All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வட்டிக்காரனின் வசியக்காரியவள்-8

 

VSV 44 – வட்டிக்காரனின் வசியக்காரியவள்
(@vsv44)
Eminent Member Author
Joined: 4 months ago
Posts: 16
Topic starter  

அத்தியாயம்-8

ரணவேந்தன் குழந்தை போல பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு தன் அன்னையை பார்க்க.. அவரோ அவனை முறைத்தவாறே நின்றிருந்தார்.

"அட தாமர புள்ள டயர்டா வந்து இருக்கான்... இந்த நேரத்துல உன் பேச்சு வார்த்தையே கொஞ்சம் கம்மி பண்ணிட்டு அவனுக்கு சாப்பாடு போடு..” என்றவாறே அங்கு வந்தார் இவர்கள் அனைவரின் தந்தையான தவசிநாதன். அதில் மேலும் ரணவேந்தனின் உதடுகள் முழு சத்தமாக சிரித்தது.

மருமக புள்ள சொல்றதுல என்னப்பு தப்பு இருக்கு… சரியா டைமுக்கு வரனும் இல்ல சாப்ட..”என்றவாறே வந்தார் அந்த வீட்டின் தலைவர் ராம்மூர்த்தி தவசிநாதனின் தந்தை. அதில் தாத்தூ… என்று ரணவேந்தன் அவரை பொய்யாக முறைக்க… அவரோ புன்னகைத்தார்.

ரணவேந்தனுக்கு இவ்வளவு பெரிய குடும்பம். அவனின் தாத்தா ராம்மூர்த்தி. அந்த காலத்தில் பர்மாவில் சென்று வியாபாரம் செய்தவர். பின் சென்னை வந்து செட்டில் ஆனவர் மில் ஆரம்பித்து சிறப்பாக நடத்தி பின் அதனை தவசியிடம் ஒப்படைத்துவிட்டார். அவரின் மனைவி கமலம் . பின் ரணவேந்தனின் அப்பா தவசிநாதன்.. சென்னையில் மிகப்பெரிய மில் மற்றும் டெக்ஸ்டைல் வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். அது போக வட்டி பிஸ்னஸும் செய்கிறார். பெரிய அளவில் என்றாலும் ரணவேந்தன் அளவிற்கு இல்லை.

ரணவேந்தனின் அன்னை தாமரை. அமைதியின் சொரூபம், அன்பின் மறு உருவம், இனிமையானவர். எந்த அளவிற்கு என்று போக போக தெரியும்.

பின் ரணவேந்தனுக்கு முன்பு தாமரைக்கு பிறந்தவன் அவனின் அண்ணன் ஆதித்தன். ஆதித்தன் தன் தந்தையுடன் சேர்ந்து இன்னும் இரண்டு மில்களை வாங்கிப்போட்டு பார்த்துக்கொண்டிருக்கின்றான். கூடவே நகைக்கடை ஒன்றும் வைத்து நடத்துக்கின்றான்.அவனின் மனைவி ஷாலினி ஒரு பெரிய மருத்துவமனையில் நர்ஸாக இருக்கின்றாள்.அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஹர்ஷினி, ஷர்வன்.

அதன் பிறகு தான் அவனுக்கு ஒரு அக்கா அவள் தான் அலர்விழி. ஒரு புகழ்பெற்ற பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றாள்.அவள் கணவன் ஈஸ்வரன். ஈஸ்வரனோ பல் மருத்துவர். தனியாக ஒரு பல் மருத்துவமனை கட்டி நடத்திக் கொண்டிருக்கின்றான். அவர்களின் பிள்ளைகள் விக்ரம்,வினையா.

ரணவேந்தன் மூன்றாவதாக பிறந்தவன். இவனுக்கு அடுத்தது ஒரு தம்பி யுகதேவ்.. இப்போது தான் எம்பிஏ கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கின்றான்.கல்லூரியின் கனவு நாயகனும் இவன் தான். ஜாலி டைப்.

