About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 18
மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும் உதயனுக்கு அந்த நள்ளிரவில் யுகனிகாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
இரவு நேரம் எதற்கு அவளிடம் தகவல் சொல்ல, காலையில் சொல்லிக் கொள்ளலாம் என உதயன் நினைத்திருக்க, அவளே அழைத்து விட்டாள்.
"நீங்கள் எல்லாரும் கார்ல ஏறுங்க. இதோ வரேன் " எனக் கூறியதும் அவர்கள் அனைவரும் அவனை தாண்டிச் செல்ல,
கைப்பேசியை எடுத்து, " சொல்லு யுகனிகா ?" என்க, இந்த வார்த்தை உதயனை தாண்டிச் சென்ற நிகழ்மதியின் செவியில் நன்றாகவே விழுந்தது.
'யாரவள் யுகனிகா ? இந்த நடு இரவில் இவனுக்கு எதற்கு அழைப்பு விடுக்கிறாள் ' என்ற எண்ணத்தில் நிற்க முடியாது தன் பெற்றோரோடு நகர்ந்து விட்டாள்.
"அவங்களுக்கு இப்போ எப்படி இருக்கு ? டாக்டர் எதுவும் சொன்னாங்களா ? நீங்க கால் பண்ணுவீங்கன்னு எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன். ஆனா நீங்க பண்ணவே இல்ல எனக்கு மனசு கேட்கல. அதான் நானே கால் பண்ணிட்டேன். இப்ப எங்க இருக்கீங்க ?"
"ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கேன். இப்ப தான் வீட்டுக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன் இப்போதைக்கு அன்கான்சியஸ்ல தான் இருக்கான். உயிருக்கு எந்த ஆபத்து இல்ல. அவங்களால இப்போதைக்கு உறுதியாக எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அன்கான்சியஸ்ல இருந்து ஆதி வெளி வந்தா தான் அடுத்து என்னங்கிறதை அவங்களால முடிவு பண்ண முடியும் ? நீ கவலைப்படாத ஆதிக்கு எதுவுமே ஆகாது "
"ஆனா பிரசாத்துக்கு அடிபடும் போது அவர் கண்முழிச்சு நம்ம கிட்ட பேசினார்ல. ஆனா ஏன் ஆதி கண் விழிக்கலை. ஒரு வேளை எதுவும் பெரிய பிரச்சனையா இருக்குமோ ?" என பதட்டத்தோடும் தவிப்போடும் கேட்கவே, அந்த அக்கறை உதயனை யோசிக்க விடவில்லை.
மற்ற நேரமாக இருந்திருந்தால் எதற்காக இவள் ஆதிக்காக இவ்வளவு பதட்டப்படுகிறாள் தடுமாறுகிறாள் என்றெல்லாம் நினைத்திருப்பான். ஆனால் ஆதியிடத்தில் அவள் பிரசாத்தை நினைக்கும் போது தான் அவள் இப்படி செய்கிறாள் என உதயன் நினைத்துக் கொண்டான்.
"நீ எதைப் பத்தியும் யோசிக்காம தூங்கு யுகனிகா. காலையில எல்லாம் நல்லபடியாக நடக்கும். நான் ஆதி கண் விழித்ததும் கண்டிப்பா உனக்கு சொல்றேன். நீ உன்னையே வருத்திக்காதே ! அப்பறம் அப்பா அம்மா தான் உன்னை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருப்பாங்க "
"சரி உதயன் எதா இருந்தாலும் எனக்கு தகவல் சொல்லுங்க ப்ளீஸ். இல்லன்னா என் மனசு உறுதிக்கிட்டே இருக்கும்.
சரி நான் வச்சிருறேன் " எனக் கூறி தன் கைபேசியை வைத்ததும், காரில் ஏறி டிரைவர் இருக்கையில் அமர்ந்தான். அவனின் முகத்தில் இருக்கும் யோசனை அவன் புருவங்கள் சுருங்குவது இதையெல்லாம் வைத்து நிகழ்மதிக்கு அவனை தவறாக யோசிக்க தோன்றவில்லை என்றாலும் அப்படி என்ன அதிதீவிரமாக ஏதோ ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அந்தப் பெண் யார் ? என நினைத்தாள். அவளாலும் அதற்கு மேல் யோசிக்க முடியாது. அவளின் அண்ணனே விழிகளின் முன் வந்து நின்றான். அவர்கள் அனைவரையும் பத்திரமாக தங்களின் ஊருக்கு அழைத்துச் சென்று அவர்களின் வீட்டில் விட்டான்.
