About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 4
அகத்தியனும் மேக்னாவும் காந்த விழி பார்வையில் சிக்குண்டிருக்க, நித்யா செய்வதறியாமல் திலீப்பை நோக்கி சென்றாள். “மிஸ்டர் திலீப், அந்த ஓவியங்கள் எல்லாம் உங்க பாஸோட சொந்த கற்பனை, அது வரைஞ்சு அஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சுனு நீங்க ஏன் முன்னாடியே எங்க கிட்ட சொல்லல? சொல்லியிருந்தா நாங்க இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டிய அவசியம் இல்ல தானே?” என்றாள்.
“சாரி மிஸ் நித்யா, என்னோட பாஸ் உங்களை அழைச்சிட்டு வர மட்டும் தான் ஆர்டர் போட்டாரு, மத்த விஷயங்கள் எதுவும் சொல்ல சொல்லி இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கல” என்றான் திலீப்
“நல்ல பாஸ், நல்ல ஸ்டாஃப்” என்று அவனை பார்த்து நக்கலடித்தவள், “சரி சரி நாங்க கிளம்ப ஏற்பாடு பண்ணுங்க”
“அதை நீங்க என் பாஸ்கிட்ட தான் கேக்கணும்” என்றான் பவ்யமாக
அவனை நன்றாக முறைத்து விட்டு அகத்தியனுக்கு எதிரே போய் நின்றாள் நித்யா. தன் பார்வையில் இருந்து மேக்னாவின் உருவம் மறைக்கப்பட்டதால் எழுந்த சினத்தோடு நித்யாவை பார்த்து முறைத்தான் அகத்தியன்.
‘இவன் சைட் அடிக்கறத நாம மறைச்சிட்டோம்னு எப்படி முறைக்கிறான் பாரு’ என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டே, “அதான் ஓவியம் உங்களோட சொந்த கற்பனைனு எல்லா எவிடன்ஸும் வச்சிருக்கீங்களே. இதுக்கு மேல இங்கிருந்து நாங்க என்ன செய்ய போறோம்? நாங்க கிளம்பறோம்” என்றவள் மேக்னாவை பார்த்து “மேகி கிளம்பு போகலாம்” என்றாள்.
மேக்னாவும் எழுந்து கொண்டு, “ஓகே மிஸ்டர் அகத்தியன், உங்களை தொந்தரவு பண்ணதுக்கு மன்னிக்கணும், நாங்க கிளம்பறோம்” என்றாள்.
“மோகனா, ஏதோ அனிமேஷன் படம் எடுக்கணும் சொன்னீயே?” என்றான் அகத்தியன்
“நீங்க தான் அந்த கதை, உங்களோட கற்பனைனு சொல்லீட்டிங்களே, இப்போ நாங்க அந்த கதையை எப்படி படமா எடுக்க முடியும்?” என்றாள் நித்யா.
அகத்தியன் அவளை பார்க்காமல் மேக்னாவையே ஆழமாக பார்த்தபடி, “மோகனா, உனக்காக அனிமேஷன் படம் எடுக்க நான் உதவி செய்யறேன். அதை உன் கதையாவே வெளியிடலாம், எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல. ஆனா படத்தை இங்கே தான் நான் சொல்ற லொகேஷன்ல எடுக்கணும். அது முடியறவரைக்கும் நீ இங்கே தான் இருக்கணும்” என்றான்.
“என்ன சொல்றீங்க அகத்தியன்? என்னோட கதைக்கு நீங்க படங்களை வரைஞ்சு தரேன்னு சொல்றீங்களா?” என்றாள் மேக்னா ஆர்வம் மின்ன
“யெஸ், அதுமட்டுமில்ல, எல்லா கேரக்டரோட டிசைன், இடத்தோட டிசைன் எல்லாம் வரைஞ்சு தரேன். டெக்னிகலா உனக்கு என்னென்ன ஹெல்ப் வேணுமோ எல்லாத்தையும் நானே செஞ்சு தரேன், என்ன சொல்ற?”
“வாவ் சூப்பர், தேங்க்ஸ் எ லாட் போகன்” என்று கூவினாள்.