அதன் பின் ஒரு தங்கை சுடர்விழி. அந்த வீட்டின் கடைக்குட்டி. அனைவருக்கும் மிகவும் செல்லம். சுட்டியும் கூட. அவனும் யுகதேவும் சேர்ந்தால் வீடே அமர்க்களம் ஆகிவிடும். இப்போது தான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கின்றாள்.. அவளுக்கு டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று ஆசை.. அதனால் நீட் எக்ஸாமிற்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றாள்.மொத்தம் ஐந்து பேர் இவர்கள் குடும்பத்தில் எந்நிறமும் கலகலப்பாக தான் இருக்கும்.

சுடர்விழிக்கும்,யுகதேவுக்குமே ஐந்து வயது வித்தியாசம். ரண வேந்தனுக்கும் அவன் தங்கைக்குமே கிட்டத்தட்ட எட்டு வயது வித்தியாசம் ஆகும். அதனால் அவள் என்றுமே வீட்டின் சுட்டி குழந்தை தான். மூன்று அண்ணன்கள்,ஒரு அக்காவுடனும். தேவதை போல தன் அழகான நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறாள் அவனது குட்டி தங்கை.

கமலம் இப்போது ஊரில் இல்லை. அவருக்கு கிராமத்தில் கொஞ்சம் நிலம் இருக்க.. அதனை பார்த்துக்கொள்ள அடிக்கடி கமலம் கிராமத்திற்கு சென்றுவிடுவார். எப்போதும் ராம்மூர்த்தியுடன் தான் செல்வார். இம்முறை ராம்மூர்த்திக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லாமல் இருக்க கிராமத்திற்கு அழைத்து சென்றால் அங்கு ஆத்திர அவசரத்திற்கு கூட காட்ட நல்ல மருத்துவமனை இல்லை என்பதால் இம்முறை அவரை விட்டுவிட்டு சென்றார் கமலம்.

அனைவரையும் விட ரணவேந்திரன் மீதுதான் அவருக்கு கொள்ள ஆசை ஏனென்றால் ரணவேந்தன் அப்படியே அவரின் தந்தை போல இருப்பதாக அவர். நம்புகிறார். "என் அப்பாவ மாதிரியே இருக்கய்யா நீ...” என்று அடிக்கடி அவனை கன்னத்தில் பிடித்து கிள்ளி முத்தம் கொடுத்து கொண்டு இருப்பார்.

"அதுக்கு என்ன பாட்டி என்னையே பேசாம அப்பானே கூப்டேன்...” என்று ரணவேந்தனும் அடிக்கடி அவரை ஓட்டிக் கொண்டிருப்பான். மொத்தத்தில் ரணவேந்தன் வெளியில் எப்படியோ அதற்கு எதிர்மறையாக தான் இருப்பான் வீட்டிற்குள்.. அவனுக்கு என்றுமே அவனது குடும்பம் தான் முதலில். குடும்பமா இல்லை தொழிலா என்று பார்த்தால் குடும்பத்திற்காக எப்போதும் தொழிலையும் விட்டுக் கொடுக்க மாட்டான், தொழிலுக்காக எப்போதும் குடும்பத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டான். கிட்டதட்ட இரண்டையும் ஒரே தராசில் வைத்து தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

"அம்மா பசிக்குது..” என்று ரணவேந்தன் சிறுவனாக அன்னை தோளில் சாய்ந்தவாறே கேட்க "வாடா நடுவலவனே.. உனக்காக அம்மா சோறு பிடிச்சு கொடுக்கிறேன்...” என்றவர் அவனை அழைத்து சென்று சுற்றி அனைவரையும் உட்கார வைத்து பௌர்ணமி நிலவைப் பார்த்து சோறு உருட்டி கொண்டு இருந்தார். தாமரை எப்போதும் தன் பிள்ளைகளை செல்ல பேர் வைத்து தான் அழைப்பார்.

ஆதித்தனை மூத்தவன் என்றும், அகல்விழியை பெரியகுட்டி என்றும், ரணவேந்தனை நடுவலவனே என்றும்,யுகதேவை சின்னவனே என்றும் சுடர்விழியை குட்டிமா என்றும் அழைப்பார்.

