About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்: 32
க்ளிக் என்ற சத்தம், கோகோவின் செல்ஃபி மோகத்தின் விளைவு.
வளைத்து வளைத்து எடுத்துக் கொண்டிருக்கிறாள் புகைப்படங்களை. யாருடன் என்றால் பொம்மையுடன்.
கரடி வடிவில் இருந்த பொம்மையின் மீதேறி அமர்ந்து கொண்டும், கன்னத்தில் கை வைத்துக் கண்ணடித்தபடி நின்றிருந்த மிக்கி மவுஸ் சிலைக்கு அருகே அதைப் போல் நின்று கொண்டும், அதைக் கட்டியணைத்து முத்தமிட்டபடியும் ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
டனர் என்றால் அது பன்மை அல்லவா?. அப்பொழுது கோகோ தனியா வரவில்லை போலும். உடன் இளவேந்தனா! அல்லது சஜித்தா?
இருவருமே இல்லை.
துகிரா.
அன்று கோகோ பார்க்கச் சென்ற பொட்டிக்கின் உரிமையாளர் துகிராவின் தோழியின் அக்கா ராஷ்மிகா.
"ஹாய்! கோகோ." என வரவேற்தே அவள் தான்.
'நீங்க...' என்ற கேள்வியுடன் பார்த்தவளிடம்.
"இது என்னோட ஃப்ரெண்ட்டோட பொட்டிக். நாந்தா உன்ன இன்டாஸ்டால அப்ரோச் பண்ணது."
'ஏன்.' என்ற புருவம் சுருக்க,
"வேந்தன எனக்குச் சில வர்ஷமா தெரியும். அவருக்காக உதவி பண்றேன்." என்றவள் கோகோவின் நட்பிற்காக முன் வந்தாள்.
இளாவும் கோகோவும் அடிக்கும் கூத்தைத்தான் வார இறுதியில் பல முறை கண்டிருக்கிறாளே.
இருவரும் பழகும் விதம் பிடித்திருந்தது. அதேநேரம் இருவரும் மீதும் பொறுமையும் வந்தது.
கூட்டமா இருக்கும் இடங்களில் அவன் இரு கரத்தையும் வேளியாக்கி அதில் கோகோவை பாதுகாப்பாய் அழைத்துச் செல்வதை பார்த்தவளுக்கு தான் இழந்தது இளாவின் காதலை மட்டுமல்ல, அக்கறையுடன் கூடிய நட்பையும் தான் என்று புரிந்தது.
அவ்விரண்டையும் பெறவெனச் செய்ததை நினைத்து அவளுக்கே அவமானமாக இருந்தது.
அதனால் அவர்களின் கூட்டைக் கலைக்காது, அந்தக் கூட்டில் தன்னை பொருத்திக் கொள்ள முன் வந்தாள்.
இப்போது இளவேந்தனுக்கு தான் வேலைப்பளு கூடியது. ஒன்றிற்கு இரண்டு சேட்டை பிடித்த பெண்களைச் சமாளிக்க வேண்டியிருந்ததே. அதிலும் காதலுடன் தன்னை நெருங்கும் துகிராவை சமாளித்து, தன் உணர்வுகளுக்குக் கடிவாளம் போடுவது சிரமமாக இருப்பதால் இருவரையும் கோர்த்து விட்டு விட்டு அவன் விலகிக் கொண்டான்.
இதுவரை மொழிப் பிரச்சனைக் காரணமாக எங்கும் வெளியே செல்லாது, இளவேந்தன் மற்றும் சஜித்தின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தவள், இப்போது துகிரா கிடைக்கவும் சுருட்டி வைத்திருந்த வாலை கட்டவிழ்த்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் இருவரும் சேர்ந்தே சுற்றினர்.
இப்போதுகூட இருவரும் கேளிக்கை பூங்காவில் உள்ளனர். பெரிய பெரிய ராட்டினங்களில் ஏறித் தங்களின் பொழுதை இனிமையாகக் கழித்ததுடன் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளுகின்றனர்.
சறுக்கு.
ஒரு வயதிற்கு மேல் ஆசை இருந்தாலும் விளையாட முடியாது. மீறி அதில் ஏறினால் உடைந்து விடும் என்றும், 'இந்த வயசுல இது தேவையா?' என்றும் இலவச வசைவுச் சொற்கள் கிடைக்கும்.
இங்கும் கிடைத்தது தான். ஆனால் அதைக் கண்டு கொள்ளாது வயது வந்த இரு குழந்தைகள் தங்களின் வயதை மறந்து குதுகலிக்கின்றனர்.
நீரூற்று, பெரியதாக இருந்த அதன் தடுப்பின் விளிம்பில் கரம்பற்றிக் கொண்டு, நடக்கிறேன் என்று இருவரும் நீரூற்றை நீச்சல் குளமாக்கி விட்டனர்.
அங்கிருந்த செக்யூரிட்டி அவர்களைக் கண்டபடி திட்ட, இருவரும் ஓடி விட்டனர்.