“என்ன சொல்லி கூப்பிட்ட மோகி” என்றான் அவளையே ஆழ்ந்து பார்த்தபடி
“உங்க பென் நேம் போகன் தானே, அதான் அந்த பேரை சொல்லி கூப்பிட்டேன். நீங்க மட்டும் மேக்னாங்கிற என்னோட பேரை மோகனானு கூப்பிடறீங்க, இப்போ என்னடான்னா மோகினு கூப்பிடறீங்க” என்றாள் உதட்டை சுழித்து
“நான் உன்னை எதுவும் சொல்லலையே, தாராளமா போகன்னு கூப்பிடு, இன்பாக்ட் நீ என்னை அப்படி கூப்பிடறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான் அவள் உதட்டையே ரசனையோடு பார்த்தபடி
“ஓகே போகன், நான் கல்கத்தா போய் அப்பா அம்மாகிட்ட விஷயத்தை சொல்லி, ஒரு மாசத்துக்கு இங்கே தங்க பர்மிஷன் வாங்கிட்டு வரேன். இப்போ கிளம்பறோம்” என்றாள் மேக்னா புன்னகையோடு
உடனே அகத்தியன் முகம் மாறியது. “அதுக்கு ஏன் போகணும்? இங்கே இருந்தே போன் பண்ணி கேளு”
“இல்ல போகன், அம்மாகிட்ட ஒரு வாரம் தான் டைம் சொல்லிட்டு வந்திருக்கேன். நான் சீக்கிரமா போனா தான் மறுபடியும் தமிழ்நாட்டுக்கு வர விடுவாங்க. அப்பாகிட்ட சொல்லி தான் அம்மாவை கன்வின்ஸ் பண்ணனும், அன்ட் படம் எடுக்க பணம் செலவாகும் இல்ல. அதையும் ஏற்பாடு செஞ்சிட்டு நான் அடுத்த மாசம் வரேன்” என்றாள்
“நோ, நீ எந்த பணமும் செலவு செய்ய வேண்டியது இல்ல. இந்த மாசம் தான் நான் ஃப்ரீயா இருப்பேன். இப்பவே ஸ்டார்ட் பண்றதா இருந்தா உனக்கு நான் உதவி செய்வேன். இல்லனா சாரி” என்றான் இறுக்கமான முகத்துடன்.
மேக்னா யோசிக்கவும், நித்யா அவளருகில் வந்து “மேகி, உடனே எந்த முடிவும் எடுக்காத. நாம ஊருக்கு போய் இந்தாள் எப்படினு விசாரிச்சிட்டு மறுபடியும் வருவோம். யார் என்னனு தெரியாம இங்கே தங்கறது நல்லது இல்ல” என்றாள்.
அவள் பேசுவது அகத்தியன் காதுகளில் விழ, அவன் முகம் இருண்டது. திலீப்பை கண்களால் அருகே வரும்படி அழைத்தான். அவன் அருகே சென்றதும் அவன் காதருகே, “அவங்க கிளம்பணும்னு முடிவெடுத்துட்டா, வேற வழியில்ல, அவங்களை கெஸ்ட் ரூம்ல போட்டு அடைச்சி வைக்கணும். சோ எதுக்கும் ரெடியா இரு” என்றபடி தன் குர்தியின் முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டான்.
திலீப் அதிர்ச்சியுடன் தன்னுடைய பாஸை பார்க்க, “என்னை எதுக்கு பாக்குற, அந்த நித்யா மேல ஒரு கண் இருக்கட்டும், நீ அவள பிடிச்சுக்கோ, நான் மோகனாவை பிடிச்சுக்குறேன்” என்றதும் திலீப்பின் தலை நாலா பக்கமும் தானாக அசைந்தது.
இருவரும் தயாராக நின்றிருக்க, மேக்னா அகத்தியனின் அருகே வந்தாள்.
“போகன், நித்யா என்னவோ சொல்றா, ஆனா எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. அன்ட் ஊருக்கு போனா அம்மா படம் எடுக்கறதுக்கு எல்லாம் அனுப்புவாங்களானு சந்தேகம் தான். சோ நான் ஒரேடியா இந்த வேலையை முடிச்சிட்டு போகலாம்னு நினைக்கிறேன்” என்றதும் தான் அகத்தியன் நிம்மதி பெருமூச்சு விட்டபடி திலீப்பை அர்த்தத்துடன் பார்த்தான்.
