All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட் லைஃப் - 18

 

VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

நைட் லைஃப் - 18

மாலை ஏழு மணி போல் சாதனாவும் ஆருத்ராவும் யுகியின் வண்டியில் ஊரை சுற்றிக் கொண்டு இருந்தார்கள். யுகியும், இனியும் வேலையை விட்டு வந்ததில் இருந்து சோர்வாக இருக்க இவர்கள் இருவர் மட்டும் கிளம்பி வந்து விட்டார்கள். அது மட்டும் இல்லை. நாளை இனி பிறந்தநாள் என்பதனால் அதனை கொண்டாட கேக் வாங்க கிளம்பி விட்டார்கள். இருவரும் பயங்கர போக்குவரத்து சிக்கலில் மாட்டிக் கொள்ள, பின்னால் அமர்ந்திருந்த ஆருத்ரா சாதனா தோளில் தலை சாய்ந்திருந்தாள். சிக்னலில் கால்மணி நேரமாக இருவரும் நின்றிருந்தார்கள்.

 

“ச்சே.. இந்த டிராபிக்ல வர்றதுக்கு நடந்தே வந்து இருக்கலாம்.. இதுல இந்த ஹாரனை வேற நொய்யு நொய்யுன்னு அடிச்சிட்டே இருக்கானுங்க. அதான் ரெட் சிக்னல்ன்னு தெரியுதுல அப்பறம் எதுக்கு அடிக்குரானுன்களோ” என கடுப்பாக கூறி முகத்தை சுளித்துக் கொண்டாள் சாதனா. பின்னால் இருந்த ஆருவிற்கு தான் இது எதுவும் காதில் விளைவே இல்லை. முதல் முறையாக முத்தம் கொடுத்த தாக்கம் அவளை இன்னும் இம்சை செய்ய, இன்னுமே அவளுக்கு கூச்சமாக இருந்தது. வெட்கத்தில் தவித்தவள் அதன் பின் மித்திரனிடம் பேசவே இல்லை. அவன் அனுப்பிய குறுஞ்செய்திக்கு கூட பதில் கூறாமல் இருந்தாள். 

 

நடந்ததை பற்றியே நினைத்து தனக்கு தானே சிரித்துக் கொண்டு இருக்க, கூட்ட நெரிசலில் இருந்ததனால் ஆருத்ரா எங்கோ பார்த்து எதையோ நினைத்து சிரிப்பது அங்கு இருந்த ஒரு ஆடவனுக்கு அவனை பார்த்து சிரிப்பது போன்று தோன்றியது. அவள் தன்னை தான் கண்டு சிரிக்கிறாள் என்று நினைத்த ஆடவன் அவளை பார்த்து கண்ணை அடிக்க ஆருத்ரா மித்திரன் நினைப்பில் முகத்தை கைகளால் மூடி சிரித்துக் கொண்டாள். 

 

சாதனா தோள்பட்டையில் முகத்தை புதைத்துக் கொள்ள சாது தோளை ஏற்றி இறக்கி அவளை தள்ளி விட பார்த்தாள். அவளோ சாதனாவை இடுப்போடு கட்டிக் கொண்டு மீண்டும் அந்த ஆடவன் இருக்கும் திசையில் திரும்பி சாய்ந்துக் கொண்டாள். அவர்களுக்கு எதிரே இருந்த ஆடவன் அவளை பார்த்து கை அசைத்தான். ஆருத்ரா எந்த பதிலும் சொல்லாமல் அவள் உலகத்திலே இருக்க அவர்களை பார்த்தபடியே அவன் ஹாரனை அழுத்தினான். 

 

