About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 16
டவுனில் இருந்த வேலைகள் எல்லாம் முடித்து விட்டு திரும்ப ஊருக்குச் சென்றுக் கொண்டிருக்க, அவனுக்கு முன்னே யுகனிகா செல்வதை ஆதியோ நம்ப முடியாது தான் கண்டான்.
இத்தனை நாட்களில் அவனின் பார்வை இவ்வாறு தான் தேடிக் கொண்டிருந்தது. ஆனால் மனமேயில்லாமல் வீட்டார் பேசியதைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் விதியோ அவனுக்கு யுகனிக்காவை காட்டி விட்டது. தூரமாக அவள் சாலையில் சென்று கொண்டிருந்தாலும் அவளின் இஸ்கூட்டி நம்பர் முதற்கொண்டு அனைத்தையும் அவன் மனதில் பதிந்து வைத்து தான் இருந்தான். அவனுக்கு சற்று இடைவெளி விட்டு வந்து அவளின் வேகத்திற்கு சென்றவாறு இருந்தான். அவளை முந்தினால் அவளின் முகம் காணலாம் தான், ஆனால் தான் அவளை பின் தொடர்கிறேன் என தெரிந்தால் அவளின் மனம் எவ்வாறு யோசிக்கும் ?
தான் இல்லாமல் அவள் நிம்மதியாக தானே இருக்கிறாள் தன்னை நினைத்து இருந்தால் ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பி இருப்பாளே சரி அவளை இப்பொழுது பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததே அதுவே போதும் என்ற நினைப்பில் பின் தொடர்ந்து வரவே அவளின் பக்கவாட்டில் ஒரு பெரிய கவர் ஒன்று தொங்க விடப்பட்டிருக்கவே திடீரென ஒரு பள்ளத்தில் இறங்கி ஏறியதும் அதுவோ மருந்து கீழே விழுந்தது.
இவன் அழைக்க நினைக்கும் நொடியே அவள் அதனைக் கண்டு விட்டு தன் ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தி இறங்கினாள். அதனை எடுப்பதற்கு சாலையில் நடந்து வர அப்பொழுது தான் அவளின் விழிகள் தனக்கு முன்னே அப்படியே நடு ரோட்டில் பைக்கில் நின்றவாறு இருந்த ஆதியைக் கண்டாள்.
தனக்கு பின்னால் இவன் இவ்வளவு தூரம் வந்தானா ? தன்னை மறுபடியும் இவன் பாலோ செய்ய ஆரம்பிச்சிட்டானா ? ஏன் இப்படி பண்றான் ? நீண்ட நாட்களுக்குப் பின் அவனைக் கண்டதால் அவள் அறியாது அவளின் விழிகள் அவனைக் கண்டது. தன்னைக் காண்கிறாள் என்ற எண்ணத்தில் அப்படியே தான் நின்றவாறு இருந்தான் ஆதி.
அவனின் எண்ணம் முழுவதும் இவளிடமே இருக்கவே செவித்திறனே இல்லாதுப் போனது என்று தான் சொல்ல வேண்டும். அவனுக்குப் பின்னால் ஒரு லாரி ஹாரன் அடித்துக் கொண்டு வந்தது.
அந்த லாரியின் டிரைவருக்கு சரியாக கண் தெரியவில்லையோ என்னவோ முன்னால் அவன் பைக்கில் சென்றுக் கொண்டு தான் இருக்கிறான் என நினைத்து வழக்கம் போல் வேகத்தில் வந்தவருக்கு அவன் அருகில் வந்த நொடிதான் அவன் நிற்கிறான் என்பது புரிந்தது. சடன் பிரேக்கிட முயற்சித்தாலும் அந்த டிரைவரால் அது முடியவில்லை. அவரின் கட்டுப்பாட்டை இழந்து அவனின் மீது மோதியது.
ஆதியின் பின்னே ஒரு லாரி வருகிறது என்பதை கவனித்த யுகனிகாவின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்தது. கருவிழிகள் சுழல அந்த இடமே அவளுக்கு ஒரு நொடி மங்கலாக தோன்றியது. அவளின் விழிகளின் முன் ஆதி இருக்கும் அதே இடத்தில் பிரசாத் இருப்பது போன்று தான் தெரிந்தது.
சரியாக ஆதியை அந்த லாரி ஏற்றிய அந்த நொடி அவளின் உள்ளமே அதிர தான் பேசும் கடைசி வார்த்தை இதுவோ என்ற நினைப்பில் உலகமே அதிர்ந்து விடுவது போல் கத்தினாள். ஆனால் அவளின் வார்த்தை முழுமையாக கேட்கும் முன்னே தன் மீது பாய்ந்த அந்த லாரியின் வேகத்தில் அவனும் தூக்கி அடித்து ரோட்டோரமாக இருந்த தடுப்புச் சுவரில் மோதி தரையில் சரிந்தான்.
