About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 19
ஆதி அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் இருந்து வெளியே வந்த செவிலிப் பெண் வேகமாய் அவர்களின் குடும்பத்தாரினைக் கண்டார்.
"என்னம்மா என்னாச்சு ?" என்று பதட்டத்தோடு, தான் வந்து நின்றதை கண்டதும் கேட்கவே,
"அவங்க கண்ணு முழிக்கிறாங்க ஏதோ முனுங்குறாங்க. உங்கள்ல யாராவது தேடுறாங்க போல. சீக்கிரம் வாங்க, நீங்க பேச்சு கொடுங்க. நான் அதுக்குள்ள டாக்டரை வர சொல்றேன் " எனக் கூறவே, மற்ற அனைவரும் உள்ளே நுழைய அவள் மருத்துவரை அழைக்கச் சென்றாள்.
உதயனோ யுகனிகாவை அனுப்பி வைப்பதற்கு அவளோடு வெளியேச் சென்று இருந்தான். குடும்பத்தார் அனைவரும் உள்ளேச் சென்று இருந்தனர்.
"ஐயா ! ராசா என் கண்ணா, என் குலசாமியே, அண்ணா, ஆதி " என்று வீட்டார் அனைவரும் அவனை அழைக்க முயற்சி செய்ய, அவனின் விழிகள் சுழன்றதே தவிர முழுமையாக காண முடியவில்லை.
ஆனால் தாங்கள் பேசுவதை அவன் கேட்கிறான் என்பதை நன்கு உணர முடிந்தது. மருத்துவர் வரவே அவனை பரிசோதித்தார். சிறிது நேரம் குடும்பத்தாரை வெளியே இருக்க கூற அவர்களும் வெளியே சென்று விட்டனர். அவர்களுக்கு இப்பொழுது நம்பிக்கை வந்தது எப்படியாவது கண்விழித்து விடுவான் என்று.
அரை மணி நேரப் பயணத்திற்கு பிறகு மீண்டும் வெளியே வந்த மருத்துவரை சூழ்ந்துக் கொண்டனர்.
"என்னாச்சு டாக்டர் ?" என்றுக் கேட்கவே,
"அவங்க இப்ப நார்மல் கண்டிஷனுக்கு வந்துட்டாங்க. இனிமே அவங்களோட உயிருக்கு எந்த ஆபத்துமே இல்லை. ஆனால் இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான். நீங்க அவர் கிட்ட மாறி மாறி பேச போய் தான் அவர் இப்ப கண் முழிச்சி இருக்காங்க. ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் வந்துரும். வந்ததும் வேற எதுவும் பிராப்ளமா நான் செக் பண்ணிட்டு அதுக்கப்புறம் சொல்றேன் " என்றதும்,
"ரொம்ப நன்றி டாக்டர்" என்று கரம் குவித்து கூறவே, அவரும் அதனை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
நேரங்கள் கடந்த பின் உதயன் உள்ளே வர, அவனிடம் தகவலை தெரிவித்தனர். அவனுக்கு ஆச்சர்யம் தான். தாங்கள் அனைவரும் பேசி விழி திறக்காதவன் நிச்சயம் யுகனிகா பேசியதால் தான் விழி திறந்தான் என்பது அவனால் நன்றாகப் புரிய முடிந்தது. அதனை தென்னவனும் அறிந்து தான் வைத்திருந்தார். அந்த சூழ்நிலையிலும் அவர் அதனை உணர மற்ற யாவராலும் தான் அதனை உணர முடியாது போனது.
இரவு நேரம் போல் வீட்டுக்கு சென்று விட்டாளா என்று யுகனிகாவிடம் கேட்பதற்கு அழைப்பு விடுத்தவன் அவள் பத்திரமாக வீட்டுக்கு வந்து விட்டேன் எனக் கூறியதும் இங்கு ஆதி கண் விழித்து விட்டான் என்றான்.
"அப்படியா உண்மையிலே அவங்க கண் முழுச்சிட்டாங்களா ? எனக்கு இப்ப தான் கொஞ்சம் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கு. இந்த முறை அந்த கடவுள் என்னை ஏமாத்தல " என்கவே,
"கவலைப்படாதே நிம்மதியா இரு. ஒன்னும் ஆகாது" எனக் கூறி அழைப்பினை துண்டித்தான்.
அவன் பேசி முடித்து திரும்பவே அவனுக்கு முன்னே நிகழ்மதி நின்றிருந்தாள்.
