About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்: 23
பல்லவி தன் மகள் அவந்தியை விட ஆரபி எந்த விதத்தில் சிறந்தவள் என்று கேட்டாள்.
பைரவ் “ பல்லவி அம்மாயி நிங்கள் மோளை விட என் பார்யா எதில் சிறந்தவள் என்று கேட்டீங்க தானே…சொல்கிறேன் கேளுங்க அவள் ஸ்நேகம், நான் இத்தனை வருட ஜீவிதத்தில் காணாதது…அதை சொன்னால் நிங்கள் யாருக்குமே புரியாது ஏன் தெரியுமா?
நிங்கள் எல்லாம் தரவாடு ஆளுங்க சாமானிய ( சாதாரண) ஆளுங்க உங்க கண்ணுக்கு தெரிய மாட்டாங்க…பட்சே ஆரபி ஆயிரத்தில் ஓராள் ( ஆயிரத்தில் ஒருத்தி) அது குறிச்சு ஞான் விவாதிக்க வரவில்லை…நிங்களட மோளை விட என் பார்யா உயர்ந்தவள் அவள் தரவாடு சேர்ந்த பெண்குட்டி இல்லை தான்.
பட்சே எந்த தரவாடும் காணாத பெண்குட்டி இவள் இவளிடம் பணம், சொத்து சுகம் இல்லை தான்…ஆனால் அதை விட பல மடங்கான கருணா ( கருணை) என்னும் சொத்து இருக்கு எனக்கு அது தான் வேணும்.
மற்றது எல்லாம் எனக்கு தேவையற்ற ஒன்று …இதில் ஒன்று கூட நிங்களட மோளிடம் இல்லை என்பதை ஈ தரவாடு அறியும்” என்றான்.
அவந்தி “ அத்தான் நான் பிறப்பிலே இளவரசி என் அம்மே, அச்சன் இரண்டு பேருமே தரவாடு ஆளுங்க…கோடீஸ்வர் நான் எதற்காக மற்றவங்க கிட்ட பணிந்து போக வேணும்…அதுவும் தொழிலாளியிடம் ( வேலையாள்) உங்க பார்யாவும் கிட்ட தட்ட அப்படி தான்.
அம்மே, அச்சன் பெயர் தெரியாது அதுவும் ஹோம்மில் வளர்ந்து இருக்கிறாள்…ஆனால் நான் என் அச்சாச்சா ரவிவர்மன் , என் முத்தச்சன் கலிங்கர் சொச்சு மோள்…எனக்கு என்று அடையாளம் இருக்கிறது உங்க பார்யா அடையாளத்தை நம்ம மற்ற தரவாடு ஆளுங்க கேட்டால் உங்களால் என்ன பதில் சொல்ல முடியும்” என கேட்டாள்….அவந்தி என யுவராஜ் சத்தம் போட்டவன்.
யுவராஜ் “ நீ என் அனியத்தி மட்டுமல்ல ஒரு பெண்குட்டியாக போய் விட்ட இல்ல நடப்பதே வேறு…உனக்கு மற்றவங்க மனசை காயபடுத்தாது பேச முடியாதா? இப்போ தெரிகிறதா? உன்னை மட்டுமல்ல அஜந்தாவையும் நானும் பையுவும் ஏன் வேணாம் என்று சொன்னோம் என்று.
எங்க அம்மே, அச்சனும் நல்ல தரவாடு ஆளுங்க தான் அதற்காக நாங்க மற்றவங்க கிட்ட இப்படி நடந்து கொண்டு கிடையாது…ஏன் நிலா அவளும் ஈ கொட்டாரத்தில் பிறந்த பெண் தானே…உங்க இரண்டு பேரை போலவா நடந்து கொள்கிறாள்.. அதனால் தான் அவளை ஈ கொட்டாரத்தில் உள்ள எல்லோருக்கும் பிடிக்குது.
ஆரபி பிறப்பு தேவையற்ற ஒன்று பையு சொன்னது போல அவங்க திவ்விய ஸ்திரீ ( தெய்வீக பெண்)...ஈ கொட்டாரத்தின் அடுத்த மகராணி நீ மதிப்பு கொடுக்க தான் வேணும் புரிகிறதா? என கடுமையாக கேட்டான்.
