All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

முத்தம் 15

 

VSV 3 – முத்தம் ஒன்றை பிச்சு தா
(@vsv3)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

 "எல்லோரும் நல்லா கேட்டுக்கோங்கள். என் சானுவுக்கு நா தான் புடவை எடுத்து கொடுப்பேன்." என அதிரூபன் பேச "அப்ப இந்த மாதுவுக்கு எடுத்து தர தோணலை தானே?" என அவனது பாசமலர் பதிலுக்கு கேள்வி கேட்க "ஏன் என் மாதங்கிக்கு அவளுடைய ஸ்கந்து எடுத்த தருவதில் விருப்பமில்லை போல?" என அவளுடைய வருங்கால இணை கேட்க "ஸ்கந்து! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு." என இரண்டரை மணிநேரம் கடந்து போனது புடவையை எடுக்க மிகவும் சிரமப்பட்டிருந்தாங்கள். "என்ன இது ஐம்பது புடவை பார்த்திருக்கேன். ஒன்னு கூட என் சானுவுக்கு செட் ஆகவே இல்ல! பேசாமல், தங்கத்துல சேலை எடுத்துடலாமா?" என்றதும் "அதிரூபன்? தங்கத்துல சேலை ரொம்ப காஸ்டிலியா இருக்குமே?" என சானக்கியா கவலையோடு பேச "கல்யாணம் வாழ்க்கையில் ஒரு முறை வர ஃபங்சன். அந்த ஃபங்சன் நல்ல படியா நடக்கணும். பண்டிகை மாதிரி நீயும் என் தங்கையும் தங்கத்துல மின்னும் அழகை நாங்க பார்க்கணும்." பிறகு எப்படியோ திருமணத்திற்கு வேண்டிய துணிகளை எடுத்துவிட்டு நிச்சயத்துக்கு மோதிரம் மற்றும் தாலி போன்ற நகைகளை வாங்க பக்கத்து கடைக்கு சென்று நகையெடுத்து முடித்ததும். "அப்ப நாங்க கிளம்புறோம் சம்மந்தி. வரோம் மாப்ள!" என சுதாகர் கிளம்ப "நானும் வருவேன் மாமா. இன்னைக்கு உங்க வீட்ல தான் நா தங்க போறேன். என் சானுவால என்னை பிரிஞ்சு இருக்க முடியல." அதிரூபன் இப்படி பேசியதை கேட்டதும் மாதங்கி சானக்கியாவின் காதருகே சென்று "அண்ணி ஸ்கந்து இன்னைக்கு எங்க வீட்டுல தங்க வரான். எனக்கு வேற வழி தெரியல, அதனால ஒரு நைட் நீங்க அவரை வர சொன்னதா நா பொய் சொல்லிருக்கேன்." என வேகமாக கூற "அப்பா! நா..நா தான் ரூபனை கூப்பிட்டேன். வாங்க போகலாம். கூஸ்பேரி வரட்டா." என கேலியாக பேசி முடிக்கவும் அனைவரும் அந்த இடத்தை விட்டு கிளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். "ஹப்பாடா ஒரு வழியா வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு. எவ்வளவுதான் வேலை பார்க்க? ஏங்க போய் சமைக்கிற வேலையை பாருங்க." என சுதாகரனுக்கு கட்டளையிட்டார் பைரவி இதை கவணித்த அதிரூபன் "மாமா நல்லா சமையல் செய்வாரா?" இந்த கேள்வியை செவிகளில் வாங்கிய தேவகி "மாமா! அப்பா செம்மையா சமைப்பார். அக்கா கல்யாணத்துக்கு அப்பா தான் சமையல். நாங்க சொன்னா மறுக்கிறார். நீங்க கேளுங்கள் மாமா?" என தேவகி ஆரம்பிக்க "இப்பல்லாம் உங்களுக்கு ஏத்த மாதிரி மேரேஜஸ்ல சமையல் காண்ட்ராக்ட் போடுறீங்க. பிசினஸ் மாதிரி போகுது. அப்புறம் பைவ் ஸ்டார் ஹோட்டல்ல இருந்து தான் சாப்பாடு வரணும் என்கிற மாதிரி எல்லாம் சானக்கியா லிஸ்ட் போட்டு வச்சிருக்கா. நான் என் பொண்ணுக்கு கல்யாணத்தை நல்லா என்ஜாய் பண்ணி பார்ட்டி வச்சு கொண்டாடணும்னு ஆசைப்படுறேன்." இறுதியாக 'பார்ட்டி' என்ற வார்த்தைகளை கேட்டவுடன் "என்னது பார்ட்டி கொடுக்க போறீங்களா? என்ன பார்ட்டி கொடுக்க போறீங்க? மருமகன் அவர் பிரண்ட்ஸ்க்கு பேச்சிலர்ஸ் பார்ட்டி கொடுப்பாரு, நீங்க என்ன பார்ட்டி கொடுக்குறதா பேசிட்டு இருக்கீங்க? சொல்லுங்க மிஸ்டர் சுதாகரன்." 'அடேய் சுதாகர் உனக்கு வாயில தாண்டா கண்டம்! வாயை கொஞ்சம் அடக்கி பேசுடா பைரவி சாவடிக்கிறாள்!' என மனதோடு புலம்பினார். "போய் சமைச்சுட்டு வாங்க. நாங்க பாட்டு பாடி விளையாடுறோம்." என பைரவி கூறினார். "சூப்பர் மாம். ஆனா ஒரு மாற்றம், அக்காவும் மாமாவும் பாட்டுக்கு நடணம் ஆடணும். என்ன மாமா உங்களுக்கு ஓகேவா?" என தன் மச்சினிச்சி பேசியதை கேட்டதும் உற்சாகத்துடன் "இதை நான் வழிமொழிகிறேன்." என்றான் சந்தோஷமாக. "அப்ப ஃபஸ்ட் என்னோட தான் டான்ஸ். பிறகு அக்காவோட ஆடலாம்." என்றதும் "என்ன? ரூபன் என்னோட தான் ஆடுவார்." என அவளுக்கு பொறாமை வர அதில் காரத்தை அள்ளி போடும் வகையில் பாட்டிற்கு நடணம் ஆடினான் அதிரூபன். 