“பட் ஒரு கண்டிஷன்” என்றாள் மேக்னா
“நீ இங்கே தங்கறதா இருந்தா உன்னோட எந்த கண்டிஷனும் எனக்கு ஓகே தான், என்னனு சொல்லு” என்றான்
“எப்படியும் நம்ம இரண்டு பேரோட கற்பனையும் கதையும் ஒரே போல இருக்கு. இதுல நீங்க தான் எல்லா டிசைனும் பண்ண போறீங்க. படத்தோட உரிமை நம்ம இரண்டு பேர் பேர்லயே இருக்கட்டும். அப்போ தான் சரியா இருக்கும். என்ன சொல்றீங்க?”
“தாராளமா, அப்படியே பண்ணிடலாம் மோகி” என்றான் மந்தகாச புன்னகையோடு
நித்யா ஏதோ மறுப்பாக சொல்ல வரவும், அவளை எரித்து விடுபவன் போல முறைத்தான். அந்த முறைப்பை பார்த்ததும் அப்படியே அமைதியாகி போனாள் நித்யா.
“திலீப், இவங்க இரண்டு பேரும் தங்கறதுக்கு ஏற்பாடு பண்ணு, அப்படியே சாப்பாடு ரெடியானு பாரு” என்று திலீப்பை விரட்டினான்.
திலீப் திரும்ப வந்து அவர்களை விருந்தினர் அறைக்கு அழைத்துச் செல்ல, மேக்னாவும் நித்யாவும் தங்கள் உடைமைகளை அங்கேயே வைத்து விட்டு வந்தனர். திலீப் அவர்களை சாப்பிட அழைக்க, சாப்பாட்டு மேஜைக்கு வந்தனர்.
அகத்தியன் அங்கே இல்லாததை கண்டு, “திலீப் உங்க பாஸ் எங்கே?” என்றாள்.
“அவர் மேலே ஏதோ வரைஞ்சிட்டு இருக்கார் மேம். நீங்க சாப்பிடுங்க, நான் போய் கூப்பிடுறேன்” என்றான் திலீப்
“நோ, நான் அவர் வரையறதை நேரடியா பாக்கணும், சோ நான் போறேன். நீங்களும் நித்யாவும் சாப்பிடுங்க” என்று விட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் ஹாலின் நடுவே இருந்த மாடிப்படியை நோக்கி ஓடினாள்.
திலீப் அவசரமாக தன் பாஸிற்கு போனில் செய்தியை அனுப்பி விட்டு, நித்யாவை பார்த்து சிநேகமாக சிரித்தான். அவள் அவனை கண்டுக் கொள்ளாமல் அங்கிருந்த விதவிதமான உணவுகளை ருசித்து கொண்டிருந்தாள்.
மேக்னா வருவதை உணர்ந்தும் உணராதது போல அகத்தியன் அன்று வரைந்து பாதியில் விட்ட ஓவியத்தில் வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தான். எதையோ வரைந்து கொண்டிருக்கிறான் என்று வந்த மேக்னாவிற்கு அவன் தன்னை தான் வரைந்து கொண்டிருக்கிறான் என்று பார்த்த உடன் தெரிந்து போனது. அவள் இன்று உடுத்தியிருக்கும் உடையின் நிறத்தை தான் தீட்டிக் கொண்டிருந்தான்.
கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்த அந்த ஓவியம் அச்சு அசலாக அவள் உருவத்திலேயே இருக்க, அகத்தியனின் திறமையை கண்டு அகமகிழ்ந்து போனாள். சின்ன பெண்ணின் குதுகூலத்தோடு, “வாவ் போகன், டிராயிங் அப்படியே என்னை போலவே இருக்கு. சூப்பர்” என்றபடி அவன் அருகில் வந்தாள்.
“அப்படியா, ஆனா இதுல சின்ன சின்ன விஷயம் மிஸ்ஸிங், அதை உன்னோட அனுமதியில்லாம எப்படி பினிஷ் பண்றதுனு தான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்றான் ஓவியத்திலிருந்து பார்வையை அகற்றாமல்
“என்ன மிஸ்ஸிங், எல்லாமே பர்பெக்டா தானே இருக்கு?” என்றாள் ஓவியத்தை ஆராய்ச்சியாக பார்த்தபடி
அவளை திரும்பி அழுத்தமாக பார்த்து, “என்ன மிஸ்ஸிங்னு சொல்லட்டுமா, இல்லை ஒவியத்துல வரைஞ்சு காமிக்கட்டுமா?” என்றான்.