நொடியில் அவனின் மேனியில் இருந்து குருதியோ பெருக்கெடுத்து ஓட தலையிலும் பலமாக அடிப்படவே அவன் நிலையைக் கண்ட டிரைவரோ இறங்கி தப்பித்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தான்.
இப்பொழுது அந்த சாலையில் அவள் மட்டும் தான் இருந்தாள். ஒரு நொடி அவளுக்கு பித்து பிடித்து தான் விட்டது. சிலையாகி போனவளின் விழிகளில் இருந்து கண்ணீரோ தாரதாரையாக வழிந்து ஓடியது. தான் உலகத்தை விட்டுச் செல்ல போகிறோமோ என்ற நினைப்பு ஆதிக்கு வந்ததோ என்னவோ அவனின் விழிகள் திரும்பி அதே இடத்தில் சிலையாய் நின்ற தன்னவளை தான் கண்டது. அவளைக் கண்டு தன் கரங்களை நீட்ட அடுத்த நொடி பிரசாத் என அழுகையோடு அவனிடம் ஓடினாள்.
அவளைப் பொறுத்தவரை அவளின் விழிகளுக்கு தெரிந்தது அவளின் கணவன் பிரசாத். ஆனால் அங்கே இருப்பது ஆதி. அருகில் வந்தவளோ உயிருக்கு துடித்துக் கொண்டிருந்தவனின் தலையை பிடித்து சற்று தூக்கி தன் மடியில் வைக்க அவளின் கண்ணீர் துளி அவனின் கன்னத்தில் பட்டு மயக்கத்திற்கு சென்றவனை விழிப்பிற்கு கொண்டு வர முயற்சித்தது.
தனக்காக அவள் அழுகிறாளா தன்னை அவள் மடியில் தாங்கினாளா ? இப்படியே தன் உயிர் சென்றால் கூட போதும் என்று தான் ஆதி நினைத்திருந்தான்.
'பிரசாத் பிரசாத் உங்களுக்கு ஒன்னும் இல்ல. என்ன பாருங்க ?" என்று தவிப்போடு அழுகை கலந்த கலக்கத்தோடும் கூறவே, அந்த வார்த்தை தெளிவாக ஆதியின் செவியில் விழுந்தது.
இவள் யாரை அழைக்கிறாள் அந்த நொடி கூட வலியிலும் உயிர் போக துடித்தவனின் மனமும் அந்தப் பெயரினை தன் மனதிற்குள் குறித்துக் கொண்டது.
யுகனிகா அப்பொழுது இந்த உலகத்திலே இல்லை. அவள் கடந்த காலத்திற்கு ஒரு நொடி புகுந்து விட்டாள். அதிலிருந்து மீளாது தன் மடியில் தான் தாங்கி இருப்பது தன் கணவனான பிரசாத் என்று நினைப்பிலே தான் அவனை அழைத்துக் கொண்டே இருந்தாள்.
"நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது கண்ண தொறந்து என்கிட்ட பேசுங்க பிரசாத் " என்று அவனை தட்டி எழுப்ப முயற்சி செய்ய அவள் வார்த்தைகள் செவியில் விழுந்தாலும், கண்ணீர் தன் மேனியில் பட்டாலுமே, தன் பலத்தை மெல்ல மெல்ல இழந்து விழி மூடினான் ஆதி.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வயலில் வேலை பார்த்தவர்கள் திடீரென ஒரு லாரி நிற்கவே அதற்கு பின்னால் வந்த வாகனத்தில் வருபவர்கள் என்று அனைவரும் அடுத்த பத்து நிமிஷத்தில் அங்கு கூடிவிடவே ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.
"ஐயோ ஆதி தம்பி நீங்களா ? என்னாச்சு தம்பி ?" என்று ஒருவன் பதறிக் கொண்டு அருகில் வரவே, அப்பொழுது தான் ஆதி என்ற வார்த்தை யுகனிகாவின் செவியில் விழுந்து இந்த உலகத்திற்கு அவளை இழுத்து வந்தது.
