All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தீரா காதலின் தேடல்..? , தேடல் - 6.

 

VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 50
Topic starter  

தேடல் - 6

 

ஒரு வாரம் கழிந்திருக்க,

 

மாலை சோர்வாக வந்த தோழியை கண்டு தேநீர் எடுத்து வந்து அவளிடம் கொடுத்துவிட்டு அருகில் அமர்ந்தவனோ “என்ன வக்கில் அம்மா.. கேஸ் சக்சஸ்ஸா”

 

“ஆமாடா.. ஆறு மாசமா இழுத்தடிச்ச கேஸ ஒருவழியா இன்னைக்கு சக்சஸ் பண்ணியாச்சு.. இனி பெண்டிங் கேஸ் தான் சென்னை போனதும் பாத்துக்கலாம்.. சென்னை எப்போ போறோம்?”

 

“கிட்டத்தட்ட நான் வந்த வேலை பின்னிஷ் இந்த வாரத்துலயே போயிடலாம் தான்.. சசி வந்ததும் கேட்டு கன்பார்ம் பண்ணிக்கலாம்”

 

“அது சரி.. டாக்டர் இருக்காரா இல்லையா சத்தத்தையே காணும்” என்று கேட்டு கொண்டிருந்தவள் பேச்சு சத்தத்தில் பார்வை திருப்ப, அவளின் கேள்விக்கான சொந்தகரனோ புன்னகை முகத்துடன் அழைப்பு பேசியவாறு படியிறங்கி வந்து, அவள் எதிரே அமர்ந்தான் சசி என்று அழைக்கப்படும் சஷ்திக்.

 

தேநீரை ஒவ்வொரு மிடராக குடித்தவாறே அவனை தான் அளந்து கொண்டிருந்தாள்.

 

பார்பதற்கு ஆறடி உயரம், உடற்பயிற்சியில் உடம்பை கட்டுப்கோப்பாக வைத்திருந்தான்.

 

கலரும் இல்லை கருப்பும் இல்ல மாநிறம் கொண்டவன் பார்போரை ஈர்க்கும் அழகன், தன்னிடம் மட்டுமே வன்மையாக நடந்து கொள்ளும் கள்வன், மற்றப்படி மென்மையான முகம் கொண்ட மருத்துவன் என்று அவனின் அழகை கண்களால் ரசித்து கொண்டிருந்தாள் 

 

அவள் நிலையை கண்டு காதருகில் குனிந்த நண்பனோ “என்னடி.. உன் ஆள புதுசா பாக்குற போல பாக்குற..”

 

 

“என்னன்னு தெரியலடா.. இன்னைக்கு என் கண்ணுக்கு அவன் எக்ஸ்டரா அழகனா தெரியுறான்.. அவன சைட் அடிக்க ரெண்டு கண்ணு பத்த மாட்டிக்கு”

 

“அது ஒன்னும் இல்லடி.. நீ ரெண்டு நாள் வொர்க் பிஸில அவன பாக்கலயே.. அதான் அப்படி தோணுது”

 

“லவ் பண்ணி பாருடா.. இதெல்லாம் ஒரு தனி ஃபீல்.. உனக்கு சொன்னா புரியாது” என்று அவள் கூறியதை கேட்டு முறைத்தவனின் எண்ணத்தில் அவனின் மகிழ் ஆட்கொள்ள, அவளுடன் கழித்த பொழுதை நினைத்து புன்னகைத்து கொண்டான்.

 

அழைப்பு பேசி முடித்த சசியோ தன்னை காணும் தாரணியை கண்டு ‘ஆத்தி.. காமபார்வையால இருக்கு.. கண்ணாலயே ஆள முழுங்கிடுவா போல.. டேய் சசி இதுக்கு மேல அவள பாத்த கன்ட்ரோல் லாஸ் ஆயிடும் பார்வைய திருப்பு’ என்று நினைத்து நண்பனின் புறம் திரும்பி

 

