About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 9
மயங்கி இருந்த மோகனாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான் அகன். எழுந்து அமர்ந்தவள் அவன் வரைந்த ஓவியத்தை காட்டி, “என்ன இது? என்னை திருமணம் செய்துக் கொள்ள விருப்பமில்லைனு சொல்லிட்டு, எதற்காக என்னை இந்த கோலத்தில் வரைந்து ரசித்துக் கொண்டு இருக்கீங்க? இதுக்கு என்ன அர்த்தம்? என்னை எந்த உரிமையில் கட்டிபிடிச்சீங்க” என்றாள் தோரணையாக
வெளிப்படையாக மாட்டிக் கொண்டதால் அகனால் பதில் சொல்லமுடியவில்லை. கண்களை இறுக மூடியபடி இறுக்கமான நிலையில் நின்றிருந்தான்.
“எனக்கு பதில் சொல்லி தானே ஆகணும் அகன். என்னை பிடிக்கலைனு சொல்லிட்டு, ஏன் இந்த மாதிரி நடந்துக்கறீங்க?”
“ஒரு திருத்தம், உன்னை பிடிக்கலைனு நான் சொல்லவே இல்லை. கல்யாணம் வேண்டாம்னு தான் மறுத்தேன். உன் அழகையும் அறிவையும் பார்த்து எப்பேர்ப்பட்ட ஆண்மகனும் மயங்கிடுவான். நான் சராசரி மனுஷன். மயங்கலனா தான் ஆச்சரியம்.
அழகாக காட்சிகளை பார்த்தா வரையறது என்னோட பழக்கம். அதனால இன்னைக்கு பார்த்த காட்சியை அப்படியே வரைஞ்சிட்டேன். தினம் உன்னை கற்பனையில உருவகம் பண்ணி பேசுவேன், இன்னைக்கும் அப்படி தான் நினைச்சேன். நீ உண்மையாவே என் அறைக்கு வருவன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல, உன்கிட்ட நடந்துக்கிட்டது தப்பு தான் மன்னிச்சிடு மோகனா” என்றான் முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டு
“என்னை அவ்வளவு பிடிச்சிருந்தா என் அப்பா கேட்கும் போதே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்கலாமே, எதுக்கு வேண்டாம்னு சொன்னீங்க”
“நீ இந்த நாட்டோட இளவரசி, நான் சாதாரணமானவன். இது சரிவராது”
“ஏன் சரிவராது? எனக்கும் என் பெற்றோருக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. எங்களுக்குள்ள பாகுபாடு இல்லாதப்போ எந்த பிரச்சனையும் வராது. என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா கிடைக்க போகும் ராஜபோக வாழ்க்கைையை வேணாம்னு சொல்ற உங்க நேர்மையும் நாணயமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லா வகையிலும் நீங்க தான் எனக்கு பொருத்தமா இருப்பீங்க. நாம கல்யாணம் செஞ்சுக்கலாம் அகன்”
அகன் அசையாமல் அப்படியே நின்றிருந்தான்.
“சரி என்னை பிடிக்கலைனு சொல்லிடுங்க, நான் உங்களை வற்புறுத்தமாட்டேன்”
அப்போதும் அவனிடம் பதில் இல்லை. “சரி நான் கிளம்புகிறேன், நமக்கிடையே இத்தனை நெருக்கம் வந்தபின் இனி முன்பு போல சகஜமாக என்னால் உங்களிடம் பயிற்சி பெறமுடியாது. அதனால் இதுவே நாம் சந்திப்பது கடைசியாக இருக்கட்டும்” என்று விட்டு போக எத்தனித்தவளின் கரத்தை இறுக பற்றி போக விடாமல் நிறுத்தியிருந்தான்.
கேள்வியாக நிமிர்ந்து பார்த்தவளின் கண்களை அழுத்தமாக பார்த்தபடி, “மோகனா உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது” என்றவன் அவள் கையை பிடித்து தன்னை நோக்கி வேகமாக இழுத்தான். அதில் அவன் மேல் மோதி நின்றவளின் முகத்தை இருகரங்களால் பற்றி அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டான்.
மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல அவன் கண்களையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.
