About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 12
வேங்கையின் பலத்தோடு திமிறிய மேக்னாவை பிடிக்க முடியாததால் திலீப் பாய்ந்து வந்து அகத்தியனை கீழே தள்ளிவிட்டான். மேக்னாவின் குறி தவறியதால் அகத்தியன் உயிர் தப்பியது.
அங்கே நடந்த கலவரத்தை கண்ட பணியாட்களும் வாயிற்காவலர்களும் பதறிக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து மேக்னாவை பிடிக்க முயல, அதற்குள் அவள் மயங்கி கீழே விழுந்தாள்.
அவர்கள் அவளை தூக்க எத்தனித்த வேளையில் அகத்தியன் எழுந்து, “நோ, டோன்ட் டச் ஹர், ஐ வில் டேக் கேர் ஆஃப் ஹர்” (no, dont touch her, I will take care of her) என்று சொல்லி அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.
அவன் தோளிலும் மார்பிலும் வழிந்த ரத்தம், மேக்னாவின் வெந்நிற ஆடையை செந்நிறமாக்கி இருந்தது.
“பாஸ்” என்று பின்னாடியே ஓடிவந்த திலீப்பை பார்த்து, “உடனே டாக்டரை வரச் சொல்லு, மோகனாவுக்கு என்னாச்சுனு பார்க்கணும்” என்று சொல்லி அவள் தங்கியிருந்த அறைக்கு சென்று அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்தான்.
மயக்கத்தில் கண் மூடிக் கிடந்தவளின் கண்ணிமையில் மென்மையாக முத்தமிட்டு, நெற்றியில் விழுந்திருந்த முடியை ஒதுக்கி விட்டான். மேலிருந்து கீழாக பார்த்தவன், அவளின் கலைந்திருந்த ஆடையை சரி செய்தான். அவள் அருகிலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவள் கரத்தை பற்றிக் தன் கன்னத்தில் வைத்தபடி,
“மோகி, நான் நல்லவன்னு சொல்ல வரல, ஆனா நீ நினைக்கிற அளவுக்கு மோசமானவனும் இல்லனு சொல்லி என்னை உனக்கு புரிய வைக்கணும்னு தான்டி தவமா தவமிருந்து போகர் அருளால ஏழு பிறவி எடுத்தேன். வெவ்வேறு காலகட்டத்துல மனித பிறவி எடுத்து உனக்காக காத்திருந்தேன். ஆனா ராட்சஸி நீ தான் என்னை பார்க்க பிடிக்காம பிறக்கவே இல்லையே.
இதுக்கு நடுவுல நாம வாழ்ந்த குமரி கண்டமே கடல்ல மூழ்கி போயிட்டு இருக்கு. குமரி கண்டம் இருந்ததுக்கு சாட்சியா இருக்கற ஓரே இடமான கன்னியாகுமரில தான் காலம் காலமா உனக்காக காத்துட்டு இருந்தேன். எந்த இடத்துல உன்னை தொலைச்சேனோ அந்த இடத்துல நீ எனக்கு கிடைப்பேன்னு உறுதியா நம்பினேன். என்னோட ஏழாவது பிறப்பான இந்த முறை நீ கண்டிப்பா என்னை தேடி வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. அதனால தான் உன்னை எங்கேயும் தேடாம நம்மளோட வாழ்க்கையை ஓவியமா வரைஞ்சு நாடு பூரா நடக்கற ஓவிய கண்காட்சிக்கு அனுப்பினேன்.
நான் நினைச்ச மாதிரி நீயே என்னை தேடி, நான் இருக்கும் இடத்துக்கு வந்துட்ட, அதே மாதிரி என்னை புரிஞ்சுக்கிட்டு என்னோட சேர்ந்து வாழுவியா மோகி?” என்றவன் கண்களில் கண்ணீர் பளபளத்தது. குனிந்து அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.
அதை பார்த்துக் கொண்டிருந்த நித்யாவிற்கு இப்போது அகத்தியன் மேல் மதிப்பு கூடியது.
“சார், இந்த மறுபிறவி எல்லாம் நம்பறதா இல்லையான்னு தெரியல. ஆனா நடக்கறதை நேர்ல பார்த்தா நம்பாம இருக்கவும் முடியல. மேக்னா சொன்ன கதை உண்மையா நடந்த கதையா? அப்போ அவ தான் மோகனாங்கி, நீங்க தான் அகனா?”
அகத்தியன் ஆமாம் என்பது போல தலையசைக்க,
“ஓ அதனால தான் உங்க இரண்டு பேரோட கதையும் ஒரே மாதிரி இருந்துச்சா? செத்தவங்க மறுபடியும் பிறக்க முடியுமா என்ன?”
