About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்: 33
"மிஸ்டர் ஜியாராம்..." என உரக்க அழைத்தவள், "இதோ உங்க ஆர்டர். என்ஜாய் யூவர் சாக்லேட் கேக்." எனப் புன்னகையுடன் நெகிழிப் பையை நீட்டினாள் கோகோ.
அதை வாங்கிக் கொண்டு அந்த மனிதர் செல்ல, அடுத்த நபரை மரியாதையுடன் அழைத்தாள்.
அப்பொழது உள்ளிருந்து வந்த சஜித், "வெளில closed ஃபோர்ட் மாட்டிவிட்டுங்க. நேரமாகுது." என்றுவிட்டு செல்ல, அவனைப் பார்த்துக் காதுவரை இதழ்களை இழுத்துப் பிடித்தாள் கோகோ.
ஆனால் அவனோ, முறைப்பு என்ன பார்வையை கூட அவள் பக்கம் திரும்பாது சென்று விட்டான்.
"என்ன கண்டுக்காம போறான். இன்னுமா கோவமா இருக்கான்.?" எனக் கேட்டதற்கு அவளின் மனசாட்சி வெளியே வந்து, "நீ பண்ணி வச்ச வேலைக்கி கோவப்படாம வேற என்ன பண்ணச் சொல்ற?."
"நா வேணும்னே பண்ணலயே. அதுவா நடக்குது. அதுக்கு என்ன பழி சொன்னா என்ன பண்றது." என முகம் சுருங்கிப் போனாள்.
"அவனுக்காகத்தான கால் கடுக்க ஏழு மணில இருந்து ஒம்போது மணிவரை நின்னுக்கிட்டே வேல பாத்திருக்குறேன். ஒரு வார்த்த ஆறுதலா பேசிருக்கலாம். கதவத் திறந்து விடுற முன்னா பாய்க்கிட்ட கூடப் பேசுறான். எங்கிட்ட பேச மாட்டேங்கிறான்."
“எது அவனுக்காக வேல பாக்குறியா.!”
"சரி. அவன்ட்ட வாங்கி வச்சிருக்குற கடனுக்காக வேல பாக்குறேன். போதுமா."
கடனா?
ம்... கடன் தான்… என்னவென்றால்…
மூன்று வாடிக்கையாளர்களை அவள் ஈர்த்ததிலிருந்து, ரிபேக்கா அவர்களை அவள்வசம் ஒப்படைத்தாள்.
"இனி அவங்க அகௌண்ட நீ தான ஹண்டில் பண்ணனும். எந்தக் கம்ப்ளைட்டும் உம்மேல வராம பாத்துக்க." என்று பெரிய பொறுப்பை ஒப்படைத்துவிட்டாள்.
அதனால் கோகோவிற்கு வேலைப் பளு கூடியது. ப்ரமோஷன் வீடியோ உருக்க, அதைப் பதிவு செய்வதென மடிக்கணினியில் நேரத்தைத் தொலைத்தாள்.
அவளின் லட்சியப் பாதையில் பயணம் செய்யத் தொடங்கியதிலிருந்து சத்யாவுடன் இருக்கும் நேரம் குறைந்து கொண்டே சென்றது.
இளாவின் குற்றச்சாட்டாலும், ரிபேக்காவின் கரிசனத்தாலும் அவளின் மின்சார ரயிலில் பயணம் நிறுத்தப்பட்டு அலுவலகம் செல்ல வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சண்டை போட்டிருந்தாளே, அப்பொழுதிலிருந்தே காலை இரவு வேளைகளில் ஒன்றாக உணவருந்துவதில்லை.
பின் காப்பாற்றி கட்டியணைத்த பின், அவ்வபோது பூங்காவில் கிடைக்கும் நேரம் அவளுக்குப் போதவில்லை.
இளாவின் வருகை இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியைப் பெரிதாக்கியிருந்தது.
இரவு பத்து மணிக்கு மேல் வரும் சஜித்தை பார்க்கத் தவமிருக்க வேண்டியிருந்தது. அப்படியே பார்த்தாலும் இடையில் இருக்கும் கம்பி கேட் அவளுக்குப் பிடிக்கவில்லை.