"என்ன நிகழ் எதுவும் வேணுமா ?" எனக் கேட்க,
"காபி குடிக்கலாம்ன்னு வந்தேன் "
"அப்படியா இந்த நேரம் கேண்டீன் பூட்டி இருப்பாங்க வெளியில கடை இருக்கு நான் வாங்கிட்டு வரேன். நீ உள்ளே போ " என்கவே,
"இல்ல நானும் வரேன் உள்ளக்கே இருக்க எனக்கு ஒரு மாதிரியா இருக்கு " என்றாள்.
"சரி அப்போ நீ தனியா போக வேண்டாம் வா " எனக் கூறி அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தான்.
அந்த நீண்ட சாலையில் இரவு நேரம் என்பதால் வண்டிகளும் ஒரு சில தான் போக வரவென இருந்தது. ஒரு டீக்கடையின் முன் இருவரும் நின்றனர்.
"அண்ணா ஒரு காபி " என்க,
"நீங்களும் சேர்ந்து என் கூட காஃபி குடிக்கலாம்ல " எனக் கூறவே, அவள் தனியாக குடிப்பதற்காக தயங்குகிறாள் என நினைத்து சரி என இரண்டு காபி ஆர்டர் கொடுத்தான்.
பின் காஃபி வரவே அவளோ அவ்வப்போது அவனைக் கண்டவாறு அதனை பருகிக் கொண்டிருந்தாள். ஆனால் உதயனோ வேடிக்கை பார்க்க மருத்துவமனையைக் காண என்று ஒரு நொடி கூட அவளைக் காணாது தன் சிந்தனையில் மட்டுமே இருந்தான்.
"கேட்கிறேன் தப்பா நினைச்சுக்காதீங்க அத்தான். இன்னைக்கு உங்க கூட வந்த அந்த பொண்ணு யாரு? அவங்க கூட தான் நீங்க மொபைல்ல பேசிக்கிட்டு இருந்தீங்களா ?"
"ஆமா என்னோட பிரெண்டு தான் நல்லா தெரியும். உன் அண்ணன் ஒரு பொண்ண காதலிக்கிறான் அப்படின்னு சொன்னான்ல அந்த பொண்ணு தான் இந்த பொண்ணு " என்றதும், அதிர்ந்தாள்.
அவங்களுக்கு விருப்பம் இல்லை தானே. அதுனால தான் நீங்களும் அண்ணாவும் சண்டை போட்டீங்க. ஆனா இப்போ அவங்களே வந்து அண்ணனை பார்த்துட்டு போறாங்க. அவங்க பார்த்ததுக்கு அப்புறம் தான் அண்ணா கண்ணு முழிச்சிருக்கா அப்படின்னு அண்ணனுக்கு அந்த பொண்ணு அவளோ முக்கியமா இருக்குல " என்று அனைத்தையும் யூகித்து சரியாக கூறவே,
"புத்திசாலி தான் நிகழ். ஆமா நானும் இப்ப தான் அதை உணர்ந்தேன். ஆனா யுகனிகா உங்க அண்ணன கல்யாணம் பண்ண வாய்ப்பு இல்லை. உன் அண்ணன் மனசை தான் எப்படியாவது மாத்த முயற்சி பண்ணனும். சரி வா ரொம்ப நேரம் ஆச்சு எல்லாரும் தேடுவாங்க " எனக் கூறி அவளை அழைத்துச் செல்ல, அவனோடு சில மணித்துளிகள் தனக்கு நேரம் சென்றதே அதுவே பொக்கிஷமாக இருந்தது. முதல் முறையாக அவர்களுக்குள் இருக்கும் தனிமை.
"ரொம்ப தேங்க்ஸ் அத்தான் இப்ப மட்டும் நீங்க இல்ல அப்படின்னா எங்களுக்கு கொஞ்சம் கஷ்டமா போயிருக்கும் "
"ஏய் என்ன நீ இப்படி சொல்ற. நாம்ம எல்லாரும் ஒரே குடும்பம். அதுவும் இல்லாம ஆதி என்னோட பெஸ்ட் பிரெண்ட். அவனுக்கு ஒன்னுனா என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும் ?" என்றதும் மௌனமாய் தலையை மட்டும் அசைத்தாள்.
பின் அவர்கள் இருவரும் குடும்பத்தாரோடு இணைந்து கொண்டனர். இப்படியே இரு நாட்கள் கடக்க விழி திறக்க மூடவென முயற்சி செய்ய என்று சற்று முன்னேறி வந்திருந்தான்.