ஓயாமல் அவன் அடித்துக் கொண்டு இருக்க, ஆருத்ரா கனவில் இருந்து வெளியில் வந்தாலோ இல்லையோ, சாதனா அவன் பக்கம் திரும்பினாள். அவனை பயங்கரமாய் முறைத்தவள் அவன் பார்வை போகும் திசையை கண்டு, ஆருத்ராவை கண்ணாடி வழியே பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள். அந்த ஆடவன் பக்கம் திரும்பி கையை அசைத்து அவனை அழைத்தவள், “ஹலோ என்ன சார் பண்றிங்க?” என கேட்க, அந்த ஆடவன் லேசாக சிரித்தபடியே, “அந்த பொண்ணுக்கு என்ன புடிச்சி இருக்கு போல..” என்றிட, “அது சரி.. பல்ல காட்டுரவளை பாத்து இவனுங்க பல்லு போறது தான் மிச்சம். எல்லாம் இவளை சொல்லணும்” என்று மனதில் நினைத்து, “பாஸ் அந்த பொண்ணு கொஞ்சம் மூளை சரி இல்ல, இப்போ தான் ட்ரீட்மென்ட் முடிச்சிட்டு கூட்டிட்டு போயிட்டு இருக்கேன். நீங்க தப்பா நினைக்காதிங்க” என்று கூற அந்த ஆடவனுக்கு ஜெர்க் ஆனது. ஆள் பார்க்க நன்றாக இருக்கிறாளே ஆனால் பாவம் மனநிலை சரி இல்லையே என்று நினைத்து திரும்பினான். வண்டிகள் மெல்ல நகர ஆரம்பிக்க அந்த ஆடவன் புறப்பட, ஆருத்ரா சிரிப்பதை கண்ட சாது, அவள் தலையிலே ஒன்று போட்டாள். அதில் நேராக அமர்ந்த ஆரு, “இப்ப எதுக்கு டி அடிக்குற?” என தலையை தேய்த்தபடியே கேட்க, “கண்டவனை பாத்து சிரிக்காம வாய மூடிட்டு உக்காரு பைத்தியம்” என்று கூறி வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள். 

 

நடந்தது தெரியாத ஆரு அவள் கூற்றை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் அமைதியாய் வந்தாள். ஒரு கடை முன்பு நிறுத்திய சாது, “உள்ள போய் கேக் வாங்கிட்டு வா டி.” என்க, ஆரு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

“என்ன அடிச்சில நீயே போய் வாங்கு.. நான் போய் தீனி வாங்குறேன்” என்று பல்லை காட்டிய ஆரு அருகே இருக்கும் கடைக்கு சென்று தின்பண்டங்கள் வாங்க சென்றாள். சாது, தலையில் அடித்துக் கொண்டு கேக்கை வாங்கினாள். பணம் செலுத்த அவள் ஃபோனில் QR கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்த, அது நம்பர் போட்ட பின்பு வங்கியின் சர்வர் எடுக்கவில்லை என்று காட்டியது. 

 

“ஐயோ இது வேற இந்த நேரத்துல கால வாருதே.. அண்ணா இருங்க நான் போய் பணம் என் பிரென்ட் கிட்ட வாங்கிட்டு வரேன்” என்று கூறிய சாது வெளியே வர ஆரு கை நிறைய பையுடன் வண்டியிடம் வந்தாள். அவளிடம் பணமாக இருக்க அதனை செலுத்தி விட்டு இருவரும் தங்கி இருக்கும் வீட்டிற்கு திரும்பினார்கள். 

 

“ஆரு, நான் கேக்கணும் நினைச்சேன் இன்னிக்கு நீங்க மூணு பேருமே சரி இல்லையே..” என்று கேட்டபடியே சாது படி ஏற, ஆருத்ரா திருட்டு முழி முழித்தாள். 

 

வீட்டின் உள்ளே செல்ல யுகியும் இனியும் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து இருந்தார்கள். கேக்கை ஆருத்ரா இனிக்கு தெரியாமல் எடுத்து சென்று மறைத்து வைத்தாள். மூவருக்கும் ஏதோ ஆனது என்று உணர்ந்த சாது, “எல்லாம் இங்க வாங்க.. நம்ம சட்டசபைய கூட்டனும்” என்றிட மூவரும் என்ன என்பது போல் வந்தார்கள். 

 

நான்கு பேரும் தரையில் வட்டமாக அமர்ந்துக் கொள்ள, சாது மூன்று போரையும் ஆராய்ச்சி செய்யும் பார்வை பார்த்தாள்.

 

“என்ன டி நடக்குது உங்களுக்குள்ள.. நீங்க மூணு பேரும் சரியே இல்ல.. அவ என்னடான்னா தனியா சிரிச்சிட்டு இருக்கா, இவ, வந்ததுல இருந்து கோவமா இருக்கா.. நீ என்ன டி எதையோ பரி கொடுத்த மாதிரி உக்காந்து இருக்க” என்று ஆருவில் தொடங்கி கடைசியாக யுகியை பார்த்து கேக்க, யுகி முயன்ற வரை முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொண்டு சமாளிக்க பார்த்தாள். இனியும் அவள் பக்கம் இருக்கும் பேச்சை மாற்ற, “ஆரு ஏன் இப்படி இருக்கான்னு எனக்கு தெரியும்” என்று கூறி முத்த காட்சியை கூறிட ஆரு அதிர்ந்தாள். 