“மோகனா, எந்த பின்புலமும் இல்லாத சாதாரண ஆள் நான், என்னை கல்யாணம் செய்ய உனக்கு சம்மதமா? உன் மதிப்பு உனக்கு தெரியலையா? வெளியே பெரிய பெரிய பேரரசர்கள் எல்லாம் உனக்காக போட்டி போட்டு கொண்டு இருக்காங்க. அவங்கள்ல யாரையாச்சும் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒரு சாம்ராஜ்யத்துக்கே ராணி ஆகலாம். நல்லா யோசித்து முடிவு செய்”
“இதுல யோசிக்க எதுவும் இல்ல. உங்களோட வசீகரமான தோற்றம், வீரம், நேர்மை, புத்திசாலித்தனம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதுமட்டுமில்லாம எல்லா துறையிலும் உங்களுக்கு இருக்கும் அறிவு, அதனோடு இருக்கும் நிதானம், இதோ இந்த ஓவியக்கலைனு எனக்கு உங்களை மொத்தமா பிடிச்சிருக்கு அகன். நீங்க என் கூட இருந்தா தைரியமா எதையும் சாதிக்கலாம்னு தோணுது. உங்களுக்கு தான் என்னை பிடிக்கலைனு நினைக்கிறேன். அதுதான் யோசிக்கறீங்க”
“எனக்கு உன்னை பிடிக்கலையா? என்னோட பிடித்தம் எவ்வளவு உன்கிட்ட காட்டினா நீ தாங்கமாட்ட மோகி” அவள் கன்னத்தை மெல்ல இரு விரல்களால் நிமிண்டியபடி அவள் நெற்றியில் இதழ்பதித்தான்.
“எவ்வளவு பிடிக்கும்னு சொன்னாதானே தெரியும்?” என்று முனகினாள்.
இப்போது அவள் முகத்தை நிமிர்த்தி மலர் இதழில் அழுத்தமாக தன் இதழ்களை பொருத்தினான். ஒரு நாழிகை கடந்தும் அவன் தன் இதழ்களை அவளிடமிருந்து பிரிக்கவில்லை. கால்கள் தோய்ந்து கண்கள் சொருகி அவள் மயங்குவது தெரிந்தபின் தான் அதிர்ச்சியுடன் அவளிடமிருந்து தன் இதழ்களை பிரித்தான்.
தள்ளாடியபடி நின்றவளை அணைத்துக் கொண்டு பருக நீர் கொடுத்தான். அவள் சற்று நிதானத்திற்கு வந்ததும், “மோகனா முதலில் இங்கே இருந்து கிளம்பு. எதுவானாலும் நாளைக் காலை பேசிக் கொள்ளலாம்”
“ஏன்? இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறேனே”
“நமக்கு கந்தர்வ கல்யாணம் நடந்துவிடும், பரவாயில்லையா?” என்றவனை அதிர்ச்சியுடன் விழிவிரித்து பார்த்தாள்.
“உன்னை இளவரசியாக பார்க்கும் போதே என்னை கட்டுப்படுத்துவது கடினம். இப்போது நாம் நெருங்கி விட்டோம். இனி தனிமையில் அதுவும் இரவு நேரத்தில் சந்திப்பது கூடாது, நீ கிளம்பு” என்றான்.
அந்த நேரத்திலும் அவனுடைய நேர்மை அவளுக்கு பிடித்திருந்தது. புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.
****
மறுநாள் பயிற்சியின் போது அகன் மோகனாங்கியின் கண்களை கட்டிவிட்டு அவள் கையில் வில்லை கொடுத்தான். பின்னால் இருந்து அவள் கரத்தை பற்றி வில்லில் நாண் ஏற்ற வைத்து, அவள் காதருகே குனிந்து, “மோகனா சுற்றியிருக்கும் சத்தத்தை கவனி, உனக்கு எதிரே பக்கவாட்டில் என மூன்று பக்கமும் நம் வீரர்கள் உன்னை தாக்க தயாராக வில்லேந்தி இருக்கிறார்கள். அவர்களின் எந்த அசைவையும் நீ உன் செவிஉணர்வால் உணர வேண்டும்” என்றான்
அவளும் அவன் சொல்லிக் கொடுத்தபடி வில்லில் இருந்து அம்பை எய்தாள். “அருமை, அருமை” என்று கைத்தட்டி பாராட்டினான். அன்று இரவே அவள் இருந்த கோலத்தை ஓவியமாக வரைந்தான்.
