All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

முத்தம் 16

 

VSV 3 – முத்தம் ஒன்றை பிச்சு தா
(@vsv3)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

தன் மனைவியை பார்த்தவர் என்ன சொல்வது என தெரியாது மனதில் இருந்த ரணத்துடன் தன்னை சமாதானம் செய்து கொண்டே அவளிடம் "என்ன விஷயம் ஜெயா?" "ஏன் ஒரு மாதிரி பதட்டமா இருக்க? எதுவும் பிரச்சனையா?" "அட அப்படியெல்லாம் இல்ல ஜெயா. இது.. அன்நொன் கால். யார்னு தெரியாது கட் பண்ணு சொல்லவும் கட் பண்ணாமல் ஏதேதோ உளறி இதோ, நான் கட் பண்ணிட்டு பார்க்குறேன் நீ என் பின்னாடி இருக்க." என மனைவி நம்பும் படியாக பொய் பேசினான். லான்ஸ்பேரி லூதர் ஆகிய இருவர் ஸ்கந்தன் மாதங்கியோடு கதைத்து கொண்டு இருந்தார்கள். அப்போது, லான்ஸ்பேரிக்கு காணொளியின் சானக்கியா தங்கை தேவகி அழைக்க அவர்கள் அதிரூபன் மற்றும் சானக்கியாவின் அழகான நடனத்தை பார்த்து வந்தார்கள். அவர்களது நடனத்தில் அவ்வளவு காதல் வழிந்தோடியது. அதுவும் அதிரூபனைச் சொல்லவா வேண்டும் சாணக்யாவை வைத்த கண்ணை எடுக்காமல் அவளோடு ஆடிக் கொண்டு இருந்தான்.

 

 அன்னாளின் ஆண்கள் தின்றதடி ஏவால் முத்தம், பின்னாலே ஆண்கள் வம்சத்திலே அதனால் யுத்தம். என்னாலும் கேட்கும் நிற்காது முத்தசத்தம், முத்தங்கள் மோதிக்கொண்டால் தான் உலகம் சுற்றும். நம் ஆதியும் அந்தமும் முத்தமே முத்தமே முத்தம் தா முத்தம் தா கண்மணி ஓ! யாரையும் வீரனாய் முத்தமே மாற்றுதே முத்தத்தால் தேகம் அது மின்சாரமாகும். 

 

 "என்ன இது? இந்த பாட்டுக்கு, அதிருபன் கெஞ்சிக்கிட்டே ஆடுறான்?" என தந்தை கேள்வி கேட்க மகள் "அப்பா பொண்ணு பாக்க போனப்ப ஏதோ தனியா பேசும்போது கண்டிஷன் சொன்னாங்கன்னு அண்ணா சொன்னாரு ஒருவேளை அந்த கண்டிஷன்ல தான் அண்ணா கெஞ்சுறார்." "ஆனா என்னோட மாகி எனக்கு கண்டிசனே போடல!" "அப்பா எனக்கு ஆசையா இருக்குப்பா! இவரோட சேர்ந்து திரும்பியும் இதே பாட்டுல இன்னொரு வரி வரும்ல அந்த வரிகளுக்கு நானும் ஸ்கந்தனும் ஆடுறதை அப்படியே வீடியோ எடுத்து வைங்கப்பா. ஏன்னா ஸ்கந்து ஆர்மிக்கு போனதுக்கு அப்புறம் நான் அதை பார்த்து என்னோட கொஞ்ச காலத்தை ஓட்டிப்பேன்பா." மாதங்கி கூறுவதும் சரிதான் ஏனென்றால் திருமணம் முடிந்த இரண்டு மூன்று வாரங்களிலேயே அவன் தன் தொழிலை பார்க்க சென்று விடுவான் இவ தான் தனியாக அவள் அத்தையோடு இருக்கப் போகிறாள் அப்படி இருக்கையில் இந்த மாதிரியான நேரங்களில் தங்களுடைய காதல் காவியத்தில் சில பக்கங்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். அங்கிருந்த அந்த ஆங்கிலப் பெண்மணியான லான்ஸ்பேரி மற்றும் அவளது கணவருக்கும் ஆசை வந்துவிட்டது. "ஐ வாண்ட் டு டான்ஸ் ப்ளீஸ் (நானும் இது போல் ஆடணும்?)" என்றதும் ஜெயவள்ளி "வயித்துல பிள்ளையை வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடறன்னு சொல்லிக்கிட்டு இருக்க? அதெல்லாம் ஆடக்கூடாது. நாளைக்கு உனக்கு வளைகாப்பு போடுறோம், காலையில நல்ல நேரம் பாத்தாச்சு சீக்கிரம் தூங்க போகணும் இவங்க டான்ஸ் ஆடுறத பாத்துட்டு தூங்க போங்க. குழந்தை பெத்ததுக்கு அப்புறமா மாப்பிள்ளை கூட சேர்ந்து எவ்வளவு நேரமானாலும் டான்ஸ் ஆடிக்கோ." இதை கேட்டதும் அந்த ஆங்கிலப்பெண்ணின் மனம் அவளது வார்த்தைகளில் கட்டுப்பட்டது. 