எதற்குத் தவமிருப்பானேன். தினமும் அவன் தான் காலையில் எழுந்து ஓடுகிறானே. அப்போது பிடித்துக் கொள்ளலாமெனத் தன் தூக்கத்தை துறந்து சஜித்திற்கு இணையாக ஓடத் தொடங்கினாள் கோகோ.
"குட் மார்னிங் சத்யா." எனக் காலை வேளையில் அவனின் முன் வந்து நின்றவளை மேலிருந்து கீழாகப் பார்வையால் அளந்தான் சஜித்.
ரசிக்கும் பார்வை அல்ல அது.
அது, 'இந்தக் காஸ்ட்யூம்ல யா நீ ஜாக்கிங் வரப் போற?.' எனக் கேட்பது போல் இருந்தது.
ஏனெனில் இரு புறமும் தொங்க விட்டிருந்த துப்பட்டாவுடன், பைஜாமா குர்த்தியில், காலில் கருப்பு நிற ஷூவும் அணிந்திருந்தாள்.
அவளைப் பார்ப்பதற்கு மெரினாவில் நடைபயிற்சி செய்ய வந்த ஆன்டிகளைப் போல் இருந்தாள்.
"குட் மார்னிங் சொன்னா பதில் குட் மார்னிங் சொல்லனும் சத்யா."
"குட் மார்னிங்." என்றவன் மின் தூக்கியை நோக்கிச் செல்ல, அவளும் அதில் ஏறிக் கொள்வாள்.
கடலலைகள் காலை உரசும் கடற்கரையில் தகிக்கும் பொன்நிற சூரிய உதயத்தை கண்டு அந்நாளைத் தொடங்குகினர் இருவரும்.
அது சில நாட்கள் எவ்வித இடையூறும் இல்லாது நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால்...
இன்று காலையில்...
"சத்யா... ஜாக்கிங்ன்னா மெதுவா ஓடுறது தான." என்றாள் அவனுடன் ஓடியவாறே.
"சொல்லு சத்யா. ஜாக்கிங்ன்னா..."
"மெதுவா ஓடுறது தான்."
"அப்றம் ஏ நீ இவ்ளோ வேகமா ஓடுற. எங்கூட ரேஸ் வைக்க நினைக்கிறியா. நீயே வின் பண்ணிக்க. எனக்கு கப் வேண்டாம்." எனப் புசுபுசுவென மூச்சு வாங்கினாள் கரத்தை முட்டியில் பதித்து குனிந்து நின்றுகொண்டாள்.
"மூச்சு வாங்குதுன்னா வீட்டுலயே இருந்திருக்கலாம்ல. ஏ வந்த.?"
"உன்னப் பாக்கத்தா சத்யா. உங்கூட டயம் ஸ்பெண்ட் பண்ணத்தான். இப்பெல்லாம் நேரம் கிடைக்குறதே இல்ல. நீயும் அத ஃபீல் பண்ற மாறியே தெரியல. அதான்." என்றதும் திரும்பி அவளைப் பார்த்தவன் மனதில் இதம் இல்லாமல் போகுமா!.
இருள் முழுதாகப் பிரிந்து செல்லாத வேளையில் பெண்ணவளை பார்வையால் வருடியபடி சில நிமிடங்கள் நின்றான். பின் தலையை உளுக்கிக் கொண்டு ஓட,
"சத்யா, சூரியன வேற இன்னும் காணும். அதுனால கண்ணு வேற சரியா தெரியல. இவ்ளோ வேகமா ஓடினா எதுலயாது முட்டி மோதிற மாட்டோம் இல்ல, ரோட்டுல எதாவது பள்ளத்துல விழுந்து வாரப்போறோம். விடிஞ்சதும் ஓடக் கூடாதா. சத்யா... ஓய் சத்யா... அட்லீஸ்ட் மெதுவாவாவது போ சத்யா." எனக் கத்தியபடி அவனுக்கு ஈடு கொடுக்க முடியாது மூச்சு வாங்கியவாரே கத்திக் கொண்டே ஓடினாள்.