‘இவனுக்கு என்னாச்சி தனியா சிரிக்கான்.. ஒருவேளை அன்னைக்கு ஃபோட்டோல பாத்த பொண்ண நினைச்சிட்டு இருக்கானோ’ என்று நினைத்து நண்பனை அழைத்து பார்த்து தோற்றதில் அழைப்பு விடுக்க, திறன்பேசி எழுப்பும் சத்தத்தில் நிகழ் உலகத்திற்கு வந்து திறன்பேசியை எடுத்து பார்த்து

 

அதியோ “அட கிறுக்கு பிடிச்சவனே.. கால் பண்ணிட்டுருக்க பக்கத்துல தானடா இருக்கேன்”

 

“நான் கூப்பிட்டது கூட கேட்காம கனவுலயே காதல் பண்ணிட்டு மனசாட்சி இல்லாம பேசுறியேடா”

 

நண்பன் கூறியதை கேட்டு விழி விரித்தவனோ, மறுநொடி சுதாகரித்து கொண்டு “காதலும் இல்ல கத்திரிக்காயும் இல்ல.. கேஸ் பத்தி திங்க் பண்ணிட்டு இருந்தேன்”

 

“ஓ கேஸ் பத்தி திங்க் பண்றன்வன் எதுக்குடா வெக்கப்பட்டு சிரிக்கணும்.. போதும்டா நடிக்காத உன் ரீலு அன்னைக்கு நீ ஃபோட்டோவ மறச்சு வைக்கும் போதே அந்து போச்சு”

 

“அப்படிலாம் இல்லடா.. ஜஸ்ட் அந்த பொண்ணு பாத்ததும் ஒரு ஈர்ப்பு வந்துச்சு அவ்வளவு தான் லவ்லாம் எதுவுமே இல்ல”

 

“சரி.. அப்போ உனக்கு அவள பிடிச்சிருந்தா வீட்டுல சொல்லி கல்யாணம் கட்டிக்க வேண்டி தான”

 

“விடுடா சென்னை போய் பாத்துக்கலாம்.. நீ என்கிட்டயிருந்து போட்டோஸ் வாங்கிட்டு போனியே பொண்ணு செலக்ட் பண்ணியா” என்று கூறி பேச்சை அவன் பக்கம் திருப்ப,

 

 

“இல்லடா போட்டோஸ்ல யாரையும் பிடிக்கல.. ஆனா அம்மா வேற ஏதோ பொண்ணோட சாதகம் பொருந்திருக்கு பொண்ணு வீட்டுல கூட பிடிச்சுருக்குன்னு சொன்னதா சொல்லி ஒரு ஃபோட்டோ அனுப்பி.. நான் சென்னை வந்ததும் பேசி பாக்கலாம்ன்னு சொன்னாங்க.. நானும் உங்க இஷ்டம்ன்னு சொல்லிட்டேன்” என்று கூறி தன்னை இறுகிய முகத்துடன் பார்த்து கொண்டிருந்தவளை கண்டதும்,

 

அவளின் வாடிய முகத்தை கண்டு ஆடவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது இருப்பினும் அவளிடம் எந்த உணர்ச்சியும் காட்டாமல் சிரித்த முகமாகவே நண்பனிடம் பேசி கொண்டிருந்தான்.

 

உலகமே மறந்து தன்னவனை பார்ப்பதே தலையாய கடமையாக செய்து கொண்டிருந்தவளின் செவில் அவ்வளவு நேரம் அவர்கள் பேசியது விழுந்ததா என்று கேட்டால் ஐயம் தான் ஆனால், அவனின் அம்மா தனக்கு பெண் பாத்திருக்கார் என்று கூற தொடங்கும் போதே காதுகளை கூர்மையாக்கி கேட்க தொடங்கி அனைத்தையும் கேட்டவளின் இதயத்தில் ஏற்கனவே புண்ணான நெஞ்சில் வேல் பாயிச்சுவது போன்ற வலி எழ, இதழ் கடித்து உணர்ச்சியை அடக்கி கொண்டவளோ, அவனை அடிப்பட்ட பார்வை பார்த்துவிட்டு எழுந்து அறைக்குள் சென்று தன் மனதை புரிந்து கொள்ளாமல் மேலும் காயப்படுத்துபவனை எண்ணி அழுது கரைந்தாள்.