 

*

 

"தேவகி! என்ன நீ நாங்க ஆடினதை ஏன் வீடியோ எடுத்த?" "மாமா நீங்களே சொல்லுங்கள். நாளைக்கு வளைப்பூட்டு முடிஞ்சதும், நீங்க காலேஜ்ல லீவ் அப்ளை பண்ணிட்டு வரணும். கல்யாணத்துக்கு வெறும் அஞ்சு நாள் தான் இருக்கு." இப்போது சுதாகர் "ஆமா, நாளைக்கு காலேஜ் போயிட்டு சீக்கிரம் வந்துடு சானக்கியா. நலங்கு வைக்கணும்." என்றார் பொறுப்பாக. "சம்மந்திக்கிட்ட சொல்லிட்டிங்களாங்க." என மனைவி கேட்டதும் "இ..இனி தான் பைரவி சொல்லணும்." "உங்களுக்கு பொறுப்பே இல்ல! இப்ப கூட பேசலாம் தானே ஏன் என்னை முறைச்சு பார்க்குறீங்க. ஃபோன் பண்ணி சொல்லுங்கள்." மனைவியின் இந்த எரிச்சல் வார்த்தைகள் அவரை வெகுவாக வேலை செய்ய வைத்தது. உடனே அவர் வைணவேந்தனுக்கு அழைத்து அனைத்து விஷயங்களையும் கூறினார். பிறகு ஸ்கந்தனின் வீட்டிலும் தகவலை கூறினார்கள். மறுநாள் இனியதாக விடிந்தது. ஸ்கந்தனின் பெற்றோரும், சானக்கியாவின் பெற்றோரும் ஒன்றாக சேர்ந்து லான்ஸ்பேரி மற்றும் லூதர் அவர்களுக்கு வளைப்பூட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. ஐந்தாவது மாதம் என்பதால் ஐவகை சாதம் மற்றும் அதை சாப்பிடும் போது அந்த கண்ணாடி வளையல் சத்தம் அந்த ஆங்கிலப்பெண்ணின் மனதை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. "எனக்கு இந்த பெங்கில்ஸ் பிடிச்சிருக்கு. இதை எப்ப ரிமூவ் பண்ணனும்?" "ஐயோ! வளைப்பூட்டுக்கு போட்ட வளையல் உனக்கு லேபர் பேயின் வரும்போது தான் ரிமூவ் பண்ணனும். இந்த வளையல் போடுறதுக்கு ரிசன் இருக்கு. குழந்தைக்கு இந்த சத்தம் கேக்கணும். அதி, மருமக இரண்டு பேரும் காலேஜ் போயாச்சா?" என ஜெயவள்ளி இறுதியாக இந்த கேள்வியை கேட்டதும் பைரவி "அவங்க அப்பவே கிளம்பிட்டாங்க." சமையல் அறையில் மாதங்கி தண்ணீர் பருகும் போது அவளது இடையை பற்றிய அவளின் ஸ்கந்து "ஸ்..ஸ்கந்து, என்ன இது?" "என் மாகியை நா கொஞ்ச வேணாமா?" என்றான் கொஞ்சலாக.

