All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வாகை சூடவா ரிவ்யூ

Page 1 / 4
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 7 months ago
Posts: 269
Topic starter  

வாகை சூடவா போட்டி கதைகளின் விமர்சனங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் 


   
ReplyQuote
Gowri
(@gowri-karthikeyan)
Active Member Registered
Joined: 3 months ago
Posts: 13
 

#கௌரிவிமர்சனம்

 

  1. #நம்_காதல்_நாணலன்றோ….
  2.  

விக்ரமன் சார் படம் பார்த்த ஃபீல்….

 

முக்கியமா ஒரே positivity தான் கதை முழுக்க…..

 

சூப்பர் சாய்ஸ் ஃபார் ஃபீல் குட் ஸ்டோரி…

 

அதிவீரன் அண்ணன் குடும்பம் ரொம்ப பெருசு…அவரோட சேர்த்து நாலு தம்பி….

 

முக்கியமா, அவங்க எல்லாருக்கும் ஒரே தங்கை பொற்றாமரையாள்…அதும் அவளை அவங்க அன்னையா பார்க்கறாங்க…..

 

கடிந்து ஒரு சொல் சொல்ல மாட்டேங்கராங்க பா…..

 

அவளும் சும்மா இல்ல செம்ம பாசம் தான் அண்ணன்ஸ் மேல…..

 

அண்ணன்ஸ் மட்டும்னா பரவால்ல….அவ அண்ணிங்க கூட தன் குழந்தையா தாங்கராங்க டா…..

 

இப்படி இருக்கும் போது, படிக்க போன இடத்தில் காதல்….

 

ஆதி மீது…..

 

ஆதியும் தான்…

 

காதலை கூட, அவ படிப்பு முடியும் வரை காத்திருந்து சொல்றான்….

 

அவளோ அக்கறை அவ படிப்பின் மீதும்…அவளின் மீதும்…

 

யாரும் இல்லா வளர்ந்த இவனுக்கும், அவனின் யாழ் என்றால் உயிர் தான்….

 

அண்ணன்ஸ் எல்லாம் ஓகே சொல்லி கல்யாணமும் நடக்குது….

 

ஆன….

 

இந்த இவளோ பாசமே அவர்களிடம் பிரிவை உண்ணடாக்குது….

 

ஏன்????

 

எப்படி சேரறாங்க அப்படிகறது மீதி கதை….

 

அதிவீரன் & கோ, அர்ச்சனா & கோ, அங்கை, திலகா, காயு, செழியன், பொழியன், துர்கா & சங்கர்…

 

எல்லாத்துக்குமே யாழ்னா ரொம்ப ரொம்ப பிரியம் தான்….

 

அதை அப்படியே அவங்க வர இடம் எல்லாம் உணர்த்தராங்க…..

 

அக்னி, அதி & கோல யாழ் மேல பாசம் நிறைய இருந்தாலும்…அவளோட நியாயமான ஆசைகளை கண்ட்ரோல் பண்ண மாட்டான்….

 

அவங்களும் அப்படி இல்ல தான்…பட் கொஞ்சம் ட்ரெண்ட் லா இருக்கரவன்…..

 

அதும் அக்னி & ஆதி பாண்டிங், அவங்க ஃப்ரெண்ட்ஸ் ஷிப் அவளோ அழகு…..

 

இவங்க பார்ட் படிக்கும் போது ரொம்ப பிடிச்சது….

 

கதை ரொம்ப அழகா, full of positive vibe ஓட இருக்கு…..

 

கண்டிப்பா recommended to all….

 

எண்டிங் வரை வெயிட் பண்ண முடியல…படிச்சதும் சொல்லிரும்னு நினைச்சேன்….

 

இன்னும் ஒரே ஒரு எபி தான் இருக்கு…. complete ஆக….

 

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

 

லிங்க்👇👇👇👇

 

https://kavichandranovels.com/community/vsv-15-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b-01/


   
ReplyQuote
Gowri
(@gowri-karthikeyan)
Active Member Registered
Joined: 3 months ago
Posts: 13
 

#கௌரிவிமர்சனம்

 

#உயிர்_உள்ளவரை_யான்_உனதே 

 

கம்ப்ளீட் ஃபேமிலி டிராமா 🥰🥰🥰🥰

 

மாரி & பூமா தான் குடும்பத்தின் ஆணி வேர்….

 

இவங்க பையன் கணேஷ், பொண்ணு லக்ஷ்மி எல்லாமே ஒரே ஃபேமில்யா இருக்காங்க ஒரே வீட்டில்…

 

விஷ்ணு & ரேணு கணேஷ் சீதா பசங்க, விஷ்வா & ரேகா லக்ஷ்மி பசங்க….