சரியாகச் சூரியன் உதிக்க சில நாழிகைக்கு முன், கால்களைக் கடலலையில் நனைத்தபடி நிற்பவன், உதயமானப்பின் கண்களை மூடி, ஆழத் தான் மூச்சை இழுத்துப் பிடித்துக் கடற்கரை மணலில் சில நிமிடங்கள் தியானம் செய்வான்.
அவளும் அவனுக்குப் பக்கத்தில் உக்காந்து தியானமெல்லாம் செய்யமாட்டாள், உறங்கி விடுவாள். அவன் தான் தட்டி எழுப்பி அழைத்துச் செல்வான்.
அன்றும் அவன் கடலலையில் நின்ற நேரம் அவனுக்குப் பின்னால் வந்தவள் அவனின் முதுகில் தட்டி, "காது கேக்கலயா உனக்கு. எவ்ளோ நேரம் கத்துறேன். இப்படியா விட்டுப் போய்டுவ." என்றவள் பிடித்து உளுக்கி உளுக்கில் அவன் காதில் வைத்திருந்த அண்புலனி (wireless bluetooth) கீழே குதித்தது.
உடைந்து கோமா நிலைக்குச் சென்றிருந்தால் கூட, பழுது நீக்கும் கடையில் கொடுத்துச் சரி செய்திருக்கலாம். ஆனால் விழுந்தது கடல் நீரில். கடல் மாதா அதைத் தன்னோடு இழுத்துச் சென்றால், டெட் பாடி கூடக் கிடைக்காது.
சஜித் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளும் விலை அதிகமாக லக்சரி ப்ராண்ட் சாதனங்களாக இருக்கும். ஏற்கனவே அவனின் மடிக்கணினிக்கு காபி அபிஷேகம் செய்து வைத்தவள் இப்போது கொலையும் செய்து விட்டாள்.
இறந்து போனதே இதன் விலை என்னவென்று அறியாது.
"என்ன சத்யா இப்படி பண்ணிட்ட?. அத கீழ விழ விட்டுட்டு மரம் மாறி நிக்கிற. தேடு." என்றவள் கையில் அள்ளியது மணலைத்தான்.
"அந்தா போது அந்தா போது." என அலையில் அடித்துச் செல்லப்பட்ட அதைத் துரத்திப் பிடித்து எடுத்தும் விட்டாள்.
"இது வாட்டர் ப்ரூப்பா?." என அதைக் காதில் வைத்தவள்.
"எங்க! பாட்டு எதாவது ப்ளே பண்ணு. வெர்க் ஆகுதான்னு பாக்கலாம். அப்படி ஆகலன்னா நீ இதோட கம்பேனி மேல கேஸ் போடு சத்யா. கஸ்டமருக்கு தரமான பொருள விக்கனும். நீ கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போ…" என வியாக்கியானம் பேசியவளின் துப்பட்டா அவனின் கரத்தில் சிறைப்பட, திருதிருவென முழித்தாள் கோகோ.
"எங்க போகனும்.?"
"கன்ஸ்யூமர் கோர்ட்." என்ற உடன் துப்பட்டா திருகப்பட்டது.
"பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு கேஸ் வேறவன் மேல போடனுமா?" என்க,
"தண்ணில பட்டாலும்... ஓர்க்... ஆகனும்ல..." என்றபோது அவன் பார்த்த பார்வையில் அவளின் சுருதி இறங்கிப் போனது.
"சாரி சத்யா. உன்னோட லேப்டாப்புக்கும் சேத்து ரெண்டு சாரியா வச்சிக்க."
அதில் கவரப்பட்டவன் பிடித்திருந்த துப்பட்டாவை சுண்ட, அவள் அவனின் மார்பில் வந்து மோதி நின்றாள்.
ஆதவன் தன் மஞ்சள் வண்ணக் கதிரை வீசியதில் அவளின் பளபளத்த கண்கள் பிரதிபலித்து மங்கையை பொன் வண்ணமாக்கியது.
தலை உயர்த்தி அவனைப் பார்த்த தோரணையில் உணர்வுகள் மேலிட, அவளின் நாடியை உயர்த்தி, குனிந்தான்.
இதழ்கள் பின்னிக் கொள்ள சிறிது இடைவெளி தான் எனும் நிலையில், இமை மூடாது ஆடவனின் கண்களைத் தைரியமாக உற்று நோக்கினாள் பெண்.