"காலையில நானே வந்து எல்லாரையும் கூட்டிட்டு போறேன் நீங்க போக வேண்டாம். அப்புச்சி கவலைப்படாதீங்க அவனுக்கு ஒன்னும் ஆகாது " என ஆறுதல் கூறி காரினை அவர்களின் வீட்டில் நிறுத்தவே,
"நீ எடுத்துட்டு போயிட்டு காலையில வாப்பா. இந்த ராத்திரி நேரம் நீ எப்படி போவ " என்றதும் சரி எனக் கூறி அவர்களின் காரனை எடுத்துக் கொண்டு தன் வீடு நோக்கிச் சென்றார்.
இரவு நேரம் யாருக்குமே துயில் என்பதே இல்லை. அனைவருமே அழுகையோடும் தவிப்போடும் தான் இருந்தனர். எப்பொழுதுடா விடியும் என்ற எண்ணத்தில் தான் இருக்க ஒரு வழியாக மறுநாள் விடிந்து விட்டது.
அன்று மனமே இல்லாமல் பள்ளிக்கு கிளம்பிச் சென்றால் யுகனிகா.
"அம்மாடி நான் வேணா வந்து உன்னை ஸ்கூல்ல விடட்டா " என்று அவளின் தந்தை உத்தமன் கேட்கவே,
"இல்லப்பா வேண்டாம் நான் போய்க்கிறேன் " எனக்கூறி அவளே தனியாக வீட்டில் இருந்து கிளம்பினாள்.
ஆனால் மகள் இன்னும் நேற்று நடந்த நிகழ்விலிருந்து மீண்டு வரவில்லை என்பது பெற்றவருக்கு நன்கு புரிந்தது. அவளே செல்கிறேன் எனும் போது தடுக்க முடியாது என்பதால் சரி என்றார். ஒன்பது மணி போல் மீண்டும் அவளுக்கு அழைப்பினை விடுத்து பத்திரமாக பள்ளிக்குச் சென்று விட்டாயா ? என்று கேட்க வந்து விட்டேன் என்று கூறினாள். அதன் பின் தான் உத்தமனுக்கும் நிம்மதியான உணர்வு.
அன்று முழுவதுமே அவளால் பாடம் நடத்தவே முடியவில்லை. அவளின் கவனமும் சிதறியது. எப்பொழுதுடா உதயனிடமிருந்து அழைப்பு வரும் என்று தான் எதிர்பார்த்து காத்திருந்தாள். அவன் கண் விழித்ததும் அழைக்கிறேன் என்று கூறி இருந்தான். ஒரு வேளை இன்னும் கண்விழிக்கவில்லையோ தவிப்போடு நினைத்துக்கொண்டு நொடிப் பொழுதினை கடந்தாள்.
கூறியதுப் போலே காலை நேரமே ஆதியின் வீட்டார் அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டான் உதயன். சிறிது நேரத்திலே உதயனின் வீட்டாருமே ஆதியை காண்பதற்காக மருத்துவமனை வந்து விட்டனர்.
அவர்களுக்கு இரவு தான் விஷயமே தெரியும். இரவு நேரம் அவர்களும் வருகிறேன் என்று கூற உதயன் தான் வேண்டாம். நான் இவர்கள் உடன் இருந்துக் கொள்கிறேன் என கூறி இருந்தான்.
அதனாலே இப்பொழுது வந்திருந்தனர். மல்லிகாவோ ஒப்பாரி வைத்து தன் குடும்பத்தாரிடம் அழுது தீர்த்து விட்டார். ஏற்கனவே கவலையில் இருக்க தன் மருமகனுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று மல்லிகா அழுகவே, மேலும் அவர்கள் அழுது கரைந்தனர்.
மாலை நேரம் ஆகி விட ஆதியோ கண் விழிக்கவில்லை. இப்பொழுது ஒவ்வொருவர்ராக பேச முயற்சி செய்துக் கொண்டு தான் இருந்தனர். தங்கள் பேசுவது அவனுக்கு புரியும் என்று மருத்துவர் கூறி இருக்கவே அதற்கான முயற்சியில் இறங்கி இருக்க அதுவும் தோல்வியைத்தான் தழுவியது.
உணவினை முற்றிலும் அனைவரும் மறந்தே போனார்கள். பசி என்பது எப்படி இருக்கும் ? தன் வீட்டு பிள்ளை அங்கு கவலைக்கிடமாக இருக்கும் பொழுது பசியா முக்கியம் ?
உதயன் தான் வற்புறுத்தி அனைவருக்கும் ஸ்னாக்ஸ் வாங்கிக் கொடுத்தான். உதயனை சுத்தமாக பிடிக்காத அப்பத்தா நாச்சி இருவருமே இப்பொழுது அவனின் உதவியால் நடமாடிக்கொண்டு இருந்தனர்.