 

முறை பசங்க அப்படிக்கரதில், அவங்க வீட்டில் இவங்க நாலு பேருக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கரங்க….

 

அதில் விஷ்வா & ரேணு லவ் பன்றாங்க… 

 

விஷனுக்கு அவளோ இன்டர்ஸ்ட் இல்ல ரேகா மேல….

 

இந்த விஷ்ணு சரியான சைகோ….

 

தென்றல் கிட்ட மட்டும்….

 

ஏன்????

 

தென்றல் அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்….

 

ரேகாக்கு தென்றல் கிட்ட விஷ்ணுவை தோத்து போயிருவோம்னு பயம்….

 

அந்த பயமே, அவளுக்கு வெறியை உண்டாக்குது….

 

விஷ்ணுக்கு தென்றல் மேல என்ன வெறுப்பு.????

 

அவன் சைகோத்தனதை ஏன் தென்றல் தாங்கனும்?????

 

அது எல்லாம் மீதி கதை…..

 

விஷ்ணு, உண்மையா இவனை எனக்கு பிடிக்கவே இல்ல…

 

ஆன்டி ஹீரோ அப்படினா கூட ஓகே….இவன் சைகோ….

 

தென்றல்…பாவமா இருந்தாலும் பல சமயம் கோவம் தான் வந்தது…..

 

அப்படி என்ன காதல் வேண்டி இருக்கு????

 

தன்மானத்தையும், தன் உயிரானவங்களையும் விட்டுட்டு????

 

பூமா, என்ன பெரிய மனுஷி இவங்க???? அவங்க பேரனுக்காக ஒரு பொண்ணு எவளோ தான் தாங்குவா????

 

இதுவே இவங்க வீட்டு பெண்ணை இன்னொரு வீட்டுக்கு அவ கணவனுக்காக இப்படி அனுப்புவாங்களா?????

 

அந்த ரேகா கொரங்கு அவளோ பண்ணுது….எல்லாத்துக்கும் சும்மா மோரச்சி மட்டும் பார்க்க வேண்டியது இந்த பாட்டி….

 

அதும் அவளோ கேவலமான விசயத்தை பண்ணி இருக்கா…

 

அதுக்காக என்ன தண்டனை கொடுத்தாங்க அவ வீட்டில்….

 

நல்லா இருக்கு பூமா உங்க நியாயம்…..

 

தென்றலுக்கு நீங்க செய்தது கொஞ்சம் கூட நல்லது இல்ல….

 

உங்க குடும்பத்தால் அவளுக்கு கிடைச்சது எல்லாம் வெறும் அவமானமும், கண்ணீரும் தான்….

 

லக்ஷ்மி, உங்களை கூட எண்ணமோனு நினைச்சேன்….ஆன உங்க பொண்ணு பாவம்னு சொன்னிங்க பாருங்க….

 

சூப்பர் போங்க….அவ எல்லாம் செய்வா…

 

அவ பாவமாம்….

 

இன்னொரு வீட்டு பொண்ணுனா, அவ கணவனுக்காக எல்லாம் தாங்கணும் அப்படி தானே?????

 

ரேணு, உனக்கு தென்றலே பரவில்லைனு நினைக்க வெச்சிட்ட…..

 

இப்படியா காதலுக்காக மனகெட்டு இருக்கறது….

 

இவ செய்யரதில் கொஞ்சம் கூட எனக்கு உடன்பாடு இல்ல…..

 

கதை நல்லா இருக்கு….

 

ஆன தென்றல், ரேணு கேரக்டர் எல்லாம் இன்னும் முதுகெலும்போட படைச்சி இருக்கலாம் ரைட்டர்….

 

இனி வரும் கதைகளில் female characters ஸ்ட்ராங் ஆ கொடுங்க டா…..