 

ஐயா மானை தேடி வந்தாராம்? வாங்க மச்சான் அட வாங்க மச்சான்! வாங்க மச்சான் வாங்க உங்க வழியை பார்த்து வாங்க. ஏங்க! ஏங்க ஏங்க ஏன் இப்படி பார்க்குறீங்க? வாங்க மச்சான்! 

 

என தேவகி அதிரூபனை வைத்து கேலியோடு ஆடினாள். 

 

நகுலன் நீண்ட நேரமாக தனிமையில் அமர்ந்து மனதில் 'என் வாழ்க்கையில நான் மறச்ச விஷயம் ஒன்னு இருக்கு. ஆனா அது எங்க வெளிவந்திருமோன்னு பயமாவும் இருக்கு, பதட்டமாகவும் இருக்கு. வைணவேந்தன் கிட்ட பேசலாம் பார்த்தா அவன் வீட்ல கல்யாணம் பேசி இருக்காங்க. சந்தோஷமான இந்த தருணத்தில், நான் இப்படி கவலைகளை சுமந்துகிட்டு வரேன். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.' இப்படி தன் தந்தை தனிமையில் என்ன செய்து வருகிறார் என்பதை நோட்டமிட்ட அமுதன் அவரிடம் நேரடியாக சென்று அவர் முன் அமர்ந்து "இப்படி கவலையோட என்னத்த யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க பா?" "அமுதா நீயா நான் வேற யாரோ நெனச்சு பயந்தே போயிட்டேன்!" "நம்ம வீட்ல நானு,அம்மா, நீங்க வேற யாருப்பா இருக்கா? எனக்கு தம்பி தங்கச்சி யாராவது இருக்காங்களா? சொல்லுங்கப்பா சொல்லுங்க? எனக்கு ரூபனுக்கு மாதங்கி எப்படி கூடப்பிறந்தவளாய் இருக்காளோ, அந்த மாதிரி என்கூட ஒரு ஜீவன் பிறக்கவே இல்ல என்கிற கவலை என் மனசோடு இருந்துகிட்டே இருக்குப்பா. ஆனா என்னன்னு தெரியல ஒரு சில வாரமா என் மனசு ஆராதனாவ தான் நினைச்சுட்டு வருது." "உன் அமுதன் உன்கிட்ட நான் முக்கியமான விஷயம் சொல்ல வேண்டியது இருக்கு." தன் தந்தை அப்படி என்ன விஷயத்தை தன்னிடம் கூற போகிறார் என்பதற்காக கூர்ந்து அவரது வார்த்தைகளை கேட்பதற்கு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அமுதன். 

