About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
மனம் -20
உள்ளே நுழைந்ததும் சகஸ்தாவை வேணி பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்றச் சொன்னார்.
அவளும் கடவுளைப் பிரார்த்தித்து விட்டு விளக்கையும் ஏற்றினாள்.
சில உறவினர்கள் அங்கு தான் தங்கியிருந்தனர்.அவர்களும். அங்கிருந்து அனைவரிடமும் சொல்லிக் கொண்டு வெளியேறினர்.
"அக்கா ,நாங்களும் கிளம்புறம் என சாரு சொல்ல," வேணியோ நின்று நாளைக்காவது போகலாமே சாரு என்றார்.இல்லக்கா போனா தான் நேரத்திற்கு போய்ச் சேரலாம் என்றனர் சீலன் தம்பதியினர்.
சகஸ்தாவை அழைத்துச் சென்ற ஸ்ரீ அவள் முன்பு தங்கியிருந்த அறையில் விட்டவள், ஃப்ரெஷ்ஷாகுடா, காஃபி கொண்டு வாரன் என கூறி வெளியேறினாள்.சகஸ்தாவும் தன் தலையலங்காரங்களை கழட்டிக் கொண்டிருக்கும் போது அவ்வறையின் பக்கவாட்டுக் கதவைத் திறந்தபடி நுழைந்தான் ரிஷி,
தலையலங்காரத்தை கழட்டியதால் ஆங்காங்கு சில முடிகள் எழும்பியிருக்க, கண்ட ரிஷிக்கோ சிரிப்பு வரவே.....முழுசா சந்திரமுகியா மாறியிருக்கிற என் பொண்டாட்டியப் பார் " என்றபடி சகஸ்தாவின் கண்ணத்தைப் பற்றி கண்ணாடியை நோக்கித் திருப்பி கண் சிமிட்டினான். அவளோ அவன் கிண்டலில் முறைக்க முயன்று சிரித்துக் கொண்டாள்.
ரிஷியும் அவளை சீண்டியபடி மீண்டும் தனதறைக்குள் நுழைந்து கொண்டான்.
ஸ்ரீயும் காஃபியுடன் வந்தவள்,சகஸ்தா காபியை குடிடா நான் கீழ போறன் என்றாள் ஸ்ரீ.
காஃபியை குடித்து விட்டு
ரிஷி மீண்டும் வந்துவிடுவானோ என எண்ணியவள் கட கடவென சேலையை மாற்றியவள் வேறு ஆடையொன்றை மாற்றிக் கொண்டு குளியலறை நுழைந்தாள்.
விரைவாக குளித்து வெளியே வர அதிர்ந்து போனாள்.இடையில் டவலுடன் அவ்வறையில் இருந்த கண்ணாடியைப் பார்த்து தலைவாரிக் கொண்டிருந்தான் ரிஷி.
கண்ணாடி வழியே குளியலறை விட்டு வெளியேறியவளை பார்த்தவன்.அவளை நோக்கித் திரும்பி அவளை நோக்கி அடிமேல் அடிவைத்து மிக அருகில் அவளருகில் வர அவன் மூச்சுக் காற்று அவளில் பட தலையைக் குனிந்து கொண்டாள்.
அவனைத் தாண்டி அவள் செல்ல முற்பட பக்கவாட்டாக அவள் கையை பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.அவளும் அவன் மார்பில் மோத அவள் உடலில் இருந்த நீர் அவனது வெற்றுத் தோள்களில் ஆங்காங்கு படிந்தது.
அவளோ அவன் உரமேரிய மார்பில் கை வைத்துத் தள்ள ,அவன் அசைவேனா என்றான்." அவள் உதடுகள் வேறு துடிக்க, துடிக்கும் இதழைக் கௌவிக் கொண்டான்.ஆழ்ந்த முத்தம் இருவருக்கும்,அவள் வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு,தான் எங்கோ பறந்து கோண்டு இருப்பதாகவே உணர்ந்தாள்.
குளித்தனால் இருவர் உடலிலும் காணப்பட்ட ஈரம் கூட ஆவியாகியது.அவளோ உஷ்ணம் இருவர் உடலிலும்.
அவள் மூச்சிற்குத் தவிக்கவே,அவள் இதழில் இருந்து இதழை விடுவித்தான்.
அவளோ சுயம் அடைந்து,நிதானிக்கவே இரு நிமிடம் எடுத்து.அவனை தள்ளிவிட்டபடி மீண்டும் குளியலறை நுழைந்து கொண்டாள்.