 

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

 

லிங்க்👇👇👇👇

 

https://kavichandranovels.com/community/vsv-52-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87/


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 5 months ago
Posts: 281
 

நம் காதல் நாணலன்றோ கதை அருமை. கூட்டுக் குடும்பம் பற்றிய கதை. தாமரை இவள் தான் குடும்பத்தின் ஆணிவேர் அண்ணன்கள் அண்ணிகள் பசங்களுடன் வசிக்கும் பெண்ணவள் காலேஜ் சென்று ஆதியை பிடிக்க காதலை சொல்லாமலே காதல் புரிந்து கொள்வது சூப்பர். கல்யாணம் ஆகி பிரிவு ஏற்பட அவர்களின் காதல் எப்படி ஏற்பட்டது அதன் பின்னர் அவர்களின் வாழ்க்கை சிறு சிறு சச்சரவு வந்தாலும் மனதில் வைத்து கொள்வது அதனால் வரும் பிரச்சினை என்று அழகாக கொண்டு போயிருப்பது சூப்பர். அண்ணன்கள் அவர்களின் உணர்வுகள் செம எதற்கு பிரிந்து இருக்கிறார்கள் என்பதை கேட்காமல் பிரச்சினை தள்ளி இருந்து யோசிக்க வைப்பது சூப்பர். மருமகன்களும் அத்தைக்காக மாமாவுடன் போயிருப்பது சூப்பர். அக்னி ஆதியை நண்பன் அவனின் உணர்வுகளை புரிந்த உறவு செம. பிரிவு கடைசி வரை என்ன காரணம் சஸ்பென்ஸ் போனது சூப்பர். ஆதி தாமரை ரொமான்ஸ் மற்றும் அந்நியோன்யம் அழகு. பேசியது காயப்படுத்தி இருக்கும் என்று பேசாமல் இருப்பது உணர்ந்து இணைவது அதற்கான சந்தர்ப்பம் மற்றும் துணையாக  இருந்தது சூப்பர். குழந்தைகள் வருவது அக்னி கல்யாணம் சுபமாக முடித்தது அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன். 


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 5 months ago
Posts: 281
 
  1. உயிர் உள்ளவரை யான் உனதே கதை சூப்பர். இது கூட்டு குடும்பம் பற்றிய கதை. பாட்டி தான் இங்கு எல்லாம் அவர் சொன்னால் என்று மருமகள் மருமகனும் ஏற்றுக் கொள்வது சூப்பர். காதல் இங்கே சுயத்தை இழந்து காதலை பெறுகிறது. தென்றல் வேலைக்காரி இருந்தாலும் பாட்டி சப்போர்ட் பண்ணுவது நமக்கு சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. விஷ்ணு  அத்தை பொண்ணு  பையன் மூவரும் டூ மச். ரேணுகா 👍. கார்த்தி செம நட்புக்காக செய்வது சூப்பர். ரேணுகா தென்றல் காதல் ஜெயிக்க சுயத்தை இழப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கார்த்தி அதிரடியான காதல் சூப்பர். விஷ்ணு பழசு மறந்தாலும் காதலித்து இருக்கிறோம் என்பது ஞாபகம் இருப்பது சூப்பர் அந்த வகையில் அவன் சூப்பர் தான். ரேணுகா காதலன் டூ மச் இவன்தங்கைக்காக என்று உணர்வை கொலை செய்வது டூ மச். பின்னர் திருந்துவது 👍. குழந்தைகள்வுடன் சுபமாக முடிகிறது. வாழ்த்துகள். வாழ்க வளமுடன். கார்த்தி ரொம்ப பிடிச்சிருக்கு. 

   
ReplyQuote
Saranya
(@kumarsaranya)
New Member Registered
Joined: 5 months ago
Posts: 1
 

நம் காதல் நாணலன்றோ-ஐந்து அண்ணன்களின் ஒரே தங்கை பொற்றாமரையாள்,அண்ணன் அண்ணிகளின் பாசமழையில் வளர்ந்தவள் ஆதிவருணேஷ்வரன் இல்லத்தில வளர்ந்தவன்,தாமரை ஆதி இருவரின் காதலும் கல்யாணத்தில்

கைகூட,அழகாக செல்லும் வாழ்க்கையில் இருவரும் பேசக்கூடாத பேச்சை பேசி பிரிந்துவிட,பின்பு இருவரும் தங்கள் இணைமீது வைத்திருக்கும் காதலாலும் அன்பாலும் இணைகிறார்கள் இருவரின் காதலும் மிக அழகு 🥰ஆதி மற்றும் அக்னியின் உறவு அருமை 😍இந்த கதையில் வரும் உறவுகள் எல்லோருமே சூப்பர் 🥰🥰🥰அழகான நிறைவான கதை சிஸ் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் 🤩🤩🤩