அதே போல் அவனுக்கு உடல் நிலையிலும் மற்ற எந்த பிரச்சனையும் இல்லை இப்பொழுது போட்டிருந்த கட்டுகள் மட்டும் தான் எலும்பு முறிவுக்கும் சேர்த்து போட்டு இருக்க எப்படியும் இவன் முழுவதுமாக குணமாக இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகி விடும் என்று மருத்துவர் கூறியிருந்தார். இப்பொழுது ஒரு வாரமாவது இங்கு இருக்க வேண்டும் மருத்துவமனையில் எனக் கூறிச் சென்றிருந்தார்.
இந்த இரு நாட்களுமே அவனின் குடும்பத்தார் ஒவ்வொரு நாளாக மாறி மாறி வந்துப் பார்த்து அவனை கவனித்துக் கொண்டு தான் இருந்தனர். அன்று அவனை காண்பதற்கு உதயன் வந்திருந்தான். ஆதி நன்றாக கண் விழித்து இப்பொழுது பேசும் நிலைக்கு வந்த பின் உதயனை அப்பொழுது தான் காண்கிறான்.
இப்பொழுது அந்த அறையில் இவர்கள் இருவர் மட்டுமே இருக்க யார் முதலில் பேச்சினை ஆரம்பிப்பது என்பதுப் போல் தான் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு சுவரைப் பார்க்க தரையை பார்க்க வேண்டிய நேரத்தை கடத்தினார்.
ஆதியே முதலில் தன் பேச்சினை துவங்கினான்.
"யுகனிகா இங்கே என்ன பார்க்க வந்தாளா ? இந்த விஷயத்துல நீ என்கிட்ட பொய் சொல்லணும் நினைக்காதே. என்னால மயக்கத்தில இருந்தாலுமே அவள் வந்ததை உணர முடிஞ்சது " என்க,
"ஆமா அவ வந்தா அவ வந்து உன்ன பார்த்து அடுத்த செகண்ட் நீ கண்ணு முழிச்சிட்டே. எனக்கு இது ஆச்சரியமாக தான் இருந்தது. அப்புறம் தான் புரிஞ்சுகிட்டேன் உன் காதலோட ஆழம் என்ன அப்படின்னு. ஆனா எனக்கு என்ன சொல்லணும்னு தெரியல. நீ முதலில் குணமாகி வா அப்புறம் பார்த்துக்கலாம் எல்லாத்தையும் "
"நீ என்கிட்ட முக்கியமான விஷயத்தை மறைக்கிறேன் என்னால நல்லாவே புரிஞ்சுக்க முடியுது உதயன். எனக்கு விபத்து நடந்தப்பே யுகனிகாவோட மடியில என்னை தாங்க, அப்ப அவ பிரசாத்ன்னு யாரையோ சொன்னா. அவ கண்ணுல இருந்து கண்ணீர் விழுந்தது. ஆனால் அது எனக்காக இல்ல அப்படிங்கிறத நான் அந்த நிமிஷம் உணர்ந்தேன். சொல்லு யார் அந்த பிரசாத் ? யுகனிகாவோட கடந்த காலம் என்ன ? ஏன் அவ என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றேன் ? ஏதோ இருக்கு சொல்லு நான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன் "
"இப்ப நீ தெரிஞ்சுக்கலாம். ஆனா அதுக்கான நேரம் இது கிடையாது. நீ கண்டிப்பா வீட்டுக்கு வந்ததும் நானே உன் கிட்ட எல்லாத்தையும் சொல்றேன் " என்றதும், மருத்துவர் வரவே அப்பொழுது அதனை கூற நேரமில்லை என்பதால் இருவரும் விலகிக் கொண்டனர்.
அவ்வப்போது யுகனிகா தான் உதயனுக்கு அழைத்து ஆதியின் நலம் பற்றி விசாரித்துக் கொண்டாள். ஒரு வாரம் கடந்து இருக்கவே அன்று ஆதி சரியாகி பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருக்க மனதளவில் இந்த வாழ்க்கைக்கு திரும்பி வந்தான்.
அதே போல் என்ன முயன்றாலும் கடந்த காலம் யுகனிகாவிற்கு என்றுமே மறக்க முடியாத ஒரு நினைவு தான். அது அவளுக்கு மட்டுமல்ல அவளின் குடும்பத்தாருக்கும் தான்.