அஜந்தா “ஓ! நாங்க ஈ பெண்குட்டி இரண்டுக்கும் பகுமானம் (மரியாதை) செய்ய வேணுமா? அதற்க்கு வேற ஆளுங்களை பாருங்க…நாங்க ராஜா ரவி வர்மன் சொச்சு மோள்கள் கண்ட கண்ட ஆளுங்களுக்கு மரியாதை கொடுக்க முடியாது…அதை கொடுக்க சொல்ல உங்களுக்கு உரிமையும் இல்லை “ என்றாள்.
ரவி வர்மன் “ அஜந்தா, அவந்தி நீங்களே பேசி முடிவெடுத்தால் நான் எதற்க்கு…ஈ கொட்டாரத்து ராஜா ஞான் நிங்கள் இல்லா கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க முடியும் என்றால்… இருங்க இல்ல நிங்கள் இரண்டு பேருமே இந்த இடத்தை காலி பண்ணுங்க.
பைரவ், யுவராஜ் இந்த விவாகத்தை, காதலை ஈ கொட்டாரத்தால் ஏற்று கொள்ள முடியாது…நிங்கள் தனி மனுஷன் இல்லை முடிவெடுக்க உங்களுக்கு என்று கொட்டாரம் அதன் சட்டதிட்டங்கள் இருக்கு…அதை விட குடும்பம் இருக்கு இந்த முடிவை நாங்க ஏற்று கொள்ள முடியாது.
அது போல ஊர், பெயர் ஏன் அம்மே, அச்சன் பெயர் தெரியாத பெண்குட்டியை…. ஈ தரவாடு அடுத்த தம்புராட்டியாக ஏற்று கொள்ளாது… நிங்களட விவாகம் செல்லாது உங்க பார்யா என்றால் அது அவந்தி தான்…நினக்கு( உனக்கு) நாங்க வேணும் என்றால் ஈ பெண்குட்டிகளை திரும்ப அவங்க வீட்டுக்கு அனுப்பி விடு…சும்மா அனுப்ப வேணாம் பணம் தாராளமாக கொடுத்து அனுப்பலாம்” என்றார்.
பைரவ் அவரை அழுத்தமாக பார்த்தவன்…சோமன் என அழைத்தான் அவன் அழைப்பை ஏற்று அங்கே வந்து நின்றது நடுத்தர வயதில் உள்ள ஒருவன்…அவன் தான் ரவி வர்மனின் செகரட்டரி பஞ்சகச்சம் வேட்டி கட்டி மேலே கோட் போட்டு தலையில் தலைப்பாகை என்று… அரச வம்சத்தின் கணக்குபிள்ளையாக வந்து நின்றான்….வந்தவன் பைரவ்க்கு தலை வணங்கி நின்றான்.
பைரவ் “ சோமன் நாளை நம்ம சமஸ்தான கூட்டத்தை கூட்டு அழைப்பு நான் விடுத்ததாக சொல்லு…வர முடியாது என சொல்பவர்களிடம் சொல்லு இனி ஈ தரவாடுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று…இந்த கொட்டாரத்தில் இருந்து இனி எந்த சம்பந்தமும் உதவியும் கிடைக்காது என சொல்லு இது என் கட்டளை” என்றான்.
விஜயன், அருள் மொழி முகங்கள் மாறியது ரவி வர்மன் பைரவ் என சத்தமாக அழைத்தார்….அவருக்கு தெரியும் மற்ற கொட்டாரத்து ஆளுங்க வந்தால் கதை மாறி விடும் என்று… அது மட்டுமல்ல அவர் கெளரவம் அதற்க்கு களங்கம் வந்து விடும்.
