும் கேட்காம.. அவன் தான் முக்கியம்ன்னு ஓடிட்டாடா உன் ப்ரெண்டு” என்பதை கேட்டு, என்ன செய்வதென்றே தெரியாமல் பதறியவன் அவளுக்கு அழைப்பு விடுக்க எண்ணி, வேகமாக தன்னுடைய திறன்பேசிக்கு சக்தி ஏற்றி,

 

சிறிது சக்தியில் அதை உயிர்பிர்த்ததுமே அவள் பலமுறை தன்னை அழைத்ததால் வந்த குறியீட்டை கண்டு ‘இத்தன முறை கால் பண்ணியிருக்கா..’ என்று நினைத்து அவளுக்கு அழைத்து பார்த்ததில் திறன்பேசி அணைக்கப்பட்டுள்ளது என்று வந்ததை கேட்டு, 

 

திறன்பேசியை எடுத்து கொண்டு பையை தோலில் போட்டவனோ மாதவியிடம் “அம்மா.. நான் சென்னை போய்.. மதிய பாக்குறேன்” என்று கூறியதை கேட்ட உலகநாதனோ “போனவ போனவளாவே இருக்கட்டும்.. திரும்பி கூட்டிட்டு வந்த என்ன பிணமா தான் பாக்கணும்” என்று எழுந்து சென்று விட, பின்னயே மாதவியும் சென்றார்.

 

தந்தையின் பேசியில் அதிர்ந்தவனோ முதலில் அவளை பார்க்கலாம் என்று முடிவெடுத்து, அவள் எழுதிய கடிதத்தையும் கையோடு எடுத்து கொண்டு சென்னையை நோக்கி புறப்பட்டான்.

 

************

மருத்துவமனையில் மகி, மதி என்று இரு பெயரில் அழைக்கப்பட்ட மகிழ்மதிக்கு சிகிச்சை முடித்து வெளியே வந்த மருத்தவரோ ஆதிரனிடம் “மிஸ்டர் ஆதி.. அவங்க உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல.. பட் தலையில அடிப்பட்டிருக்கு மே பீ அவங்க பழச மறக்க கூட சான்ஸ் நிறையாயிருக்கு.. சோ ஸ்கேன் எடுத்துருக்கோம் ரிப்போர்ட் வந்தா தான் என்னன்னு சொல்ல முடியும்” என்று கூறிவிட்டு செல்ல, அவளின் உயிருக்கு ஆபத்து இல்லையென்று சொன்னது பிறகு தான், தன் உயிரே தனக்கு திருப்பி கிடைத்ததில் நிம்மதியடைந்தவன், சோர்ந்து முகத்துடன் சசி வருவதை கண்டததும் தவறாக நடந்திருக்க கூடுமோ என்று அஞ்சி நண்பனின் வார்த்தையை எதிர்பார்த்து கொண்டிருக்க, 

 

அவனை அணைத்து விடுவித்த சசியோ “சாரி மச்சான்.. எவ்வளவு டிரை பண்ணியும் பூமிய காப்பாத்த முடியல” என்று கூறியதை கேட்டு இடிந்து அமர்ந்தவனின் அருகில் வந்து “மச்சான்.. மனச தளர விடாத.. உன்ன நம்பி ஒரு பொண்ணு இருக்கா.. அத நினைச்சிட்டு அடுத்து என்ன பண்ணலாம்ன்னு யோசி” கூறிய மறுநொடி நண்பனை அணைத்து அழுத ஆதியோ “எனக்கு அடுத்து என்ன பண்றதுன்னு தெரியல மச்சான்” என்க,

 

அனைத்தையும் தைரியமாக சமாளிக்கும் நண்பனை இக்கோலத்தில் கண்டு வருந்தியவனோ “ஆதி.. அழுகிறதுனால தீர்வு கிடைக்காது.. என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கலாம்.. முத மகிக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டர் என்ன சொன்னாங்கன்னு சொல்லு” என்க, 

 

மருத்துவர் கூறியதை நண்பன் முழுதாக கூறியதை கேட்ட சசியோ “சரி ஓகே.. ரிப்போர்ட் வந்ததும் பாக்கலாம்”

 

“மச்சான்.. நான் பூமிய பாக்கணும்”

 

“இல்ல மச்சான்.. அவனோட ஆர்கன்ஸ் எல்லாம் டோனேட் பண்றதுக்கு சைன் பண்ணி கொடுத்துட்டு வந்துட்டேன்.. சோ அதுக்கான வேலை முடிஞ்சதும் அவங்களே பாடிய டிஸ்போஸ் பண்ண சொல்லிட்டேன்”

 

“மச்சான்..”

 

“எனக்கு வேற வழி தெரியல மச்சான்.. அதான் மகி கண்ணு முழிக்கிற வர அவன் பாடிய அப்படி வச்சியிருக்கிறது நல்லதா தோணல.. பிளீஸ்டா நீ கூட நடந்தத மறந்துட்டு.. மகிய சரி பண்ணி.. அவகூட எப்படி சேர்ந்து வாழலாம்ன்னு யோசி” என்று கூறியதை கேட்டு எழுந்து தன்னவள் இருக்கும் நிலையை அறையின் வெளியே நின்று கண்டவனின் மூளையோ ஏதேதோ சிந்திக்க, நண்பனின் புறம் வந்தவன் சட்ரென்று, அவன் கையை பற்றி “வா மச்சான்” என்று அழைத்து செல்ல, 

 

“இப்போ எங்கடா போறோம்” என்று கேட்டத்தை கூட காதில் வாங்காமல் காரில் ஏறியவனோ, அவன் ஏறியதும் காரில் விபத்து நடந்த இடத்தை நோக்கி சென்றான்.

 

பதிவு அலுவலகத்திற்கு சற்று தள்ளி பூமியை கண்ட இடத்தில் காரை நிறுத்தி இறங்கி சுற்றி முற்றி பார்த்தவனோ சசியிடம் “மச்சான்.. அதோ பாரு சிசிடிவி அத பாத்தா.. இந்த ஆக்சிடென்ட் பத்தி எதாவது தெரிய வரும்.. நீ புட்டேஜ் வாங்க டிரை பண்ணு.. நான் வந்துடுறேன்” என்று கூறி நண்பனை அனுப்பிவிட்டு,  

 

விபத்தினால் சரிந்து கிடக்கும் நண்பனுக்கு கொடுத்த தன்னுடைய வண்டியை சுற்றி நோட்டமிட்டவனின் கண்ணில் சிறிது தூரம் தள்ளி கிடந்த பெண்ணவளின் கைப்பை கிடக்க,

 

அதை எடுத்தவன் அதற்கு சற்று தள்ளி இரு இடத்தில் கிடந்த பூமி மற்றும் மகியின் திறன்பேசியையும் எடுத்து கொண்டு வண்டியை பழுது பார்க்கும் எண்ணத்தில் மெக்கானிக்கை அழைத்து கொடுக்கவும், வந்த சசியோ “மச்சான் புட்டேஜ் கிடைச்சிட்டு” என்று கூறி கையில் கொடுக்க,

 

அதை கையில் வாங்கியவன் “இப்போதைக்கு இது போதும் மச்சான்.. மகிக்கு கான்ஸ்கியஸ் வந்ததும் மத்தத பாத்துக்கலாம்” என்க, மறுபடியும் மருத்துவமனைக்கு சென்றார்கள்.

 

           தேடல் தொடரும்...

 

இப்படிக்கு

VSV42😍😍

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page