“உடலுக்கு தான் அழிவு, ஆத்மாவுக்கு என்னைக்குமே அழிவு இல்ல. மோகனாவுக்கு நடந்தது பெரிய கொடுமை தான். அதுக்கு முழுசா நான் பொறுப்பில்ல. ஆனா சூழ்நிலையும் சந்தர்ப்பமும் என்னை குற்றவாளி ஆக்கிடுச்சு. மோகனா என்னை தப்பா நினைச்சிட்டா, அவ உயிரோட இருந்திருந்தா என்னை புரிய வச்சு, அவளை சமாதானம் செஞ்சிருப்பேன். அதுக்கு வழியில்லாம அவ துர்மரணத்தை தேடிக்கிட்டா.
பழிச்சொல்லோட என்னால வாழவும் முடியல, சாகவும் முடியல. அப்போ தான் நான் படிச்ச திருக்குறள் எனக்கு நியாபகம் வந்துச்சு
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று
(தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்)
என் மோகனாவின் ஊடலை சரி செஞ்சு அவளோட வாழ எனக்கு வாய்ப்பில்லாமல் போயிடுச்சு. அந்த வாய்ப்பை நானே ஏற்படுத்திக்கிட்டு என்னை அவளுக்கு புரிய வைக்க நினைச்சேன். அதனால மறுபிறவி எடுத்தாவது அவளை அடையணும் நினைச்சேன். அது நிறைவேற்றதுக்காக சாகற வரைக்கும் தவம் இருந்தேன். ஆனா ஏழாவது பிறவியில தான் அவளை பாக்கிற பாக்கியமே எனக்கு கிடைச்சது.
இது தான் என்னோட கடைசி வாய்ப்பு. கண்டிப்பா நான் என் மோகனா கூட சேர்ந்தே தீருவேன்” என்றான் அகத்தியன் உறுதியாக
“நீங்க என்ன சொன்னாலும் கேட்கிற நிலைமையில இப்போ அவ இல்ல, போன ஜென்மத்துல தனக்கு நடந்ததை தான், அவ கதையா எழுதி இருக்கான்னும் நீங்க தான் அகன்னும் இப்போதான் அவளுக்கு தெரிஞ்சு இருக்கு. கண்முழிச்சா மறுபடியும் உங்களை கொல்லாம விடமாட்டானு நினைக்கிறேன்” என்றாள் நித்யா கவலையுடன்
அகத்தியன் ஏதோ சொல்ல வருவதற்குள் திலீப், மருத்தவருடன் அங்கே வந்தான். மருத்துவர் அகத்தியனை கண்டதும், “என்னாச்சு மிஸ்டர் அகத்தியன், நான் வர்ற வரைக்கும் இப்படியா பர்ஸ்ட் எய்ட் கூட பண்ணாம இரத்தம் வழிய நின்னுட்டு இருப்பீங்க” என்று கடிந்து கொண்டே அவனிடம் சென்றார்.
“டாக்டர், என்னை அப்புறமா பாக்கலாம். முதல்ல மோகனாக்கு என்னாச்சுனு பாருங்க, மயங்கி விழுந்துட்டா”
“அது சாதாரண மயக்கம் தான் பாஸ், டாக்டர் அவங்களை விடுங்க, முதல்ல பாஸூக்கு டிரீட்மென்ட் பண்ணுங்க” என்ற திலீப்பை முறைத்தான் அகத்தியன்.
அவர்கள் என்ன சொல்லியும் கேட்காமல் மருத்துவர் மேக்னாவை பரிசோதிக்கும்படி செய்தான்.
“நத்திங் சீரியஸ் அகத்தியன். ஜஸ்ட் ஓவர் எமோஷனல்ல மயங்கி இருக்காங்க. கொஞ்ச நேரத்துல அவங்களே எழுந்திடுவாங்க. இப்போ நீங்க டிரிட்மென்ட் பண்ணிக்கோங்க” என்றவர் அவனுடைய காயங்களை துடைத்து விட்டு, சில தையல்களையும் போட்டு, மருந்தினை கொடுத்து ஓய்வு எடுக்கும் படி சொல்லிவிட்டு சென்றார்.
அகத்தியன் மேக்னா படுத்திருக்கும் கட்டிலுக்கு எதிரே இருந்த நீள் இருக்கையில் அவளை பார்த்தபடி படுத்துக் கொண்டான்.
நித்யாவும் திலீப்பும் அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியே சென்றனர்.