பைரவ் “ முத்தச்சன் கோபட தேவையில்லை ஞான் நிங்களை மதிப்பதால் தான் இந்த உபஸம்ஹாரம்(முடிவு) எடுத்தேன்…நிங்கள் இப்போ என் கிட்ட பேசியதை நாளை மற்ற கொட்டார ஆளுங்க முன்னாடி பேசுங்க…அப்போ தான் தெரியும் ராஜா ரவி வர்மனின் கொட்டார யோக்கியத்தையை இதற்க்கு மேலே… அவங்களை அழைப்பதும் அழைக்காது இருப்பதும் உங்க முடிவில் தான் இருக்கு .
அம்மாயி இவங்களை அழைத்து கொண்டு போ யுவா என் ரூம்க்கு வா…நான் உன் கூட கொஞ்சம் பேச வேணும் விஜயன், அருள் சித்தப்பா உங்களை பற்றி வெளியே நல்ல பேச்சுக்கள் அடிபடுகிறது…அதை உங்க அச்சன் அறிய வேண்டாமா? நாளை தான் அது பற்றி தெரிய வரும் “ என்றவன்… லிப்ட் நோக்கி போக அவன் பின்னால் யுவராஜ் போனான்.
கார்த்திகா ஆரபி, ராதிகாவை அழைத்து கொண்டு… தன் தளத்தில் உள்ள கெஸ்ட் ரூம்க்கு போனாள்...அவர்கள் போக.
ரவி வர்மன் “ சோமன் நாளை ஈ கொட்டாரத்திற்க்கு யாருமே வர தேவையில்லை…இது தான் என் உபஸம்ஹாரம் (முடிவு) நான் பைரவ் கூட பேசி கொள்கிறேன் நீ போய் உன் ஜோலியை (வேலையை) பாரு “ என்றார்….அவன் போக அச்சன் என பேச வந்த விஜயனை கை காட்டி பேச வேணாம் என்றவர்.
ரவி வர்மன் “இதை நான் பார்த்து கொள்கிறேன் நிங்கள் நமூக்கு போகாம் (போகலாம்) இன்னும் ஒன்னு (ஒன்று) என்னோட (என் கிட்ட) ஏதும் மறைக்கிறீங்களா?... ஏன் கேட்கிறேன் என்றால் பைரவ் எந்தோ (ஏதோ) என் கிட்ட சொல்ல பறய வருனு(சொல்ல வருவது) போல இருக்கு “ என கேட்டார்.
விஜயன் “ நிங்கள் வேறு அச்சா அவன் தப்பு செய்து இருக்கிறான் இல்லையா?... அதை மறைக்க தான் இந்த கதா (கதை) எல்லாம் சொல்லி கொண்டு இருக்கிறான்” என்றார்.
ரவி வர்மன் “ மோனே விஜயன் என்னோட(எனக்கு) நிங்களை பற்றியும் அறியாம் (தெரியும்)...அது போல பைரவ் பற்றியும் தெரியும் இதில் ஏதோ ஒன்று இருக்கிறது…மோனே விஜயன், அருள்மொழி நான் நிங்களுக்கு அச்சன் தான் அது போல ஈ கொட்டாரத்தின் ராஜாவும்.
இதில் ஏதும் தப்பு இருந்து நிங்கள் அச்சனை பார்க்க மாட்டீங்க ராஜா ரவி வர்மனை தான் பார்ப்பீங்க” என சொல்லி விட்டு போனார்….அவர் போக
அருள்மொழி “ சேட்டா என்ன இது அச்சா இப்படி பறஞ்ஞு போய் நம்ம விஷயம்…எல்லாம் பைரவ் அறிஞ்சு(தெரிந்து) போய் போல இப்போ என்ன செய்வது” என கேட்டார்.
விஜயன் “ யஸ் அவனுக்கு எல்லாம் தெரிந்து விட்டது…பட் அதை காட்டி கொள்ளவில்லை அவன் சேட்டன் போல ரொம்ப அழுத்தமானவன்…ஈ விவாகத்தில் கூட ஏதோ காரணம் இருக்கு பார்க்கலாம் அருள் நான் சொல்வதை செய் “ என்றவர் அவரிடம் சிலதை சொன்னார்.