“சரி வரையுங்க பார்க்கலாம்?” என்றாள்
அவன் ஒரு பென்சிலை எடுத்து அதன் கூர்மையை கருமை நிற சாயத்தில் தோய்த்தான். அதை எடுத்து அவள் உதட்டோரம் சின்னதாக புள்ளி வைத்தான். மேக்னாவின் விரல்கள் தன்னிச்சையாக தன் உதட்டோரத்தில் இருந்த மச்சத்தை தடவி பார்த்தது.
இப்போது அவன் விரல்கள் வலது பக்க காதோரத்தில் சிறு புள்ளியை வைத்துவிட்டு, கழுத்தில் சற்று பெரியதான புள்ளியாக வைக்க, மேக்னாவின் விரல்களும் அவள் கழுத்தில் இருந்த பெரிய மச்சத்தை தான் வருடிக் கொண்டிருந்தது. இப்போது அகத்தியனின் கைகள் அவள் ஒவியத்தின் மார்புக்கு நேரே சற்று தயங்கி நின்றது. மேக்னாவிற்கு இதுவரை இருந்த சகஜ நிலை மாறி போனது. ஏனென்றால் அவளுடைய மச்சத்தை அவன் அவளுடன் பேசும்போது பார்த்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் அமைதியாக பார்த்திருந்தாள்.
இப்போது அவன் கை, அவள் ஓவியத்தின் மார்புக்கு நேரே தயங்கி நிற்கவும், நெஞ்சுகூடு பதட்டத்தில் படப்படக்க, “போகன் என்ன பண்றீங்க?” என்று மெல்லிய குரலில் அதட்டினாள்.
அகத்தியனோ, வலதுபக்கத்தில் சற்றே இறக்கமான இடத்தில் கறுப்பு புள்ளியை வைத்து விட்டு, வெண்ணிற மேலாடையை அதன் மேல் லேசாக வரைந்தான். அந்த கரும்புள்ளி அந்த மேலாடைக்குள்ளே பளிச்சென்று தெரிந்தது. மேக்னா தன்னிச்சையாக தன்னை குனிந்து பார்த்தாள். ஒவியத்தில் இருந்ததை போல தன் மேனியும் இருப்பதை பார்த்தவள் அதிர்ச்சியோடு நிமிர்ந்து அகத்தியனை பார்க்க, இப்போது அவனின் கைகள் ஓவியத்தின் இடையை நோக்கி செல்ல, மேக்னா பதட்டத்தோடு அவன் கைகளை பற்றிக் கொண்டாள்.
“என்னாச்சு மோகனா” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி
“என்ன பண்றீங்க?” என்றாள் அவனை முறைத்து பார்த்து
“ஓவியத்துக்கு பினிஷிங் டச் கொடுக்கறேன்”
“நல்லா கொடுத்தீங்க பினிஷிங் டச்? என்னை பார்த்து அப்படியே வரையறீங்க ஓகே. பட் என் உடம்புல எங்கெங்கே மச்சம் இருக்குனு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் அவனை சந்தேகமாக பார்த்து
“என்ன சொல்ற மோகனா, நான் புள்ளி வச்சி இடத்துல எல்லாம் நிஜமாவே உனக்கு மச்சம் இருக்கா?” என்றான் நம்பாதவன் போல
“ஆமா இருக்கு” என்றாள்.
“நான் நம்ப மாட்டேன், எங்கே காட்டு பாக்கலாம்?” என்றபடி அவள் நாடியை பற்றி பக்கவாட்டாக திருப்பி அவள் காதோரத்திலும் கழுத்திலும் இருந்த மச்சத்தை தடவி பார்த்தான்.
அவன் அத்தனை உரிமையோடு தன்னை தொடுவான் என்று எதிர்பார்க்காததால் மேக்னா அதிர்ச்சியோடு அவனை பார்க்க, அவனோ கண்டுகொள்ளாமல் அவள் உதட்டை பெருவிரலால் நகர்த்தி, அங்கிருந்த மச்சத்தை பார்த்து ஊர்ஜிதம் செய்து, கொஞ்சமும் தாமதிக்காமல் கைகளை அவளின் கழுத்துக்கு கீழே கொண்டு வர, சட்டென்று சுதாரித்தவள் அவன் கரத்தை தன் இருகரங்களால் அழுந்த பற்றிக் கொண்டு, “போகன் என்ன பண்றீங்க?” என்றாள் அதிர்ச்சியாக அவனை பார்த்து.