ஈர உடையுடன் அங்கு விரிக்கப்பட்டிருந்த புல் தரையில் கரம் நீட்டிப்படுத்திருந்தனர் இருவரும்.
துகிரா, "கோகோ! Happy க்கு வேற என்னென்ன பேர் இருக்குன்னு தெரியுமா?"
"Joyful, சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம் அவ்ளோ தான் எனக்குத் தெரியும். வேணும்னா நா டிஸ்னரில பாத்து செல்றேன்." என்று ஃபோனை எடுத்தவளின் தலையில் தட்டி வாங்கிக் கொண்ட துகிரா அதிலிருக்கும் இளவேந்தனின் புகைப்படத்த ரசிக்க,
"இது என்னோட அத்தை. இளாத்தானோட அம்மா. இது..." எனக் கோகோ ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.
"இந்தப் பிக் அத்தான் +2 படிக்கிறப்ப எடுத்தது. இது அவரோட பைக். பாவம் இப்ப அது பழைய இரும்புச் சாமான் கடைல கிடக்கு. இந்த டீசர்ட் அத்தானோட பிறந்த நாளுக்கு மாமா வாங்கித் தந்தாரா. ஆனா நா அதுல மை கொட்டி விட்டுட்டேன். என்ன பயங்கரமா திட்டினாரு அத்தான்." என வரிசையாக இளவேந்தனை பற்றிக் கூறிக் கொண்டே வந்தவள்.
"ரொம்ப கோபம் வருமோ?"
"ஆமாம்... ஆனா கை நீட்டி அடிக்கிற அளவுக்கு இருக்காது. நா என்ன செஞ்சாலும் அத்தான் திட்டத்தா செய்வாரு. அதுக்காவே எனக்கு இளாத்தான அவ்ளோ பிடிக்கும்." என்றவளுக்கு தெரியாது தன்னையும் அறியாது இளவேந்தனைப் பற்றித் துகிராவிடம் ஒப்பித்துக் கொண்டிருக்கிறோம் என்று.
"நா இதுவர இவ்ளோ சந்தோஷமா இருந்தது இல்ல கோகோ. தேங்க்ஸ். என்னோட நாட்கள மறக்க முடியாத நாட்களா மாத்தினதுக்கு."
இருவரும் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தனர்.
"இதெல்லாம் என்னோட கடம துகி. இன்னும் நிறை பண்ணலாம். ஆனா இளாத்தான் தான் விடமாட்டாரு. ஆமா, எங்க வீடு மாறி உன்னையும் வெளியவே விடமாட்டாங்களா. நிறைய கட்டுப்பாடு இருக்கா என்ன?"
"நோ... அன்டு எஸ். என்னப் பொருத்தவர வீடு தூக்குறதுக்கான இடம் மட்டும் தான். மத்த நேரமெல்லாம் பார்ட்டி, ஃப்ரெண்ட்ஸ், மீட்டிங், இல்லன்னா ஸ்போர்ட் க்ளப். அவ்ளோ தான். நா பாத்தவரை எல்லாரும் அதுல தான் காசிப் பேசிட்டே நேரத்த போக்குவாங்க." என்றவள் பிடிக்கவில்லை என்றாலும் சிலவற்றை அவளின் அன்னைக்காகச் செல்வாள்.
"பாவம் தா நீ. ஹேய் என்ன பண்ற?"
"எடுத்த ஃபோட்டோஸ் எல்லாத்தையும் உன்னோட இன்ஸ்டால சேர் பண்ணப் போறேன்."
"நோ...நோ..." என்ற கோகோ வேகமாகத் துகிராவின் கையில் இருந்த தன் ஃபோனை வாங்கிக் கொண்டாள்.
"இதெல்லாம் சோசியல் மீடியால போஸ்ட் பண்ணக்கூடாது."
"ஏன்.? உனக்கு ஒரு பப்ளி சிட்டி கிடைக்குமே."
"வேண்டாம்." என்றவளை கூர்ந்து பார்த்தாள் துகிரா.
"நீ வாழ்றது மும்பைல. ஏ பட்டிக்காடு மாறிப் பிகேவ் பண்ற. நேத்து என்னடான்னா ஜீன்ஸ் டிசர்ட் போடச் சொன்னா! மாட்டேங்கிற. பார்லர் கூட்டீட்டு போனா த்ரெட்டிங் தவிர வேற எதுவும் வேண்டாங்கிற. எப்ப பாத்தாலும் பைஜாமா துப்பட்டா. உனக்கு மாடலா வாழ ஆசை இல்லையா."
"இல்ல. நா பட்டிக்காடாவே இருந்திட்டு போறேன்." என்றாள் பட்டென்று.
கோகோவிற்கு சில கோட்பாடுகள் உண்டு. மும்பை சிட்டியாகவே இருந்தாலும் அந்த நகரத்து கலாச்சாரத்தை உள்வாங்க விரும்பாதவள்.
ஒருவரை பார்த்தும் அவள் மனம் சொல்ல வேண்டும் feel free என்று. அப்படி அது கூறியவரை தவிர்த்து யாரிடமும் அவள் சேட்டைகளைக் கட்டவிழித்து விட்டதில்லை. இளவேந்தனிடம் மட்டும் தான். இப்பொழுது சத்யாவிடம். மற்றபடி அவளாக யாரையும் நெருங்கிச் செல்லமாட்டாள்.