 

யுகியும் இது தான் சாக்கு என்று உணர்ந்து ஆரு பக்கம் பேச்சை திருப்பி அவளை கேலி கிண்டல் செய்தபடியே நேரத்தை ஒட்டினார்கள். 

 

“ஹே.. போதும் நிறுத்துங்க.. நீ ஏன் சோகமா இருக்க நீ ஏன் கோவமா இருக்க.. எனக்கு காரணத்தை சொல்லுங்க.. அப்படியே பேச்ச திருப்பலாம்ன்னு பாக்குறிங்களா? என்று ஆருத்ரா சரியாக கேக்க, யுகியும் இனியும் ஆழமாய் மூச்சை விட்டார்கள். முதலில் இனி தான் கூற ஆரம்பித்தாள்.

 

“ஆல்வின் வர வர ரொம்ப டார்ச்சர் பண்றான்.. நானும் பாஸ்ன்னு விட்டு வைக்குறேன்.. இல்லன்னா அவன் பண்ற வேலைக்கு மூக்க உடைச்சி இருப்பேன். என் கிட்டவே வாலாட்டிட்டு இருக்கான்.. எனக்கும் ஒரு லிமிட்டு இருக்கு” என அவன் என்ன செய்தான் என்று முழுதாய் கூறாமல் கூறிட, அவள் எதையோ மறைக்கிறாள் என்று மூவரும் உணர்ந்துக் கொண்டார்கள். ஆனாலும் ஆரு சும்மா இல்லை, “அப்படி என்ன பண்ணாரு? எங்க கிட்ட நார்மலா தானே இருக்காரு? ஏன் வேலை அதிகமா குடுக்குறாரா?” என கேட்டிட, மறுப்பாக தலையை அசைத்தாள் இனி. 

 

“அவன் ஃப்லிர்ட் பண்ணி பிராக்டீஸ் பண்ண நான் தான் கிடைச்சேன் போல.. படுத்தி எடுக்குறான்.” என்று சீரியசாக கோவத்துடன் கூறிட, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வெடித்து சிரிக்க ஆரம்பித்தார்கள். 

 

“இது வரை எப்படியோ டார்ச்சர் பண்ணி கேள்விப்பட்டு இருக்கேன்.. ஆனா இது புதுசா இருக்கே” என கூறி சிரித்தாள் யுகி. 

 

“என் நிலமைய நினைச்சா சிரிப்பா இருக்கா உங்களுக்கு” என இனி கடுப்பாக முறைக்க, “ச்ச ச்ச.. எனக்கு அப்படி இல்ல இனி, எனக்கு எப்படி தெரியுமா இருக்கு… மொதல்ல ஆரம்பிச்சா காதல்ல தான் முடியுமாம்..” என்று கூறி இரு கைகளையும் முத்தமிடுவது போல் செய்ய, இனி முறைத்தாள். 

 

“சரி சரி விடுங்க, அடுத்து இந்த டல் கேஸ் என்னனு பாப்போம்” என்று கூறிட மூவரும் யூகி பார்த்தார்கள். அவளுக்கு முன்பு இருந்த சோகம் இப்பொழுது கொஞ்சம் குறைந்து இருந்தது. யுகி சொல்லவே தயங்கினாள்.

 

“அது வந்து.. எனக்கு ராகவ்வை புடிச்சி இருக்கு” என்று கூற மூன்று பேருமே பெரிதாய் அதிர்ந்தார்கள். இதனை எப்படி கவனிக்காமல் போனோம் என்று இருந்தது அவர்களுக்கு. இதில் அடுத்த குண்டாக, “இன்னிக்கு அவரு கிட்ட என் லவ் சொன்னேன்.. ஆனா என் மேல இன்டரெஸ்ட்டே இல்லன்னு சொல்லிட்டு தேவை இல்லாம தொந்தரவு பண்ணாதன்னு கிளம்பி போயிட்டாரு” என வருத்தமாக கூற, மூன்று பேரும் முதலில் அதிர்ந்தாலும் பின், அவளை கட்டிக் கொண்டார்கள்.