அகத்தியனோ அவள் கண்களை ஊடுருவும் பார்வையால் துளைத்தெடுத்தான். மேக்னாவின் கரங்களை தன் ஒரு கையால் இறுகப்பற்றி தன்னை நோக்கி வேகமாக இழுத்தான். எதிர்பாராமல் அவன் இழுத்ததில் அவன் மேலேயே மலர்சரமாக சாய்ந்தாள். அவள் இடையை ஒரு கையால் அழுந்த பற்றியவன், ஒரு விரலால் அவள் மச்சம் இருக்கும் இடத்தை தொட்டு உணர்த்தினான்.
ஆச்சரியத்தோடு இதழ்பிரித்து ஆவென்று பார்த்தவளை பார்த்து, இருபுருவங்களையும் உயர்த்தி காட்டி, அவளை மேலும் தன்னோடு இறுக்கினான். மேக்னா ஏதோ கனவு உலகத்தில் இருப்பவள் போல அவன் கையணைப்பில் மயங்கி நின்றாள்.
அவள் கழுத்துவளைவில் முகம் புதைத்து “என் மோகி” என்றபடி அங்கிருந்த மச்சத்தில் இதழ்பதித்தான். மேக்னாவின் உடலெங்கும் ஒருவித மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு. ஏற்கனவே இதே அனுபவம்? எங்கே? எங்கே? என்று யோசித்தவளுக்கு தன் கதையில் வந்த காட்சியே இப்போது நடந்துக் கொண்டிருப்பது புரிய, இது எப்படி சாத்தியம்? எது நிஜம்? எது கற்பனை என்று புரியாமல் மனமும் மூளையும் குழம்பியது. அதற்கு மேல் யோசிக்க முடியாமல் அவன் கைகளில் அப்படியே மயங்கி சரிந்தாள்.
மேக்னாவை தன் இருகைகளில் ஏந்திக் கொண்டு மாடிப்படிகளில் இறங்கி வந்தான் அகத்தியன். சாப்பிட்டு கொண்டிருந்த நித்யாவுக்கும் திலீப்பிற்கும் அந்த காட்சியை பார்த்து புரை ஏறியது. நித்யா அவசரமாக எழுந்து “என்னாச்சு மிஸ்டர் அகத்தியன்?” என்றபடி ஓடி வந்தாள்.
“ஒண்ணுமில்ல, பேசிட்டே இருந்து திடீர்னு மயங்கிட்டாங்க, ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும். நான் உங்க ரூம்ல படுக்க வைக்கிறேன். நீங்க சாப்பிடுங்க” என்று விட்டு அவர்களுக்கென்று கொடுத்த அறையில் மேக்னாவை படுக்கவைத்து விட்டு அவளையே ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தான்.
“இன்னும் நீ மாறல மோகனா, என்னோட தொடுகையை தாங்காம இப்பவும் மயங்கிட்ட” என்று அவள் கன்னத்தில் தட்டிவிட்டு சென்றான்.
*****
மேக்னா கண்விழிக்கும் போது நித்யா கன்னத்தில் கைவைத்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன நித்தி?” என்றபடி எழுந்தாள் மேக்னா
“அதையே தான் நானும் கேக்கறேன், என்னாச்சு உனக்கு?” என்றாள் நித்யா
“எனக்கு என்னாச்சு?” என்றாள் புரியாமல்
“சாப்படறதுக்கு அந்த அகத்தியன கூட்டிட்டு வரேன்னு மாடிக்கு போனே. போனவ ரொம்ப நேரமா கீழே வரவே இல்ல. அப்புறமா பார்த்தா அந்த அகத்தியனே உன்னை இரண்டு கையில தூக்கிட்டு, ‘கையில் ஏந்திய கனவா நீ? கைகால் முளைத்தா காற்றா நீ?’ னு பாடாத குறையா உன்னை தூக்கிட்டு வந்து உரிமையா கட்டில்ல படுக்க வச்சிட்டு போறாரு. என்ன நடக்குது இங்கே? சாப்பிடறதுக்கு கூப்பிட போகும் போது நல்லா தானே இருந்தே? எப்படி மயக்கம் போட்டு விழுந்த?” என்றாள் நித்யா ஆராய்ச்சியாக தோழியை பார்த்தபடி
மேக்னா சற்று நேரம் யோசிக்க, மாடியில் அகத்தியன் அவளிடம் நடந்துக் கொண்டது நினைவில் வர, முகம் தானாக சிவந்தது. “அது அது வந்து நித்தி. நான் போனப்போ போகன் என்னோட உருவத்தை தான் வரைஞ்சிட்டு இருந்தாரு”
“அதப்பாத்து மயங்கிட்டியா?”