"அத்தான் பாத்தா திட்டுவாரு. உன்னோட அடையாளம் உன்னோட முகமோ உருவமோ கிடையாது. உன்னோட திறமை. உன்ன ஃபாலோ பண்றவங்க உன்னோட திறமையைப் பாத்து பாராட்டுனா போதும் உன்னோட உருவத்தையோ அழகையோ பாத்து கூடாது. அப்படி வர்றவங்க கிட்ட இருந்து நீ தூரமா இருக்குறது தான் நல்லதுன்னு சொல்வாரு.
இந்தச் சோசியல் மீடியாங்கிறது கடல் மாறி. நம்மோட இலக்கு எதுன்னு முடிவு பண்ணாம குதிச்சா கடைசில 'மர் ஹயா' தான்னு சொல்லித்தா இத ஓப்பன் பண்ணித் தந்தாரு. அதுனால தான் கிரியேட்டிவ் வீடியோஸ், நேச்சர் ஃபோட்டோவோட நிறுத்திக்கிவேன்.
அத்தோட அண்ணே கண்ணுல என்னோட ஃபோட்டோ இதுல சிக்குச்சி, அடி பின்னி எடுத்திடுவான். ஊருக்கும் இழுத்திட்டு போய்டுவான். அப்றம் நா எப்படி விருது வாங்குறது. சத்யாவ எப்படி சைட் அடிக்கிறது."
"என்ன!... சத்யாவா!"
"ம்... சத்யா தான்." என்றவள் இதழ்களை இழுத்துப் பிடித்துக் கன்னத்தைச் சிறிதாக்கினாள். அவளின் முகத்தை உற்றுப் பார்த்து யார் என்றாள் துகிரா
"இதுவரை அத்தாங்கிட்ட கூட நா சொல்லாதத உங்கிட்ட சொல்றேன். சத்யா ஒரு பையன். இந்தச் சிட்டில எனக்குக் கிடைச்ச பெஸ்ட் ஃப்ரெண்ட்."
"பெஸ்ட் ஃப்ரெண்ட்டா இல்ல பாய் ஃப்ரெண்ட்டா... ரெண்டும் இல்லாம அதுக்கும் மேல.!" எனக் குறும்பாய் இழுத்தவளுக்குள் அத்தனை சந்தோஷம்.
'அப்பாடா இவளோட மனசுலயும் வேந்தன் கிடையாது. வேந்தன் மனசு எனக்குன்னு இடம் எப்பையும் இருக்கும்.'
"சொல்லு கோகோ. சத்யா மேல உனக்கு லவ்வா?"
"இது ஒரு மாறியான ஃபீலிங் இருக்கு. ஆனா லவ்வு தான்னு உறுதியா சொல்ல முடியால. இதுவரை யார்க்கிட்டையும் இல்லாத ஒரு ஃபீல் அவன் மேல ரொம்ப ஸ்டாராங்கா இருக்கு." எனச் சிறு வெட்கத்துடன் கூறியவளை கேலி செய்தாள் துகிரா.
"ஹேய். அப்ப வேந்தனோட நிலைமை.? வேந்தன் உனக்கும் அவருக்கும் கல்யாணம் நடக்கப்போறதா சொன்னாரே."
"அது உண்ம கிடையாது. அவர் பேரச் சொன்னாத்தா வீட்டுல விடுவாங்க. அத்தோட அவரு எனக்கு ஏத்த ஆளும் கிடையாது. அத்தானுக்கும் இங்க ஒரு டாவு இருக்கு. ரொம்ப வர்ஷமா லவ் பண்றாரு போல. ஆனா பாவம் ஒரு தலை காதலால தவிக்கிறாரு. நீ அவரோட ஆஃபிஸ்ன்னு தான சொல்ற. அது யாருன்னு எனக்காகக் கண்டுபிடிச்சி தாயேன். அந்தப் பொண்ண கரெக்ட் பண்ணி அத்தாங்கூட கோர்த்து விடனும். ஹெல்ப் பண்ணுவியா?" என்க,
"ம்... கண்டிப்பா." என்றவள் அப்போதே வேந்தன் மனதில் இருப்பது தான் தான் என்று கூறியிருக்கலாம். பின்னால் வரப்போகும் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம். அட்லீஸ்ட் அவளுக்குக் கிடைக்கப் போகும் அடிகளில் இருந்தாவது தப்பி இருக்கலாம். யார் விட்டது. அவளும் வாங்கி இவளுக்கும் வாங்கிக் கொடுத்துவிட்டாள்.
காதலிக்க மனம் மட்டும் போதும். ஆனால் அதை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லத் தைரியம் வேண்டும்.
அது துகிராவிடம் உள்ளதா?.
மயக்கம் தொடரும்...
மயக்கம் 33
https://kavichandranovels.com/community/postid/1244/
Latest Post: வனமாலி - (Comment Thread) Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page