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 5 months ago
Posts: 281
 

என்றென்றும் அன்புடன் சந்தனா கதை அருமை. சந்தனா டாக்டர் சைக்காலஜி. இவளுக்கு மனோ பையன் மற்றும் லட்சுமிம்மாவுடன் வசிக்கிறாள்.எதிர்வீட்டில் ரஞ்சன் அவன் மனைவி ஷோபி  பையன் அஸ்வின்வுடன் அழகாக குடும்பம் நடத்துகிறான். குட்டி பிளாஷ்பேக் சந்தனாவின்  நிகழ்காலம் என்று கதை அழகாக நகர்கிறது சந்தனா கணவன் யாரு குகா வேற என்று குழப்பத்தில் கதை நகர்கிறது. குட்டியின் அம்மா கண்டிப்புடன் நல்ல பார்த்து கொள்வது செம. குட்டியின் நட்பு தீனா சூப்பர் பின்னர் மனோ கிடைக்க சூப்பரா போகுது மனோ குட்டியின் மேல் பள்ளி படிக்கும் போதே  காதல் வர அவனின் உரிமை உணர்வுடன் அவளை தன் வசம் வைத்து இருப்பது என்று நாட்கள் போக பிரிவு ஏற்பட அப்போது உனக்காக வருவேன் காத்திரு என்று சங்கிலி போட்டு போக அவளும் காத்திருக்க வருடம் செல்ல வரவில்லை. தீனா திடிரென சந்திக்க எல்லா உண்மை தெரியவர  ரைட்டர் மேல் தான் கோபம் ஏனெனில் அவனுக்கு பழையது மறக்க  அவன் அவள் உணர்வு அவ்வளவு அழகாக சொல்லி இருப்பது சூப்பர். அவள் ஒரு நாள் அவனிடம் வாழ்ந்து உனக்கு உன் குடும்பம் இருக்கு உணர்த்தி செல்வது நீ நன்றாக இருந்தால் நானும் நலம் என்று எழுதி விடை பெறுவது சூப்பர். குகா யசோ நட்பு சூப்பர். மனோ அவன் மகன் பார்த்து கொள்வான் என்று முடிப்பது சூப்பர். முடிவு அருமை. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன். 


   
ReplyQuote
Gowri
(@gowri-karthikeyan)
Active Member Registered
Joined: 3 months ago
Posts: 13
 

#கௌரிவிமர்சனம்

#என்றென்றும்_அன்புடன்_சந்தனா

தலைப்பு போலவே, அன்புடன் சந்தனா தான்🥰🥰🥰🥰🥰🥰

பூரணி, குட்டி ஓட அம்மா வீட்டில் வேலை பார்க்கறாங்க….

அங்க அந்த வீட்டு பையன் மனோ….

ஓடியாடி விளையாடர வயதில் காலில் அடிப்பட்டதால் நடக்க முடியாம இருக்க….

யாரை பார்த்தாலும் கோவம்….

அது, அங்கே வரும் குட்டி மீதும் பாய…..

மனோ என்றாலே பயம் குட்டிக்கு….

குட்டி கூட தீனா விளையாட வர….. மனோக்கு possessiveness….

ஒரு கட்டத்தில் சின்ன வயசிலேயே, தன் குட்டி தனக்கு மட்டுமே அப்படிக்கர அளப்பரிய அன்பு குட்டி மீது….

அதே தான் குட்டிக்கும் மனோ மீது…..

இப்படி ஒரு பக்கம்னா..,..

டாக்டர் சந்தனா, அவங்க பையனோட இருக்கா….

ரஞ்சன் & சோபி அவங்க பையன் உடம்பு சரியில்லைனு சந்தனாவை பார்க்க…..

அவங்க அப்படியே ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் ஆகராங்க….

சந்தனா ஹேப்பியா இருந்தாலும், சொல்ல படாத வருத்தம், வலி அவளிடம்……

என்னவா இருக்கும்?????

இது எல்லாம் இன்று போல நடக்குது…..

குட்டி மனோவின் இன்றைய நிலை?????

சந்தனாவின் வலி?????

அது எல்லாம் மீதி கதை…..

ரைட்டர்…ஒரே ஒரு வருத்தம் தான் எனக்கு…..

மணோக்கு மறந்தது மறந்ததாவே இருந்து இருக்காலம்…..

தீனாக்கு உண்மை தெரிஞ்சதோட இருந்து இருக்காலம்….

உண்மை தெரிஞ்சி, அவனால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடியாது தானே?????

சத்தியம் வாங்கினது அவன், காத்திருந்தது அவள்….

இதில் சோபி ஓட பரிசுத்த அன்பு என்ன ஆகும்?????

என் மனம், குட்டிக்காக வருந்து தான்….ஆன இனி சோபி?????

கதை நல்லா இருக்கு ரைட்டர்….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

https://kavichandranovels.com/community/vsv-48-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a/


   
ReplyQuote
Gowri
(@gowri-karthikeyan)
Active Member Registered
Joined: 3 months ago
Posts: 13
 

#கௌரி_விமர்சனம்

 

#மனதில்_நின்றவள்

 

ரொம்ப மென்மையான காதல் கதை…..