"ஆமால, இன்னும் கொஞ்ச நேரத்துல முகூர்த்தக்கால் ஊன்றிடு வாங்க அப்புறம் மணமேடைக்கு வர வரைக்கும் உன்னைய நானும், என்னை நீயும் பார்க்காமல் இருக்க முடியுமா, ஸ்கந்து நீ அந்த காலத்துல இருக்க போடா, ஒரு வீடியோ கால் போட்டா சடனா எடுக்க போறேன், கொஞ்ச நேரம் ரொமான்டிக்கா பேசணும். இதுல இன்னும் இருக்கு?" இப்படி மாதங்கி பேசியதை கேட்டவன் "என்ன தான் வீடியோ கால்ல பேசினாலும், இப்ப பேசுற மாதிரி, இப்படி பேச முடியுமா சொல்லு?" அப்போதும் மாதங்கியின் விழிகள் ஏதோ சந்தேகத்தின் பெயரில் தத்தெடுத்துக் கொண்டு, யோசனை இருந்தால். இதை கவனித்தவன் "ஏன் கவலை எனக்கு உன்ணை புரியவே மாட்டேங்குது. ஒரே ஒரு முத்தம் கொடுத்தால் சந்தோஷப்படுவேன், வருங்காலத்துல உங்க அண்ணன மாதிரி தான் நானும் முத்ததுக்கு பிச்சை எடுக்கணும் போலையே!" என கேலியாக பேசினான். அப்படியே செய்வேன், ரத்தம் வந்துச்சுனு சொல்லி அழுககூடாது ஸ்கந்து. “நா ஆர்மி மேன். எனக்கு ரத்தத்தை பார்த்து பயம் இல்ல.” என பேசி முடித்ததும் அவனை தன் வசப்படுத்தி இதழப்பூட்டு போட்டால்.

 

*

 

கல்லூரியில் பாடத்தை நடத்த வகுப்பறை சென்றான் அதிரூபன். "ஸ்டுடன்ஸ், என் கல்யாணத்துக்கு நீங்க எல்லோரும் வரணும்." இதை கேட்டதும் ஒரு மாணவி "சார், என்ன சொல்றீங்க? யார் அந்த பொண்ணு?" என அந்த பெண் கேட்க சானாக்கியா தன்னவனை தேடி வந்தவளின் வேகம் எங்கேயோ அவள் விழுக சென்றவளை கைத்தாங்களாய் தூக்கினான் இணைப்பறவைகளின் விழிகள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. 

 

விழியில் வேளி போல் என்னை தடைசெய்தாய்! கண்ணீரை தத்தெடுத்த என் விழிகள் உனை பார்த்த பின்பு சுகத்தை தத்தெடுத்து! ஆயிரம் வண்ணங்கள் வேண்டாம் ரூபா, உனது அன்பில் கரையும் அணைப்பு போதும்.

 