தன் விழிகள் இப்பொழுது ஆதியை காணவே பட்டென பதறி அவனை விட்டு விலகினாள். நல்ல வேலை இச்செயலை காண்பதற்குள் ஆதி மயங்கி இருந்தான். புழுவாய் துடித்து துஷ்டன் போல் தன்னை ஒதுக்குபவளைப் பார்த்தால் ஆதியின் மனம் இந்த நொடி நொந்தே போயிருக்கும் அதற்கு அவன் மயங்கியதே சரி தான் என்று விதி எண்ணி விட்டதோ என்னவோ !
தான் அணிந்திருந்த சேலையில் அவனின் உதிரம் தான் நிறைந்திருந்தது. இப்பொழுது எழுந்து நிற்க, "என்னாசும்மா, எப்படி அடிபட்டது ?" என்று அவள் மட்டும் தான் இருக்கிறாள் என்பதால் அவளிடம் கேட்டனர்.
அவளால் வாய் திறந்து பதில் கூட கூற முடியவில்லை. அந்த இடத்தை விட்டு அவளின் கால்களும் நகர மாட்டேன் என்று அடம் பிடித்தது. அப்பொழுது தான் அவர்களே ஒருவாறு யூகித்து விட்டனர். லாரிக்காரன் ஏத்தி விட்டு தப்பி ஓடி விட்டான் என்பதை. பின் ஆதிக்கு தெரிந்த ஒருவன் அங்கு இருக்கவே அவனே அவர்களின் வீட்டார் அழைப்பு விடுத்து தகவலை கூறினான். பதினைந்து நிமிடம் சரியாக ஆம்புலன்ஸ் வர அதே நேரம் காரில் அவனின் மொத்த குடும்பத்தாரும் வந்தனர்.
"ஐயோ என் மகன் என் பேராண்டி, என் புள்ள " என்று பதறி கொண்டு காரில் இருந்து இறங்குபவர்களை கண்ட யுகனிகா, இவர்கள் தான் ஆதியின் குடும்பம் என்பதை முதல் முறையாக கண்டாள்.
அதில் அவளுக்கு அதிர்ச்சி தன் நெஞ்சில் அடித்தவாறு தள்ளாடி கொண்டு பேச்சியம்மாள் பாட்டி நெருங்கி வரவே, அப்பொழுது தான் இவர் ஆதியின் பாட்டி என்பதையே உணர்ந்தாள்.
தூரத்தில் பார்க்கும் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் உதிரம் இருக்கவே மற்றவர்கள் அவனை தூக்க முயற்சி செய்ய, " இந்த புள்ள நாம ஆதியை முதல்ல பார்த்துச்சு " என்று யுகனிகாவை கூற, மற்றவர்களுக்கு அவளை தெரியாது. ஆனால் அப்பத்தாவுக்கு நன்றாக தெரியும் அல்லவா !
வேகமாய் அவளின் கரங்களைப் பற்றிக் கொண்டு, "என் பேரனுக்கு என்னமா ஆச்சு ? எப்படிம்மா ஆக்சிடென்ட் ஆச்சு ? " என்று கேட்கவே,
அவளால் எப்படி கூற முடியும் ?தன்னை பார்த்தவாறு தான் உங்களின் பேரன் வந்தான். அதனால் தான் பின்னாடி வந்த லாரி அவனை ஏத்தி விட்டது என்று கூற முடியும் ?
அவனை ஏற்றிக் கொண்டு பெற்றவளும் உடன் பிறந்தவளும் செல்லவே, "அம்மா வாங்க போகலாம் " என கூறிய தென்னவன் தன் பெற்றோரை அழைத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் பின்னே வேகமோடுச் சென்றனர்.
சில நொடி கடக்க அங்கிருந்த கூட்டம் அனைத்தும் கலைந்து விட்டது. மெல்ல நகர்ந்தவளவோ எப்படித்தான் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தால் என்பதே தெரியாது ஒரு வழியாக வந்துச் சேர்ந்து விட்டாள்.
அவள் கேட்டினை திறந்து வீட்டுக்குள் நுழைந்த நொடியே தன் மகளின் கோலம் கண்டு கையில் இருந்த பாத்திரத்தை அப்படியே கீழே போட்டுக்கொண்டு பதறி வந்தார் பொன்னி.
" ஐயோ என்னாச்சு உனக்கு ?" என்று கேட்கவே, அவளின் விழிகளின் முன் ஆதியை விட பிரசாத் தான் முற்றிலும் வந்து போனான்.
அவளோ பதில் ஏதும் கூறாது அப்படியேச் சென்று அங்கிருந்த திருனையில் அமர்ந்து விடவே, தன் மகளை உலுக்கி பார்த்தும் அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் மட்டுமே வழிந்தோடியது. பதறிய பொன்னி தன் கணவனுக்கு அழைத்து பின் உதயனுக்குமே அழைத்தார். அப்போது அவர்களுக்கு ஊருக்குள் இருக்கும் ஒரே துணை உதயன் என்பதால் அந்த நொடி அவனுக்கு தான் அழைக்க தோன்றியது.