 

 "உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்லியே ஆகணும் அமுதன். உங்க அம்மாவுக்கு வயித்துல கரு சுமக்கிற பாக்கியமே இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டா, நீ வயித்துல உருவானதும் ரொம்ப சந்தோஷப்பட்டாள். அவளை மூணு மாசத்துக்கு பத்திரமா பாத்துக்கணும், டெலிவரி சமயத்துல ரொம்ப பிளீடிங் போகும். அதோட ரெண்டு பேர்ல யாரையாவது ஒருத்தர் தான் காப்பாத்துற மாதிரியான சூழ்நிலை அமையும்னு சொல்லவும் ஜெயவள்ளி பிந்துவ ரொம்ப நல்லாவே பாத்துக்கிட்டாள். என் தங்கச்சியை கண்டு எனக்கே பொறாமை வந்துச்சு, அவ்வளவு அழகா என் மனைவி மேல அக்கறை. அவள உக்காந்த இடத்தை விட்டு நகர்வே விடல, அந்த அளவுக்கு அவ வயித்துல இருந்த போது நீ அவ்ளோ பாதுகாப்பா இருந்த. அப்போ எனக்கும் வைணவேந்தனுக்கும் இருந்த கவலை ரெண்டே ரெண்டு தான்! ஒன்னு உன் அம்மா வயித்தில் இருந்து நீ பிறக்கும் போது எந்த கஷ்டமும் வரக்கூடாது. இன்னொனு, வேலை மேல வேலை பார்த்த என் தங்கச்சி ஜெயவள்ளி அவளுடைய குழந்தையையும் நல்ல படியா பெத்தெடுக்கணும்." அமுதனுக்கு குழப்பம் ஏன் தந்தை தன்னிடம் இந்த விஷயத்தை இன்று இத்தனை வருடங்கள் கழித்து கூற வேண்டும் என்ற கேள்வி அவனது மனதில் எழுந்தது வாய்விட்டு கேட்கவும் செய்தான். "அப்பா நான் பொறந்து இருபத்தி ஏழு வருஷம் ஆச்சு இத்தனை வருஷத்துல என்னைக்காவது ஒரு நாள் இத பத்தி நீங்க பேசுனதே இல்ல. நீங்க இதை சொல்றீங்கன்னா.. ஏதோ நடந்திருக்கு." பின் தந்தையை பேசவிடாமல் அமுதன் மீண்டும் "சரி நீங்க அத கூட எனக்கு சொல்ல வேணாம். நான் உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும். எனக்கு ஆராதனாவை ரொம்ப பிடிச்சிருக்கு. சாணக்கியாவை நா கேலி பண்ணி இருக்கேன், கிண்டல் பண்ணி இருக்கேன், இவ்ளோ ஏன் பண்ணக்கூடாத விஷயம் எல்லாம் பண்ணி இருக்கேன். அவன் வாழ்க்கையவே ஒட்டுமொத்தமா கெடுத்து இருக்கேன் பா! நான் போதைக்கு அடிமையாக இருந்த அந்த சமயத்துல எனக்கு தூனா இருந்து என்ன மொத்தமா மாத்துனதே ஆராதனா தான். அவளுக்கு சினிமால அக்ட்ரேஸ் ஆகணும்னு ஆசை. என்னுடைய படப்பிடிப்புல தான் வெளிவரணும் என்கிற ஒரு ஆசை, தீராத போதைன்னு கூட சொல்லலாம். அந்த அளவுக்கு அவளுக்கு ஒரு நடிகை ஆகணும்னு ஆசை பா. இதனால், அவள் என்னையும் மாத்துனா. அது அப்படியே எங்க ரெண்டு பேருக்குள்ள காதலாவே மாறிடுச்சு பா, கல்யாணம் செஞ்சு நந்தகி ஆன்டி அவளுடைய அம்மா முன்ன போய் நின்னோம். சத்தியத்தை மீறிட்டோமேனு அவளுடைய அம்மா தற்கொலை பண்ணினதும் என்னை அம்போனு விட்டுட்டு போயிட்டா. இப்ப திரும்பி அவளை பார்த்ததும், மீண்டும் அவளை நான் ரொம்ப காதலிக்கிறேன். அதனால, எனக்கு அவளை கல்யாணம் செஞ்சு வைங்க அப்பா." என மனதில் இருந்த அனைத்தையும் கூறினான். அமுதன் பேசிய அனைத்தையும் கேட்க நகுலன் அவனிடம் பதில் கூறாமல் தன்னுடைய அறைக்கு சென்று 'கடவுளே! என்ன இது எனக்கு வந்த பெரிய சோதனை. நந்தகி பொண்ணு தான் அந்த ஆராதனாவா? அவளை தான் கல்யாணம் செஞ்சேன்னு சொன்னதும் என்ன பண்ணனு தெரியலை. ஆர்யன் பற்றி ஏதாவது நந்தகி அவ பொண்ணுகிட்ட சொல்லிருப்பாளோனு சந்தேகமா இருக்கு.' என மனதோடு புலம்பினார்.