 

நண்பி கவலையாக சென்றதை கண்ட ஆதியோ “டேய்.. வேண்டாம்டா ஏற்கனவே பண்ணின அதே தப்ப மறுபடியும் பண்ணாதடா.. அவ ரொம்ப உடைஞ்சு போயிருவா.. நீ அத்தைய நினைச்சி வொர்ரி பண்ணிக்காத நான் அவங்ககிட்ட பேசுறேன்.. நல்லா யோசி மச்சான் முடிவு உன்கைல தான் இருக்கு” என்று கூறி அவன் தோல் தட்டி சென்றான்.

 

அவன் சென்றதும் கண்களை மூடி அனைத்தையும் அசைபோட்டவனுக்கு தானே தன்னவளை காயப்படுத்திகிறோம் என்று நினைக்கையில் அவன்மேலே அவனுக்கு கோவம் எழ, எழுந்து உடற்பயிற்சி அறைக்கு சென்று ஓடுபொறியில் தன் வேகத்தை காட்டி உடல் வலிக்க வலிக்க ஓடினான்.

 

**************************

 

இதழிகாவை ரெஸ்டாரன்ட்டில் சந்தித்து பேசியதிலிருந்தே அவன் எண்ணம் முழுதும், அவளே நிறைந்திருக்க அவளை பாக்க துடித்த மனதை கட்டுப்படுத்த இயலாமல் நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே இல்லாத சந்தேகத்தை கேட்கேன் என்ற பெயரில் அவளின் அக்காவின் நிச்சயதார்த்த புகைப்படம் பென்டிரைவிலிருந்தால் கொடு தானே அனைத்தையும் மாற்றி சரி செய்து தருவதாக கூறி, அவளை சந்திக்கும் வாய்ப்பையும், அதோடு அடிக்கடி அழைப்பு பேசவும் உருவாக்கி கொண்டவன் அப்படியே அவளுடன் நெருங்கி பழக ஆரம்பித்து சில நேரங்களில் தன் மனதை மறைமுகமாகவும் வெளிக்காட்ட,

 

பெண்ணவளோ அவனின் நோக்கம் புரிந்து அவன் பேச்சை திசை திருப்பி மழுப்பி விட்டாலும், ஏனோ அவன் நட்பை விரும்பி வெறுக்க மனமில்லாமல் அவனுடன் நட்பு பாராட்டினாள்.

 

 

அதோ இதோ என்று அவள் தமக்கையின் திருமண நாளும் வந்துவிட, புகைப்பட கருவியுடன் தன் பணிகளோடு சேர்த்து தன்னவளின் தரிசனம் காண, தோழியிடம் பல பல அர்ச்சனைகள் வாங்கி அவளுடன் தன் பணிக்கு உதவியாக ஒரு ஆடவனையும் இழுத்து கொண்டு முதல் ஆளாக இதழிகாவின் வீட்டை அடைந்தவன் அங்கிருந்தே தன் பணியை தொடங்கினான்.

 

மகளின் கல்யாண வேலையில் சதாசிவமும், அவரின் குடும்பத்தினர் மற்றும் அடியாட்கள் என்று அனைவரும் யாரையும் கவனிக்கும் எண்ணமின்றி தீவிரமாக ஓடிக் கொண்டிருக்க, இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மதியோ நண்பனிடம் கண்ணை காட்டிவிட்டு தான் வந்த பணியை பார்க்கலானாள்.

 

தன் புகைப்படம் எடுக்கும் பணியிலிருந்தாலும் தோழி சென்ற இடத்திலும் பார்வை வைத்து அவளை பாதுகாக்கும் பணியையும் சிற்பாகவே ஆற்றினான்.