அவ்வீட்டின் எழுதப்படாத சட்டத்தில் இதுவும் ஒன்று வாரம் ஒருமுறை அனைவரும் உட்கார்ந்து ஒன்றாக சாப்பிட வேண்டும். அது மட்டுமல்லாமல் பௌர்ணமியன்று அனைவரும் மொட்டை மாடியில் உட்கார்ந்து நிலாவை பார்த்துக் கொண்டுதான் சாப்பிட வேண்டும் அந்நேரத்தில் அனைவரும் பேசி கேலி செய்து கொண்டு தங்களின் நேரத்தை கடத்துவார்கள்.

சொல்லப்போனால் அன்று இரவு கூட அங்கேதான் அனைவரும் உறங்குவார்கள். ஏசி ரூம் இல்லை, தனித்தனியான அறை இல்லை ஆனாலும் அனைவரும் பக்கத்து பக்கத்தில் படுத்து ஒருவர் மீது ஒருவர் காலை போட்டுக்கொண்டு தூங்கும் வரை கேலி கிண்டல் செய்தவரே தான் அன்றைய நாள் இரவை ஓட்டுவார்கள்.

ரணவேந்தனோ அப்போது கூட தன் அன்னையின் அருகில் தான் படுத்துக் கொள்வான். அவன் அன்னைக்கும் ரணவேந்தனின் மீது அளவில்லா பாசம். அதனால் மற்றவர்கள் மீது பாசம் இல்லை என்று சொல்லி விட முடியாது .அவனது அன்னைக்கு அவன் எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷல் அதேபோல அவன் தந்தைக்கு இவனைத் தவிர மற்ற நால்வரும் ஸ்பெஷல். ரணவேந்தன் தன் அன்னையின் கையை எடுத்து தன் நெஞ்சில் போட்டுக்கொள்ள.. அவரோ அவனுக்கு மெல்ல தட்டி கொடுத்தார். அதில் அவன் மெல்ல கண் சொக்க. அப்படியே தூங்கிப் போனான். இதுவே அவனின் இரட்டை குணம் வெளியில் கறாரான பைனான்சியராகவும், வீட்டிற்குள் செல்ல பிள்ளையாகவும், செல்ல அண்ணனாகவும், செல்ல தம்பியாகவும். செல்லத் மாமாவாகவும், செல்ல சித்தப்பாவாவும், செல்ல பேரனாகவும் தன்னுடைய ரோலை சரியாக செய்து கொண்டிருக்கிறான்.

வசிகா தனக்கு முன்னால் இருக்கும் பரசுவையே முறைத்து பார்த்துக் கொண்டிருக்க.. பரசுவோ அவளின் பக்கம் முகத்தை திருப்பாமல் எங்கெங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.

"ப்ரோ திஸ் இஸ் டூ மச்..ஏன் இப்டி பண்ணீங்க... நீங்க இப்படி பண்ணுவீங்கனு நான் நினைச்சு கூட பாக்கல...” என்று வசிகா கோவமாக பேச.

பரசுவோ "ப்ளீஸ் டா வசிகா கொஞ்சம் புரிஞ்சுக்கோ... இப்போ நீ உன் வீட்டுக்கு போய் தான் ஆகணும்.. அதனாலதான் உனக்கு ஒரு மாசத்துக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் வாங்கி கொடுத்து இருக்கேன்...” என்றான் பரசு.

"ஐயோ ப்ரோ இப்போ அது என்ன தேவைக்கு..எனக்கு அங்க போய் வேலை பார்க்க முடியாது.. நான் இங்க இருந்து ஒன் மந்த் வேலைய முடிச்சு குடுத்துட்டே போறேனே.. அதும் இல்லாம உங்களுக்கும் அஞ்சலி மேரேஜ்க்கு போகனுமே.. நான் இங்க இருந்தாதானே சரியா வரும்.. " என்று தலையில் கை வைத்தவாறே கூற..