 

நோ டுவிஸ்ட் & டர்ன்ஸ்…..

 

சகஸ்தா, காலேஜ் முடிச்சி இன்டர்ன் விசயமா ரிஷி வீட்டுக்கு வர….

 

ஒரு வகையில், அவ அத்தை வீடு தான் அது….

 

அங்க அவளை பார்த்து பழகியதும் காதல் ரிஷிக்கு…..

 

ஆன சகாக்கு கடந்த கால வலிகள் நிறைய இருக்கு….

 

காதல், கல்யாணம் எல்லாம் அவ யோசிக்கவே இல்ல….

 

ஏன்னா, அவள் பட்ட வலி அது போல ..

 

ரிஷி ஓட அக்கா கூட நல்லா பழகர….அவன் அம்மா கூட கூட தான்…..

 

ஆன ரிஷியின் அதிரடி அவளுக்கு பயத்தையே கொடுக்குது…..

 

ஆனாலும் சின்ன சலனம் மனதில்….

 

அந்த சலனத்தையும் தூக்கி எரியுது ரத்னாவின் வருகை….

 

இனி ரிஷியின் காதல்????

 

சகாவின் கடந்த காலம்?????

 

கதை நல்லா இருக்கு ரைட்டர்….

 

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

 

லிங்க்👇👇👇👇

 

https://kavichandranovels.com/community/vsv-31-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d/


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 5 months ago
Posts: 281
 

மனதில் நின்றவள்  கதை சூப்பர். ரிஷி வீட்டுக்கு வருகிறாள் சகா  வேலை விசயமாக  அவளின் குணம் எல்லாம் பிடித்து  விடுகிறது ரிஷிக்கு அவளுக்கு அக்காவும் இருக்கிறாள் நல்ல பழக வைக்க இருக்கிறாள் சகா ரிஷி இருவருக்கும் பிடித்தம்  காதலாக மாறினாலும்  சகாவுக்கு  தயக்கம். ரிஷியை  இன்னொரு பெண்ணும் விரும்ப இவள் விலக ரிஷியின் மனம் தெரியாமல் வேலையை முடியவும் விலகிவர  சகா ரிஷி காதல் எப்படி வெற்றி அடைகிறது என்பதைப் short and sweet கொண்டு போய் இருப்பது சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன். சகா ரிஷி அழகு ரொம்ப பிடிச்சிருக்கு.


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 5 months ago
Posts: 281
 

கள்விழி மயக்கம் கதை அருமை. ஜாலியாக போகுது. கோகோ இவள் நம்மை அவள் வசம் இழுக்கிறாள்.ப்ரஜீ சஜித் அண்ணா தம்பிக்கு யார் தலைமை என்பதில் போட்டியில் பிரச்சினை மற்றும் தொழில் அழிப்பதில் வில்லன்கள் வர அதை கையாள்வதில் தொடங்கி உறவுகளிலும் பிரிவை உண்டாக்க வர அதையும் அழகாக கையாள்வது செம. ரிபேக்கா ப்ரஜீ அன்பை புரியாமல் செல்வது  கோகோ வேலைக்கு வருவது இளாவின் பாசம் அவனுக்கே வேலையை எப்படி கிடைத்தது தெரியாமல்  நமக்கு மண்டையை குழம்ப வைப்பது சூப்பர். ரிபேக்கா கோகோ மூலம் தான் ப்ரஜீ அன்பை அவனின் காதலை உணர்வது சூப்பர். சஜித் யாருக்கும் தெரியாமல் சாக்லேட் பேக்டரியை நடத்துவது கோகோ சத்யா என்று அவனின் மேல் அக்கறை கொள்வது சாப்பிட சொல்வது அவனை அன்பால் ஆட்டி வைப்பது அழகு. துகி இவளை கோபம் தான் வருகிறது பாவம் இளா. இவளால்  கோகோ காதலையை மறுக்க இளாவும் கோகோ மேல் கோபம் கொள்ள. ப்ரஜீ செம இவன் ரிபேக்கா சஜித் நல்ல நட்பு. வில்லன்கள் தண்டனை செம. துகி வேந்தன் சேர. சஜித் கோகோவை வைச்சு கொஞ்சம்விளையாடியபிறகு  இணைவது அழகு. ப்ரஜீ ரிபேக்கா அப்பா அம்மா ஆவது சூப்பர். மொத்தத்தில் கதை ஜாலியாக ரசிக்கும் படியாக இருந்தது. கோகோ வேலையை கொடுத்தவங்களை கடைசி வரை சஸ்பென்ஸ் கொண்டு போனது சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன். 