 

****

 

"அம்மா ஸ்கந்து வந்துட்டான்." என மாதங்கி துள்ளி குதித்தாள். "மாகி! என்ன நீ சின்னபிள்ளை தனமா நடந்துக்கிற?" என ஸ்கந்தன் நகைச்சுவையாக பேச அவனை பார்த்த ஜெயவள்ளி "வாங்க மருமகனே! உங்களுக்கு பிடிச்ச எல்லாத்தையும் மாதங்கி சமைச்சு வைச்சிருக்கா." என மாமியார் பேச்சை கேட்டு கொண்டே அங்கிருந்த பஞ்சு நாற்காலியில் அமர்ந்து அவர்களிடம் "அத்தை மாமா அப்புறம், மாகி இந்த கேள்வியை நா மாகிகிட்ட நிறைய முறை கேட்டு இருக்கேன். அவளும் ஒரே நிலையில் தான் இருக்கா. இருந்தாலும், திரும்ப கேட்க தோணுது." "என்ன மருமகனே? எதுவா இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்." என வைணவேந்தன் சாந்தமாக பேச "எனக்கு இந்த நாட்டுக்காக சேவை செய்ய பிடிக்கும். அதான், ஆர்மில ஜாயின் பண்ணேன். நாளைப்பின்ன எனக்கு ஏதாவது நடந்தா..உங்க பொண்ணு வாழ்க்கை பற்றி கவலை இல்லையா?" "நீ சொல்றது எனக்கு புரியுது ஸ்கந்தா. எங்க வீட்ல ஒரு ஆர்மி மேன் மருமகனா வந்தது எங்களுக்கு பாக்கியம். அதை விட, மாதங்கிக்கு உன்கூட கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் என் புருஷன் மற்றவங்க போல இல்லை. மனசார சந்தோஷமா இருப்பா. இதை நா உன் ஃபோடோ காட்டும் போது கேட்டேன். அப்ப தான் இந்த பதில் அவகிட்ட இருந்து வந்தது." "ஆமா, அதனால, இனி இந்த கேள்விக்கு இங்க இடம் இல்ல. வாங்க நம்ம பேசிட்டே சாப்பிடலாம். நேரமாச்சு." என மாதங்கி பேசி முடிக்கவும். வைணவேந்தன் அலைபேசியில் இருந்து அழைப்பு வரவும் அவர் அதை எடுத்து பேச ஆரம்பித்தார். "...." என அழைப்பில் அந்த பக்கம் இருந்தவர் அழுக "ஏய் என்ன சொல்ற? ஆர்யன் என்ன சொன்னான்?" என பதட்டமாக கேட்டதும் அவர் பின்னே ஜெயவள்ளியின் கரம் தொடவும் அழைப்பை துண்டித்தான். 

 

முத்தத்திலும் வெட்கம் வருமா?


   
ReplyQuote

You cannot copy content of this page