பரசுவோ அவளை பாவமாக பார்த்தான். அவனுக்கு வேறு வழியும் தெரியவில்லை. வசிகாவின் சித்தியும், சித்தப்பாவும் தான் அவனை ஒருவழியாக்கி இந்த முடிவை எடுக்க வைத்தனர், பத்தாதற்கு அஞ்சலி வேறு பரசுவை பாடாய் படுத்தினாள்… "அண்ணா அவ சித்தி, சித்தப்பா சொல்ற மாதிரி செய்ங்க.. நானும், ரித்தீஷும் கூட அவள சென்னை வர வைக்க என்னேன்னவோ செய்றோம்.. ஆனா அவ மாட்ட மாட்டீங்கிறா.. அவங்களும் பாவம் இல்ல இவள பாக்காம கஷ்டப்படுறாங்க.”என்று அஞ்சலி பேசி பேசியே பரசுவை சமாதானம் செய்து வசிகாவிற்கு ஒரு மாதம் வர்க் ஃப்ரம் ஹோம் கொடுக்க வைத்தாள்.

"அஞ்சலி மேரேஜ்க்கு நான் ஒன் மந்த் லீவ் தான் போடுறேன்.. நீயும் சென்னை போய் வேலைதானே பாக்க போற.. உன் கவல என்ன இங்க அப்போ யாரு பாத்துப்பானு தானே.. அதுக்கு அசிஸ்டென்ட் போட்டுட்டு தான் போறேன்.. நீ முதல சென்னை கிளம்புடா வசிகா...ப்ளீஸ்டா புரிஞ்சிக்க..இத நான் உன் அம்மாவும் அப்பாவும் சொல்லித்தான் செஞ்சேன்...” என்றார் பரசு

பரசு சொன்னதில் கடுப்பான வசிகாவோ… "ப்ரோ இன்னொரு தடவை அவங்கள என் அம்மா அப்பானு சொல்லாதீங்க.. என்னைக்குமே அவங்க எனக்கு சித்தி சித்தப்பா தான்...” என்றாள் முகம் சிவக்க வெடுக்கென்று

"சரி ஓகே ஓகே அவங்க உன் சித்தி சித்தப்பா தான் சரியா..” என்று நிமிஷத்தில் அவளிடம் சமாதானம் ஆன பரசுவோ.. “ உன் சித்தப்பா தான் எனக்கு போன் பண்ணி என் பொண்ண பார்த்தே பல நாள் ஆகுது பரசு.. ப்ளீஸ் பா எப்படியாவது அவளை ஒரு மாசம் இங்க தங்குற மாதிரி ஏற்பாடு பண்ணி கொடுனு கெஞ்சிறாருடா.. அதனாலதான் உனக்கு ஒன் மந்த் ஒர்க் ஃப்ரம் ஹோம் போட்டு கொடுக்கிறேன்...” என்றான்

"அய்யோ...அவரு சொன்னா நீங்க செஞ்சிட்டு இருக்கீங்களா.. அதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா...” என்று வசிகா எகிற.

அதில் கண்களை மூடி திறந்த பரசுவோ "லிசன் வசிகா இதுவரைக்கும் நான் பரசுவா பேசிட்டு இருந்தேன். ஐ மீன் உன் அண்ணனா.. ஆனா இப்போ நான் உன்னோட மேனேஜரா பேசுறேன்.. இப்போ நீ நான் சொல்றத தான் செய்யணும்.. உனக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் போட்டு கொடுத்துட்டேன்.. இனி சென்னையில் இருந்து நீ வேலை பார்க்கலாம். அதுவும் ஒன் மன்த்க்கு..” என்றவன் இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் எழுந்து சென்று விட்டான்.

வசிகாவிற்கு மலைப்பாக இருந்தது தன்னுடைய சித்தி, சித்தப்பா ஏன் இப்படி செய்கிறார்கள் என்று அவளுக்கு புரியாமல் இல்லை. "ம்ச் இப்படி எல்லாம் செஞ்சா நானா மனசு மாறி கல்யாணத்துக்கு ஒத்துப்பேன்னு நினைச்சுட்டு இருக்காங்க.. கண்டிப்பா நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேன்.." என்று மனதிற்குள் பேசிக்கொண்டவள் சென்னையை நோக்கி பயணமானாள்.

இதற்கிடையில் அங்கு ரணவேந்தனின் தாயாரோ அவனுக்கு மிக விரைவாக பெண் தேடிக்கொண்டிருந்தார்.

 

(வட்டி, வசி)

 


   
ReplyQuote

You cannot copy content of this page