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 5 months ago
Posts: 281
 

வட்டிக்காரனின் வசியகாரியவள் கதை அருமை. வசி அன்புக்காக ஏங்குபவள் ஆனாலும் மனதை கட்டுபடுத்தி  அவள் அவள் வேலையை உண்டு என்று காலத்தை போக்கினாலும் அவளுக்கு என்றுரித்தீஸ்  அஅஞ்சலி நட்பு அவ்வளவு அருமை. சித்தி சித்தப்பா நல்ல பார்த்து கொண்டாலும் அவர்களின் மகளும் அம்மாவும் வசிகா  பேசியே அவளை கஷ்டப்படுத்துவது டூ மச். ரகசியா அன்னம் நல்ல அடிக்கனும். ஹீரோ ரண வேந்தன் குடும்பம் அன்பால் பிணைந்த குடும்பம். ரண வேந்தன் அம்மா சொல்வதை கேட்கும் நல்ல பிள்ளை. அப்பா தாத்தா பாட்டி அண்ணா அண்ணி அக்கா மாமா தங்கை தம்பி அண்ணா பசங்க அக்கா பசங்க என்று அவ்வளவு அழகு. வசி அன்னம் குடிகார மாப்பிள்ளை பார்க்க வெகுண்டு எழுந்து அவளுக்கு அன்பான குடும்பத்தில் இணைய வைக்க திகட்ட திகட்ட அன்பை வழங்க வட்டி மச்சான் வேந்தா என்று ஆசையாக கூப்பிட காதல் வரவும் சேரவேண்டும் நினைத்து செயல்படுவது சூப்பர். ரிஷி இவனை😡😡😡 வசியிடம் வம்பு வைப்பது அடி வாங்குவது சூப்பர். பரசு மாறன்  ரித்தீஸ் அம்மா அப்பா செம. வேந்தன் வசி இணைவது கொஞ்சம் சண்டை பின்னர் கொஞ்சம் சஸ்பென்ஸ்  பிரச்சினை தீர்ந்து இணைவது குழந்தை வருவது ரிஷி எல்லோரிடமும் அடி வாங்குவது சூப்பர். வசி எல்லோரையும் அன்பால் வசிகரிக்கிறாள். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.


   
ReplyQuote
Dhira Ananth
(@dhira_ananth)
Active Member Registered
Joined: 6 months ago
Posts: 9
 

#திரா_ஆனந்த் விமர்சனம்

#வாகை_சூடவா_போட்டி_கதைகள்

#உயிர்_உள்ளவரை_யான்_உனதே

 

கதை ஆரம்பிக்கும் போதே தென்றல் ஒரு பாவப்பட்ட கதாபாத்திரம். அதிலிருந்து தான் ஆரம்பிக்குது. போக போக தென்றல் பாவமா மாறறுத்துக்கான கதாபாத்திரங்கள் விஷ்ணு, சுரேகா. Rich spoiled kid characters.

 

பிரகல்யானு ஒரு கதாபாத்திரம் நடுவுல நடுவுல வந்து போகும். குறுக்க இந்த கவுசிக் வந்தா??? அப்படினு. அப்பயே நமக்கு தோணும்… தென்றல் & பிரகல்யா ஒன்னா இருப்பாங்கனு. சில இடத்துல இத இன்னும் நல்லா handle பண்ணி இருக்கலாம். சில இடத்துல இத Justify பண்ணற மாறி உரையாடல்கள் வரல. அது கொஞ்சம் connectivity கொண்டு வந்து இருக்கலாம்.

 

அப்பறம் எனக்கு புடிக்காத ஒரே கதாபாத்திரம்னா அது ரேணுகா தான். கொஞ்சமாவது சுயமரியாதையோட இரு மா… அப்படி தான் தோணுச்சு. சுயநலவாதி அது கூட ஓகே தான். ஆனா அவ கல்யாணம் வரைக்குமே தன்மானம் சுயமரியாதை தன்மதிப்புனு எதுவுமே இல்ல.

 

விஷ்ணு - இது எந்த வகையிலும் சேத்த முடியாத இன்னொரு கதாபாத்திரம். உனக்கு எல்லாம் மறந்துடுச்சி… ஓகே… அதுக்காக அந்த மறந்த சில வருடங்கள் மட்டும் தான் மனிதர்களை மதிச்சி நல்லவனா இருந்தானா??. அவன் குடும்பத்தோட இருந்த மத்த வருடங்கள் தென்றல்ட்ட நடந்துகிட்ட மாறி தான் இருந்தானா??