“என்ன நித்யா? உன் பிரெண்ட் இவ்வளவு வயலன்ஸா நடந்துக்கிறாங்க. வரம் கொடுத்தவன் தலை மேல கை வைக்கிற மாதிரி, வாள் பயிற்சி சொல்லி கொடுத்தவர் தலையை வெட்ட போயிட்டாங்களே. இவ்வளவு டெரரா இருக்காங்க. நீ எப்படி இவங்க கூட பிரெண்டா இருக்க”
“நோ, மேக்னா ரொம்ப மென்மையானவ, இதுவரைக்கும் நான் அவ சத்தமா பேசிக் கூட பார்த்தது இல்ல. இன்னைக்கு ஏதோ முன் ஜென்மம் நினைவு வந்திருக்கு. அது தான் அப்நார்மலா நடந்துக்கிட்டா?”
“இப்போ கண்விழிச்சா, என்ன பண்ணுவாங்களோ? பாஸ் வேற அவங்க எதிரிலேயே படுத்துட்டு இருக்காரு”
“எனக்கும் அதை நினைச்சா தான் பயமா இருக்கு. அவ எப்படி ரியாக்ட் பண்ணுவான்னே கெஸ் பண்ண முடியல”
“எதுக்கும் தயாரா இருக்க, நான் கொஞ்சம் பாடி காட்ஸை ரூம் வாசல்லயே நிக்க சொல்றேன்”
“உங்க பாஸை ஒரு பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்த பாடி காட்ஸா?” என்று சிரித்தாள் நித்யா
“என்னம்மா பண்றது? என் பாஸ் இந்தா குத்திக்கோனு நெஞ்சை நிமிர்த்திட்டு நிக்கிறாரு. உன் பிரெண்ட் என்னவோ புலி மாதிரி பாயறாங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இரண்டு பேரும் எப்படியெல்லாம் ரொமான்ஸா பார்த்துக்கிட்டாங்க” என்று அங்கலாய்த்தான் திலீப்
“நாம இரண்டு பேரும் கூட அவங்களை மாதிரி ரொமான்ஸா பாக்கலாம்னு கேட்டீங்க இல்ல? எப்படி அதே மாதிரி நாமளும் டிரை பண்ணலாமா?” என்றாள் நித்யா ஒற்றை புருவம் உயர்த்தி
திரும்பி நின்று அவளை பார்த்து தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு, “அம்மா தாயே, அந்த ரொமென்ஸ் லுக்கும் வேணாம், கத்தி குத்தும் வேணாம், என் பாடி வீக் பாடி மா தாங்காது, மேக்னா போல நீ ஒரு கத்தியை தூக்கிட்டு பத்ரகாளி மாதிரி வந்தா அத பார்த்தே நான் நெஞ்சு வெடிச்சு செத்திருவேன்” என்றான் பாவமாக
“உயிர் மேல அவ்வளவு பயமா?” என்று கலகலவென்று சிரித்தாள் நித்யா, அவளை ரசனையோடு பார்த்துக் கொண்டு இருந்தான் திலீப்.
“நித்தி” என்ற மேக்னாவின் குரல் கேட்டு இருவருமே திகைத்து போய் திரும்பி பார்த்தனர்.
‘இப்போ எந்த மோட்ல இருக்காளோ தெரியலயே’ என்று நினைத்த நித்யா பேசாமல் மேக்னாவின் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்தாள்.
“என்னாச்சு நித்தி? நான் எப்படி ரூமுக்கு வந்தேன்? போட்டோஸ் எல்லாம் எடுத்தாச்சா? அகத்தியன் எதுக்கு நம்ம ரூமுல தூங்கிட்டு இருக்காரு? அவர் உடம்புல கட்டு போட்டிருக்கு, எதாவது அடிப்பட்டுச்சா என்ன?”
என்ன பதில் சொல்வது என்று புரியாமல் நித்யாவும் திலீப்பும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திருதிருவென்று விழித்தனர்.
மேக்னாவின் குரல் கேட்டு அகத்தியனும் எழுந்து அறைக்கு வெளியே வந்தான்.
“போட்டோஸ் எல்லாம் எடுத்தாச்சு மோகனா. நீ அனிமீக்கா இருக்கே, அதான் மயங்கி விழுந்துட்டே. உன்னை தூக்க வரும்போது உன் கையிலிருந்த வாள் என் தோள்ல பட்டு லேசா காயம் ஆயிடுச்சு” என்றான்
மேக்னா, “அய்யோ, அகத்தியன் என்னால காயம் பட்டிருச்சா? ரொம்ப வலிக்குதா?” என்று அவனருகே வந்தாள்.
அகத்தியன் அவளை புன்னகையுடன் பார்த்து இல்லை என்பது போல தலையசைத்தான்.
“இப்போ அனிமேஷன் படத்தை எப்படி பினிஷ் பண்ண போறோம் அகத்தியன்?”
“இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துக்கறேன். நாளையில இருந்து ஸ்டார்ட் பண்ணிக்கலாம்”
“ஓகே, வில் அம்பு சீனை ரீகிரியேட் செய்யலாமா?