வகுப்பறையில் இருக்கும் மாணவர்கள் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை. அங்கு ஏதார்தமாய் வந்த ரஞ்சனா "என்ன நடக்குது இங்க? அதிரூபன்!" என கர்ஜித்தார். சானக்கியாவை கீழே இறக்கி விட்டவன் "மேம், கல்யாணம். எனக்கு ஒரு மாசம் லீவ் தேவை. உங்க கையெழுத்து மட்டும் வேணும்." என அதிரூபன் கேட்கவும் "தரேன் அதிரூபன், சானக்கியா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்." என சானக்கியாவோடு சென்றார் ரஞ்சனா அவர்கள் சென்ற பின் ஒரு மாணவி "சார், மேம் செம்மையா இருக்காங்க. உங்க இரண்டு பேரு ஜோடி பொறுத்தம் யப்பா நிலவுக்கு ஏத்த சூரியன் போல இருக்கு." "என்ன நிலா சூரியனா? சாரும் மேம்மும் ரொமியோ ஜூலியட் மாதிரினு சொல்லணும்." "இல்ல!!! சாரும் மேம்மும் போர்சியா பெசனியோ போல" என வரிசையாக மாணவன், மாணவிகள் போட்டி போட்டு மோத ஆசிரியரானவன் மௌனம் காக்க பின் மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் வகுப்பறை விட்டு சென்றான். "நம்ம மாத்தி மாத்தி சண்டை போட்டு பேசினதுல சார் பிரியட் முடிஞ்சே போச்சு." என முன் வரிசையில் இருந்த பெண் கூறவும் 'ஐயோ!' என வகுப்பு மீண்டும் அமைதியானது. "ஏய் மச்சி? வி.ஆர் சார் ஒரு மாசம் கழிச்சு தான் வருவாரா?" என சோககீதம் வாசிக்க அவனோ ஆக வேண்டிய வேலைகளை செய்து விட்டு தன்னவளுடன் புறப்பட்டான்.

 

வாகனத்தில் சென்று கொண்டு இருக்கும் போது "சானு, ரஞ்சனா மேம் என்ன சொன்னாங்கள்?" என நிதானமாக கேட்டான். "எப்பையும் போல தான். இது காலேஜ், உன் வீடு கிடையாது ரொமான்ஸ் பண்ணனு திட்டுனாங்க. வீடு கொஞ்ச நேரத்துல வந்துடும், நம்ம கல்யாணம் தான் நேரா மண்டபத்துல சந்திப்போம்." என்றதோடு பாவையவள் நிறுத்த "ஹலோ! முத்தம் ஒன்றை பிச்சு தா! அதை வைச்சு இரண்டு நாள் ஒப்பேத்திடுவேன்." என்றான் குறுப்பாக. "முத்தமா? சரி" என சானக்கியா சொன்னதும் வண்டியை நிறுத்த இருவரும் உல்லாசமாக முத்தத்தில் மூச்சுமுட்டும் அளவிற்கு காதலை பரிமாற்றம் செய்து வருகிறார்கள். பின் அவளை வீட்டில் இறக்கி விட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்தான். வந்தவன் நேரடியாக தண்ணீர் பருகுவதற்கு அடுப்பங்கறைக்கு செல்ல தங்கையின் காதல் பரிமாற்றத்தை பார்த்து வந்தவன் தந்தையிடம் ஜாடை காட்ட அவரோ அவனை அழைத்து சென்று "அதி, வளைப்பூட்டு முடிஞ்சதும் எப்ப மாது ஆரம்பிச்சானு தெரியலை. மூனு மணி நேரம் அங்கேயே இருக்காங்க, அப்படியே இருக்காங்க. கூப்பிட்டு பார்த்தா நோ ரெஸ்பான்ஸ்." "டாட்! உங்க பொண்ணு உங்களை போலவே இருக்கா. வெயிட் அடுப்பங்கறையில் பாம்பு புகுந்திடுச்சி!!!!" என அதிரூபன் கத்தவும் தன்னவன் ஸ்கந்தனோட நடுவறைக்கு வந்தவள் "பாம்பு!! பா..ம்..பு ஐயோ! ஸ்கந்து பாம்பு." என அவள் கத்துவதை பார்த்து தந்தையும் மகனும் சிரிக்க ஸ்கந்தன் "நம்ம ரொமான்ஸ்க்கு உன் அண்ணா என்ட் காட் போட்டிருக்கார். அப்போ, நா வரேன் மாமா." என்றதோடு அவ்விடம் விட்டு சென்றான் ஸ்கந்தன். பிறகு கல்யாணத்துக்கு வேண்டிய நலங்கு வைக்கும் படலம் முடிந்து இதோ, மண்டபத்தில் ஃபோடோ சூட் நடைபெறுகிறது. இரு பக்கமும் இரு ஜோடிகள் அழகாக புகைப்படத்திற்கு அவர்கள் சொல்வது போல் நகைக்க பின் சிறிது நேரங்கள் சென்றதும் சொந்தம் முழுவதும் கூடி வேட்டிபேச்சுக்களை பேச ஆரம்பித்தார்கள். சிலர் இவர்களை பார்த்து பொறாமை பட, ஒரு சிலர் அதிரூபனின் மாமா ஏன் வரவில்லை எதனால் வரவில்லை என கேள்வி எழுப்பி ஏதேதோ உளறி வந்தார்கள். சரியாக இரண்டு ஜோடிகளும் மோதிரம் மாற்றும் போது ஸ்கந்தனும், அதிரூபனும் முட்டியிட்டு தன்னவளின் விரல்களில் மோதிரத்தை போட்டவுடன் முத்தமிட்டார்கள். அதே போல் பாவைகளும் முட்டியிட்டு தன்னவனின் விரலில் மோதிரத்தை போட்டவுடன் முத்தமிட்டார்கள். 