 

அந்நேரம் அவ்வழியாக வந்த இதழிகாவை கண்டவனோ, அவள் புடவையிலிருக்கும் அழகை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவன், அவள் தோழி சென்ற திசையை நோக்கி சென்றதும் நொடியில் தன் ரசனை பார்வையை மாற்றி கையிலிருந்த புகைப்பட கருவியை தன்னுடன் வங்தவனிடம் கொடுத்து பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு பெண்ணவளை நோக்கி நடந்தவன், அவளை பாக்காதது போல் அழைப்பு பேசுவது போல் நடித்தவாறே முன் செல்ல, 

 

அவனை கண்ட இதழிகாவோ “ஹர்ஷு” என்று அழைக்க,

 

ஒன்றுமே தெரியாதது போல் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு எதிரே தன்னை கண்டு கையசைப்பவளை கண்டு பதிலுக்கு கையசைத்து அழைப்பு பேசியபடி முன்னே வந்தவன் இரண்டு வார்த்தைகள் ஏதோ பேசி துண்டித்தது போல் நடிக்க, இதழிகாவோ “ஹலோ வந்த வேலைய பண்ணாம வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கீங்க”

 

“கால் வந்துச்சு.. அதான் என் அசிஸ்டன்ட்ட பாத்துக்க சொல்லிட்டு பேச வந்தேன்.. யூ டோண்ட் வொர்ரி நீ அசந்து போற அளவுக்கு பக்காவா ஸ்டில்ஸ் இருக்கும்”

 

“சரி சரி.. மதி எங்க”

 

“ரெண்டு பேரும் ஒன்னா தான் வந்தோம்.. அதுக்கு அப்புறம் அவள நான் பாக்கவே இல்லையே”

 

“சரி நான் பாத்துக்கிறேன்” என்று கூறி செல்லபவளை கண்டு “ஓய் லிப்ஸ்” என்று அழைக்க,

 

அதில் புருவம் உயர்த்தி நின்றவள் “லிப்ஸ்ன்னா கூப்பிடீங்க?”

 

“ஆமா.. இதழ்ன்னா இங்கிலீஷ்ல லிப்ஸ் தான, அதான் அப்படி கூப்பிட்டேன்”

 

“நோ.. எல்லாரும் கூப்பிடுற போல இதழ்ன்னு கூப்பிட்டாலே.. எனக்கு கேட்கும்"

 

“மத்தவங்க வேற.. நான் வேற சோ மத்தவங்க மாதிரிலாம் கூப்பிட முடியாது.. எனக்கு இப்படி கூப்பிட தான் பிடிச்சிருக்கு”

 

“யாராவது பாத்து அப்பாகிட்ட சொன்னா தேவையில்லாம பிராப்ளம் வரும்.. வந்த வேலைய முடிச்சிட்டு உசுரோட வீடு போய் சேருங்க” என்று கூறி மறுபடியும் செல்பவனின் கையை பற்ற,

 

அதில் பதறியவளோ “என்ன பண்றீங்க.. எல்லாரும் பாக்குறாங்க கைய விடுங்க”

 

“சொல்ல வேண்டியத கேக்குறதுக்குள்ளயும் போனா என்ன அர்த்தம்”

 

“சரி கேக்குறேன்.. கைவிட்டுட்டு சொல்லுங்க” என்று கூறியதை கேட்டு அவள் கையை விடுவித்தவனோ “சாரீல செமயா இருக்கடி.. இப்போவே தூக்கிட்டு போய்.. உன் கழுத்துல தாலி கட்டிட்டா என்னன்னு தான் தோணுது.. ஆனா, அப்படி பண்ண மாட்டேன் ஏன்னா பேசிகலி ஐ அம் குட் பாய்.. சோ ரெண்டு பேரோட வீட்டு சாமதத்தோட ஊர்யறிய தாலி கட்டுறேன்.. அதுவரை வெயிட் பண்ணு பேபி” என்று கூறியதை கேட்டு கடுமையான முகத்துடன் பேசு வருபவளை தடுக்கும் விதமாக “ஐ லவ் யூ லிப்ஸ்..” என்று கூறி கன்னத்தில் இதழ் பதிக்க, தீடீர் செயலில் பெண்ணவள் உறைந்து நிற்க, அப்போது வந்த வேலையை முடித்து அவர்கள் அருகில் வந்த மதியோ வந்த வேலையை சிறப்பாக முடிந்தது என்று கூறும் விதமாக கட்டை விரல் உயர்த்தி நண்பனை பார்த்து கண்ணடித்துவிட்டு, உறைந்து நிற்பவளை உலுக்கி பேசியவாறே அவளை அழைத்து கொண்டு மணமகள் அறைக்குள் செல்ல, அவளோ அவனை முறைத்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.