அவ்வறையை விட்டு அவனும் சிரிப்புடன் தலையைக் கோதியவாறு வெளியேறினான்.வெளியேறும் முன் "டால் ரெடியாகி கீழ வா" என்றான்.
அறையை விட்டு அவன் வெளியேறும் சத்தம் கேட்ட பின் தான் அவளும் குளியலறை விட்டு வெளியே வந்தாள்.அவள் கண்ணங்கள் வேறு வெட்கத்தால் சிவந்து காணப்பட்டது.
சாதாரண உடைக்கு மாரிய ரிஷி,கீழே வர ஸ்ரீயும் மாடியேறி வந்தாள்," சகஸ்தா எங்க என அவள் கேட்க" ரெடியாகிறா என்றவன் ரெஸ்ட் எடுத்திருக்கலாமேக்கா அடிக்கடி ஏன் மாடி ஏறுற என்று கடிந்து கொண்டான் ரிஷி
சாரு ஆன்டியும் சீலன் ஆங்கிளும் ஊருக்கு போக என்று சொல்றாங்க என்றாள் "ம்ம் என்றபடி இருவரும் கீழ் இறங்கி வந்தனர்.
"மாமா இங்கே தங்கிக்கலாமே,என்றபடி ரிஷி வர சீலனோ" இல்ல மாப்பிள்ளை அங்க எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு,நாங்க கிளம்புறம் என்றார்.அவரை மேலும் சங்கடப்படுத்தாதவன்,சுபி நீயாவது நீன்று நாளைக்கு போ " என்றான் ரிஷி.
சுபியோ,தாய் ,தந்தையைப் பார்த்தபடி ,"ஓகே அத்தான் அம்மா,அப்பாவ வழியனுப்பிட்டு வாரன் என்றான் "
சகஸ்தாவும் அவ்விடம் வர உரிமையாய் தழுவியது ரிஷியின் பார்வை,தாயிடம் வந்த ஞகஸ்தா "அப்போ நாங்க கிளம்புறம்மா,"என்றார் சாரு அவளோ பதட்டத்துடன் தாயைப் பார்க்க , சூழ்நிலையை இலகுவாக்கவென ,"அம்மா பீடிங் பாட்டில் ஒன்னு குடுங்க இவளுக்கு என்றான் சுபி.அவனை முறைத்தவள் தாயின் கையைப் பிடித்தபடி நிற்கலாமேமா என்றாள்.பயிதவிப்படன்.
எப்படி மகளிடம் சொல்லிப் புயிய வைப்பது என எண்ணிக் கொண்டார்.அப்போ சாப்பிட்டு போகலாமே சாப்பாடும் தயாராகிடு என்றார் நேரத்தை பார்த்தபடி.அப்போது பிரகாஷிம்,ரஞ்சித்தும் வீட்டிற்குள் நுழைந்தனர்.
பின் அனைவரும் ஒன்றாகவே இரவுணவை உண்டனர்.சாப்பிட்டு முடிந்ததும் மகளை தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற சாரு.அவள் கண்ணம் வருடியவர், மாப்பிள்ளை உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்காருமா!!!!!நல்லா பார்ததுபா வேணி, நாங்க இங்க தங்குறது முறையில்லமா, மறுவீட்டுக்கு வருவீங்க தானே ,சந்தோசமா இரும்மா" என்றார்.
அவளும் தாயை அனைத்து கண்ணீர் விட,அளளாமா??? இனி உன் கண்ணுல இருந்து சந்தோசத்துல கூட கண்ணீர் வரக் கூடாது என்றார் சாரு.அவளை பேசி சமாதானம் செய்து,புத்திமதி கூறி வீட்டினுள் அழைத்து வந்தார்.
அழுகையுடன் தான் தாய் ,தந்தைக்கு விடை கொடுத்தாள் சகஸ்தா,"அத்தான் என் ப்ரண்ட்ஸ் ஹோட்டல்ல தங்கிகியிருக்காங்க நானும் அங்க போகவா???என சுபி அவன் காதைக் கடிக்க,என்ன தண்ணி பார்ட்டி ஏதுமா?என புருவத்தை உயர்த்தி ரிஷி கேட்க, " நீங்க் வேற அத்தான் டீ டாட்லர் நான் என்றபடி,சகஸ்தாட சொல்லிறாதீங்க என்றவன்,அவனும் தாய் தந்தைக்கு விடை கொடுத்தபடி அவனும் ஹோட்டலை நோக்கிச் சென்றான்.
மனதில் நின்றவள் 20
எப்படி இருக்குனு சொல்லுங்க ப்ரண்ட்ஸ் 😀
Latest Post: மயக்கம் 25 Our newest member: Suba Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page