“இல்லடி, அது எப்படி உன்கிட்ட சொல்றதுனு தெரியல, என் உடம்புல இருக்கிற மச்சத்தை கூட சரியா அந்த ஓவியத்துல வரைஞ்சாரு நித்தி” என்றாள் மெல்லிய குரலில்
“சும்மாவா விட்ட அந்த ஆள, கன்னத்தில ஓங்கி ஒரு அறையாச்சும் கொடுத்த தானே?” என்றாள் நித்தி கோபத்தோடு
மேக்னா திருதிருவென்று விழிக்கவும், “என்ன மேகி, நீ முழிக்கறத பார்த்தா எதுவும் சரியில்லையே”
“நித்தி இப்போ யோசிக்கும் போது, நான் ஏன் அவரை அடிக்காம விட்டேன்னு தோணுது. ஆனா அகத்தியன் கிட்ட இருக்கும் போது என்னையே மறந்துடற போல ஒரு உணர்வு. ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி அவர் கையில நான் அடங்கி போயிடுறேன்னு தோணுது” என்றாள் மேக்னா யோசனையோடு
“இப்பவாச்சும் உனக்கு புரியுதா? வந்ததுல இருந்தே எனக்கும் அதே சந்தேகம் தான். அகத்தியன் உன்கிட்ட கொஞ்சம் அதிகப்படியாவே நடந்துக்கிறாரு. அது மாதிரி யாராச்சும் உன்கிட்ட நடந்தா நீ யோசிக்காம அவங்க கன்னத்துல அறைஞ்சிடுவேன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா அகத்தியன் கிட்ட மட்டும் நீ மயங்கி நிக்கிற போல எனக்கு தோணுது” என்றாள்
“அப்படியா சொல்றே?”
“ஆமா மேகி, அவர் உன்னை பார்க்கிற பார்வையே வித்தியாசமா இருக்கு. நோக்கு வர்மம் தெரிஞ்ச ஆளா இருப்பாரோனு நான் நினைக்கிறேன். நீ எதுக்கும் அந்த ஆள் கிட்ட கவனமா இரு”
“சரி நித்தி, நெக்ஸ்ட் டைம் கவனமா இருக்கேன். முக்கியமா அவரோட கண்ணை பார்த்து பேசறதை அவாய்ட் பண்றேன்” என்றாள் மேக்னா உறுதியான குரலில்.
அதை சிசிடிவியின் தொடுதிரையில் ஒளியுடன் ஒலியையும் சேர்த்தே பார்த்துக் கொண்டிருந்த அகத்தியனின் முகம் இறுகி போனது. அவன் ஆத்திரத்தோடு நித்யாவை முறைத்துக் கொண்டிருந்தான்.
***
மாலை திலீப் வந்து இருவரையும் அழைத்தான். “பாஸ் உங்களை லொகேஷன் பார்க்க வர்றீங்களானு கேக்க சொன்னாரு” என்றான்
இரு தோழிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “ஓகே வர்றோம் நீங்க போங்க” என்றனர்.
அகத்தியன் திலீப்புடன் பேசிக் கொண்டிருக்கும் போது இருவரும் அவர்கள் எதிரே வந்து நின்றனர். இருவரையும் ஏற இறங்க பார்த்து விட்டு அகத்தியன் ஏளனமாக ஒரு புன்னகையை சிந்தினான்.
“என்ன சிரிக்கறீங்க மிஸ்டர் போகன்?” என்றாள் மேக்னா
“பின்ன என்ன? இப்பவே இருட்டற மாதிரி இருக்கு, போறது லொகேஷன் பார்க்க, நீங்க இரண்டு பேரும் என்னடான்னா கூலிங் கிளாஸ் போட்டுட்டு வந்திருக்கீங்க?” என்றான். அவனுக்கு தெரியும் அவன் பார்வையிலிருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடு என்று.