“ஓகே” என்று கட்டை விரலை நீட்டினான்.
“டேக் ரெஸ்ட் அகத்தியன், நாளைக்கு பார்க்கலாம். நித்யா! வா. நாம தோட்டத்து பக்கம் போகலாம், அங்கே நிறைய பட்டாம்பூச்சி இருந்துச்சு. போட்டோஸ் எடுத்துக்கலாம்” என்றாள்
நித்யா தோழியின் வித்தியாசமான நடவடிக்கையையும் அகத்தியனின் அமைதியான தோற்றத்தையும் பார்த்து விட்டு நீண்ட பெருமூச்சு விட்டாள். இப்போதைக்கு மேக்னாவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வேறிடம் செல்வதே மேல் என்று தோன்ற அவளுடன் நடந்தாள்.
அவர்கள் சென்றதும், “பாஸ் இன்னைக்கு வாள் வீச்சு, நாளைக்கு அம்புல குத்த போறாங்களாமா? நீங்களும் ஓகேனு சொல்றீங்க” என்றான் திலீப் பொறுமையிழந்து
“திலீப், மேக்னாவுக்கு அவ என்ன செஞ்சான்னே தெரியல? விடு இதை பெரிசுபடுத்தாத”
“அது தான் பயமா இருக்கு. அடுத்து அவங்க என்ன செய்வாங்களோனு பதட்டமா இருக்கு. முதல்ல அவங்களை இங்கிருந்து அனுப்பிடுங்க, பார்க்கறதுக்கு பேய் பிடிச்ச மாதிரி இருக்காங்க”
“திலீப் மைன்ட் யுவர் வேர்ட்ஸ், ஷி இஸ் மைன். இன்னொரு முறை இப்படி பேசினா பேசின வாயை உடைச்சிடுவேன்” என்று அடிக்குரலில் சீறினான் அகத்தியன்
“சரி பேசல, ஆனா நாளைக்கு ஷூட், என் பிளான்படி தான் நடக்கணும்” என்று விட்டு விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் திலீப்
“ஏன்டா ஓடறே, நான் எதுவும் மறுத்து சொல்லக்கூடாதுனு தான் ஓடறீயா? ராஸ்கல்” என்று சிரித்தான் அகத்தியன்.
திலீப் அகத்தியனுக்கு கிடைத்த நல்ல விசுவாசி மட்டுமல்ல, உடன் பிறவா தம்பியை போன்றவன். அவனுக்கு நித்யாவின் மேல் அபிப்ராயம் இருப்பதை அகத்தியனும் அறிந்தே இருந்தான். எப்படியும் மோகனா அவன் உயிரை எடுக்காமல் விட மாட்டாள். அதற்குள் இவர்கள் இருவரின் திருமணத்தையாவது நடத்தி விடவேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
தோட்டத்திற்கு நித்யாவை அழைத்து சென்ற மேக்னா, அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் பட்டாம்பூச்சியை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
“மேகி, உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்?”
“ம், சொல்லு”
“அகத்தியன் சார் ரொம்ப நல்லவரா தோணுது”
“நேத்து வரைக்கும், அவரை நம்பாதேனு சொல்லிட்டு இருந்தே. இப்போ என்ன திடீர் ஞானோதயம்? நோக்கு வர்மத்தால உன் மனசையும் மாத்திட்டாரா?” என்றாள் மேக்னா நக்கலாக
“மேகி!” என்று அதிர்ந்த நித்யா, “நீ இப்போ மேக்னாவா பேசறீயா? இல்ல மோகனாங்கியா பேசறீயா?”
“ஹே லூசு, நான் எப்பவும் மேக்னா தான்டி. நீதானே இங்கே வந்ததுல இருந்து அகத்தியன் கிட்ட ஜாக்கிரதையா இருனு சொன்னே”
“ஆமாம், நான் தான் சொன்னேன். ஆனா இப்போ என்னோட கருத்து தப்போனு தோணுது. நீ மயக்கத்துல இருந்தப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா?”
“நித்தி, நான் ரொம்ப டயர்டா இருக்கேன், நாம அப்புறமா பேசலாமா?” என்று விட்டு அங்கிருந்து வேறிடத்துக்கு சென்ற மேக்னாவை ஆச்சரியத்துடன் பார்த்தாள் நித்யா
இந்த மேக்னா அவளுக்கு மிகவும் புதிது. நடந்தது எதுவும் தெரியாதது போல தன்னை மேக்னாவாக காட்டிக் கொள்கிறாளே தவிர, அவள் இன்னமும் மோகனாங்கி தான் என்று தோன்றியது.
(தொடரும்)
Latest Post: காற்றின் நிறம் கருப்பு - (Comment Thread) Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page