மறுநாள் அதிரூபனுக்கு வாழைமரத்தோடு கல்யாணம் மற்றும் அந்த தோஷத்தின் பரிகாரம் இனிதாக முடிந்தது. 

 

அம்மி மிதிச்சாச்சு! அருந்ததியை பார்த்தாச்சு! பொண்ணை பிடிச்சு அவ புருஷன் கையோட கோர்த்தாச்சு..எட்டூரு எட்டும் படி..தட்டுங்கடா தண்டாலத்தை..கொட்டும் வழி வந்து நோக்கி அடிக்கும் முந்தானத்த..ஹேய் அவளுக்கென்ன அம்பாசமுத்திரம் அய்யர் ஹோட்டலு அல்வா மாதிரி தாலம் பூவில் தலதலவென வந்தான், வந்தான் பாரு! அவளுக்கென ஆல்வாகுறிச்சி அழகு தேவரு அருவா மாதிரி பருமா தேக்கன பளபளவென வந்தான் பாரு! கும்மி அடி கும்மி அடி கும்மி அடிங்கோ! கொத்து வாழை சத்தம் போட கும்மி அடிங்கோ! என கவிஞர் வாலியின் வரிகளுக்கு இணங்க இதோ, இரு ஜோடிகளும் தம்பதியராக மாறி அவர்கள் அவர்களுடைய இணையோடு அந்த அழகிய உறவில் ஆசையோடு வளம் வந்து கொண்டு இருந்தார்கள். அந்த நன்நாளில் வைணவேந்தனுக்கு மீண்டும் ஒரு அழைப்பு வர அவர் தனியாக சென்றார் அழைப்பை எடுத்தவர் எதுவும் பேசவில்லை அந்த பக்கம் இருந்தவர் "நா எல்லா உண்மையையும் ஆர்யன்கிட்ட சொல்லிடவா? சொன்னால், உனக்கு எதிராக பல கேள்விகள் வருமே! அதையெலாம் எப்படி நீ சரிகட்ட போற வேந்தன்." "ராட்சசி..நீ உயிரோட தான் இருக்கியா? பிளீஸ் டி ஆர்யன்கிட்ட எதுவுமே சொல்ல வேணாம். ஆமா, உனக்கு எப்படி ஆர்யனை தெரியும்?" இந்த கேள்வியை கேட்டதும் அழைப்பு துண்டித்தது "என்ன வேந்தன் கிட்ட இருந்து உண்மையை வாங்க பார்த்தா என்னை கண்டு பிடிச்சுட்டான். என்னை நீ விட்டுட்டு தனிமையில் வாழ வைச்ச உன்னை கண்டிப்பா பலர் கேள்வி கேட்கும் படி செய்வேன். இல்லேனா, என் பெயர் ரஞ்சனா இல்ல." என சபதம் எடுத்து கொண்டாள்.

முத்தங்களில் இணைப்பறவைகள்!

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page