“அது கண்ணுல தூசி விழக்கூடாதுனு தான் போட்டிருக்கோம்” என்றாள் மேக்னா
“சரி உங்க இஷ்டம் கிளம்புங்க” என்று தோள்களை குலுக்கிவிட்டு வாசலில் இருந்த காரில் இருவரையும் பின்பக்கம் அமரச் சொல்லிவிட்டு, தானே டிரைவர் சீட்டில் அமர்ந்தான். திலீப் தயங்கி நிற்பதை பார்த்து, “திலீப் நீ உட்கார்ந்துட்டு வா, நானே ஓட்றேன்” என்றான்.
“பாஸ் நீங்க உட்கார இடத்துல நான் எப்படி?” என்று தயங்கினான்
“சொன்னா கேளு, இது தான் எனக்கு வசதி” என்றான் அகத்தியன் முணுமுணுப்புடன்.
“ஓகே பாஸ்” என்று விட்டு திலீப் முன்சீட்டில் அமர்ந்துக் கொள்ள, அகத்தியன் பின்னால் அமர்ந்திருந்த மேக்னாவை அழுத்தமாக பார்த்துக் கொண்டே காரை கிளப்பினான். காரில் முதலாளி அமர்ந்திருப்பதை பார்த்ததும் செக்யூரிட்டி சல்யூட் அடித்து கேட்டை திறந்து விட, கார் காற்றை கிழித்துக் கொண்டு வேகமாக சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றது.
தென்னை மரங்கள் சூழ்ந்திருந்த தேங்காய்பட்டணம் பீச்சை அடைந்தது, காரை நிறுத்தி இருவரையும் இறங்க சொன்னான். கடல் நீரின் நடுவே நடந்து செல்வதற்காக போடப்பட்டிருந்த பாலத்தில் மேக்னாவை முதலில் நடக்க சொல்லி அவள் பின்னால் நடந்தான். நித்யாவை திலீப் ஏதோ கேட்பது போல அழைத்து அவள் கவனத்தை வேறு பக்கம் திருப்பினான்.
“மோகனா உங்களோட கதையோடு அவுட்லைன் சொன்னீங்கனா, அதுக்கேத்த மாதிரி ஆட்களை தேர்ந்தெடுந்தெடுத்து பேக்ரவுண்டையும் கன்பார்ம் பண்ணிக்கலாம்” என்றான் அகத்தியன்.
“இரண்டு பேரோட கதையும் ஒண்ணு தானே போகன்?” என்றாள் கேள்வியாக
“சில காட்சிகள் ஒத்து போகுது தான், நீ உன் கதையோட ஒன்லைன் ஸ்டோரி சொல்லு. உன்னோட கதையும் என்னோட கதையும் ஒண்ணானு பார்க்கலாம்”
“என்னோட கதையில வர ஹீரோ தான் கதையோட வில்லன். கதையோட ஹீரோயின் பேரு மோகனாங்கினு சொல்லிட்டேன். ஹீரோ, ஐ மீன் வில்லன் பேரு என்ன தெரியுமா?”
“அகன்” என்றான் உணர்ச்சியற்ற குரலில்
“வாவ் எக்ஸாட்லி அகன் தானா? வாட் எ கோ இன்சிடன்ட்? உங்க கதையிலயும் அகன் தான் வில்லனா?” என்று அவன் முகத்தை ஆர்வமாக பார்த்தாள்.
இறுகிய முகத்துடன் இல்லை என்பது போல தலையாட்டினான்.
“என்ன போகன்? உங்க கதையில அகன் வில்லன் இல்லயா?, அப்போ நம்ம இரண்டு பேரோட கதையும் வேறயா இருக்க வாய்ப்பிருக்கு”
“இல்ல, இரண்டும் ஒரே கதை தான். பார்வை தான் வேறயா இருக்கு. ஆமா, நீ எதுக்காக அகனை வில்லன்னு சொல்றே?”
“அவன் செஞ்ச வேலை உங்களுக்கு தெரியாது அகத்தியன், ஒரு பொண்ணை நம்ப வச்சு ஏமாத்தின பச்சை துரோகி அவன்” என்றாள் மேக்னா தீவிரமான குரலில்
அவள் கண்களில் இப்போதும் அதே ரெளத்திரத்தை கண்டவனின் கண்களில் சொல்லொண வலி தோன்றியது.
(தொடரும்)
Latest Post: காற்றின் நிறம் கருப்பு - (Comment Thread) Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page