 

“விடு யுகி, பாத்துக்கலாம்.. அவருக்கு ஏதாவது காரணம் இருக்கும்” என ஆருவும், 

 

“அவர பத்தி தெரியாதுள்ள.. நீ பீல் பண்ணாத சரியா” என சாதுவும், “உனக்கானவருன்னு அவரா இருந்தா கண்டிப்பா உனக்கு உன் காதலே உணர்த்தும்.. கொஞ்சம் டைம் குடு. காரணம் என்னனு அப்பறம் கேட்டுக்கலாம். நமக்கானது என்னைக்கும் நம்மளை விட்டு போகாது” என்று இனியும் ஆறுதல் கூற யுகி மெலிதாக புன்னகைத்தாள். அவளுக்கு உறுதுணையாக இவர்கள் மூவரும் இருக்கும் வரையில் எந்த ஒரு சோகத்திற்கும் இடம் இருக்காது. மூன்று பேரும் பாச மழையில் மூழ்கி இருக்க, இனி போன் அடித்தது. அணைப்பை விடுத்து யார் என்று பார்க்க அவள் முகம் கோவத்தை தத்தெடுத்தது.

 

“அவளுக்கானவரு கால் பண்ணி இருக்காரு போல” என ஆரு கேலியாக கூறிட இருவரும் சிரிக்க, இனி முறைத்தாள். அவள் அட்டென்ட் செய்வதற்கு முன்பு ஆரு வேகமாய் வந்து போனை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டாள். ஆல்வின் யார் பேசுகிறார் என்று எல்லாம் கவனிக்கவில்லை. அழைப்பு ஏற்ற உடனே, “கேரமல் உடனே கீழ வா.. உனக்காக நான் வெயிட் பண்றேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தான். இனிய விட ஆர்வமாக மற்ற மூவரும் ஜன்னல் வழியே எட்டி பார்க்க ஆல்வின் ஸ்டைல்லாக காரில் சாய்ந்து கையில் பூங்கொத்துடன் நின்றிருந்தான். ஆருத்ரா வாயை பிளக்க, மற்ற இருவரும் இனிய பார்த்து கேலியாக புருவத்தை உயர்த்தினார்கள். இனி அவர்களை கண்டுக் கொள்ளாமல் கீழே சென்றாள். அவள் வருவதை கண்டதும் ஆல்வின் காரில் இருந்து பூங்கொத்தை எடுக்க, ஆருத்ரா உடனே அவள் போனில் வீடியோ எடுக்க ஆரம்பித்தாள்.

 

“எனக்கு இதலாம் பாத்தா டிராமால வர மாதிரி இருக்கே..” என ஆரு குதுகலிக்க சாதனாவும் வேகமாய் தலையை அசைத்து, “ஒரு வேலை புரோபோஸ் பண்ண போறாரோ” என்று ஆர்வமாய் பார்த்துக் கொண்டு கேட்க, “எனக்கும் அப்படி தான் தோணுது.. அப்போ அவரு சும்மா ஃப்லிர்ட் பண்ணலை” என யுகி கூறினாள். 

 

கீழே இனி வந்ததுமே அவள் கையில் பூங்கொத்தை கொடுத்து, “ஹாப்பி பர்த்டே” என்று கூறி ஒரு சிறிய பரிசையும் கொடுக்க இனி ஆச்சரியத்துடன் வாங்கிக் கொண்டு நன்றி கூறினாள். 

 

“என்ன டி நம்ம சர்ப்ரைஸ் பண்ணலாம்ன்னு பார்த்தா இவரு பண்ணிட்டாரு” என சாது புலம்ப, “விடு டி.. இத விட பெஸ்ட் பர்த்டே அவளுக்கு இருக்காது” என்றால் யுகி. 

 

“ஆல்வின்..” என இனி மேலும் பேச வர, அவளை தடுத்தவன், “கேரமல் வில் யூ பீ மை டேட்?” என்று கேக்க அவனை ஆச்சரியமாய் பார்த்தாள் இனி. இவன் இப்படி கேட்பான் என்று அவள் எதிர் பார்க்கவே இல்லை. அதிர்ச்சியில் மூழ்கி இருந்த இனி பதில் சொல்வதற்கு முன்பு சாதனா அதிர்ச்சியில் அலறினாள். அவள் போனில் அவளின் வங்கி கணக்கில் இருக்கும் பணம் மொத்தமும் எடுக்கப்பட்டது என்று செய்தி வந்திருக்க, அதனை கண்டு அதிர்ச்சியில் கத்தி விட்டாள்.  

 

கருத்து திரி :

https://kavichandranovels.com/community/vsv-39-%e0%ae%a8%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-comments/%e0%ae%a8%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d/


   
ReplyQuote

You cannot copy content of this page