அவன் மட்டும் ஆறுதல் கொடுத்து துணையாக இல்லாமல் இருந்தால் இந்த நொடி சற்று சிரமம் தான் ஏற்பட்டிருக்கும்.
மாலை நேரம் பள்ளி முடிந்து விடவே மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என்று அனைவரும் கிளம்பிச் சென்றவாறு இருந்தனர். இன்னும் ஸ்டாப்ரூமில் அமர்ந்தவாறு இருந்த யுகனிகாவிற்கு ஆதியின் நினைவு தான். அவனைச் சென்று பார்க்கலாமா ? பார்க்கும் தொலைவில் தான் இருந்தான். அவள் இருந்த அதே டவுனில் இரு கிலோ மீட்டர் தொலைவில் தான் மருத்துவமனையில் அவன் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்பது தெரியும். அவனைப் பார்த்து வந்தால் அவர்களின் வீட்டார்கள் எதுவும் நினைத்துக் கொள்வார்களோ என தயங்கிக் கொண்டே இருந்தான்.
தான் சென்றுப் பார்த்தால் தனக்கு சிறிது ஆறுதலாவது இருக்கும் இல்லையென்றால் தன் மனம் அவனை எண்ணி வெந்து கொண்டே இருக்கும் என்பதில் உறுதியாக இருந்தாள்.
உதயனுக்கு அழைப்பு விடுத்து, " அவங்க கண் முழிச்சிட்டாங்களா ?நான் ஒரு தடவை பார்க்கலாம்னு நினைக்கிறேன். பக்கத்துல தான் இருக்கேன் வரட்டுமா " என்று தயக்கத்தோடு அவனிடம் கேட்கவே,
"அது உன்னோட விருப்பம் தான். நீ வரணும்னா வா. நான் இங்க தான் இருக்கேன் "
"சரி நான் வரேன் ஆனா அவங்க வீட்ல உள்ளவங்க எல்லாம் எதுவும் நினைப்பாங்களோ ? எனக்கு பயமா இருக்கு "
"அத நான் பார்த்துக்குறேன். உனக்கு அவனை பார்க்கணும்னு தோணுச்சுல்ல. அப்புறம் என்ன வா " என்றதும் சரி எனக் கூறியவள் அடுத்த நிமிடமே தன்னை சரிப்படுத்திக் கொண்டு மனதையும் திடப்படுத்தினாள்.
தன் ஸ்கூட்டியை எடுத்து மருத்துவமனைச் நோக்கி சென்றாள். நேரம் கடந்து மருத்துவமனைக்கு வந்து வாசலிலே நிக்க அவளை வந்து அழைத்தான் உதயன்.
"வா "எனக் கூறி உள்ளே அழைத்துச் செல்ல, அங்கே அவனின் குடும்பத்தார் அனைவருமே இருந்தனர். உதயன் குடும்பத்தார் சில நிமிடங்கள் இருந்து பின் சென்று விட்டனர். இப்பொழுது ஆதியின் குடும்பத்தார் மட்டும் தான் இருந்தனர்.
ஒரு பெண்ணை உதயன் அழைத்துக் கொண்டு வரவே, நிகழ்மதியின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து விட்டது. யார் இவள் ? எதற்கு இந்த பெண்ணை இவன் மருத்துவமனைக்கு அழைத்து வருகிறான் ? நிகழ்மதி இதயத்துடிப்பு ஓசை அவளுக்கே கேட்க படபடவென நின்றிருந்தாள். அவளுக்கு தான் உதயனின் மீது வைத்த காதல் தனக்கு கிடைக்காதோ என்ற எண்ணம்.
"யாருப்பா இந்த பொண்ணு ?" தென்னவன் கேட்கவே,
"மாமா அன்னைக்கு உங்க கிட்ட சொல்லி இருந்தேன்ல அது இவ தான் " என கூறிக் கொண்டிருக்கும் போதே,
"அம்மாடி என் பேரனுக்கு இப்படி ஒரு நிலைமையா ? நேத்து நீ தான் அந்த நிமிஷத்துல கடைசியா இருந்த, அவன் கடைசியா உன்ன தான் பார்த்ததா ஆட்கள் சொன்னாங்க " என்று அவளின் கரங்களைப் பற்றிக் கொண்டு அப்பத்தா புலம்பவே,
ஏற்கனவே கோவில் வைத்த பழக்கத்தில் தான் அவர் இருந்தார் அவருக்கு இந்த பெண் ஏன் வந்தால் என்றெல்லாம் தெரியாது. ஆனால் தென்னவனுக்கு நன்கு தெரிந்து விட்டது. எதற்காக உதயன் அழைத்து வந்திருக்கிறான் என்று யோசனையில் உதயனை பார்த்தார்.