 

அதன் பிறகு இரு பெண்களும் மணமகளுடன் மண்டபத்திற்கு சென்று அங்குள்ள வேலைகளை கவனிக்க,

 

ஹர்ஷாவும் மண்டபத்திற்கு சென்று தன் பணியில் கவனத்தை செலுத்தினாலும் தன்னவளின் மேலும் பார்வை பதிந்திட தவிர, தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவள் போக்கிலே விட்டு விட்டான்.

 

**************************

 

காலை விருந்தை முடித்துவிட்டு தனக்கான ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று ஓய்வெடுக்கலாம் என்று படுக்கையில் அமர்ந்த மதி திறன்பேசியை எடுக்க, பள்ளி தோழியிடமிருந்து பகிரியில் வந்த செய்தியை புருவம் சுருக்கி பார்த்தவளோ, அதற்கான பதிலை அளித்துவிட்டு யோசனையுடன் வெளியே வந்தவளை, வேறொரு அறையில் மறைந்து நின்ற ஒரு கரம் அவளை இழுக்க, அதில் கோபம் கொண்டு அடிக்க கையில் ஓங்கியவளோ எதிரே நிற்பவனை கண்டு “நீ தானா”

 

“நானே தான் பேபி.. என்ன தவிர யாரு உன் கைய யாரு பிடிப்பா.. அப்படி பிடிக்க தான் விட்டுருவேனா”

 

“என்ன பூமி இது.. யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க” என்று கூறியதை காதில் வாங்காமல் தன் அருகில் நெருங்கியவனை மார்பில் கை வைத்து தள்ளியவளோ “என்ன பண்ற.. எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல.. கல்யாணம் முடியுற வரை.. உன் சுண்டு விரல் கூட என்மேல பட கூடாதுன்னு சொல்லிருக்கேன் தான”

 

“ம்ம்.. போ பேபி நீ என்ன உண்மையாவே லவ் பண்ணல.. அதான் என்ன ஒரு ஹக் கூட பண்ண விட மாட்டிக்க” என்று கூறியதை கேட்டு எதிரே நிற்பவளின் முகம் வாடியதை கண்டு “சாரி சாரி பேபி.. லவ் சொன்னதுலிருந்து நீ என்ன அவாய்ட் பண்ணிட்டே இருக்கியா.. அதான் இப்படிலாம் பேசிட்டேன்.. உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் தெரியுமா.. சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்டி”

 

“நானும் தான் உன்ன மிஸ் பண்றேன்.. முக்கியமான புராஜக்ட் விஷயமா பிஸி ஆயிட்டேன்.. அதுக்காக உன்ன ஹக் பண்ணி கிஸ் பண்ணனுமா என்ன.. எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் பண்றதுல உடன்பாடு இல்ல.. அப்புறம் நெக்ஸ்ட் வீக் ஊருக்கு போவேன்.. அப்போ நம்ம கல்யாணத்த பத்தி வீட்டுல பேச டிரை பண்றேன்” 

 

“சரி பேபி.. எனக்கு புரியுது.. நீ சீக்கிரம் வீட்டுல பேசு.. நான் வெயிட் பண்றேன்” என்று கூறி அங்கிருந்து சென்றான்.

 

அவன் சென்றதும் பல பல எண்ணங்களில் மிதந்தவள், தன் நிலையை எண்ணி

சுவரில் கையை மடக்கி குத்தி கொண்டவளோ இறுகிய முகத்துடன் வெளியே வந்து சாதாரணமாக அனைவருடனும் இணைந்து கொண்டாள்.

 

                தேடல் தொடரும்...

 

இப்படிக்கு 

Vsv42😍😍

 

This topic was modified 1 month ago 2 times by VSV 42 – தீரா காதலின் தேடல்

   
ReplyQuote

You cannot copy content of this page