அந்த விழிகளில் அவன் தேடிய எதுவோ கிடைக்கவில்லை போலும். அதனால் அவளின் துப்பட்டாவை விடுவித்தான்.
குதி கால்களை உயர்த்தி அவனின் உயரத்திற்கு எம்பி நின்றிருந்தவள் நிலை தடுமாறி பொத்தெனக் கடலலையில் விழுந்தாள்.
"அப்ட்ரால் ஒரு ப்ளூடூத். அதுக்கு போய் இவ்வளோ கோபப்பட்டு என்ன கடல்ல தள்ளி விட்டுட்டு போறான். ஒன்னு தான போயிருக்கு. இன்னென்னு தான் இருக்கே." என நினைத்தவள் வீடு திரும்பியதும் முதல் வேளையாகத் தன் ப்ளூடூத்தை எடுத்துக் கொண்டு அவனின் கதவைத் தட்டினாள்.
'இந்தா! இத வச்சிக்க. நா இன்னைக்கி சாயங்காலம் உனக்குப் புதுசு வாங்கித் தர்றேன்.' என்ற ரீதியில் நீட்ட, அதை வாங்காதவன் ஒரு கடிதத்தை அவளின் கரத்தில் திணித்தான்.
'நேர்ல சாரி கேக்க வெக்கப்பட்டுட்டு, லெட்டர்ல கேக்குறானோ! அவனோட கையெழுத்துல ஐ ஆம் சாரின்னு எழுதி இருக்குறத படிக்க ஆவலா இருக்கு.' என உற்சாகத்துடன் அதைப் பிரித்தாள்.
பிரித்தப்பின் தான் தெரிந்தது. அது கடிதமல்ல இரசீது. அதாவது இவளால் காபி அபிஷேகம் செய்யப்பட்ட மடிக்கணினியை சரி செய்ய அவன் கட்டிய பணத்திற்கான பில்.
'ப்ளூடூத் வாங்கி தர்றேன்னு சொல்றேல. இதையும் சேத்து தந்திடு.' என்பதுபோல் இரு கரத்தையும் கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்த படி நிற்க,
"சத்யா... இது..."
"பில்."
"தெரியுது. ஆனா எங்கிட்ட அவ்ளோ பணம் இல்ல. அடுத்த மாசம் சம்பளம் வந்ததாலும் இவ்ளோ அமௌண்ட் முடியாதே" எனப் பரிதாபமாகச் சொல்ல,
"அப்பச் சரி. நானே செட்டில் பண்ணிட்டு உன்னோட அகௌண்ட்ல எழுதிக்கிறேன். அப்றம் ஒரு தமிழ் பழமொழி இருக்கு. கடன் அன்பை முறிக்கும்னு. அதுக்கு அர்த்தம் தெரியும் தானா. கிளம்பு. உன்னோட கேப் வந்திருக்கும்." என அனுப்பி வைத்தான்.
அன்று மாலை ஆறரை மணிபோல் அவனின் கடைக்கு வந்தவள்,
"கடைசியாகச் சொன்னானே கடன் அன்பை முறிக்கும்னு. அந்த வசனத்துக்காத்தான் நா உங்கிட்ட வேலைக்கி வந்திருக்கேன். நம்ம அன்பு முறியக் கூடாது. சோ என்னோட சம்பளத்துல இருந்து கழிச்சுக்க."
"உனக்கு இங்க வேல போட்டுக் குடுக்குறதா யார் சொன்னா?"
"அப்ப வேலை தர மாட்டியா.?" என்க, தோள்களைக் குளுக்கிக் கொண்டு உள்ளே சென்றவன் தான் இப்போது வரை அவளுடன் பேசவில்லை.
ஆனால் அவள் விட்டுவிடுவாளா!. விடாது துரத்தி அவனுடன் பல நாட்களுக்குப் பின் ரயிலில் பயணம் செய்தாள். அதுவும் அவனின் தோளில் சாய்ந்து கொண்டு.
மயக்கம் தொடரும்...
மயக்கம் 34
https://kavichandranovels.com/community/postid/1251/
Latest Post: வனமாலி - (Comment Thread) Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page