மௌன கண்ணீர் வடிக்கும் மகளிடம் வார்த்தைகளை உதிர்க்க பெரும்பாடு பட்டனர். தகவல் அறிந்து உதயன் வருவதற்குள் நடுவில் அவனுக்கு செய்தி சென்றடைந்தது. ஆதிக்கு விபத்து நடந்து விட்டது என்று அப்படி என்றால் அவனுக்கு விபத்து நடந்த இடத்தில் நிச்சயம் யுகனிகா இருந்திருப்பாள் ? அதனால் தான் அவளின் உடையில் உதிரம் இருப்பதாக அவளின் அன்னை கூறுகிறார்.
இப்பொழுது தான் மருத்துவமனை செல்வதா அல்லது யுகனிகாவிடம் சென்று விசாரிப்பதா ? ஒரு நொடி யோசித்தவனுக்கு அருகில் அவளே இருப்பதால் முதலில் அங்கு செல்லலாம் என்று தன் புல்லட்டினை அவளின் வீட்டுக்கு தான் செலுத்தினான்.
"தண்ணிய கொண்டு வா தண்ணிய கொண்டு வந்து பிள்ளைக்கு குடிக்க கொடு. எதையோ பார்த்து அரண்டு போயிருச்சு போல. எதுவும் அடிபட்டு இருக்கா பார்த்தியா பொன்னி " என்று அங்கே வந்து அவளின் தந்தையோ பதற,
"இல்லங்க இவளுக்கு எந்த அடியும் படல. இவ நல்லாத்தான் இருக்கா ஆனா அந்த ரத்தம் தான் எப்படின்னு எனக்கு ஒண்ணுமே தெரிய மாட்டேங்குதுங்க " பதறிக் கொண்டு கூறியவர் அடுத்த நொடியே தண்ணீரைக் கொண்டு வந்து மகளின் கரங்களில் கொடுத்து புகட்ட வைத்தார்.
சற்று தெளிந்தவளோ, " என்னாச்சும்மா " என்றுக் கேட்கவே,
"பிரசாத் பிரசாத் எதுக்கு நம்மள விட்டுட்டு போனாரு. இல்ல அவருக்கு ஏதும் ஆகாது " என்று இறந்தவனை நினைத்து மகள் பிதற்றவே ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நின்றனர். அந்த நொடி சரியாக வீட்டுக்குள் நுழைந்தான் உதயன்.
"யுகனிகா என்ன " கேட்கவே,
"பிரசாத் பிரசாத் மட்டும் தான் சொல்லுறா வேற எதையும் சொல்ல மாட்டிக்கா. எங்களுக்கு தெரிய மாட்டேங்குது. திடீர்னு இத்தன நாள் இல்லாம இப்ப அவன் நினைப்பு எதுக்கு இவளுக்கு வந்ததோ இப்படி ரத்தக்கரையா வேற வந்திருக்காளே என்னாச்சோ தெரியலையேப்பா பதட்டமா இருக்கு. ஒருவேளை எதுவும் தெரியாத்தனமா யாரையும் வண்டியை ஏத்திட்டாளா ? என்னன்னு தெரியலையேப்பா " என்று பொன்னி பதறவே,
"அம்மா பதறாதீங்க பொறுமையா இருங்க. நான் விசாரிக்கிறேன் " எனக் கூறி யுகனிகாவின் முன்னே அமர்ந்தவனோ அவளின் கைகளை மென்மையாகப் பற்றினான்.
"இங்க பாரு பிரசாத் நம்ம எல்லாத்தையும் விட்டுட்டு போயிட்டான். அவன் இந்த உலகத்துல இல்ல நீ பார்த்தது ஆதி ஆதிக்கு விபத்து நடந்த போது நீ பக்கத்துல இருந்தியா ?அதனால தான் இப்படி இருக்கியா ?" என்க, அவளோ ஆம் என்று தலையசைத்தாள்.
பெற்றவர்கள் இருவருக்கும் ஆதி யாரென்று தெரியாதல்லவா ? இருவரும் யாரைப் பற்றி பேசுகிறார்கள் என்பது போல் தான் பார்த்தவாறு இருந்தனர்.
தொடரும்...
கருத்துக்களைப் பகிர,
Latest Post: சித்திரையில் நீ மார்கழி..!! - (Comment Thread) Our newest member: Suba Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page