 

சுரேகா - தனக்கு வேணுங்கறத என்ன வேணா பண்ணி அடையலாம்னு நினைக்கற கதாபாத்திரம். ஆனா அதோட முடிவு தான் முக்கியம். இதுவே விஷ்ணுவ கல்யாணம் பண்ணி understanding ஓட நல்லா வாழ்ந்து இருந்தா… இவளுக்கு விஷ்ணுவோட கடந்த காலம் தெரில… அதான் அவன கல்யாணம் பண்ணிட்டா… இவள தப்பு சொல்ல முடியாதுனு தோணும். பூமா பாட்டி இவளுக்கு பண்ணது ரொம்ப அநியாயம்.

 

கதைய மொத்தமா படிச்சா… முதல்ல சின்ன சின்ன வருத்தம் ஏன் இப்படினு கேள்வி சில நேரத்துல யாருடா இதுங்கனு சின்ன கோவம் அப்பறம் எப்படியே எல்லா குழப்பமும் தீர்ந்ததே ஒரு ஆறுதல். இப்படி தான் இருந்துச்சி.

 

எனக்கு ஒரு சின்ன unfinished partஆ தோணுனது, பிரகல்யா கொஞ்சமாவது சுரேகா, விஷ்ணுவ வச்சி செஞ்சிருக்கனும். மத்தபடி படிக்க நல்லா தான் இருக்கும் கதை.

 

நன்றி!!!

 

இங்ஙனம்

திரா ஆனந்த்


   
ReplyQuote
Gowri
(@gowri-karthikeyan)
Active Member Registered
Joined: 3 months ago
Posts: 13
 

#கௌரிவிமர்சனம்

 

#வட்டிக்காரனின்_வசியக்காரியவள் ….

 

தலைப்பு போலவே, வட்டிக்காரனின் காதலும், வசி ஓட சேட்டையும்னு கதை சூப்பர்🤩🤩🤩🤩🤩🤩

 

வசி, அப்பா அம்மா இல்லாம சித்தி, சித்தப்பா ஓட அரவணைப்பில் வளர்றா…..

 

அந்த அரவணைப்பு எல்லாம்….அவங்க பொண்ணு ரகசி ஓட மனதில் வன்மம் வர வரை மட்டும் தான்….

 

அதன் பிறகு, வசி…ரகசியின் வன்மத்திற்கு பலி ஆக…..

 

அந்த வன்மத்தை விடாம அவளிடம் வளர்ப்பது அவ பாட்டியின் வேலை…..

 

சிறிது, சிறிதா தனக்குள் ஒடுங்கும் வசி….

 

ஒரு கட்டத்தில், அவளை பெற்றோர் போல தாங்கின சித்தி சித்தப்பா கிட்ட இருந்து மொத்தமா பிரிஞ்சி போறா….

 

அதுக்கும் காரணம் வேற யாரா இருக்கும்…..

 

வசியை கொஞ்சம் உயிற்பொட வெச்சி இருக்கறது…அவளின் தோழி அஞ்சுவும், நண்பன் ரித்துவும் தான்….

 

அவ விலகி இருந்தாலும்….அவளுக்கு நல்ல கல்யாண வாழ்க்கை அமைச்சு கொடுக்கறாங்க வசி ஓட சித்தி சித்தப்பாவும்….

 

அவன் தான் நம்ம வட்டிக்கரான் வேந்தன்…..

 

அடாவடியான வட்டி, அனைவரையும் வசீகரிக்கும் வசி…..

 

அது தான் மீதி கதை…..

 

வசி….சின்ன வயசில் இருந்து கண்ட கொடுமைகள்🥺🥺🥺🥺🥺

 

எல்லாம் அந்த கிழவினால தான்😤😤😤😤😤

 

ஆன அதுக்கு எல்லாம் சேர்த்து வட்டி ஓட குடும்பம்….அன்பான குடும்பமா கிடச்சிருச்சி…..

 

வட்டி….இல்ல இல்ல வேந்தன்…இவனோட புரிதலும், அழகான காதலும் சூப்பர் சூப்பர்….

 

அதிரடியான வட்டி வெளியில் தான்…..அதுக்கு அப்படியே எதிர் வீட்டில் …..

 

லாஸ்ட்லா கொஞ்சம் சொதப்பினாலும்….செம்ம ஹீரோ தான் இவன்…..