இப்பொழுது ஆதியை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் கூறி இருக்கவே, அன்று அவனை வீட்டுக்கு அழைத்து வந்தனர். தலையில் பெரிய கட்டு கை கால்களில் ஆங்காங்கே கட்டுகள் என்று வீட்டுக்கு வந்தான். அவனால் கைப்பிடி உதவியோடு தான் நடக்க முடிந்தது. அக்கம் பக்கத்தினர் தெரிந்தவர்கள் என்று அனைவரும் வீட்டுக்கு வந்து நலம் விசாரித்துச் சென்ற வண்ணம் இருந்தனர். வந்தவர்களை கவனிப்பதில் நாச்சியும் பரபரப்பாக இருக்க அப்பத்தாவே தன் பேரனின் அருகிலே இருந்து கவனித்துக் கொண்டார்.
ஆதியை ஏற்றிய அந்த வண்டியின் லாரி டிரைவரைப் பிடித்து ஸ்டேஷனில் வைத்து அவரின் மீது கேஸ் நடந்துக் கொண்டிருந்தது. எதிர்பாராத விபத்து என்றாலுமே அவ்வளவு விரைவில் இதனை முடிக்க மாட்டார்கள். தென்னவன், தன் மகனை ஏற்றியதற்கு சிறிது தண்டனையாவது அவனுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால இப்பொழுது வரை அந்த லாரி டிரைவர் கைதியாகவே ஜெயிலுக்குள் கிடந்தான்.
நாட்கள் கடக்க மெல்ல மெல்ல உடல் நலம் தேறி வந்தான். ஆதி இப்பொழுது யுகனிகாவை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும் என நினைத்து அன்று உதயனை வீட்டுக்கு வரக் கூறியிருந்தான். அவனும் நீண்ட வருடங்களுக்கு பிறகு அவனின் வீட்டுக்குள் நுழைந்தான்.
"வாப்பா என்ன விஷயம் ?" அமர்ந்திருந்த அப்புச்சி கேட்க,
"ஆதி என் கிட்ட பேசணும்னு சொல்லி இருந்தான். அதனால தான் வந்தேன் அப்புச்சி " என்றதும்,
" அவன் ரூம்ல தான் இருக்கான். மருமகளே உதயன் வந்து இருக்கான் பாரு. அவனுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா " சமையலறையை பார்த்து குரல் கொடுத்ததும் அவரும் உள்ளே இருந்து சரி எனக் கூறினார்.
கீழே இருந்த ஒரு அறையில் தான் இப்பொழுது ஆதி இருக்கவே, அந்த அறைக்குள் நுழைந்தான். அவனின் அப்பத்தா பக்கத்தில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து மகாபாரதம் புத்தகம் படித்துக் கொண்டிருக்கவே, சத்தம் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தார்.
ஆதியும் அவனைக் கண்டு உள்ளே வரவேற்றான்.
"அப்பத்தா நான் இவன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் " என்றதும்,
"அது சரி தான்டா " எனக் கூறிய பேச்சியம்மாள் அப்பத்தாவோ மெல்ல எழுந்து அந்த அறையை விட்டு வெளியேறினார்.
"இப்ப நீ என்கிட்ட சொல்லலாம்ல. நான் வீட்டுக்கு வந்துட்டேன். எனக்கு உடம்பு நல்லாவே தேறிட்டு சொல்லு என்ன தான் பிரச்சனை ? காலம் முழுக்க அவ கல்யாணம் பண்ணாமையே இருந்து அவ வாழ்க்கை அப்படியே போகவா. நீ உண்மையிலேயே அவளுக்கு ஒரு பெஸ்ட் பிரெண்ட்ஆ இருந்தே அப்படின்னா அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுக்கணும் தான் நீ நெனச்சி இருக்கணும் "
"ஆனா அவ உன்னை வேண்டாம்னு சொல்றா "
" நீ அதுக்கு ஏத்த மாதிரியே அவளுக்கு துணையாவே இருக்க ஒரு பொண்ணால கடைசி காலம் வரைக்கும் அப்படியே இருந்துற முடியுமா ? நான் ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்கணும் தாண்டா நினைக்கிறேன். அவளுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் நான் ஏத்துப்பேன். சொல்லு அப்படி அவளுக்கு என்ன தான் பிராப்ளம் ?"
"இதுக்கு மேல உன்கிட்ட மறைச்சி என்ன பண்ண சொல்றா. ஆனா அதுக்கப்புறம் நீ யுகனிகாவை ஏத்துக்குறதும் விடுவதும் உன்னோட விருப்பம் தான். நான் அதுல எதுவுமே எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் " எனக் கூறிய உதயன் அவளின் கடந்த காலத்தைப் பற்றி கூறினான்.
கருத்துக்களைப் பகிர,
Latest Post: கையில் மிதக்கும் கனவா நீ..!! (முதல் பாகம்) - Story Thread Our newest member: Chitra Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page