மறுநாள் தனிமையில் அவளோடு வாள் பயிற்சி செய்யும் போது அவள் தவறாக வாளை சுழற்ற கரம் பற்றி அவளை தடுத்தான். அவன் தொடுகையில் மோகனாங்கி தேகம் சிலிர்க்க, இமைகள் படபடக்க அவனை பார்த்தாள்.
அகனும் தன் பிடியை விடாமல் அவள் கரத்தை இறுக பற்றி அவளை பார்த்துக் கொண்டிருந்தான். எப்போதும் அவள் எதாவது தவறு செய்யும் போது கையால் தடுப்பது உண்டு தான். ஆனால் இருவருக்குள்ளும் அன்று ஏற்பட்டு விட்ட நெருக்கத்தால், இப்போது இருவராலும் சின்ன தொடுகையை கூட சகஜமாக கடந்து செல்ல முடியவில்லை. இருவரும் காதல் பார்வை பார்த்துக் கொள்வதை அங்கிருந்த தோழியர்கள் அரசர் காதில் போட மறக்கவில்லை.
ஒவ்வொரு பயிற்சியின் போதும் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி கொண்டே போனது. அகன் வேண்டுமென்றோ, அல்லது தன்னியல்பாகவோ எப்போதும் மோகனாவை தன் கையணைப்பில் நிறுத்திக் கொண்டே அனைத்தையும் சொல்லி கொடுத்தான். அவன் கைகள் அவள் தோளையோ, இடையையோ சுற்றிக் கொண்டிருக்கும். அவன் பேசும் போது இதழ்கள் அவளின் காதுமடலை உரசிக் கொண்டு இருக்கும்.
இருவரும் ஒருவருடன் மற்றொருவர் இருக்கும் நேரத்தில் அவர்களையும் சுற்றத்தையும் மறந்து கனவு உலகில் இருப்பது போல இருந்தார்கள்.
ஒவ்வொரு நாள் இரவும் அன்று அவள் இருந்த கோலத்தை அகன் ஓவியமாக வரைவான். இது எல்லாம் அரசரின் காதுக்கு வரவே அவர் அவனை அழைத்து பேசினார்
“அகன், மோகனாவோடு திருமணம் வேண்டாம் என்று விட்டு அவளோடு இப்படி நெருங்கி பழகினால் எப்படி?” என்று நேரடியாக கேட்டு விட்டார்.
மோகனாங்கி அகன் என்ன சொல்ல போகிறான் என்று பதட்டத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்
“மன்னிக்கவும் அரசே. இளவரசி என்பதால் தான் முதலில் தயங்கினேன். இப்போது என்னால் என் மனதை அடக்க முடியவில்லை. நான் மோகனாவை மனதார காதலிக்கிறேன். அவளை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்”
மகளின் மொட்டு போன்ற சின்ன முகம், மலர்ந்த தாமரை போல புன்னகையில் விரிவதை கண்ட அரசர் “பிறகு என்ன? இப்போதே அரண்மனை ஜோசியரை அழைத்து திருமணத்திற்கு நாள் குறிக்க சொல்கிறேன்” என்றார் மகிழ்ச்சியுடன்
“அரசே, அதற்கு முன் நான் என் சொந்த ஊருக்கு சென்று, என் பெற்றோரிடம் பேசி அனுமதி வாங்க வேண்டும். அதற்கு என்னை ஏழுமலை பிரதேசத்திற்கு சென்று வர அனுமதியுங்கள்”
“உனக்கு பெற்றோர்கள் இருக்கிறார்களா? இதுவரை என்னிடம் அதைப்பற்றி பேசியது இல்லையே” என்றார் அரசர் அதிர்ச்சியுடன்
“அரசே, என் பெற்றோரை பற்றி பேச அவசியம் ஏற்படாததால் அவர்களை பற்றி சொல்லவில்லை. எனக்கு பெற்றோர்களும், இரண்டு அண்ணன்களும் உண்டு. பெரிய அண்ணன் இறந்து விட்டான். மற்றவனுக்கும் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. என் திருமணத்தை பற்றி அவர்களிடம் பேசி, அவர்களையும் கூட்டிக் கொண்டு வருகிறேன்”
“அகனின் பெற்றோர் நம் மகளை திருமணம் செய்ய ஒத்துக் கொள்ளவில்லை என்றால்?” என்று நிலவழகி கேட்க, மோகனாவும் கவலையுடன் அகனை பார்த்தாள்.
“அதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களை சம்மதிக்க வைப்பது என்னுடைய பொறுப்பு. நான் அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறேன்” என்றான் திடமாக
“சரி நாளையே சென்று அவர்களை அழைத்துக் கொண்டு வா” என்றார் அரசர்
****
அன்று இரவு, அகன் மோகனாவை தனிமையில் நந்தவனத்தின் நீரோடையருகே சந்திக்க விரும்புவதாக அவள் தோழிகளிடம் செய்தி அனுப்பினான்.
மோகனாவும் அகனை பிரிய வேண்டியிருக்கிறதே என்ற கவலையில் இருந்ததால் உடனே தனியாக அந்தபுரத்தில் இருந்த நந்தவனத்திற்கு சென்றாள்.
அங்கே குளத்தில் கால்களை விட்டுக் கொண்டு அகன் அமர்ந்திருந்தான். குளத்தின் நீரில் தெரிந்த வெண்ணிலவையே வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.
மெல்லிய காலடிகளோடு அவன் பின்னால் வந்து நின்றவள் அவன் கண்களை தன் இருகைகளால் பொத்தினாள். வந்திருப்பது மோகனாங்கி என்று தெரிந்தாலும் அகன் குறும்புடன், “யாரது?” என்று கேட்டுக் கொண்டே அவள் கரத்தை இறுக பற்றி இழுத்து தன் மடியில் சாய்த்துக் கொண்டான்.
அதிர்ந்து விழித்தவளின் முகம் நோக்கி அவன் குனிய, அவள் வெட்கத்தில் தன் இருகைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். “மோகனா, நான் சென்று வர எவ்வளவு நாள் ஆகுமோ? அதுவரை உன்னை பார்க்காமல் எப்படி இருக்க போகிறேனா தெரியவில்லை” என்றான் பெருமூச்சுடன்
இப்போது மோகனா கைகளை விலக்கி அவனை கவலையுடன் பார்க்க, அவனோ அவள் முகத்தையும் குளத்தில் தெரிந்த வெண்ணிலவையும் மாறி மாறி பார்த்தான்.
“என்ன பார்க்கறீங்க?”
“இந்த நிலவை விட, என் மோகனா தான் பேரழகி. இதுவரை எனக்கு மிக அருகே இருந்த இந்த நிலவின் ஒளி, இப்போது நீ என் மடியில் இருப்பதை பார்த்து, உன் அழகை கண்ட தாழ்வு மனப்பான்மையில் வெட்கி கொஞ்சம் கொஞ்சமாக அந்தபக்கம் நகர்கிறது. அதை தான் பார்த்துக் கொண்டிருந்தேன்” என்றான்.
“அப்பா, நீங்கள் ஒவியர் என்று தெரியும், சீக்கிரம் கவிஞரும் ஆகி விடுவீர்கள் போலிருக்கிறதே” என்று கலகலவென்று சிரித்தாள்.
மடியில் படுத்துக் கொண்டு மலர்ந்து சிரித்தவளின் மோகனத்தில் மயங்கி அவள் இதழ்நோக்கி குனிந்தான். அதை புரிந்து கொண்ட மோகனா, எழுந்துக் கொள்ள முயற்சிக்க, அவன் அவளை இறுக பிடித்துக் கொள்ள, இந்த போராட்டத்தில் இருவரும் சேர்ந்து குளத்தில் விழுந்தனர்.
நீரில் முழுவதும் நனைந்ததால் மோகனாவின் அழகை வஞ்சனையின்றி ரசித்து பார்த்தான் அகன். அன்று இதே சூழலில் கண்களை மூடிக்கொண்டவன், இப்போது இமைக்கவும் மறந்து அவளை அழகை நிதானமாக ரசித்து பார்த்தான். இருவருக்கும் இடையே மோகத்தீ பற்றிக் கொள்ள, அகன் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான். அவன் கரங்கள் இப்போது தடையின்றி அவள் மேனியை வருட, அது தந்த மயக்கத்தில் அவன் கைகளில் சரிந்தாள்.