 

அஞ்சு & ரித்து…..வசி ஓட ரெண்டு கை…இவங்க காம்போ🤣🤣🤣🤣🤣

 

ரகசி & தட் கிழவி…..இவளோ பண்ணீங்க இல்ல….நல்லா வேணாம்….அப்படியே குளு குளுனு இருக்கு🤭🤭🤭🤭🤭

 

ரிஷி….வில்லன்🤣🤣🤣🤣 சொல்லும் போதே சிரிப்பா வருது….. நம்லைனாலும் அது தான் நெசம்😂😂😂😂😂

 

கதை போர் இல்லாம சூப்பரா போச்சி….

 

சூப்பரா இருந்தது ரைட்டர்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻….

 

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

 

லிங்க்👇👇👇👇

 

https://kavichandranovels.com/community/vsv-44-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d


-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95%e0%af%8d/


   
ReplyQuote
Gowri
(@gowri-karthikeyan)
Active Member Registered
Joined: 3 months ago
Posts: 13
 

#கௌரி_விமர்சனம்

#கள்_விழி_மயக்கம்…

டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட கதை விரும்பரவங்க இதை படிக்கலாம்…..

சூப்பர் என்டர்டெயின்மென்ட் கதை ….

ஆஜித், ஆரமிச்ச தொழிற்சாலை தலைமை பதவி யாருக்கு????

அண்ணன், தம்பி குள்ள சண்டை ஒரு பக்கம்….

அதை சாதகமாக பயன்படுத்தி, தலைமையை கைப்பற்ற நினைக்கும் நரி கூட்டம் மறு பக்கம்…..

தலைமையை காக்க தலைவன் வருவானா?????

இதற்கிடையில், காதல், ரொமான்ஸ், நட்பு எல்லாமே இருக்கு…..

இளவேந்தன், இவனின் சொல்லாத காதலை விட….கோகோவின் நண்பன், காவலன் எல்லாமே ரொம்ப பிடிச்சது…..

அவள் மேல் நட்பு எல்லாம் இல்லைனு சொல்லிட்டே….

அவன் அவளை பாதுகாக்கும் பண்பு 👌👌👌👌👌👌

முக்கியமா, அவ வாய்ஸ் சாட் கேட்டு அர்த்த ராத்திரியில் பதரிட்டு வரும் போது அவளோ பிடிச்சது இளாவை……

பிரஜி…..ஹீரோ சஜியை விட ஏனோ எனக்கு இவனை ரொம்ப ரொம்ப பிடிச்சது…..

எப்படி சொல்றது….அவன் கேரக்டர் நேச்சர் அவளோ நல்லா இருந்தது….

அவனிடம் திணிக்க படும் ஒன்னு ஒன்னையும், ஆரம்பத்தில் வெறுத்தாலும்….

பின்பு அக்கறை கொண்டு அன்பு செலுத்துவதில் இவனுக்கு நிகர் இவனே…..

இந்த கேரக்டர் தான் இவனை ரொம்ப பிடிக்கவும் வெச்சது…..

லாஸ்ட்டா தப்பா நினைக்க வெக்சிட்டான்….

ஆன ரிபெக்கா பேசும் போது புரிஞ்சிட்டு ….

ரிபெக்கா ….என்ன பொண்ணு டா அப்படினு தான் இருந்தது….

இறுக்கமாகவே பார்த்துட்டு ….பிரஜி மேல possessiveness வரும் சீன் எல்லாம் அவளோ cute🥰🥰🥰🥰

காதலை கூட கெத்தாவே ஒத்துக்கரா பா அவளின் பிரஜி கிட்ட……

கோகோ…. இவளை சுத்தி தான் கதை …..அடாவடி, சரவடி பெண்ணவள்….

இவள் தான் சஜி என்னும் இரும்பு மனிதனை தன் இஷ்டத்துக்கு வளைத்தது🤩🤩🤩🤩🤩

சஜி..இல்ல இல்ல இவளும் இவளின் சத்யாவும் வரும் சீன் எல்லாம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

சஜி, கதையின் மாஸ்டர் மைண்ட் இவன் தான்…..கோகோ, சஜி பாண்டிங்கை விட பிரஜி, சஜி பாண்டிங் ரொம்ப ரொம்ப பிடிச்சது🤩🤩🤩🤩🤩

கடைசில வந்த டுவிஸ்ட் செம்ம ரைட்டர் ….வேற லெவல் 👌👌👌👌👌

போரிங் இல்லாம கதை வாட் நெக்ஸ்ட்னு
கதை போன விதம்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/


   
ReplyQuote
Page 1 / 4

You cannot copy content of this page