"இவ நம்ம ஆதியை பார்க்கணும்னு சொல்றா ஒரு தடவை பார்த்துட்டு போட்டுமே " என்று மாமாவிடம் உதயன் கேட்க, மற்றவர்களுக்கும் சந்தேகம் இவன் ஏன் அவனை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாள் ?
"மாமா ப்ளீஸ் இந்த நேரம் வேண்டாம்ன்னு சொல்லாதீங்க எனக்காக " கேட்கவே, சரி என தலையசைத்தார் தென்னவன்.
"நீயும் கூட போப்பா " என்றதும்,
"சரிங்க மாமா " என்றவனோ அவளை அழைத்துக்கொண்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு நுழைந்தான்.
அங்கே மூச்சுக்கு சுவாசக் கருவி பொருத்தி இருக்க உடல் முழுவதும் கட்டுக்களோடு படுத்து இருந்த ஆதி அவளின் விழிகளுக்கு பிரசாத் ஆகத்தான் காட்சி கொடுத்தான். ஆனால் என்ன பிரசாத் கடைசி நொடி மருத்துவமனைச் சென்று பார்த்த பொழுது அவன் தன்னிடம் பேசினான். ஆனால் இவனோ ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கிறான். அது ஒன்று மட்டும்தான் வித்தியாசம்.
அவன் பேசிய நொடி இறந்தான் ஆனால் இவன் பேசாமலே தன்னை உயிரோடுக் கொள்கிறான் என்பதை அவளே அறிந்த நொடி அவளுக்கே அந்த உணர்வு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
"டேய் ஆதி யுகனிகா வந்து இருக்கா. கண்ண தொறந்து பாருடா " என அவனின் கரங்களை மெல்ல தட்டி அவனை எழுப்ப முயற்சிக்க,
" நீ ஏதாவது பேசு " என்றதும்,
"என்னால தான் உங்களுக்கு இப்படி நடந்துன்னு நினைக்கும் போது நிம்மதியா இருக்க முடியல. தயவு செய்து உங்கள கெஞ்சி கேட்கிறேன் கண்ணு முழிச்சு நீங்க திரும்ப உங்க குடும்பத்தாளுங்க கூட சந்தோஷமா இருக்கணும். இப்படியே இருக்காதீங்க எனக்கு என்ன சொல்லணும் தெரியல. ஆனா என்னால முடியல " என்றவளோ அவனின் முன்னே அழுகையோடு கரம் குவித்து கண்ணீரோடு வேண்டிக் கொண்டு கூறினாள். அவளின் கண்ணீர் துளி அவனின் கரங்களின் மீது விழுந்தது.
சில நிமிடங்கள் கடக்கவே, "சரி யுகனிகா கிளம்பலாம். ரொம்ப நேரம் நம்ம உள்ளக்க இருக்க முடியாது " எனக் கூற, அதே நேரம் செவிலிப் பெண்ணும் அவனுக்கு டிரிப்ஸ் மாத்தி விட வரவே, சரி என இருவரும் வெளியேறினார்.
அந்தப் பெண்ணின் கண்கள் கலங்கி இருந்ததும் அவள் வாடிய முகத்தோடும் உணர்வற்ற நிலையில் நிற்கிறாள் என்பதை அனைவராலும் நன்கு உணர முடிந்தது. அவளுக்குத்தான் ஆதியை பிடிக்கவில்லையே பின் ஏன் இவ்வளவு வேதனையில் தவிக்கிறாள் என தென்னவன் நினைத்தவாறு இருந்தார்.
"நான் அனுப்பிட்டு வந்துடுறேன் " எனக் கூறிய ஆதி யுகனிகாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினான். அவள் அங்கு வெளியேறிய அடுத்த நொடி இங்கே ஆதி தன் உணர்வுக்கு வந்தான்.
அவளின் வார்த்தைகள் அவனுக்குள் புகுந்திருந்தது. அதை விட விழி மூடும் கடைசி நொடி அவள் கண்ணீர் துளி பட, மீண்டும் இப்பொழுது அதே கண்ணீர் துளி தன் மேனியில் பட்டது தான் அவனை சிலிர்க்க வைத்து எழுவதற்கு முயற்சி செய்தது.
கருத்துக்களைப் பகிர,
Latest Post: கையில் மிதக்கும் கனவா நீ..!! (முதல் பாகம்) - Story Thread Our newest member: Chitra Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page