அவளை அப்படியே தூக்கிக் கொண்டு சென்று புல்தரையில் கிடத்தினான். கன்னம் தட்டி அவளை தன்னை பார்க்க செய்தான். மெல்ல கண்திறந்தவள் அவனுடைய ஊடுருவும் பார்வையால் வெட்கத்தில் முகம் சிவந்து தலையை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டாள். “என்னை உங்களுக்கு பிடிக்குமா என்ன?” என்று வம்பிழுத்தாள்
“மோகி, உன் மேலான என் விருப்பத்தை இதயத்தை பிளந்து என்னால் காண்பிக்க முடியாது. ஆனால் முத்தத்தால் என் அன்பின் ஆழத்தை உணரவைக்க முடியும்” என்றபடி அவள் முகம் திருப்பி
“உன் மீதான என் பிரபஞ்ச அளவு காதலில் இது ஒரு அணு அளவு தான், மிச்சத்தை நம் திருமணத்திற்கு பிறகு காண்பிக்கிறேன்” என்றபடி அவள் இதழில் தன் இதழை பொருத்தி ஆழமாகவும் அழுத்தமாகவும் முத்தமிட்டான்.
முத்தத்தால் இணைவது இருவரின் இதழ்கள் மட்டுமல்ல இதயமும் தான். உயிரோடு உயிர் கலந்துவிட்ட நேசம் இருவருக்கும் தோன்றியது. மோகனாவும் அவனோடு இணைந்து கொள்ள தொடங்கி விட்ட முத்தத்தை நிறுத்த முடியாமல் திணறினான்.
மூச்சுக்காக அவளை விட்டு விலகியவன், அவள் இதழ்களுக்கு கீழே இருந்த மச்சத்தை பார்த்து அங்கே சின்னதாக ஒரு முத்தமிட்டான்.
பின்பு அவள் கழுத்துவளைவில் தெரிந்த அழகான மச்சத்தின் மீது இதழ்பதித்தான். சில கணங்கள் அங்கேயே முகம் புதைத்திருந்தவன், ஏதோ நினைவு வந்தவனாக அவள் மச்சமிருக்கும் இடங்களை எல்லாம் மிச்சமில்லாமல் முத்தமிட தொடங்கி விட்டான். மோகனாவிடம் எந்த எதிர்ப்புமில்லாமல் செல்ல சிணுங்கலே வரவும், மெல்ல மெல்ல முன்னேறி அவளை மொத்தமாக தன் ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தான்.
ஆம், மோகனா இப்போது அகனின் கைப்பாவையாக மாறியிருந்தாள். இருவரும் அந்த வெட்டவெளியில் என்ன செய்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞ்னையே இல்லாமல் ஈருடல் ஓருயிராக கலந்து போயினர். அவர்களின் கந்தவர்வ மணத்திற்கு அந்த குளமும் வெண்ணிலவுமே சாட்சி.
மறுநாள் அகன், மோகனாவிடம் ஆயிரம் தடவை பத்திரம் சொல்லிவிட்டு, முடிந்தவரை சீக்கிரம் வந்து விடுவதாக கூறினான். அவனை பிரிய மனமில்லாமல் கலங்கிய விழிகளுடன் நின்றிருந்தவளை பார்க்க முடியாமல்,
“மோகி நீ இப்படி கவலையா இருந்தா என்னால போக முடியாது. சிரித்த முகத்தோடு அனுப்பி வை, நான் சீக்கிரம் வந்து விடுவேன். என் பெற்றோர் சம்மதிக்க வில்லை என்றாலும் நீ தான் முக்கியம் என்று வந்து விடுவேன். என்னை நம்பு”
“உங்களை நம்பாமல் யாரை நம்ப போகிறேன்? பிரிய வேண்டுமே என்று கவலையாக இருக்கிறது” என்றாள் மெல்லிய குரலில்
“என் நினைவு வந்தால் நேற்றைய பெளர்ணமியில் குளத்தருகே நாம் கூடி களித்த இடத்தில் என்னை நினைத்துக் கொண்டு இரு. அடுத்துவரும் பெளர்ணமி அன்று அடுத்த கூடலுக்கு வந்து விடுவேன்” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.
வெட்க சிவப்பில் முகம் மலர்ச்சியுடன் அழகாக புன்னகைத்து அகனை வழியனுப்பி வைத்தாள்.
அகன் சொல்லி சென்றபடி அடுத்த பெளர்ணமி அன்று வந்து விடுவானா? அப்படியே அவன் வந்தாலும் வழியனுப்பி வைத்த அதே முக மலர்ச்சியோடு மோகனாங்கி அவனை வரவேற்பாளா? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்
(தொடரும்)
Latest Post: 21. எழுந்திடும் காதல் காவியம் Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page