கார்த்திகா தன் தளத்தில் உள்ள கெஸ்ட் ரூம்க்கு ஆரபி, ராதிகாவை அழைத்து வந்தார்…அதை போய் கெஸ்ட் ரூம் என சொல்ல முடியுமா? பைப் ஸ்டார் ஹோட்டல் சூட் ரூம் போல இருந்தது.
கார்த்திகா “ மோளே ஆரபி, ராதிகா நிங்கள் இங்கயே இப்போ தங்கி கொள்ளுங்கள்…எங்க கொட்டாரத்தில் சில சம்பிரதாயங்கள் இருக்கு அது முடிய மோளே ஆரபி நிங்கள் பைரவ் ரூம்க்கு போகலாம்.
ராதிகா மோளே நிங்கள் யுவாவை விவாகம் செய்த பிறகு தான் அவன் கூட தங்கலாம்…எனக்கு தமிழ் நன்றாக வரும் என் அம்மே மதுரை ராஜ வம்சம்.. ஆனால் இங்கே பிறந்து வளர்ந்தால் சட்டென சில நேரம் மலையாளம் வரும்.
இங்கே இருப்பவங்க எல்லோரும் நன்றாக தமிழ் பேசுவாங்க…நான் உங்க கிட்ட இரண்டு பேரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் …அவந்தி, அஜந்தா நடந்து கொண்டது தப்பு ஆனால் உங்களை போல சின்ன பெண்ணுங்க தானே… ஏமாற்றத்தை சட்டென ஏற்று கொள்ள முடியாமல் அப்படி பேசி விட்டாங்க.
ஆனால் என் அச்சன், சேட்டன்கள் பேசியது தப்பு மட்டுமல்ல பாவமும் கூட…ஒருவர் பிறப்பை தீர்மானிப்பது குருவாயூர்ப்பா தான்… அது தெரிந்தும் அவங்க அதிகாரத்தில் இருப்பதால் அப்படி பேசி விட்டாங்க.
அதற்க்கு அவங்க தான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்க வேணும்…என் பையன் பையு அதை கேட்க வைப்பான் நீங்க கவலைப்பட வேணாம்.. உங்களுக்கு எப்பவுமே துணையாக நான் என் அம்மே, பையு தங்கச்சி நிலா துணையாக இருப்போம்.
இது உங்க வீடு நீங்க சந்தோஷமாக இருக்க வேணும்…என்ன தேவை என்றாலும் ஒரு அம்மாவாக நினைத்து என் கிட்ட கேளுங்க” என்றாள்….ஆரபி அவள் கையை பற்றி கொண்டவள்.
ஆரபி “ எனக்கு மட்டுமல்ல மா எங்களை போல இல்லத்தில் வளரும் புள்ளைங்களுக்கு… இந்த வார்த்தை பழகி ஒன்று அதை நாங்க யாருமே… பெரிதாக எடுத்து கொள்ள மாட்டோம் கடந்து போக பழகி கொண்டோம்.
அடுத்து உங்க அப்பா சொல்வதிலும் நியாயம் உண்டு சட்டென யாருமே இந்த கல்யாணத்தை ஏற்று கொள்ள மாட்டாங்க…அதுவும் நீங்க கோடீஸ்வரங்க ராஜ வம்சம் அந்த பெண்ணுங்க பேசியது நடந்து கொண்டது தவறு இல்லை.
ஏன் தெரியுமா? கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கும் போது…அவங்க அத்தான்கள் இப்படி எங்களை அழைத்து வந்தது ஆனால் இதற்கான பதில்… எங்க கிட்ட இல்லை உங்க பையன்களிடம் தான் இருக்கு மா.
உங்க அப்பா, அண்ணங்கள் பெரியவங்க எங்க கிட்ட மன்னிப்பு கேட்டால்…அது எங்களுக்கு தான் பாவம் அவங்க ஆசீர்வாதம் தான் எங்களுக்கு தேவை மன்னிப்பு அல்ல “ என்றவளை… கார்த்திகா கண்கள் கலங்க சந்தோஷமாக அவளை அணைத்து கொண்டாள்.
மலர் பூக்கும்…
Latest Post: பாரிஜாத மலர் என் கை சேருமா? -24 Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page